tag:blogger.com,1999:blog-68120124829885421302024-03-26T23:35:49.982-07:00தோழர்tholarhttp://www.blogger.com/profile/12653019173515961946noreply@blogger.comBlogger6716125tag:blogger.com,1999:blog-6812012482988542130.post-17982774656655792912024-03-22T08:27:00.000-07:002024-03-22T08:27:31.970-07:00பாராட்டுகளும் வாழ்த்துக்களும்!•பாராட்டுகளும் வாழ்த்துக்களும்!
13 வயதில் 31 கிலோ மீட்டர் பாக்குநீரிணை கடலை எட்டு மணி நேரத்தில் நீந்தி சாதனை படைத்த சிறுவன் தன்வந்த் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
tholarhttp://www.blogger.com/profile/12653019173515961946noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6812012482988542130.post-56783587388842400572024-03-22T08:26:00.001-07:002024-03-22T08:26:57.413-07:00அன்று தாய் பார்வதி அம்மாள் அன்று தாய் பார்வதி அம்மாள் சிகிச்சை பெற வந்தபோது கொஞ்சம்கூட இரக்கமின்றி திருப்பி அனுப்பினார் முதல்வர் கலைஞர் கருணாநிதி
இன்று தன் மகனை ஒருமுறையேனும் உயிரோடு பார்த்துவிட வேண்டும் என 33 வருடமாக காத்திருந்த தாய்க்கு உயிரற்ற மகன் உடலை அனுப்பியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
இந்த இரண்டு தாய்களின் பெயரை இனி உச்சரிக்கும்போதெல்லாம் இவர்கள் சிந்திய கண்ணீருக்கு காரணமானவர்களின் பெயரையும் வரலாறு நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கும்.
tholarhttp://www.blogger.com/profile/12653019173515961946noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6812012482988542130.post-48861498027198099752024-03-22T08:26:00.000-07:002024-03-22T08:26:22.460-07:00ஆசையோடு தேசம்காண ஆசையோடு தேசம்காண இருந்தவருக்கு எமனானது இந்திய அதிகாரம்
உயிரோடு வந்தவரை உயிறற்று அனுப்பி வைத்துள்ளது பாரதம்
சாந்தனின் இறப்பு காந்தி தேசத்தின் அவலக்குறியீடு"
- யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை.
tholarhttp://www.blogger.com/profile/12653019173515961946noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6812012482988542130.post-941786886881644922024-03-22T08:25:00.001-07:002024-03-22T08:25:41.389-07:00தன் மகன் உயிரோடு வருவான் தன் மகன் உயிரோடு வருவான் என 33 வருடமாக காத்திருக்கும் இத் தாய்
ஞாயிறு அன்று தன் மகனின் உயிரற்ற உடலை காண்கையில் நாம் என்ன சொல்லி தேற்றுவது?
இவரது மகன் மரணம் இந்திய அரசின் கோர முகத்தை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியுள்ளது.tholarhttp://www.blogger.com/profile/12653019173515961946noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6812012482988542130.post-4487273659162725752024-03-22T08:25:00.000-07:002024-03-22T08:25:06.413-07:00தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் “ஈழத் தமிழர் அனாதைகள் அல்ல. அவர்களுக்கு நாம் இருக்கிறோம்” என்றார்
தாம் ஆட்சிக்கு வந்தால் 7 தமிழர்களையும் விடுதலை செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தார்.
ஆனால் உச்சநீதிமன்றம் விடுதலை செய்த பின்பும் அவர்களை சிறப்புமுகாமில் அடைத்து "மாரடைப்பு மரண விடுதலை" அளிப்பார் என்று நினைக்கவில்லையே..tholarhttp://www.blogger.com/profile/12653019173515961946noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6812012482988542130.post-64264825604424882852024-03-22T08:24:00.000-07:002024-03-22T08:24:29.093-07:00இருவரும் தமிழர்கள்இருவரும் தமிழர்கள்
ஒருவர் ஈழத் தமிழர் சாந்தன்
இன்னொருவர் தமிழ்நாடு வேலூர் வள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தமிழர் சீனிவாசன்
கடந்த 28.02.2024யன்று மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ஈழத் தமிழர் சாந்தன் சிகிச்சை பலனின்றி மரணமானதாக தமிழக அரசு அறிவித்தது.
சாந்தன் மரணமான அதே 28ம் திகதி 2009ல் ஈழத் தமிழர்களுக்காக சீனிவாசன் தீக்குளித்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீனிவாசன் சிகிச்சை பலனின்றி 02.03.2009ல் இறந்ததாக தமிழக அரசு தெரிவித்தது.
இங்கு கவனிக்க வேண்டியது 2009, 2024ல் தமிழக அரசாக இருந்தது திமுக.
