Wednesday, April 29, 2020

•ஈழத்து திருநாவுக்கரசு நாயனார்

•ஈழத்து திருநாவுக்கரசு நாயனார் அல்லது, மறவன்புலவு சச்சிதானந்தம் நாயனார்! 63 நாயன்மார்களின் வரலாற்றைப் படிக்கும்போதெல்லாம் எனக்குள் இரண்டு கேள்விகள் எழுவதுண்டு. அதாவது முதலாவது கேள்வி , இப்போதெல்லாம் ஏன் நாயன்மார் தோன்றுவதில்லை? இரண்டாவது, இந்த 63 பேரில் ஏன் ஒருவர்கூட ஈழத்தில் பிறக்கவில்லை? என் மனதிற்குள் இந்தக் கேள்விகள் இருப்பது எமது எல்லாம் வல்ல ஆண்டவருக்கு தெரிந்து விட்டதுபோலும். அதனால்தான் அதற்கு விடையாக மறவன்புலவு சச்சிதானந்தம் நாயனாரை அனுப்பி வைத்திருக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. 3வயதில் பிராமனரான ஞானசம்பந்த நாயனாரை ஆட்கொண்ட எமது ஆண்டவர் 80 வயதிலும் திருநாவுக்கரசு நாயனாரை ஆட்கொள்ளாமல் சோதித்ததாக கூறுகின்றார்கள். அதுபோல் எமது மறவன்புலவு சச்சிதானந்தம் நாயனாரையும் எமது ஆண்டவர் இந்த 80 வயதிலும் அவரை ஆட்கொள்ளாமல் மிகவும் சோதிக்கிறார். ஆனாலும் எமது ஆண்டவர் இப்போது மிகவும் இரக்கமானவராக இருக்கிறார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. ஏனெனில் திருநாவுக்கரசு நாயனாருக்கு சூலநோயைக் கொடுத்து சோதித்த ஆண்டவர் சச்சிதானந்தம் நாயனாருக்கு கொரோனா நோயைக் கொடுத்து சோதிக்க முனையவில்லை அல்லவா? எல்லோரும் கொரோனோவுக்கு பயந்து வீட்டுக்குள் பதுங்கியிருக்கும்வேளையில், கொரோனோவினால் இந்து மத மக்களும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அல்லது அக்கறை கொள்ளாமல் மத மாற்றம் குறித்து எமது சச்சிதானந்தம் நாயனாரை போராட வைத்த எமது ஆண்டவரை எப்படி புரிந்து கொள்வது? எனக்கு ஒருவிடயம் புரியமாட்டேங்குது! போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் எல்லாம் மதமாற்றம் செய்தபோதெல்லாம் அஞ்சாத எமது ஆண்டவர் இப்போது இந்த சுவிஸ் அலுலோயாக் கூறுப்புக்கு மட்டும் ஏன் அஞ்சுகிறார்? எதற்காக இந்த தள்ளாத வயதிலும் எமது சச்சிதானந்தம் நாயனாரை இந்த அலுலோயாக் கூறுப்புக்கு எதிராக போராட வைக்கிறார்? இந்த அலுலோயக் குறூப் 2 லட்சம் கொடுத்து மதமாற்றம் செய்வதாக சச்சிதானந்தம் நாயனார் கூறகிறார். அப்படியென்றால் இவர் 5 லட்சம் கொடுத்து தடுக்க வேண்டியதுதானே? அதாவது கடவுள் இயேசுவுக்கு 2 லட்சம் கொடுக்கும் சக்தி இருக்குமாயின் எமது எல்லாம் வல்ல ஆண்டவருக்கு 5 லட்சம் கொடுக்கும் சக்தி இல்லையா? அதைவிட முக்கியம், இந்த பணம் வரும் விடயத்தை விசாரிக்க கமிஷன் அமைக்க வேண்டும் என்று சச்சிதானந்தம் நாயனார் அடம் பிடிக்கிறார். இவர் கேட்டக்கொள்கின்றபடி கமிஷன் அமைத்தால் அது இவருக்கு இந்திய தூதரிடம் இருந்து பணம் வருவதையும் விசாரிக்கும் அல்லவா? இதுதான் பொல்லைக் கொடுத்து அடி வாங்குவது என்பது. இறுதியாக எமது ஆண்டவரிடம் நாம் தயவாக கேட்டுக்கொள்வது, எமது சச்சிதானந்தம் நாயனாரை சோதித்தது போதும். அவரை விரைந்து ஆட்கொள்ளுங்கள். 64வது நாயனாராக வரலாற்றில் இடம்பிடித்து ஈழத் தமிழருக்கு பெருமை சேர்க்கப்போகும்; சச்சிதானந்தம் நாயனார் புகழ் ஓங்குக! Image may contain: one or more people, people standing and outdoor

No comments:

Post a Comment