Thursday, December 31, 2020

தோழர் வள்ளுவன் அவர்களை நினைவில் கொள்வோம்!

தோழர் வள்ளுவன் அவர்களை நினைவில் கொள்வோம்! இன்று (21.12.2020) தோழர் வள்ளுவன் அவர்களின் 3வது நினைவுதினம் ஆகும். இன்று அவரது படத் திறப்பு நிகழ்வும் நினைவேந்தலும் பெண்ணாடத்தில் நடைபெறுகிறது. தோழர் வள்ளுவன் பற்றிய எனது நினைவுக் குறிப்பு கீழ்வரும் இணைப்பில் உள்ளது. http://tholarbalan.blogspot.com/2020/12/blog-post_71.html ஈழத் தமிழர்களை இறுதிவரை உறுதியுடன் ஆதரித்து வந்த தோழர் வள்ளுவன் அவர்களை ஈழத் தமிழராகிய நாம் என்றும் நன்றியுடன் நினைவு கூர்வோம்.

•ஆழ்ந்த இரங்கல்!

•ஆழ்ந்த இரங்கல்! இப்பொழுதெல்லாம் முகநூலுக்கு வரவே அச்சமாக இருக்கிறது. முகநூலில் வரும் மரணச் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. அந்தவகையில் நீண்டகால நட்பான் தோழர் கருப்பு கருணாவின் மறைவு செய்தி வந்திருக்கிறது. இந்த வருடம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தபோதுகூட “ நல்லது தோழர், தொடரட்டும் நம் தோழமை” என்று தெரிவித்திருந்தார். ஆனால் இப்படி இடைநடுவில் தோழமையை விட்டிட்டு செல்வார் என்று எதிர்பார்க்கவில்லையே. குறிப்பு- இங்கு பதிவு செய்த படமும் வரிகளும் அவரே எனக்கு அனுப்பியது.

ஆழ்ந்த அஞ்சலிகள்!

•ஆழ்ந்த அஞ்சலிகள்! சிலர் அவர் மார்க்சிய வழியில் திறனாய்வு செய்தவர் என்கிறார்கள். இன்னும் சிலர் அவர் பெரியாரியத்தை ஆதரித்தவர் என்கிறார்கள இவ்வாறு இவர்கள் கூறுவது எந்தளவு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் அவர் ஒரு சிறந்த தமிழ் அறிஞர் என்பதை அனைவரும் ஒத்துக்கொள்கிறார்கள். அவர் சிறந்த தமிழ் அறிஞர் மட்டுமல்ல சிறந்த தமிழ் இன உணர்வாளரும்கூட அதனால்தான் ஈழத்தில் எமது உறவுகள் கொல்லப்பட்டபோது அவருக்கு வலித்தது. ஈழப் படுகொலையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரித்தவர்கள் மீதான எனது ஆத்திரம் உயிர் மூச்சு உள்ளவரை நீடித்திருக்கும் என்று கூறினார். உறக்கமில்லாமல் கழிந்த அந்த இரவுகள் திரும்ப திரும்ப நினைவுக்கு வருகின்றன என்றும் அவர் கூறியிருக்கிறார். அதனால்தான் அவர் இறந்துவிட்டார் என்றதும் எமக்கு வலிக்கின்றது. எமது குடும்பத்தில் ஒருவரை இழந்துவிட்ட உணர்வைத் தருகின்றது. அவருக்கு ஈழத் தமிழர்கள் சார்பாக ஆழ்ந்த அஞ்சலிகள்.

•மம்தா பேனர்ஜியின் உணர்வு பாராட்டுக்குரியது!

•மம்தா பேனர்ஜியின் உணர்வு பாராட்டுக்குரியது! தமிழ்நாட்டை ஒரு தமிழன்தான் ஆள வேண்டும். மராட்டியர் ஆள அனுமதிக்க முடியாது என்று கூறினால் அதை தவறு என்கிறார்கள். அதுமட்டுமன்றி தமிழன் என்றால் யார் என்று நக்கலாகவும் கேட்கிறார்கள். ஆனால் மேற்கு வங்கத்தை ஒரு வங்காளிதான் ஆள வேண்டும். குஜராத்தி ஆள அனுமதிக்க முடியாது என்று மம்தா கூறும்போது அதை தவறு என்று இவர்கள் கூறுவதில்லை. அதுமட்டுமன்றி வங்காளி என்றால் யார் என்று தைரியமிருந்தால் மம்தாவிடம் இவர்கள் கேட்டுப் பார்க்கட்டுமே. ஏனெனில் தமிழனை இளிச்சவாயன் என்று இவர்கள் நினைக்கிறார்கள். மம்தாவின் அரசியல்; உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவரின் இன உணர்வு நிச்சயம் பாராட்டுக்குரியது.

மாபெரும் ஆசான் தோழர் மாவோ அவர்களின் பிறந்த தினம்(26.12.2020)

•மாபெரும் ஆசான் தோழர் மாவோ அவர்களின் பிறந்த தினம்(26.12.2020) மாபெரும் மாக்சிய ஆசான்களில் ஒருவரும் சீனப்புரட்சியின் தலைவருமாகிய தோழர் மாசேதுங் அவர்களின் 127வது பிறந்த நாள் உலகெங்கும் நினைவு கூரப்படுகிறது. தூங்கும் பூதம் என வர்ணிக்கப்பட்ட சீனாவில் புதிய ஜனநாயகப் புரட்சி மூலம் விடிவை ஏற்படுத்திய மாபெரும் தலைவர் அவர். ரஸ்சியாவில் குருசேவ் கும்பலால் முதலாளித்துவம் மீட்டமைக்கப்பட்ட ஆபத்தை சீனாவிலும் எதிர்வு கூறி அதை தடுக்கப் பல கலாச்சாரப் புரட்சிகள் நடக்க வேண்டும் எனக் கூறியவர் தோழர் மாவோ அவர்கள். தோழர் ஸ்டாலினுக்கு எதிராக குருசேவ் கும்பல் வைத்த குற்றச்சாட்டுகளை மாபெரும் விவாதம் மூலம் தோற்கடித்து சர்வதேச ரீதியில் ஸ்டாலினையும் மாக்சியத்தையும் காப்பாற்றியவர். மாக்சியம் லெனிசத்தை அடுத்து மாவோ சிந்தனைகள் மூலம் மாக்சியத்தை வளர்த்தெடுத்தவர். சீனாவில் மாவோ மறைவுக்கு பின்னர் டெங்சியாபிங் கும்பல்களால் முதலாளித்துவம் மீண்டும் ஆட்சி பீடம் ஏறினாலும் அவர்களால் இன்று வரை மக்கள் மனங்களில் இருந்து மாவோ புகழை நீக்க முடியவில்லை. சீனாவில் மட்டுமல்ல சர்வதேச ரீதியிலும் மாவோ சிந்தனைகள் வழங்கிய மகத்தான பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது. குறிப்பாக ஜரோப்பாவில் இருந்து வைக்கப்பட்ட எதிர்ப்புரட்சிகர தத்துவமாகிய பின்நவீனத்துவத்திற்கு எதிராக மாவோசிசத்தின் பங்களிப்பு மகத்தானது. மாக்சிச லெனிசிச மாவோ சிந்தனையில் புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்போம்!

எதியோப்பிய இனப்படுகொலைகள்!

•எதியோப்பிய இனப்படுகொலைகள்! இலங்கையில் நடந்தது போன்று எதியோப்பியாவிலும் இராணுவம் இனப்படுகொலை செய்கிறது. இலங்கையில் இனப்படுகொலை நடக்கும்போது உலகம் எப்படி வேடிக்கை பார்த்ததோ அதே மாதிரியே எதியோப்பியாவிலும் வேடிக்கை பார்க்கின்றது. உலகெங்கும் போராடும் இனங்கள் எல்லாம் தனித் தனியாக போராடுவதால் தனித்தனியாக இலகுவாக அழிக்கப்பட்டு வருகின்றன. எனவே இனியாவது போராடும் இனங்கள் யாவும் ஒன்றினைந்து போராட முன்வர வேண்டும். இந்தியா ஆதரிக்க வேண்டும், அமெரிக்கா ஆதரிக்க வேண்டும் என்று காத்துக்கொண்டிருக்காமல் உலகெங்கும் உள்ள போராடும் அமைப்புகளுடன் ஜக்கியப்பட ஈழத் தமிழ் அமைப்புகள் முயல வேண்டும்.

கேரளாவில் திருவனந்தபுரத்தின் மேயராக

கேரளாவில் திருவனந்தபுரத்தின் மேயராக 21 வயதான பெண் ஒருவர் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இந்தியாவின் வயது குறைந்த முதல் பெண் மேயர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அவருக்கு எமது வாழ்த்துகள். ஆனால் அருகில் தமிழ்நாட்டில் 71 வயதான மராட்டிய நடிகரை ஆள வரவேண்டும் என கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு பல காரணங்கள் இருப்பினும் முக்கிய காரணம் கேரளா 100 வீதம் கல்வி அறிவு பெற்ற மாநிலமாக இருப்பதே. அதனால்தான் கேரள மக்கள் முதலமைச்சரை சினிமா நடிகர்களில் தேடுவதில்லை என நடிகர் மம்முட்டி கூறியிருக்கிறார். தமிழ்நாட்டில் இந்த நிலை வருமா? அல்லது வழக்கம்போல் 500 ரூபாவுக்கு வோட்டை விற்கப் போகிறார்களா?

காலம் மாறுகிறது!

•காலம் மாறுகிறது! “வேலுப்பிள்ளை பிரபாகரன், தமிழரசன் ஆகியோர் தமது இனத்திற்காகவும் மொழிக்காகவும் குடும்பத்தை பிரிந்து எந்தளவு கஸ்டப்பட்டாங்கள் என்று நீங்கள்தானே அப்பா எனக்கு சொல்லி வளர்த்துள்ளீர்கள்” மேற்கண்ட வசனம் சிம்ராங்காரன் என்ற படத்தில் நடிகர் நாகாஅர்யுனன் பேசியிருக்கிறார். எந்த இந்திய அரசு இவர்களை பயங்கரவாதிகள் என்று கூறி கொன்றதோ அதே இந்திய அரசின் நாட்டில் இந்திய சினிமாவில்கூட இவர்களை இனத்திற்காக போராடி மாண்ட தியாகிகள் என்று கூறும் நிலை வந்துவிட்டது. இத்தகைய ஒரு மாற்றம் வரும் என்று தெரியும். ஆனால் இந்தளவு விரைவாக வரும் என்று நான்கூட எதிர் பார்க்கவில்லை. மக்கள் மகத்தானவர்;கள். அவர்கள் தமக்காக மாண்டவர்களை ஒருபோதும் கைவிட்டதில்லை.

தமிழ்நாடு தனிநாடு ஆகப் போகிறதா?

தமிழ்நாடு தனிநாடு ஆகப் போகிறதா? தமிழ்நாடு தனிநாடாக விடுதலை அடைய வேண்டும் என்று தோழர் தமிழரசன் கூறியபோது அவரை பிரிவினைவாதி என்றார்கள். பயங்கரவாதி என்றுகூறி கொன்றார்கள். ஆனால் இப்போது சிவசேனைக்கட்சி தலைவரே இந்தியா சோவியத்யூனியன் போல் உடைந்து சிதறப்போகின்றது என்று கூறியுள்ளார். இந்துமதம் மூலம் அகன்ற பாரதத்தை உருவாக்க முடியாது என்பதை மட்டுமல்ல இருக்கின்ற இந்தியாவைக்கூட தக்கவைக்க முடியாது என்பதை இந்துத்துவ கட்சி தலைவரே உணர்ந்துவிட்டார். காஸ்மீர் பிரிந்தால்கூட இந்தியா உடையாமல் இருக்கும். ஆனால் தமிழ்நாடு பிரிந்தால் இந்தியா நிச்சயம் உடையும். சிதறும். இதை இந்திய அரசு நன்கு உணர்ந்திருப்பதால்தான் அதன் முழு பலமும் தமிழ் இன உணர்வாளர்கள் மீது பயன்படுத்தி நசுக்கப்படுகிறது. ஈழ விடுதலைப் போராட்டம் நசுக்கப்பட்டதுகூட தமிழ்நாடு தனிநாடாகிவிடும் என்ற இந்திய அரசின் அச்ச உணர்வின் வெளிப்பாடே. ஆனாலும் எத்தனை அடக்குமுறை இருந்தாலும் அத்தனையும் உடைத் தெறிந்து தமிழ் மக்கள் விடுதலை பெறுவர். ஏனெனில் வரலாறு அறிந்த காலம் முதல் தன்னைத்தானே ஆண்ட இனம் ஒருபோதும் அடிமைத்தனமாக நீண்ட காலம் வீழ்ந்து கிடக்காது. அது நிச்சயம் திமிறி எழும்!

தனது அரசியல் பிரவேசம் குறித்து

தனது அரசியல் பிரவேசம் குறித்து எதிர்பார்த்த எழுச்சி ஏற்படாதது கண்டு ஏமாற்றம் அடைந்திருப்பார். கள நிலவரம் தனக்கு சாதகமாய் இல்லை என்பதை நாலு நல்ல நண்பர்கள் மூலம் அறிந்து கொண்டிருப்பார். பெரும் முதலாளிகள் பணம் தர தயங்கியதில் இருந்து தான் ஒடும் பந்தயக் குதிரை இல்லை என்பதை புரிந்திருப்பார். அவர் ஒரு சிறந்த நடிகர். நிச்சயம் பிளாப் என்று தெரிந்த படங்களில் அவர் நடித்ததில்லை. அதுபோல் நிச்சயம் தோல்வி என்று தெரிந்த பின்பு அரசியலில் போட்டியிட அவர் விரும்பவில்லை. தப்பித்துக்கொண்டது தமிழகம் அல்ல ரஜனிதான். ஏனெனில் போட்டியிட்டிருந்தால் தன் சொந்த பணத்தை மட்டுமல்ல புகழையும் இழந்திருப்பார். ஆனால் இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் என்னவெனில் ரஜனிக்கு இந்தளவு தெளிவாகவும் உறுதியாகவும் முடிவை உணர வைத்தவர்கள் தமிழக மக்களே.

ஒரு நடிகர்; தேர்தலுக்கு முன்பே முடிவு எடுத்துவிட்டார்

ஒரு நடிகர்; தேர்தலுக்கு முன்பே முடிவு எடுத்துவிட்டார் இன்னொரு நடிகர் தேர்தல் முடிந்ததும் நிச்சயம் முடிவு எடுப்பார். நாலு படம் நடித்துவிட்டாலே தமிழ்நாட்டையும் தமிழனையும் ஆளும் தகுதி வந்துவிட்டதாக நினைப்பவர்களுக்கு முடிவு கட்டும் காலம் இது! படிப்பறிவற்ற பின்தங்கிய மாநிலங்கள் என்று கூறப்படும் வட இந்திய மாநிலங்களில் கூட நடிகர்கள் கட்சி தொடங்கவில்லை. ஆட்சியைப் பிடிக்கவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் பிழைக்க வந்தவன் எல்லாம் தமிழனை ஆள வேண்டும் என்று துடிக்கிறான். அதனால்தான் கைபர் கணவாய் மூலம் வந்தவனிடம் அதிகாரத்தை இழந்துவிட்டு தன் தொப்புள்கொடி உறவுகளான ஈழத் தமிழருக்கு குடியுரிமை வழங்கும்படி கெஞ்சும் நிலை தமிழனுக்கு ஏற்பட்டுள்ளது. இந் நிலை மாற வேண்டும். மாற்றப்பட வேண்டும்.

ஐயாவின் கெத்து! 7

••ஐயாவின் கெத்து! 70 வயதான நடிகர் ரஜனி தன்னால் முடியவில்லை என்று ஒதுங்குகிறார். ஆனால் 90 வயதான நம்ம சம்பந்தர் ஐயா “தீபாவளிக்கு தீர்வு வரும்” என்ற வெறும் மூன்று சொல்லை மட்டும் வைத்துக்கொண்டு என்னமாய் அரசியல் செய்கிறார். காது சரியாக கேட்பதில்லை மற்றவர் துணையின்றி நடக்க முடியவில்லை வேட்டியோடு மூத்திரம் போவதுகூட தெரியவில்லை. ஆனாலும் பதவியை மட்டுமன்றி சொகுசு பங்களாவையும் விடவில்லை. குறிப்பு – கொரோனோகூட ஈழத் தமிழர்களை ஏமாற்றிவிட்டது. 70 வயதான நடிகர் ரஜனி தன்னால் முடியவில்லை என்று ஒதுங்குகிறார். ஆனால் 90 வயதான நம்ம சம்பந்தர் ஐயா “தீபாவளிக்கு தீர்வு வரும்” என்ற வெறும் மூன்று சொல்லை மட்டும் வைத்துக்கொண்டு என்னமாய் அரசியல் செய்கிறார். காது சரியாக கேட்பதில்லை மற்றவர் துணையின்றி நடக்க முடியவில்லை வேட்டியோடு மூத்திரம் போவதுகூட தெரியவில்லை. ஆனாலும் பதவியை மட்டுமன்றி சொகுசு பங்களாவையும் விடவில்லை. குறிப்பு – கொரோனோகூட ஈழத் தமிழர்களை ஏமாற்றிவிட்டது.

நடந்தது இனப்படுகொலை அல்ல

நடந்தது இனப்படுகொலை அல்ல வெறும் போர்க்குற்றம் என்று இவரே ஜெனிவாவில் கூறுவார். சர்வதேச விசாரணை தேவையில்லை. உள்ளக விசாரணை போதும் என்று இவரே ஜெனிவாவில் கூறுவார். இலங்கை அரசு கோராமலே கால அவகாசம் அதுவும் இரண்டுமுறை இவரே ஜெனிவாவில் பெற்று கொடுப்பார். அப்புறம் என்னவென்றால் இப்போது வீரியமான தீர்வு வேண்டும் என்கிறார். வீரியமான தீர்வு என்றால் என்ன? யாராவது தயவு செய்து கூறுங்க பிளீஸ். எனக்கு தலை சுத்துது.

ஐயா!

ஐயா! கடந்த காலத்தில் உங்களால் வெற்றிபெற்ற ஜனாதிபதி இருந்தார். உங்களின் பங்கெடுப்பில் பிரதமரும் ஆட்சியும் இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக ஓரணியில் திரண்ட தமிழ்தேசியகூட்டமைப்பு உங்கள் கையில் இருந்தது. இத்தனையும் வைத்துக்கொண்டு உங்களால் என்ன செய்ய முடிந்தது? அடுத்த தீபாவளிக்கு தீர்வு வரும் என்று அறிக்கை விட்டதைத்தவிர வேறு என்ன செய்ய முடிந்தது? குறைந்தபட்சம் அரசியல் கைதிகளைக்கூட உங்களால் விடுவிக்க முடியவில்லையே? அப்புறம் என்ன ம - - க்கு தமிழ் கட்சிகள் யாவும் ஓரணியில் திரள வேண்டும் என்று மீண்டும் அறிக்கை விடுகிறீர்கள்?

புத்தாண்டு வாழ்த்துக்கள்

•புத்தாண்டு வாழ்த்துக்கள் 2020ம் ஆண்டு முடிந்து 2021 ம் ஆண்டு பிறக்கிறது. அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஒவ்வொரு வருடமும் பிறக்கும்போது இந்த வருடமாவது ஒரு வழி பிறக்கும் என நம்புகிறோம். ஆனால் மேலும் மேலும் நெருக்கடிகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அவை நாம் தொடர்ந்தும் போராட வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை எமக்கு எற்படுத்துகின்றன. நாம் வீழ்வது கேவலம் அல்ல மாறாக வீழ்ந்து கிடப்பதே கேவலம். மீண்டும் எழுந்து நிற்பதையே வரலாறு பதிவு செய்யும். மீண்டும் எழுந்து நிற்போம்! இதுவே இந்த வருடத்தின் வரலாற்று கடமையாக இருக்க வேண்டும்.

Sunday, December 20, 2020

மூங்கில் பிரியாணியும்

•மூங்கில் பிரியாணியும் தொழில் அதிபர் திலீபன் மகேந்திரனும்! நான் பலவகை பிரியாணிகளை அறிந்திருக்கிறேன். அவற்றை சாப்பிட்டும் இருக்கிறேன். என்னை திண்டுக்கல் நீதிமன்ற விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட காலங்களில் திண்டுக்கல் பொலிஸ்இன்ஸபெக்டர் பேமஸ் பிரியாணி என்று கூறி தலைப்பாகட்டு பிரியாணி வாங்கித் தந்தது நினைவில் இருக்கிறது. ஆனால் இதவரை நான் மூங்கில் பிரியாணி சாப்பிட்டதும் இல்லை. அதை கேள்விப்பட்டதுகூட இல்லை. எனது முகநூலில் நண்பராக இருக்கும் திலீபன் மகேந்திரனின் முகநூல் பதிவுகளில் இருந்தே மூங்கில் பிரியாணியை இப்போது அறிகிறேன். சில வருடங்களுக்கு முன்னர் இந்த திலீபன் மகேந்திரன் தேசியக்கொடியை எரித்தார் என்று கைது செய்யப்பட்டு பொலிசாரால் சித்திரவதை செய்யப்பட்டார். அப்போது அவருக்கு இழைக்கப்பட்ட சித்திரவதையைக் கண்டித்து நான் குரல் கொடுத்தேன். இதனால் நான்தான் அவரை இயக்குவதாகவும் அவருக்கு உதவி செய்வதாகவும்கூட இந்திய உளவு அமைப்புகள் சந்தேகப்பட்டன. உண்மை என்னவென்றால் நான் இதுவரையில் ஒருமுறைகூட திலீபன் மகேந்திரனுடன் பேசியதில்லை. சரி. இப்போது விடயத்திற்கு வருகிறேன். திலீபன் மகேந்திரன் தற்போது சென்னையில் மூங்கில் பிரியாணி வியாபாரம் செய்ய ஆரம்பித்திருக்கிறார். அவருடைய வியாபாரத்திற்கும் பல இடைஞ்சல் கொடுக்கிறார்கள். ஆனாலும் அவற்றை சமாளித்து தொடர்கிறார். அதுவும் பெட்டிக் கடைகூட சொந்தமாக இல்லை. ஆனாலும்; தன்னை கெத்தாக “தொழில் அதிபர்” என்று போடுகிறார். அவருடைய இந்த தன்னம்பிக்கை பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள். குறிப்பு - இது ஒரு கட்டணம் இல்லாத விளம்பரம் என்று கருத வேண்டாம்.

தோழர் தமிழரசன் தாயாரின் மறைவை அடுத்து

தோழர் தமிழரசன் தாயாரின் மறைவை அடுத்து அவரது படத் திறப்பு விழாக்கள் தமிழகத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த கொரோனோ நெருக்கடிகளுக்கு மத்தியிலும் பல தமிழ் தேசிய அமைப்புகள் ஒன்று சேர்ந்து சென்னையில் படத்திறப்புவிழா நடத்தியுள்ளனர். தோழர் தமிழரசன் தாயாருக்கு வழங்கப்படும் இவ் மதிப்பு என்பது தோழர் தமிழரசனுக்கு வழங்கப்படும் அங்கீகாரம் ஆகும். தோழர் தமிழரசனை தவிhத்துவிட்டு இனியாரும் தமிழ்தேசியம் பேசிவிட முடியாது என்ற உண்மையை நிகழ்வில் பங்குபற்றிய அனைத்து அமைப்பு பிரதிநிதிகளும் கூறியிருக்கின்றன. இனிவரும் காலங்கள் தமிழரசன் காலமாக அமையட்டும். அவர் விரும்பிய தமிழ்தேசிய விடுதலை நிறைவேறட்டும்.

