Sunday, July 31, 2016

சாந்தன் அவர்கள் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்துள்ள கருத்துகள்

இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு added 3 new photos.
2 mins
இங்கிலாந்து பேர்மிங்காம் நகரில் இருக்கும் நண்பர் சாந்தன் அவர்கள் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு,
தோழர் பாலன் எழுதியுள்ள “இலங்கை மீதான் இந்திய ஆக்கிரமிப்பு” நூல் இன்றைய காலத்திற்கு தேவையான அனைவரும் படிக்க வேண்டிய ஒரு அத்தியாவசியமான நூலாகும்.
இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு குறித்து சுருக்கமான, அதேவேளை அனைவரும் படித்து புரிந்துகொள்ளும் வண்ணம் எளிய நடையில் இந் நூல் எழுதப்பட்டுள்ளது.
இந்த நூலில் தோழர் பாலன் குறிப்பிட்டிருக்கும் ஆசான்களான தோழர் சண்முகதாசன் மற்றும் தோழர் தமிழரசன் ஆகியோரிடம் நேரிடையாக பழகும் வாயப்பு எனக்கும் கிட்டியிருந்தது.
நான் யாழ்ப்பாணத்தில் நெல்லியடி என்னும் ஊரைச் சேர்ந்தவன் என்பதால் சிறுவயது முதல் பல தடவை தோழர் சண்முகதாசன் கூட்டங்களையும் பேச்சுகளையும் பார்த்திருக்கிறேன்.
1983ம் ஆண்டு இனக் கலவரத்தின் பின்னர் தோழர் சண்முகதாசன் யாழ்ப்பாணம் வந்திருந்தவேளை தமிழ்மக்கள்பாதுகாப்பு பேரவை தோழர்களுக்கு நெல்லியடி மற்றும் புலோலியில் அரசியல் வகுப்பகள் நடத்தியிருந்தார்.
அவ் வகுப்பில் நானும் கலந்து கொண்டிருந்தேன். அவ்வேளை தோழர் சண்மகதாசன் “ இந்தியா ஒருபோதும் தமிழீழத்தை பெற்று தராது. அது போராளிகளுக்கு பயிற்சியும் ஆயுதமும் வழங்குவது அதன் மூலம் இலங்கைப் பிரச்சனையில் தலையிடுவதற்காகவே” என்பதை அழுத்தமாகவும் தெளிவாகவும் கூறியிருந்தார்.
அதேபோன்று தோழர் தமிழரசன் அவர்கள் தமிழ்மக்கள் பாதுகாப்பு பேரவைத் தோழர்களுக்கு பெரம்பலூருக்கு அருகில் மலையாளப்பட்டடி என்னும் இடத்தில் அரசியல் வகுப்புகள் எடுத்தபோதும் நான் அதில் கலந்து கொண்டிருக்கிறேன்.
அப்போது தோழர் தமிழரசன் “ இந்தியா ஒருபோதும் தமிழீழத்தை அங்கீகரிக்காது. மாறாக இலங்கை மீது அது ஆக்கிரமிப்பு செய்யவே விரும்புகிறது” என்பதை தெளிவாக எடுத்துரைத்தார்.
தோழர் சண்முகதாசன் மற்றும் தோழர் தமிழரசன் ஆகியோர் அன்று கூறியவை உண்மைதான் என்பதை வரலாறு இன்று எமக்கு நன்கு எடுத்துகாட்டுகிறது.
சீனாவில் மாவோ சேதுங் மறைவிற்கு பின்னர் ஆட்சிக்கு வந்த டெங்சியாபிங் கும்பல் “ பூனை கறுப்போ சிவப்போ என்பது முக்கியம் அல்ல. அது எலி பிடிக்கிறாதா என்பதே எமக்கு முக்கியம்” என்று கூறி அப்பட்டமாக மீண்டும் முதலாளித்துவ பாதைக்கு மாறியபோது அதனை சுட்டிக்காட்டி அம்பலப்படுத்தியவர் தோழர் சண்முகதாசன்.
மாவோ சேதுங் உயிருடன் இருந்த காலத்திலேயே ஜே.வி.பி கிளர்ச்சியை அடக்குவதற்காக சீன அரசு இலங்கை அரசுக்கு ஆயத உதவி செய்தமையை முதன் முதலில் கண்டித்த கம்யுனிஸ்ட் தலைவர் தோழர் சண்முகதாசன்.
எனவே சீன ஆதரவுக்காகவே இந்திய ஆக்கிரமிப்பை கம்யுனிஸ்டுகள் கூறுகின்றனர் என்பது வரலாறு தெரியாதவர்களின் சின்னப்பிள்ளைத்தனமான விமர்சனம் ஆகும்.
இலங்கையில் இந்தியா மட்டுமல்ல சீனா உட்பட எந்த நாடு ஆக்கிரமிப்பு செய்தாலும் அதனை தயங்காமல் உறுதியாக எதிர்த்து வருபவர்கள் மாக்சிச லெனிச மாவோயிச சிந்தனையை முன்னெடுக்கும் புரட்சியாளர்களே.
தோழர் பாலன் எழுதியுள்ள இந்த நூலானது இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பை தெளிவாக எடுத்துக் கூறுவதுடன் அதற்கு எதிரான போராட்டத்திற்கும் வழி சமைக்கிறது. அதுவே இந் நூலின் சிறப்பு ஆகும்

இந்தியாவில் தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் உயிர் 15 ரூபாவை விட மலிவானதா?

