Sunday, August 31, 2014

சுதந்திரதின வாழ்த்து தெரிவிப்போரின் சிந்தனைக்கு!

• சுதந்திரதின வாழ்த்து தெரிவிப்போரின் சிந்தனைக்கு!

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு சட்டத்தின் முன் அனைவரும் சமம். இங்கு கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் எல்லாம் இருக்கிறது என்று நம்புவர்களின் சிந்தனைக்கு சில வினாக்கள்.

(1) தெலுங்கானாவும் காஸ்மீரும் இந்தியாவில் பலவந்தமாக இணைக்கப்பட்டது என்ற உண்மையைக் கூறிய பாராளுமன்ற உறுப்பினருக்கு ஜாமீனில் வெளிவராத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதான் பேச்சு சுதந்திரமா?

(2) அரசுக்கு எதிராக முகநூல் மற்றும் இணையங்களில் எழுதுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என்கிறார்கள். இதுதான் எழுத்து சுதந்திரமா?

(3) தர்மபுரியில் சாதி தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டு நக்சலைட்டுகள் என முத்திரை குத்தி தேசியபாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைத்திருக்கிறார்களே, இததான் கருத்து சுதந்திரமா?

இந்தியாவில் யாருக்கு இருக்கிறது சுதந்திரம்?

• தாங்கள் வாழும் காட்டை அழிக்க வேண்டாம் எனக் கோரிய மலைவாழ் மக்களை எந்தவித விசாரணையும் இன்றி சுட்டுக்கொல்வதற்கு பொலிசாருக்கு சுதந்திரம் உண்டு.

• கருப்பு சட்டத்தை நீக்கு எனக் கோரும் மணிப்பூர் பெண்களை கற்பழிக்க இந்திய ராணுவத்திற்கு சுதந்திரம் உண்டு.

• காஸ்மீரில் அப்பாவி முஸ்லிம்களை கொல்வதற்கு இந்தியபடையினருக்கு சுதந்திரம் உண்டு.

• தமிழக மீனவர்களைக் கொல்வதற்கு இலங்கை கடற்படையினருக்கு சுதந்திரம் உண்டு. அந்த கடற்படையினருக்கு பயிற்சி வழங்க இந்திய ஆட்சியாளர்களுக்கு சுதந்திரம் உண்டு.

• தமிழர்களுக்கு எதிராக குரல் கொடுக்க சுப்பிரமணியசுவாமிக்கு சுதந்திரம் உண்டு. அவருக்கு பொலிஸ் காவலும் உண்டு. ஆனால் அவருக்கு எதிராக இளைஞர்கள் குரல் கொடுத்தால் அவர்களை பிடித்து அடைக்க தமிழக பொலிசுக்கு சுதந்திரம் உண்டு.

• கூலிப்படையை ஏவி கொலை செய்ய காஞ்சி சங்கராச்சாரிக்கு சுதந்திரம் உண்டு. அவரை விடுதலை செய்யவும், அப்பாவி பேரறிவாளனுக்கு மரண தண்டனை விதிக்கவும் இந்திய நீதிதுறைக்கு சுதந்திரம் உண்டு.

• கோடிக்கணக்கில் ஊழல் செய்யவும் வெளியில் சுதந்திரமாக திரியவும் ராசா, கனிமொழி வகையறாக்களுக்கு சுதந்திரம் உண்டு. ஆனால் பல வருடங்களாக சிறையில் வாடும் அப்பாவிகளுக்கு விடுதலை இல்லை.

• தீபெத் அகதிகள் சுதந்திரமாக இந்தியாவில் நடமாடலாம். ஆனால் தமிழ் அகதிகளை மட்டும் கொடிய சிறப்பு முகாமில் அடைத்து வைக்க தமிழக அரசுக்கு முழு சுதந்திரம் உண்டு.

தமிழா!
நீ அடிமையாக இருக்கிறாயா? சுதந்திரமாக இருக்கிறாயா?

Photo: • சுதந்திரதின வாழ்த்து தெரிவிப்போரின் சிந்தனைக்கு!

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு சட்டத்தின் முன் அனைவரும் சமம். இங்கு கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் எல்லாம் இருக்கிறது என்று நம்புவர்களின் சிந்தனைக்கு சில வினாக்கள்.

(1) தெலுங்கானாவும் காஸ்மீரும் இந்தியாவில் பலவந்தமாக இணைக்கப்பட்டது என்ற உண்மையைக் கூறிய பாராளுமன்ற உறுப்பினருக்கு ஜாமீனில் வெளிவராத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதான் பேச்சு சுதந்திரமா?

(2) அரசுக்கு எதிராக முகநூல் மற்றும் இணையங்களில் எழுதுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என்கிறார்கள். இதுதான் எழுத்து சுதந்திரமா?

(3) தர்மபுரியில் சாதி தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டு நக்சலைட்டுகள் என முத்திரை குத்தி தேசியபாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைத்திருக்கிறார்களே, இததான் கருத்து சுதந்திரமா?

இந்தியாவில் யாருக்கு இருக்கிறது சுதந்திரம்?

• தாங்கள் வாழும் காட்டை அழிக்க வேண்டாம் எனக் கோரிய மலைவாழ் மக்களை எந்தவித விசாரணையும் இன்றி சுட்டுக்கொல்வதற்கு பொலிசாருக்கு சுதந்திரம் உண்டு.

• கருப்பு சட்டத்தை நீக்கு எனக் கோரும் மணிப்பூர் பெண்களை கற்பழிக்க இந்திய ராணுவத்திற்கு சுதந்திரம் உண்டு.

• காஸ்மீரில் அப்பாவி முஸ்லிம்களை கொல்வதற்கு  இந்தியபடையினருக்கு சுதந்திரம் உண்டு.

• தமிழக மீனவர்களைக் கொல்வதற்கு இலங்கை கடற்படையினருக்கு சுதந்திரம் உண்டு. அந்த கடற்படையினருக்கு பயிற்சி வழங்க இந்திய ஆட்சியாளர்களுக்கு சுதந்திரம் உண்டு.  
                                                                                                                                                                                                            
• தமிழர்களுக்கு எதிராக குரல் கொடுக்க சுப்பிரமணியசுவாமிக்கு சுதந்திரம் உண்டு. அவருக்கு பொலிஸ் காவலும் உண்டு. ஆனால் அவருக்கு எதிராக இளைஞர்கள் குரல் கொடுத்தால் அவர்களை பிடித்து அடைக்க தமிழக பொலிசுக்கு சுதந்திரம் உண்டு.

• கூலிப்படையை ஏவி கொலை செய்ய காஞ்சி சங்கராச்சாரிக்கு சுதந்திரம் உண்டு. அவரை விடுதலை செய்யவும், அப்பாவி பேரறிவாளனுக்கு மரண தண்டனை விதிக்கவும்  இந்திய நீதிதுறைக்கு சுதந்திரம் உண்டு.

• கோடிக்கணக்கில் ஊழல் செய்யவும் வெளியில் சுதந்திரமாக திரியவும் ராசா, கனிமொழி வகையறாக்களுக்கு  சுதந்திரம் உண்டு. ஆனால் பல வருடங்களாக சிறையில் வாடும் அப்பாவிகளுக்கு விடுதலை இல்லை.

• தீபெத் அகதிகள் சுதந்திரமாக இந்தியாவில் நடமாடலாம். ஆனால் தமிழ் அகதிகளை மட்டும் கொடிய சிறப்பு முகாமில் அடைத்து வைக்க தமிழக அரசுக்கு முழு சுதந்திரம் உண்டு.

தமிழா!
நீ அடிமையாக இருக்கிறாயா? சுதந்திரமாக இருக்கிறாயா?

• மாணவ சமுதாயம் பொங்கியெழுந்தால்......?

• மாணவ சமுதாயம் பொங்கியெழுந்தால்......?

புலிப்பார்வை படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்களை தாக்கியுள்ளமை மிகவும் கண்டனத்திற்குரியது.

“புலிப்பார்வை” தயாரிக்க தயாரிப்பாளருக்கு உரிமை உண்டென்றால்
“புலிப்பார்வை”யை ஆதரிக்க சீமானுக்கு உரிமை உண்டென்றால்
“புலிப்பார்வை”யை எதிர்க்க மாணவர்களுக்கு உரிமை இல்லையா?

ஜனநாயக வழியில் எதிர்ப்பு தெரிவித்த மாணவர்களை
உருட்டுக்கட்டைகளை கொண்டு தாக்கியது கண்டனத்திற்கரியது.

மாணவர்களை தாக்கியது யாராக இருந்தாலும்
அவர்கள் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவெனில்
மாணவ சமுதாயம் ஒன்று திரண்டு பொங்கியெழுந்தால்
அதை உங்களால் தாங்க முடியாது.
அப்புறம் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது.

ஈரானில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை விரட்டியது மாணவர் போராட்டமே!

ஈழத்தில் ஆயுதப்போராட்டத்திற்கு வழிசமைத்தது மாணவர் போராட்டமே!

மாணவர் போராட்டம் மக்கள் போராட்டமாக மாறட்டும்.

Photo: • மாணவ சமுதாயம் பொங்கியெழுந்தால்......?

புலிப்பார்வை படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்களை தாக்கியுள்ளமை மிகவும் கண்டனத்திற்குரியது.

“புலிப்பார்வை” தயாரிக்க தயாரிப்பாளருக்கு உரிமை உண்டென்றால்
“புலிப்பார்வை”யை ஆதரிக்க சீமானுக்கு உரிமை உண்டென்றால்
“புலிப்பார்வை”யை எதிர்க்க மாணவர்களுக்கு உரிமை இல்லையா?

ஜனநாயக வழியில் எதிர்ப்பு தெரிவித்த மாணவர்களை 
உருட்டுக்கட்டைகளை கொண்டு தாக்கியது கண்டனத்திற்கரியது.

மாணவர்களை தாக்கியது யாராக இருந்தாலும்
அவர்கள் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவெனில்
மாணவ சமுதாயம் ஒன்று திரண்டு பொங்கியெழுந்தால்
அதை உங்களால் தாங்க முடியாது. 
அப்புறம் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது.

ஈரானில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை விரட்டியது மாணவர் போராட்டமே!

ஈழத்தில் ஆயுதப்போராட்டத்திற்கு வழிசமைத்தது  மாணவர் போராட்டமே!

மாணவர் போராட்டம் மக்கள் போராட்டமாக மாறட்டும்.

மாணவர் பணம் கேட்டு மிரட்டியது உண்மையா?

• “கத்தி” தயாரிப்பாளரிடம் மாணவர் பணம் கேட்டு மிரட்டியது உண்மையா?

“கத்தி” படத் தயாரிப்பாளர் சுந்தரமுர்த்தி என்பவரிடம் மாணவர் சிலர் பணம் கேட்டு மிரட்டியதாக பொலிசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உண்மையா என்பதை சம்பந்தப்பட்ட மாணவர்கள் தெரிவிக்க வேண்டும்.

தயாரிப்பாளரிடம் பணம் கேட்டு மிரட்டியது உண்மை என்றால் அது மிகவும் கண்டிக்கத்தக்கது.

மாணவர்களை தாக்கியது எந்தளவு கண்டிக்கத்தக்கதோ அதேபோல் மாணவர்கள் பணம் கேட்டு மிரட்டியதும் கண்டிக்கத்தக்கதே!

சுந்தரமுர்த்தி என்பவரின் பேட்டியைக் கேட்க கீழ்வரும் லிங்கை பயன்படுத்தவும்.
https://www.youtube.com/watch?v=38stlq3wlJo&feature=youtu.be

திரைப்படங்களை தடை செய்தல் பற்றி

• திரைப்படங்களை தடை செய்தல் பற்றி

“ஓவ்வொரு வார்த்தைக்கு பின்பும் ஒரு வர்க்கப் பண்பு உள்ளது. ஒரு வர்க்க நலன் உள்ளது”- தோழர் மாவோ சேதுங்

போராட்டத்தை எதிர்த்தும், போராளிகளை பழித்தும்
சிலர் கவிதை எழுதுகின்றனர்.
சிலர் கதை எழுதுகின்றனர்
சிலர் பேசுகின்றனர்
சிலர் சஞ்சிகை வெளியிடுகின்றனர்.
சிலர் திரைப்படம் எடுக்கின்றனர்
கதை எழுதுபவர்கள,சஞ்சிகை வெளியிடுபவர்கள, பேசுபவர்கள்
இவர்களை எல்லாம் தடை செய்யாமல்
திரைப்படங்களை மட்டும் தடை செய்வது என்ன போராட்டம்?

“ஆயிரம் மலர்கள் மலரட்டும். நூறு கருத்துகள் முட்டி மோதட்டும்” என்றார் மாவோ.

எனவே கருத்துகளை தடை செய்யாது அவற்றை நேரில் எதிர்கொள்வோம்
அவற்றின் வர்க்க குணாம்சத்தை அம்பலப்படுத்துவோம்.

மக்கள் மீது நம்பிக்கை வையுங்கள்
மக்கள் விரோத படங்களை
யார் நடித்தாலும், எத்தனை கோடி செலவழித்தாலும்
மக்களே அதனை முற்றாக நிராகரிப்பார்கள்.

