Saturday, May 25, 2024

கனடாவில் சுமார் 3 லட்சம் தமிழர்களே

கனடாவில் சுமார் 3 லட்சம் தமிழர்களே இருக்கின்றனர். ஆனால் கனடா பிரதமர் ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என அறிவித்துள்ளார். பிரித்தானியாவில் சுமார் ஒரு லட்சம் தமிழர்களே இருக்கின்றனர். ஆனால் அடுத்து ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படும் லேபர் கட்சியானது நடந்தது இனப்படுகொலை என்றும் அதற்குரிய நீதிக்கான நடவடிக்கைகளை தாம் மேற்கொள்வோம் என உறுதியளித்துள்ளது. இந்தியாவில் எட்டு கோடி தமிழர் இருக்கின்றனர். ஆனால் இந்திய அரசானது இன்னும் இனப்படுகொலை என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. இனியாவது தமிழக முதல்வர் இதனை வலியுறுத்துவாரா? படம் - சர்வதேச மன்னிப்பு சபைத் தலைவர் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

No comments:

Post a Comment