•இந்தியாவில் தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் உயிர்
15 ரூபாவை விட மலிவானதா?
இந்தியாவில் உ.பி மாநிலத்தில் 15 ரூபா கடன் பாக்கிக்காக ஒரு தலித் தம்பதியர் வெறி பிடித்த கடை முதலாளியால் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
கடையில் வாங்கிய பிஸ்கட் பக்கட்டை பிரிப்பதற்கு முன்னரே தமது பெற்றோரை கோடாரியால் கொன்றுவிட்டனர். இனி என் மூன்று தம்பிகளையும் எப்படி வளர்ப்பேன் என்று அத் தம்பதியினரின் மூத்த மகள் அழுகிறார்.
முதலாளி அம்பானியின் மனைவிக்குகூட ஓய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் தாழ்த்தப்பட்ட சாதி மக்ளுக்கு எந்த பாதுகாப்பும் அற்ற நிலை காணப்படுகிறது.
கடந்த மாதம் குஜராத் மாநிலத்தில் செத்த பசு மாட்டின் தோலை உரித்த குற்றச்சாட்டின் பேரில் நான்கு தலித் இளைஞர்கள் இந்து வெறியர்களால் தாக்கப்பட்டுள்ளனர்.
200 வருடங்களுக்கு முன்னர் கறுப்பு இன மக்கள் சங்கிலியால் கட்டப்பட்டு அமெரிக்காவிற்கு அடிமைகளாக கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால் இன்றும்கூட இந்தியாவில் தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் கயிறுகளால் கட்டப்பட்டு தண்டிக்கப்படுகிறார்கள். சிறுவர்கள்கூட மரத்தில் கட்டிவைக்கப்பட்டு மொட்டையடிக்கப்பட்டு தண்டிக்கப்படுகின்றனர்.
கறுப்பு அடிமைகளால் கட்டிய வெள்ளை மாளிகையில் கறுப்பர்களாகிய தாம் குடும்பத்துடன் குடியிருப்பதாக பராக் ஒபாமாவின் மனைவி அண்மையில் பெருமிதத்துடன் பேசியிருந்தார்.
இந்தியாவில் அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் இந்தியாவை ஆளும் நிலை வராவிடினும பரவாயில்லை. அவர்கள் சுதந்திரமாக சம உரிமையுடன் வாழும் நாள் எப்போது வரும்?

Saturday, July 30, 2016

மார்க் அன்ரனி அவர்கள் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்த கருத்துகள்

இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
கனடாவில் இருக்கும் நண்பர் மார்க் அன்ரனி அவர்கள் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்த கருத்துகள் வருமாறு,
நான் வேலூர் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தவேளை தோழர் பாலன் அவர்களும் சில வருடங்கள் எம்முடன் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.
அவ் வேளைகளில் அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தவர்களில் நானும் ஒருவன். நான் புரட்சிகர சிந்தனைகள் பெற்றுக்கொள்வதற்கு அவரின் நட்பு மிகவும் உதவியாக இருந்தது.
அவர் எழுதிய “சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்” நூல் சிறப்புமுகாம் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது.
அதேபோன்று அடுத்து அவர் எழுதி வெளியிட்டிருக்கும் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூலானது மக்கள் மத்தியில் இந்தியாவின் ஆக்கிரமிப்பை நன்கு அம்பலப்படுத்தி வருகிறது.
இந்திய ஆக்கிரமிப்பு பற்றியும் குறிப்பாக இந்திய ராணுவம் இலங்கையில் மேற்கொண்ட அழிவுகள் பற்றியும் அறியாதவர்கள் இல்லை.
ஆனால் இந்திய ஆக்கிரமிப்பை அனைவரும் புரியும் வண்ணம் எளிய நடையில் சுருக்கமாக தந்திருப்பதில் தோழர் பாலன் அவர்களின் எழுத்துகள் வெற்றி பெற்றுள்ளன என்றே கூறவேண்டும்.
ஆம். தோழர் பாலன் அவர்களின் எழுத்துகள் வெறும் எழுத்துகள் என்பதையும் தாண்டி மக்கள் மத்தியில் மாபெரும் சக்தியாக மாறும் தன்மை கொண்டவை என்பவை நிரூபித்து வருகின்றன.
தமிழ் இனத்தின் மீதும் இலங்கை நாட்டின் மீதும் அக்கறை கொண்ட அனைவரும் படிக்க வேண்டிய ஒரு நூல் தோழர் பாலன் எழுதியிருக்கும் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு”
படிப்போம். !
பரப்புவோம். !!
ஒன்றாய் அணி திரள்வோம் !!

•மனிதாபிமானமா? அது கிலோ என்ன விலை?