Photo: • திரைப்படங்களை தடை செய்தல் பற்றி

“ஓவ்வொரு வார்த்தைக்கு பின்பும் ஒரு வர்க்கப் பண்பு உள்ளது. ஒரு வர்க்க நலன் உள்ளது”- தோழர் மாவோ சேதுங்

போராட்டத்தை எதிர்த்தும், போராளிகளை பழித்தும்
சிலர் கவிதை எழுதுகின்றனர்.
சிலர் கதை எழுதுகின்றனர்
சிலர் பேசுகின்றனர்
சிலர் சஞ்சிகை  வெளியிடுகின்றனர்.
சிலர்  திரைப்படம் எடுக்கின்றனர்
கதை எழுதுபவர்கள,சஞ்சிகை வெளியிடுபவர்கள, பேசுபவர்கள் 
இவர்களை எல்லாம் தடை செய்யாமல்
திரைப்படங்களை மட்டும் தடை செய்வது என்ன போராட்டம்?

“ஆயிரம் மலர்கள் மலரட்டும். நூறு கருத்துகள் முட்டி மோதட்டும்” என்றார் மாவோ.

எனவே கருத்துகளை தடை செய்யாது அவற்றை நேரில் எதிர்கொள்வோம்
அவற்றின் வர்க்க குணாம்சத்தை அம்பலப்படுத்துவோம். 

மக்கள் மீது நம்பிக்கை வையுங்கள்
மக்கள் விரோத படங்களை
யார் நடித்தாலும், எத்தனை கோடி செலவழித்தாலும்
மக்களே அதனை முற்றாக  நிராகரிப்பார்கள்.

13 வருடம் உண்ணாவிரதம் இருந்த இரோம் சார்மிளா இந்திய நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டார்!

• 13 வருடம் உண்ணாவிரதம் இருந்த இரோம் சார்மிளா
இந்திய நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டார்!

மணிப்பூரில் பல அப்பாவிகளின் உயிரிழப்பிற்கு காரணமான
பல பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுக்கு காரணமான
பாதுகாப்பு படைக்கு வழங்கப்பட்ட கருப்பு சட்டத்தை நீக்க கோரி
கடந்த 13 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வரும்
இரோம் சார்மிளா நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

• இந்தியாவில் உண்ணாவிரதம் இருப்பது சட்டப்படி குற்றமா?

• அதுவும் கருப்பு சட்டத்தை நீக்குமாறு கோருவது தவறா?

• அறவழியில் போராடுவது இந்தியாவில் குற்றமா?

• தற்கொலைக்கு முயன்றார் என சிறையில் அடைப்பது நியாயமா?

• இதுதான் காந்தி தேசத்தின் இலட்சனமா?

இன்று இரோம் சார்மிளா விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீதான வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அவரது கோரிக்கையான கருப்பு சட்டம் நீக்கவில்லை.
அதனால் அவரது உண்ணாவிரதமும் நிறுத்தப்படவில்லை.

என்ன கொடுமை இது? வெட்கம்!
இந்த லட்சனத்தில் 2020ல் இந்தியா வல்லரசாமே?

Photo: • 13 வருடம் உண்ணாவிரதம் இருந்த இரோம் சார்மிளா 
இந்திய நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டார்!

மணிப்பூரில் பல அப்பாவிகளின் உயிரிழப்பிற்கு காரணமான
பல பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுக்கு  காரணமான
பாதுகாப்பு படைக்கு வழங்கப்பட்ட கருப்பு சட்டத்தை நீக்க கோரி
கடந்த 13 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வரும்
இரோம் சார்மிளா நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

• இந்தியாவில் உண்ணாவிரதம் இருப்பது சட்டப்படி குற்றமா?

• அதுவும் கருப்பு சட்டத்தை நீக்குமாறு கோருவது தவறா?

• அறவழியில் போராடுவது இந்தியாவில் குற்றமா?

• தற்கொலைக்கு முயன்றார் என சிறையில் அடைப்பது நியாயமா?

• இதுதான் காந்தி தேசத்தின் இலட்சனமா?

இன்று இரோம் சார்மிளா விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீதான வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அவரது கோரிக்கையான கருப்பு சட்டம் நீக்கவில்லை.
அதனால் அவரது உண்ணாவிரதமும் நிறுத்தப்படவில்லை.

என்ன கொடுமை இது? வெட்கம்!
இந்த லட்சனத்தில் 2020ல் இந்தியா வல்லரசாமே?

இது தான் மகிந்த சிந்தனையா?

இது தான் மகிந்த சிந்தனையா?

செய்தி- பாலஸ்தீனத்திற்கு இலங்கை அரசு ஒரு மில்லியன் டாலர் அன்பளிப்பு

இலங்கை முழுவதும் வறட்சி காணப்படுகிறது. குறிப்பாக என்றுமில்லாதவாறு யாழ் குடாநாட்டில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அந்த மக்களுக்கு குடிதண்ணீர் வழங்க பணம் இல்லையாம். ஆனால் பாலஸ்தீனத்திற்கு ஒரு மில்லியன் டாலர் பணம் வழங்குகிறார்கள். இலங்கை அரசு ஏன் இப்படி செய்கிறது?

இலங்கையில் முஸ்லிம் மக்கள் கொல்லப்படுகிறார்கள். அவர்களுடைய வழிபாட்டு தலங்கள் இடிக்கப்படுகிறது. அண்மையில் அழுத்கமவில் கோடிக்கணக்கணக்கான சொத்துகள் நாசமாக்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கை அரசு அவர்களுக்கு நட்ட ஈடு வழங்காமல் பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு உதவி வழங்குவது எதற்காக? உலக முஸ்லிம் நாடுகளை ஏமாற்றுவதற்காகவா?

காரைநகரில் ஒரு சிறுமி ராணுவத்தால் நாசமாக்கப்பட்டாள். அதற்கு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் அதேவேளை மன்னாரில் ஒரு மாணவி ராணுவத்தால் சீரழிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத மகிந்த அரசு மன்னார் ஆயர் புலியாம், அவரை கைது செய்ய வேண்டும் என்று கூறுகிறது.

அண்மையில் பல்கலைக்கழக தமிழ் மாணவன் ஒருவன் அரச ரவுடிகளால் தாக்கப்பட்டிருக்கிறான். ஆனால் அவன் தன்னைத்தானே தாக்கி காயப்டுத்திக் கொண்டதாக மகிந்தவின் பொலிஸ் கண்டு பிடித்துள்ளது.

இதே ரேஞ்சில் போனால் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் தாங்களாவே வந்து சிறையில் குந்தி இருப்பதாக மகிந்த கூறுவாரோ என்று அச்சமாக இருக்கிறது.

இதைக்கூட தாங்கிக் கொள்ளலாம். ஆனால் முள்ளிவாயக்காலில் கொல்லப்பட்ட 40 அயிரம் தமிழர்களும் தாங்களே தங்களை சுட்டு இறந்தார்கள் என்று மட்டும் தயவு சொல்லிவிடாதீர்கள் மகிந்த அவர்களே! ஏனெனில் இதை தாங்கும் சக்தி எமக்கு மட்டுமல்ல உலகில் யாருக்குமே இல்லை.

குறிப்பு- தயவு செய்து இந்த பதிவை சிரிக்காமல் படிக்கவும். இதுதான் இலங்கை மக்களின் இன்றைய நிலை.

Photo: • இது தான் மகிந்த சிந்தனையா?

செய்தி- பாலஸ்தீனத்திற்கு இலங்கை அரசு ஒரு மில்லியன் டாலர் அன்பளிப்பு

இலங்கை முழுவதும் வறட்சி காணப்படுகிறது. குறிப்பாக என்றுமில்லாதவாறு யாழ் குடாநாட்டில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அந்த மக்களுக்கு குடிதண்ணீர் வழங்க பணம் இல்லையாம். ஆனால் பாலஸ்தீனத்திற்கு ஒரு மில்லியன் டாலர் பணம் வழங்குகிறார்கள். இலங்கை அரசு ஏன் இப்படி செய்கிறது?

இலங்கையில் முஸ்லிம் மக்கள் கொல்லப்படுகிறார்கள். அவர்களுடைய வழிபாட்டு தலங்கள் இடிக்கப்படுகிறது. அண்மையில் அழுத்கமவில் கோடிக்கணக்கணக்கான சொத்துகள் நாசமாக்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கை அரசு அவர்களுக்கு நட்ட ஈடு வழங்காமல் பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு உதவி வழங்குவது எதற்காக? உலக முஸ்லிம் நாடுகளை ஏமாற்றுவதற்காகவா?

காரைநகரில் ஒரு சிறுமி ராணுவத்தால் நாசமாக்கப்பட்டாள். அதற்கு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் அதேவேளை மன்னாரில் ஒரு மாணவி ராணுவத்தால் சீரழிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத மகிந்த அரசு மன்னார் ஆயர் புலியாம், அவரை கைது செய்ய வேண்டும் என்று கூறுகிறது.

அண்மையில் பல்கலைக்கழக தமிழ் மாணவன் ஒருவன் அரச ரவுடிகளால் தாக்கப்பட்டிருக்கிறான். ஆனால் அவன் தன்னைத்தானே தாக்கி காயப்டுத்திக் கொண்டதாக மகிந்தவின் பொலிஸ் கண்டு பிடித்துள்ளது. 

இதே ரேஞ்சில் போனால் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் தாங்களாவே வந்து சிறையில் குந்தி இருப்பதாக மகிந்த கூறுவாரோ என்று அச்சமாக இருக்கிறது.

இதைக்கூட தாங்கிக் கொள்ளலாம். ஆனால் முள்ளிவாயக்காலில் கொல்லப்பட்ட 40 அயிரம் தமிழர்களும் தாங்களே தங்களை சுட்டு இறந்தார்கள் என்று மட்டும் தயவு சொல்லிவிடாதீர்கள் மகிந்த அவர்களே! ஏனெனில் இதை தாங்கும் சக்தி எமக்கு மட்டுமல்ல உலகில் யாருக்குமே இல்லை.

குறிப்பு- தயவு செய்து இந்த பதிவை சிரிக்காமல் படிக்கவும். இதுதான் இலங்கை மக்களின் இன்றைய நிலை.

டீல்லிக்கு காவடி தூக்கும் தமிழ்தேசியக் கூட்டமைப்பினர்

• டீல்லிக்கு காவடி தூக்கும் தமிழ்தேசியக் கூட்டமைப்பினர்
இதுவரை சாதித்தது என்ன? இனி சாதிக்க போவது என்ன?

தலைவர் சம்பந்தன் அவர்கள் தன் வாழ்நாளில் பெரும் பகுதியை
டில்லிக்கு காவடி தூக்கியே கழித்துள்ளார்.

இந்தியாவுக்கு பூரண விசுவாசியாக இருந்துள்ளாரேயொழிய
தனக்கு ஓட்டு போட்ட தமிழ் மக்களுக்கு விசுவாசமாக இருந்ததில்லை.

இன்று யாழ் குடாநாட்டில் என்றுமில்லாதவாறு வரட்சி.
குடாநாட்டு மக்களுக்கு குடி நீர்ப்பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந்த தலைவர்களால் இரணைமடு குளத்தில் நீர் பெற்று கொடுக்க முடியவில்லை.
அது குறித்தும் அவர்களுக்கு ஒருவித அக்கறையும் இல்லை.

சிறையில் உள்ளவர்கள் தங்களை விடுதலை செய்யுமாறு கோரி உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்களை பார்வையிட பெற்றோர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
அவர்களை இறந்த பின்பு ஆஸ்பத்திரியில் வந்து பார்கலாம் என்று அரசு பெற்றேர்களுக்கு ஆணவமாக பதில் கொடுக்கிறது. இதற்காக குரல் கொடுக்க இந்த தலைவர்களுக்கு தோன்றவில்லை

ராணுவம் சிறுமிகளைக்கூட பாலியல் வல்லுறவு செய்கிறது. பாதுகாப்பு இன்றி மக்கள் அல்லல்படுகின்றனர். இதற்காக சாதாரண மக்களே ராணுவத்தை எதிர்த்து போராடுகின்றனர். ஆனால் அதில் பங்கெடுக்கக்கூட இந்த தலைவர்களுக்கு விரும்பம் வரவில்லை.

ஆனால் எப்போது பார்த்தாலும் டில்லிக்கு விஜயம் செய்வதும், இந்தியாவை தொடர்ந்தும் நம்பிக்கை நட்சத்திரமாக காட்டுவதுமென மக்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைக்கின்றனர்.

தமது குடும்பத்தை இந்தியாவில் தங்கவைப்பதற்கும்
அந்த குடும்பத்தை வாரம்தோறும் சென்று பார்ப்பதற்கு விசா பெறுவதற்காகவும்
தங்கள் பிள்ளைகளுக்கு இந்திய பல்கலைக்கழகத்தில் சீட்டு பெறவும்
இந்திய அரசிமிருந்து இரகசியமாக பணம் பெறுவதற்காகவும்
தொடர்ந்து சொந்த மக்களுக்கு துரோகம் இழைத்து வரும்
கூட்டமைப்பினரை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.

இவர்களது இந்திய விசுவாசம்
இலங்கை தமிழர்களுக்கு
இதுவரை எதையும் சாதிக்கவில்லை.
இனியும் எதையும் சாதிக்கப் போவதில்லை.

இவர்களால் தமக்கு சில சலுகைகளைப் பெறுவதை தவிர
தமிழ் மக்களுக்கு எதையும் பெற்றுக் கொடுக்கப் போவதில்லை.

Photo: • டீல்லிக்கு காவடி தூக்கும் தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் 
இதுவரை சாதித்தது என்ன? இனி சாதிக்க போவது என்ன?