தீவிரம் (சினிமா)

தீவிரம் (சினிமா) ஒரு முஸ்லிம் இளைஞன் தன் தந்தையை கொன்றவர்களை பழி வாங்குவதற்காக அப்பாவி மக்களை குண்டு வைத்து கொல்ல திட்டமிடுவதை விரிவாகவும் விபரமாகவும் காட்டியிருக்கிறார்கள். முஸ்லிம் தீவிரவாதம் அப்பாவி மக்களை இலக்கு வைப்பதாக காட்டியவர்கள் அந்த முஸ்லிம் தீவிரவாதம் உருவாகக் காரணமான இந்து பயங்கரவாதம் பற்றியோ அல்லது அரச பயங்கரவாதம் பற்றியோ காட்டத் தவறிவிட்டார்கள். நியூட்டனின் மூன்றாம் விதிப்படி எந்தவொரு தாக்கத்திற்கும் மறு தாக்கம் உண்டு. எனவே மறு தாக்கத்தை நிறுத்த வேண்டும் என்றால் அதற்கு காரணமான தாக்கத்தை முதலில் நிறுத்த வேண்டும். இதுதான் ஈழத்திலும் நடந்தது. போராளிகளை பயங்கரவாதிகள் என்றுகூறி பல நாடுகள் ஒன்று சேர்ந்து அழித்தார்கள். ஆனால் அப் போராளிகள் உருவாகக் காரணமான சிங்கள அரச பயங்கரவாதம் குறித்து யாருமே அக்கறை கொள்ளவில்லை.

வரலாறு காணாத மாபெரும் உழவர் போராட்டம்!

•வரலாறு காணாத மாபெரும் உழவர் போராட்டம்! 96000 டிராக்டர் வண்டிகள் சகிதம் லட்சக்கணக்கான உழவர்கள் தலைகர் டில்லியில் சூழ்ந்திருக்கிறார்கள். காப்ரேட் முதலாளிகளின் நலனுக்காக மோடி அரசு உருவாக்கிய சட்டத்தை திரும்ப்பெறுமாறு கோரி இவ் உழவர்கள் போராடுகின்றனர். ஆனால் மோடி அரசு முதலாளிகளின் நலனுக்காக உழவர் போராட்டத்தை பொலிஸ் வன்முறை மூலம் அடக்க முனைகிறது. இதைத்தான் 200 வருடங்களுக்கு முன்னரே மார்க்சிய ஆசான் எங்கெல்ஸ் அவர்கள் “ முதலாளிகளின் நலனுக்காக உழைக்கும் மக்களை அடக்கும் வன்முறைக் கருவியே அரசு” என்று தெளிவாக கூறியிருக்கிறார். உழவர் போராட்டம் வெல்லட்டும் முதலாளிகளின் நலன் பேணும் மோடி அரசை தூக்கியெறியட்டும்.

சிங்கள பொலிசாரால் சிறையில் கொல்லப்பட்ட

சிங்கள பொலிசாரால் சிறையில் கொல்லப்பட்ட சிங்கள இளைஞனின் சிங்கள தாயொருவர் சிங்கள பொலிசாரின் காலில் விழுந்து மன்றாடுகிறார். சிங்கள கோத்தபாயாவுக்கு வோட்டு போட்டவர்களுக்கு இந்த நிலை நிச்சயம் வரும் என்று எமக்கு தெரியும். ஆனால் இந்தளவு விரைவாக வரும் என எதிர்பார்க்கவில்லை. குறித்து வைத்துக்கொள்ளுங்கள் எந்த சிங்கள மக்கள் மூலம் பதவி பெற்றார்களோ அதே சிங்கள மக்களின் மூலம் மகிந்த கும்பல் தூக்கியெறியப்படும். இது உறுதி.

செய்தி - இந்தியாவின் பங்களிப்பில் முழு நம்பிக்கை.

செய்தி - இந்தியாவின் பங்களிப்பில் முழு நம்பிக்கை. அஜித் டோவலுடனான சந்திப்பின் பின்னர் சம்பந்தர் ஐயா தெரிவிப்பு தமிழ் மக்களுக்கு எந்த தீர்வும் வழங்குவதற்கு இலங்கை அரசு ஒருபோதும் தயார் இல்லை. ஆனால் ஜனாதிபதி கோத்தா இதை தைரியமாக இந்தியாவில் வைத்தே கூறினார். பொதுவாக ஒரு நாட்டுக்கு செல்லும் இன்னொரு நாட்டு தலைவர் அந்த நாட்டுக்கு தர்ம சங்கடம் வரும் கருத்துகளை கூறுவதில்லை. இதுதான் உலக நடைமுறை. ஆனால் கோத்தாவோ இந்த நடைமுறைபற்றி எல்லாம் கவலைப்படாமல் தமிழருக்கு வழங்கும் தீர்வு பற்றி கூறியிருக்கிறார். தமிழருக்கு உரிய தீர்வு வழங்குமாறு கோத்தாவுக்கு அழுத்தம் கொடுத்ததாக இந்திய அரசு கூறுகிறது. ஆனால் கோத்தாவோ “ தமிழருக்கு தீர்வு வழங்குவதை பெருன்பான்மை சிங்கள மக்கள் விரும்பவில்லை. எனவே சிங்கள மக்களை மீறி தீர்வு எதையும் நான் வழங்கப் போவதில்லை” என்று கூறினார். தமிழருக்கு தீர்வு வழங்கப்போவதில்லை என்று இந்தியாவில் வைத்தே தைரியமாக கோத்தா கூறினார். அவருக்கு 7000 கோடி ரூபா உதவியை இந்திய அரசு வழங்கியது. இதுதான் தமிழருக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் இந்திய அரசின் அக்கறை ஆகும். தமிழருக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதில் இந்திய அரசுக்கு உண்மையான அக்கறை இல்லை என்றுதானே அர்த்தம். ஆனால் சம்பந்தர் ஐயாவோ “இந்தியா தமிழருக்கு தீர்வு பெற்று தரும்” என்று இன்னமும் கூறிக் கொண்டிருக்கிறார். 2009க்கு பின்னர் இதுவரை சுமார் நூறு தடவைக்கு மேல் இந்திய பிரதிநிதிகளை சம்பந்தர் ஐயா சந்தித்திருக்கிறார். சந்தித்த அத்தனை தடவையும் இந்தியா தமிழருக்கு தீர்வு பெற்று தரும் என்றே நம்பிக்கை தெரிவித்து வருகிறார். தண்ணீர்கூட மூன்றுமுறைதான் பொறுக்கும். ஆனால் சம்பந்தர் ஐயாவோ தண்ணியைவிட அதிகமாக பொறுமை காக்கிறார். சம்பந்தர் ஐயா தொடர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றி வருகிறார். அதனால் “இந்த கிழடு செத்து தொலையுமட்டும் தமிழருக்கு ஒரு மயிரும் கிடைக்காது” என்று மக்களே தூற்றும் காலம் விரைவில் வரப் போகிறது. குறிப்பு- கடந்த வருடம் இந்தியாவினால் திறந்த பலாலி விமானநிலையத்தை சத்தம் போடாமல் மூடி வருகிறது இலங்கை அரசு. அதைக்கூட ஏன் என்று யாழ் இந்திய தூதரால் கேட்க முடியவில்லை. ஆனால் அவரோ வடக்கு கிழக்கு முழுவதும் 20 காந்தி சிலையை நிறுவ துடிக்கிறார்.

இன்னும்_எத்தனை_உயிர்களை பலியிட_வேண்டுமோ?

•இன்னும்_எத்தனை_உயிர்களை பலியிட_வேண்டுமோ? நவம்பர் 26 முதல் டெல்லி சலோ இயக்கத்தில் பங்கேற்க வந்தவர் கஜ்ஜன் சிங் பஞ்சாப் மாநிலம், லூதியானா மாவட்டம், சத்ரா கிராமத்தைச் சேர்ந்தவர். பாஜக மத்திய அரசின் விவசாய விரோதச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி நடைபெறும் போராட்டங்களில் பங்கேற்று வருகிறார் தலைநகர் டெல்லி செல்லும் வழியில் டிக்ரி என்ற இடத்தில் காவல்துறை தடுத்து நிறுத்தியதால் கடந்த 5 நாட்களாக கடும் குளிரில், நெடுஞ்சாலையில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டதால் கஜ்ஜன் சிங் உயிரிழந்தார். முன்னதாக விவசாயி தான்னா சிங் உயிரிழந்தார். இப்போது கஜ்ஜன் சிங் உயிர் பலியானார். இன்னும் எத்தனை உயிர்களை பலியிட வேண்டுமோ?

பலே! கோத்தா பலே!

•பலே! கோத்தா பலே! மகரம சிறைச்சாலையில் 108 பேருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டமையினால் அது குறித்து அரசு எந்த பொறுப்பான நடவடிக்கையும் எடுக்காததால் அங்கிருந்த கைதிகள் சிலர் பயத்தில் தப்ப முயற்சி செய்துள்ளனர். நோய் தொற்று குறித்து நம்பிக்கை அளிக்கும் நடவடிக்கைகள் எதையும் எடுக்காத அரசு அங்கிருந்த எட்டு கைதிகளை சுட்டுக் கொன்றுள்ளது. 127 பேருக்கு கடுமையான காயம் எற்பட்டுள்ளது. சிறைக்கு வெளியே கைதிகளின் உறவினர்கள் பொலிசாரின் காலில் விழுந்து கெஞ்சுகின்றனர். மன்றாடுகின்றனர். ஆனால் அரசோ சிறைத்துறை அமைச்சருக்கு மேலதிகமாக கொரோனோ அமைச்சு பதவியும் வழங்கியுள்ளது. உலகில் ஒரு நோய்க்கு அமைச்சு பதவி வழங்கியிருக்கும் முதல் அதிசய நாடு இலங்கை ஆகும். அதைக்கூட சிறையில் கொரோனோவினால் கலவரம் ஏற்பட்டு எட்டுப் பேரைக் கொன்றவருக்கு வழங்கியுள்ளது. அதாவது இனி வெளியிலும் யாராவது கொரேர்னோ என்றால் கொல்லும்படி ஜனாதிபதி ஆசீர்வாதம் வழங்கியுள்ளார். புலிகளை அடக்கியது போன்று கொரோனோவையும் அடக்குவோம் என்று ராணுவ தளபதி கூறிய போது நாம் அதை சீரியஸாக எடுக்கவில்லை. ஆனால் போற போக்கைப் பார்த்தால் எல்லோரையும் கொன்று புதைத்து கொரோனோவை ஒழிக்க நினைக்ககிறார்கள் போல் தெரிகிறது. பாவம் இலங்கை மக்கள்!

தீ பரவட்டும்!

•தீ பரவட்டும்! அதில் மோடி அரசு பொசுங்கட்டும்!! ஒருபுறம் கடுங்குளிரில் இதுவரை இரண்டு விவசாயிகள் இறந்து விட்டனர். மறுபுறத்தில் போராட்டத்தில் பங்குபற்ற பெண் விவசாயிகள் அணி திரள்கிறார்கள். இதோ ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ஒரு பெண்ணே டிராகடர் வண்டியை ஓட்டிக்கொண்டு வருகிறார் டில்லி நோக்கி வீதியில் பாரிய கொன்கிரீட் கற்களை போட்டு மறித்தார்கள் வீதியில் பாரிய பள்ளங்களை தோண்டியும் மறித்தார்கள். வீதியில் வரும் விவசாயிகள் மீது தண்ணியை பீச்சி அடித்துப் பார்த்தார்கள். அத்தனை தடைகளையும் தாண்டி விவசாயிகள் வீறு நடை போடுகின்றனர். காயம்பட்ட விவசாயிகள் சிகிச்சை பெற செல்லாமல் தொடர்ந்தும் போராடுகிறார்கள். அதைவிட அதிசயம். தம்மை அடித்து காயப்படுத்திய பொலிசாரின் தாகத்திற்கும் அவர்களே தண்ணீர் கொடுக்கின்றனர். ஆனால் அரசோ கொஞ்சம்கூட இரக்கம் இன்றி இவ் விவசாயிகளை பயங்கரவாதிகள் என்றும் தேசவிரோதிகள் என்றும் கூசாமல் கூறுகின்றது. விவசாயிகள் போராட்டம் நிச்சயம் வெற்றி பெற வேண்டும்.

தொடரும் இழப்புகள்!

•தொடரும் இழப்புகள்! டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் மூன்றாவது இழப்பு. பஞ்சாப்பின் விவசாயி குர்பச்சான் சிங களத்தில் மரணமடைந்துள்ளார். அவருக்கு எமது அஞ்சலிகள். எத்தனை தடை போட்டாலும் அத்தனையையும் உடைத்துக்கொண்டு எத்தனை இழப்புகள் ஏற்பட்டாலும் அத்தனையையும் தாங்கிக்கொண்டு தொடர்ந்து போராடும் விவசாயிகளுக்கு எமது ஆதரவும் வாழ்த்துகளும். வெல்லட்டும் போராட்டம்!

இன்று 28 ஆண்டுகளுக்கு முன்னர்

இன்று 28 ஆண்டுகளுக்கு முன்னர் (06.12.1992) பாபர் மசூதி இடிக்கப்பட்ட நான் ஆகும். பாபர் மசூதியை இடித்தவர்களை நிரபராதிகள் என்று இந்திய உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. எனவே நீதிமன்றி தீர்ப்பின்படி பாபர் மசூதி தானாக இடிந்து விழுந்த நாள் இன்று ஆகும். இது இந்திய அதிசயம்!

சர்வதேச கவனம் பெறும்

•சர்வதேச கவனம் பெறும் இந்திய விவசாயிகள் போராட்டம்! இந்திய விவசாயிகள் போராட்டம் நியாயமானது என்று ஜ.நா மன்றம் தெரிவித்துள்ளது. இந்திய விவசாயிகள் போராட்டத்திற்கு தனது ஆதரவை கனடா பிரதமர் மீண்டும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் விவசாயிகள் இந்தியா முழுவதும் நாடுதழுவிய பந்த் அறிவித்துள்ளார்கள். இதற்கு அனைத்து தொழிற்சங்கங்களும் முழு ஆதரவு தெரிவித்துள்ளன. விவசாயிகளின் போராட்டத்திற்கு பஞ்சாப் பாடகர் ஒருவர் ஒரு கோடி ரூபா அன்பளிப்பு செய்துள்ளார். விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல இலக்கியவாதிகள் தமக்கு கிடைத்த விருதை திருப்பியளிகின்றன. இவ்வாறு நாளுக்குநாள் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு பெருகுகின்றது. விவசாயிகள் கொடிய பனி மற்றும் கடுங் குளிருக்கு மத்தியிலும் போராட்டத்தை உறுதியுடன் தொடருகின்றனர். பல்வேறு தடைகளை போட்டு போராட்டத்தை தடுக்க முயன்ற அரசு அது பயன் அளிக்காததால் அவதூறுகளை பரப்புகின்றது. கொஞ்சம்கூட இரக்கம் இன்றி விவசாயிகளை தேசவிரோதிகள் என்றும் அந்நிய கைக்கூலிகள் என்றும் கூறுகின்றது. ஆனாலும் விவசாயிகளின் போராட்டம் நிச்சயம் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறும். அவர்களுக்கு எமது ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவிப்போம்.

பதிவு செய்யாத கட்சியை தடை செய்ய முடியுமா?

•பதிவு செய்யாத கட்சியை தடை செய்ய முடியுமா? சுகாதார அமைச்சர் மந்திரித்த குடத்தை ஆற்றில் போட்டுப் பார்த்தார். பயன் இல்லை. கொரோனோ நோய்க்கு என்று ஒரு அமைச்சரை நியமித்து பார்த்தார்கள். பயன் இல்லை. என்ன செய்தும் கொரோனோவை கட்டுப்படுத்த முடியவில்லை. சிறைக்குள்ளேயே நாலு பேரை சுட்டுக் கொல்லும் அளவுக்கு நிலைமை சென்றுவிட்டது. மக்களுக்கு வேலை இல்லை. அரச நிவாரணம் இல்லை. அதனால் லாக்டவுன் கட்டுப்பாடுகளை ஏற்க மக்கள் மறுக்கிறார்கள். அரசுக்கு எதிராக சிங்கள மக்கள் வீதியில் இறங்கிப் போராட ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் பொறுப்புவாய்ந்த அமைச்சரோ தமிழ்தேசிய கூட்டமைப்பை தடை செய்ய வேண்டும் என்று பேசுகிறார். தமிழ்தேசிய கூட்டமைப்பை தடை செய்வதன் மூலம் கொரோனோவை எப்படி ஒழிக்க முடியும் என்று ஒரு அரசியல்வாதிகூட கேள்வி எழுப்பவில்லை. அதுமட்டுமன்றி தமிழ்தேசிய கூட்டமைப்பு இன்னும் பதிவு செய்யப்படவில்லை. எனவே பதிவு செய்யப்படாத கட்சியை எப்படி தடை செய்யப் போகிறார்கள் என்றும் புரியவில்லை. போராடும் சிங்கள மக்களின் கவனத்தை திருப்பி ஏமாற்றுவதற்காகவே இந்த மாதிரி இனவாதக் கருத்தை அந்த அமைச்சர் கூறியிருக்கிறார். இந்த உண்மை சாதாரண மக்களுக்கே நன்கு புரியக்கூடியது. எனவே தன்னை சாணக்கியன் என்று நம்பும் சம்பந்தர் ஐயா “ முதலில் கொரோனோவை ஒழியுங்கள். அப்புறம் தமிழ்தேசியகூட்டமைப்பை தடை செய்யலாம்” என கூறியிருக்க வேண்டும். ஆனால் சம்பந்தர் ஐயாவும் “தமிழ்தேசிய கூட்டமைப்ரைப யாராலும் தடை செய்ய முடியாது” என்று பதில் கூறி அமைசரின் பேச்சுக்கு எண்ணெய் ஊற்றியுள்ளார். தமிழ்தேசிய கூட்டமைப்பை பதிவு செய்யும்படி டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் புளட் தலைவர் சித்தார்த்தன் ஆகியோர்; கேட்டு கேட்டு களைத்துவிட்டனர். தமிழரசுக்கட்சி தலைவர்களான மாவை சேனாதிராசாவும் சம்பந்தர் ஐயாவுமே தமிழ்தேசிய கூட்டமைப்பபை பதிவு செய்ய தடை போட்டு வருகிறார்கள். இவ்வாறு தமிழ்தேசியகூட்டமைப்பை பதிவு செய்யவே விரும்பாத ஒத்துழைக்காத சம்பந்தர் ஐயா இப்போது யாராலும் தடை செய்ய முடியாது என்று வீரம் பேசுவது தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காகவே. ஏமாறுவதற்கு மக்கள் இருக்கும்வரை இந்த அரசியல்வாதிகள் மாறி மாறி இனவாதம் பேசி மக்களை ஏமாற்றிக் கொண்டே இருப்பார்கள்.

பேரறிவாளனின் விடுதலையும்

•பேரறிவாளனின் விடுதலையும் தமிழக “டயர் நக்கி” அரசின் துரோகமும்! கடந்த இருதினங்களுக்கு முன்னர் ஜெயா அம்மையாரின் சமாதியில் நினைவஞ்சலி செலுத்திய முதல்வரும் துணை முதல்வரும் தாம் “அம்மாவின் ஆட்சி”யை தொடர்வதாக கூறியிருந்தனர். இவர்கள் உண்மையில் அம்மாவின் ஆட்சியை தொடர்வதாக இருந்தால் அவரின் இறுதி விருப்பங்களில் ஒன்;றான எழுவர் விடுதலையை செய்திருக்க வேண்டும். ஆனால் இந்த டயர் நக்கி அரசு இதுவரை எழுவரை விடுதலை செய்யாதது மட்டுமன்றி ஆளுநருடன் சேர்ந்து அவர்களின் விடுதலைக்கு எதிராக சதி செய்கிறது. பேரறிவாளன் மிகவும் சுகயீனம் அடைந்துள்ளார். அவர் மருத்துவ சிகிச்சைக்காக பரோல் விடுமுறை கேட்டபோது இந்த டயர் நக்கி அரசு மறுத்துவிட்டது. தான் மறுத்தது மட்டுமன்றி பேரறிவாளன் நீதிமன்ற அனுமதி கோரியபோதும் கடும் எதிர்;ப்பை இவர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவ சிகிச்சை பெற பரோல் விடுமறை வழங்கவே மறுக்கும் இந்த அரசு பேரறிவாளனுக்கு விடுதலை வழங்க ஆளுனர் தாமதம் செய்வதாக பொய் கூறுகிறது. ஆளுநர் தாமதம் செய்வதுதான் காரணம் என்றால் இந்த ஏழுபேரையும் நீண்ட பரோலில் விடுதலை செய்ய முடியும். அதற்கு ஆளுநர் அனுமதி தேவையில்லை. ஆனால் அதற்கு இந்த டயர் நக்கி அரசு தயாரில்லை. ஏனெனில் இந்த எழுவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற உண்மையான விருப்பு இவர்களுக்கு இல்லை. அதை உறுதிப்படுத்துவிதமாக அண்மையில் தமிழக அரசின் சார்பாக நீதிமன்றத்தில் பங்குபற்றிய அரச வழக்கறிஞர் செயற்பாடு அமைந்துள்ளது. பேரறிவாளன் புழல் சிறையில் அடைக்கபப்ட்டிருக்கிறார். ஆனால் மத்திய அரசின் வழக்கறிஞர் அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தில் கூறியுள்ளார். அதுமட்டுமன்றி வேலூர் சிறைக்கு அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் சிகிச்சை பெற முடியும் என்றும் அரச வழக்கறிஞர் கூறியிருக்கிறார். இதுவும் இன்னொரு பொய் ஆகும். ஏனெனில் சிறையில் இருப்பவர்கள் நீதிமன்ற உத்தரவு இன்றி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறமுடியாது என்று விதி இருக்கிறது. இவ்வாறு மத்திய அரசின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் பொய்கள் கூறும்போது அதை மறுத்து பேச வேண்டிய தமிழக அரசின் வழக்கறிஞர் மௌனமாக இருந்து ஒத்துழைப்ப வழங்கியுள்ளார். இதன்மூலம் தமிழக டயர் நக்கி அரசு மத்திய அரசுடன் சேர்ந்துகொண்டு ஜெயா அம்மையாரை மட்டுமன்றி தமிழக மக்களையும் ஏமாற்றுகின்றது என்பது நன்கு புலனாகிறது. முன்பு ஜெயா அம்மையாரின் டயரை நக்கியவர்கள் இப்போது மோடியின் டயரை நக்கிறார்கள் எதிர்வரும் தேர்தலில் இந்த டயர் நக்கிகளை மக்கள் விரட்டியடிக்க வேண்டும்

இந்த நாசமாய்போன அமைச்சர்களுக்கு

•இந்த நாசமாய்போன அமைச்சர்களுக்கு கொரோனோ வந்து தொலைக்காதா? ஒருபுறம் கொரோனோ. மறுபுறம் புயல் மழை வெள்ளம் என மக்கள் திண்டாடுகிறார்கள். அவர்களுக்கு உரிய நிவாரண உதவிகள்கூட இதுவரை வழங்க அரசு முன்வரவில்லை. கொரோனோவை கட்டுப்படுத்த வேண்டிய சுகாதார அமைச்சரோ மந்திரித்த குடத்தை ஆற்றில் போட்டு தன் கடமையை முடித்துக் கொண்டுள்ளார். இதன் பின்னர் கொரோனோ நோய்க்கு என ஒரு அமைச்சரை ஜனாதிபதி கோத்தா நியமித்தார். அதுவும்கூட சிறையில் கொரோனோவை கட்டுப்படுத்த முடியாமல் நாலு கைதிகளை சுட்டுக்கொன்றவருக்கு இந்த அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சரோ தமிழ்த் தேசிய கூட்டமைப்பை தடை செய்ய வேண்டும் என்று கூறிக்கொண்டு இருக்கிறார். நீதி அமைச்சரோ தன் அலுவலகத்திற்கு இரண்டு வருட வாடகையாக 40 கோடி ரூபா ஒதுக்கியுள்ளார். அதாவது நீதி அமைச்சரின் அலுவலகத்தின் மாதாந்த வாடகை ஒரு கோடியே 67 லட்ச ரூபா ஆகும். இந்த பணத்திற்கு இலங்கையில் ஒரு கட்டிடத்தையே மொத்தமாக வாங்கிவிட முடியும். மக்களுக்கு நிவாரணம் கொடுக்காமல் ஒரு அமைச்சர் அதுவும் நீதி அமைச்சரே நியாயமில்லாமல் இப்படி நடந்துகொள்கிறார். உலகில் எல்லாம் கொரோனோவினால் இறந்த முஸ்லிம்களை அவர்கள் மத வழக்கப்படி புதைப்பதற்கு அரசுகள் அனுமதிக்கின்றன. ஆனால் இலங்கையில் மட்டும் வேண்டுமென்றே அரசு புதைப்பதற்கு அனுமதியளிக்க மறுக்கிறது. நீதி அமைச்சர் ஒரு முஸ்லிம். தன் இனத்திற்கே இழைக்கப்படும் அநியாயத்தை அவரால் தட்டிக் கேட்க முடியவில்லை. ஆனால் கொஞ்சம்கூட கூச்சமின்றி இந்த நீதி அமைச்சர் தன் அலுவல வாடகைக்கு 40 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளார். இந்த நாசமாய்போன அமைச்சர்களுக்கு கொரோனோ வந்து தொலைக்காதா?