ஈழத் தமிழருக்காய் தன்னை ஆகுதியாக்கிய சீனிவாசனுக்கு நாளை 15வது நினைவுதினம் ஆகும்.
அவருக்கு எமது நினைவஞ்சலிகள்.
tholarhttp://www.blogger.com/profile/12653019173515961946noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6812012482988542130.post-3957374414701364472024-03-22T08:23:00.001-07:002024-03-22T08:23:53.489-07:00சிறப்புமுகாமில் இருந்த சாந்தன் மரணத்திற்கு சிறப்புமுகாமில் இருந்த சாந்தன் மரணத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின்தான் பொறுப்பு என நான் எழுதியிருந்தேன்.
அப்போது சில திமுக உடன்பிறப்புகள் சிறப்புமுகாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அதற்கும் தமிழக முதல்வருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று என்னை திட்டினார்கள்.
இப்போது முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி அவர்கள் சாந்தன் மரணத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின்தான் காரணம் என்று கூறியிருக்கிறார்.
அதுமட்டுமன்றி நடைப்பயிற்சி செய்யக்கூட விடாமல் சிறப்புமுகாமில் சித்திரவதை செய்து வருகிறது தமிழக அரசு என்று கூறியிருக்கிறார்.
இப்போது இங்கு நான் கேட்க விரும்புவது, எடப்பாடிக்கும் சிறப்புமுகாம் யார் கட்டுப்பாட்டில் இருக்கின்றது என்று தெரியவில்லை என திமுக வினர் கூறப்போகின்றார்களா?
எடப்பாடி அவர்கள் கூறியிருப்பது யாவும் உண்மைதான். ஆனால் இதைக்கூற அவருக்கும் எந்த அருகதையும் கிடையாது
ஏனெனில் அவருடைய ஆட்சிக்காலத்திலும் இந்த சிறப்புமுகாம் சித்திரவதைகள் இருந்தன.
இன்று ஸ்டாலின் எப்படி சிறப்புமுகாம் கொடுமைகளை கண்டுகொள்ளாமல் இருக்கிறாரோ அதேபோன்றுதான் எடப்பாடி அவர்களும் ஆட்சியில் இருந்தபோது கண்டு கொள்ளாமல் இருந்தார்.
இவர்கள் இருவரும் எதிர்க்கட்சியில் இருக்கும்போது நீலிக் கண்ணீர் வடிப்பதும் ஆட்சிக்கு வந்தவுடன் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர்.
tholarhttp://www.blogger.com/profile/12653019173515961946noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6812012482988542130.post-6721118755013120802024-03-22T08:23:00.000-07:002024-03-22T08:23:10.760-07:00யாழ் பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடிகள் யாழ் பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
தமிழர் தாயகம் முழுவதும் தேசிய துக்கதினமாக அனுட்டிக்க பல பொது அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
ஒன்று திரண்டு தமிழ் மக்கள் செலுத்தும் அஞ்சலி என்பது இந்திய அரசுக்கு தமிழ் மக்களின் பதிலாக அமையட்டும்.
tholarhttp://www.blogger.com/profile/12653019173515961946noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6812012482988542130.post-65037078658610753322024-03-22T08:22:00.000-07:002024-03-22T08:22:30.974-07:00ஊருக்குபோய் தன் தாயின் கையால் ஊருக்குபோய் தன் தாயின் கையால் ஒரு குவளை கஞ்சி குடிக்க வேண்டும் என்பதே சாந்தனின் கடைசி ஆசையாக இருந்தது.
தான் இறப்பதற்கு முன் தன் மகனை ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்பதே சாந்தன் தாயாரின் 33 வருட ஆசையாக இருந்தது.
இரக்கமற்ற இந்திய அரசு இவர்களின் ஆசையை நிறைவேற்றவில்லை.
எத்தனை தடைகள். அத்தனையும் தாண்டி மக்கள் சாந்தன் உடலை அவர் ஊருக்கு கொண்டு சென்று தாயிடம் ஒப்படைக்கின்றனர்.
மக்கள் அளித்துள்ள இந்த பதிலை இனியாவது இந்திய அரசு புரிந்துகொள்ளட்டும்.
மற்ற மூவரையுமாவது உயிரோடு அவர்கள் விரும்பும் நாடு செல்ல அனுமதிக்கட்டும்.
tholarhttp://www.blogger.com/profile/12653019173515961946noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6812012482988542130.post-84649635283814240562024-03-22T08:21:00.001-07:002024-03-22T08:21:47.630-07:00சாந்தன் தன் தாயாரிடம் சென்றடைந்துவிட்டார்.சாந்தன் தன் தாயாரிடம் சென்றடைந்துவிட்டார்.
