Sunday, September 30, 2018

இந்திய அரசு ஏன் தோழர் தமிழரசனுக்கு அஞ்சுகிறது?

•இந்திய அரசு ஏன் தோழர் தமிழரசனுக்கு அஞ்சுகிறது?
தோழர் தமிழரசன் தமிழ்நாடு தனிநாடாக விடுதலை அடைய வேண்டும் என்று கூறியதால் இந்திய அரசு அஞ்சுகிறது என்கிறார்கள்.
அப்படியென்றால், வேறு பலர் தமிழ்த் தனிநாடு கேட்டிருக்கும்போது தமிழரசன் மீது மட்டும் ஏன் அஞ்சுகிறது? என்று கேட்டால்
தமிழரசன் தனிநாடு கேட்டது மட்டுமன்றி அதை அடைய ஆயுதப் போராட்ட பாதையை தேர்ந்தெடுத்தமையே காரணம் என்று பதில் தருகிறார்கள்.
அப்படியென்றால,; பல கம்யுனிஸ்ட் கட்சிகள் ஆயுதப் போராட்டத்தின் மூலமே புரட்சி என்று கூறிவரும்போது ஏன் தமிழரசன் மீது மட்டும் அஞ்ச வேண்டும்? என்று கேட்டால்,
மற்ற கம்யுனிஸ்ட் கட்சிகள் ஆயுதப் போராட்டத்தின் மூலமே புரட்சி என்று கூறினாலும் அவர்கள் தேர்தல் பாதையில் பயணிக்கின்றனர்.
ஆனால் தமிழரசன் தேர்தல் பாதையை நிராகரித்து ஆயுதப் போராட்டத்தை நடைமுறையில் கொண்டிருந்தார். இதுவே தமிழரசன் மீது மத்திய மாநில அரசுகள் அஞ்சுவதற்கு காரணம் என்கிறார்கள்.
ஆம். உண்மைதான். அதனால்தான் இந்திய அரசு தனது உளவுப்படைகள் மூலம் சதி செய்து தோழர் தமிழரசனைக் கொன்றது.
ஆனாலும் தமிழரசன் இறந்து 30 வருடங்களுக்கு பின்னரும் இந்திய அரசு தோழர் தமிழரசனுக்கு அஞ்சுகிறது.
தோழர் தமிழரசன் பாதையை முன்னெடுப்பவர்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கிறது.
சிறையில் அடைத்தவர்களுக்கு 4 வருடங்களாகியும் ஜாமீன்கூட வழங்க மறுத்து வருகிறது.
தோழர் தமிழரசன் போஸ்டர் ஒட்டினால் பொலிசை விட்டு கிழிக்கிறது. கூட்டம் போட அனுமதி கேட்டால் தர மறுக்கிறது.
தோழர் தமிழரசன் பற்றி புத்தகம் எழுதினால் மிரட்டுகிறது. புத்தகத்தை வெளியிடுபவர்களை பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கிறது.
தமிழ்நாடு விடுதலைப்படைப் போராளி காலம்சென்ற தோழர் பசுபதி வீட்டுக்குச்;சென்று அவரின் வயதான தாயாரைக்கூட பொலிசார் மிரட்டியுள்ளனர்.
தோழர் தமிழரசனுக்கு சிலை வைக்க நிலம் வழங்கக்கூடாதென்று அந்த வயதான தாயாரிடம் மிரட்டி கையொப்பம் வாங்கியுள்ளனர்.
ஏன் இந்தளவு தூரத்திற்கு இந்திய அரசு தோழர் தமிழரசனுக்கு அஞ்சுகிறது?
ஏனெனில் தோழர் தமிழரசன் புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டிருக்கிறார். அவரிலிருந்து ஆயிரக் கணக்கான தமிழரசன்கள் முளைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதுவே இந்திய அரசு அஞ்சுவதற்கு காரணமாகும்!

பெத்த பிள்ளையை தூக்கி வளர்த்த கைகள்

பெத்த பிள்ளையை தூக்கி வளர்த்த கைகள்
சாமியையும் தூக்கி சுமக்கும்
தேவைப்பட்டால் துப்பாக்கியையும் தூக்கும்.
ஆம். ஈழத்து பெண்கள் சாதனையின் சொந்தக்காரர்கள்
தமிழ் இனம் தலை நிமிரும் என்ற நம்பிக்கையை தருபவர்கள்.

மக்களோடு சேர்ந்து உழையுங்கள்!

