Friday, May 31, 2024

நினைவஞ்சலிகள்

• நினைவஞ்சலிகள் தோழர் நாகராசன் தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய விடுதலைக்காக போராடியதால் சுட்டுக்கொல்லப்பட்டவர். ஈழத் தமிழர் போராட்டத்திற்கு தனது உறுதியான ஆதரவை வழங்கியவர். தமிழர் போராட்ட வரலாற்றில் அவர் என்றும் நினைவு கூரப்படுவார். சைலேந்திரபாபு திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளராக இருந்தபோது இவரை போலி என்கவுண்டர் மோதலில் சுட்டுக்கொன்றார். அடுத்தவாரம் என்னை கொடைக்கானல் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும்போது காவலுக்கு சைலேந்திரபாபு வந்திருந்தார். அப்போது அவர் தான் நாகராசனை சுட்டுக்கொன்றதை கூறி என்னையும் மிரட்டினார். அதனால் நான் இதனை கொடைக்கானல் நீதிபதியிடம் கூறி எனக்குரிய பாதுகாப்பை பெற்றது இன்றும் என் நினைவில் இருக்கிறது.

No comments:

Post a Comment