இன்று மனிதவுரிமை தினமாம்?

இன்று மனிதவுரிமை தினமாம்? போர் முடிந்து 11 வருடங்கள் ஆகிவிட்டன. போர் முடிந்த பின் சரணடைந்த இவர்களுக்கு என்ன நடந்தது என்றே இன்று வரை தெரியவில்லை. இறந்தவர்கள் பட்டியலில் சேர்ப்பதா அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பட்டியலில் சேர்ப்பதா என்றும் தெரியவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடந்த 4 வருடங்களாக வீதியில் உட்கார்ந்து போராட்டம் நடத்துகின்றனர். தமிழ் மக்களுக்கு பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். பல கட்சிகள் இருக்கின்றன. பல தலைவர்கள்;கூட இருக்கிறார்கள். ஆனால் இவர்களால்கூட இந்த காணாமல் போனவர்களை கண்டு பிடிக்க முடியவில்லை.

பரிசுத்த ஆவியில் கொழுக்கட்டை வேகவைக்க முடியாது!

•பரிசுத்த ஆவியில் கொழுக்கட்டை வேகவைக்க முடியாது! கடந்த வருடம் இதே காலப்பகுதியில் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் வன்னியில் இருந்து ஒருவர் என்னுடன் பேசினார். தன்னை முன்னாள் போராளி என்று கூறியவர் இம்முறை தாம் மகிந்தவுக்கு ஆதரவு தெரிவிக்க இருப்பதாகவும் அது குறித்து என் கருத்து என்னவென்று கேட்டார். தான் ஆட்சிக்கு வந்தவுடன் சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக மகிந்த ராஜபக்சா உறுதியளித்திருப்பதாகவும் அதனால் அவரை ஆதரிக்க முடிவு செய்ததாகவும் அவர் என்னிடம் கூறினார். அப்போது நான் “சரி. அவர் பதவிக்கு வந்த பின்பு அரசியல் கைதிகளை விடுதலை செய்யாவிடில் என்ன செய்வது? எந்த அடிப்படையில் அவரை நம்புகிறீர்கள்?” என கேட்டேன். அதற்கு அவர் இதை நாங்கள் மகிந்தவிடமே கேட்டோம். அப்போது அவர் “12000 புலிகளை புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்த எனக்கு சிறையில் இருக்கும் 77 அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாதா. என்னை நம்புங்கள்” என்று கூறினார் என்றார். இவ்வாறு மகிந்தா மட்டுமன்றி கோத்தா மற்றும் நாமல் ராஜபக்சா எல்லோரும் தாம் ஆட்சிக்கு வந்ததும் உடன் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தார்கள். பதவி ஏற்றதும் உடன் விடுதலை செய்வதாக வாக்குறுதி அளித்தவர்கள் ஒரு வருடம் கடந்த பின்னரும் இன்னும் விடுதலை செய்யவில்லை. ஆனால் இவர்கள் ஆட்சிக்கு வந்ததும் சிங்கள ராணுவ வீரரை விடுதலை செய்தனர். தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவில்லை. அரசியல்வாதிகளின் தேர்தல்கால வாக்குறுதிகள் நம்பமுடியாதவை என்பதற்கு இது நல்லதொரு சான்று மட்டுமல்ல தேர்தல்பாதை மூலம் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாது என்பதும் நிரூபணமாகியுள்ளது. தேர்தல் பாதை மூலம் அரசியல் கைதிகளையே விடுதலை செய்விக்க முடியவில்லை எனில் தமிழருக்கு தீர்வை பெற முடியும் என எப்படி நம்புவது?

விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகருகின்றது! கடந்த பத்து நாட்களாக டில்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்து அறிவித்துள்ளனர். இதன்படி இனி பாஜக அலுவலகங்களை முற்றுகை செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். அத்துடன் டோல்கேட்டுகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் செல்ல வழி செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளனர். அத்துடன் காப்ரேட் முதலாளிகளான அம்பானி மற்றும் அதானிகளின் வியாபார பொருட்களையும் பகிஸ்கரிக்கப்போவதாக அறிவித்துள்ளனர். ஆக மொத்தத்தில் பிரதமர் மோடியின் அடிவயிறிலே கைவைக்க ஆரம்பித்துவிட்டனர். இதற்கு மோடி அரசின் பொறுப்பற்ற தன்மையே காரணம் . விவசாயிகள் தொடர்ந்து போராடுகிறார்கள் விவசாயிகள் போராட்டம் அடுத்த கட்டத்pற்கு நகருகின்றது. அதுமட்டுமல்ல அது சரியான திசையிலே நகருகின்றது. எனவே அவர்கள் போராட்டம் வெல்லட்டும் அனைத்து மக்கள் ஆதரவோடு.

தட்றோம் தூக்கிறோம் (சினிமா)

•தட்றோம் தூக்கிறோம் (சினிமா) இப் படத்தின் கதாநாயகன் ஒரு ஈழ அகதியாக காட்டப்பட்டிருக்கிறார். ஈழ அகதிகள் குறித்து சினிமாவில் பேச முற்படுவது நல்லதொரு விடயமே. பாராட்டுக்குரியதே. ஆனால் இப்படத்தின் கதை ஒரு சாதாரண கதையாகும். இதில் எதற்காக கதாநாயகனை ஈழ அகதியாக காட்டுகிறார்கள் என்று புரியவில்லை. படத்தை பார்க்கும்போது ஈழ அகதிகள் பணத்திற்காக சட்டவிரோத கிரிமினல் வேலைகளை செய்வார்கள் என்ற ஒரு கருத்தை தருகிறது. இது ஒரு தவறான முன்னுதாரணம் ஆகும்.

அப்துல் ரவூப்!

• அப்துல் ரவூப்! என்றும் நினைவில் கொள்வோம்! 1995ம் ஆண்டு மார்கழி மாதம் 15ம் திகதி. ஈழத் தமிழர்களுக்காக அப்துல் ரவூப் தன்னையே எரித்துக்கொண்ட நாள். சந்திரிக்கா ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழர்கள் இடம்பெயர்ந்த துயரச் செய்தியைக் கேட்டு அப்துல் ரவூப் துடித்த நாள் அது. அது ஜெயா அம்மையாரின் இருண்ட ஆட்சிக் காலம். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போர் தடா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட காலம் அது. அப்துல் ரவூப் மரணம், • ஈழத் தமிழர்களுக்கு தமிழக மக்களின் ஆதரவு உண்டு என்பதை உலகிற்கு வெளிப்படுத்தியது • தடா சட்டத்தின் மூலம் தமிழக மக்களின் அதரவுக் குரலை நசுக்க முடியாது என்பதை காட்டியது. • ராஜீவ் மரணத்தால் தமிழக மக்களின் ஈழ ஆதரவு நிலை மாறவில்லை என்பதைக்காட்டியது. • எல்லாவற்றுக்கும் மேலாக ஈழத் தமிழர்களுக்காக மரணத்தை தழுவவும் தமிழக இளைஞர்கள் தயங்க மாட்டார்கள் என்பதை இந்திய அரசுக்கு காட்டியது. • தமக்காக குரல் கொடுக்க தாய்த் தமிழகம் இருக்கிறது என்பதை ஈழத் தமிழர்களுக்கு உணர்த்தியது. இத்தனை பயன் உள்ள செய்திகளையும் அப்துல் ரவூப் தன் மரணம் மூலம் உலகத்திற்கு எடுத்துக் கூறினான். அதுமட்டுமன்றி சாத்வீக வழிகளில் போராடுவதால் குறிப்பாக தங்களைத் தாங்களே எரித்துக்கொள்வதால் இலங்கை இந்திய அரசுகள் மனம் இரங்கப்போவதில்லை என்பதையும் அவனது மரணம் காட்டியுள்ளது. நாம் அப்துல் ரவூப்பையும் அவரது தியாகத்தையும் மறந்துவிட்டோம். அதனை நினைவு கூர தவறிவிட்டோம். அப்துல் ரவூப் இறந்தபின்பு ஜெயா அம்மையாரின் பொலிஸ் அவரது தாய் தந்தையரை மிரட்டியது. காதல் தோல்வியில் அப்துல் ரவூப் தற்கொலை செய்தான் என்று கூறும்படி வற்புறுத்தியது. அவ்வாறு கூறினால் பணம் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியது. ஆனால் அந்த ஏழைப் பெற்றோர் எதற்கும் அஞ்சவில்லை. ஆசை வார்த்தைகளுக்கு மசியவில்லை. ஈழத் தமிழர்களுக்காக தம் மகன் உயிர் விட்டதை எண்ணிப் பெருமைப்படுவதாகவே கூறினார்கள். இன்றும்கூட அவர்கள் அந்த கருத்தையே கொண்டிருக்கிறார்கள். ஆனால் நம்மவர்கள் அப்துல் ரவூப்பை மறந்துவிட்டார்கள். அவரின் தியாகத்தையும்கூட நினைவு கூர தவறி விட்டார்கள். ஓ! அப்துல் ரவூப் எங்களை மன்னித்துவிடு! குறிப்பு- 15.12.2020 யன்று அப்துல் ரவூப் அவர்களின் 25வது நினைவு தினம்.

குழந்தை- அப்பா! மிகவும் குளிராக இருக்கிறது

குழந்தை- அப்பா! மிகவும் குளிராக இருக்கிறது அப்பா- தெரியும். ஆனால் எரிப்பதற்கு நிலக்கரி இல்லையே? குழந்தை- ஏன் நிலக்கரி இல்லை? அப்பா- எனக்கு வேலை போய்விட்டது. அதனால் வாங்க முடியவில்லை. குழந்தை- ஏன் வேலை போய்விட்டது? அப்பா- நாங்கள் அதிகம் நிலக்கரியை உற்பத்தி செய்துவிட்டோம். அதனால் வேலையைவிட்டு நிறுத்திவிட்டார்கள். மிகையான உற்பத்திக் கொள்கையின் முழு அபத்தத்தை இந்த உரையாடல் அம்பலப்படுத்துகின்றது. இன்று இந்த உரையாடலை பலரும் தங்கள் சொந்த அனுபவங்களினூடாக உணர்ந்து கொள்கின்றனர். சமுதாயத்தில் உற்பத்தியாகும் பண்டங்கள் யாவற்றினதும் பெறுமதிக்கு சமமான ஒரு பெறுமதி சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் ஊதியமாகவோ அல்லது வருமானமாகவோ சமத்துவமான முறையில் பங்கிடப்படாதவரை உற்பத்திக்கும் நுகர்வுக்கும் இடையே முரண்பாடு பெருகவே செய்யும். இதுவே பொருளியல் நெருக்கடியின் காரணம். இது முதலாளித்துவ சமுதாயத்தில் தவிர்க்க முடியாதது. இந்த நெருக்கடிக்கு முதலாளித்துவத்தில் தீர்வு எதுவும் இல்லை. பெரும்பான்மையான மக்களிடம் வாங்கும் சக்தி இல்லாத காரணத்தால் ஏற்படும் இந்த நெருக்கடியை மக்களினுடைய வாங்கும் சக்தியை பெருக்குவதன் மூலம் தீர்க்க முடியாது. ஏனெனில் அது முதலாளிகளின் லாபத்தை பாதித்தே அதனை செய்ய முடியும். அதனை அவர்கள் விரும்பமாட்டார்கள். எனெனில் அது அவர்களை தற்கொலை செய்யக் கேட்பதாகும். எனவேதான் எவ்வளவு கடுமையாக முயன்றாலும் இப் பிரச்சனைக்க முதலாளியத்தால் தீர்வு காணமுடியாது சோசலிசத்தால் மட்டுமே தீர்வு காண முடியும் என மாக்ஸ் கூறினார். உலகில் முதலாளித்துவமா அல்லது சோசலிசமா வெற்றி பெறும் என பலர் வினா எழுப்பிக்கொண்டே இருக்கின்றனர். ஆனால் மாக்சிசத்தின் பின்னரான இந்த ஒன்றரை நூற்றாண்டு முதலாளித்துவத்திற்கு ஒரே மாற்று சோசலிசமே என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது.

கோழிகளால் தன் குஞ்சுகளை

•கோழிகளால் தன் குஞ்சுகளை எப்படி பாதுகாக்க முடிகிறது? தன் குஞ்சுகளுக்கு ஆபத்து என்றால் எதிரி எந்தளவு பெரியது என்றாலும் கோழி போராட தயங்குவதில்லை ஏனென்றால் போராடினால் மட்டுமே உயிர் தப்ப முடியும் என்பதைத் தவிர வேறு எதுவும் அதற்கு தெரியாது. அதுமட்டுமல்ல, •குஞ்சுகளைக் காப்பாற்ற போராடுவது பயங்கரவாதம் என்று யாரும் அதற்கு கூறுவதில்லை. •அகிம்சை வழியில் போராடினால் குஞ்சுகளைக் காப்பாற்றலாம் என யாரும் ஏமாற்றுவதில்லை. •இதெல்லாம் போன ஜென்மத்தில் செய்த பாவத்தின் விளைவு என்று யாரும் போதிப்பதில்லை . •எல்லாவற்றுக்கும் மேலாக தன்னை அழிப்பது போர்க்குற்றமா? அல்லது இனப்படுகொலையா? என்று ஆராய்ந்து கொண்டிருப்பதில்லை. கோழிகளால் தம் குஞ்சுகளை போராடி பாதுகாக்க முடிகிறது. ஆனால் தமிழனால் தன் இனத்தை பாதுகாக்க முடியவில்லை. தமிழனும் ஒருவேளை கோழியாக பிறந்திருந்தால் தன் இனத்தை காக்க போராடியிருப்பானோ?

•மோடி இந்திய மக்களின் பிரதமரா?

•மோடி இந்திய மக்களின் பிரதமரா? அல்லது முதலாளிகளின் பிரதமரா? இந்தியாவில் கடந்த இரண்டு வாரமாக உழைக்கும் மக்களான உழவர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். கடும் குளிர் காரணமாக இதுவரை நான்கு பேர் இறந்துவிட்டனர். முதலாளிகளையும் நடிகைகளையும் சந்திக்க நேரம் ஒதுக்கும் பிரதமர் மோடி விவசாயிகளை சந்திக்க நேரம் ஒதுக்க மறுக்கிறார். கடன்சுமை தாங்க முடியாமல் ஏழை மக்கள் குடும்பமாக தற்;கொலை செய்கிறார்கள். ஆனால் முதலாளிகளின் கோடிக்கணக்கான கடன்களை தள்ளுபடி செய்யும் பிரதமர் மோடி ஏழை மக்களின் கடன்களை தள்ளுபடி செய்ய மறுக்கிறார். பிரதமர் மோடி தன்னை முதலாளிகளின் பிரதமராகவே அடையாளப்படுத்துகிறார். எனவே முதலாளித்தவத்தின் மூலம் இந்திய பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியுமா என்ற கேள்வி எழுகிறது. சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்தபோது, ‘வரலாறு முடிவுக்கு வந்துவிட்டது’ என்று கூறி அதனைக் கொண்டாடியவர்கள், இப்போது முதலாளித்துவமே சிறந்த முறை என்று உயர்த்திப்பிடிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். முதலாளித்துவ உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வாழும் மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவது அதிகரித்து வருவதும், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயுள்ள ஏற்றத்தாழ்வுகளும் அதிகரித்து வருவதும், முதலாளித்துவ அமைப்பின் குரூர முகத்தை மிகத் தெளிவாகக் காட்டத் துவங்கியுள்ளன. நெருக்கடிகள் எற்படும்போது புதிய கண்டு பிடிப்புகள் மூலம் முதலாளித்துவம் தன்னை தக்கவைத்துக் கொள்ளும் என்றார்கள். ஆனால் நெருக்கடிகளை சமாளிக்க முடியாமல் மிகப் பெரிய வங்கிகளே ; திவாலாகிக் கொண்டிருக்கின்றன. இவ் முதலாளித்தவ நெருக்கடிக்கு மாக்சியமே சிறந்த தீர்வை முன்வைக்கிறது என்று உறுதியாக கூறமுடியாது என்பது உண்மைதான். ஆனால் உலகில் முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்வுகளில் மார்க்சியத்தை விட சிறந்த தீர்வு வேறு எதுவும் இல்லை என்பதும் உண்மையே. முதலாளித்துவத்தின் தொட்டில் என்று அழைக்கப்படும் வல்லரசு நாடான பிரிட்டனிலேயே முதலாளித்தவத்தின் நெருக்கடிகளை சமாளிக்க முடியாமல் அரசு தினறுகிறது. இனவாதம், மதவாதம் போன்றவற்றை முன்வைத்து மக்களின் கவனத்தை திசை திருப்ப உலகெங்கும் உள்ள பிற்போக்கு அரசுகள் முயலுகின்றன. ஆனால் இதன் மூலம் அதிகரித்துவரும் முதலாளித்துவ நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது. குறிப்பு – அம்பானியின் பேரக் குழந்தையை மோடி சென்று பார்வையிட்டதாக பதிவு செய்யப்பட்ட படம் தவறு என்று சுட்டிக்காட்டியதால் நீக்கிவிட்டேன். தவறுக்கு வருந்துகிறேன். மன்னிப்பு கோருகின்றேன்.

யோக்கியன் வருகிறார்

•யோக்கியன் வருகிறார் செம்பை எடுத்து உள்ளே வையுங்கள்! கடந்த பத்து வருடங்களாக மௌனமாக இருந்தவர் இப்போது ஏன் மீண்டும் பேச ஆரம்பித்திருக்கின்றார் என்று தெரியவில்லை. இவராக பேசுகின்றாரா அல்லது இவரை பேச வைத்து ஏதாவது பெற முடியுமா என சில தமிழ் அமைப்புகள் நம்புகின்றனவா என்றும் தெரியவில்லை. அல்லது வழக்கம்போல் இந்திய அரசுதான் இவற்றுக்கு பின்னால் நின்று விளையாடுகின்றதா என்றும் புரியவில்லை. ஆனால் மனிதவுரிமை நிகழ்வில் மகிந்த ராஜிபக்சா கலந்து கொள்வது எவ்வளவு கேவலமானதோ அதைவிடக் கேவலமானது இந்த எரிக் சொல்கைம் கலந்துகொள்வது. ஏனெனில் மகிந்த ராஜபக்சா எமது எதிரி. அவர் நேரிடையாகவே 40 ஆயிரம் மக்களை கொன்றார். ஆனால் எரிக் சொல்கைம் நல்லவார்போல் நடித்து நம்பவைத்து படுகொலைக்கு உதவி புரிந்தவர். Comments

இன்று சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் ஆகும்.

•இன்று சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் ஆகும். அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா போன்ற நாடுகளில் உள்ள வெள்ளை இனத்தவர்கள் எல்லாம் ஒரு கால கட்டத்தில் அந்த நாடுகளுக்கு புலம் பெயர்ந்தவர்களே. ஆனால் இன்று அவர்கள் தங்கள் நாட்டுக்குள் யாரும் புலம் பெயர அனுமதிக்க முடியாது என்று கூறுகிறார்கள். அதுவும் அமெரிக்கா மெச்சிக்கோ நாட்டு எல்லையில் மிகப் பெரிய மதில் சுவரை கட்டி வருகிறது. அதுபோல கைபர் கணவாய் ஊடாக இந்தியாவுக்குள் புலம் பெயர்ந்தவர்கள் தாய் தமிழகத்தில் குடியேற ஈழ அகதிகளுக்கு உரிமை இல்லை என்கிறார்கள். அதுவும் பாகிஸ்தான் பங்களாதேஸ் நாடுகளில் இருந்து வரும் இந்து அகதிகள் குடியேறலாமாம். ஆனால் ஈழ அகதி இந்துவாக இருந்தாலும் குடியேற முடியாதாம். புலம் பெயர்ந்தவர்களை மனிதாபிமானமாக நடத்த வேண்டும் என்று ஜ.நா கூறுகிறது. ஆனால் பசு மாட்டுக்கு இரக்கம் காட்டும் இந்திய அரசு ஈழ அகதிக்கு இரக்கம் காட்ட மறுக்கிறது. ஈழ அகதிகளுக்கு 1972 முதல் இந்திய குடியுரிமை வழங்கப்படுவதாக இந்திய அமைச்சர் ஒருவர் பொய் கூறியுள்ளார். அதை ஒரு ஆங்கிலப் பத்திரிகை ஆராயாமல் பிரசுரித்துள்ளது. சிறிமா- சாத்திரி ஒப்பந்தத்தின் கீழ் அழைத்து வரப்பட்ட இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கே இந்த குடியுரிமை வழங்கப்பட்டிருக்கிறது. அவர்கள் அகதிகள் இல்லை. அவர்கள் ஒப்பந்தந்தின் கீழ் அழைத்து வரப்பட்டவர்கள். ஆனால் 1983 க்கு பிறகு இந்தியாவுக்கு அகதியாக வந்த ஈழத் தமிழர்கள் எவருக்கும் இதுவரை குடியுரிமை வழங்கப்படவில்லை இந்த வரலாறு தெரியாமல் ஒரு அமைச்சர் பேசுகிறார். அதைக்கூட மறுத்து பேசுவதற்கு ஒரு தமிழ் தலைவர் நம்மிடம் இல்லை . ஈழத் தமிழர் இந்தியாவில் அகதியாக இருப்பது கொடுமை என்றால் அதைவிடக் கொடுமை அவர்கள் பற்றி இந்திய அரசுக்கு மட்டுமல்ல தமிழக அரசுக்கூட வரலாறு தெரியவில்லை. இதில் இன்னும் வேதனை என்னவென்றால் சில ஈழத் தமிழர்கள்கூட விபரம் தெரியாமல் “ஏன் இந்தியாவில் இருக்க வேண்டும். இலங்கைக்கு திரும்பி வரலாம்தானே?” என்று பொறுப்பில்லாமல் எழுதுகிறார்கள். சிறப்புமுகாமுக்கும் சாதாரண அகதி முகாமுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் கூட பலர் இருக்கின்றனர். அதனால்தான் பாராளுமன்றத்தில் குடியுரிமை மசோதாவை ஆதரித்துவிட்டு தமிழகத்தில் வந்து ஈழத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று அதிமுக. பாமக கட்சிகளால் இரட்டை வேடம் போட முடிகிறது. 30 வருடமாக இருந்தும் குடியுரிமை வழங்க மறுக்கிறார்கள். உயர்கல்வி கூட அகதி என்பதால் மறுக்கப்படுகிறது. சுதந்திரமாக நடமாட முடியாமல் கட்டுப்படுத்துகிறார்கள். இதனால் வேறு வழியின்றி வேறு ஏதாவது நாட்டுக்கு போக முயன்றால் பிடித்து சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாமில் அடைத்து வைக்கிறார்கள். சரி. இலங்கைக்கே திரும்பிச் செல்வோம் என்று பதிவு செய்தால் அனுமதி வழங்காமல் இழுத்தடிக்கிறார்கள். அதுமட்டுமல்ல தாயகம் திரும்புவோருக்கு கப்பல் சேவை கேட்டு பல வருடமாகிவிட்டது. ஒரு கப்பலை கூட ஏற்பாடு செய்ய மறுக்கிறார்கள். இந்நிலையில் களவாக நாடு திரும்ப முற்பட்டால் இந்தியாவிலேயே கைது செய்யப்படுகிறார்கள் அல்லது இலங்கையில் கைது செய்யப்படுகிறார்கள். இதுதான் இந்தியாவில் இருக்கும் ஈழ அகதிகளின் நிலை. இந்த நிலையில் இருக்கும் ஒரு அகதி என்ன செய்ய முடியும்? அதனால்தான் வேறு வழயின்றி “குடியுரிமை தாருங்கள் இல்லையேல் கடலில் தள்ளி கொன்று விடுங்கள்” என அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். எனவே தயவு செய்து இனியாவது அவர்களின் வலியை புரிந்து கருத்து பகிருங்கள் உறவுகளே.