 மக்களோடு சேர்ந்து உழையுங்கள்!
• மக்களோடு சேர்ந்து உண்ணுங்கள்!
• மக்களோடு சேர்ந்து உறங்குங்கள்!
தோழர்மாஓ சேதுங் சிந்தனையை கற்றுத் தந்த தோழர் தமிழரசன்!
1984ல் தமிழ்நாட்டில் மலையாளப்பட்டி என்னும் இடத்தில் அமைந்திருந்த அரசியல் பயிற்சி முகாமில் எமது தோழர்களுக்கு தோழர் தமிழரசன் அவர்கள் மாக்சிய தத்துவங்களை போதித்தார்.
அப்போது ஒரு நாள் பெரம்பலூருக்கு அருகில் இருந்த மிகவும் வறிய மக்களின் அழைப்பின் பேரில் எமது சில தோழர்களை அழைத்துக்கொண்டு சென்றார்.
அந்த மக்கள் ஒருவேளை உணவுக்கே மிகவும் கஸ்டப்படுபவர்கள். இருப்பினும் அவர்கள் ஈழப்போராளிகளுக்கு உணவு வழங்கவேண்டும் என்று ஆசைப்பட்டதனால் தோழர் தமிழரசன் எமது தோழர்களை அவர்களது இடத்திற்கு அழைத்து சென்றார்.
உணவு உண்பதற்கு முன்னர் எல்லோரும் குளத்தில் குளிக்கலாம் என்று தோழர் தமிழரசன் கூறினார். இதைக் கேட்டதும் எமது தோழர்கள் மிகவும் மகிழ்வு கொண்டு குளத்தை நோக்கி ஓடினார்கள்.
மிகவும் ஆர்வமுடன் குளிப்பதற்காக ஒடியவர்கள் குளிக்காமல் குளக்கரையில் நிற்பதைக் கண்ட தோழர் தமிழரசன் ஆச்சரியத்துடன் ஏன் என்று வினவினார்.
எமது தோழர்கள் என்னதான் பாட்டாளி வர்க்க சிந்தனை கொண்டிருந்தாலும் அவர்கள் பெரும்பாலும் மத்தியதர வர்க்கத்தில் இருந்து வந்தவர்கள். எனவே அவர்களின் உணவு உடை பழக்க வழக்கங்களில் அந்த வர்க்க குணாம்சம் இருக்கவே செய்தது.
அந்த குளம் குட்டையாகவே இருந்தது. கால் பாதம் நனையும் அளவிற்கே தண்ணீர் இருந்தது. அதுவும் கலங்கி மஞ்சள் நிறத்தில் இருந்தது. அதில் ஒரு புறத்தில் எருமைகள் கிடந்து புரண்டு கொண்டிருந்தன. இன்னொரு புறத்தில் பன்றிகள் குட்டிகளுடன் நடமாடிக் கொண்டிருந்தன.
இதைப் பார்த்த எமது தோழர்கள் அருவருத்து குளிப்பதற்கு தயங்கினர். இதைப் பரிந்து கொண்ட தோழர் தமிழரசன் “ மக்களோடு சேர்ந்து உழையுங்கள். மக்களோடு சேர்ந்து உண்ணுங்கள். மக்களோடு சேர்ந்து உறங்குங்கள் என்று தோழர் மாவோ கூறினார்” என்று சொல்லிக்கொண்டு தான் முதலில் தண்ணீரில் இறங்கி குளித்தார்.
மாவோ வின் வரிகளைக் கேட்தும் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட எமது தோழர்கள் “புரட்சி ஓங்குக” என்று உரத்துக் கோசம் இட்டவாறு ஒவ்வொருவராக குளத்தில் குதித்து விளையாடினர்.
பின்பு சாப்பிடுவதற்காக அந்த மக்களின் வீடுகளுக்கு சென்றபோது அங்கு இலையில் சோறும் சுண்டெலிக் கறியும் வைக்கப்பட்டிருந்தது. எலிக்கறி அதுவும் அதன் தலையுடன் பார்த்ததும் எமது தோழர்களுக்கு வாந்தி வராத குறை. யாருமே சாப்பிட வில்லை.
இதைப் புரிந்து கொண்ட தோழர் தமிழரசன் “அந்த மக்கள் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கே சோறு சாப்பிடுவார்கள். அந்தளவுக்கு சோறே அம் மக்களுக்கு மிகவும் உயர்ந்த சாப்பாடு. அதை உங்களுக்கு தந்திருக்கிறார்கள். நீங்கள் சாப்பிடவில்லை என்றால் அவர்கள் மிகவும் வருத்தப்படுவார்கள” என்றார். தோழர்கள் புரிந்து கொண்டனர்.
இம்முறை தோழர் தமிழரசன் கூறுமன்னரே எமது தோழர்கள் “மக்களோடு சேர்ந்து உழையுங்கள். மக்களோடு சேர்ந்து உண்ணுங்கள். மக்களோடு சேர்ந்து உறங்குங்கள் என்று தோழர் மாவோ கூறினார்” என்று உரத்து கூறிக்கொண்டு சாப்பிட்டார்கள்.
என்ன வேடிக்கை என்றால் முதலில் சாப்பிட தயங்கியவர்கள் சாப்பிட்டு சுவை பிடித்துக்கொள்ள மேலும் மேலும் கேட்டு வாங்கி சாப்பிட்டார்கள். அந்த மக்களும் மிக்க மகிழ்வோடு உணவு பரிமாறினார்கள்.
உணவு முடிந்த பின்பு அவர்களும் எமது தோழர்களும் மாறி மாறி சில பாடல்கள் பாடியும் மற்றும் நடிப்புகள் செய்து காட்டியும் அனைவரையும் மகிழ்வுறச் செய்தார்கள்.
இந்த சம்பவத்திற்கு பின்பு எமது தோழர்கள் எப்போதும் தோழர் தமிழரசனை இந்த மாவோவின் வரிகளை உரத்து உச்சரித்து கிண்டல் செய்வார்கள். அவரும் நன்றாக சிரித்து நகைச்சுவை செய்வார்.
குறிப்பு- செப்-1 திகதி தோழர் தமிழரசன் நினைவு தினத்தை முன்னிட்டு இது ஒரு மீள் பதிவு ஆகும்