•மனிதாபிமானமா?
அது கிலோ என்ன விலை?
செய்தி- முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகன் வீட்டில் மனிதாபிமானமின்றி 3 நாட்களாக தொடர்ந்து சோதனை செய்தமைக்கு கலைஞர் கருணாநிதி கண்டனம்.
முன்னாள் தி.மு.க அமைச்சர் ஜெகத்ரட்சகன் வீட்டில் சோதனை செய்த அதிகாரிகள் கணக்கில் வராத பல கோடி ருபா பணம் மற்றும் வரி ஏய்ப்பு செய்தமைக்கான ஆதாரங்கள் என பலவற்றை கைப்பற்றியுள்ளனர்.
ஆனால் தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் இவ்வாறு அதிகாரிகள் கண்டு பிடித்தமைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஒருவேளை அடுத்து இதேபோன்று தன் குடும்பத்தவர்கள் வீட்டிலும் சோதனை செய்யப்பட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தில் இவ்வாறு கண்டனம் தெரிவித்தாரோ தெரியவில்லை.
ஆனால் அவர் ஜெகத்ரட்சகனுக்கு மருத்துவ உதவி வழங்காமல் தொடர்ந்து 3 நாட்கள் மனிதாபிமானம் இன்றி சோதனை செய்யப்பட்டதாக கூறி கண்டித்துள்ளார்.
மனிதாபிமானம் என்ற சொல்லை உச்சரிக்க கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு என்ன தகுதி இருக்கு?
முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட 40 ஆயிரம் தமிழ் உறவுகளின் ரத்தம் காயுமுன்னரே கொலைகார மகிந்த ராஜபக்சவுடன் தன் மகள் கனிமொழியை கைகுலுக்க வைத்து பரிசில்கள் வாங்கியவர் இந்த கலைஞர்தானே!
மருத்துவ சிகிச்சைக்காக வந்த பிரபாகரனின் தாயாரை வயதானவர் என்று கூடப் பார்க்காமல் மனிதாபிமானம் இன்றி திருப்பி அனுப்பியவர்தானே இந்த கலைஞர் கருணாநிதி!
40 ஆயிரம் மக்களை கொன்று அழித்த மகிந்த ராஜபக்சகூட பிரபாகரனி;ன் வயதான தாயார் மருத்துவ சிகிச்சை பெறச் செல்வதை தடுக்கவில்லை.
உலகத் தமிழினத்தலைவர் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு மனிதாபிமானம் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கு?

•இதைத்தானே மகிந்த ராஜபக்சவும் கூறினார்!

•இதைத்தானே மகிந்த ராஜபக்சவும் கூறினார்!
•காஸ்மீரில் கொல்லப்படுகின்ற மக்கள் யாவரும் பயங்கரவாதிகள் என்று இந்திய அரசு கூறுகிறது.
இலங்கையில் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் யாவரும் புலிப் பயங்கரவாதிகள் என்று மகிந்த ராஜபக்ச கூறுகிறார்.
•காஸ்மீர் சிறுவர்கள் ஏன் வீதிக்கு வந்தார்கள்? அவர்கள் வீட்டில் இருந்திருந்தால் கொல்லப்பட்டிருக்கமாட்டார்கள் என்று இந்திய ராணுவம் கூறுகிறது.
இதேபோலவே மக்கள் மத்தியில் புலிகள் இருந்தமையினாலே சிறுவர்கள் கொல்லப்பட நேர்ந்தது என்று இலங்கை ராணுவம் கூறுகிறது.
•காஸ்மீரில் அப்பாவி பெண்களை பாலியல் வல்லுறவு செய்துவிட்டு அவர்களை பயங்கரவாதிகள் என்று இந்திய ராணுவம் கூறுகிறது.
இலங்கையில் அப்பாவி தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவு செய்துவிட்டு அவர்களை புலிப் பயங்கரவாதிகள் என்று இலங்கை ராணுவம் கூறுயது.
•காஸ்மீரில் சிறுவர்களை கொன்றுவிட்டு அவர்கள் பாகிஸ்தான் கொடியை வைத்திருந்ததாக இந்திய அரசு கூறுகிறது. பாகிஸ்தான் கொடியை வைத்திருந்தால் அதற்காக கொல்லத்தான் வேண்டுமா என்று யாரும் நியாயம் கேட்பதில்லை.
அதுபோல செ;ஞ்சோலை அனாதை சிறுவர்கள் மீது குண்டுவீசிக் கொன்றுவிட்டு அவர்கள் பயிற்சி எடுத்தக்கொண்டு இருந்ததாக இலங்கை அரசு பொய் கூறியது. அப்போது சொந்த மக்கள் மீது ஒரு அரசு குண்டு வீசலாமா என்று யாரும் நியாயம் கேட்க வில்லை.
(1)தமிழ் மக்களை அழித்த மகிந்த அரசு தமக்கு உதவும் என்று காஸ்மீர் மக்கள் மட்டுமல்ல உலகில் எந்த மக்களும் நம்புவதில்லை. ஆனால் காஸ்மீர் மக்களை அழிக்கும் இந்திய அரசு தமிழ்மக்களுக்கு உதவும் என்று சில தமிழர்கள் இன்னமும் நம்புகின்றனர்.
(2) இலங்கையில் தமிழ் மக்கள் அழிக்கப்பட்டபோது காஸ்மீர் மக்கள் அனுதாபம் தெரிவித்தார்கள். பந்த் அனுட்டித்தார்கள். ஆனால் இன்று காஸ்மீர் மக்கள் அழிக்கப்படும்போது தமிழ் மக்கள் மௌனமாக இருக்கின்றார்கள்.
(3) யாரும் பாலஸ்தீனக் கொடுமைக்கு எதிராக கண்டனம் தெரிவிக்கலாம். சிரிய அகதிகளுக்கு ஆதரவாக அனுதாபம் தெரிவிக்கலாம். ஆனால் காஸ்மீரில் இந்திய கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்தால் அவர்களை துரோகி என்கிறார்கள்.
குறிப்பு- இலங்கையில் தமிழ் மக்கள் நடத்தியது போன்ற விடுதலைப் போராட்டத்தை தமிழக மக்கள் நடத்தியிருந்தால் ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல காஸ்மீர் மக்கள் உட்பட அனைத்து சிறுபான்மை இனங்களும் விடுதலை பெற்றிருக்கும் என்று காஸ்மீர் விடுதலை முன்னனி தலைவர் யாசின் மாலிக் கூறியுள்ளார்.
இப்போது புரிகிறதா? ஏன் இந்திய உளவுப்படையின் கைக்கூலிகள் பேக் ஜடி யில் இரவு பகலாக முகநூலில் களமாடுகிறார்கள் என்று?