ரசியப் புரட்சியின் வரலாற்று நாயகன் தோழர் ஸ்டாலின்

ரசியப் புரட்சியின் வரலாற்று நாயகன் தோழர் ஸ்டாலின் இன்று மகத்தான தோழர் ஸ்டாலின் பிறந்த தினமாகும். தோழர் ஸ்டாலின் அளவிற்கு உலக முதலாளித்துவத்தால் அவதூறு செய்யப்பட்ட தலைவர் வேறுயாரும் இல்லை. அதற்கு காரணம் அவரது ஆட்சி தோற்றுவித்தது வேதனைகள் அல்ல. மகத்தான சாதனைகள். மிகவும் பின்தங்கிய விவசாய நாடாக இருந்த ரசியாவை பதினைந்தே ஆண்டுகளில் தொழில் வல்லரசாக மாற்றியதும் பத்து சத வீதம் கூட கல்வியறிவு பெற்றிராத நாட்டை ஏறத்தாழ நூறு சதவீதம் கல்வியறிவு கொண்ட நாடாக மாற்றியதும் உலகப் பொருளாதாரமே நெருக்கடியில் சிக்கிய 1930 களில் ரசியா மட்டும் முன்னேறியதும் கிட்லரிடமிருந்து உலகையே காப்பாற்றியதும் ஸ்டாலின் தலைமையில் ரசிய மக்கள் சாதித்த வெற்றிகள். இவற்றுக்கு ஈடு சொல்லும் வெற்றிகள் இன்றுவரை உலகில் கிடையாது. பிறப்பால் உயர்ந்தவர்களும் மன்னர்களும் முதலாளிகளும் மட்டும்தான் நாடாள முடியும் என்று நம்பிக் கொண்டிருந்த உலகத்தில் உழைக்கும் வர்க்கம் உலகாள முடியும் என்று நிரூபித்துக் காட்டியது கம்யூனிசம். ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகன் உலகத் தலைவராக முடியும் என்று நிரூபித்துக் காட்டியது ரசிய கம்யுனிஸ்ட் கட்சி. தோழர் ஸ்டாலின் மறைவின் பின்னர் ஆட்சிக்கு வந்த குருசேவ் காட்டிய பாதையில் சென்ற ரசியா இன்று முதலாளித்துவ நாடாகிவிட்டது. மீண்டும் பிச்சைக்காரர்கள் பட்டினி வேலையின்மை விபச்சாரம் அனைத்தும் அங்கே தலைவிரித்தாடுவதை முதலாளித்துவப் பத்திரிகைகளே எழுதுகின்றன.(முதலாளித்துவ) ஜனநாயகம் மீண்டும் நிலைநாட்டப்பட்டதின் பயன் என்ன என்பது அப்பட்டமாக தெரிந்துள்ளது. ஸ்டாலின் மீதான குருசேவ் இன் தாக்குதல் வெறும் தனிநபர் விவகாரம் அல்ல. “ லெனின் ஸ்டாலின் காட்டிய வழியில் இனி உலக கம்யுனிஸ்டுகள் புரட்சி செய்யத் தேவையில்லை. தேர்தலில் நின்றால் போதும். அமெரிக்காவை எதிர்க்காமல் சமாதான சகவாழ்வு நடத்தலாம்” என்ற குருசேவின் துரோகக் கொள்கையையும் ஸ்டாலின் மீதான அவதூறையும் சீனத் தலைவர் மாசேதுங் இலங்கை கம்யுனிஸ்ட் தலைவர் சண்முகதாசன் உட்பட பல உலக கம்யுனிஸ்ட்கள் எதிர்த்தனர். இந்த உண்மையை வசதியாக மறைத்துவிட்டு உலக கம்யுனிஸ்ட் இயக்கமே ஸ்டாலினை தூற்றுவது போல் சிலர் சித்தரிக்க முயலுகின்றனர். ஆனால் உலகம் உள்ளவரை தோழர் ஸ்டாலின் புகழ் இருக்கும். அதை யாராலும் அழிக்க முடியாது. தோழர் ஸ்டாலின் குறித்த விமர்சனங்களுக்கு மாவோ தலைமையிலான சீனக் கம்யுனிஸ்ட் கட்சியின் பதில்களை கீழ் வரும் இணைப்பில் வாசிக்கலாம். http://tholarbalan.blogspot.co.uk/2014/12/blog-post_26.html

தோழர் ஸ்டாலின் மீதான அவதூறுகள் பற்றி

•தோழர் ஸ்டாலின் மீதான அவதூறுகள் பற்றி தோழர் ஸ்டாலின் மறைந்து சுமார் 60 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இன்றும்கூட அவர் மீது இந்த முதலாளித்துவம் அவதூறுகளை பரப்பி வருகின்றது. கிட்லரின் நண்பரான அமெரிக்கப் பத்திரிகை முதலாளி ரடால்ப் கெர்ஸ்ட் குடும்பத்திற்குச் சொந்தமான நியூயார்க் மார்னிங் போஸ்ட் 24 வார இதழ்கள் 12 வானொலி நிலையங்கள் ஆகிய அனைத்தின் மூலமும் 1930 முதலே தொடங்கி விட்டது இந்த ஸ்டாலின் எதிர்ப்பு பிரச்சாரம். ஹிட்லரின் வலதுகரமான கோயரிங்கின் கட்டுரைகளைப் பிரசுரிக்குமளவிற்கு வெளிப்படையான நாஜி ஆதரவாளன் கெர்ஸ்ட். கனடா நாட்டுப் பத்திரிகையாளர் டக்ளஸ் டோட்டில் எழுதிய நூல் இவையனைத்தையும் அம்பலமாக்கிறது. இன்னொரு ஸடாலின் எதிப்பாளரான ராபர்ட் கான்குவெஸ்ட் பிரிட்டிஸ் உளவு நிறுவனமான எம்-15 இன் கையாள் என்பதையும் நிரூபிக்கின்றார் டோட்டில். ஸ்டாலின் காலத்தில் லட்சக்கணக்கானோர் படுகொலை பட்டினிச்சாவு என்பதெல்லாம் கான்குவெஸ்ட் உருவாக்கிய புனைகதைகள். 1943 இல் கிட்லர் ஆக்கிரரமிப்புக்கு எதிராக ரசியா போராடிக் கொண்டிருந்தபோது “விலங்குப் பண்ணை” என்ற நாவல் மூலம் கம்யூனிசத்தை அவதூறு செய்த ஜார்ஜ் ஆர்வெல், கவிஞர் ஸ்டீபன் ஸ்பென்டர், “பகலில் இருள”; என்ற ஸ்டாலின் எதிர்ப்பு நூல் எழுதிய கீஸ்லர், பிரபல அறிஞர் ரஸ்ஸல் ஆகிய அனைவரும் கம்யு~னிச எதிர்ப்புப் பிரச்சாரத்திற்காக பிரிட்டிஸ் உளவு நிறுவனத்திடமிருந்து காசு வாங்கியிருக்கிறார்கள். இந்த உண்மை 1996 இல் பிரிட்டனில் வெளியாகி சந்தி சிரித்தது. வெளிநாட்டவர்கள் இருக்கட்டும். ரசிய எழுத்தாளரும் நோபல் பரிசு பெற்றவருமான சோல் ஜெனிட்சின்னே ஸ்டாலின் ஆட்சியைப் பற்றி சொல்லவில்லையா என்று வாதிடலாம். அவருக்கு நோபல் பரிசு கிடைக்கக் காரணமே ஸ்டாலினையும் கம்யூனிசத்தையும் அவதூறு செய்து எழுதியதுதான். வியட்நாமில் இருந்து அமெரிக்கா விரட்டப்பட்ட பின்னரும் “மறுபடியும் வியட்நாம் மீது அமெரிக்கா போர் தொடுக்க வேண்டும்” என்று அறை கூவல் விட்டவர் இந்த சோல்ஜெனிட்சின். அவருடைய யோக்கியதைக்கு இதற்கு மேல் சான்று தேவையா? பழைய ரசிய கம்யுனிஸ்ட் அரசின் ஆவணக் காப்பகங்களைத் திறந்தால் பல திகிலூட்டும் உண்மைகள் வெளிவரும் என அமெரிக்க முதலாளித்துவத்தின் கூலி எழுத்தாளர்கள் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்தார்கள். ஜெம்ஸ்கோல் டௌஜின் எழவன்ஜீக் என்ற ரசிய வரலாற்று ஆசிரியர்கள் ரசியக் கம்யுனிஸ்ட் கட்சியின் ஆவணக் காப்பக ஆதாரங்களை ஆராய்ந்து 1990 முதல் ஆய்வுக் கட்டுரைகள் பல எழுதினார்கள். ஸ்டாலின் ஆட்சிக் காலம் பற்றி கூறப்பட்டவையலெ;லாம் புளுகு மூட்டைகள் என்பதையே இவை நிரூபித்தன. ஆனால் இவை முதலாளித்துவ நாட்டுப் பத்திரிகைகளால் இருட்டடிப்புச் செய்யப்பட்டன. மிச்சமிருப்பவை அமெரிக்கப் பொய்கள் மட்டும்தான். இதைப் புரிந்து கொள்ள அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை. இன்று ஈராக் நாட்டில் நடப்பதைப் பார்த்தால் போதும். பேரழிவு ஆயுதங்களை சதாம் வைத்திருப்பதாகச் சொல்லி பல லட்சம் ஈராக் மக்களைக் கொன்று குவித்தது அமெரிக்கா. ஆனால் இப்போது பேரழிவு ஆயுதங்கள் எதுவும் இல்லை என்பதை அமெரிக்க அரசே ஒப்புக்கொண்டுள்ளது. ஒரு சதாமை வீழ்த்தவே இவ்வளவு புளுகு! தன்னுடைய முதலாளித்துவ சாம்ராஜ்ஜியத்தையே ஆட்டம் காணச்செய்த ஸ்டாலினுக்கும் கம்யுனிசத்திற்கும் எதிராக எவ்வளவு புளுகியிருப்பார்கள் என்பதை சிறிது கற்பனை செய்து பாருங்கள்? லெனினுடைய மறைவுக்குப் பின் உலகின் முதல் சோசலிச நாட்டை உருவாக்கிக் காட்டிய தோழர் ஸ்டாலின் பணி மகத்தானது. ஸ்டாலின் தலைமையிலான ரசியாவிற்கு நேரில் சென்று வந்த தாகூர் இவ்வாறு பாராட்டியிருக்கின்றார். கலைவாணர் என்.எஸ்.கே இரும்புத்திரை நாடு என்று ரசியாவை சித்தரித்த முதலாளிகளின் பொய்ப்பிரச்சாரத்தை கேலி செய்து கட்டுரை எழுதியிருக்கின்றார். ரசியாவின் சிறைகள் உள்ளிட்ட எல்லா இடங்களுக்கும் சுதந்திரமாகச் சென்று பார்த்த தந்தை பெரியார் “இதுதான் உண்மையான மனிதர்கள் வாழும் நாடு” என்று பாராட்டியிருக்கின்றார். இத்தனைக்கு பிறகும் தோழர் ஸ்டாலின் மீது அவதூறு பொழிபவர்களை என்னவென்று அழைப்பது? ஆயிரம் கைகளால் ஆதவன் வருகையை தடுக்க முடியுமா? அவதூறுகள் மூலம் தோழர் ஸ்டாலின் புகழை அழிக்க முடியுமா? முடியாது. முடியாது. ஒருபோதும் முடியாது.

ட்ரொஸ்கியவாதம் பற்றி- தோழர் சண்முகதாசன் (பகுதி-1)

ட்ரொஸ்கியவாதம் பற்றி- தோழர் சண்முகதாசன் (பகுதி-1) ஒரு தத்துவம் என்ற முறையில் ட்ரொஸ்கியவாதம் ஒரு செத்த குதிரைக்கு ஒப்பானது. ஆனால் அது இன்னமும் சில இடங்களில் முக்கி முனகிக் கொண்டு இருக்கின்றது எனலாம். இந்த முக்கல் முனகல்களை ஏதோ பெரிய முழக்கங்களாகக் காட்ட சிலட்ரொக்சியவாதிகள் முனைகின்றனர். ஆனால் அவர்கள் எவ்வளவுதான் தலை கீழாக நின்று முயற்சி செய்தாலும் அவர்களின் கனவு ஒருபோதும் நிறைவேறப் போவதில்லை. ட்ரொஸ்கியவாதத்தின் இன்றைய வக்கீல்கள் இதனைப் பற்றி அவ்வளவாக பேச விரும்பாவிட்டாலும் தனியொரு நாட்டில் மட்டும் சோசலிசத்தைக் கட்டியமைக்க முடியுமா என்பதே ட்ரொஸ்கியவாதிகளுக்கும் கம்யூனிசவாதிகளுக்கும் இடையிலான பிரதான பிரச்சனையாக இருந்தது. இன்று சோஷலிசத்தை ஒரே நாட்டில் கட்டியமைக்க முடியுமா என்பது போன்ற கேள்விகள் முற்றிலும் பொழுது போக்கற்ற அறிவு ஜீவிகளின் விவாதத் தலைப்புகளில் இடம் பிடிப்பவை. அதனைச் செய்ய முடியும் என்பதை லெனினும் ஸ்டாலினும் உலகிற்கு நிரூபித்தார்கள். ஜரோப்பாவின் பிரதான முன்னேறிய நாடுகளில் முதலில் புரட்சிகள் நடைபெறும் என லெனின் எதிர்பார்த்தது உண்மைதான். லெனின் ஒரு சர்வதேசியவாதி. எனவே அவர் உண்மையில் இதற்காக ஊக்கத்துடன் உழைத்தார். ஆனால் புரட்சிவாதி விரும்பும் பாதையிலேயே வரலாறு எப்பொழுதும் செல்வதில்லை. புரட்சி ஏற்பட்ட கங்கேரி, ஜெர்மனி போன்ற நாடுகளில் அது தோல்வி கண்டது. இந் நிலையில் தாம் வெற்றிக்கு இட்டுச் சென்ற ரஸ்சியப் புரட்சியை ரஸ்சியப் புரட்சியாளர்கள் என்ன செய்வது? ஸ்டாலின் வினவியவாறு “அதனை உலகப் புரட்சிக்கு காத்திருந்து கொண்டு அதன் சொந்த முரண்பாடுகளில் சிக்கி வேர்வரை அழுக விடுவதா?” லெனின் இத்தகைய ஒரு வளர்ச்சியை எதிர்பார்த்தார். அவர் 1916ல் பாட்டாளிவர்க்கப் புரட்சியின் யுத்தத்திட்டம் என்பதில் “முதலாளித்துவதத்தின் வளர்ச்சி பல்வேறு நாடுகளில் மிகுதியும் சமாந்திரமற்ற முறையில் நடைபெற்றது. பண்ட உற்பத்தி அமைப்பின் கீழ் வேறுவிதமாக அது நடைபெறமுடியாது. இதிலிருந்து சோசலிசம் சகல நாடுகளிலும் ஏக காலத்தில் வெற்றி பெறமுடியாது என்பது புலனாகிறது. அது முதலில் ஒரு நாட்டில் அல்லது சில நாடுகளில் வெற்றி பெறும்” என்று கூறியுள்ளார் இந்த லெனிசக் கருத்துக்களின் அடிப்படையில் முதலில் லெனினாலும் பின்னர் அவருடைய வாரிசான ஸ்டாலினாலும் தலைமை தாங்கப்பட்ட போல்ஷ்விக் கட்சி புரட்சி வெற்றி பெற்ற ஒரு நாட்டில் சோசலிச உற்பத்தியை ஒழுங்கு படுத்தியது. வரலாறு அது சரி என நிரூபித்துவிட்டது. ஆனால் ட்ரொஸ்கி வேறுவிதமாக சிந்தித்தார். பின்தங்கிய ரஸ்சியாவில் பாட்டாளிவர்க்கப் புரட்சி தப்பிப் பிழைப்பதை அவர் முன்னேறிய நாடுகளில் தொழிலாளர்களின் புரட்சிப் போராட்டத்தின் வெற்றியுடன் இணைத்தார். அவர் “உலகப் பாட்டாளிவர்க்கப் புரட்சி என்ற அரங்கில்தான் ரஸ்சியப் புரட்சியைக் காப்பாற்ற முடியும்” என்று ஆடம்பரமாகப் பிரகடனம் செய்தார். விவசாயிகளின் புரட்சிகர உள்ளார்ந்த சக்தியின் மீது நம்பிக்கை வைக்காததே ட்ரொஸ்கியின் இந்த தவறான தர்க்கத்திற்கு அடிப்படைக் காரணம் ஆகும். புரட்சி சோசலிசக் கட்டத்தை நோக்கி நகரும் போது பாட்டாளி வர்க்கத்திற்கு பூர்ஷ்வா வர்க்கத்துடன் மட்டுமல்ல விவசாயிகளுடனும் மோதல் ஏற்படும் என அவர் கருதினார். அதனால் அவர் இவ்வாறு கூறினார் “ ….பாட்டாளி வர்க்க முன்னனிப்படை அதன் வெற்றியை அடையப் பெறுவதற்காக அதன் ஆட்சியின் அதி ஆரம்பக் கட்டத்திலேயே நிலப்பிரபுத்துவ சொத்தைப் பறிப்பது மட்டுமல்ல முதலாளித்துவ சொத்தையும் பறிக்க நேரிடும். இதில் பாட்டாளி வர்க்கம் புரட்சிப் போராட்டத்தின் முதல் கட்டங்களில் தனக்கு ஆதரவளித்த பூர்ஷ்வா வர்க்கத்துடன் மட்டுமல்ல தன்னை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு காரணமாயிருந்த பரந்துபட்ட விவசாயிகளுடனும் பகைமையான மோதலில் ஈடுபட நேரிடும்”. லெனினுடைய கருத்துக்கள் ட்ரொஸ்கியின் கருத்துக்களுக்கு நேர் எதிர்மாறானவை. ரஸ்சிய மக்கள் தொகையில் பெரும்பான்மையினரான விவசாயிகளுக்கு புரட்சியின் இரண்டு கட்டங்களிலும் புரட்சிப் பாத்திரம் உண்டு என்று லெனின் வாதிட்டார். இந்த விவசாய மக்களை தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் ஒழுங்கு படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.இந்த விசேட நேச அணி பற்றி லெனின் பின்வருமாறு வர்ணித்தார் “பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என்பது உழைப்பாளிகளின் முன்னனிப் படையான பாட்டாளி வர்க்கத்திற்கும் உழைப்பாளிகளின் பாட்டாளிகள் அல்லாத எண்ணற்ற பிரிவினருக்கும் (குட்டி பூர்சுவா சிறிய கைவினைஞைர்கள் விவசாயிகள் அறிவுஜீவிகள் போன்றன)அல்லது பெரும்பாலான பிரிவினருக்கும் இடையில் உள்ள விசேட வடிவ வர்க்கக் கூட்டணியாகும்”. ஆகவே விவசாயிகளுடனான கூட்டணியில் நம்பிக்கையற்ற ட்ரொஸ்கியால் ரஸ்சியப் புரட்சிக்கு எந்த எதிர்காலத்தையும் காண முடியவில்லை. அவருடைய கருத்தில் உலகப் புரட்சிதான் அதைக் காப்பாற்ற முடியும்.ஆனால் அது நடைபெறவில்லை. ஒரு நாட்டில் சோசலிசத்தைக் கட்டியமைக்க முடியாது என அவர் கூறிக்கொண்டே இருந்தார். ஆனால் ஸ்டாலின் தலைமையிலான போல்ஷ்விக்கள் ஒரு நாட்டில் சோசலிசத்தைக் கட்டியமைக்க முடியும் என்பதை நிரூபித்ததுடன் சோவியத்யூனியனுக்கு எதிரான பாசிச ஆக்கிரமிப்பின் போது கட்டவிழ்த்து விடப்பட்ட வரலாறு காணாத கொடிய தாக்குதலுக்கு எதிராகவும் அதனைப் பாதுகாத்தார்கள். வரலாறு இவ்வாறு இந்தப் பிணக்குகள் பற்றிய தீர்ப்பை வழங்கி முன்னேறிச் சென்றது.

தோழர் ஸ்டாலின் ட்ரொஸ்கியின் இடத்தை அபகரித்தாரா? – தோழர் சண் (பகுதி-2)