பட்டி தொட்டி எல்லாம் பரவும் தோழர் தமிழரசன் புகழ்!

பட்டி தொட்டி எல்லாம் பரவும் தோழர் தமிழரசன் புகழ்!
கொன்று புதைத்தால்
மீண்டும் முளைத்தெழுவர்
துண்டு துண்டாக வெட்டி
கடலில் வீசி எறிந்தால்
பொங்கும் கடல் அலையாய்
மீண்டும் மீண்டும் வருவர்.
தமிழரசனைக் கொன்றுவிட்டால்
தமிழ்நாடு விடுதலையை தடுத்துவிடலாம் என நினைத்தனர்.
ஆனால்,
இன்று ஆயிரம் ஆயிரம் தமிழரசன்கள் உருவாகி
பட்டி தொட்டி எல்லாம் தமிழரசன் புகழ் பரப்புகின்றனர்.
இறுதி வெற்றி உறுதி எமக்கு என்ற
நம்பிக்கையை தந்து கொண்டிருக்கின்றனர்.

என் வீட்டுச் சோத்தை தின்றுவிட்டு

•என் வீட்டுச் சோத்தை தின்றுவிட்டு
பக்கத்து வீட்டு எஜமானுக்கு வாலாட்டும் நாய்!
நாய் நன்றியுள்ள மிருகம் என்றார்கள்
ஆனால் இந்த நாய்க்கு அது இல்லையே
அது என் வீட்டு சோத்தை தின்றுவிட்டு
பக்கத்து வீட்டு எஜமானுக்கு வாலாட்டுதே!
நடந்தது இனப்படுகொலை அல்ல என்றபோதே
அதை அடித்து விரட்டியிருக்க வேண்டும்
இரக்கப்பட்டு விட்டு வைத்ததால்
அது இப்போது தன் புத்தியைக் காட்டுது
அன்று, தமிழீழத்தை கைவிடுகிறோம்- ஏனெனில்
அதற்கு இணையான சமஸ்டி வருகுது என்றது
இப்போது சமஸ்டி தேவையில்லை
மாகாணசபைக்கு கூடுதலாக சில அதிகாரம்
தந்தால் போதும் என்று கூறுகிறது.
இன்னும் கொஞ்சநாள் போனால்
அதுவும் வேண்டாம் என்று கூறினாலும் கூறும்.
அது என்ன வேண்டுமானாலும் கூறிவிட்டுப் போகட்டும்
அதை எம்.பி யாக்கிய பாவத்திற்கு அனுபவிக்கலாம்
ஆனால் இப்போது எமது கவலை என்னவென்றால்
இதையும் “ஒப்பிரேசன் சுமந்திரன்” என்று செம்புகள்
நாலு கட்டுரை எழுதி தள்ளப் போகுதுகளே
அதை நினைச்சால்தான் கண்ணைக் கட்டுதே?

• "மாமனிதர்" தோழர் தமிழரசன் !

