Saturday, May 25, 2024

விரல்களில் பல ராசிக்கற்கள் பதித்த மோதிரங்கள்

விரல்களில் பல ராசிக்கற்கள் பதித்த மோதிரங்கள் கைகளில் பல வண்ணங்களில் மந்திரித்த கயிறுகள் நாட்டில் புத்தர் வழபாடு. இந்தியாவில் திருப்பதி பெருமாள் வழிபாடு ஆனாலும் இவை எதுவுமே மகிந்த ராஜபக்சாவைக் காப்பாற்றவில்லை. இரண்டாம் துட்ட கைமுனு என்று அழைக்கப்பட்டவர் எந்த மக்களால் தெரிவு செய்யப்பட்டாரோ அந்த மக்களினால். இதே நாளில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தூக்கியெறியப்பட்டார். எந்த மே மாதத்தில் தமிழ் மக்களை முள்ளிவாய்க்காலில் கொன்றாரோ அதே மே மாதத்தில் உயிரைப் பாதுகாக்க தமிழர் பகுதியான திருமலையில் வந்து பதுங்கினார். கடந்த இரண்டு வருடமாக ரணிலுக்கு ஆதரவு வழங்கி அதன் மூலம் தன்னைப் பாதுகாத்துக்கொண்டார். இப்போது மீண்டும் ஏதாவது ஒரு வழியில் பதவிக்கு வர முயல்கிறார். அது முடியாத பட்சத்தில் மீண்டும் யாருக்காவது ஆதரவு வழங்கி தம்மை பாதுகாக்க எண்ணுகிறார்.

No comments:

Post a Comment