• தோழர் ஸ்டாலின் ட்ரொஸ்கியின் இடத்தை அபகரித்தாரா? – தோழர் சண் (பகுதி-2) லெனினின் வாரிசு என்ற பிரச்சனையிலும் ஸ்டாலின் ட்ரொஸ்கியின் இடத்தை அபகரித்தார் என்ற ட்ரொஸ்கியவாதிகளின் பிரச்சாரத்தில் எள்ளவும் உண்மையில்லை என்பதை நாம் தெளிவாக காணலாம். வரலாற்றின்படி ட்ரொஸ்கி புரட்சிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்தான் போல்ஷ்விக் கட்சியில் சேர்ந்து கொண்டார். ஆனால் ஸ்டாலினோ 1912ல் பிராக் மாநாட்டில் மென்ஷிவிக்குகளிடமிருந்து பிரிந்த போது போல்ஷ்விக் கட்சியில் லெனினுடன் இணை ஸ்தாபகராக இருந்தார். இந்த மாநாட்டில் ஸ்டாலின் மத்திய கமிட்டிக்கு தெரிவு செய்யப்பட்டார். மேலும் ரஷ்யாவுக்குள்ளே புரட்சிகர வேலைக்கு வழிகாட்டுமுகமாக ஸ்டாலினை தலைவராகக் கொண்ட மத்தியக் கமிட்டி ரஷ்யசபை என்ற நடைமுறையான கேந்திரம் அமைக்கப்பட்டது. இது ஸ்டாலினுடைய தலைசிறந்த ஸ்தாபன திறமைகளுக்குக் கிடைத்த அங்கீகாரமாகும். லெனின் பெரிதும் வெளிநாடுகளில் இருந்து இயக்கத்திற்கு தலைமை தாங்கிய போது ரஷ்யாவுக்குள்ளே தலைமறைவுக் கட்சியை கட்டியமைத்தது ஸ்டாலின்தான். அப்போது 1912ல் ட்ரொஸ்கி “ஆகஸ்ட் குழு” என்பதை மும்முரமாக ஒழுங்குபடுத்தினார். அவர் இதில் லெனினுக்கும் போல்ஷ்விக் கட்சிக்கும் எதிரான குழுக்களையும் போக்குகளையும் ஒன்றினைத்தார். அப்பொழுதுதான் லெனின் அவரை “யூதாஸ் ட்ரொஸ்;கி” என்று அழைத்தார். 1917 மே 7ம் திகதி முதல் 12ம் திகதி வரை நடைபெற்ற மாநாட்டில் கட்சியின் மத்திய கமிட்டிக்கு ஸ்டாலின் மீண்டும் தெரிவு செய்யப்பட்டார். இந்த மாநாட்டில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் குழுவுக்கும் அவர் தெரிவு செய்யப்பட்டார். அத்துடன் மத்திய கமிட்டியின் மூன்று செயலாளர்களில் ஒருவராகவும் அவர் தெரிவு செய்யப்பட்டார். கட்சி ஏடான “பிராவ்டா”வின் பத்திரிகை ஆசிரியர்களில் ஒருவராகவும் அவர் நியமிக்கப்பட்டார். 1917ம் ஆண்டு ஜீலை 26ம் திகதி முதல் ஆகஸ்ட் 3ம் திகதி வரை நடைபெற்ற போல்ஷ்விக் கட்சியின் ஆறாவது காங்கிரசில்தான் ட்ரொஸ்கியை ஒரு உறுப்பினராக சேர்த்துக் கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.அப்பொழுது லெனின் பின்லாந்தில் இருந்து மாநாட்டிற்கு வழிகாட்டினார். ஸ்டாலின்தான் மாநாட்டிற்கு தலைமை தாங்கி பிரதான அறிக்கையை சமர்ப்பித்தார். இதிலிருந்து அக்டோபர் புரட்சியின் போது லெனினுக்கு அடுத்தபடியான பாத்திரத்தை வகித்தவர் ஸ்டாலின் என்பது தெளிவாகிறது. இதனாற்தான் 1922ல் துப்பாக்கிக் குண்டின் காயம் காரணமாக லெனின் செயல்பட முடியாது இருந்த நிலைமையில் கட்சியின் பொதுச் செயலாளராக லெனின் வாழ்ந்த காலத்திலேயே ஸ்டாலின் தெரிவு செய்யப்பட்டார். இவற்றை மறுக்க முடியாத ட்ரொஸ்க்கியவாதிகள் இறுதியில் பற்றிக்கொள்ளும் விடயம் லெனின் மரணசாசனம். இது உண்மையில் எதிர்வர இருந்த காங்கிரசுக்கு லெனின் சொல்ல எழுதப்பட்ட கடிதமாகும். இந்த காங்கிரஸ் லெனின் மறைவின் பின் 1924ம் ஆண்டு மே 24ம் திகதி முதல் 31ம் திகதி வரை நடைபெற்றது.இந்தக் கடிதத்தை காங்கிரசில் வாசிக்க வேண்டும் என்பதே லெனினுடைய வேண்டுகோள்.அதன்படி ஸ்டாலினே இக் கடிதத்தை வாசித்தார். இக் கடிதத்தில் ஸ்டாலினும் விமர்சிக்கப்பட்டிருந்தார். ட்ரொஸ்கியும் விமர்சிக்கப்பட்டிருந்தார். ஆனால் ட்ரொஸ்க்கியவாதிகள் கூறுவது போல் பொதுச்செயலாளர் பதவிக்கு ட்ரொஸ்கியை நியமிக்கவேண்டும் என்று அதில் கூறப்படவில்லை. இந்தக் கடிதம் வாசிக்கக் கேட்ட பின்னர்தான் காங்கிரஸ் ஸ்டாலினை பொதுச் செயலாளராக தெரிவு செய்தது. ஒரேயொரு வாக்கு ட்ரொஸ்கியின் வாக்குதான் எதிராக விழுந்தது. அவர் தனக்குத்தானே வாக்களித்தார். ஸ்டாலின் ஒரு சர்வாதிகாரி எனவும் அவர் ட்ரொஸ்கிக்கு போதிய விவாத வாய்ப்பு அளிக்கவில்லை எனவும் ட்ரொஸ்க்கியவாதிகள் சேறு பூசுகின்றனர். இது முற்றிலும் பொய். சர்வதேச கம்யுனிச இயக்கத்தின் வரலாற்றில் ஸ்டாலினைப் போல் இவ்வளவு அதிகாரம் படைத்திருந்த ஒரு தலைவர் தனது எதிரிக்கு ஸ்டாலின் ட்ரொஸ்க்கிக்கு காட்டியது போன்ற பொறுமையைக் காட்டியது கிடையாது. விவாதங்கள் போல்ஷ்விக் கட்சிக்கு உள்ளேயும் கம்யுனிச அகிலத்திற்கு உள்ளேயும் பல்லாண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வந்தது.மீண்டும் மீண்டும் ட்ரொஸ்க்கி தோற்கடிக்கப்பட்டார். ஆனால் அவர் தோல்வியை ஏற்றுக் கொள்ளவில்லை. 1927 அக்டோபரில் நடைபெற்ற கட்சியின் 15வது மாநாட்டிற்கு முன்னர் ஒவ்வொரு உறுப்பினரினதும் நிலைப்பாட்டை அறிவதற்காக வாக்கெடுப்பு ஒன்று நடைபெற்றது.724000 உறுப்பினர்கள் ஸ்டாலின் தலைமையிலான மத்திய கமிட்டியின் கொள்கைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.4000 பேர் ஆதாவது ஒருசத வீதத்திற்கும் குறைவானோர் ட்ரொஸ்க்கிய குழுவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இது ட்ரொஸ்க்கிக்கு கிடைத்த இறுதி அடியாகும். ட்ரொஸ்க்கிக்கு வேண்டியது ஜனநாயக விவாதமும் தீர்ப்பும் என்றால் அது போதிய அளவு கிடைத்தது. ஆனால் அவர் திருந்தவில்லை. தனது குழுவாத நடவடிக்கைகளை கைவிடவில்லை. கட்சியின் பொறுமை சோதிக்கப்பட்டது.1927 நவம்பர் 14 திகதி மத்திய கமிட்டி ட்ரொஸ்க்கியை வெளியேற்றியது. சோவியத் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனையில் அவர் சோவியத் யூனியனின் ஓதுக்குப்புறக் குடியரசு ஒன்றிற்கு நாடு கடத்ப்பட்டார். ஆனால் அவர் இந்த நிபந்தனையை மீறியபடியால் ஒருவருட முடிவில் சோவியத் யூனியனில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

ட்ரொக்சியின் மரணமும் ட்ரொக்சியத்தின் முடிவும் - தோழர் சண் (பகுதி-3)

ட்ரொக்சியின் மரணமும் ட்ரொக்சியத்தின் முடிவும் - தோழர் சண் (பகுதி-3) சோவியத்யூனியனில் இருந்து வெளியேற்றப்பட்ட பின் ட்ரொஸ்க்கியின் நடவடிக்கைகள் பற்றியோ சர்வதேச சோவியத் எதிர்ப்பு நடவடிக்கையின் கேந்திரமாக அவர் எப்படி மாறினார் என்பது பற்றியோ இந்தக் கேந்திரம் அவரது ஆடம்பரங்களுக்கு எவ்வாறு பெரும் தொகை பணத்தை செலவழித்தது என்பது பற்றியோ அவர் இறுதியில் பெரிதும் அரண் செய்யப்பட்ட கோட்டையில் குடியேறினார் என்பது பற்றியோ இறுதியில் அவருடைய பெண் காரியதரிசியின் காதலனால் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது பற்றியோ இங்கு விரிவாக கூறவேண்டியதில்லை .அவை அனைவரும் அறிந்த வெட்ட வெளிச்சமான விடயங்கள். இன்று சோசலிசத்தை ஒரு நாட்டில் கட்டியமைக்க முடியுமா என்பது போன்ற கேள்விகள் வேறு பொழுதுபோக்கற்ற அறிவுஜீவிகள்தான் அவைபற்றி விவாதிப்பார்கள். ஆதனைச் செய்ய முடியும் என்பதை லெனினும் ஸ்டாலினும் உலகிற்கு நிருபித்துவிட்டனர். ஆனால் 1920ம் ஆண்டுகளில் ரஸ்சியாவுக்கு உள்ளேயும் வெளியேயும் மக்களுக்கு தெளிவு இருக்கவில்லை. இதனைச் செய்ய முடியுமா என்று பலர் சந்தேகித்தனர். இவ்வாறுதான் அப்பொழுது ட்ரொக்சியவாதத்திற்கு ஒரு சமுதாய அடிப்படை இருந்தது. ஆனால் இன்று ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்டியமைக்க முடியாது என்ற ட்ரொக்சியின் தத்துவம் செத்த தத்துவம். ட்ரொஸ்க்கியவாதம் என்பது தொழிலாளி வர்க்க இயக்கத்திற்கு உள்ளேயிருந்த தவறான தத்துவம் என்ற நிலைமையில் இருந்து பகிரங்கமான எதிர்ப்புரட்சித் தத்துவமாக மாறியுள்ளது. ட்ரொக்சிய வாதம் என்னும் எதிர்ப் புரட்சிகரத் தத்துவம் உயர் மத்தியதர வர்க்க அறிவுஜீவிகளுக்கு கவர்ச்சிகரமானது. ஏனென்றால் அது ஏகாதிபத்திய எதிர்ப்பு கொண்டதாக பாசாங்கு செய்கின்றது. அதேவேளையில் அதன் பிரதான பங்கும் செயல்பாடும் புரட்சிக்கு எதிரானது. தொழிலாளி வர்க்கத்திற்கு எதிரானது. சர்வதேசிய முதலாளித்துவப் பத்திரிகைகள் ட்ரொக்சியைப் பாராட்டும் அதேவேளையில் ஸ்டாலினை இன்றுவரை திட்டுவதன் அடிப்படை நோக்கத்தை ஒரு உண்மையான புரட்சியாளனால் இலகுவாக விளங்கிக் கொள்ள முடியும்.

தோழர் வள்ளுவன் நினைவை போற்றுவோம்!

Sunday, November 29, 2020

தோழர் தமிழரசன் தாயாருக்கு அஞ்சலிகள்!

•தோழர் தமிழரசன் தாயாருக்கு அஞ்சலிகள்! 1987.09.01 யன்று எந்த தாயும் தன் வாழ்நாளில் கேட்க விரும்பாத செய்தியை அந்த தாய் கேட்டார். தன் மகன் இறந்து விட்டான் என்ற செய்தி எந்த தாயும் கேட்க விரும்பாத செய்தி மட்டுமல்ல, அது தாங்க முடியாத கொடுமையும் கூட. மகன் இறந்து விட்டான் என்றாலே பொதுவாக எந்த தாயும் தாங்கமாட்டார். அதுவும் தனது ஒரேயொரு மகன் வங்கி கொள்ளையன் என்று அடித்துக் கொல்லப்பட்டான் என்றால் எந்த தாயால் தாங்க முடியும்? ஆம். அந்த கொடும் துயரை 33 வருடங்களாக சுமந்து கொண்டிருந்தவர் வேறு யாருமல்ல. தோழர் தமிழரசனின் தாயாரே. தான் வறுமையில் வாடிய போதும் தன் மகன் எதிர்காலத்தில் வசதியாக வாழ வேண்டும் என்று கோவை பொறியியல் கல்லூரியில் விட்டுப் படிப்பித்தவர் இந்த தாய். தான் ஆசையாக பெற்று வளர்த்த மகன் போராட்ட வாழ்வை தேர்ந்தெடுத்தபோதும் அதையிட்டு அவர் ஏமாற்றம் அடையவில்லை. மகனை தேடி வரும் பொலிசார் அவர் கிடைக்கவில்லை என்றவுடன் ஏமாற்றத்தில் தன்னை சித்திரவதை செய்தபோதும் அவர் மகன் மீது கோபம் கொண்டதில்லை. நீண்ட சிறைவாசம் அனுபவித்துவிட்டு வந்த மகன் மீண்டும் போராடச் சென்றபோதுகூட அவர் “போராட்டத்தை விட்டுவிடு” என்று மகனிடம் கூறியதில்லை. அத்தகைய தாயாரிடம் வந்து “உங்க மகன் தமிழரசன் இறந்துவிட்டான்” என்று கூறியபோது அவர் எந்தளவு வேதனையை அனுபவித்திருப்பார்? இவரை ஒருமுறையாவது நேரில் பார்த்துவிட வேண்டும் என விரும்பினேன். முடியவில்லை. ஆனாலும் அவர் மகன் தமிழரசன் குறித்து நான் எழுதிய நூலையாவது அவரிடம் சேர்ப்பிக்க முடிந்ததையிட்டு ஆறுதல் அடைகிறேன். அந்த தாயாருக்கு ஈழத் தமிழர்கள் சார்பில் எனது ஆழ்ந்த அஞ்சலிகள்.

தமிழா!

தமிழா! கட்சத்தீவு உன்னுடையது ஆனால் நீ போக முடியாது வங்கக்கடல் உன்னுடையது ஆனால் நீ மீன் பிடிக்க முடியாது காவிரி ஆறு உன்னுடையது ஆனால் உனக்கு தண்ணீர் கிடையாது முல்லைப்பெரியாறு உன்னுடையது ஆனால் உன்னால் நீரை தேக்க முடியாது நெய்வேலி உன்னுடையது ஆனால் 75% மின்சாரம் வெளி மாநிலத்திற்கு கோவில்கள் உன்னுடையது ,ஆனால் தமிழில் வழிபட முடியாது நீதிமன்றத்தில் வழக்கு உன்னுடையது ,ஆனால் தமிழில் வழக்காட முடியாது அரசுப் பள்ளிகள் உன்னுடையது ,ஆனால் தமிழில் உயர்கல்வி கற்க முடியாது தமிழ்நாடு உன்னுடையது ,ஆனால் தமிழா! நீ அதை ஆள முடியாது! இன்னும் எத்தனை நாளைக்கு இதை உணராமல் அடிமையாகவே கிடக்கப் போகிறாய் தமிழா!

ஜேக்கப் மேரியம்மாவுக்கு அஞ்சலிகள்!

ஜேக்கப் மேரியம்மாவுக்கு அஞ்சலிகள்! புலிகள் இயக்க உறுப்பினர் வரதன் அவர்கள் மலையகத்தில் சயனைட் அருந்தி இறந்தபோது அவருக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் ஜேக்கப் மேரியம்மா கைது செய்யப்பட்டார். மேரியம்மா கைது செய்யப்பட்டபோது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரம் அவர்களும் கைது செய்யப்பட்டிருந்தார். கடும் சித்திரவதை மற்றும் நீண்டகால சிறைவாசத்தின் பின் மேரியம்மா விடுதலை செய்யப்பட்டார். கடந்த சில நாட்களாக சுகவீனமுற்றிருந்த மேரியம்மா அவர்கள் நேற்றைய தினம் மரணமடைந்துள்ளார். அவருக்கு எமது அஞ்சலிகள். இந்த தாயின் தியாகம் தமிழர்களின் போராட்ட வரலாற்றில் மலையக தமிழ்மக்களின் பங்களிப்பை காட்டும் ஒரு உதாரணம் ஆகும். இனியாவது முரளியின் பட பிரச்சனையின் போது கருத்து தெரிவித்த தமிழக ஊடகவியலாளர் போன்றவர்கள் இந்த உண்மையை அறியட்டும்.

தமிழர் தமக்கு ஒரு கொடியை விரும்புவது

•தமிழர் தமக்கு ஒரு கொடியை விரும்புவது எப்படி தேசவிரோத குற்றமாகும்? ஒருபுறம் தமிழர் நாள் விழாவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் முதல்வர் மறுபுறம் விழா கொண்டாடியவர்களை கைது செய்கிறது. இதுதான் தமிழக அரசின் “டயர்நக்கி” முதல்வரின் தமிழ் இனப் பற்று. கன்னடம், ஆந்திரா, காஸ்மீர் யாவும் தமக்கென ஒரு கொடியை வைத்திருக்க அனுமதிக்கும் இந்தியஅரசு தமிழர் தமக்கென ஒரு கொடி வைக்க முனைவதை தேசவிரோதம் என்கிறது. கர்நாடாவில் கன்னட கொடியை கன்னட அமைச்சர் ஏற்றுகிறார். அதை அனுமதிக்கும் இந்திய அரசு தமிழகத்தில் தமிழ்நாட்டுக்கொடியை ஏற்ற முனைவோரை தேசவிரோத சட்டத்தின் கீழ் கைது செய்கிறது. தமிழக அரசே! தோழர் பொழிலன் உட்பட கைது செய்யப்பட்டுள்ள தமிழ் உணர்வாளர்களை உடனே விடுதலை செய். அவர்கள் மீது போடப்பட்டிருக்கும் தேசவிரோத குற்ற வழக்கை வாபஸ் பெறு.

தாய்!

•தாய்! ஒரு போராளியாக இருப்பது கடினம் என்றால் அதைவிடக் கடினமானது அப் போராளியின் தாயாக இருப்பது. அத்தகைய கடின வாழ்வையே இந்த தாய் இறுதிவரை அனுபவித்தார். பொதுவாக போராளியின் தியாகமே மதிக்கப்படும். அதையே வரலாறும் நினைவு கொள்ளும். ஆனால் ஆச்சரியப்படும்வகையில் பெரும்திரளான தமிழ்மக்கள் இத் தாய்க்கு உரிய மரியாதையுடன் விடை கொடுத்துள்ளனர். ஈன்ற பொழுதைக் காட்டிலும் தன் மகனை சான்றோன் எனக் கேட்கும்போதே தாய் அதிக மகிழ்ச்சி அடைவாள் என்கிறார்கள். ஆனால் இந்த தாய் தன் மகன் இறந்துவிட்டான் என்ற செய்தியுடன் கூடவே கொள்ளையன் என அடித்தக் கொல்லப்பட்டான் என்ற அவப் பெயரையும் சேர்த்தே கேட்டார். 33 ஆண்டுகள் கழிந்தன. இந்த தாய் எதிர்பார்த்த அங்கீகாரத்தை வரலாறு வழங்கியது. ஆம் தன் மகன் தமிழ்நாட்டில் தமிழ் தேசிய தலைவராக மதிக்கப்படுவதை கண்டுவிட்டே அவர் உயிர் பிரிந்துள்ளது.

தமிழ்செல்வன், லக்ஸ்மன் கதிர்காமர்

•தமிழ்செல்வன், லக்ஸ்மன் கதிர்காமர் இரண்டு கொலைகள், இரண்டு நியாயங்கள்! லக்ஸ்மன் கதிர்காமர் - இவர் ஒரு தமிழர். இவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இல்லை. இவரை நியமன எம்.பி யாக்கி இவருக்கு வெளிநாட்டு அமைச்சு பதவியை சந்திரிக்கா அரசு வழங்கியிருந்தது. சிங்கள ராணுவத்தால் பாலியல் வல்லுறவு செய்து செம்மணியில் புதைக்கப்பட்ட மாணவி கிரிசாந்தியை பயங்கரவாதி என்று கூசாமல் இவர் பொய் சொன்னார். இவர் சிங்கள அரசின் தமிழ் இனப்படுகொலைகளை உலகம் முழுவதும் சென்று நியாயப்படுத்தினார்.. அதாவது இவரை தமிழ் மக்களை அழிப்பதற்குரிய கோடரிக்காம்பாக சிங்கள அரசு நன்கு பயன்படுத்திக்கொண்டது. இவர் கொல்லப்பட்டபோது இலங்கை அரசு உட்பட பல சர்வதேச நாடுகளும் கண்டித்தன. ஒரு வெளிநாட்டு அமைச்சரை கொன்றது தவறு என்று அவர்கள் கூறினார்கள். ஆனால் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்செல்வன் தனது அலுவலகத்தில் தூங்கிக்கொண்டிருந்தபோது இலங்கை அரசால் விமானம் மூலம் குண்டு வீசிக் கொல்லப்பட்டார். தவறுதலாக தமிழ்செல்வன் மீது குண்டு போட்டுவிட்டோம் என இலங்கை அரசு வருத்தம் தெரிவிக்கும் என்று பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தவேளை “எமது இலக்கு தமிழ்செல்வனே. தெரிந்தே அவர் மீது குண்டு வீசிக் கொன்றோம்” என்று இலங்கை அரசு இறுமாப்பாக கூறியது. இங்கு எமது நோக்கம் இவர்களின் கொலை சரியா? பிழையா? என்று ஆராய்வதல்ல. மாறாக, கதிர்காமருக்கு ஒரு நியாயம். தமிழ் செல்வனுக்கு இன்னொரு நியாயம். இது என்ன நியாயம் ? என்று கேட்பதே. ஏனெனில் லக்ஸ்மன் கதிர்காமர் கொல்லப்பட்டபோது ஒரு வெளிநாட்டு அமைச்சரைக் கொன்றது தவறு என்று கண்டனம் தெரிவித்த எவரும் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டபோது பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஒரு அரசியல்துறை பொறுப்பாளரைக் கொன்றது தவறு என்று கூறவில்லை. சிலர் “தமிழ்செல்வன் அரசியல்துறை பொறுப்பாளராய் இருந்தாலும் அவரும் புலிதானே. எனவே அவரும் பயங்கரவாதிதான். அதனால் அவரை குண்டு வீசிக் கொன்றது சரிதான்” என்பார்கள். இப்படி கூறுபவர்களிடம் உரையாடுவதற்கு எதுவும் இல்லை. ஏனெனில் இவர்கள்தான் “பிரபாகரன் பயங்கரவாதி. எனவே அவரின் பத்து வயது மகன் பாலச்சந்திரனும் பயங்கரவாதிதான். எனவே அந்த சிறுவனைக் கொன்றதும் சரிதான்” என கூறிக் கொண்டிருப்பவர்கள். குறிப்பு - இன்று (02.11.2020) தமிழ்செல்வனின் நினைவுதினம் ஆகும்.

இலங்கையின் புத்திசாலி சுகாதார அமைச்சர்!

இலங்கையின் புத்திசாலி சுகாதார அமைச்சர்! இந்திய பிரதமர் மோடி அவர்கள் கொரோனோ ஒழிப்பிற்கு கை தட்டுங்கள், விளக்கு பிடியுங்கள் என்றார். ஆனால் இலங்கை சுகாதார அமைச்சரோ கொரோணோ பூதத்தை பிடித்து பானையில் அடைத்து ஆற்றில் வீசிவிட்டார். இலங்கையில் கொரோனோ அழிந்துவிட்டது என்று நம்புவோம். பாவம் மக்கள்! குறிப்பு- வேடிக்கை என்னவெனில் கடந்தமுறை கொரோனோவை வெற்றிகரமாக கட்டுப்படுத்திவிட்டோம் என்று மார்தட்டிய கோத்தா அரசு இம்முறை மந்திரித்த பானையை ஆற்றில் போடும் நிலைக்கு வந்துவிட்டது.

நுங்கம்பாக்கம்

நுங்கம்பாக்கம் 24.06.2016 யன்று நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட சுவாதி என்ற பெண்ணின் கதை இது. கொலைகாரன் என்று கைது செய்யப்பட்ட ராம்குமார் என்ற இளைஞன் 10.09.2016 யன்று புழல் சிறையில் தற்கொலை செய்ததாக பொலிஸ் கூறியது. இன்றுவரை அந்த தற்கொலை ஏன் நடந்தது அல்லது எப்படி நடந்தது என்பது பற்றி பொலிசாரோ அல்லது தமிழக அரசோ மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் விசாரணை செய்யவில்லை. இந்நிலையில் இப்படம் பொலிசாரை நியாயப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டதோ என சந்தேகம் கொள்ள வைக்கிறது. நான் தமிழக சிறையில் எட்டு வருடம் இருந்திருக்கிறேன். அப்போது டவர் மாணிக்கம் என்ற கைதி மரத்தில் எறி விழுந்து இறந்ததைக்கூட கண்ணால் பார்த்திருக்கிறேன். ஆனால் சிறையில் ஒரு கைதி சுவரில் தொங்கிய மின்சார வயரை கடித்து தற்கொலை செய்தார் என்று கூறப்படுவதை என்னால் நம்ப முடியவில்லை. அதுவும் கைது செய்யும்போது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் கைதியை சிறையில் எந்தளவு கண்காணிப்பில் வைப்பார்கள்; என்பதை நான் நன்கு அறிவேன். எனவே இப் படத்தை தயாரித்தவர்கள் கொஞ்சம் புலனாய்வு செய்திருந்தாலே பொலிசாரால் மூடிமறைக்கப்பட்ட பல உண்மைகளை மக்களுக்கு தெரிவித்திருக்க முடியும்.

உச்சநீதிமன்றமே ஏழு தமிழர்களை விடுதலை செய்யலாம்

உச்சநீதிமன்றமே ஏழு தமிழர்களை விடுதலை செய்யலாம். அல்லது தமிழக அரசே ஏழு தமிழர்களை விடுதலை செய்யலாம். அல்லது நீண்டநாள் பரோலில் விடுதலை செய்யலாம். அல்லது ஆளுநருடன் கலந்துபேசியும் தமிழக அரசு எழு தமிழர்களை விடுதலை செய்யலாம். ஆனால் ஒன்று, இனியும் எந்தவித தாமதமும் இன்றி ஏழு தமிழர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

தோழர் வேல்முருகனுக்கு அஞ்சலிகள்!

