Saturday, May 25, 2024

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்

•எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் உலகெங்கும் உள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! அவர்கள் முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களை நினைவு கூர்கிறார்கள். அவர்கள் இந்த நினைவு நாளில் குருதிக்கொடை வழங்குகின்றனர் அவர்கள் தமது அடுத்த சந்ததிக்கும் இந்த முள்ளிவாய்க்கால் அவலத்தை கடத்துகின்றனர். இதைப் படிப்பவர்கள் இது கனடாவிலே அல்லது லண்டனிலோ நடப்பதாக நினைக்கலாம். இல்லை. இது 2009ல் ஈழத் தமிழருக்காக 16 பேர் தீக்குளித்து இறந்தார்களே அந்த தமிழ் நாட்டில் நடக்கிறது. இந்திய அரசு நடந்தது இனப்படுகொலை என ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அத்துடன் தொடர்ந்து புலிகள் அமைப்பை தடை செய்தும் வருகிறது. அதற்கு தமிழக மக்கள் தமக்கே உரிய பாணியில் பதில் அளித்து வருகின்றனர். இதை மத்திய மாநில அரசுகள் எப்போது புரிந்துகொள்ளப் போகின்றன?

No comments:

Post a Comment