உயிரற்ற உடலாகவாவது சென்று சேர்ந்துவிட்டார் என ஆறுதல் கொள்வதா? அல்லது
உயிருடன் அனுப்பிவைக்காதது குறித்து இந்திய அரசு மீது கோபம் கொள்வதா?
தூக்கு தண்டனையே அதி உச்சபட்ச தண்டனையாக இருந்து வருகிறது.
ஆனால் சாந்தன் அதைவிட கொடிய தண்டனையை அனுபவித்துள்ளார்.
இதனை அவர் தமிழ் மக்களுக்காகவே அனுபவித்தார்.
எனவேதான் தமிழ் மக்களும் அவருக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்துகின்றனர்.
இனி ஒவ்வொரு வருடமும் இந் நாளில் சாந்தனை மட்டுமன்றி சாந்தன் மரணத்திற்கு காரணமானவர்களையும் சேர்த்தே வரலாறு நினைவு படுத்தப் போகிறது.tholarhttp://www.blogger.com/profile/12653019173515961946noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6812012482988542130.post-24353137027472091172024-03-22T08:21:00.000-07:002024-03-22T08:21:05.938-07:00சாந்தன் உடலை ஆரத்தி எடுத்து சாந்தன் உடலை ஆரத்தி எடுத்து வரவேற்றுள்ளார் தங்கை.
சாந்தன் உயிருடன் வந்தால் எப்படி வரவேற்க விரும்பியிருந்தாரோ அத்தகைய ஒரு வரவேற்பை சாந்தன் உடலுக்கு கொடுத்து தன்னை தேற்றுகிறார் தங்கை.
அழுது ஓய்ந்துவிட முடியாத ஆறாதத் துயரம் இது.tholarhttp://www.blogger.com/profile/12653019173515961946noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6812012482988542130.post-77821261999273050432024-03-22T08:20:00.000-07:002024-03-22T08:20:28.241-07:00உலகில் மரணித்த போராளிகள் எல்லாம் உலகில் மரணித்த போராளிகள் எல்லாம் வேதனைகளை அனுபவித்து மடிந்தவர்களே.
அவர்கள் அனுபவித்த வேதனைக்கு சற்றும்குறையாத வேதனையை அனுபவிப்பவர்கள் அவர்களைப் பெற்ற தாய்மார்கள்.
ஆனால் மரணித்த போராளிகளை தியாகிகள் என்று நினைவுகூறும் வரலாறு அத் தாய்மார்களை அப்படி நினைவுகூர்வதில்லை.
தாயின் கையால் ஒரு கவளம் சோறு தின்ன வேண்டும் என்றே சாந்தன் விரும்பினார்.
சாந்தனின் அந்த கடைசி விருப்பத்தை வாய்க்கரிசி போட்டு நாளை நிறைவேற்றப்போகிறார் தாய்.
33 வருடமாக தன் மகனைக் காண காத்திருக்கும் தாய் மகனின் உயிரற்ற உடலைக் காண நேருவது மிகப் பெரிய துயரம்.
அக் கொடுங் துயரத்தை அனுபவிக்கும் இத் தாயை நாம் என்ன சொல்லி தேற்றுவது?tholarhttp://www.blogger.com/profile/12653019173515961946noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6812012482988542130.post-48732392621472518832024-03-22T08:19:00.001-07:002024-03-22T08:19:47.596-07:00மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்•“மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்” - புலவர் கலியபெருமாள்.
தமிழ்நாட்டு “சே” என்று அழைக்கப்பட்ட தோழர் கலியபெருமாள் அவர்களின் பிறந்ததினம் 04.03.1924 ஆகும்.
புலவர் அவர்கள் “தமிழ்நாடு விடுதலைப் படை”யினை முன்னெடுத்த தோழர் தமிழரசன் அவர்களின் தலைவர் என அறியப்பட்டவர்.
தன் வாழ்வின் இறுதிவரை புரட்சியை நேசித்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக ஈழத் தமிழர்களுக்கு தனது உறுதியான ஆதரவை எப்போதும் வழங்கியவர்.
அதனாலேயே அவர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட கொடைக்கானல் டிவி டவர் வெடிகுண்டு வழக்கில் இணைக்கப்பட்டார்.
வயதான காலத்தில் வழக்கின் நிமித்தம் அலைக்கழிக்கப்ட்டபோதும் ஈழத் தமிழர்களுக்கான தனது ஆதரவை ஒருபோதும் அவர் கைவிட்டதில்லை.