தலைவர் சம்பந்தன் அவர்கள் தன் வாழ்நாளில் பெரும் பகுதியை 
டில்லிக்கு காவடி தூக்கியே கழித்துள்ளார். 

இந்தியாவுக்கு பூரண விசுவாசியாக இருந்துள்ளாரேயொழிய
தனக்கு ஓட்டு போட்ட தமிழ் மக்களுக்கு விசுவாசமாக இருந்ததில்லை.

இன்று யாழ் குடாநாட்டில் என்றுமில்லாதவாறு வரட்சி.
குடாநாட்டு மக்களுக்கு குடி நீர்ப்பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந்த தலைவர்களால் இரணைமடு குளத்தில் நீர் பெற்று கொடுக்க முடியவில்லை. 
அது குறித்தும் அவர்களுக்கு ஒருவித அக்கறையும் இல்லை.

சிறையில் உள்ளவர்கள் தங்களை விடுதலை செய்யுமாறு கோரி உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்களை பார்வையிட பெற்றோர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
அவர்களை  இறந்த பின்பு ஆஸ்பத்திரியில் வந்து பார்கலாம் என்று அரசு பெற்றேர்களுக்கு ஆணவமாக பதில் கொடுக்கிறது. இதற்காக குரல் கொடுக்க இந்த தலைவர்களுக்கு தோன்றவில்லை

ராணுவம் சிறுமிகளைக்கூட பாலியல் வல்லுறவு செய்கிறது. பாதுகாப்பு இன்றி மக்கள் அல்லல்படுகின்றனர். இதற்காக சாதாரண மக்களே ராணுவத்தை எதிர்த்து போராடுகின்றனர். ஆனால் அதில் பங்கெடுக்கக்கூட இந்த தலைவர்களுக்கு விரும்பம் வரவில்லை.

ஆனால் எப்போது பார்த்தாலும் டில்லிக்கு விஜயம் செய்வதும்,  இந்தியாவை தொடர்ந்தும் நம்பிக்கை நட்சத்திரமாக காட்டுவதுமென மக்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைக்கின்றனர்.

தமது குடும்பத்தை இந்தியாவில் தங்கவைப்பதற்கும் 
அந்த குடும்பத்தை வாரம்தோறும் சென்று பார்ப்பதற்கு விசா பெறுவதற்காகவும்
தங்கள் பிள்ளைகளுக்கு இந்திய பல்கலைக்கழகத்தில் சீட்டு பெறவும்
இந்திய அரசிமிருந்து இரகசியமாக பணம் பெறுவதற்காகவும்
தொடர்ந்து சொந்த மக்களுக்கு துரோகம் இழைத்து வரும் 
கூட்டமைப்பினரை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.

இவர்களது இந்திய விசுவாசம்
இலங்கை தமிழர்களுக்கு 
இதுவரை எதையும் சாதிக்கவில்லை.
இனியும் எதையும் சாதிக்கப் போவதில்லை.

இவர்களால் தமக்கு சில சலுகைகளைப் பெறுவதை தவிர
தமிழ் மக்களுக்கு எதையும் பெற்றுக் கொடுக்கப் போவதில்லை.

அமெரிக்காவில் கறுப்பு இன மக்கள் மீதான அடக்குமுறை!

• அமெரிக்காவில் கறுப்பு இன மக்கள் மீதான அடக்குமுறை!

இதோ இந்த அடக்குமுறை நடப்பது காசாவில் அல்ல.
அல்லது சிரியாவின் ஒரு முலையில் நடப்பது அல்ல
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று கூறும்
அமெரிக்காவிலே இந்த அடக்குமுறை நிகழ்கிறது.

அமெரிக்கா ஒரு ஜனநாயக நாடு என்றும்
ஒரு கறுப்பர் ஜனாதிபதியாக வர முடிகின்றது என்பவர்கள்
கறுப்பர் ஒபாமாவின் ஆட்சியிலேயே
கறுப்பு இனத்தவர்கள் அடக்கி ஒடுக்கப்படுவது பற்றி
என்ன கூறப்போகிறார்கள்?

உலகில் எங்கு அப்பாவிகள் தாக்கப்பட்டாலும்
அவர்களுக்காக அமெரிக்கா தலையிடும்
என்று கூறிய ஒபாமா அவர்கள்
தனது நாட்டில் அப்பாவி கறுப்பர்களை
தாக்கப்படுகையில் ஏன் தலையிடவில்லை?

Photo: • அமெரிக்காவில் கறுப்பு இன மக்கள் மீதான அடக்குமுறை!

இதோ இந்த அடக்குமுறை நடப்பது காசாவில் அல்ல.
அல்லது சிரியாவின் ஒரு முலையில் நடப்பது அல்ல
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று கூறும்
அமெரிக்காவிலே இந்த அடக்குமுறை நிகழ்கிறது.

அமெரிக்கா ஒரு ஜனநாயக நாடு என்றும்
ஒரு கறுப்பர் ஜனாதிபதியாக வர முடிகின்றது என்பவர்கள்
கறுப்பர் ஒபாமாவின் ஆட்சியிலேயே 
கறுப்பு இனத்தவர்கள் அடக்கி ஒடுக்கப்படுவது பற்றி 
என்ன கூறப்போகிறார்கள்?

உலகில் எங்கு அப்பாவிகள் தாக்கப்பட்டாலும் 
அவர்களுக்காக அமெரிக்கா தலையிடும்
என்று கூறிய ஒபாமா அவர்கள்
தனது நாட்டில் அப்பாவி கறுப்பர்களை
தாக்கப்படுகையில் ஏன் தலையிடவில்லை?

சீமான் அவர்களுக்கு நன்றி மற்றும் பாராட்டுகள்

• சீமான் அவர்களுக்கு நன்றி மற்றும் பாராட்டுகள்

செங்கொடி வீர வணக்க நிகழ்வில் தோழர் தமிழரசன் அவர்களின் தாயாரை மேடையேற்றி கௌரவித்த “நாம்தமிழர்” கட்சி தலைவர் சீமான் அவர்களுக்கு எமது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

சீமான் அவர்களின் அரசியல் குறித்து எமக்கு விமர்சனம் இருப்பினும் தோழர் தமிழரசனை நினைவு கூரும் வண்ணம் அவரது தாயாரை மேடையேற்றி மரியாதை அளிக்கப்பட்டது உண்மையிலே பாராட்டப்படவேண்டியது.

தோழர் தமிழரசனுடன் பழகியவர்களே அவருடைய பெயரை உச்சரிக்க தயங்குகின்ற நிலையில், குறிப்பாக முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தோழர் தமிழரசன் பெயரை பொறிக்க அய்யா நெடுமாறனே தயங்குகின்ற நிலையில், சீமான் அவர்கள் தோழர் தமிழரசனை நினைவு கூரும் வண்ணம் செயற்பட்டமை நிச்சயம் பாராட்டுக்குரியது.

மக்கள் மத்தியில் தனது மகன் தமிழரசன் நினைவு கூரப்படுவது நிச்சயம் அத் தாயாருக்கு மகிழ்ச்சியையும் மன நிறைவையும் கொடுக்கும். தனது மகன் கொள்ளைக்காரன் என பழி சுமத்தப்பட்டு பொலிசாரால் கொல்லப்பட்டுவிட்டானே என்ற ஏக்கம் அத் தாயை இத்தனை நாள் வாட்டியிருக்கும்.

தோழர் தமிழரசனுக்கு ஒரு நினைவு சின்னம் தனது இருப்பிடத்தில் அமைக்கப்பட வேண்டும் என்பது அத் தயாரின் நீண்டநாள் விருப்பம். அவரது அந்த விருப்பம் இன்னும் நிறைவேற வில்லையென்றாலும் அரசியல் தலைவர்கள் வெளிப்படையாக தோழர் தமிழரசனை நினைவு கூர ஆரம்பித்திருப்பது அவருக்கு நிச்சயம் மன நிறைவைக் கொடுக்கும்.

அந்தவிதத்தில் அத் தயாரை கௌரவித்த சீமான் அவர்களின் செயற்பாடு வரலாற்றில் என்றென்றும் நன்றியுடன் நினைவில் நிறுத்தப்படும்.

Photo: • சீமான் அவர்களுக்கு நன்றி மற்றும் பாராட்டுகள்

செங்கொடி வீர வணக்க நிகழ்வில்  தோழர் தமிழரசன் அவர்களின் தாயாரை மேடையேற்றி கௌரவித்த “நாம்தமிழர்” கட்சி தலைவர் சீமான் அவர்களுக்கு எமது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

சீமான் அவர்களின் அரசியல் குறித்து எமக்கு விமர்சனம் இருப்பினும் தோழர் தமிழரசனை நினைவு கூரும் வண்ணம் அவரது தாயாரை மேடையேற்றி மரியாதை அளிக்கப்பட்டது உண்மையிலே பாராட்டப்படவேண்டியது.

தோழர் தமிழரசனுடன் பழகியவர்களே அவருடைய பெயரை உச்சரிக்க தயங்குகின்ற நிலையில், குறிப்பாக முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தோழர் தமிழரசன் பெயரை பொறிக்க அய்யா நெடுமாறனே தயங்குகின்ற நிலையில், சீமான் அவர்கள் தோழர் தமிழரசனை நினைவு கூரும் வண்ணம் செயற்பட்டமை நிச்சயம் பாராட்டுக்குரியது.

மக்கள் மத்தியில் தனது மகன் தமிழரசன் நினைவு கூரப்படுவது நிச்சயம் அத் தாயாருக்கு மகிழ்ச்சியையும் மன நிறைவையும் கொடுக்கும். தனது மகன் கொள்ளைக்காரன் என பழி சுமத்தப்பட்டு பொலிசாரால் கொல்லப்பட்டுவிட்டானே என்ற ஏக்கம் அத் தாயை இத்தனை நாள் வாட்டியிருக்கும்.

தோழர் தமிழரசனுக்கு ஒரு நினைவு சின்னம் தனது இருப்பிடத்தில் அமைக்கப்பட வேண்டும் என்பது அத் தயாரின் நீண்டநாள் விருப்பம். அவரது அந்த விருப்பம் இன்னும் நிறைவேற வில்லையென்றாலும் அரசியல் தலைவர்கள் வெளிப்படையாக தோழர் தமிழரசனை நினைவு கூர ஆரம்பித்திருப்பது அவருக்கு நிச்சயம் மன நிறைவைக் கொடுக்கும்.

அந்தவிதத்தில் அத் தயாரை கௌரவித்த சீமான் அவர்களின் செயற்பாடு வரலாற்றில் என்றென்றும் நன்றியுடன் நினைவில் நிறுத்தப்படும்.

தோழர் தமிழரசன் பெயரால் அழைக்கிறார்கள்.

தமிழக மக்களே!

இதுவரை உங்களை
அறிஞர் அண்ணாவின் பெயரால் அழைத்தார்கள்
கலைஞர் கருணாநிதியின் பெயரால் அழைத்தார்கள்
ஜெயா அம்மையார் பெயரால் அழைத்தார்கள்.
ஆனால் தமிழர் வாழ்வில் விடிவு கிட்டவில்லை.
ஈழத் தமிழரையும் அழிவில் இருந்து காக்க முடியவில்லை.

முதன் முதலாக தோழர் தமிழரசன் பெயரால் அழைக்கிறார்கள்.
உங்கள் ஆதரவை அணி திரண்டு வழங்குங்கள்
அடிமை நிலையில் இருந்து விடுதலை பெற
தோழர் தமிழரசன் பாதையை தெரிவு செய்யுங்கள்!

• ஈழத் தமிழர் விடுதலை பெற்றால் அது தமிழக விடுதலைக்கு வழிவகுக்கும் என்று கூறி ஈழத் தமிழரின் விடுதலையை நசுக்க இலங்கை அரசுக்கு உதவி புரிந்து வரும் இந்திய அரசுக்கு உரத்து கூறுங்கள். இனி ஈழத் தமிழனை நசுக்கினாலும் தமிழகம் விடுதலையை விரும்பும் என்பதை.

• ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதன் மூலமே இன்னொரு அடிமைக்கு உதவ முடியும். எனவே தமிழக மக்கள் தங்களது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதே ஈழத் தமிழர்களுக்கு செய்யும் உதவியாகும். இதுவே தோழர் தமிழரசன் அன்று சொன்னது.

• தோழர் தமிழரசன் சொன்னதை நிறைவேற்ற மக்களை அணிதிரட்டும் தோழர்களை பாராட்டுவதோடு மாநாடு வெற்றி பெற ஈழத் தமிழர்கள் சார்பாக வாழ்த்துகிறோம்.

Photo: தமிழக மக்களே!

இதுவரை உங்களை
அறிஞர் அண்ணாவின் பெயரால் அழைத்தார்கள்
கலைஞர் கருணாநிதியின் பெயரால் அழைத்தார்கள்
ஜெயா அம்மையார் பெயரால் அழைத்தார்கள்.
ஆனால் தமிழர் வாழ்வில் விடிவு கிட்டவில்லை.
ஈழத் தமிழரையும் அழிவில் இருந்து காக்க முடியவில்லை.

முதன் முதலாக தோழர் தமிழரசன் பெயரால் அழைக்கிறார்கள்.
உங்கள் ஆதரவை அணி திரண்டு வழங்குங்கள்
அடிமை நிலையில் இருந்து விடுதலை பெற
தோழர் தமிழரசன் பாதையை தெரிவு செய்யுங்கள்!