தோழர் மார்க் அவர்கள் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்துள்ள கருத்துகள்

இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
அனைவராலும் “மார்க் அய்யா” என அன்புடன் அழைக்கப்படும் தோழர் மார்க் அவர்கள் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு,
தோழர் பாலனின் இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு என்னும் நூலைப்படித்தேன்.
அதில் அவர் அரிய பல தகவல்களை புள்ளிவிபரங்களுடன் தந்திருக்கின்றார்.
குறிப்பாக வளர்ந்த பெரிய நாடுகள் வளர்கின்ற சிறியநாடுகளை பயன்படுத்தும் முறை இதைத்தான் நவகாலனித்துவ முறை என்கிறார்கள்.
இதே முறையைத்தான் தென்அமெரிக்க நாடுகளிலும் அமெரிக்கா பின்பற்றிவருகின்றது. கியுபாவைத்தவிர.
மத்திய கிழக்குநாடுகளிலும் அமெரிக்காவும் பிரித்தானியாவும் இதே கொள்கையைத்தான் கடைப்பிடித்து அந் நாடுகளுக்கு பாரிய சேதங்களையும் விரைவில் மீளமுடியாத ஏதிர்விளைவுகளையும் ஏற்படுத்தியுள்ளன.
சீனாவும் இப்படித்தான் செய்ய முனையும என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.ஆனால் அதன் அண்டை நாடுகளிலும் தென்கிழக்கு ஆசியாவிலிலும் ஏன் ஆபிரிக்காவிலும் நிலமை வேறாகவுள்ளது.
இந்நாடுகள் ஏற்கனவே அமெரிக்க ஜரோப்பிய நாடிகளின் பிடியில் சிக்குண்டு இருக்கின்றன.
சந்தைகளைப் பிடிக்கும் பிரச்சனைகளால்தான் இரண்டாவது மகாயுத்தமே தொடங்கப்பட்டது.
இந்தியா தன் நலனுக்காகவே தமிழரின் பிரச்சனைகளைப் பாவிக்குமே தவிர தமிழருக்கான உரிமைகளை பெற்றுத்தரப் போவதில்லை.
தமிழர் உரிமையோடு இலங்கையில் வாழவேண்டுமானால் அவர்களிடம் மனமாற்றம் ஏற்படவேண்டும்.
பிற்போக்கு முதலாளித்துவத் தலைமைகளை நிராகரித்து உழைக்கும் மக்களுடனும் நாட்டை நேசிக்கும் இனவாதமற்ற முற்போக்கு சக்திகளுடனும் சேரவேண்டும்.
ஓரு மூன்றாவது அணியைப்பலப்படுத்தி இனவாதத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் ஏதிராகப் போராடி வெற்றி பெற வேண்டும்.
இப்போது இருக்கும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி, யுஎன்பி, தமிழ் முதலாளித்துவக் கட்சிகளைத் தோற்கடித்து அவர்கள் பலத்தை பலவீனப்படுத்துவதன் மூலமே இலங்கைக்கும் தமிழர்களுக்கும் ஒளிமயமான எதிர்காலம் பிறக்கும்.
தோழர் பாலன் எழுதியுள்ள “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் அவ்வாறான ஒரு அணியின் அவசியத்தை எமக்கு உணர்த்துகிறது.
இப்பொது எம்முன் உள்ள பாரிய கேள்வி என்னவெனில் அடுத்து நாம் என்ன செய்யப் போகிறோம்?
இலங்கையில் மக்களுக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலம் கிடைக்க வழி சமைக்கப் போகிறோமா? அல்லது தொடர்ந்து ஆக்கிரமிப்பிற்கு இடங்கொடுத்து அடிமையாக இருக்கப் போகிறோமா?

•உலகம் போற்றும் திருவள்ளுவரை இந்தியா ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன்?

•உலகம் போற்றும் திருவள்ளுவரை இந்தியா ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன்?
திருவள்ளவர் தமிழர் என்பதாலா ? அல்லது தமிழ்நாட்டில் பிறந்ததாலா?
உலக அறிஞர்களில் ஒருவராக திருவள்ளுவர் ஏற்றுக்கொள்ளப்பட்டு சிங்கப்பூரில் சிலை வைத்துள்ளார்கள். அதனை சிங்கப்பூரில் யாரும் எதிர்க்கவில்லை
நிற வேற்றுமை பார்க்கும் இங்கிலாந்து நாட்டில் கூட லண்டன் பல்கலைக்கழம் ஒன்றில் திருவள்ளுவருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதனை யாரும் அகற்றி கோணிப்பையில் போடவில்லை.
ஆனால் இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலை திறக்கப்பட முடியாமல் பல வருடம் சாக்கு பையினால் மூடி வைக்கப்பட்டிருந்தது.
தற்போது உத்தரப்பிரதேசத்தில் திறந்துவைக்கப்ட்ட திருவள்ளுவர் சிலை அகற்றப்பட்டு பிளாஸ்டிக் பையினால் சுற்றி வைக்கப்பட்டுள்ளது.
உலகம் போற்றும் அறிஞர் ஒருவரையே அவர் தமிழன் என்பதால் ஏற்றுக்கொள்ளாதவர்கள் சாதாரண தமிழரை இந்தியனாக ஏற்றுக்கொள்வார்களா?
அதனால்தான் 600 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டபோது அவர்களை இந்திய மீனவர்கள என்று சொல்லாமல் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொலை என்று கூறினார்கள்.
அவர்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் நம்மவர்கள்தான் தாம்இந்தியன் என்று வீணாக நம்பி ஏமாந்துகொண்டிருக்கிறார்கள்.