• "மாமனிதர்" தோழர் தமிழரசன் !
தனக்கென்று வாழ்ந்து தனக்கென்று உழைப்பவன் மனிதன். ஆனால் தன் வாழ்க்கையையும் தன் உழைப்பையும் பிறருக்கென்று கொடுப்பவன் மாமனிதன்- மாமேதை காரல் மாக்ஸ்
தனகென்று வாழாமல் தமிழ் மக்களுக்காக வாழ்ந்தவர்
தனக்கென்று உழைக்காமல் தமிழ் மக்களுக்காக உழைத்தவர்
இறுதியில் தமிழ் மக்களுக்காவே தன் உயிரை அர்ப்பணித்தவர்
ஆம். அவர்தான் "மாமனிதர்" தோழர் தமிழரசன் !
மூன்று மீற்றர் கயிற்றில் கட்டியிருந்த மாட்டை அவிழ்த்து பத்து மீற்றர் கயிற்றில் கட்டிவிட்டு போனான் ஒருவன். மாடு மா, மா என்று கத்தியது , தனக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது என்று.
தமிழக மாடுகளும் மன்னிக்கவும் மக்களும் தமக்கு கிடைத்த சட்டசபையை வைத்துக்கொண்டு சுதந்திரம் கிடைத்துவிட்டதாக கற்பனையில் மிதக்கிறார்கள்.
வெள்ளைக்காரன் காலத்தில் தமிழகத்தில் வசூலிக்கப்பட்ட வரித்தொகை ஒரு வருடத்தில் சுமார் 350 கோடி ரூபா.
ஆனால் தற்போது கொள்ளைக்கார இந்திய மத்திய அரசு தமிழகத்தில் வசூலிக்கும் வரி கடந்த ஆண்டு மட்டும் 85000கோடி ரூபா.
வெள்ளைக்காரன் 350 கோடி ரூபாவை வசூலித்தபோது தம்மை அடிமைகளாக உணர்ந்து விடுதலைக்கு போராடிய தமிழ் இனம் இப்போது 85000 கோடி ரூபா வசூலிக்கப்படும்போது தான் சுதந்திரமாக இருப்பதாக கருதுகிறது.
ஆனால் தாங்கள் அடிமையாக இருப்பதால்தான் ஈழத் தமிழின அழிவை தடுக்க முடியவில்லை என்பதை மட்டுமல்ல, தமது காவிரி, முல்லை பெரியாறு பிரச்சனைகளைக்கூட தீர்க்க முடியவில்லை என்பதையும் அவர்களால் உணர முடியவில்லை.
எனவேதான் "ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதே இன்னொரு அடிமைக்கு செய்யும் உதவியாகும்" என்று தோழர் தமிழரசன் கூறினார்.
தமிழக மக்கள் விடுதலை பெற்று வாழ வேண்டும் என்று கூறியதாலேயே தோழர் தமிழரசன் தமிழக காவல்துறையால் அடித்துக் கொல்லப்பட்டார்.
தமிழக அரசின் இன்றைய கடன் 1.21லட்சம் கோடி ரூபா. இதற்கு வட்டியாக 10754 கோடி ரூபா தமிழக அரசு கட்டுகிறது.
ஒவ்வொரு தமிழன் தலையிலும் 13862 ரூபா கடன் சுமத்தப்பட்டுள்ளது அதாவது பிறக்கும் ஒவ்வொரு தமிழக்; குழந்தையும் 13862ரூபா கடனுடனே பிறக்கின்றது.
4 பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் மொத்த கடன் தொகை 55448 ரூபா. ஒரு குடும்பத்திற்கு கொடுக்கும் இலவச பொருட்கள் பெறுமதி சுமார் 4000 ரூபா எனில் மிகுதி 51448 ரூபா எங்கே சென்றது?
ஒரு சட்டமன்ற உறுப்பினரின் சம்பளம் 50 ஆயிரம் ரூபா. மாதாந்த சம்பளம் 50 ஆயிரம் ரூபா பெற்றுக்கொண்ட கலைஞர் கருணாநிதியின் குடும்ப சொத்தின் பெறுமதி 45 ஆயிரம் கோடி ரூபாக்கள்.
மாதாந்த சம்பளம் 1 ரூபா மட்டுமே பெற்றுவந்த ஜெயா அம்மையாரின் சொத்து மதிப்பு 30 ஆயிரம் கோடி ரூபாக்கள்.
இந்தியா ஜனநாயக நாடு என்கிறார்கள். இங்கு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறார்கள். ஆனால் இந்த இருவரும் எப்படி கோடிக் கணக்கான ரூபா சொத்துக்கள் சேர்த்தார்கள்?
ஏன் இவர்களின் வருமானத்திற்கு மேலான சொத்தை இதுவரை பறிமுதல் செய்ய முடியவில்லை? அப்படியாயின் இவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா?
இந்திய அரசின் கைப் பொம்மைகளாக இவர்கள் செயற்படுவதற்கு சலுகையாகவே இவர்களது ஊழல் கண்டு கொள்ளப்படாமல் இருக்கிறது.
85000கோடி ரூபா வரியாக வசூலிக்கும் மத்திய அரசு தமிழகத்திற்கு திருப்பி உதவியாக கொடுக்கும் பணம் 28000கோடி ருபா மட்டுமே.
இந்திய மத்திய அரசு, நேபாளத்திற்கு 14000 கோடி ருபாவையும், பூட்டானுக்கு 8000 கோடி ரூபாவையும், இலங்கைக்கு 10000கோடி ரூபாவையும், மங்கோலியாவுக்கு 6000 கோடி ரூபாவையும் வழங்கியுள்ளது.
ஆனால் 85000கோடி ரூபாவை வரியாக வழங்கும் தமிழ்நாட்டிற்கு மழை வந்தபோது வழங்கிய உதவி தொகை வெறும் 1940 கோடி ரூபா மட்டுமே.
தமிழ்நாடு தனக்குரிய உதவியை பெற முடியாதது மட்டுமல்ல தன்னிடமிருந்து பெறப்படும் பணத்தை இலங்கைக்கு வழங்குவதைக்கூட தடுக்க முடியாத அடிமை நிலையில் உள்ளது.
தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து பெறப்படும் பணத்திலதான்; தமிழக மீனவனைக் கொல்லும் இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
இலங்கை கடற்படைக்கு யுத்த கப்பல் வழங்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்காலில் தமிழினப் படுகொலைக்கும் உதவி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தமிழக தமிழன் அடிமை நிலையில் இருப்பதையும், இந்திய அரசால் தமிழ்நாடு சுரண்டப்படுவதையும் முன்னரே உணர்ந்து சுட்டிக்காட்டியவர் தோழர் தமிழரசன்
அவர் தமிழ்நாடு விடுதலை பெறவேண்டும் என விரும்பினார். தமிழக தமிழன் தன் அடிமைத் தனத்திற்கு எதிராக போராடுவதன் மூலமே ஈழத் தமிழனின் விடுதலைக்கும் உதவ முடியும் என நம்பினார்.
இவ்வாறு அவர் சிந்தித்து, உணர்ந்து செயற்பட்டமையினாலே அவர் இந்திய அரசின் உளவுப்படைகளால் அடித்துக் கொல்லப்பட்டார்.
01.09.2018
இன்று அவரது நினைவு தினமாகும்.
அவரது நினைவை போற்றுவோம்!