• ஈழத் தமிழர் விடுதலை பெற்றால் அது தமிழக விடுதலைக்கு வழிவகுக்கும் என்று கூறி ஈழத் தமிழரின் விடுதலையை நசுக்க இலங்கை அரசுக்கு உதவி புரிந்து வரும் இந்திய அரசுக்கு உரத்து கூறுங்கள். இனி ஈழத் தமிழனை நசுக்கினாலும் தமிழகம் விடுதலையை விரும்பும் என்பதை.

• ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதன் மூலமே இன்னொரு அடிமைக்கு உதவ முடியும். எனவே தமிழக மக்கள் தங்களது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதே ஈழத் தமிழர்களுக்கு செய்யும் உதவியாகும். இதுவே தோழர் தமிழரசன் அன்று சொன்னது. 

• தோழர் தமிழரசன் சொன்னதை நிறைவேற்ற  மக்களை அணிதிரட்டும் தோழர்களை பாராட்டுவதோடு மாநாடு வெற்றி பெற ஈழத் தமிழர்கள் சார்பாக வாழ்த்துகிறோம்.

லண்டனில் பிள்ளையார் சதுர்த்தி !

• லண்டனில் பிள்ளையார் சதுர்த்தி !

கரைவது பிள்ளையார் மட்டுமல்ல
கஸ்டப்பட்டு உழைத்த பணமும் அல்லவா!

கடந்த வருடம் லண்டன் ஈஸ்ட்காம் நகரில் ஒரு கடையில் மட்டுமே பிள்ளையார் சிலைகள் விற்கப்பட்டன. ஆனால் இம்முறை பல கடைகளில் விற்கப்படுகின்றன. அந்தளவுக்கு மிக வேகமாக பிள்ளையார் சதுர்த்தி கொண்டாட்டம் மக்கள் மத்தியில் பரவுகிறது.

500 பவுண்ட்க்கு அதாவது சுமார் 1 லட்சம் ரூபாயக்கு பிள்ளையார் சிலை வாங்கி கரைக்கிறார்கள். இந்தியா போல் இங்கு ஆற்றிலோ அல்லது கடலிலோ கரைக்க அனுமதி கிடையாது. எனவே வீட்டு பாத்றூம் தொட்டியில்தான் பிள்ளையாரை கரைக்க வேண்டும்.

கஸ்டப்பட்டு குளிரிலும் பனியிலும் உழைத்த பணத்தை இப்படி முட்டாள்தனமாக பக்தியின் பேரால் கரைப்பதை என்னவென்று அழைப்பது?

வன்னியில் பரீட்சைக்கு பணம் இன்றி திருடிய சிறுவன்
பிள்ளைகளை கிணற்றில் வீசி கொலை செய்த தாய்
இன்னனும் சிறையில் வாடும் இளைஞர்கள்
நாட்டில் எமது உறவுகள் இவ்வாறான நிலையில் இருக்கும்போது
லண்டனில் பக்தியின் பேரால் இந்த முட்டாள்தனம் தேவைதானா?

கொடிய நோயக் கிருமிகளைவிட
மிக வேகமாக பரவும் பிள்ளையார் வைரஸ்களை
ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தாவிடின்
தமிழ்சமூகம் மிகப் பெரிய அழிவை சந்திக்க வேண்டி வரும்.

Photo: • லண்டனில் பிள்ளையார் சதுர்த்தி !

கரைவது பிள்ளையார் மட்டுமல்ல
கஸ்டப்பட்டு உழைத்த பணமும் அல்லவா!

கடந்த வருடம் லண்டன் ஈஸ்ட்காம் நகரில் ஒரு கடையில் மட்டுமே பிள்ளையார் சிலைகள் விற்கப்பட்டன. ஆனால் இம்முறை பல கடைகளில் விற்கப்படுகின்றன. அந்தளவுக்கு மிக வேகமாக பிள்ளையார் சதுர்த்தி கொண்டாட்டம் மக்கள் மத்தியில் பரவுகிறது.

500 பவுண்ட்க்கு அதாவது சுமார் 1 லட்சம் ரூபாயக்கு பிள்ளையார் சிலை வாங்கி கரைக்கிறார்கள். இந்தியா போல் இங்கு ஆற்றிலோ அல்லது கடலிலோ  கரைக்க அனுமதி கிடையாது. எனவே வீட்டு பாத்றூம் தொட்டியில்தான் பிள்ளையாரை கரைக்க வேண்டும்.

கஸ்டப்பட்டு குளிரிலும் பனியிலும் உழைத்த பணத்தை இப்படி முட்டாள்தனமாக பக்தியின் பேரால் கரைப்பதை என்னவென்று அழைப்பது?

வன்னியில் பரீட்சைக்கு பணம் இன்றி திருடிய சிறுவன்
பிள்ளைகளை கிணற்றில் வீசி கொலை செய்த தாய்
இன்னனும் சிறையில் வாடும் இளைஞர்கள்
நாட்டில் எமது உறவுகள் இவ்வாறான நிலையில் இருக்கும்போது
லண்டனில் பக்தியின் பேரால் இந்த முட்டாள்தனம் தேவைதானா?

கொடிய நோயக் கிருமிகளைவிட
மிக வேகமாக பரவும் பிள்ளையார் வைரஸ்களை
ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தாவிடின்
தமிழ்சமூகம் மிகப் பெரிய அழிவை சந்திக்க வேண்டி வரும்.

அரசியல் நாவல் கருத்தரங்கு

லண்டன் ஈஸ்ட்காமில் நடைபெற்ற “அரசியல் நாவல் கருத்தரங்கு”

நேற்று (30.08.2014) யமுனா ராஜேந்திரன் தலைமையில் “தமிழ் மொழி சமூகங்களின் செயற்பாட்டகம்”, “விம்பம்” மற்றும் “எனில்” ஆகியவற்றின் ஆதரவில் முழு நாள் உரையாடல் நிகழ்வாக இவ் அரசியல் நாவல் கருத்தரங்கு நடைபெற்றது.

• இலக்கிய ஆர்வலர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இவ் உரையாடல் நிகழ்வு கிருஸ்ணராஜா அவர்களினால் பறை இசையுடன் ஆரம்பமானது.

• முதலாவதாக வேலு அவர்கள் பாரதிநாதன் எழுதிய “தறியுடன்” நாவல் குறித்த தனது கருத்துகளை முன்வைத்தார்.

• இரண்டாவதாக சேனன் அவர்கள் லக்ஷ்மி சரவணகுமார் எழுதிய “கானகன்” நாவல் குறித்த தனது கருத்துகளை தெரிவித்தார்.

• மூன்றாவதாக கால்மாக்ஸ் அவர்கள் இரா.முருகவேல் எழுதிய “மிளிர்கல்” நாவல் குறித்து தனது கருத்துகளை முன்வைத்தார்.

மேற்குறிப்பிட்ட மூன்று நாவல்களும் இந்திய தமிழ் அரசியல் நாவல்கள் ஆகும். அதனைத் தொடர்ந்து ஈழத்து தமிழ் அரசியல் நாவல்கள் நான்கு பற்றி உரையாடப்பட்டன.

• முதலாவதாக தமிழ்கவி அவர்கள் எழுதிய “ஊழிக்காலம்” பற்றி டென்மார்க்கில் இருந்து வந்திருந்த ஆதவன் அவர்கள் தனது கருத்துகளை தெரிவித்தார்.

• இரண்டாவதாக குணா கவியழகன் எழுதிய “நஞ்சுண்ட காடு” நாவல் குறித்து சுவிற்சலாந்தில் இருந்து வந்த சயந்தன் அவர்கள் தனது கருத்துகளை முன்வைத்தார்.

• மூன்றாவதாக நௌசாத் அவர்கள் எழுதிய “கொல்வதெழுதல் 90” என்னும் நாவல் குறித்து பக்திக் அபூபக்கர் அவர்கள் தனது கருத்துக்களை முன்வைத்தார்.

• நான்காவதாக ஸர்மிளா ஸெய்யித் அவர்கள் எழுதிய “உம்மத்” நாவல் குறித்து மாதுமை அவர்களின் கருத்துகளை அவர் வரமுடியாமையினால் நீசா அவர்கள் சபையில் வாசித்தார்.

மதிய போசன இடை வேளைக்கு பின்பு சுஜித்ஜி இயக்கிய “மாசிலன்” குறும்படம் காண்பிக்கப்பட்டது.

அதன் பின்பு பௌசர் இன் வழிப்படுத்தலில் உரையாடல் இடம்பெற்றது. பார்வையாளர்களின் வினாக்கள் மற்றும் கருத்துகளுக்கு சம்பந்தப்பட்ட பேச்சாளர்கள் பதில் அளித்து பேசினார்கள்.

இறுதியாக 4.30 மணியளவில் கருத்தரங்கு நிறைவு பெற்றது.

குறிப்பு-

(1)மிகவும் பயன் மிக்க ஒரு இலக்கிய உரையாடல் நிகழ்வை நடத்திய ஏற்பாட்டாளர்கள் நிச்சயம் பாராட்டுக்குரியவர்கள்.

(2)தொடர்ந்தும் இது போன்ற காத்திரமான பங்களிப்பை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்கள்.

(3)அவர்களது அனைவரின் இலக்கிய உழைப்பிற்கும் பங்களிப்பிற்கும் வாழ்த்துகள்.

Photo: லண்டன் ஈஸ்ட்காமில் நடைபெற்ற “அரசியல் நாவல் கருத்தரங்கு”

நேற்று (30.08.2014) யமுனா ராஜேந்திரன் தலைமையில் “தமிழ் மொழி சமூகங்களின் செயற்பாட்டகம்”, “விம்பம்” மற்றும் “எனில்” ஆகியவற்றின் ஆதரவில் முழு நாள்  உரையாடல் நிகழ்வாக இவ் அரசியல் நாவல் கருத்தரங்கு நடைபெற்றது.

• இலக்கிய ஆர்வலர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இவ்  உரையாடல் நிகழ்வு  கிருஸ்ணராஜா அவர்களினால் பறை இசையுடன் ஆரம்பமானது.

• முதலாவதாக வேலு அவர்கள் பாரதிநாதன் எழுதிய “தறியுடன்” நாவல் குறித்த தனது கருத்துகளை முன்வைத்தார்.

• இரண்டாவதாக சேனன் அவர்கள் லக்ஷ்மி சரவணகுமார் எழுதிய “கானகன்” நாவல் குறித்த தனது கருத்துகளை தெரிவித்தார்.

• மூன்றாவதாக கால்மாக்ஸ் அவர்கள் இரா.முருகவேல் எழுதிய “மிளிர்கல்” நாவல் குறித்து தனது கருத்துகளை முன்வைத்தார்.

மேற்குறிப்பிட்ட மூன்று நாவல்களும் இந்திய தமிழ் அரசியல் நாவல்கள் ஆகும். அதனைத் தொடர்ந்து ஈழத்து தமிழ் அரசியல் நாவல்கள் நான்கு பற்றி உரையாடப்பட்டன.

• முதலாவதாக தமிழ்கவி அவர்கள் எழுதிய “ஊழிக்காலம்” பற்றி டென்மார்க்கில் இருந்து வந்திருந்த ஆதவன் அவர்கள் தனது கருத்துகளை தெரிவித்தார்.

• இரண்டாவதாக குணா கவியழகன் எழுதிய “நஞ்சுண்ட காடு” நாவல் குறித்து சுவிற்சலாந்தில் இருந்து வந்த சயந்தன் அவர்கள் தனது கருத்துகளை முன்வைத்தார்.

• மூன்றாவதாக நௌசாத் அவர்கள் எழுதிய “கொல்வதெழுதல் 90” என்னும் நாவல் குறித்து பக்திக் அபூபக்கர் அவர்கள் தனது கருத்துக்களை முன்வைத்தார்.

• நான்காவதாக ஸர்மிளா ஸெய்யித் அவர்கள் எழுதிய “உம்மத்” நாவல் குறித்து மாதுமை அவர்களின் கருத்துகளை அவர் வரமுடியாமையினால் நீசா அவர்கள் சபையில் வாசித்தார்.

மதிய போசன இடை வேளைக்கு பின்பு சுஜித்ஜி இயக்கிய “மாசிலன்” குறும்படம் காண்பிக்கப்பட்டது.

அதன் பின்பு பௌசர் இன் வழிப்படுத்தலில் உரையாடல் இடம்பெற்றது. பார்வையாளர்களின் வினாக்கள் மற்றும் கருத்துகளுக்கு சம்பந்தப்பட்ட பேச்சாளர்கள் பதில் அளித்து பேசினார்கள்.

இறுதியாக 4.30 மணியளவில்  கருத்தரங்கு நிறைவு பெற்றது.

குறிப்பு- 

(1)மிகவும் பயன் மிக்க ஒரு இலக்கிய உரையாடல் நிகழ்வை நடத்திய ஏற்பாட்டாளர்கள் நிச்சயம் பாராட்டுக்குரியவர்கள். 

(2)தொடர்ந்தும் இது போன்ற காத்திரமான பங்களிப்பை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்கள்.

(3)அவர்களது அனைவரின் இலக்கிய உழைப்பிற்கும் பங்களிப்பிற்கும் வாழ்த்துகள்.

Thursday, August 14, 2014

• மறக்க முடியாத யூலை படுகொலைகள்

• மறக்க முடியாத யூலை படுகொலைகள்

1983ம் ஆண்டு ஜே.ஆர் அரசின் தூண்டுதலால் பல தமிழர்கள் கொல்லப்பட்டனர். குறிப்பாக வெலிகடைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ் கைதிகள் பலர் கொல்லப்பட்டனர். எமது தோழர் அழகன் என்ற சந்திரகுமாரும் அந்த கொல்லப்பட்டவர்களில் ஒருவர்.