•மக்கள் சக்தி மகத்தானது. அது அணுகுண்டைவிட வலிமையானது என்பது உண்மையானால், அது துருக்கி மக்களுக்கு மட்டுமல்ல காஸ்மீர் மக்களுக்கும் பொருத்தமானதே!

•மக்கள் சக்தி மகத்தானது. அது அணுகுண்டைவிட வலிமையானது என்பது உண்மையானால்,
அது துருக்கி மக்களுக்கு மட்டுமல்ல காஸ்மீர் மக்களுக்கும் பொருத்தமானதே!
துருக்கியில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியபோது அதனை மக்கள் ஒன்றுதிரண்டு முறியடித்துள்ளனர்.
ராணுவத்தின் துப்பாக்கிகளைவிட, பீரங்கிகளைவிட மக்கள் சக்தி மேலானது என்பதை மீண்டும் ஒரு முறை வரலாறு நிரூபித்துள்ளது.
துருக்கியின் அனுபவம் காஸ்மீர் மக்களுக்கும் பொருத்தமானதே. இந்திய ராணுவத்தை நிச்சயம் காஸ்மீர் மக்கள் விரட்டியடிப்பார்கள்.
இந்திய ராணுவத்தின் துப்பாக்கியில் இருந்து வரும் தோட்டாவைவிட காஸ்மீர் சிறுவர்கள் எறியும் கல் சக்தி மிக்கது என்பதை எதிர்கால வரலாறு காட்டும்.
காஸ்மீர் மக்கள் முஸ்லிம்கள். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்துக்களின் ஆதரவை இழக்க வேண்டாம் என்று தமிழர்களிடம் சொல்லிப் பார்த்தார்கள்.
அப்படியென்றால் ஈழத்தில் இந்து தமிழர்கள் கொல்லப்பட்டபோது ஏன் இந்திய இந்துக்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று தமிழ்மக்கள் கேட்கும் கேள்விக்கு இவர்களிடம் பதில் இல்லை.
ஒன்றுதான் பத்தாகிறது. பத்துதான் நூறு , ஆயிரம் என்று ஆகிறது. ஆம் தமிழ் மக்கள் காஸ்மீர் மக்களுக்கு தமது ஆதரவை தெரிவிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
தமிழ் மக்களின் பெருகும் ஆதரவு கண்டு இந்திய அரசு திகைக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்று சேர்வதை எப்படி தடுப்பது என யோசிக்கிறது.
ஏனெனில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்று சேர்ந்துவிட்டால் ஒரு நிமிடம்கூட இந்திய ஆதிக்கம் நிலைக்காது என்பதை அவர்கள் அறிந்தே வைத்திருக்கின்றனர்.

•தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்- பாரதி

•தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்- பாரதி
தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லையேல் இந்த உலகம் அழிக்கப்படவில்லை.
மாறாக தனக்கான உணவை எடுத்துக் கொண்டவனை மரத்தில் கட்டிவைத்து மொட்;டை அடிக்கிறது இந்த உலகம்.
இந்த சிறுவர்களின் தோளில் பூநூல் இருந்திருந்தால் இந்த தண்டனை கிடைதிருக்குமா என்று நான் உங்களை கேட்கப் போவதில்லை.
ஆனால் நான் இங்கு சொல்ல விரும்புவதெல்லாம் “வன்முறையாளர்கள் உருவாதில்லை. உருவாக்கப்படுகிறார்கள்” என்பதையே!
இந்த உலகில் முதலாளி ஏழையை ஏமாற்றுவது வியாபாரம் என அழைக்கப்படுகிறது. ஆனால் ஏழை ஏமாற மறுத்து போராடினால் அது வன்முறை எனப்படுகிறது.
போராடுபவர்கள் பயங்கரவாதி என்று சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இதுதான் தமிழ் மக்களுக்கு நடந்தது. காஸ்மீர் மக்களுக்கும் நடக்கிறது. சதீஸ்கர் பழங்குடி மக்களுக்கும் நடக்கிறது.

•தலை மட்டுமா மொட்டையடிக்கப்பட்டுள்ளது? மொத்த இனமும் அல்லவா மொட்டை அடிக்கப்பட்டுள்ளது!

