Friday, May 31, 2024

போங்கடா ,

போங்கடா , நீங்களும் உங்கட நியாயமும் !! இந்திரா காந்தியைக் கொன்றவர்கள் சீக்கியர்கள் என்று கூறுபவர்கள், ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள் விடுதலைப் புலிகள் என்று கூறுபவர்கள், மகாத்மா காந்தியைக் கொன்றவர்கள் RSS பார்ப்பணர்கள் என்று கூறுவதில்லை. மாறாக, காந்தியைக் கொன்றது கோட்சே என்றே கூறுகிறார்கள். சரி. காந்தியைக் கொன்றது கோட்சே என்றால் ராஜீவ் காந்தியைக் கொன்றது தானு என்றல்லவா கூற வேண்டும்? காந்தியைக் கொன்றது கோட்சே என்றால் இந்திரா காந்தியைக் கொன்றது பியாந்த் சிங் என்றல்லவா கூற வேண்டும். ஏன் அவ்வாறு இவர்கள் கூறுவதில்லை? ஏனென்றால் “தமிழன் இளிச்சவாயன், என்ன சொன்னாலும் ஏத்துக்குவான்” என்று இவர்கள் திமிராக நினைக்கிறார்கள். அதனால்தான் சீக்கியர்களிடம் மன்னிப்பு கோரிய பிரதமர் மோடி ஈழத் தமிழர்களிடம் இன்னும் மன்னிப்பு கோராமல் இருக்கிறார். அது மட்டுமல்ல சிங்கள சிப்பாய் ராஜீவ் காந்திய தாக்கியபோது அதனை சிங்களவர்கள் தாக்கியதாக ஒருபோதும் குறிப்பிட்டதில்லை. மாறாக இந்த சிப்பாய்க்கு வெயிலில் நின்றதால் சிறிது மனக் குழப்பம் என்றார்கள். இந்த சிப்பாய் தண்டனை கூட அனுபவிக்காமல் இலங்கை அரசு விடுதலை செய்தபோதும் இந்திய அரசு அது பற்றி எதுவும் கேட்கவில்லை. ஏழு தமிழர் விடுதலைக்கு எதிராக குரல் கொடுத்த தமிழக காங்கிரஸ்காரர்கூட இந்த சிங்கள சிப்பாயின் விடுதலைக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை.

No comments:

Post a Comment