அன்றைய இலங்கை அரசு இதனை “இனக்கலவரம்” என்றது. திருநெல்வேலியில் 13 இராணுவத்தினரை புலிகள் கொன்றதாலே இந்த கலவரம் உருவானதாகவும் கூறியது. ஆனால் 1956, 1977 என அதற்கு முன்னரும் பல முறை கலவரம் என்னும் பேரில் தமிழர்கள் தாக்கப்பட்டார்கள். அப்போது புலிகள் இயக்கம் இருக்கவில்லையே!

மேலும் 1983க்கு பின்னர் ஆயிரக்கணக்கில் இராணுவம் புலிகளால் கொல்லப்பட்டபோதும் கலவரம் வெடிக்கவில்லையே! எனவே இனவாத அரசுகள் தங்கள் நலன்களுக்காக காடையர்களை தூண்டிவிட்டனர் என்பதே உண்மையாகும்.

1983 கலவரத்தின்போது பல தமிழர்கள் சிங்கள மக்களால் பாதுகாக்கப்பட்டார்கள். பாணந்துறையில் வாழ்ந்த தமிழ் தோட்ட தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடந்தபோது ஒரு சிங்களவர் தனது உயிரைக் கொடுத்து அவர்களை காப்பாற்றியிருக்கிறார். அந்த தமிழ் மக்கள் ஒவ்வொரு வருடமும் அந்த சிங்கள மனிதரை நன்றியுடன் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

அதேபோல் தமிழ் பகுதியில் வாழ்ந்த பல சிங்களவர்களை தமிழ மக்கள் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். கரவெட்டியில் நெசவு தொழிற்சாலையில் வேலை செய்த ஒரு சிங்கள குடும்பம் அவ்வூர் தமிழ் மக்களால் பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டதை நானே கண்டிருக்கிறேன்.

1983 கலவரத்தையடுத்து 65 தொழிற்சங்கங்கள் கூடி அதனை வன்மையாக கண்டித்திருந்தன. பல்கலைக்கழகங்களில் ஜே.வி.பி யின் மாணவர் இயக்கமே பல தமிழ் மாணவர்களை காப்பாற்றியது. ஆனால் இலங்கை அரசு இனக் கலவரத்திற்கு சில இடதுசாரி இயக்கங்களே காரணம் எனக்கூறி ஜே.வி.பி உட்பட சிலவற்றை தடை செய்தது.

இனக் கலவரங்களை இலங்கை அரசு தடுக்காமையே பிரபாகரன்கள் உருவாகக் காரணம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவே பகிரங்கமாக கூறினார். சமாதானத்தை கொண்டு வருவேன் எனக்கூறி சிங்கள மக்கள் மத்தியில் அமோக வெற்றி பெற்ற ஒரே ஜனாதிபதியும் அவரே.

இனஒடுக்குமுறையினாலோ அல்லது தமிழ் மக்கள் மீது ஒரு யுத்தம் என்னும் பேரில் பல்லாயிரக் கணக்கானோரை அழிப்பதாலோ எந்த பயனும் இல்லை என்பதை சிங்கள மக்கள் உணர வேண்டும்.

தமிழ் மக்களுடன் ஜக்கியமாக இருப்பதன் மூலமே சிங்கள மக்கள் சுதந்திரத்தையும் நல் வாழ்வையும் பெறமுடியும். இல்லையேல் தமிழ் மக்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும் இந்தியாவுக்கே அடிமையாகும் நிலை ஏற்படும்.

Photo: • மறக்க முடியாத யூலை படுகொலைகள்

1983ம் ஆண்டு ஜே.ஆர் அரசின் தூண்டுதலால் பல தமிழர்கள் கொல்லப்பட்டனர். குறிப்பாக வெலிகடைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ் கைதிகள் பலர் கொல்லப்பட்டனர். எமது தோழர் அழகன் என்ற சந்திரகுமாரும் அந்த கொல்லப்பட்டவர்களில் ஒருவர்.

அன்றைய இலங்கை அரசு இதனை “இனக்கலவரம்” என்றது. திருநெல்வேலியில் 13 இராணுவத்தினரை புலிகள் கொன்றதாலே இந்த கலவரம் உருவானதாகவும் கூறியது. ஆனால் 1956, 1977 என அதற்கு முன்னரும் பல முறை கலவரம் என்னும் பேரில் தமிழர்கள் தாக்கப்பட்டார்கள். அப்போது புலிகள் இயக்கம் இருக்கவில்லையே!

மேலும் 1983க்கு பின்னர் ஆயிரக்கணக்கில் இராணுவம் புலிகளால் கொல்லப்பட்டபோதும் கலவரம் வெடிக்கவில்லையே! எனவே இனவாத அரசுகள் தங்கள் நலன்களுக்காக காடையர்களை  தூண்டிவிட்டனர் என்பதே உண்மையாகும்.

1983 கலவரத்தின்போது பல தமிழர்கள் சிங்கள மக்களால் பாதுகாக்கப்பட்டார்கள். பாணந்துறையில் வாழ்ந்த தமிழ் தோட்ட தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடந்தபோது ஒரு சிங்களவர் தனது உயிரைக் கொடுத்து அவர்களை காப்பாற்றியிருக்கிறார். அந்த தமிழ் மக்கள் ஒவ்வொரு வருடமும் அந்த சிங்கள மனிதரை நன்றியுடன் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

அதேபோல் தமிழ் பகுதியில் வாழ்ந்த பல சிங்களவர்களை தமிழ மக்கள் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். கரவெட்டியில் நெசவு தொழிற்சாலையில் வேலை செய்த ஒரு சிங்கள குடும்பம் அவ்வூர் தமிழ் மக்களால் பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டதை நானே கண்டிருக்கிறேன்.

1983 கலவரத்தையடுத்து 65 தொழிற்சங்கங்கள் கூடி அதனை வன்மையாக கண்டித்திருந்தன. பல்கலைக்கழகங்களில் ஜே.வி.பி யின் மாணவர் இயக்கமே பல தமிழ் மாணவர்களை காப்பாற்றியது. ஆனால் இலங்கை அரசு இனக் கலவரத்திற்கு சில இடதுசாரி இயக்கங்களே காரணம் எனக்கூறி ஜே.வி.பி உட்பட சிலவற்றை தடை செய்தது.

இனக் கலவரங்களை இலங்கை அரசு தடுக்காமையே பிரபாகரன்கள் உருவாகக் காரணம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவே பகிரங்கமாக கூறினார். சமாதானத்தை கொண்டு வருவேன் எனக்கூறி சிங்கள மக்கள் மத்தியில் அமோக வெற்றி பெற்ற ஒரே ஜனாதிபதியும் அவரே.

இனஒடுக்குமுறையினாலோ அல்லது தமிழ் மக்கள் மீது ஒரு யுத்தம் என்னும் பேரில் பல்லாயிரக் கணக்கானோரை அழிப்பதாலோ  எந்த பயனும் இல்லை என்பதை சிங்கள மக்கள் உணர வேண்டும். 

தமிழ் மக்களுடன் ஜக்கியமாக இருப்பதன் மூலமே சிங்கள மக்கள் சுதந்திரத்தையும் நல் வாழ்வையும் பெறமுடியும். இல்லையேல் தமிழ் மக்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும் இந்தியாவுக்கே அடிமையாகும் நிலை ஏற்படும்.

• கவிஞர் குட்டி ரேவதியுடன் ஒரு சந்திப்பு

• கவிஞர் குட்டி ரேவதியுடன் ஒரு சந்திப்பு

இன்று (26.07.2014) மாலை 5 மணிக்கு லண்டனில் ஈஸ்ட்காம் நகரில் கவிஞர் குட்டி ரேவதியுடன் சந்திப்பு “தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகம்” சார்பில் இடம் பெற்றது. “பெண்கவிதையும் சமூக மாற்றமும்” என்னும் தலைப்பில் சந்திப்பு நடைபெற்றது.

திரைப்பட விமர்சகர் யமுனா ராஜேந்திரன் அவர்கள் குட்டி ரேவதி குறித்த சுருக்கமான அறிமுகவுரையை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து கவிஞர் மாதுமை தலைமை உரை நிகழ்த்தினார். அதன்பின்னர் குட்டி ரேவதி உரையாற்றினார். பின்னர் கலந்துரையாடலில் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். இறுதியாக தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகம் சார்பில் பௌசர் நன்றி கூறினார்.

லண்டனில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சர்வதேச கவிதை திருவிழாவில் பங்குபெற வந்திருக்கும் குட்டி ரேவதி இன்றைய இச் சந்திப்பில் கலந்து கொண்டு தனது அனுபவங்களையும் கருத்துகளையும் பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

சில அவதானிப்புகள்!

(1)”தமிழ்நாட்டை அதிகம் எதிர்பார்க்காதீர்கள். நம்பாதீர்கள்” என குட்டி ரேவதி பல தடவை குறிப்பிட்டார். இது தமிழ்நாட்டு ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகள் குறித்த அவரது பார்வையாக இருக்கும் என நம்புகிறேன். மாறாக, தமிழ்நாட்டு மக்களின் ஆதரவும் உதவியும் இன்றி ஈழத்தமிழர்கள் எப்படி தமது போராட்டத்தில் வெல்ல முடியும்?

(2)கலையை நாம் பயன்படுத்த வேண்டும் என்ற அவரது கூற்று ஏற்றுக்கொள்ளக்கூடியதே. ஆனால் அந்த கலையை வழி நடத்தக்கூடிய அரசியல் குறித்து அவர் விரிவாக கூறாதது ஏமாற்றமே. மேலும் அவர் கட்சி அரசியலை மறுதலிக்கின்றாரோ என்ற சந்தேகத்தையும் அவரது உரை கொடுக்கிறது.

(3) குட்டி ரேவதி தனது உரையில் பல தடவை அம்பேத்கார் பெரியார் புத்தர் போன்றவர்களின் மேற்கோள்களை சுட்டிக்காட்டினார். அவர்கள் மாபெரும் அசான்கள்தான். அதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதிக வாசிப்பு கொண்ட குட்டி ரேவதி தனது உரையில் ஒரு தடவைகூட மாக்ஸ் பெயரை உச்சரிக்காதது ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில் இலங்கையில் சாதீயத்திற்கு எதிராக தலைமை கொடுத்து போராடியது கம்யூனிசக் கட்சியே. எனவே ஈழத்து சாதீயத்தை படித்த குட்டி ரேவதி, அம்பேத்கார் போதனைகள் ஏன் ஈழத்தில் செல்வாக்கு பெறவில்லை என்பதை கண்டுகொள்ளாமல் இருந்திருப்பாரா?

Photo: • கவிஞர் குட்டி ரேவதியுடன் ஒரு சந்திப்பு

இன்று (26.07.2014) மாலை 5 மணிக்கு லண்டனில் ஈஸ்ட்காம் நகரில் கவிஞர் குட்டி ரேவதியுடன் சந்திப்பு “தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகம்” சார்பில் இடம் பெற்றது. “பெண்கவிதையும் சமூக மாற்றமும்” என்னும் தலைப்பில் சந்திப்பு நடைபெற்றது.

திரைப்பட விமர்சகர் யமுனா ராஜேந்திரன் அவர்கள் குட்டி ரேவதி குறித்த சுருக்கமான அறிமுகவுரையை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து கவிஞர் மாதுமை தலைமை உரை நிகழ்த்தினார். அதன்பின்னர் குட்டி ரேவதி உரையாற்றினார். பின்னர் கலந்துரையாடலில் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். இறுதியாக தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகம் சார்பில் பௌசர் நன்றி கூறினார்.

லண்டனில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சர்வதேச கவிதை திருவிழாவில் பங்குபெற வந்திருக்கும் குட்டி ரேவதி இன்றைய இச் சந்திப்பில் கலந்து கொண்டு தனது அனுபவங்களையும் கருத்துகளையும் பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

சில அவதானிப்புகள்!

(1)”தமிழ்நாட்டை அதிகம் எதிர்பார்க்காதீர்கள். நம்பாதீர்கள்” என குட்டி ரேவதி பல தடவை குறிப்பிட்டார். இது தமிழ்நாட்டு ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகள் குறித்த அவரது பார்வையாக இருக்கும் என நம்புகிறேன். மாறாக, தமிழ்நாட்டு மக்களின் ஆதரவும் உதவியும் இன்றி ஈழத்தமிழர்கள் எப்படி தமது போராட்டத்தில் வெல்ல முடியும்?

(2)கலையை நாம் பயன்படுத்த வேண்டும் என்ற அவரது கூற்று ஏற்றுக்கொள்ளக்கூடியதே. ஆனால்  அந்த கலையை வழி நடத்தக்கூடிய அரசியல் குறித்து அவர் விரிவாக கூறாதது ஏமாற்றமே. மேலும் அவர் கட்சி அரசியலை மறுதலிக்கின்றாரோ என்ற சந்தேகத்தையும் அவரது உரை கொடுக்கிறது.