•தலை மட்டுமா மொட்டையடிக்கப்பட்டுள்ளது?
மொத்த இனமும் அல்லவா மொட்டை அடிக்கப்பட்டுள்ளது!
துருக்கியில் ராணுவப்புரட்சி நடந்தபோது துருக்கியஇளைஞர்கள் டாங்கியின் சில்லில் தலையைக் கொடுத்து நாட்டைக் காப்பாற்றினார்கள்.
காஸ்மீரில் இந்திய ராணுவத்திற்கு எதிராக கல் எறிந்து சிறுவர்கள் சுதந்திரத்திற்காகப் போராடுகிறார்கள்.
ஆனால் தமிழ் இளைஞர்கள் ரஜனியின் கபாலி படத்திற்காக தலையை மொட்டையடிக்கிறார்களே!
தமிழ் இளைஞர்களுக்கு,
• திருவள்ளுவரை பிளாஸடிக் பையில் போட்டு கட்டி வைத்தாலும் கவலையில்லை.
• பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டினாலும் கவலை இல்லை.
• ஏழு பேர் விடுதலையை மத்திய மாநில அரசு மறுத்தாலும் கவலை இல்லை.
• தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்தாலும் கவலை இல்லை
• தொப்புள்கொடி உறவுகள் என நம்பி வந்த அகதிகளை சிறப்புமுகாமில் அடைத்து வைத்தாலும் கவலை இல்லை.
அவர்களுடைய கவலை எல்லாம் “கபாலி” படத்திற்கு முதல் காட்சிக்கு டிக்கட் எப்படி எடுப்பது என்பது பற்றியே!
அதனால்தான் மற்ற இனம் எல்லாம் தலை நிமிர்ந்து வாழ்கிறது. தமிழ் இனம் மட்டும் தலை குனிந்து வாழ்கிறதா?

•இவர்கள் 862 நாட்களாக மதுரை சிறையில் வாடுவது யாருக்காக?

•இவர்கள் 862 நாட்களாக மதுரை சிறையில் வாடுவது யாருக்காக?
முதலாளிகளின் பல்லாயிரம் கோடி ரூபா கடன்களை வசூலிக்காத அரசு, அக் கடன்களை வசூலிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு, மாணவர்களின் கல்விக் கடனை மட்டும் வசூலிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்திய அரசின் ரிலைன்ஸ் கல்வி கடன் வசூல் காரணமாக மதுரையில் ஒரு அப்பாவி மாணவன் இறந்துள்ளான
ரிலைன்சுக்கு எதிராக மதுரையில் மாணவர்களும் சமூக ஆர்வலர்களும் போராட்டத்தில் குதித்து வருகின்றனர்.
முதலாளி மல்லையாக்களை வெளிநாட்டுக்கு பாதுகாப்புடன் அனுப்பிவைக்கும் இந்திய அரசு ஏழை மாணவர்களை மட்டும் ரிலைன்ஸ் கம்பனி மூலம் சாகடிக்கின்றது என்ற நியாயமான கோபம் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது.
மதுரையில் உள்ள ரிலைன்ஸ் அங்காடிக்கு குண்டு வைத்த குற்றச்சாட்டில் 10.03.2014 யன்று மதுரையில் 6 தமிழ் உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
தோழர்கள் திருச்செல்வம், தமிழரசன், காளை, ராஜா, மார்டின், கார்த்திக் ஆகிய ஆறுபேரும் கடந்த 862 நாட்களாக அதாவது இரண்டு வருடங்களுக்கு மேலாக மதுரை சிறையில் வாடுகிறார்கள்.
இவர்கள் கைது செய்யப்பட்ட வேளையில் தமிழ் மக்கள் ரிலைன்ஸ் கம்பனி மீது கவனம் செலுத்தியிருந்தால் இன்று ஒரு மாணவன் உயிரிழந்ததை தவிர்த்திருக்கலாமோ என தோன்றுகிறது.
இந்த தமிழ் உணர்வாளர்கள் கடந்த இரண்டு வருடங்களாக சிறை வைக்கபப்ட்டிருந்தும் இன்று வரை இவர்களுக்கு பிணை (ஜாமீன்) மறுக்கப்படுகிறது.
ஊழல் அரசியல்வாதிகளுக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. சாதி வெறி ஆணவக் கொலைகாரர்களுக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த தமிழ் உணர்வாளர்களுக்கு மட்டும் ஜாமீன் மறுக்கப்படுகிறது.
இவர்கள் மீதான வழக்கு விசாரணை யாவும் முடிவுற்ற நிலையிலும் இன்னும் தீர்ப்பு வழங்டகப்டவில்லை. 3 நீதிபதிகள் மாறி மாறி வந்தும் தீர்ப்பை கூறாமல் வேண்டுமென்றே இழுத்தடிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஊழல் செய்வதை விட, ஆணவக் கொலைகள் செய்வதை விட, தமிழ் மீதும் தமிழ் இனத்தின் மீதும் உணர்வாக இருப்பது மிகப் பெரிய குற்றமா?
அதனால்தானா இந்த உணர்வாளர்கள் இரண்டு வருடத்திற்கு மேலாக சிறையில் அடைத்து வைத்து துன்புறுத்தப் படுகிறார்கள்?
இவர்கள் தமிழக தமிழர்களுக்கு மட்டுமல்ல ஈழத் தமிழர்களுக்காகவும் குரல் கொடுத்தவர்கள். இவர்களை ஈழத் தமிழர்களும் மறந்து விட்டார்களா?

•தமிழன் என்று சொல்லடா ! தலை நிமிர்ந்து நில்லடா !!