•தோழர் வேல்முருகனுக்கு அஞ்சலிகள்! கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் கொய்த்துப்பாற மீன்முட்டி நீர்வீழ்ச்சிக்கு அருகே உள்ள வனப்பகுதியில், திங்கள் கிழமை கேரள காவல்துறையின் தண்டர்போல் அதிரடிப்படையினரால் தமிழகத்தின் தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சார்ந்த தோழர் வேல்முருகன் (32) சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சுட்டுக் கொல்லப்பட்ட தோழர் வேல்முருகன், மதுரை சட்டக்கல்லூரியில் பயின்றவர். தேனி மாவட்டம் முருகமலையில் ஆயுதப்பயிற்சி எடுத்ததாகக் கூறி, 2007ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட தோழர் வேல்முருகன், அந்த வருடமே ஒடிசா மாநிலம் கோராபுட் சிறையில் அடைக்கப்பட்டு, நான்கு வருடங்களுக்குப் பிறகு பிணையில் வெளியே வந்தார். கேரள பினராயி அரசின் போலி மோதல் என்கவ்ண்டரை, வன்மையாகக் கண்டிப்போம்.

மாலைதீவு சம்பவம் நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன? மாலைதீவில் நடந்தது புரட்சி அல்ல. அது எதிர்

•மாலைதீவு சம்பவம் நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன? மாலைதீவில் நடந்தது புரட்சி அல்ல. அது எதிர்க்கட்சி தலைவர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி. அவர் ஆட்சி அமைத்தால் மாலைதீவை பின்தளமாக பயன்படுத்த தம்மை அனுமதிப்பார் என்ற நம்பிக்கையில் புளட் போராளிகள் உதவி புரிந்தனர். உண்மையில் பளட் இயக்கத்திற்கு முன்னரே இப்படி ஒரு சிந்தனை TEA இயக்க தலைவர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரனுக்கு இருந்தது. அவர் மாலைதீவில் ஒரு தீவை விலைக்கு வாங்கி அதனை பின்தளமாக பயன்படுத்த முடியுமா என சிந்தித்தார். மாலைதீவு சம்பவம் நடந்த பின்னர் அவர் ஆப்பிரிக்காவுக்கு அருகில் உள்ள தீவு ஒன்றை இவ்வாறு பெற முடியுமா என்று முயற்சி செய்தார். இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் இந்தியாவை பின்தளமாக தொடர்ந்து பயன்படுத்த போராளி இயக்கங்களால் முடியவில்லை என்பதே. அதனால் அவர்கள் இதற்காக வேறு இடங்களில் முயற்சி செய்திருக்கிறார்கள். ராஜீவ் காந்தி கொலைக்கு பின்னரே இந்திய அரசு புலிகளுக்கும் ஈழத் தமிழருக்கும் எதிரான நிலைப்பாட்டை மேற்கொண்டது என சிலர் கூறுகின்றனர். ஆனால் அதற்கு முன்னரே இந்திய அரசு போராளிகளுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் எதிரான நிலைப்பாடு கொண்டிருந்தது என்பதற்கு சிறந்த உதாரணம் மாலைதீவு சம்பவம் ஆகும். இந்தியாவில் மட்டுமல்ல வேறு எந்த நாட்டிலும்கூட போராளிகள் பின்தளமாக பயன்படுத்த இந்திய அரசு அனுமதிக்காது என்பதற்கும் மாலைதீவு சம்பவம் ஒரு சிறந்த உதாரணம் ஆகும். ஏனெனில் மாலைதீவு அரசு இந்திய அரசிடம் உதவி கோராத நிலையிலும் இந்திய அரசு வலியவந்து புளட் போராளிகளை கொன்று ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை அடக்கியது. இதற்கு முன்னர் இபிஆர்எல்எவ் இயக்கத்தினர் யாழ்ப்பாணத்தில் அலன் தம்பதிகள் என்ற வெள்ளை இனத்தவர் இருவரைக் கடத்தியிருந்தனர். சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதன்படி அப்போதைய ஜனாதிபதி ஜெயவர்த்தனா சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முன்வந்தார். ஆனால் இந்திராகாந்தி ஜெயவர்த்தனா கோராமலே இபிஆர்எல்எவ் தலைவர்களை பிடித்து சென்னை ஹோட்டல் ஒன்றில் வைத்து உதைத்து அலன் தம்பதிகளை விடுதலை செய்வித்தார். ஆனால் இபிஆர்எல்எவ் தலைவர்கள் இன்றும் இந்திய விசுவாசிகளாகவே இருந்து வருகின்றனர். குறிப்பு – இந்தியாவுக்கு எதிராக மாலைதீவில் பின்தளம் அமைக்க முயற்சி செய்து மரணம் அடைந்த புளட் போராளிகளுக்கு எமது அஞ்சலிகள். அவர்கள் தியாகம் என்றும் மதிக்கப்பட வேண்டியதே.

போலி என்கவுண்டர் கொலைகள் செய்வதில்

•போலி என்கவுண்டர் கொலைகள் செய்வதில் சங்கிகளும் கம்யுனிஸ்ட்டுகளும் ஒன்றே ! ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து தமிழர்களை சுட்டு சுட்டு பிணங்களாக கேரள அரசு தமிழ்நாட்டுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது. ஏன் தமிழனைக் கொல்கின்றீர்கள் என்று கேட்காவிட்டாலும் ஒரு மனிதனை ஏன் விசாரணையின்றி சுட்டுக் கொல்கிறீர்கள் என்றாவது யாராவது கேட்டிருக்க வேண்டும். ஆனால் சங்கிகள் போலி என்கவுண்டர் மோதலில் கொல்வதைக் கண்டிக்கும் மனிதவுரிமைவாதிகள் யாரும் கேரள கம்யுனிஸ்ட் அரசு செய்யும் இக் கொலைகளை கண்டிப்பதில்லை. இத் தமிழர்கள் மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் எனவே சுட்டுக் கொல்வதாக கேரள கம்யுனிஸ்ட் அரசு கூறுகிறது. ஆனால் விசாரணையின்றி கொலை செய்யும் கேரள அரச பயங்கரவாதமே மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தைவிட கொடுமையானது என்று உச்சநீதின்றம் கூறியுள்ளது. ஒருபுறம் செம்மரம் வெட்ட வந்தவர்கள் என்று ஆந்திர அரசு தமிழர்களை சுட்டுக் கொல்கிறது. மறுபுறம் மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் என்று கேரள அரசு சுட்டுக் கொல்கிறது. இன்னொருபுறம் தமிழக மீனவர்களை இலங்கை அரசு சுட்டுக் கொல்கிறது. இப்படி எல்லாபுறமும் தமிழன் எந்தவித விசாரணையும் இன்றி சுட்டுக் கொல்லப்பட்டால் அதன் அர்த்தம் என்ன? கேட்பதற்கு யாருமற்ற அனாதை தமிழன் என்று நினைக்கிறார்களா அல்லது தமிழன் உயிர் பெறுமதி அற்றது என கருதுகிறார்களா? இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். தமிழன் உயிர் ஒன்றும் மயிர் இல்லை என்பதைக் காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது.

சம்பந்தர் ஐயாவும் கொரோனோவும்!

•சம்பந்தர் ஐயாவும் கொரோனோவும்! திருகோணமலையில் வசிக்கும் ஒரு ஏழைத் தமிழ் சிறுவன் ஐஸ்கிரீம் சாப்பிட ஆசைப்பட்டு தாயிடம் பணம் தரும்படி கேட்டுக்கொண்டிருந்தான். தாயிடம் பணம் இல்லை. ஆனாலும் மகனைச் சமாளிப்பதற்காக “கடவுளிடம் கேள் அவர் தருவார்” என்று கூறினார். இதைக் கேட்ட சிறுவன் உடனே “ அன்புள்ள கடவுளே! எனக்கு ஐஸ்கிரீம் சாப்பிட உடன் 200 ரூபா அனுப்பி வையுங்கள்” என்று எழுதி கடவுள், திருகோணமலை என முகவரியிட்டு கடிதம் அனுப்பினான். கடிதத்தைக்கண்ட தபாற்கந்தோர் ஊழியர் ஒருவர் அக் கடிதத்தை குசும்பாக சம்பந்தர் ஐயாவின் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார். கடிதத்தைப் படித்த சம்பந்தர் ஐயா பொதுவாக பண உதவி செய்வதில்லை. ஆனாலும் இச் சிறுவனுக்கு உதவ விரும்பினார். ஏனெனில் இந்த கொரோனோ நேரத்தில் ஒரு சிறுவனுக்கு உதவி செய்தால் தன் பெயர் பத்திரிகைகளில் அடிபடும் என அவர் நினைத்தார். ஆனாலும் ஒரு சிறுவனுக்கு 200 ரூபா அதிகம். எனவே 100 ரூபா அனுப்பினால் போதும் என நினைத்து 100 ரூபா பணத்தை அனுப்பினார். பணத்தைப் பெற்றுக்கொண்ட சிறுவன் உடனே கடவுளுக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதினாhன். அதில் “கடவுளே! பணம் அனுப்பியமைக்கு நன்றி. ஆனால் இனி சம்பந்தர் ஐயா மூலம் அனுப்ப வேண்டாம். ஏனெனில் அவர் 200 ரூபாவில் 100 ரூபாவை சுருட்டிவிட்டு எனக்கு 100 ரூபா மட்டுமே அனுப்பி வைத்துள்ளார்” என்று எழுதியிருந்தான். இது இணையவெளியில் வந்த ஒரு நகைச்சுவை துணுக்கு. அமெரிக்கா ஜனாதிபதி பற்றி வந்த இந்த பகிடியை சம்பந்தர் ஐயாவுக்கு நான் மாற்றியிருக்கிறேன். சரி பகிடியை விடுவோம். இப்போது சீரியஸ் மேட்டருக்கு வருவோம். கடந்த வாரம் சம்பந்தர் ஐயா இந்திய தூதரை சந்தித்து பேசியதாக செய்திகள் வந்திருந்தன. அதன்பின்பு இந்திய தூதரகத்தில் பணிபரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனோ என இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. சம்பந்தர் ஐயாவால் தூதரக ஊழியருக்கு கொரோனோ வந்ததா அல்லது தூதரக ஊழியரால் சம்பந்தர் ஐயாவுக்கு தொற்று எற்படுமா என ஆராய்வது என் பதிவின் நோக்கம் இல்லை. மாறாக, இலங்கை சட்டப்படி சம்பந்தர் ஐயா முகாமில் தனிமைப்படுத்தப்படுவாரா இல்லையா என்பதை அறிவதே நோக்கமாகும்.

இலங்கையில் ஒரே நாளில் கொரோனோவினால் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் ஒரே நாளில் கொரோனோவினால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. தனிமைப்படுத்தல் முகாம்களில் இடம் இன்றி திணறுவதாக இராணுவ தளபதியே ஒப்புதல் அளிக்கிறார். போற போக்கைப் பார்த்தால் கொரோனோ இல்லாதவர்களைத்தான் தனிமைப்படுத்துவார்கள் போல் இருக்கிறது. புலிகளை அடக்கிய எங்களுக்கு கொரோனோவை அடக்குவது பெரிய விடயம் இல்லை என்று வாய்ச்சவடால் விட்ட அமைச்சர் ஒருவர் இப்போது வாய் திறக்க முடியாமல் இருக்கிறார். கோரோனோவை சிறப்பாக அடக்கிய நாடு என இலங்கை பெயர் பெற்றுள்ளது என்று தேர்தலுக்கு முன்னர் கூறிய சுகாதார அமைச்சர் இப்போது மந்திரிக்கப்பட்ட பானைகளை ஆற்றில் போட்டுக்கொண்டு திரிகிறார். ஆக, கொரோனோவைக் கட்டுபடுத்த முடியாமல் இலங்கை அரசு திணறுகிறது என்பது நன்கு வெளிச்சமாகியுள்ளது. எந்த மக்கள் நம்பிக்கையுடன் இந்த அரசை தெரிவு செய்தார்களோ அந்த மக்களை காக்கத் தவறியுள்ளது இந்த அரசு. அந்த மக்கள் மத்தியில் நன்கு அம்பலமாகி வருகிறது இந்த அரசு.

இது 6 வருடங்களுக்கு முன்னர் இதே நாளில் நான் செய்த பதிவ

குறிப்பு - இது 6 வருடங்களுக்கு முன்னர் இதே நாளில் நான் செய்த பதிவு ஆகும். இதனை இன்று முகநூல் எனக்கு நினைவூட்டியுள்ளது. அண்மையில் முரளியின் 800 பிரச்சனையின்போது தமிழக ஊடகவியலாளர் ஒருவரும் இன்னும் சிலரும் வடக்கு கிழக்கு தமிழ் தலைவர்கள் ஒருபோதும் மலையக தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டிருக்கவில்லை என்று கூறியிருந்தனர். அவர்களுக்காக இதனை மீள்பதிவு செய்கிறேன். • தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர்களின் மலையக விஜயம் வரலாற்றில் வரவேற்கத்தக்கதொரு மாற்றம்! மலையத்தில் மண் சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறியமை நல்லதொரு மாற்றமாகும். இலங்கை அரசு விரும்பாத நிலையிலும்கூட வடமாகாண முதலைமைசர் விக்கினேஸ்வரன் அந்த பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியமை வரவேற்கப்பட வேண்டியதே! இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் அமெரிக்க, இந்திய உதவிகள் தேவையில்லை என்கிறார். வடக்கு கிழக்கில் இருந்து யாரும் வரத் தேவையில்லை என்கிறார் ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்றுதுணி கூட வழங்கப்படவில்லை. மலையக மக்களின் தலைவர் தொண்டமான் மண் சரிவு வரும் என்று சோதிடம் பார்ப்பதா? எனக் கேட்கிறார். ஆனால் இன்னொரு சிங்கள அமைச்சரோ மண் சரிவு வரும் என்பது தமக்கு தெரியும் என்றும் மாற்று காணி தோட்ட முதலாளிகள் தராததால் தம்மால் எதுவும் செய்ய முடியவில்லை என்கிறார். வட கிழக்கு மாகாண தமிழ் தலைவர்கள் மலையகத்திற்கு விஜயம் செய்திருப்பது மலையக மற்றும் பூர்வீக தமிழ் மக்களின் ஜக்கியத்திற்கும் ஒருமித்த தலைமைக்கும் வழி வகுக்கும். தமிழ் இனமாக ஒன்று படுவோம்! இன ஒடுக்கு முறைக்கு எதிராக ஒன்று திரண்டு போராடுவோம்

லெனின் ரஸ்சிய புரட்சி !

• லெனின் ரஸ்சிய புரட்சி ! உலகில் முதலாளித்துவமா அல்லது சோசலிசமா வெற்றி பெறும் என்பது விடை காணவேண்டிய வினாவாக இன்றும் இருக்கலாம். ஆனால் மார்க்சின் பின்னரான இந்த 150 ஆண்டு காலப் போராட்டங்களும் வென்றெடுப்புகளும் முதலாளித்துவத்திற்கான ஒரே மாற்று மார்க்சிசமும் சோசலிசமுமே என்பதை நிரூபித்துள்ளன. மார்க்சிசம் அது தோற்றம் பெற்ற அதே இடத்தில் அப்படியே இருந்து வந்த ஒன்றல்ல. அது தனது விஞ்ஞான அடிப்படை காரணமாக வளர்ச்சியுற்றது. மாபெரும் அக்டோபர் புரட்சி மூலமாக அது லெனினிசமாக வளர்ச்சி கண்டது. சீனப்புரட்சியின் ஊடாக மாஓசேதுங் சிந்தனையாக அது மேலும் விரிவு கண்டது. இவ்வாறு பல நாடுகளின் புரட்சிகளினூடாக மார்க்சிசம் வளர்ச்சி பெற்று வருகின்றது. இன்றைய உலகமயமாதல் சூழலிலே ஏகாதிபத்தியம் தோற்றுவித்து நிற்கும் பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்து முன்னேறிச் செல்லும் வரலாற்றுக் கடமையை எதிர்நோக்கி மார்க்சிசம் நிற்கின்றது. அது ட்ராக்சியவாதம், சீர்திருத்தவாதம், நவீன திரிபுவாதம் ஆகியவற்றுக்கு எதிராகவும் விட்டுக்கொடுக்காத இடையறாத போராட்டத்தை நடத்தி வருகிறது. புரட்சி நடைபெற்ற நாடுகளில் இன்று புரட்சி அரசுகள் இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் அந்த புரட்சிகளே, •உலகில் உழைக்கும்; மக்களும் நாடாள முடியும் என்பதை நிரூபித்தன. •உலகில் உழைக்கும் மக்களும் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்பதை நிரூபித்தன •உலகில் உள்ள தேசிய இனங்கள் அனைத்தும் சுயநிர்ண உரிமை கொண்டவை என்றன. •உலகில் சர்வாதிகார பாசிச ஆட்சிகளை ஒன்றுதிரண்டு தூக்கியெறிய முடியும் என்பதை நிரூபித்தன. •உலகில் இன மத சாதி மற்றும் நிற பேதங்களை கடந்து அனைவரும் சமமான மனிதர்கள் என பறைசாற்றின. உழைக்கும் மக்களே ஒன்று சேருங்கள் நாம் இழப்பதற்கு எதுவுமேயில்லை -ஆனால் நாம் வெல்லுவதற்கு ஒரு உலகம் இருக்கிறது!

ரவிராஜ் ஏன் கொல்லப்பட்டார்?

ரவிராஜ் ஏன் கொல்லப்பட்டார்? ரவிராஜ் கொலைக்கு ஏன் இன்னும் நீதி கிடைக்கவில்லை? ரவிராஜ் ஆயுதம் ஏந்திப் போராடியவரா? இல்லை ரவிராஜ் ஆயுதம் ஏந்திப் போராடிய அமைப்புகளில் உறுப்பினராக இருந்தாரா? இல்லை ரவிராஜ் ஏதாவது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவி புரிந்தவராக குற்றம் சாட்டப்பட்டாரா? இல்லை ரவிராஜ் ஒரு தேடப்பட்ட சந்தேக நபரா? அல்லது குற்றவாளியா? இல்லை அப்படியாயின் ரவிராஜ் ஏன் இலங்கை அரசால் கொல்லப்பட்டார்? கொல்லப்படும் அளவிற்கு ரவிராஜ் செய்த தவறுதான் என்ன? ரவிராஜ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினர். அவர் புலிகள் அமைப்பை ஆதரித்தார் புலிகள் அமைப்பை ஆதரித்தது தவறு என்றால் ஏன் மற்ற தமிழ்தேசியகூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சுடப்படவில்லை? எல்லா தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் புலிகளின் ஆதரவுடன்தானே பதவியைப் பெற்றவர்கள். புலிகள்தான் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதி என்று சொன்ன சம்பந்தர் ஐயாவையல்லவா இலங்கை அரசு முதலில் சுட்டிருக்க வேண்டும் ரவிராஜ் கொல்லப்படுவதற்கு ஒரே காரணம் அவர் சிங்கள மொழியில் சிங்கள மக்களுக்கு தமிழர் பிரச்சனையைக் கூறியதே. ரவிராஜ் பேச்சுகள் மூலம் சிங்கள மக்கள் தமிழ் மக்களின் நியாயங்களைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தமையினாலே அவர் கொல்லப்பட்டார். இனவாதம் மூலம் ஆட்சி செய்யும் இலங்கை அரசு அந்த இனவாதத்தை இல்லாமல் செய்யும் முயற்சிகளை ஒருபோதும் அனுமதிக்காது. இனங்களுக்கடையே நல்லிணக்கம் ஏற்படுவதை இலங்கை அரசு மட்டுமல்ல இந்திய அரசும்கூட அனுமதிக்காது. முஸ்லிம்காங்கிரஸ் தலைவர் அஸ்ரப் பௌத்த இனவாதிகளுடன் சிங்கள மொழியில் விவாதம் செய்து அவர்களை அம்பலப்படுத்தினார். அதனாலேயே அஸ்ரப் கொல்லப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. தன்னை சந்தித்த சிங்கள மக்களிடம் சிங்கள மொழியில் தமிழர் நியாயங்களை தான் கூறியதாகவும் அதனை ஏற்றுக்கொண்ட அந்த மக்கள் சிங்களப் பகுதிகளில் வந்து அவற்றை கூறும்படி தனக்கு அழைப்பு விடுத்ததாகவும் மாகாணசபை முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கூறியிருந்தார். அதனால்தான் அவரை நாடு கடத்த வேண்டும் என்றும் கொல்ல வேண்டும் என்றும் இனவாதிகள் கத்தினார்கள். தமிழ் தலைவர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் தமிழர் பிரச்சனையை காலம் காலமாக இந்தியாவுக்கு கூறியிருக்கிறார்கள். அமெரிக்கா பிரிட்டனுக்கு எல்லாம் கூறியிருக்கிறார்கள். ஆனால் சிங்கள மக்களுக்கு தமிழ் மக்களின் நியாயங்களை கூற அவர்கள் முயற்சி செய்யவில்லை. ஆனால் ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவோ அல்லது அமெரிக்காவோ ஒருவேளை தமிழ் மக்களுக்கு ஏதும் தீர்வைப் பெற்றுத்தர முன்வந்தாலும் சிங்கள மக்களின் ஆதரவு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. ஏனவே இனியாவது காலம் சென்ற ரவிராஜ் காட்டிய பாதையில் சிங்கள மக்களுக்கு எமது பிரச்சனைகளை எடுத்துக் கூறுவோம். அவர்களை இனவாத ஆட்சியாளர்களின் பிடியில் இருந்து வென்றெடுப்போம். குறிப்பு- ரவிராஜ் கொல்லப்பட்ட தினம் இன்று. ரவிராஜ்க்கு சிலை வைத்த தமிழ்தேசியகூட்டமைப்பால் அவரின் கொலைக்குரிய நீதியை இன்னும் பெறவில்லை. தமது பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலைக்கு நீதி பெற முடியாதவர்கள் தமிழ் மக்களின் முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு நீதி பெற்று தருவார்கள் என எப்படி நம்புவது?

பெருமை கொள்ளும் தாய்த் தமிழகம்!

பெருமை கொள்ளும் தாய்த் தமிழகம்! தொப்புள் கொடி உறவுகள் என்று வெறும் வாய்ப் பேச்சில் அவர்கள் சொல்லி வரவில்லை. உண்மையிலே தங்களால் இயன்றளவு ஈழத் தமிழர்களுக்காக அவர்கள் அர்ப்பணித்து வருகிறார்கள். உலகில் எந்தவொரு இனமும் தமிழகம் போல் தன் இனத்திற்கு உதவியிருக்குமா என தேடிப் பார்க்கிறேன். ஆச்சரியமாக இருக்கிறது. அவர்களின் சேயாக இருப்பதில் பெருமையாக இருக்கிறது. நாம் அவர்கள் மண்ணில் கொலை செய்தோம். கொள்ளை அடித்தோம். பெண்களின் கழுத்pல் இருந்த தாலியைக்கூட அறுத்தோம். ஆனால் அவர்கள் ஒருமுறைகூட ஈழ அகதிகள் வெளியேற வேண்டும் என்று கோரவில்லை. கடந்த 35 ஆண்டுகளாக தங்க வைத்திருப்பதோடு ரேசனில் உணவுப் பொருட்களும் தந்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் எத்தனையோ பேர் ஒரு நேர உணவுக்குகூட வழியில்லாமல் இருக்கிறார்கள். பெங்களுரில் இருந்து விரட்டப்பட்ட தமது உறவுகளைக்கூட அவர்கள் உரிய முறையில் பராமரிக்கவில்லை ஆனால் எத்தனை இடர் வந்தபோதும் ஈழத் தமிழர்களுக்கு உதவுவதில் அவர்கள் ஒருபோதும் பின்னின்றதில்லை. ஈழத் தமிழர்களை பாதுகாக்குமாறு கோரி இதுவரை 17 தமிழர்கள் தமிழ்நாட்டில் தீக்குளித்து இறந்துள்ளனர். பல இளைஞர்கள் ஈழத்திற்கே வந்து ஈழத் தமிழர்களுக்காக போராடி இறந்துள்ளனர். அதில் ஒருவரே சாத்தூர் சிவகாசியைச் சேர்ந்த செங்கண்ணன் என்ற தனுஸ்கோடி செந்தூரபாண்டியன். அவர் தனது 18 வயதில் 11.11.1993யன்று பலாலி முகாம் தாக்குதலின் போது வீர மரணம் அடைந்தார். இன்று அவரது 27வது நினைவு தினம் ஆகும். எமக்காக ஈழத்திற்கே வந்து மரணித்த அந்த சகோதரனை ஒவ்வொரு தமிழனும் நன்றியுடன் நினைவு கூர வேண்டும். இங்கு வேதனை என்னவென்றால் சில ஈழத் தமிழர்கள் நன்றி மறந்து “ எங்கட பிரச்சனை பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? “ என்று தமிழக தமிழர்களிடம் கேட்கிறார்கள். ஆனால் அவர்களோ அப்போதும்கூட கோபம் கொள்வதில்லை. 7கோடி பேர் தாம் அருகில் இருந்தும் முள்ளிவாய்க்காலில் தம் உறவுகளை காப்பாற்ற முடியாமல் போய்விட்டோமே என்றுதான் தலை குனிகிறார்கள். ஆனால் ஒன்றுமட்டும் உண்மை. இனி அடுத்த போராட்டம் தாயும் சேயும் இணைந்தே நடத்தப் போகிறார்கள். அந்த அற்புதத்தை உலக வரலாறு பார்க்கத்தான் போகிறது! குறிப்பு - இது ஒரு மீள் பதிவு.