(3) குட்டி ரேவதி தனது உரையில் பல தடவை அம்பேத்கார் பெரியார் புத்தர் போன்றவர்களின் மேற்கோள்களை சுட்டிக்காட்டினார். அவர்கள் மாபெரும் அசான்கள்தான். அதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதிக வாசிப்பு கொண்ட குட்டி ரேவதி தனது உரையில் ஒரு தடவைகூட மாக்ஸ் பெயரை உச்சரிக்காதது ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில் இலங்கையில் சாதீயத்திற்கு எதிராக தலைமை கொடுத்து போராடியது கம்யூனிசக் கட்சியே. எனவே ஈழத்து சாதீயத்தை படித்த குட்டி ரேவதி, அம்பேத்கார் போதனைகள் ஏன் ஈழத்தில் செல்வாக்கு பெறவில்லை என்பதை கண்டுகொள்ளாமல் இருந்திருப்பாரா?

காவல்துறை அதிகாரி சைலேந்திபாபுவிடம் யாராவது தமிழ் உணர்வாளர் பின்வரும் கேள்விகளை கேட்பாரா?

அமெரிக்காவுக்கு வருகை தரும் காவல்துறை அதிகாரி சைலேந்திபாபுவிடம் யாராவது தமிழ் உணர்வாளர் பின்வரும் கேள்விகளை கேட்பாரா?

எதிர்வரும் 31.07.2014 யன்று காவல்துறை கண்காணிப்பாளர் சைலேந்திரபாபு அவர்கள் அமெரிக்க தமிழ் சங்கத்தில் உரையாற்ற உள்ளார். அவர் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் உள்ளார் என அறிகிறோம். எனவே யாராவது தமிழ் இன உணர்வாளர்கள் அவரிடம் பின்வரும் கேள்விகளைக் கேட்க வேண்டும் என விரும்புகிறோம்.

1993ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளராக சைலேந்திரபாபு இருந்தபோது வேடசந்தூர் என்னும் இடத்தில் நாகராசன் என்னும் தமிழ்நாடுவிடுதலை போராளி ஒருவரை “போலி என்கவுண்டர்”மூலம் கொன்றது ஏன்?

அண்மையில் தர்மபுரியில் 6 இளைஞர்கள் மரீனா கடற்கரையில் ஆயுதப் பயிற்சி எடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டில் தேசியபாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது பொய்யான குற்றச்சாட்டு என்று உண்மை அறியும் குழு, பத்திரிகைகள், மனித உரிமை அமைப்புகள் கண்டித்துள்ளன. வேலூர் காவல்துறை கண்காணிப்hளரும் இது பொய்யான குற்றச்சாட்டு என்று கூறியுள்ளார். ஆனால் தமிழ்நாடு அரசோ அல்லது தமிழ்நாடு காவல்துறையோ இதுவரை இந்த குற்றச்சாட்டை வாபஸ் பெறவில்லை. எனவே இது குறித்து சைலேந்திரபாபு நடவடிக்கை எடுப்பாரா?

தமிழ்நாட்டில் அப்பாவி அகதிகள் கைது செய்யப்பட்டு சிறப்பு முகாமில் அடைத்துவைத்து சித்திரவதை செய்யப்படுகிறார்கள். அங்கு காவல்பரியும் காவல்துறை அதிகாரிகள் சட்ட விரோதமாக செயற்படுவதுடன் அகதிகளை கெட்ட வார்த்தைகளால் ஏசியும் அடித்தும் துன்புறுத்துகின்றனர். இதை சைலேந்திராபாபு கவனத்தில் கொண்டு அந்த அகதிகள் விடுதலைக்கு வழி செய்வாரா?

யாராவது ஒரு தமிழ் இன உணர்வாளர் இந்த கேள்விகளை கண்காணிப்பாளர் சைலேந்திரபாபுவிடம் கேட்கவேண்டும். இது பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக நீதியை பெறுவதற்கு உதவி புரியும் என நம்புகிறோம்.

Photo: • அமெரிக்காவுக்கு வருகை தரும் காவல்துறை அதிகாரி சைலேந்திபாபுவிடம் யாராவது தமிழ் உணர்வாளர் பின்வரும் கேள்விகளை கேட்பாரா?

எதிர்வரும் 31.07.2014 யன்று காவல்துறை கண்காணிப்பாளர் சைலேந்திரபாபு அவர்கள் அமெரிக்க தமிழ் சங்கத்தில் உரையாற்ற உள்ளார். அவர் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் உள்ளார் என அறிகிறோம். எனவே யாராவது தமிழ் இன உணர்வாளர்கள் அவரிடம் பின்வரும் கேள்விகளைக் கேட்க வேண்டும் என விரும்புகிறோம்.

1993ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளராக சைலேந்திரபாபு இருந்தபோது வேடசந்தூர் என்னும் இடத்தில் நாகராசன் என்னும் தமிழ்நாடுவிடுதலை போராளி ஒருவரை “போலி என்கவுண்டர்”மூலம் கொன்றது ஏன்?

அண்மையில் தர்மபுரியில் 6 இளைஞர்கள் மரீனா கடற்கரையில் ஆயுதப் பயிற்சி எடுத்தார்கள் என்ற  குற்றச்சாட்டில் தேசியபாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது பொய்யான குற்றச்சாட்டு என்று உண்மை அறியும் குழு, பத்திரிகைகள், மனித உரிமை அமைப்புகள் கண்டித்துள்ளன. வேலூர் காவல்துறை கண்காணிப்hளரும் இது பொய்யான குற்றச்சாட்டு என்று கூறியுள்ளார். ஆனால் தமிழ்நாடு அரசோ அல்லது தமிழ்நாடு காவல்துறையோ இதுவரை இந்த குற்றச்சாட்டை வாபஸ் பெறவில்லை. எனவே இது குறித்து சைலேந்திரபாபு நடவடிக்கை எடுப்பாரா?

தமிழ்நாட்டில் அப்பாவி அகதிகள் கைது செய்யப்பட்டு சிறப்பு முகாமில் அடைத்துவைத்து சித்திரவதை செய்யப்படுகிறார்கள். அங்கு காவல்பரியும் காவல்துறை அதிகாரிகள் சட்ட விரோதமாக செயற்படுவதுடன் அகதிகளை கெட்ட வார்த்தைகளால் ஏசியும் அடித்தும் துன்புறுத்துகின்றனர். இதை சைலேந்திராபாபு கவனத்தில் கொண்டு அந்த அகதிகள் விடுதலைக்கு வழி செய்வாரா?

யாராவது ஒரு தமிழ் இன உணர்வாளர் இந்த கேள்விகளை கண்காணிப்பாளர் சைலேந்திரபாபுவிடம் கேட்கவேண்டும். இது பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக நீதியை பெறுவதற்கு உதவி புரியும் என நம்புகிறோம்.

தோழர் தமிழரசன் பற்றிய தொல்.திருமாவளவனின் பாராட்டுக்குரிய உரை

• தோழர் தமிழரசன் பற்றிய தொல்.திருமாவளவனின் பாராட்டுக்குரிய உரை

வன்னியர் சங்கம் அமைத்து வன்னியர்களுக்காக குரல் கொடுப்பதாகக் கூறும் டாக்டர் ராமதாஸ் அவர்கள் தோழர் தமிழரசன் ஒரு வன்னியராக இருந்தும்கூட அவர் பெயரை ஒரு முறைகூட உச்சரித்தது இல்லை.

மாவீரன் அலெக்சாண்டர், சீசர் என்று வெளிநாட்டவர் பெயரை எல்லாம் குறிப்பிட்டு பேசும் புரட்சிப்புயல் வைகோ அவர்கள், தமிழ்நாட்டில் பிறந்து தமிழர்களுக்காகப் போராடி மடிந்த தோழர் தமிழரசன் பெயரை ஒருபோதும் குறிப்பிடுவதில்லை.

தமிழர்களுக்காகப் போராடி மடிந்தவர்களுக்கு முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைத்த அய்யா நெடுமாறன் அவர்கள், அதில் தோழர் தமிழரசன் பெயரை பொறிக்கவில்லை. இத்தனைக்கும் தோழர் தமிழரசன் இறக்கும்வரை அவருடன் தொடர்பில் இருந்து அவருக்கு முழு ஆதரவு கொடுத்தவர் அய்யா நெடுமாறன் அவர்கள்.

தமிழ் தேசியத்திற்காக களமாடுவதாக குறிப்பிடும் “நாம் தமிழர்” தலைவர் சீமான் கூட தமிழ் தேசியத்திற்காய் போராடி உயிர் நீத்த தோழர் தமிழரசன் அவர்களை இதுவரை நினைவு கூரவில்லை. அறிஞர் பெருஞ்சித்திரனாருக்கு நினைவு தினம் கொண்டாடியவர்கள் அந்த பெருஞ்சித்திரனார் போற்றிப் புகழ்ந்த தோழர் தமிழரசனை நினைவு கூர தயங்குகின்றனர்.

ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் தோழர் தமிழரசன் அவர்களையும் அவருடைய தலைவர் புலவர் கலியபெருமாள் அவர்களையும் நினைவு கூர்ந்துள்ளார். பெண்ணாடத்தில் நடைபெற்ற புலவர் கலியபெருமாளின் நினைவு கூட்டத்திலேயே திருமாவளவன் தோழர் தமிழரசன் குறித்த பாராட்டுக்குரிய உரையை நிகழ்த்தினார்.

கீழ்வரும் இணைப்பில் அதனைக் கேட்கலாம்.
https://www.youtube.com/watch?v=q3Q3FR7DazE&feature=youtu.be

திருமாவளவன் அரசியல் குறித்து பல விமர்சனங்கள் இருப்பினும் அவருடைய இந்த தமிழரசன் குறித்த உரை நிச்சயம் பாராட்டுக்குரியது.

Photo: • தோழர் தமிழரசன் பற்றிய தொல்.திருமாவளவனின் பாராட்டுக்குரிய உரை

வன்னியர் சங்கம் அமைத்து வன்னியர்களுக்காக குரல் கொடுப்பதாகக் கூறும் டாக்டர் ராமதாஸ் அவர்கள் தோழர் தமிழரசன் ஒரு வன்னியராக இருந்தும்கூட அவர் பெயரை ஒரு முறைகூட உச்சரித்தது இல்லை.

மாவீரன் அலெக்சாண்டர், சீசர் என்று வெளிநாட்டவர் பெயரை எல்லாம் குறிப்பிட்டு பேசும் புரட்சிப்புயல் வைகோ அவர்கள், தமிழ்நாட்டில் பிறந்து தமிழர்களுக்காகப் போராடி மடிந்த தோழர் தமிழரசன் பெயரை  ஒருபோதும் குறிப்பிடுவதில்லை.

தமிழர்களுக்காகப் போராடி மடிந்தவர்களுக்கு முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைத்த அய்யா நெடுமாறன் அவர்கள், அதில் தோழர் தமிழரசன் பெயரை பொறிக்கவில்லை. இத்தனைக்கும் தோழர் தமிழரசன் இறக்கும்வரை அவருடன் தொடர்பில் இருந்து அவருக்கு முழு ஆதரவு கொடுத்தவர் அய்யா நெடுமாறன் அவர்கள்.

தமிழ் தேசியத்திற்காக களமாடுவதாக குறிப்பிடும் “நாம் தமிழர்” தலைவர் சீமான் கூட தமிழ் தேசியத்திற்காய் போராடி உயிர் நீத்த தோழர் தமிழரசன் அவர்களை இதுவரை நினைவு கூரவில்லை. அறிஞர் பெருஞ்சித்திரனாருக்கு நினைவு தினம் கொண்டாடியவர்கள் அந்த பெருஞ்சித்திரனார் போற்றிப் புகழ்ந்த தோழர் தமிழரசனை நினைவு கூர தயங்குகின்றனர்.

ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் தோழர் தமிழரசன் அவர்களையும் அவருடைய தலைவர் புலவர் கலியபெருமாள் அவர்களையும் நினைவு கூர்ந்துள்ளார். பெண்ணாடத்தில் நடைபெற்ற புலவர் கலியபெருமாளின் நினைவு கூட்டத்திலேயே திருமாவளவன் தோழர் தமிழரசன் குறித்த பாராட்டுக்குரிய உரையை நிகழ்த்தினார்.

கீழ்வரும் இணைப்பில் அதனைக் கேட்கலாம்.
https://www.youtube.com/watch?v=q3Q3FR7DazE&feature=youtu.be

திருமாவளவன் அரசியல் குறித்து பல விமர்சனங்கள் இருப்பினும் அவருடைய இந்த தமிழரசன் குறித்த உரை நிச்சயம் பாராட்டுக்குரியது.

தோழர் தங்கவடிவேல் மாஸ்டர் அவர்களுக்கு புரட்சிகர அஞ்சலிகள்!

தோழர் தங்கவடிவேல் மாஸ்டர் அவர்களுக்கு புரட்சிகர அஞ்சலிகள்!

மாக்சிய லெனியமாவோயிச சிந்தனையின் வழிகாட்டலில் புதியஜனநாயகப்புரட்சியை முன்னெடுத்த தோழர் தங்கவடிவேல் மாஸ்டர் அவர்கள் நேற்று (29.07.2014) காலமானார். யாழ்ப்பாணம் வடமராட்சியை பிறப்பிடமாக கொண்ட தோழர் தங்கவடிவேல் மாஸ்டர் அவர்கள் தோழர் சண்முகதாசன் தலைமையிலான கம்யுனிஸ்ட் கட்சியில் சேர்ந்து புரட்சிப் பணியாற்றினார்.

தோழர் சண்முகதாசன் தலைமையின் வழிகாட்டலில் நடைபெற்ற தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர் தோழர் தங்கவடிவேல் மாஸ்டர் அவர்கள். அந்த வரலாற்றை சொல்லக்கூடியவர் என தோழர் டானியல் அவர்களால் அடையாளம் காட்டப்பட்டவர்.