•தமிழன் என்று சொல்லடா !
தலை நிமிர்ந்து நில்லடா !!
ஈழத் தமிழர்களுக்காக தன் உயிரை மாய்த்த முத்துக்குமார் பிறந்த அதே மண்ணில்தான்,
ஏழு பேர் விடுதலைக்காக தன் உயிரை மாய்த்த செங்கொடி பிறந்த அதே மண்ணில்தான்,
இவர்கள்,
நடிகர் ரஜனிக்காக மண் சோறு சாப்பிடுகிறார்கள்
நடிகர் ரஜனிக்காக தலைக்கு மொட்டை போடுகிறார்கள்
நடிகர் ரஜனி கட்அவுட்டிற்கு பால் ஊற்றுகிறார்கள்
இவர்களுக்கு,
தமிழர்கள் முள்ளிவாயக்காலில் கொன்று குவிக்கப்பட்டது குறித்து கவலை இல்லை
தமிழர்கள் மரத்திருடர்கள் என்று ஆந்திராவில் சுட்டுக் கொல்வது குறித்தும் கவலை இல்லை
தமிழ் மீனவர்களை இலங்கை அரசு சுட்டுக் கொல்வது குறித்தும் கவலை இல்லை
இவர்களும் தமிழர்கள்தானே?
இவர்களால் எப்படி முட்டாள்தனமாக நடந்து கொள்ள முடிகிறது?
மன்னிக்கவும்
தமிழன் என்று சொல்லவும் முடியவில்லை!
தலை நிமிர்ந்து நிற்;கவும் முடியவில்லை.!!

நடராஜ் அவர்கள் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்துள்ள கருத்துகள்

இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
லண்டனில் இருக்கும் நண்பர் நடராஜ் அவர்கள் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு,
இந்த புத்தகத்தில் பாலன் பல நல்ல விடயங்களை சொல்ல வருகிறார் அல்லது ஆதங்கப்படுகிறார். ஆயினும் அவரது ஆதங்கம் யாராவது இந்த விடயம் குறித்து ஒரு ஆராய்ட்சி (research) கட்டுரை போடமாட்டார்களா என்பது போல் தெரிகிறது.
அன்பரே! இந்தியா 2000 வருடத்திற்கு மேலே இலங்கையை ஆக்கிரமிக்கிறது. உண்மையில் நீர் கூறியது போல் சிஙஹலீஸ் ஸ்டே ஒப் இந்தியா தான் சொறிலங்கா மன்னிக்கவும் சிறிலங்கா என இந்தியா நம்புகிறது.
உண்மையில் இந்த இந்திய ஆக்கிரமிப்பிற்கு எதிராக சிங்களவர்கள் தனித்து நின்று போராட முடியாது. இன்னும் கொஞ்சம் சொல்லப் போனால் முழு இலங்கையும் சேர்ந்தாலும் முடியாது. இந்தியா என்ற யந்திரம் உருள வெளிக்கிட்டு விட்டது. அது மிகப் பெரியது. அத்துடன் அது கரடு முரடானது. அதில் ஏற்கனவே பலர் முடிந்து போனார்கள் அதில் புலியும் ஒன்று.
தமிழர்கள் மட்டும் தான் இந்தியாவிற்கு எதிராக உண்மையில் சொறிலங்காவில் போராடியது என்றால் மிகையாகாது. சிங்களவர்கள் தமக்கு கண் போனாலும் எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டும் என்று கருதினார்கள். அதன் விளைவு தான் இன்று நீங்கள் பார்ப்பது.
இந்தியா இலங்கை தமிழர்களுக்கு செய்தது போல் உலகில் யாரும் ஒருவருக்கும் நம்பிக்கை துரோகம் செய்தது இல்லை என்று கூட கூறலாம்.
ஆனால் அவர்கள் தமது மக்களை நடத்தும் விதத்தில் ஒன்றும் எங்களை வித்தியாசமாக நடத்தவில்லை என்று தோன்றுகிறது.
இது இந்தியா மட்டுமல்ல சீனா, அமெரிக்கா, பிரிட்டன் ஆஸ்திரேலியா எல்லாரும் செய்கிறார்கள். அதனால் அது சரி என்பதற்கு இல்லை.
ஆயினும் இந்தியா, சீனா நிலச்சுவான்தார் சமுதாயம் (Feudal Society) அதனால் நான் சொன்னால் நீ கேட்க வேண்டும் என்ற எண்ணத்தில் வாழும் மக்கள் தங்களது அரசிலையையும் அவ்வாறே பார்ப்பார்கள். இது ஒரு முதலாளித்துவ நாடாக (Capital Society) இருந்திருந்தால் இவ்வளவு விளைவும் வேறு விதமாக இருக்கும்.
இதை தீர்ப்பதற்கு வழி நாங்கள் போராடுவது தான் என்றால் இறுதியில் தமிழர்களின் அழிவிற்கு மீண்டும் வழி கோலும்.
உண்மையில் சிங்களவர்கள் போராடினால் நாங்கள் அதற்கு உதவி செய்ய வேண்டும் என்றில்லை. முதலில் அவர்கள் எங்களுக்கு சுய நிர்ணய உரிமையினை அங்கீகரிக்கட்டும்.
நடு நிலமையாக இருந்து எங்களது உயிர்களையும் உடமைகளையும் பாதுகாக்க வேண்டும். சிங்களவனும் இந்தியனும் எங்களை அழிப்பு தான் செய்வார்கள் என்றால் ஏன் நாங்கள் அவர்களுக்காக இயங்க வேண்டும்.
குறிப்பாக இந்தியாவின் பசப்பு வார்த்தைகளுக்கு எடுபட்டு இனியும் தமிழர்கள் உயிர் கொடுக்கக் கூடாது.
மன்னிக்கவும். இனி மறுபடியும் இந்த புத்தகத்தினை பற்றி கூறின், இது மக்களை நேசிக்காத ஆட்சியாளர்களை வடிவாக தெரியப்படுத்துகிறது.
ஆயினும் பாலன் சொல்லும் சீனா இந்தியா போல் இலங்கையில் செய்யவில்லை என்றதை அவர் தைவான் இடம் கேட்டுப் பார்க்க வேணும்.
இந்தியாவின் கொல்லையில் சொறிலங்கா உள்ளது ஆகவே செய்கிறார்கள். சீனாவின் கொல்லையில் தைவான் உள்ளது ஆகவே அங்கு அவர்கள் செய்கிறார்கள். எதுகும் சரியில்லை.
இதுவே எனது தாழ்மையான கருத்து

•தோழர் அழகனை நினைவில் கொள்வோம்!