தமிழின விடுதலைக்காக உழைத்த புலவர் கலியபெருமாள் அவர்களை தமிழ் மக்கள் என்றும் நினைவில் கொள்வர். இது உறுதி.tholarhttp://www.blogger.com/profile/12653019173515961946noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6812012482988542130.post-36614445452475709722024-03-22T08:19:00.000-07:002024-03-22T08:19:09.132-07:00எந்த மண்ணுக்காக சாந்தன் ஏங்கினாரோஎந்த மண்ணுக்காக சாந்தன் ஏங்கினாரோ
அந்த மண்ணில் சாந்தனை விதைத்துள்ளார் அவரது தாய்.
தவறி விழும் விதையைக்கூட முளைத்தெழ வைக்கும் மண்
தனக்காக போராடியவரை ஏமாற்றிவிடுமா என்ன?
நிச்சயம் ஓராயிரம் சாந்தன்களை முளைத்தெழ வைக்கும்.
tholarhttp://www.blogger.com/profile/12653019173515961946noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6812012482988542130.post-15289659057446651152024-03-22T08:18:00.000-07:002024-03-22T08:18:31.522-07:00என்றும் நினைவில் கொள்வோம்! என்றும் நினைவில் கொள்வோம்!
ஈழத்தில் நிகழ்ந்த இனப்படுகொலையை கண்டித்து சென்னை ஓட்டேரி கே.எம். தோட்டம் 9 ஆவது தெருவில் வாழ்ந்து வந்த சதாசிவம் சிறீதர் (எழில்வளவன்) என்பவர் தீக்குளித்து உயிரீகம் செய்த நாள் 05.03.2009
tholarhttp://www.blogger.com/profile/12653019173515961946noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6812012482988542130.post-14686941534016871272024-03-22T08:17:00.001-07:002024-03-22T08:17:45.412-07:00இன்று ரசியப் புரட்சியின் வரலாற்றுஇன்று ரசியப் புரட்சியின் வரலாற்று நாயகன் தோழர் ஸ்டாலின்நினைவு தினமாகும்.
தோழர் ஸ்டாலின் அளவிற்கு உலக முதலாளித்துவத்தால் அவதூறு செய்யப்பட்ட தலைவர் வேறு யாரும் இல்லை.
அதற்கு காரணம் அவரது ஆட்சி தோற்றுவித்தது வேதனைகள் அல்ல. மகத்தான சாதனைகள்.
மிகவும் பின்தங்கிய விவசாய நாடாக இருந்த ரசியாவை பதினைந்தே ஆண்டுகளில் தொழில் வல்லரசாக மாற்றியதும்,
பத்து சத வீதம் கூட கல்வியறிவு பெற்றிராத நாட்டை ஏறத்தாழ நூறு சதவீதம் கல்வியறிவு கொண்ட நாடாக மாற்றியதும்,
உலகப் பொருளாதாரமே நெருக்கடியில் சிக்கிய 1930 களில் ரசியா மட்டும் முன்னேறியதும்.
கிட்லரிடமிருந்து உலகையே காப்பாற்றியதும் ,
ஸ்டாலின் தலைமையில் ரசிய மக்கள் சாதித்த வெற்றிகள்.
இவற்றுக்கு ஈடு சொல்லும் வெற்றிகள் இன்றுவரை உலகில் கிடையாது.
பிறப்பால் உயர்ந்தவர்களும் மன்னர்களும் முதலாளிகளும் மட்டும்தான் நாடாள முடியும் என்று நம்பிக் கொண்டிருந்த உலகத்தில் உழைக்கும் வர்க்கம் உலகாள முடியும் என்று நிரூபித்துக் காட்டியது கம்யூனிசம்.
ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகன் உலகத் தலைவராக முடியும் என்று நிரூபித்துக் காட்டியது ரசிய கம்யுனிஸ்ட் கட்சி.
தோழர் ஸ்டாலின் மறைவின் பின்னர் ஆட்சிக்கு வந்த குருசேவ் காட்டிய பாதையில் சென்ற ரசியா இன்று முதலாளித்துவ நாடாகிவிட்டது.
மீண்டும் பிச்சைக்காரர்கள் பட்டினி வேலையின்மை விபச்சாரம் அனைத்தும் அங்கே தலைவிரித்தாடுவதை முதலாளித்துவப் பத்திரிகைகளே எழுதுகின்றன.
(முதலாளித்துவ) ஜனநாயகம் மீண்டும் நிலைநாட்டப்பட்டதின் பயன் என்ன என்பது அப்பட்டமாக தெரிந்துள்ளது.
ஸ்டாலின் மீதான குருசேவ் இன் தாக்குதல் வெறும் தனிநபர் விவகாரம் அல்ல.