அவர் லண்டனுக்கு வநதபோது அவரை நான் முதன் முதலாக சந்தித்தேன். “தேசம்” சார்பாக தயாரிக்கப்பட்ட தோழர் சண் குறித்த ஆவணப்படத்திற்கு அவருடைய கருத்துகளை இணைப்பதற்காக அவரை நானும் பி.பி.சி தமிழோசை அறிவிப்பாளர் சீவகன் அவர்களும் சந்தித்தோம். மிக்க மகிழ்ச்சியுடன் முழு ஒத்துழைப்பு கொடுத்தார். அதுமட்டுமல்ல தோழர் சண் எழுதிய புத்தக வெளியீட்டிலும் பங்கு பற்றி தனது அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்தார்.

கீழ்வரும் இணைப்பில் தோழர் தங்கவடிவேல் மாஸ்டர் அவர்கள் தோழர் சண் அவர்களின் புத்தக வெளியீட்டில் ஆற்றிய உரையை கேட்கலாம்.

http://www.youtube.com/watch?v=fKAv3mAMCKc&feature=youtu.be

புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கும்போதே “துப்பாக்கியின் நிழலில் சாதீயம் உறங்கிறது” என்று உண்மையை தைரியமாக கூறியவர். தனது கருத்துகளை எப்போதும் தயக்கமின்றி கூறுபவர். இறுதிவரை தன் கொள்கைகளில் இருந்து வழுவாமல் உறுதியுடன் வாழ்ந்தவர்.

இலங்கை புரட்சிவரலாற்றில் தோழர் தங்கவடிவேல் மாஸ்டர் அவர்களின் பெயரும் பங்களிப்பும் நிச்சயம் இடம்பெறும். அவருடைய நினைவாக புதியஜனநாயகப் புரட்சியை நாம் தொடர்ந்து முன்னெடுப்பதே அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையும்.

Photo: • தோழர் தங்கவடிவேல் மாஸ்டர் அவர்களுக்கு புரட்சிகர அஞ்சலிகள்!

மாக்சிய லெனியமாவோயிச சிந்தனையின் வழிகாட்டலில் புதியஜனநாயகப்புரட்சியை முன்னெடுத்த தோழர் தங்கவடிவேல் மாஸ்டர் அவர்கள் நேற்று (29.07.2014) காலமானார். யாழ்ப்பாணம் வடமராட்சியை பிறப்பிடமாக கொண்ட தோழர் தங்கவடிவேல் மாஸ்டர் அவர்கள் தோழர் சண்முகதாசன் தலைமையிலான கம்யுனிஸ்ட் கட்சியில் சேர்ந்து புரட்சிப் பணியாற்றினார்.

தோழர் சண்முகதாசன் தலைமையின் வழிகாட்டலில் நடைபெற்ற தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர் தோழர் தங்கவடிவேல் மாஸ்டர் அவர்கள். அந்த வரலாற்றை சொல்லக்கூடியவர் என  தோழர் டானியல் அவர்களால் அடையாளம் காட்டப்பட்டவர்.

அவர் லண்டனுக்கு வநதபோது அவரை நான் முதன் முதலாக சந்தித்தேன். “தேசம்” சார்பாக தயாரிக்கப்பட்ட தோழர் சண் குறித்த ஆவணப்படத்திற்கு அவருடைய கருத்துகளை இணைப்பதற்காக அவரை நானும் பி.பி.சி தமிழோசை அறிவிப்பாளர் சீவகன் அவர்களும் சந்தித்தோம். மிக்க மகிழ்ச்சியுடன் முழு ஒத்துழைப்பு கொடுத்தார். அதுமட்டுமல்ல தோழர் சண் எழுதிய புத்தக வெளியீட்டிலும் பங்கு பற்றி தனது அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்தார்.

கீழ்வரும் இணைப்பில் தோழர் தங்கவடிவேல் மாஸ்டர் அவர்கள் தோழர் சண் அவர்களின் புத்தக வெளியீட்டில் ஆற்றிய உரையை கேட்கலாம்.

http://www.youtube.com/watch?v=fKAv3mAMCKc&feature=youtu.be

புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கும்போதே “துப்பாக்கியின் நிழலில் சாதீயம் உறங்கிறது” என்று உண்மையை தைரியமாக கூறியவர். தனது கருத்துகளை எப்போதும் தயக்கமின்றி கூறுபவர். இறுதிவரை தன் கொள்கைகளில் இருந்து வழுவாமல் உறுதியுடன் வாழ்ந்தவர்.

இலங்கை புரட்சிவரலாற்றில் தோழர் தங்கவடிவேல் மாஸ்டர் அவர்களின் பெயரும் பங்களிப்பும் நிச்சயம் இடம்பெறும். அவருடைய நினைவாக புதியஜனநாயகப் புரட்சியை  நாம் தொடர்ந்து முன்னெடுப்பதே அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையும்.

இந்தியாவில் தமிழகம் அடிமையாக இருப்பதால்தானே இலங்கை அரசு தைரியமாக கிண்டல் செய்கிறது!

 இந்தியாவில் தமிழகம் அடிமையாக இருப்பதால்தானே
இலங்கை அரசு தைரியமாக கிண்டல் செய்கிறது!

இலங்கை அரசின் பாதுகாப்பு இணைய தளத்தில் தமிழக முதல்வரை தரக்குறைவாக கிண்டல் செய்யப்பட்ட கட்டுரைக்கு அனைத்து தமிழக கட்சிகளும் ஒருமித்து எதிர்ப்பு தெரிவித்ததன் பயனாய் இலங்கை அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளது. இது பாராட்டப்பட வேண்டிய விடயம். ஆனால் இந்த நிலை ஏன் ஏற்பட்டது?

கடந்த ஆட்சியில் கலைஞா கருணாநிதி பல முறை கடிதம் எழுதினார். அப்போதைய பிரதமர் அதைக் கண்டு கொள்வதில்லை. அதுபோல் இப்போது ஜெயா அம்மையார் பல கடிதங்களை எழுதுகிறார். இன்றைய பிரதமர் மோடி அவற்றைக் கண்டுகொள்வதில்லை. அதனால்தானே இலங்கை அரசு கிண்டல் செய்யும் நிலை ஏற்பட்டது!

எனவே தமிழக கட்சிகள் முதலில் இலங்கை அரசைக் கண்டிப்பதைவிட்டு மத்திய அரசுக்கு எதிராக ஒருமித்து குரல் கொடுக்கவேண்டும். தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு செவிசாயக்கும் நிலையை உருவாக்கவேண்டும். தமிழ்நாடு அடிமை நிலையில் இருந்து விடுபட்டு சுய அதிகார மிக்க சுதந்திர தேசமாக உருவாக வேண்டும்.

கடந்த ஆட்சியில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மட்டுமல்ல தமிழக முதல்வர் கலைஞரும் இலங்கையில் நடைபெற்ற தமிழினப் படுகொலைகளுக்கு ஆதரவு வழங்கிய தைரியத்திலேயே இலங்கை அரசு இப்படி பயமின்றி திமிர்த்தனமாக நடந்து கொள்ள முனைகிறது.

முன்னர் இராணுவ தளபதியாக இருந்தவர் தமிழக அரசியல்வாதிகளை கோமாளிகள் என்றார். பின்னர் ஜெயா அம்மையாரை தரக்குறைவாக கிண்டல் செய்து கார்ட்டுன் போடப்பட்டது. இதற்கு எந்தவித எதிர்ப்பும் காட்டப்படாததாலேயே தற்பொது இந்தளவு தைரியமாக இலங்கை அரசு நடந்து கொள்கிறது.

அது மட்டுமல்ல சுப்பிரமணியசுவாமி , சோ, “இந்து” ராம் போன்றவர்கள் தமிழக அரசு மற்றும் தமிழக அரசியல்வாதிகள் குறித்து அக்கறை காட்டத்தேவையில்லை என்று இலங்கை சென்று கூறுவதும் அரசியல் தரகு வேலைகளுக்கு பரிசுப்பொருட்கள் வெளிப்படையாக பெறுவதும் பற்றி இந்திய அரசு கண்டடுகொள்ளாமல் இருப்பதும் இலங்கை அரசுக்கு தைரியத்தை கொடுக்கின்றன.

இலங்கை கடற்படையால் இதுவரை தமிழக மீனவர்கள் 600 மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தனது சொந்த மீனவர்களை கொல்லும் அந்நிய நாட்டு ராணுவத்திற்கு பயிற்சி கொடுக்கும் ஒரே நாடு இந்தியாதானே! இதன் அர்த்தம் என்ன? இந்திய அரசுக்கு தமிழக மக்களைவிட இலங்கை அரசுதானே முக்கியம்.

தமிழக மக்கள் இந்தியாவில் அடிமையாக இருப்பதால்தான்

முள்ளிவாய்க்கால் படுகொலைகளை தடுத்து நிறுத்த முடியவில்லை!

தமது மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுடப்படுவதை நிறுத்த முடியவில்லை!

கச்சதீவை இலங்கைக்கு தாரை வார்த்த போது தடுத்து நிறுத்த முடியவில்லை!

தமிழக மண்ணிலேயே இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி கொடுப்பதை தடுக்க முடியவில்லை!

• இதை தமிழக மக்களும் தமிழக அரசியல் கட்சிகளும் உணர்ந்து அடிமைநிலையில் இருந்து விடுபட்டு சுதந்திரம் பெறும்போது இலங்கை அரசு மட்டுமல்ல அனைத்து உலக நாடுகளும் மதிப்புடனும் மரியாதையுடனும் நடந்துகொள்ளும்.

Photo: • இந்தியாவில் தமிழகம் அடிமையாக இருப்பதால்தானே
 இலங்கை அரசு தைரியமாக கிண்டல் செய்கிறது!

இலங்கை அரசின் பாதுகாப்பு இணைய தளத்தில் தமிழக முதல்வரை தரக்குறைவாக கிண்டல் செய்யப்பட்ட கட்டுரைக்கு அனைத்து தமிழக கட்சிகளும் ஒருமித்து எதிர்ப்பு தெரிவித்ததன் பயனாய் இலங்கை அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளது. இது பாராட்டப்பட வேண்டிய விடயம். ஆனால் இந்த நிலை ஏன் ஏற்பட்டது?

கடந்த ஆட்சியில் கலைஞா கருணாநிதி பல முறை கடிதம் எழுதினார். அப்போதைய பிரதமர் அதைக் கண்டு கொள்வதில்லை. அதுபோல் இப்போது ஜெயா அம்மையார் பல கடிதங்களை எழுதுகிறார். இன்றைய பிரதமர் மோடி அவற்றைக் கண்டுகொள்வதில்லை. அதனால்தானே இலங்கை அரசு கிண்டல் செய்யும் நிலை ஏற்பட்டது! 

எனவே தமிழக கட்சிகள் முதலில் இலங்கை அரசைக் கண்டிப்பதைவிட்டு மத்திய அரசுக்கு எதிராக ஒருமித்து குரல் கொடுக்கவேண்டும். தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு செவிசாயக்கும் நிலையை உருவாக்கவேண்டும். தமிழ்நாடு அடிமை நிலையில் இருந்து விடுபட்டு சுய அதிகார மிக்க சுதந்திர தேசமாக உருவாக வேண்டும்.

கடந்த ஆட்சியில்  இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மட்டுமல்ல தமிழக முதல்வர் கலைஞரும் இலங்கையில் நடைபெற்ற தமிழினப் படுகொலைகளுக்கு ஆதரவு வழங்கிய தைரியத்திலேயே இலங்கை அரசு இப்படி பயமின்றி திமிர்த்தனமாக நடந்து கொள்ள முனைகிறது.

முன்னர் இராணுவ தளபதியாக இருந்தவர் தமிழக அரசியல்வாதிகளை கோமாளிகள் என்றார். பின்னர் ஜெயா அம்மையாரை தரக்குறைவாக கிண்டல் செய்து கார்ட்டுன் போடப்பட்டது. இதற்கு எந்தவித எதிர்ப்பும் காட்டப்படாததாலேயே தற்பொது இந்தளவு தைரியமாக இலங்கை அரசு நடந்து கொள்கிறது. 

அது மட்டுமல்ல சுப்பிரமணியசுவாமி , சோ, “இந்து” ராம் போன்றவர்கள் தமிழக அரசு மற்றும் தமிழக அரசியல்வாதிகள் குறித்து அக்கறை காட்டத்தேவையில்லை என்று இலங்கை சென்று கூறுவதும் அரசியல் தரகு வேலைகளுக்கு பரிசுப்பொருட்கள் வெளிப்படையாக பெறுவதும் பற்றி இந்திய அரசு கண்டடுகொள்ளாமல் இருப்பதும் இலங்கை அரசுக்கு தைரியத்தை கொடுக்கின்றன.

இலங்கை கடற்படையால் இதுவரை தமிழக மீனவர்கள் 600 மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தனது சொந்த மீனவர்களை கொல்லும் அந்நிய நாட்டு ராணுவத்திற்கு பயிற்சி கொடுக்கும் ஒரே நாடு இந்தியாதானே! இதன் அர்த்தம் என்ன? இந்திய அரசுக்கு தமிழக மக்களைவிட இலங்கை அரசுதானே முக்கியம்.

தமிழக மக்கள் இந்தியாவில் அடிமையாக இருப்பதால்தான்

முள்ளிவாய்க்கால் படுகொலைகளை தடுத்து நிறுத்த முடியவில்லை!