இது யார் தவறு?

•இது யார் தவறு?
ஒருபுறம் கூரைகூட வேயாத பள்ளிக்கூடம்
மறுபுறம் நல்லுர் முருகனுக்கு தங்கத்தில் கூரை
இது யார் தவறு?
கடவுள் முருகனின் தவறா? அல்லது
கடவுளின் பெயரால் ஏமாற்றும் கயவர்களின் தவறா?
அல்லது இதையெல்லாம் கண்டும் காணாதது போல் இருக்கும் தலைவர்கள் தவறா?
அல்லது “இதெல்லாம் பக்தர்களின் மத சுதந்திரம். இதில் தலையிட முடியாது” என்று ஒதுங்கும் பகுத்தறிவுவாதிகளின் தவறா?
அல்லது இதற்கெதிராக குரல் கொடுக்க வேண்டிய கம்யுனிஸ்களின் மௌனம் தவறா?
குறிப்பு-
இப்போது ஒரு கூட்டம் ஓடிவரும். “ உங்களுக்கு மடுமாதாவுக்கு செலவு செய்வது தெரியாது. அல்லது முஸ்லிம்கள் கட்டும் மசூதி பற்றி கதைக்க தைரியம் இருக்கா? என்று கேட்கும்.
அவர்களுக்கு நாம் கூறுவது “ கூரை மேயாத பாடசாலையில் படிக்கும் மாணவர்கள் இந்து சமயத்தவரே”.