அது ஒரு கனாக் காலம்!

•அது ஒரு கனாக் காலம்! கரவெட்டியில் ஒரு மதவு இருந்தது அது மதவடி என்று பெயர் பெற்று இருந்தது அதில் நிறைய இளைஞர் கூட்டம் இருந்தது அவர்கள் சிரித்து மகிழ்ந்திட்ட ஒரு காலம் இருந்தது சோனப்பு வீதியில் அந்த மதவடி இருந்தது மதவடியில் குந்தி இருந்து பேசிச் சிரித்திட நண்பர் கூட்டம் ஒன்று எப்போதும் இருந்து வந்ததே ஒரு வீட்டில் விசேடம் என்றால் பலகாரப் பெட்டி மதவடி வந்திடுமே ஒரு வீட்டில் ஓலம் கேட்டால் ஒடி வரப் பலர் இருந்தனரே மதவடியில் அருகில் அத்துளு வயல் இருந்தது அதன் நடுவே ஒரு குளம் இருந்தது குளம் நிறைய தாமரை மலர்ந்தது நீச்சல் பழகும் சிறுசுகளாலும் குளம் கலங்கியும் நிரம்பியும் இருந்தது. அங்கும் பல சாதிகள் இருந்தன ஆனால் அதையும் தாண்டி அன்பு இருந்தது பல மதங்கள் இருந்தன ஒருபோதும் வேறுபாடு காட்டியதில்லை பல இயக்கத்தையும் சேர்ந்தவர் இருந்தனர் உன் இயக்கம் பெரிது என் இயக்கம் பெரிது என்றதொரு சண்டை நடந்ததில்லையே மதவடி அருகெங்கும் மதில்களும் வேலிகளும் இருந்தன ஆனாலும் ஆர்மி வந்தால் ஓடி தப்பிச் செல்ல அதில் இடைவெளிகளும் கண்டாயங்களும் இருந்தன மட்டக்களப்பில் இருந்து வந்த பொடியன்களும் மன்னாரில் இருந்து வந்த பொடியன்களும் கவலை எதுவுமின்றி குந்தி இருந்த மதவடி இது எட்டுமுறை ராணுவம் சுற்றி வழைத்தபோதும் ஒருமுறைகூட யாரும் பிடிபட்டதில்லையே பொடியன்கள் தில்லையம்பலம் கோவிலடியில் பசியோடு நிற்கிறான்கள் என அறிந்ததும் ஓடோடி வந்து புக்கையும் மோதகமும் தந்த ஜயர் தலையில் துவக்கை வைத்து ஆர்மி மிரட்டிய போதும் மதவடி பொடியன்களை காட்டிக் கொடுக்க மறுத்தாரே யாரோ பெத்த பிள்ளைகள்தானே என்று இருந்துவிடாமல் தான் பெத்த பிள்ளைகளாக எண்ணி சோறு சமைத்து இராணுவ முற்றுகைக்குள்ளால தைரியமாக வந்து சோனப்பு சுடலையில் இருந்த பொடியன்களுக்கு தந்த பாறி அக்காத்தையை மறந்தவிட முடியுமா? மதவடி அருகில் ஒரு காளி கோவில் இருந்தது அதில் ஆயுதங்களை மறைத்து வைத்திருந்தனர் ஒருநாள் பூசாரியைக் கண்டதும் அவர்கள் ஆயுதங்களை எடுக்க மறந்துவிட்டதை உணர்ந்தனர் ஜயோ! பூசாரி ஏசப் போகிறரே என்று மதவடியில் இருந்த பொடியன்கள் பயந்தவேளை “அடேய் தம்பியளா! நீங்க வைத்த சாமான்களை தண்ணி பட்டுவிடக் கூடாதென்று எடுத்து காளிக்கு பின்னால வைத்திருக்கிறேன்டா” என்று சொல்லிவிட்டு போனாரே அந்த பூசாரி. அது ஏதோ வானத்தில் இருந்து கேட்ட அசரீரி போல் அல்லவா இருந்தது அவர்களுக்கு. ஒருமுறை ராணுவம் தேடுதல் நடத்தியவேளை பனம் பாத்தியினுள் மறைத்து வைத்திருந்த 30 பெட்டி சக்கையை (வெடி மருந்து)எடுத்து விட்டது ஆத்திரம் கொண்ட ராணுவம் அங்கிருந்த கொட்டிலைக் கொழுத்தியது அப்புறம் அருகில் இருந்த வீட்டிற்கு சென்றது அந்த வீட்டில் மறைந்திருந்த பொடியன் அவசரத்தில் தன் வெடிகுண்டை மறந்து ஓடிவிட்டான். அந்த வீட்டில் இருந்த தாயோ உடனே அந்த வெடி குண்டை வாழையடியில் புதைத்து விட்டு அதன் மேலே அசையாமல் நின்றாள் ராணுவத்தை கண்டு பெண்கள் பயந்த காலத்தில் தனக்கு எது நடந்தாலும் பரவாயில்லை வெடி குண்டை பாதுகாக்க வேண்டும் என்று தைரியமாக நிமிர்ந்து நின்ற தாய் அவர். மதவடி பொடியன்கள் ஒன்றுகூடி கரவை இளைஞர் ஒன்றியம் என்னும் பெயரில் வாசிகசாலை ஒன்றையும் நடத்தினார்கள் அதில் கேடயம், மனஓசை, புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் போன்ற புரட்சி சஞ்சிகைகளும் இந்தியாவில் இருந்து தருவித்து வைத்தார்கள். இவற்றைப் படிப்பதற்கென்றே இளைஞர்கள் பல ஊர்களில் இருந்தும் தேடி வந்தனர். ஒருமுறை இந்திய ராணுவம் இருந்தவேளை ஊர்க் கோயில் திருவிழாவிற்காக சுவாமி வெளி வீதி உலா வந்தவேளை இந்திய ராணவம் வருகின்றது என்றதும் சுவாமியை அப்படியே வீதியில் போட்டுவிட்டு காவி வந்த பக்தர்கள் ஓடி மறைந்து விட்டனர். கடவுள் பிள்ளையார் கோவில் வீதியில் தனியாக கிடப்பதைக் கண்ட இந்திய ராணுவம் பிள்ளையாரை தூக்கிச் சென்று கோவிலினுள் வைத்துவிட்டு சென்று விட்டனர். இதையறிந்த மதவடி பொடியன்கள் அடுத்தநாள் போஸ்டர் ஒன்று ஒட்டினார்கள் அதில், “பக்தர்களே! பிள்ளையார் உங்களை காப்பாற்ற மாட்டார். போராளிகளே உங்களை காப்பாற்றுவர்” என்று எழுதியிருந்தார்கள். மதவடியில் போஸ்டரைக் கண்டதும் ஊரே பர பரத்தது. சிலர் “பிள்ளையாரை எதிர்த்து போஸ்டரா” என்றார்கள் பலர் “ போராளிகள்தானே எம்மைக் காக்கின்றனர்” என்றனர். மதவடி ஓட்டையில் எப்போதும் வெடி குண்டுகள் இருந்தன எட்டு முறை ராணுவம் அதன் மேலாக வந்தபோதும் ஒருபோதும் அதனை பொடியன்கள் வெடிக்க வைக்கவில்லை ஊர் அழிந்துவிடும் என்று நினைத்தார்களா- அல்லது தாம் இருந்து மதகு என்று நினைத்தார்களா தெரியவில்லை மதவடி இப்போதும் இருக்கிறது அதில் இருந்த பொடியன்கள் சிலர் இப்போது உயிரோடு இல்லை உயிரோடு இருக்கும் சிலருக்கும் அது ஒரு கனவாகி போனதன்றோ? மதவடி எப்போதும் இருக்கும் அதில் பொடியன்கள் எப்போதும் இருப்பர்? ( மீள் பதிவு.)

செங்கொடியும் செந்தூரனும்

•செங்கொடியும் செந்தூரனும் இருவரும் தமிழர்கள். ஒருவர் ஈழத் தமிழர். மற்றவர் தமிழக தமிழர். இருவரும் சிறையில் உள்ள தமிழர் விடுதலைக்காக தமது உயிரை அர்ப்பணித்தவர்கள். தோழர் செங்கொடி ஏழுதமிழர் விடுதலைக்காக தீக்குளித்து உயிர் துறந்தார். மாணவன் செந்தூரன் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைக்காக ரயில் முன் பாய்ந்து உயிர் துறந்தார். செங்கொடி உயிர் துறந்த இடத்தில் அவருக்கு நினைவு சின்னம் எழுப்பி வருடா வருடம் மக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். ஆனால் மாணவன் செந்தூரன் உயிர் துறந்த தண்டவாளத்தில் இன்னமும் ரயில் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அவன் விரும்பிய தமிழ் அரசியல் கைதிகள் இன்னும் விடுதலை பெற்று வரவில்லை. எமது தலைவர்கள் இந்திய தூதருடன் சேர்ந்து 20 காந்தி சிலைகளை வைக்க எடுக்கும் அக்கறையை இந்த மாணவனுக்கு ஒரு நினைவுக் கல்லைக்கூட வைக்க காட்டவில்லை. எமது தலைவர்கள் அரசியல் கைதிகளையும் மறந்து விட்டார்கள் அதற்காக உயிர் விட்ட மாணவன் செந்தூரனையும் மறந்து விட்டார்கள். அவர்களது கவலை எல்லாம் தங்கள் பதவியை எப்படிக் காப்பாற்றுது, சொகுசு பங்களா வாகனம் எப்படி வாங்குவது, தமக்கு சிங்கள பொலிஸ் பாதுகாப்பு பெறுவது என்பது பற்றியே இருக்கிறது. தம்பி செந்தூரா! எங்களை மன்னித்துவிடு! மாஸ்ரர் படம் வரப்போகுது அதுக்கு கட்அவுட் கட்ட வேண்டும். அப்பறம் மாகாணசபை எலெக்சன் வருது தலைவர்களுக்கு போஸ்டர் ஒட்ட வேண்டும் எங்களுக்கு நிறைய வேலை இருக்கு அதில் உன்னை நினைக்க ஏது நேரம்? ஆனாலும் ஒரு விடயத்தில் நீ ஆறுதல் கொள்ளலாம் ஏனெனில் நல்லவேளை 2015ல் நீ செத்துவிட்டாய் இல்லையேல் ஏன் கோத்தபாயா வரும்போது சாகவில்லை என்று கேட்டிருப்பார்கள். அல்லது, ஒரு கட்சி தூண்டிவிட்டுத்தான் செத்தாய் என்று கூறியிருப்பார்கள். குறிப்பு- அரசியல் கைதிகளின் விடுதலைக்காக 26.11.2015 யன்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த மாணவன் செந்தூரன் நினைவாக எழுதும் குறிப்பு இது.

நாம் பெருமூச்சுவிடுவதைத் தவிர வேறுவழியில்லை!

•நாம் பெருமூச்சுவிடுவதைத் தவிர வேறுவழியில்லை! இவர் பீகார் மாநிலத்தில் பல்ராம்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற எம்எல்ஏ தோழர் மெஹபூப் ஆலம் 53,597 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் தொடர்ந்து நான்காவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் நான்காவது முறையாக வென்றது ஆச்சரியம் இல்லை. நான்குமுறை வென்றபின்பும் இப்போதும் மண்குடிசை வீட்டில் வாழ்வதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. அதுமட்டுமல்ல இப்பவும் அரச பஸ்ஸில்தான் பயணம் செய்கிறார். எமக்கும் எம்பி யாக சிலர் வந்து வாய்ச்சிருக்கிறார்கள். வென்றதும் இவர்களுக்கு சொகுசு பங்களா வேண்டும். 5 கோடி ரூபாயில் சொகுசு வாகனம் வேண்டும். அதைவிட தமிழ் மக்கள் மத்தியில் வருவதற்கு சிங்கள பொலிஸ் பாதுகாப்பு வேண்டும். நாம் எமது எம்.பி களை நினைத்து பெருமூச்சு விடுவதைத்தவிர வேறு வழியில்லை.

நாம் தோற்றுப் போய்விட்டோமா?

நாம் தோற்றுப் போய்விட்டோமா? குத்துச்சண்டையில் ஒருவர் விழுந்தவுடன் தோல்வி அறிவிக்கப்படுவதில்லை. மாறாக பத்து எண்ணுவதற்குள் மீண்டும் எழுந்திருக்காவிட்டால்தான் தோல்வி அறிவிக்கப்படும். அதேபோல் இனவிடுதலைப் போராட்டத்திலும் ஒரு இனம் விழுந்தவுடன் தோல்வியடைந்துவிட்டது என கருதுவதில்லை. மாறாக மீண்டும் எழுந்திருக்கவில்லை என்றால்தான் அது தோல்வி அடைந்துவிட்டதாக கருதப்படும். ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை முள்ளிவாய்க்கால் அழிவு என்பது ஒரு பின்னடைவேயொழிய இனவிடுதலைப் போராட்டத்திற்கான தோல்வி அல்ல. ஏனெனில் போராட்டம் வெற்றியை தராது போகலாம். ஆனால் அது ஒருபோதும் தோல்வியைத் தருவதில்லை என்பது ஒருபுறம் இருக்க, போராட்டம் என்பது தவிர்க்க முடியாதது என்பது மறுபுறத்து உண்மையாகும். பொதுவாகவே ஒரு மனிதன் பிறக்கும்போதே போராட்டத்துடனே பிறக்கிறான். அவன் பூமியில் பிறந்தவுடன் செய்யும் முதல் போராட்டமே அழுகைதான். அதனால்தான் அழுத பிள்ளை பால் குடிக்கும் என்கிறார்கள். அதுபோலவே பிறக்கும்போதே போராட்டத்துடன் பிறக்கும் மனிதன் இறக்கும்வரை போராட்டத்துடனே வாழ்கிறான். ஒருவன் போராட தயங்கினால் அவன் வாழ்வதற்கு உரிய தகுதியை இழந்துவிடுவான். எப்படி ஓடாத மான் வாழ முடியாமல் அழிந்துவிடுமோ அதுபோலவே போராடாத இனமும் வாழ முடியாமல் அழிந்துவிடும். எனவே தமிழ் இனமும் அழியாமல் இத்தனை காலமும் வாழ்ந்து வருகிறது என்றால் அது இத்தனை காலமும் போராடி வருகின்றது என்றே பொருள். எனவே இனியும் அழிந்துவிடாமல் வாழ வேண்டுமென்றால் அது தொடர்ந்து போராட வேண்டும் என்பதே அடிப்படையாகும். ஏடறிந்த வரலாற்றை புரட்டிப் பார்த்தால் தமிழ் இனம் போர்த்துக்கேயருக்கு எதிராக, ஒல்லாந்தருக்கு எதிராக ஆங்கிலேயருக்கு எதிராக எல்லாம் தொடர்ந்து போராடியதை அறிய முடியும். இத்தகைய வீரம் செறிந்த போராட்ட குணாம்சமே தொடர்ந்தும் இலங்கை மற்றும் இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் இனத்தை போராட வைக்கிறது என்பதை உணர்ந்துகொள்ள முடியும். எனவேதான் தமிழ் மக்கள் தோல்வியை ஒத்துக்கொள்ளாதவரை வெற்றிவிழாக் கொண்டாடியவர்களால் வெற்றியை அனுபவிக்க முடியவில்லை. அதனால்தான் அவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தோல்வியை ஒத்துக்கொள்ளும்டி தமிழ் மக்களை நிர்ப்பந்திக்கின்றனர். ஆனால் அவர்கள் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறப்போவதில்லை. ஏனெனில் தமிழ் மக்கள் இதுவரை தோற்கவில்லை. இனியும் தோற்கப்போவதில்லை. குறிப்பு - இதைப் படித்தவுடன் இத்தனை காலமும் போராடி கண்ட பலன் என்ன அழிவைத் தவிர என்று சிலர் மனதில் கேள்வி எழுக்கூடும். அவர்களுக்கான பதில் அடுத்த பதிவில்.

இந்த செய்தி எந்தளவு உண்மை என்று தெரியவில்லை.

இந்த செய்தி எந்தளவு உண்மை என்று தெரியவில்லை. ஐபிசியைத் தவிர வேறு எந்த ஊடகத்திலும் இந்த செய்தி வந்ததாக தெரியவில்லை. இந்த செய்தி உண்மையாக இருந்தாலும் ஒரு நாட்டின் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இன்னொரு நாட்டின் அரசு இப்படி வெளிப்படையாக கோர முடியுமா என்றும் தெரியவில்லை. இந்த செய்தி உண்மையானால் அதனால் பிரிட்டனுக்கோ அல்லது இந்திய அரசுக்கோ எந்த சங்கடமும் இல்லை. மாறாக இந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவும் என்று இப்பவும் சொல்லிக்கொண்டிருக்கும் தமிழ் தலைவர்களே சங்கடத்தை எதிர் கொள்வர். ஏனெனில் இனி அவர்களால் எந்த முகத்துடன் மக்களிடம் சென்று இந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவப் போகிறது என்று சொல்ல முடியும்? சரி , புலிகளை அழித்துவிட்டதாக கூறிய இலங்கை அரசும் இந்திய அரசும் எதற்காக தொடர்ந்தும் புலிகளை தடை செய்து வருகிறார்கள்? எதற்காக தடை செய்ய வேண்டும் என்று மற்ற நாடுகளை கேட்கிறார்கள்? அவர்களிடம் நாம் கேட்க விரும்பும் கேள்வி என்னவெனில் இல்லாத புலிகளுக்கு எதற்கு தடை? சரி தடையை நீக்கிவிட்டால் மீண்டும் உருவாகிவிடுவார்கள் என்று கருதினால் ஜே.வி.பி மீதான தடையை ஏன் நீக்கினார்கள்? ஜே.வி.பி அமைப்பை பயங்கரவாத அமைப்பு என்று தடை செய்த இலங்கை அரசு, அதன் தலைவர்களை பயங்கரவாதிகள் என்று கொன்ற இலங்கை அரசு இப்போது எப்படி அவர்கள் தடையை நீக்கி இயங்க அனுமதிக்கிறார்கள்? திலீபனை நினைவுகூர தடை விதித்த இலங்கை அரசு இன்று எப்படி ஜே.வி.பி தனது 31வது காhத்திகை வீரர்கள் தினத்தை நினைவுகூர அனுமதி அளித்துள்ளது? ஜே.வி.பி ஒரு சிங்கள அமைப்பு. புலிகள் தமிழ் அமைப்பு என்பதைத்தவிர வேறு என்ன வித்தியாசத்தை இலங்கை அரசு கண்டுள்ளது? இங்கு வேடிக்கை என்னவெனில் சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடும் என்று நம்புவது எவ்வளவு முட்டாள்தனமோ அதைவிட முட்டாள்தனமானது ஒரு அமைப்பை தடைசெய்யதால் போராட்டத்தை ஒழித்துவிடலாம் என நினைப்பதாகும். போராடுவது என்று முடிவு எடுத்துவிட்டால் பெயர் என்னவைத்தாலும் போராட தமிழ் மக்கள் தயங்கமாட்டார்கள். இந்த உண்மையை இலங்கை இந்திய அரசுகள் விரைவில் உணர்ந்துகொள்ளும்.

போட்டாச்சு முழுப்படம்

•போட்டாச்சு முழுப்படம் நண்பர் ஒருவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க எனது இரண்டு முழுப் படங்கள் போட்டுள்ளேன். என் எட்டு வருட சிறைவாழ்வில் நான் மறக்க முடியாத படங்கள் இவை. அதனால்தான் இவற்றை என் முகநூல் முகப்பு படமாக தொடர்ந்து வைத்திருக்கிறேன். ஒருபடம் 1992ம் ஆண்டு வேலூர் சிறப்புமுகாமில் இருந்து கொடைக்கானல் நீதிமன்றத்திற்கு என்னை அழைத்துச் சென்றபோது நீதிமன்றம் முன்னிலையில் எடுக்கப்பட்ட படம். இன்னொரு படம் 1995ம் ஆண்டு மதுரை சிறையில் இருந்து திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும்போது எடுக்கப்பட்ட படம் ஆகும். விசாரணை சிறைவாசிக்கே கைவிலங்கு போடக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் அகதியான எனக்கு கைவிலங்கு மட்டுமல்ல லீடிங் செயினும் போட்டு 36 மணி நேரம் தொடர்ந்து பயணம் செய்ய வைத்தார்கள். சாப்பிடும்போதோ அல்லது சிறுநீர் கழிக்கும்போது கூட அவர்கள் எனக்கு இவற்றை கழற்றவில்லை. இறுதியாக எனது தோழர்கள் இதை படம் பிடித்து நீதிமன்றத்தில் காட்டி எனக்கு இவற்றைப் போடக்கூடாது என்ற உத்தரவைப் பெற்றார்கள். குறிப்பு - இது கடந்தவருடம் முழுப்பட சேலஞ்சிற்காக பதிவு செய்தது. இன்று முகநூல் நினைவூட்டியதால் மீள் பதிவு செய்கிறேன்.

ஏழு தமிழர் விடுதலை இனியும் தாமதமானால்

ஏழு தமிழர் விடுதலை இனியும் தாமதமானால் இனத்தின் விடுதலையாக மாற்ற வேண்டும். ஏழு தமிழர் விடுதலை குறித்து தமது அரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சா கூறியுள்ளார். ஆனால் இந்த ஏழு தமிழரில் நாலுபோர் ஈழத் தமிழராக இருந்தும் இவர்கள் விடுதலை குறித்து இதுவரை எந்தவொரு ஈழத் தமிழத்; தலைவரும் குரல் எழுப்பவில்லை. அந்தளவுக்கு இந்திய அரசு விசுவாசம்!

உனது நிலம் உனக்கு சொந்தம் இல்ல

உனது நிலம் உனக்கு சொந்தம் இல்லை. ஏனெனில் நீ தமிழன் உனது இனத்திற்கு சமவுரிமை இல்லை. ஏனெனில் நீ தமிழன் உனது இனம் படுகொலைக்கு நீதி இல்லை. ஏனெனில் நீ தமிழன். உனது உறவுகள் சிறையில் இருந்து விடுதலை இல்லை. ஏனெனில் நீ தமிழன் உனது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் குறித்து எந்த பதிலும் இல்லை. ஏனெனில் நீ தமிழன். உனக்காக மரணித்த உனது உறவுகளை நினைவுகூரக்கூட உனக்கு அனுமதி இல்லை. ஏனெனில் நீ தமிழன். குறிப்பு – ஜேவிபி தமது கார்த்திகை வீரர்களை நிரைனவுகூர அனுமதி உண்டு. ஆனால் தமிழர்கள் தமக்காக இறந்தவர்களை நினைவுகூர அனுமதி மறுப்பு.

தமிழ்நாடு விடுதலைப்படை" தளபதி தோழர் லெனின் நினைவை போற்றுவோம்!