“ லெனின் ஸ்டாலின் காட்டிய வழியில் இனி உலக கம்யுனிஸ்டுகள் புரட்சி செய்யத் தேவையில்லை. தேர்தலில் நின்றால் போதும். அமெரிக்காவை எதிர்க்காமல் சமாதான சகவாழ்வு நடத்தலாம்” என்ற குருசேவின் துரோகக் கொள்கையையும் ஸ்டாலின் மீதான அவதூறையும் சீனத் தலைவர் மாசேதுங் அவர்களும் இலங்கை கம்யுனிஸ்ட் தலைவர் சண்முகதாசன் உட்பட பல உலக கம்யுனிஸ்ட்கள் எதிர்த்தனர்.
இந்த உண்மையை வசதியாக மறைத்துவிட்டு உலக கம்யுனிஸ்ட் இயக்கமே ஸ்டாலினை தூற்றுவது போல் சிலர் சித்தரிக்க முயலுகின்றனர்.
ஆனால் உலகம் உள்ளவரை தோழர் ஸ்டாலின் புகழ் இருக்கும். அதை யாராலும் அழிக்க முடியாது.
tholarhttp://www.blogger.com/profile/12653019173515961946noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6812012482988542130.post-70581580043882736802024-03-22T08:17:00.000-07:002024-03-22T08:17:00.972-07:00சாந்தனை புதைத்து அதன் ஈரம் சாந்தனை புதைத்து அதன் ஈரம் காய்வதற்குள் அடுத்த இடியை இறக்கியுள்ளது இரக்கமில்லாத தமிழக அரசு.
மற்ற மூவரையும் இலங்கை அனுபுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் கோரியுள்ளது.
அவர்கள் இலங்கை திரும்புவதற்குரிய அனுமதியை இலங்கை தூதரகத்தில் கோரினால் அதுபற்றி பரிசீலிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதையடுத்து அவர்கள் மூவரும் தனித்தனியாக நீதிமன்றத்தை அணுகினால் பரிசீலிக்கப்படும் எனகூறி உயர்நீதிமன்றம் சாந்தன் வழக்கை முடித்துவிட்டது.
சாந்தனுக்குரிய நீதி வழங்கப்படவில்லை. வழக்கம்போல் சாந்தனுக்குரிய நீதியை மத்திய மாநில அரசுகளுடன் சேர்ந்து நீதிமன்றமும் மூடி மறைத்துவிட்டது.
இப்போது விடயம் என்னவென்றால் முருகன் நளினி இருவரும் பிரித்தானியாவில் இருக்கும் தம் மகளிடம் சென்று வாழ விரும்புகின்றனர்.
இவர்கள் பிரித்தானியா செல்ல விரும்புவது உலகத்திற்கே தெரியும்.
ஆனால் தெரியாதமாதிரி மத்திய மாநில அரசுகள் மட்டுமன்றி உயர்நீதிமன்றமும் சேர்ந்து நாடகமாடுகின்றன.
7 தமிழர்களையும் விடுதலை செய்வோம் என தேர்தல் வாக்குறுதி அளித்தவர் ஸ்டாலின்.
ஆனால் அவர் பதவிக்கு வந்ததும் உச்சநீதிமன்றம் அவர்களை விடுதலை செய்துமகூட் நாலு ஈழத் தமிழரை சிறப்புமுகாமில் அடைத்தார்.
இந்தியா ஒரு ஜனநாயகநாடு என்றும் இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்று கூறுகின்றனர்.
சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்று 7 தமிழர்களையும் உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது.
ஆனால் தமிழக முதல்வரைப் பொறுத்தவரையில் “சட்டத்திற்கு முன் அனைவரும் சமம். ஆனால் ஈழத் தமிழரைத் தவிர” என்று கருதுகிறார்.
நாலு தமிழர்களையும் விரும்பும் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் என உறுதியளித்தே அவர்களை சிறப்புமுகாமில் அடைத்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
ஆனால் வழக்கம்போல் இந்த வாக்குறுதியையையும் அவர் காப்பாற்றவில்லை.
tholarhttp://www.blogger.com/profile/12653019173515961946noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6812012482988542130.post-82500076965943253712024-03-22T08:16:00.000-07:002024-03-22T08:16:15.405-07:00முருகன் லண்டனில் உள்ள தன்முருகன் லண்டனில் உள்ள தன் மகளுடன் சேர்ந்து வாழ விரும்புகிறார்.
ஆனால் தமிழக அரசு அவரை லண்டன் செல்ல அனுமதி வழங்காமல் இலங்கைக்கு அனுப்ப முயல்கிறது.
இதுதான் சட்ட நடைமுறை என்று சிலர் தமிழக அரசை நியாயப்படுத்த முயல்கின்றனர்.
அவர்களுக்கு ஒரு விடயத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன்
இதே ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் விக்கி மற்றும் ஆதிரை.
இவர்கள் மீதான ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தபோது இவர்கள் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டனர்.
சிறப்புமுகாமில் அடைக்கப்பட்ட இருவரும் அங்கிருந்து ஜரோப்பிய நாடொன்றுக்கு சென்று அங்கு வாழ்ந்து வருகிறார்கள்.