•தோழர் அழகனை நினைவில் கொள்வோம்!
தமிழின விடுதலைக்காக அவர் சிந்திய ரத்தம் வீண் போகாது என்று உறுதி கொள்வோம்.
மனித இனம் உன்னதமான ஒரு வாழ்க்கையை, பரிபூரண விடுதலையை நோக்கி முன்னேறும் இக் காலகட்டத்தில் மிருகத்தனமான- மிகக் கேவலமான முறையில் நடைபெற்ற நிகழ்வுகளில் 1983ம் ஆண்டு யூலை மாதம் வெலிக்கடை சிறையில் நடைபெற்ற படுகொலைகளும் ஒன்றாகும்.
இக் கொடூரமான வெறி கொண்ட தாக்குதலில் பலியான கொள்கை மறவர்களில் ஒருவர் தோழர் அழகன் என்று அழைக்கப்பட்ட வேலுப்பிள்ளை சந்திரகுமார்.
தோழர் அழகன் பருத்தித்துறையில் புலோலி என்னும் இடத்தில் பிறந்தவர். காட்லிக்கல்லூரியில் கல்வி கற்றவர். 1979ம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் தன்னை முழு நேரமாக இணைத்துக்கொண்டவர்.
புலிகள் இயக்கம் உடைந்து புதிய பாதை ( புளட்) என்ற அணி உருவாகிய போது தோழர் அழகன் அதனுடன் தன்னை இணைத்துக் கொண்டார்.
பின்னர் அவ்வணியும் பழைய பாதையில் போவதைக் கண்டு அதிலிருந்து விலகி "தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை" என்னும் புரட்சிகர இயக்கத்தை உருவாக்கினார்.
தோழர் அழகன் மாக்சிய லெனிய மாவோசிச சிந்தனையை தனது வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டவர். அவர் இந்திய புரட்சிகர சக்திகளுடன் ஜக்கியத்திற்கு உழைத்தார்.
அதன் நிமித்தம் இந்தியா சென்று திரும்பியபோது கொழும்பு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் வெலிக்கடை சிறையில் (1983)அவர் படுகொலை செய்யப்பட்டார்.
தோழர் அழகன் இறக்கும் கணம் வரை போராட்டத்தில் உறுதியாகவே இருந்துள்ளார். தமிழின விடுதலைக்காக அவர் சிந்திய ரத்தம் ஒருபோதும் வீணாகாது.
தோழர் அழகன் காட்டிய பாதையில் தொடர்ந்து முன்னேறுவோம்.
அதுவே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.

•புலிகளுக்கு ஆயுதம் வருவதைத் தடுத்தவர்களால் உண்மையாகவே கஞ்சாக் கடத்தலை தடுக்க முடியாதா?

•புலிகளுக்கு ஆயுதம் வருவதைத் தடுத்தவர்களால்
உண்மையாகவே கஞ்சாக் கடத்தலை தடுக்க முடியாதா?
கோடிக் கணக்கான ரூபா பெறுமதியான போதைப் பொருட்கள் தினமும் இந்தியாவில் இருந்து கடத்தப்பட்டு வருகிறது.
இப் போதைப் பொருட்களால் தமிழ் சமுதாயம் குறிப்பாக மாணவ சமுதாயம் மிகவும் பாதிக்கப்படுகிறது.
தமிழ் மக்களின் நலனுக்காக புலிகளின் ஆயுதக் கடத்தலை தடுத்ததாக கூறிய இலங்கை அரசும் அதற்கு உதவிய இந்திய அரசும் இன்று இந்த போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்காமல் இருப்பது ஏன்?
ஆயுதக் கடத்தலை முற்றாக தடுத்து நிறுத்திய இந்த அரசுகளால் உண்iமையில் போதைப் பொருட்கள் கடத்தலை தடுத்து நிறுத்த முடியாதா? அல்லது தமிழ் மக்கள் நலனில் அக்கறை இல்லையா?
யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர் மோதலின் போது பாய்ந்து ஓடிவந்து பிணை எடுத்த தமிழ்தேசிய கூட்மைப்பு அதே பல்கலைக்கழகத்தை சுற்றி 3 சாராய கடைகள் இயங்குவது குறித்து ஏன் அக்கறை அற்று இருக்கின்றனர்?
இதே 3 சாராய கடைகளுக்கும் லைசென்ஸ் எடுத்துக் கொடுத்த இதே தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மீது உண்மையான அக்கறை உண்டு என்று எப்படி நம்புவது?
•6 லட்சம் மக்கள் உள்ள யாழ் குடாநாட்டில் கடந்த வருடம் மட்டும் 12லட்சம் லீட்டர் சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது
•கடந்த வருடம் சாராய விற்பனையில் வடமாகாணம் முதலாம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
இது குறித்து எமது கட்சிகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கொஞ்சம்கூட அக்கறை இல்லையா?