•"தமிழ்நாடு விடுதலைப்படை" தளபதி தோழர் லெனின் நினைவை போற்றுவோம்! தமிழ்நாடு விடுதலைக்காக மட்டுமன்றி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் போராடி வீர மரணம் அடைந்த தோழர் லெனின் அவர்களின் பிறந்த தினம் (19.11.1967) இன்று ஆகும். அவர் மற்றவர்கள் போல் வாழ விரும்பியிருந்தால் இன்று தன் குடும்பத்துடன் 53வது பிறந்த நாளைக் கொண்டாடியிருப்பார். ஆனால் தோழர் லெனின் தனது 27 வயதில் 29.03.1994யன்று முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்தை தாக்க சென்றபோது எதிர்பாராதவிதமாக அவர் எடுத்துச் சென்ற குண்டு வெடித்து மரணமடைந்தார். தோழர் தமிழரசன் மரணத்தின் பின் தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தையும், தமிழ்நாடு விடுதலைப் படையையும் முன்னெடுத்தவர் தோழர் லெனின். தோழர் லெனின் 26.01.1990 யன்று குடியரசு நாளில் ஆத்தூர் மற்றும் குடவாசல் காங்கிரஸ் கட்சி அலுவலகங்களை குண்டு வீசி தகர்த்தார். தோழர் லெனின் 06.04.1991 யன்று, அன்னக்கிளி என்ற பெண்ணை காவல் நிலையத்தில் வைத்து பாலியல் வல்லுறவு செய்தமைக்காக புத்தூர் காவல் நிலையத்தை குண்டு வீசி தாக்குதல் நடத்தினார். தோழர் லெனின் 21.05.1992யன்று ராஜீவ்வைக் கொன்ற தானுவிற்கு அஞ்சலி செலுத்தி கும்பகோனம் தொலைக்காட்சி மற்றும் அஞ்சல் நிலையங்கள் மீது குண்டு தாக்குதல் மேற்கொண்டார் . தோழர் லெனின் 17.11.1993 யன்று, பொலிசார் செல்வம் , விருப்பலிங்கம் என்ற இருவரை விசாரணைக்கு என்று அழைத்தச் சென்று கொன்றமைக்காக குள்ளம்சாவடி காவல் நிலையத்தைக் குண்டு வீசி தகர்த்தார். தோழர் லெனின் "ஸ்பாட்டகஸ்" என்ற நூல் நிலையம் அமைத்து மக்களுக்கு மாக்சிய கல்வி போதித்தார். தோழர் லெனின் "வெண்மணி" கலைக்குழுவை நிறுவி மக்கள் திரள் அமைப்புகளை கட்டுவதற்கு முயன்றார். தோழர் லெனின் மறைவு தமிழக மக்களுக்கு மட்டுமல்ல ஈழத் தமிழர்களுக்கும் ஒரு பேரிழப்பாகும். மாக்சிய லெனிய மாவோயிச சிந்தனையை தனது தத்துவ வழிகாட்டியாக கொண்டு செயற்பட்ட தோழர் லெனின் பாதையை தொடர்ந்து முன்னெடுப்பதே அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலிகள் ஆகும். தோழர் லெனின் நினைவை போற்றுவோம்!

மாவீரர்களை நினைவு கூர்வதற்கு

மாவீரர்களை நினைவு கூர்வதற்கு அனுமதி கோரிய வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மாவீரர்களை நினைவுகூர்பவர்கள் சட்டப்படி கைது செய்யப்படுவார்கள் என ராணுவ தளபதி மிரட்டுகிறார். பதினொரு வருடங்களுக்கு முன்னர் மரணித்தவர்களைக் கண்டு இன்றும் இலங்கை அரசு ஏன் அஞ்சுகிறது? ஏனெனில் மரணித்த மாவீரர்கள் புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை உணர்கிறார்கள். அதனால் மாவீரர்கள் மீண்டும் முளைத்துவிடுவார்கள் என்று பயம் கொள்கிறார்கள். அந்தப் பயம் இருக்கட்டும். குறிப்பு – வெற்றிவிழா கொண்டாடியவர்கள் பதினொரு வருடத்தின் பின்னரும் பயம் கொள்கிறார்கள் எனில் போராட்டம் தமிழர்களுக்கு தோல்வியைத் தரவில்லை என்றுதானே அர்த்தம்.

தனி ஒருவனாக கையில் குழந்தையுடன்

தனி ஒருவனாக கையில் குழந்தையுடன் வீதிக்கு வந்து எழுவர் விடுதலைக்கு போராடும் இந்த தமிழன் உணர்வு பெரும் நம்பிக்கை தருகிறது. ஏனெனில் உலகில் பற்றி எரிந்த பெரு நெருப்பெல்லாம் ஒரு சிறு பொறியில் இருந்தே தொடங்கியிருக்கிறது. இந்த தமிழன் மூட்டியிருக்கும் சிறுபொறி எழுவர் விடுதலைக்கான பெரு நெருப்பாக மாறட்டும். ஏழு தமிழர் விடுதலை பெற்றால் மகிழ்ச்சி. விடுதலை பெறாவிட்டால் பெரு மகிழ்ச்சி. ஏனெனில் இனவிடுதலையாக அது மாறும்.

நாய் பிடிக்கும் வண்டிக்கு

•நாய் பிடிக்கும் வண்டிக்கு நெதர்லாந்தில் வேலை வந்திடுச்சு! தன்னை யாழ்ப்பாண சங்கிலி மன்னரின் வாரிசு எனச் சொல்லிக்கொண்டு நெதர்லாந்தில் இருக்கும் ஒருவர் “தமிழ் மக்கள் சிங்கள ராணுவத்தை எதிர்க்க கூடாது” என்று கூறுகிறார். அதுமட்டுமன்றி “ புலிகள் தன்னிடம் ஆரம்பத்திலேயே வந்திருந்தால் தன்னால் காப்பாற்றியிருக்க முடியும்” என்றும் கூறியிருக்கிறார். யுத்தம் முடிந்து பதினொரு வருடங்களின் பின்பு ஏன் இவர் இப்படி கூற ஆரம்பித்திருக்கிறார்? பாவம் அவருக்கும் பசிக்குமில்லே.

தடை அதை உடை

•தடை அதை உடை இவர்கள் கூடிக் கத்திவிட்டு கலைந்த காகக்கூட்டங்கள் இல்லை இவர்கள் ஒன்றாய்கூடி மழையாக பொழிந்த மேகக்கூட்டங்கள் இவர்கள் சிந்தியது குருதி, அது பெற்று தரும் விடுதலை உறுதி . இவர்களை நினைவு கூரத் தடை எனில் அதை உடை.

171 பேரைக் கொன்றவருக்கு 5160 வருடம் தண்டனை

•171 பேரைக் கொன்றவருக்கு 5160 வருடம் தண்டனை 40000 பேரைக் கொன்ற மகிந்தவுக்கு எத்தனை வருடம்? 1982ம் ஆண்டு கவதமேலா நாட்டில் 171 பேரைக் கொன்ற ராணுவ வீரருக்கு 5160 வருட தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 36 ஆண்டுகள் நடந்த உள்நாட்டு போரில் சுமார் இரண்டு லட்சம் மயா இனத்தவர்கள் கொல்லப்பட்டனர். சர்வாதிகாரி எப்ரெயின் ரியாஸ் மான்ட் ஆட்சியில் இருந்தபோது 1982ம் ஆண்டு டாஸ் எரிஸ் என்ற கிராமத்தில் 201 அப்பாவி மக்கள் ராணுவத்தால் கொல்லப்பட்டனர். 1996ம் ஆண்டு உள்நாட்டுபோர் முடிவிற்கு வந்தபின் இக் கிராம படுகொலைகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன. இந்தப் படுகொலையில் ஈடுபட்ட ராணுவத்தினரில் முக்கியமானவர் முன்னாள் ராணுவ வீரர் சான்டோ லோபஸ். இவர் மீது 171 பேரைக் கொலை செய்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. ராணுவ வீரர் சான்டோ லோபஸ், உள்நாட்டுப் போரைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட கைபில் பிரிவைச் சேர்ந்தவர். உள்நாட்டுப் போர் முடிந்த பின் அமெரிக்காவில் பதுங்கி இருந்த சான்டோ லோபஸ் கைது செய்யப்பட்டு கவுதமேலாவுக்கு நாடு கடத்தப்பட்டு அவர் மீது வழக்கு நடந்து வந்தது. கவுதமேலா நாட்டின் சர்வாதிகாரியாக இருந்த எப்ரெயின் ரியாஸ் மான்ட் மீது இனப்படுகொலை குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடந்துவந்த நிலையில் 2017ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் மரணமடைந்தார். இந்த வழக்கில் கவுதமேலா சிட்டி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், 171 பேரைக் கொலை செய்த சான்டோ லோபஸக்கு ஒவ்வொருவரையும் கொலை செய்தமைக்காக தலா 30 ஆண்டுகள் வீதம் 5130 ஆண்டுகள் சிறை தண்டனையும், குழந்தைகளை இரக்கமின்றிக் கொன்றதற்காக கூடுதலாக 30 ஆண்டுகளும் என மொத்தம் 5160 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இப்போது இங்கு எமக்கு எழும் கேள்வி என்னவெனில் 171 பேரைக் கொன்றவருக்கு 5160 வருடம் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 40000 தமிழ் மக்களைக் கொன்ற மகிந்தவுக்கு விசாரணை கூட நடைபெறவில்லையே. அது ஏன்? இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணம், “நடந்தது இனப்படுகொலை அல்ல” என்று கூறுவதற்கு மாயா இனத்தில் ஒரு சுமந்திரன் இல்லை. இனப்படுகொலை செய்த மகிந்த ராஜபக்சவை “இலங்கையின் தேசியதலைவா” என்று புகழும் சம்பந்தர் அய்யா மாயா இனத்தில் இல்லை. குறிப்பு- 171 பேரின் படுகொலைக்கு 36 வருடங்கள் கழித்து மாயா இன மக்களால் நீதியை பெற்றிருப்பது 40000பேரின் படுகொலைக்கு உரிய நீதியை பெற முடியும் என்ற நம்பிக்கையை தமிழ் மக்களுக்கு தருகிறது

எமக்காக மரணித்தவர்களை

•எமக்காக மரணித்தவர்களை நாம் நினைவு கூர வேண்டுமா? மரணித்தவர்கள் எமது உறவினர்கள் என்பதாலா நாம் நினைவு கூர்கிறோம்? இல்லை மரணித்தவர்கள் எமது ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதாலா நாம் நினைவு கூர்கிறோம்? இல்லை மரணித்தவர்கள் எமது தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலா நாம் நினைவு கூர்கிறோம்? இல்லை அப்படியென்றால் மரணித்த மாவீரர்களை நாம் ஏன் நினைவு கூரவேண்டும்? முதலாவதாக, அவர்கள் எமக்காக மரணித்தவர்கள் இரண்டாவதாக, அவர்கள் எதற்காக ஆயுதம் ஏந்திப் போராடினார்களோ அதில் ஒரு காரணம்கூட இன்னும் தீர்க்கப்படவில்லை என்பதை நாம் உணர்வதற்கு அவர்கள் நினைவு கூரப்பட வேண்டும். மூன்றாவதாக அவர்கள் காட்டிய பாதையில் போராடுவதே அவர்களுக்கு செய்யும் உண்மையான அஞ்சலி என்பதை உணர்வதற்கு அவர்கள் நினைவு கூரப்பட வேண்டும். முக்கியமாக எமது இளம் சிறார்கள் இதை உணர்வதற்கு மாவீரர்கள் நினைவு கூரப்பட வேண்டும். ஏனெனில் எமது அடுத்த சந்ததியினரான இளம் சிறார்கள் தேடப்போவது தமது உறவுகளின் கல்லறைகளில் உள்ள பெயர்களை அல்ல. மாறாக தங்கள் உறவுகளின் வேர்களை. குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இலங்கை அரசு வேண்டுமானால் மாவீரர்களின்; கல்லறைகளை உடைக்கலாம். ஆனால் இந்த இளம் சிறார்களின் நெஞ்சுறுதியை ஒருபோதும் உடைக்க முடியாது. இவர்கள் மிக விரைவில் தங்களுக்குரிய நியாயத்தை கேட்பார்கள். அதுவும் தங்களுக்கே உரிய மொழியில் கேட்கப் போகிறார்கள். Comments

ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் தினம் வரும்போது

ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் தினம் வரும்போது தவறாமல் வரும் கேள்வி “போராடிய போராளிகள் தாயகத்தில் வறுமையில் வாடும்போது லண்டனில் மாபெரும் செலவில் விழா தேவையா?” என்பதே. கேள்வி- போராடியவர்கள் தாயகத்தில் வறுமையில் வாடும்போது மாவீரர்களுக்கு லண்டனில் மாபெரும் செலவில் விழா தேவையா என்று சிலர் கேட்கிறார்களே? பதில்- உண்மையில் நல்ல கேள்வி. ஆனால் இதே லண்டனில் ஈஸ்ட்காமில் 4 கோயில்கள் அருகருகே பல மில்லியன் ரூபாவில் கட்டும்போது இது தேவையா என்று கேள்வி கேட்காதவர்கள் ஒக்ஸ்போட் நகரில் மாவீரர்களுக்கு பணிமனை கட்டும்போது ஏன் கேட்கின்றனர்? இதே லண்டனில் ழு2அரினா மண்டபத்தில் யு.சு.ரகுமான் கச்சேரி நடக்கும்போது கேள்வி கேட்காதவர்கள் எக்சல் மண்டபத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும்போது ஏன் கேட்கிறார்கள்? வெம்பிளி அரினாவில் மானாட மயிலாட நடந்தபோது கேள்வி எழுப்பாதவர்கள் அதே வெம்பிளி அரினாவில் மாவீரர் நினைவு கூரும்போது ஏன் கேட்கிறார்கள்? ஈலிங் அம்மன் ரோட்டில் ஆயிரக்கணக்கான தேங்காய்களை உடைத்த போது ஏன் இந்த வீண் செலவு என்று கேட்காதவர்கள் மாவீரருக்கு பூ வும் விளக்கும் வைக்கும்போது ஏன் கேட்கின்றனர்? கேள்வி- வெயிட் வெயிட், இத்தனையும் கேட்டவர்கள்தான் காயம்பட்ட போராளிகளுக்காக கேள்வி கேட்க முடியும் என்கிறீர்களா? பதில்- இல்லை. ஆனால் இவர்கள் உண்மையில் காயம்பட்ட போராளிகள் மீது அக்கறை இருந்திருந்தால் இத்தனையும் கேட்டிருப்பார்கள். மாறாக மாவீரர் அஞ்சலி நிகழ்வின்போது மட்டும் இப்படி கேட்க மாட்டார்கள். கேள்வி - கேள்வி கேட்டவர்கள் தவறானவர்களாக இருக்கலாம். ஆனால் கேள்வி தவறு இல்லையே? பதில்- இத்தனை குறுகிய காலத்திற்குள் தமிழினம் மீண்டும் எழுந்து நிற்கிறது எனில் அதற்கு முக்கிய காரணம் புலம்பெயர்ந்த தமிழர்களின் உணர்வும் பங்களிப்புமே புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒருபுறம் போராட்டத்தை முன் நகர்த்துகின்றனர் மறுபுறத்தில் தாயகத்தில் உள்ள தம் உறவுகளை தாங்கிப் பிடிக்கின்றனர். அவர்கள் உலக தமிழ் இனத்திற்கு சொல்லும் செய்தி இதுதான், “ஓட முடியவில்லை என்றால் நடந்து செல்வோம் நடந்து செல்ல முடியவில்லை என்றால் தவழ்ந்தாவது செல்வோம். ஆனால் ஒருபோதும் எமது இயக்கத்தை நிறுத்திவிட மாட்டோம்” (மீள் பதிவு)

ஈழத் தமிழருக்காக போராடி வீர மரணம் அடைந்த

•ஈழத் தமிழருக்காக போராடி வீர மரணம் அடைந்த தமிழக உறவுகளை நன்றியுடன் நினைவு கூர்வோம்! தமிழர்களின் விடுதலைக்காகப் போராடி மரணித்தவர்களை மாவீரர்களாக போற்றி ஒவ்வொரு வருடமும் நினைவு கூர்ந்து வருகிறோம். இதில் ஈழத் தமிழர்களுக்காக உயிர் துறந்த தமிழக உறவுகளையும் நாம் நன்றியுடன் நினைவு கூரக் கடமைப்பட்டிருக்கிறோம். ஈழத் தமிழர்களுக்காக 18 தமிழக தமிழர்கள் தமிழ்நாட்டில் தீக்குளித்து இறந்திருக்கிறார்கள். இது பலரும் அறிந்த செய்திதான். ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த பல இளைஞர்கள் ஈழத்தில் போராடி வீர மரணம் அடைந்திருக்கிறார்கள். இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஈழத்திலேகூட பலர் அறிந்திராத செய்தியாகும். ஈழத்தில் போராடி வீரமரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த சில மாவீரர்கள் விபரம் வருமாறு, பிரிவு: கரும்புலி நிலை: லெப்டினன்ட் இயக்கப் பெயர்:செங்கண்ணன் இயற்பெயர்: தனுஸ்கோடி செந்தூர் ஊர்: சாத்தூர், சிவகாசி(தமிழகம்) வீரப்பிறப்பு: 25.01.1975 வீரச்சாவு: 11.11.1993 நிகழ்வு: யாழ்ப்பாணம் பலாலி படைத்தளத்தினுள் ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது வீரச்சாவு துயிலுமில்லம்: உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது. நிலை: மேஜர் இயக்கப் பெயர்: உமா இயற்பெயர்: வேலுச்சாமி இந்துமதி ஊர்: தமிழகம் வீரப்பிறப்பு: 27.05.1972 வீரச்சாவு: 11.12.1999 நிகழ்வு: கிளிநொச்சி பரந்தன் பகுதியில் “ஓயாத அலைகள் 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவு துயிலுமில்லம்: விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது. நிலை: வீரவேங்கை இயக்கப் பெயர்: மணியரசி இயற்பெயர்: செல்லத்துரை கமலாதேவி ஊர்: தமிழகம். வீரப்பிறப்பு: 02.02.1977 வீரச்சாவு: 19.04.1996 நிகழ்வு: யாழ்ப்பாணம் தென்மராட்சி கோட்டத்தை கைப்பற்ற மேற்கொள்ளப்பட்ட சூரியகதிர்-2 நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவு துயிலுமில்லம்: ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது. நிலை: வீரவேங்கை இயக்கப் பெயர்: பத்மநாபன் இயற்பெயர்: பி.பத்மநாபன் ஊர்: திருச்சி, தமிழகம். வீரப்பிறப்பு: 27.07.1963 வீரச்சாவு: 16.03.1988 நிகழ்வு: தமிழகத்தின் திருச்சியில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தின்போது வீரச்சாவு நிலை: வீரவேங்கை இயக்கப் பெயர்: சுனில் இயற்பெயர்: கதிரவன் ஊர்: தமிழகம். வீரச்சாவு: 11.04.1988 நிகழ்வு: முல்லைத்தீவு ஒட்டங்குளத்தில் இந்தியப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு நிலை: லெப்டினன்ட் இயக்கப் பெயர்: இனியன்(றஸ்கின்) இயற்பெயர்: முத்தையா இராமசாமி ஊர்: தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தமிழ்நாடு. வீரப்பிறப்பு: 23.07.1962 வீரச்சாவு: 11.12.1991 நிகழ்வு: மன்னார் மருதமடு வேப்பங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு துயிலுமில்லம்: ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது. நிலை: 2ம் லெப்டினன்ட் இயக்கப் பெயர்: உதயசந்திரன் இயற்பெயர்: சேதுபாணடித்தேவர் ராமமணி சேகரன்மகாதேவர் ஊர்: திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு. வீரப்பிறப்பு: 05.05.1969 வீரச்சாவு: 09.06.1992 நிகழ்வு: மன்னார் சிறுநாவற்குளத்தில் சிறிலங்கா படையினர் மீதான அதிரடி தாக்குதலின் போது வீரச்சாவு பிரிவு: கடற்புலி நிலை: கப்டன் இயக்கப் பெயர்: ஈழவேந்தன் இயற்பெயர்: துரைராசன் குமரேசன் ஊர்: தமிழ்நாடு. வீரப்பிறப்பு: 25.05.1969 வீரச்சாவு: 20.11.1992 நிகழ்வு: தமிழீழக் கடற்பரப்பில் வீரச்சாவு துயிலுமில்லம்: எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது. நிலை: லெப்டினன்ட் இயக்கப் பெயர்: சச்சு இயற்பெயர்: அன்ரனி சிறிகாந்த் ஊர்: பியர், இந்தியா. வீரப்பிறப்பு: 04.09.1975 வீரச்சாவு: 20.12.1992 நிகழ்வு: மன்னார் நானாட்டன் மாதிரிக்கிராமம் படை முகாம்களுக்கிடையில் அமைந்துள்ள காவலரண்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு துயிலுமில்லம்: பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது. நிலை: கப்டன் இயக்கப் பெயர்: குணதேவன்(லக்ஸ்மணன்) இயற்பெயர்: அம்மனாரி தென்னரசு ஊர்: தமிழகம் வீரப்பிறப்பு: 01.01.1966 வீரச்சாவு: 13.05.1996 நிகழ்வு: அம்பாறை 11ம்கொலனியில் அமைந்திருந்த காவல்துறை நிலையம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு நிலை: கப்டன் இயக்கப் பெயர்: பெரியதம்பி(விஸ்ணு) இயற்பெயர்: சிவானந்தம் முகேஸ் ஊர்: தமிழகம் வீரப்பிறப்பு: 31.05.1975 வீரச்சாவு: 19.05.1996 நிகழ்வு: திருகோணமலை கீலக்கடவெல படைமுகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவு துயிலுமில்லம்: மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது . நிலை: கப்டன் இயக்கப் பெயர்: குற்றாளன் இயற்பெயர்: கந்தையா கலைச்செல்வன் ஊர்: தமிழகம் வீரப்பிறப்பு: 08.08.1969 வீரச்சாவு: 16.07.1996 நிகழ்வு: மன்னார் பள்ளிமுனைப்பகுதியில் படையினரின் சுற்றிவளைப்பின் போது சயனைட் உட்கொண்டு வீரச்சாவு நிலை: வீரவேங்கை இயக்கப் பெயர்: சுதா இயற்பெயர்: வீரப்பன் இலட்சுமணன் ஊர்: தஞ்சாவூர், தமிழ்நாடு வீரப்பிறப்பு: 28.10.1980 வீரச்சாவு: 05.07.1999 நிகழ்வு: மன்னார் பள்ளமடு பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடிமோதலில் வீரச்சாவு துயிலுமில்லம்: கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது. நிலை: மேஜர் இயக்கப் பெயர்: குருசங்கர் இயற்பெயர்: பழனியாண்டி மகேந்திரன் ஊர்: தமிழகம் வீரப்பிறப்பு: 18.04.1973 வீரச்சாவு: 25.07.1996 நிகழ்வு: முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் நடவடிக்கையின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு துயிலுமில்லம்: பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.. சிலர் இவர்களை தமிழகத்தில் இருந்து நேரடியாக வந்து வீர மரணம் அடைந்தவர்கள் என்கிறார்கள். ஆனால் வேறு சிலர் இல்லை . இவர்கள் மலையகத்தில் இருந்து வந்த இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்கிறார்கள். இதில் யார் கூறுவது சரி என்று உறுதி செய்ய முடியவில்லை. ஆனால் இவர்கள் தமிழ் மக்களுக்காக உயிர் துறந்தவர்கள் என்பதை உறுதியாக கூறமுடியும். எனவே தமிழ் மக்கள் இவர்களையும் நன்றியுடன் நினைவுகூரக் கடமைப்பட்டிருக்கிறார்கள். அதேவேளை தமிழ்நாட்டில் இருந்துவந்து ஈழத்தில் போராடி மரணித்தவர்களின் முழு விபரம் தமிழ் மக்களுக்கு தெரியப்படுத்தல் அவசியம் ஆகும். தமிழ்நாட்டில் மாவீரர் நினைவு நிகழ்வுகளை நடத்துவோர் தமிழ்நாட்டு மாவீரர்களையும் இனி குறிப்பிட்டு மதிப்பளிக்க வேண்டும். இவ்வாறு நினைவு கூர்வது இனிவரும் காலங்களில் ஈழத் தமிழர்களும் தமிழக தமிழர்களும் ஒன்றிணைந்து போராட பெரிதும் உதவிகரமாக அமையும்.