•குவைத்தில் நடைபெற்ற தோழர் தமிழரசன் நினைவேந்தலும் நூல் அறிமுகமும்

•குவைத்தில் நடைபெற்ற தோழர் தமிழரசன்
நினைவேந்தலும் நூல் அறிமுகமும்
01.09.2018 யன்று குவைத்தில் ஜமிர்ஹாப்ஸ பகுதியில் தோழர் தமிழரசன் நினைவேந்தல் நிகழ்வும் நூல் அறிமுகமும் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வு அரங்கத்திற்கு தமிழ்தேசிய போராளி தோழர் சுந்தரம் (சு) நினைவரங்கம் என அடையாள படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியை குவைத் தமிழக இஸ்லாமிய மாணவர் பேரவை ஒருங்கிணைத்தார்கள்.
தலைமை - தோழர் தமிழ் நாடன், (அமைப்பாளர் - பொங்குதமிழ் மன்றம்).
முன்னிலை - தோழர் செல்லபெருமாள், (காப்பாளர் - தந்தை பெரியார் நூலகம்) .
வரவேற்புரை - தோழர் அமானுல்லா, (ஆசிரியர் - தமிழ்நேசன் வார இதழ்)
துவக்கவுரை - தமிழ்வேள் சத்தியன் (அமைப்பாளர் - மாதமிழ் மரபு பட்டறை)
கருத்துரை - தோழர் சித்தார்த் (திராவிடர் கழகம்)
சிறப்புரை - வல்லம் அப்பாஸ் (அமைப்பாளர் - FIDA )
நன்றியுரை - சத்திரமனை ஹஸன் முஹமது (துனை பொதுசெயளாளர் காயிதே மில்லத் பேரவை)
நிகழ்ச்சி தொகுப்பு - ரஹ்மத்துல்லா (நெறியாளன் - TISA)
நான் எழுதிய “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூலை குவைத்தில் அறிமுகம் செய்துவைத்த உணர்வாளர்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகில் பற்றி எரிந்த பெரு நெருப்பெல்லாம் ஒரு சிறு பொறியில் இருந்தே ஆரம்பித்துள்ளது.
தமிழரசன் பற்ற வைத்த தீ பெரும் காட்டு தீயாக பரவட்டும்! புரட்சி மலரட்டும்.!!

இப்பவாவது, தமிழ்நாடு பொலிஸ்

•இப்பவாவது,
தமிழ்நாடு பொலிஸ் ஸ்கலாந்துயார்ட் பொலிசைவிட
சிறப்பானது என்று சொன்னால் நம்புங்கப்பா!
“பாஜக ஒழிக” என்று கோஷம் போட்ட பெண்ணை கைது செய்ய காட்டிய வேகத்தை ஏன் எஸ.வி.சேகரை கைது செய்ய தமிழக பொலிஸ் காட்டவில்லை என்று கேட்காதீர்கள்.
அல்லது, இந்தியா ஜனநாயக நாடு என்கிறார்களே. அப்படியென்றால் பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் இல்லையா என்று கேட்காதீர்கள்.
ஆனால், தமிழக பொலிஸ் ஸ்காலாந்துயார்டு பொலிசைவிட சிறப்பானது என்றால் இனியாவது வாயைப் பொத்திக்கொண்டு நம்புங்கப்பா!

மீண்டும் தமிழ் இனம் எழந்து நிற்கும்

•மீண்டும் தமிழ் இனம் எழந்து நிற்கும் என்ற நம்பிக்கை
இப்படியான தமிழ் இளைஞர்களால்தான் ஏற்படுகின்றது!
இதோ ஜெனிவா ஜ.நா நோக்கி ஈருளி பயணம் செல்கிறார்களே,
இந்த இளைஞர்களும் தமிழர்கள்தான்
இவர்களும் மற்றவர்கள்போல்
கொலிடேக்கு நல்லூர் திருவிழா சென்றிருக்கலாம்-
அல்லது
ஈலிங் அம்மன் கோவிலில் காவடி எடுத்திருக்கலாம்
அல்லது
100 டாலர் ரிக்கட் எடுத்து சுப்பர் சிங்கர் பாடகர்களின் கச்சேரியாவது பார்த்திருக்கலாம்.
அல்லது
பிறந்தநாள் விழாவோ அல்லது சாமத்தியசடங்கு விழாவோ நடத்தி தண்ணி அடித்து ஆடிப் பாடியிருக்கலாம்.
ஆனால் இவர்களோ, கொட்டும் மழையிலும் வீசும் புயல் காற்றிலும்
முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமது உறவுகளுக்கு சர்வதேச விசாரணை வேண்டி ஈருளி பயணம் செய்கிறார்கள்.
அதைக்கூட கோட்டு சூட்டு போட்டு விமானத்தில் சென்று போட்டோவுக்கு போஸ் கொடுத்து செய்திருக்கலாம்.
ஆனால் இவர்கள் ஈருளியில் செல்வதோடு செல்லும் வழியெங்கும் மக்களுக்கு பிரச்சாரம் செய்கிறார்கள்.
ஒருநாளில் பல நூற்றுக்கணக்கான மக்களுக்கு ஈழத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களை எடுத்துக் கூறுகிறார்கள்.
இங்கு வேதனையான விடயம் என்னவென்றால் மக்களால் பதவி பெற்ற எமது எம்.பி மார்கள் தங்களுக்கு நிதி சேகரிக்க வந்து செல்கிறார்கள்.
ஆனால் இவ் இளைஞர்களோ மக்களுக்கு நியாயம் கிடைக்க பயணம் செய்கிறார்கள்.
மீண்டும் தமிழ் இனம் எழுந்து நிற்கும் என்ற நம்பிக்கை இத்தகைய இளைஞர்களால்தான் ஏற்படுகின்றது.