எனவே ராஜீவ் வழக்கில் வைக்கப்பட்டிருந்த விக்கி ஆதிரை ஆகியோர் வெளிநாடு செல்ல சட்ட நடைமுறை அனுமதிக்கும் என்றால் முருகன் செல்ல ஏன் அனுமதிக்க முடியாது?
எல்லாவற்றுக்கும் மேலாக முருகன் ஒரு இந்து. அவர் இப்போது ஒரு சாமியார் போல் ஆகிவிட்டார்.
உலகில் உள்ள இந்துக்கள் அனைவரின் மீதும் அக்கறை கொள்வதாக கூறும் இந்திய அரசு முருகன் மீது ஏன் அக்கறை கொள்ளவில்லை?
இந்துத் தமிழீழம் கேட்டால் இந்திய அரசு உதவும் என்று கூறும் காசி அனந்தன் அவர்கள் "இந்து" முருகனுக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை?tholarhttp://www.blogger.com/profile/12653019173515961946noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6812012482988542130.post-53963107641799571872024-03-22T08:15:00.000-07:002024-03-22T08:15:31.328-07:00நினைவஞ்சலிகள்!• நினைவஞ்சலிகள்!
சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ், ஜோசப் பரராயசிங்கம். சந்திரநேரு வரிசையில் பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசனும் கொல்லப்பட்டார்.
சிங்கள ராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணியரின் கிளைமோர் தாக்குதலில் 06.03.2008 யன்று சிவநேசன் கொல்லப்பட்டார்.
அவர் தன்னை தெரிவு செய்த மக்களுடன் இருந்தார். அதனாலேயே அவர் கொல்லப்பட்டார்
அவர் கொல்லப்பட்டு 16 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னமும் அவர் கொலைக்கு நீதி வழங்கப்படவில்லை.
தமது சக பாராளுமன்ற உறுப்பினரின் கொலைக்கே இதுவரை நீதி பெறாத தமிழ்த்தேசிய கூட்டமைப்புத் தலைவர்கள் மக்களின் படுகொலைகளுக்கு நீதி பெற்றுத் தருவார்கள் என எப்படி நம்புவது?tholarhttp://www.blogger.com/profile/12653019173515961946noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6812012482988542130.post-36027481481986705202024-03-22T08:14:00.001-07:002024-03-22T08:14:45.249-07:00என் கணவரை உயிரோடு விடுதலை செய்யுங்கள்” “என் கணவரை உயிரோடு விடுதலை செய்யுங்கள்” ஜெயக்குமாரின் மனைவி உருக்கமான வேண்டுகோள்.
தமிழக அரசு இரக்கம் காட்டுமா? அல்லது சாந்தன் போன்று மாரடைப்பு மரண விடுதலையை அளிக்கப் போகிறதா?
tholarhttp://www.blogger.com/profile/12653019173515961946noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6812012482988542130.post-60535726866615826382024-03-22T08:14:00.000-07:002024-03-22T08:14:02.713-07:00நடிகை திரிஷாவுக்காக குரல் கொடுத்தவர்கள்•நடிகை திரிஷாவுக்காக குரல் கொடுத்தவர்கள்
நடிகை பெத்து ராஜ்க்காக குரல் கொடுப்பார்களா?
நடிகைகளுக்கும் அரசியல்வாதிகளுக்குமான உறவு பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.
நடிகை பெத்து ராஜ்க்கு மதுரையில் மால் ஒன்றை உதயநிதி வாங்கிக்கொடுத்ததாக முன்னர் ஒரு செய்தி வந்தது.
இப்போது நடிகை பெத்துராஜ்க்கு துபாயில் ஒரு வீட்டை அமைச்சர் உதயநிதி வாங்கிக் கொடுத்திருப்பதாக செய்தி வந்துள்ளது.
நடிகை திரிஷா பற்றி செய்தி வந்தபோது அதற்கு எதிராக குரல் கொடுத்த சேரன் போன்றவர்கள்,
இப்போது நடிகை பெத்து ராஜ் பற்றிய செய்தி குறித்து ஏன் மௌனமாக இருக்கின்றனர்?
உதயநிதி அமைச்சராக இருக்கிறார். காவல்துறை அவர்களின் கையில் இருக்கிறது. ஏன் இச் செய்தியை கூறிய சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை?
சவுக்கு சங்கர் கூறியது உண்மை என்றால் உதயநிதிக்கு இத்தனை கோடி பணம் எங்கிருந்து வந்தது?
