Saturday, May 25, 2024

பகைவனிடம் அடி பணிவது

•பகைவனிடம் அடி பணிவது இராஜதந்திரம் அல்ல. அது சரணாகதி. இந்து தமிழீழம் கேட்டால் இந்திய அரசு உதவும் என்று காசிஅனந்தன் கூறினார். துவாரகா வருகிறாள். இந்திய அரசின் துணையுடன் தமிழீழம் பெறப் போகிறாள் என்று பாட்டு வேற பாடினார். புலம்பெயர் ஈழத் தமிழர் அமைப்பு ஒன்று இந்திய அரசு உதவும் என நம்பி "இமாலய பிரகடனம்" செய்தது இன்னொரு புலம்பெயர் அமைப்பு பாஜக தலைவர் அண்ணாமலையை அழைத்து வண்டனில் "உறவுப்பாலம்" கட்டியது. அதைவிட சிலர் தமிழீழம் இந்தியாவின் பாதுகாப்பிற்கானது. எனவே இந்திய அரசு உதவும் என்று பூகோள அரசியல் பேசுகின்றனர். எல்லா வீதியும் ரோம் நோக்கி என்பதுபோல் ஈழத் தமிழ் அமைப்புகள் பலவும் ஏதோஒரு வடிவத்தில் இந்திய அரசு ஆதரவாளவர்களாகவே இருக்கின்றனர். ஆனாலும் புலம்பெயர் புலி ஆதரவு அமைப்புகள் இந்திய வெறுப்பு பிரச்சாரம் செய்வதாக இந்திய அரசு கூறுகின்றது. இந்திய அரசானது பொய் கூறி புலிகள் அமைப்பை தடை செய்து வருவது மட்டுமன்றி ஈழத் தமிழருக்கு எந்த தீர்வையும் பெற்றுதர மறுக்கிறது. இனியாவது இந்திய அரசை இவர்கள் புரிந்துகொள்வார்களா?

No comments:

Post a Comment