நாடு கடந்த தமிழீழ அரசா?

•நாடு கடந்த தமிழீழ அரசா? அல்லது
நட்டு கழண்ட தமிழீழ அரசா இது?
இத்தனை அழிவிற்கு பிறகும் இத்தனை அழிவிற்கு காரணமான இந்திய அரசை நம்பும் நாடுகடந்த தமிழீழ அரசை என்னவென்று அழைப்பது?
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சர் மாணிக்கவாசகரை “முட்டாள்” என்பதா அல்லது “அடி முட்டாள்” என்பதா?
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்திருந்தார். அப்போது காணாமல்போனோரின் உறவுகள் போராட்டம் நடத்திய இடத்தின் வழியே சென்றார்.
அப்போது அவ் உறவுகள் தமிழிசையை சந்திக்க விரும்பினார்கள். அவர்கள் வயதான தாய்மார்கள். அறவழியில் போராடி வருகிறார்கள்.
யாராக இருந்தாலும் சில நிமிடங்கள் அவர்களை சந்தித்து ஆறுதல் கூற விரும்புவார்கள். ஆனால் ஒரு பெண்ணாகிய தமிழிசையே அவர்களை சந்திக்க மறுத்துவிட்டார். பார்வையிடாமலே சென்று விட்டார்.
அப்படிப்பட்ட தமிழிசையையே இந்த நாடுகடந்த தமிழீழ அமைச்சர் சந்தித்து முள்ளிவாயக்கால் படுகொலை விசாரணைக்கு ஆதரவு கேட்டிருக்கிறார்.
இந்திய அரசு முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு உதவியதோடு அது பற்றிய விசாரணையையும் தடுத்து வருகிறது. இந்திய அரசே இலங்கை அரசை காப்பாற்றி வருகிறது.
அப்படிப்பட்ட இந்திய அரசிடம் சென்று ஆதரவு கேட்டிருக்கிறார் இந்த முட்டாள் அமைச்சர்.
போற போக்கைப் பார்த்தால் மகிந்த ராஜபக்சாவிடமும் சென்று ஆதரவு கேட்பார்கள் போல இருக்கு.
•தமிழகத்தில் 30 வருடங்களுக்கு மேலாகாக குடியுரிமை இன்றி ஈழ அகதிகள் கஸ்டப்படுகின்றனர்.
•தமிழகத்தில் சிறப்புமுகாம் என்னும் சித்திரவதைமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை.
•தகுதி இருந்தும் அகதி என்பதால் ஈழ அகதி மாணவர்களுக்கு தமிழகத்தில் உயர்கல்வி வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
•வேலை வாய்ப்பு மறுக்கப்டுகிறது. ஆட்டோ ஓட்டி பிழைக்க லைசென்ஸ் கூட எடுக்க முடியவில்லை.
•உல்லாசப் பயணிகளுக்கு கப்பல் சேவை வழங்க முன்வரும் இந்திய அரசு தாயகம் திரும்பும் அகதிகளுக்கு கப்பல் சேவை வழங்க மறுக்கிறது.
நாடுகடந்த தமிழீழ அமைச்சர் இப் பிரச்சனைகள் குறித்து தமிழக பாஜக தலைவர்களுடன் பேசியிருந்தால் சிலவேளை ஏதாவது பயன் கிடைத்திருக்கும்.
ஏன் அவர் இவை குறித்து பேசவில்லை?
குறிப்பு- “பாசிச பாஜக ஒழிக” என்று தமிழக தமிழர்கள் குரல் எழுப்புகிறார்கள். ஆனால் நாடுகடந்த தமிழீழ அமைச்சர் அந்த பாசிச பாஜகவிடம் சென்று ஆதரவு கேட்கிறார்.