கலைஞர் 36 படத்திற்கு கதைவசனம் எழுதி 45000கோடி ரூபா சம்பாதித்தார் என்று கூறுவதுபோல் உதயநிதி நாலு படத்தில் நடித்து இத்தனை கோடி சம்பாதித்தார் என்று கூறப்போகிறார்களா?
tholarhttp://www.blogger.com/profile/12653019173515961946noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6812012482988542130.post-64257349222741502882024-03-22T08:13:00.000-07:002024-03-22T08:13:22.105-07:00பெண் விடுதலை குறித்து !பெண் விடுதலை குறித்து !
பெண் விடுதலை இல்லையேல் மண் விடுதலை மட்டுமல்ல இன விடுதலையும்கூட இல்லை.
ஆனாலும் இன விடுதலை குறித்து பேசுபவர்கள் எந்தளவு தூரம் பெண் விடுதலை குறித்து பேசுகிறார்கள்?
ஐனத்தொகையில் ஆண்களைவிட பெண்களே எண்ணிக்கையில் அதிகம்.
அப்படியென்றால் ஐனநாயக முறைப்படி பெண்கள் கையில்தானே அதிகாரம் இருக்க வேண்டும்.
ஆனால் அவ்வாறு இல்லையே?
வரலாற்றில் பெண்கள் எப்போதும் இப்படி இருந்தில்லை என்றும் இடையில்தான் இவ்வாறு ஆக்கப்பட்டார்கள் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அப்படியென்றால் பெண் எப்போது அடிமையானாள்? அவள் ஏன் அடிமையாக்கப்பட்டாள்?
வரலாற்றின் தொடக்க காலத்தில் தாய் வழிச் சமூக வடிவமே இருந்திருக்கிறது.
இச் சமூக வடிவத்தில் ஆணைவிடவும் பெண்ணிற்கே கூடுதல் அதிகாரம் இருந்துள்ளது.
பெண்ணே குழந்தையைப் பெற்றுக் கொடுக்கும் பிரதான பணியைச் செய்ததன் காரணமாக குடும்பத்தின் தலைமை பெண்ணிடமே இருந்தது.
குழந்தைகள் தாயின் வழியிலேயே அடையாளம் காணப்பட்டனர்.
சமுதாயத்தின் அக் கால கட்டத்தில் திருமணமோ அல்லது ஒருவனுக்கு ஒருத்தி என்பதோ சமூக கட்டுப்பாடாக இருக்கவில்லை.
இதன் பொருள் அவர்கள் பாலியற் கட்டுப்பாடு இன்றி வாழ்ந்தனர் என்பது அல்ல.
ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து வாழ்ந்து குழந்தைகளைப் பெற்றனர். ஆனால் ஆதிக்கம் பெண்ணிடமே இருந்தது.
கருத்து வேறுபாடு காரணமாக பிரிய நேரும்போது ஆணே(தந்தை) சமூக குழும வீட்டை நீங்கிச் செல்ல வேண்டியிருந்தது. குழந்தைகள் தாயுடனேயே இருந்தன.
சமுதாயத்தின் இக் காலகட்டத்தில் உற்பத்திக் கருவிகளான அம்பு, வில், ஈட்டி போன்றன பொதுவானதாக முழு சமூகத்திற்கும் சொந்தமானதாக இருந்தன.
அதாவது உற்பத்திக் கருவிகள் தனியார் உடமையாக இருக்கவில்லை.
மந்தைகள், காணிகள் போன்ற உற்பத்தி வசதிகளும் இருக்கவில்லை.
தனியார் உடமையாக எதுவும் இல்லாததால் ஒரு தந்தை தன் குழந்தைக்கு விட்டுச் செல்ல எதுவும் இருக்கவில்லை.
உற்பத்தி சக்திகளின் விருத்தியின் விளைவாக உற்பத்திக் கருவிகளின் உடமை தனியார் கைக்கு மாறியது.
அதன்பின் பணத்தின் திரட்சியும் மூலதனமும் உருவாகின.
இந்த நிலையில் ஆண் தனது தனியுடமை தனது மனைவிக்கு பிறந்த தனது குழந்தைகளுக்கு போவதை விரும்பினான்.
இதுவே ஒருதார மணம் நடைமுறைக்கு வந்த அடிப்படை.
இந்த ஒருதார மணம் என்பது பெண்ணுக்குரியதாக இருந்ததேயொழிய ஆணுக்கு அல்ல.
பெண் வழிச் சமூகம் ஆண் வழிச் சமூகமாக மாறியது. ஆண் ஆதிக்கத்திற்கு வந்தான்.
