Sunday, March 31, 2024

வெள்ளைக்கார அரசை விரட்ட

வெள்ளைக்கார அரசை விரட்ட வெடிகுண்டு வீசிய பகத்சிங்கை தியாகி என்று போற்றும் சிலர் , கொள்ளைக்கார இந்திய அரசுக்கு எதிராக குண்டு வீசிய தோழர் தமிழரசனை பயங்கரவாதி என்கின்றனர். நாம் பகத்சிங்கை மட்டுமல்ல மக்களுக்காக போராடிய தோழர் தமிழரசனையும் என்றும் நினைவில் போற்றுவோம்.

நினைவு கூர்வோம்!

நினைவு கூர்வோம்! தமிழ்தேசிய போராளிகளான இராசாராமன், சரவணன் ஆகியோர் தமிழக காவல்துறையினரால் போலி என்கவுண்டரில் சென்னையில் கொல்லப்பட்ட நாள் மார்ச் - 23 ஆகும். இராசாராமன்,சரவணன் ஆகியோரை கொன்றதன் மூலம் தமிழ் இனவிடுதலையை தடுக்க முடியாது என்பதை இந்திய அரசுக்கு வரலாறு காட்டும். இது உறுதி.

நாதியற்றவனாக இருக்கிறேன்...

நாதியற்றவனாக இருக்கிறேன்... புகலிடக் கோரிக்கைகள் எதுவும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை! இதயம் இருக்குமாயின் இடம் கொடுங்கள் இறப்பதற்கு முன் வாழ்ந்துவிட்டு போகிறேன். ஒரு நாளாவது (இந்திய) குடிமகனாக! -விக்டர் செ இந்த (ஈழ) அகதியின் குரல் திராவிட முதல்வரின் செவிக்கு எட்டுமா?

அமைதியான கடல்

அமைதியான கடல் சிறந்த மாலுமிகளை உருவாக்குவதில்லை. போராட்டம் இன்றி இனத்திற்கான சிறந்த தலைமை உருவாகுவதில்லை.

நிச்சயம் வெற்றி பெறுவோம்”

நிச்சயம் வெற்றி பெறுவோம்” என்ற ஒற்றை நம்பிக்கையைத்தவிர வேறு எதுவுமே இவர்களிடம் இல்லை. ஆனால் அந்த ஒற்றை நம்பிக்கையே தொடர்ந்து இவர்களை முன்னோக்கி செல்ல வைக்கிறது என்றோ ஒருநாள் நிச்சயம் தமது இலக்கை அடைவார்கள். இது உறுதி

சாத்தான் ஓதும் வேதம்!

•சாத்தான் ஓதும் வேதம்! நூல்கள் எழுதுவதன் மூலம் நிரபராதி ஆகிவிட முடியாது. நீதிமன்ற விசாரணைகளே முடிவு செய்ய வேண்டும்.