யாரிடம் போய் சொல்லி அழுவது?

•யாரிடம் போய் சொல்லி அழுவது?
தமிழ் இனத்தை கடவுளாலும் காப்பாற்ற முடியாது!
கிளிநொச்சியில் ஒரு மாணவி பள்ளி சீருடை வாங்க பணம் இன்றி தற்கொலை செய்துள்ளார்.
ஒரு பொறுப்புள்ள கல்வி அமைச்சர் இதற்கு என்ன செய்திருக்க வேண்டும்?
எமது மான்புமிகு கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் உடனடியாக சென்றார். நடவடிக்கை எடுத்தார்
“ஓ! அப்படியா? ஆச்சரியமாக இருக்கிறதே!” என்று மனதிற்குள் நினைக்கிறீர்களா?
ஆம். அவர் அந்த ஏழை மாணவியின் வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறியிருப்பார் என நீங்கள் நினைக்ககூடும்.
இல்லை. அவர் அந்த ஏழை மாணவியின் வீட்டுக்குச் செல்லவும் இல்லை. ஒரு சம்பிரதாயத்திற்காகவது ஆறுதல் செய்தியும் தெரிவிக்கவில்லை.
அவர் அதைவிட முக்கியமான(?) ஒரு இடத்திற்கு சென்றார். ஆம். யாழ் இந்திய தூதர் நடத்திய “தெய்வீக சுகானுபவம்” நிகழ்வுக்கு சென்றார்.
சென்றவர் இந்திய தூதரின் சுகானுபவத்தை பெற்று திரும்பியிருக்கலாம். ஆனால் அவர் அங்கு ஒரு முக்கிய அறிவித்தல் செய்துள்ளார்.
இனி யாரும் பரதநாட்டியத்தை தெருவில் ஆடக் கூடாது என்று தன் அமைச்சு அதிகாரத்தை பயன்படுத்தி அறிவித்துள்ளார்.
எமது மாண்புமிகு கல்வி அமைச்சருக்கு சீருடை இன்றி மாணவி தற்கொலை செய்வது குறித்து அக்கறை இல்லை. மாறாக பரதநாட்டியம் தெருவில் ஆடுவது பற்றியே கவலை உள்ளது.
அது மட்டுமன்றி பரதநாட்டியத்தை வளர்த்தெடுப்பதற்காக நூலகம் ஒன்று வடமாகாணசபை மூலம் கட்டப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் பல பாடசாலைகள் கூரை வேய வசதியின்றி இருக்கின்றது. மாணவர்கள் மர நிழலில் இருந்து கல்வி கற்கிறார்கள்.
ஆனால் எமது கல்வி அமைச்சருக்கு அதையிட்டு கவலை இல்லை. அவரது அக்கறை எல்லாம் பரதநாட்டியத்திற்கு நூலகம் கட்ட வேண்டும் என்பதே.
இந்த அவலத்தை நாம் யாரிடம் சென்று சொல்லி அழுவது?
தமிழ் இனத்தை கடவுள்தான் இனி காப்பாற்ற வேண்டும் என்று தந்தை செல்வா கூறினாராம். ஆனால் இனி அந்த கடவுளாலும் காப்பாற்ற முடியாது!
கல்வி அமைச்சர் அவர்களே!
யாழ் இந்திய தூதர் தேர்தலில் சீட் கிடைக்க சிபாரிசு செய்யலாம். தேர்தலுக்கு செலவு செய்ய நிதியும் தரலாம். ஆனால் தேர்தலில் அவர் வாக்கு போட முடியாது. மக்கள்தான் போடவேண்டும். அதை நினைவில் கொள்ளுங்கள்.

இனியாவது தாமதம் இன்றி

•இனியாவது தாமதம் இன்றி
எழுவரும் விடுதலை செய்யப்படுவார்களா?
உண்மையில் இந்த எழுவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது தமிழக அரசின் விருப்பமாக இருந்தால் உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
இல்லையேல் அவர்கள் விடுதலையில் தமக்கு அக்கறை இல்லை என்பதையாவது வெளிப்படையாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
அதைவிடுத்து தேவையற்ற சட்ட சிக்கலுக்குள் அவர்களை மாட்டி கால தாமதத்திற்கு வழி செய்யக்கூடாது.
இந்த எழுவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது தமிழக மக்களின் 28 வருட விருப்பமாகும்.
எனவே தமிழக மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற தமிழக அரசு உடனடியாக முன்வர வேண்டும்.
இந்த எழுவர் விடுதலைக்காக செங்கொடி காத்துக் கொண்டிருக்கிறாள்.