தமது மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுடப்படுவதை நிறுத்த முடியவில்லை!

கச்சதீவை இலங்கைக்கு தாரை வார்த்த போது தடுத்து நிறுத்த முடியவில்லை!

தமிழக மண்ணிலேயே இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி கொடுப்பதை தடுக்க முடியவில்லை!

• இதை தமிழக மக்களும் தமிழக அரசியல் கட்சிகளும் உணர்ந்து அடிமைநிலையில் இருந்து விடுபட்டு சுதந்திரம் பெறும்போது இலங்கை அரசு மட்டுமல்ல அனைத்து உலக நாடுகளும் மதிப்புடனும் மரியாதையுடனும் நடந்துகொள்ளும்.

இந்த முட்டாள்தனங்களுக்கு முடிவே இல்லையா?

• இந்த முட்டாள்தனங்களுக்கு முடிவே இல்லையா?

யாழ்ப்பாணத்தில் ஊருக்கு ஒரு பள்ளிக்கூடம் இருக்கிறதோ இல்லையோ ஆனால் தெருவுக்கு பல கோயில்கள் உண்டு. இந்துக் கோயில்கள் மட்டுமல்ல கிருத்துவ தேவாலயங்கள் பலவும் உண்டு. அங்கு முஸ்லிம் பள்ளிவாசல்கள் உண்டு. சில புத்த விகாரைகளும் உண்டு. எல்லாவற்றுக்கும்மேலாக சாதிகளுக்கும் தலா ஒரு கடவுள் உண்டு எனலாம்.

ஆனால் இத்தனை கோயில்கள் மற்றும் கடவுள்கள் இருந்தும் அவற்றினால் இலங்கை அரசு நிகழ்த்திய ஒரு படுகொலையைக்கூட தடுத்து நிறுத்த முடியவில்லையே! இது குறித்து இந்த முட்டாள்கள் என்றாவது சிந்தித்தது உண்டா?

இன்று நல்லூர் முருகனுக்கு இலங்கை ராணுவம் கெலிகொப்டரில் பூ மழை பொழிகிறது. ஆனால் இதே கெலிகப்டர்கள் அன்று தமிழ் மக்கள் மீது மட்டுமல்ல பல இந்து ஆலையங்கள் மீதும் கண்டு மழை பொழிந்தபொது இந்த நல்லூர் முருகனால் தடுத்து நிறுத்த முடியவில்லையே!

யாழ்ப்பாணத்தில் புதிதாக ஆலையம் கட்டுகிறார்கள். கட்டிய ஆலயத்திற்கு திரும்ப திரும்ப பெயின்ட் அடிக்கிறார்கள். பல இலட்சம் செலவு செய்து திருவிழா கொண்டாடுகிhர்கள். ஆனால் வன்னியில் இன்னொரு மூலையில் மக்கள் வீடு கட்டி தரும்படி இந்திய அரசிடம் பிச்சை எடுக்கிறார்கள். ரயிலுக்கு தண்டவாளம் போட்டு தரும்படி சீனா அரசிடம் கெஞ்சுகிறார்கள். ஊருக்கு ரோடு போட்டு தரும்படி மகிந்தவிடம் கேட்கிறார்கள். பாடசாலைக்கு கூரை போட்டு தரும்படி சிங்கள அமைச்சரிடம் மன்றாடுகிறார்கள். ஏன் இந்த அவல நிலை?

ஒரு புறத்தில் ஆலயத்தில் வீணாக தேங்காய் உடைக்கிறார்கள். இன்னொரு புறத்தில் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் தனது குழந்தைகளை தாய் கிணற்றில் வீசிக் கொல்கிறாள். அதைவிடக் கொடுமை பரீட்சைக்கு காசு கட்டுவதற்காக வசதியின்றி இரண்டு சிறுவர்கள் திருடிய குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். இது கொடுமையாக இந்த பக்தகோடிகளுக்கு ஏன் தெரியவில்லை?

நாட்டில்தான் இந்தகைய முட்டாள்தனங்கள் நடக்கிறது என்றால் புலம்பெயர்ந்த நாடுகளில் இதைவிட அதிகமான முட்டாள்தனங்கள் நடக்கின்றன. இவை ஏதோ படிக்காத மக்களின் முட்டாள் தனங்கள் அல்ல. பல பெரிய படிப்புகள் படித்த கனவான்களே இவ்வாறு செய்வது ஆச்சரியமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

இவற்றையெல்லாம் பார்க்கும்பொது ஒரு பெரியார் மட்டுமல்ல ஓராயிரம் பெரியார் வந்தாலும் இந்த முட்டாள்தனங்களை இப்போதைக்கு நிறுத்த முடியாது என்றே தோன்றுகிறது.

Photo: • இந்த முட்டாள்தனங்களுக்கு முடிவே இல்லையா?

யாழ்ப்பாணத்தில் ஊருக்கு ஒரு பள்ளிக்கூடம் இருக்கிறதோ இல்லையோ ஆனால் தெருவுக்கு பல கோயில்கள் உண்டு. இந்துக் கோயில்கள் மட்டுமல்ல கிருத்துவ தேவாலயங்கள் பலவும் உண்டு. அங்கு முஸ்லிம் பள்ளிவாசல்கள் உண்டு. சில புத்த விகாரைகளும் உண்டு. எல்லாவற்றுக்கும்மேலாக சாதிகளுக்கும் தலா ஒரு கடவுள் உண்டு எனலாம்.

ஆனால் இத்தனை கோயில்கள் மற்றும் கடவுள்கள் இருந்தும் அவற்றினால் இலங்கை அரசு நிகழ்த்திய ஒரு படுகொலையைக்கூட தடுத்து நிறுத்த முடியவில்லையே! இது குறித்து இந்த முட்டாள்கள் என்றாவது சிந்தித்தது உண்டா?

இன்று நல்லூர் முருகனுக்கு இலங்கை ராணுவம் கெலிகொப்டரில் பூ மழை பொழிகிறது. ஆனால் இதே கெலிகப்டர்கள்  அன்று தமிழ் மக்கள் மீது மட்டுமல்ல பல இந்து ஆலையங்கள் மீதும் கண்டு மழை பொழிந்தபொது இந்த நல்லூர் முருகனால் தடுத்து நிறுத்த முடியவில்லையே!

யாழ்ப்பாணத்தில் புதிதாக ஆலையம் கட்டுகிறார்கள். கட்டிய ஆலயத்திற்கு திரும்ப திரும்ப பெயின்ட் அடிக்கிறார்கள். பல இலட்சம் செலவு செய்து திருவிழா கொண்டாடுகிhர்கள். ஆனால் வன்னியில் இன்னொரு மூலையில் மக்கள் வீடு கட்டி தரும்படி இந்திய அரசிடம் பிச்சை எடுக்கிறார்கள். ரயிலுக்கு தண்டவாளம் போட்டு தரும்படி சீனா அரசிடம் கெஞ்சுகிறார்கள். ஊருக்கு ரோடு போட்டு தரும்படி மகிந்தவிடம் கேட்கிறார்கள். பாடசாலைக்கு கூரை போட்டு தரும்படி சிங்கள அமைச்சரிடம் மன்றாடுகிறார்கள். ஏன் இந்த அவல நிலை?

ஒரு புறத்தில் ஆலயத்தில் வீணாக தேங்காய் உடைக்கிறார்கள். இன்னொரு புறத்தில் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் தனது குழந்தைகளை தாய் கிணற்றில் வீசிக் கொல்கிறாள். அதைவிடக் கொடுமை பரீட்சைக்கு காசு கட்டுவதற்காக வசதியின்றி இரண்டு சிறுவர்கள் திருடிய குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். இது கொடுமையாக இந்த பக்தகோடிகளுக்கு ஏன் தெரியவில்லை?

நாட்டில்தான் இந்தகைய முட்டாள்தனங்கள் நடக்கிறது என்றால் புலம்பெயர்ந்த நாடுகளில் இதைவிட அதிகமான முட்டாள்தனங்கள் நடக்கின்றன. இவை ஏதோ படிக்காத மக்களின் முட்டாள் தனங்கள் அல்ல. பல பெரிய படிப்புகள் படித்த கனவான்களே இவ்வாறு செய்வது ஆச்சரியமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

இவற்றையெல்லாம் பார்க்கும்பொது ஒரு பெரியார் மட்டுமல்ல ஓராயிரம் பெரியார் வந்தாலும் இந்த முட்டாள்தனங்களை இப்போதைக்கு நிறுத்த முடியாது என்றே தோன்றுகிறது.

நடிகர் விஜய் அவர்களின் (நடிப்பு) பேச்சு!

நடிகர் விஜய் அவர்களின் (நடிப்பு) பேச்சு!

செய்தி:- முதல்வரை இழிவுபடுத்தியதை என் தாயை தப்பாக பேசியமாதிரி நினைக்கிறேன். – விஜய் பேச்சு

அடுத்த சுப்பர்ஸ்டாராக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முயலும் நடிகர் விஜய் அவர்களுக்கு திடீரென தமிழக முதல்வர் மீது பாசம் ஏற்பட்டுள்ளது. அதனால் பொங்கியெழுந்து உணர்ச்சியைக் கொட்டி பேசியிருக்கிறார். ஆனால் ஜெயா அம்மையாரும் ஒரு காலத்தில் நடிகையாக இருந்தவர் என்பதையும் அவர் இதுபோல் பல நடிப்புகளை பார்த்தவர் என்பதையும் நடிகர் விஜய் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழக அரசியலில் ஏற்கனவே பல தடவை ஜெயா அம்மையார் இழிவு படுத்தப்பட்டிருக்கிறார். அப்போதெல்லாம் வராத உணர்வு இப்போது மட்டும் நடிகர் விஜய் அவர்களுக்கு என் வந்திருக்கிறது? அப்போதெல்லாம் அது தன் தாயை இழிவு படுத்தியதாக அவர் கருதவில்லையா?

பல கோடி ரூபா செலவில் எடுக்கும் அவருடைய “கத்தி” திரைப்படம் எந்தவித சிக்கலுக்கும் ஆளாகாமல் திரையிடப்பட வேண்டும் என்றால் அதற்கு தமிழக முதல்வர் ஜெயா அம்iயாரின் ஆதரவு வேண்டும் என்பதால் இந்த உணர்வு எற்பட்டதா?

நடிகர் விஜய் அவர்களுக்கு முள்ளிவாய்க்காலில் பல்லாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டபோது வராத உணர்வு,
தமிழக முகாம்களில் ஈழ அகதிகள் துன்பப்படுகையில் வராத உணர்வு,
தமிழக சிறப்புமுகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழ அகதிகளுக்காக வராத உணர்வு,
இப்போது வருகிறது என்றால் அது நிச்சயம் “கத்தி” திரைப்படத்திற்காகவே என்பதில் சந்தேகம் இல்லை.

எனவே விஜய் அவர்களே!
உங்கள் நடிப்பு திறமையை திரைப்படத்தில் மட்டும் காட்டுங்கள்.
தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு காட்ட வேண்டாம்!

Photo: • நடிகர் விஜய் அவர்களின் (நடிப்பு) பேச்சு!

செய்தி:-  முதல்வரை இழிவுபடுத்தியதை என் தாயை தப்பாக பேசியமாதிரி நினைக்கிறேன். – விஜய் பேச்சு

அடுத்த சுப்பர்ஸ்டாராக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முயலும் நடிகர் விஜய் அவர்களுக்கு திடீரென தமிழக முதல்வர் மீது பாசம் ஏற்பட்டுள்ளது. அதனால் பொங்கியெழுந்து உணர்ச்சியைக் கொட்டி பேசியிருக்கிறார். ஆனால்  ஜெயா அம்மையாரும் ஒரு காலத்தில் நடிகையாக இருந்தவர் என்பதையும் அவர் இதுபோல் பல நடிப்புகளை பார்த்தவர் என்பதையும் நடிகர் விஜய் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழக அரசியலில் ஏற்கனவே பல தடவை ஜெயா அம்மையார் இழிவு படுத்தப்பட்டிருக்கிறார். அப்போதெல்லாம் வராத உணர்வு இப்போது மட்டும் நடிகர் விஜய் அவர்களுக்கு என் வந்திருக்கிறது?  அப்போதெல்லாம் அது தன் தாயை இழிவு படுத்தியதாக அவர் கருதவில்லையா?

பல கோடி ரூபா செலவில் எடுக்கும் அவருடைய “கத்தி” திரைப்படம் எந்தவித சிக்கலுக்கும் ஆளாகாமல் திரையிடப்பட வேண்டும் என்றால் அதற்கு தமிழக முதல்வர் ஜெயா அம்iயாரின் ஆதரவு வேண்டும் என்பதால் இந்த உணர்வு எற்பட்டதா?
 
நடிகர் விஜய் அவர்களுக்கு முள்ளிவாய்க்காலில் பல்லாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டபோது வராத உணர்வு,
தமிழக முகாம்களில் ஈழ அகதிகள் துன்பப்படுகையில் வராத உணர்வு,
தமிழக சிறப்புமுகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழ அகதிகளுக்காக வராத உணர்வு, 
இப்போது வருகிறது என்றால் அது நிச்சயம் “கத்தி” திரைப்படத்திற்காகவே என்பதில் சந்தேகம் இல்லை.

எனவே விஜய் அவர்களே!
உங்கள் நடிப்பு திறமையை திரைப்படத்தில் மட்டும் காட்டுங்கள்.
தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு காட்ட வேண்டாம்!