இந்த ஆண் ஆதிக்க நிலை முடிவுக்கு வருமா? பெண் விடுதலை பெறுவாரா? என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.
tholarhttp://www.blogger.com/profile/12653019173515961946noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6812012482988542130.post-21143196393557584012024-03-22T08:12:00.000-07:002024-03-22T08:12:35.000-07:001910 ஆண்டு கிளாரா ஐட்கின் தலைமையில்1910 ஆண்டு கிளாரா ஐட்கின் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் பெண்களின் பிரச்சனைக்கு உரிமை மீட்பதே தீர்வு என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
1917ம் ஆண்டு மார்ச் 8 ம் திகதியன்று பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக மிகப்பெரும் பேரணி மற்றும் போராட்டம் நடத்தினர்
இந்த தினமே உலக மகிளிர் தினமாகும்
இந்த அமைப்பில் முதலாளிகளுக்கு இலாபத்தை தருகிற வேலை மட்டுமே ஆக்கபூர்வமான வேலையாக கருதப்படுகிறது.
இதன்படி பெண்கள் வீடுகளின் நான்கு சுவர்களுக்குள் செய்யும் உழைப்பு பயனற்ற வேலை என்றே கருதப்படுகிறது.
இதை கவனிக்க வேண்டியது பெண் செய்யவேண்டிய முதல் காரியம் என்றார் ரோசா லக்சம்பேர்க்
பெண்கள் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெறுவது எப்போது?
பொருளாதார நிலைமைகள் மாறி உற்பத்திக் கருவிகள் மீண்டும் சமூகத்தின் உடமையாகும்போது நிச்சயமாக அது முடிவுக்கு வரும்.
உற்பத்தியில் சமபங்குடையவராகப் பெண்ணின்நிலை மீட்கப்படும்.
அப்போது திருமணமும் ஒருதார முறையும் நிலைக்குமா என்பதை இப்போது கூறுவது கடினம்.
ஆனால் வேறுபட்ட பொருளாதார நிலைமைகள் வேறுபட்ட விதமான சமுதாயத்தை உருவாக்கும்.
அவ்வாறு மாறிய பொருளாதார சமூகநிலைமைகளின் கீழ் வாழும் மக்கள் தாம் வேண்டும் சமூக அமைப்பு எப்படியானதாயிருக்க வேண்டும் என்பதுபற்றி தமது சொந்த முடிவுகளை எடுப்பர்.
அத்தகைய ஒரு சமூகத்தில் பெண்கள் விடுதலை பெற்று ஆண்களுடன் சமத்துவமாயிருப்பர் என்பதில் ஐயமில்லை.
tholarhttp://www.blogger.com/profile/12653019173515961946noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6812012482988542130.post-56341079095695540632024-03-22T08:11:00.001-07:002024-03-22T08:11:55.816-07:00மார்ச் -8 சர்வதேச மகிளிர் தினத்தை முன்னிட்டு. மார்ச் -8 சர்வதேச மகிளிர் தினத்தை முன்னிட்டு.
முறத்தால் புலியை விரட்டியதாக கூறும் புறநானூற்றுக் கதைகள் எல்லாம் உண்மைதானோ என்று இப்பொது நினைக்க தோன்றுகிறது.
ஆதிகாலத்தில் பெண் தலைமையே இருந்ததாக சமூக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
காலப் போக்கில் பெண் எப்படி அடிமையானாள் அல்லது ஆணாதிக்கம் எப்படி ஏற்பட்டது என்பது பற்றி இங்கு நான் உரையாடப் போவதில்லை.
ஆனால் வெகுவிரைவில் அனைத்து அடிமைத்தனத்தையும் உடைத்து அவர்கள் தமது வரலாற்றை படைப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அதற்குரிய அனைத்து தகுதிகளும் எமது தமிழ இன பெண்களுக்கு உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது.
tholarhttp://www.blogger.com/profile/12653019173515961946noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6812012482988542130.post-72726545699366770352024-03-22T08:11:00.000-07:002024-03-22T08:11:10.020-07:00செய்தி - மற்ற மூவரையும் உயிரோடு செய்தி - மற்ற மூவரையும் உயிரோடு விடுதலை செய்ய வேண்டும் என கோரியுள்ளார் சிறீதரன்
சிறீதரன் பாராளுமன்ற உறுப்பினர் மட்டுமல்ல தமிழரசுக்கட்சியின் தலைவராகவும் இருக்கிறார்.
கடந்த 33 வருடமாக மௌனமாக இருந்தவர் இப்போது அதுவும் பாராளுமன்றத்தில் பகிரங்கமாக கோரியுள்ளார்.
இதற்கு காரணம் சாந்தன் மரணமும் அதையடுத்து மக்கள் மத்தியில் உருவாகியுள்ள இந்தியா மீதான கோபம்.
இனியாவது மற்ற மூவரையும் உயிரோடு விடுதலை செய்து மக்களின் கோபத்தை தணிக்க இந்திய அரசு முன்வரவேண்டும்.tholarhttp://www.blogger.com/profile/12653019173515961946noreply@blogger.com0