Thursday, December 31, 2020

தோழர் வள்ளுவன் அவர்களை நினைவில் கொள்வோம்!

தோழர் வள்ளுவன் அவர்களை நினைவில் கொள்வோம்! இன்று (21.12.2020) தோழர் வள்ளுவன் அவர்களின் 3வது நினைவுதினம் ஆகும். இன்று அவரது படத் திறப்பு நிகழ்வும் நினைவேந்தலும் பெண்ணாடத்தில் நடைபெறுகிறது. தோழர் வள்ளுவன் பற்றிய எனது நினைவுக் குறிப்பு கீழ்வரும் இணைப்பில் உள்ளது. http://tholarbalan.blogspot.com/2020/12/blog-post_71.html ஈழத் தமிழர்களை இறுதிவரை உறுதியுடன் ஆதரித்து வந்த தோழர் வள்ளுவன் அவர்களை ஈழத் தமிழராகிய நாம் என்றும் நன்றியுடன் நினைவு கூர்வோம்.

•ஆழ்ந்த இரங்கல்!

•ஆழ்ந்த இரங்கல்! இப்பொழுதெல்லாம் முகநூலுக்கு வரவே அச்சமாக இருக்கிறது. முகநூலில் வரும் மரணச் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. அந்தவகையில் நீண்டகால நட்பான் தோழர் கருப்பு கருணாவின் மறைவு செய்தி வந்திருக்கிறது. இந்த வருடம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தபோதுகூட “ நல்லது தோழர், தொடரட்டும் நம் தோழமை” என்று தெரிவித்திருந்தார். ஆனால் இப்படி இடைநடுவில் தோழமையை விட்டிட்டு செல்வார் என்று எதிர்பார்க்கவில்லையே. குறிப்பு- இங்கு பதிவு செய்த படமும் வரிகளும் அவரே எனக்கு அனுப்பியது.

ஆழ்ந்த அஞ்சலிகள்!

•ஆழ்ந்த அஞ்சலிகள்! சிலர் அவர் மார்க்சிய வழியில் திறனாய்வு செய்தவர் என்கிறார்கள். இன்னும் சிலர் அவர் பெரியாரியத்தை ஆதரித்தவர் என்கிறார்கள இவ்வாறு இவர்கள் கூறுவது எந்தளவு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் அவர் ஒரு சிறந்த தமிழ் அறிஞர் என்பதை அனைவரும் ஒத்துக்கொள்கிறார்கள். அவர் சிறந்த தமிழ் அறிஞர் மட்டுமல்ல சிறந்த தமிழ் இன உணர்வாளரும்கூட அதனால்தான் ஈழத்தில் எமது உறவுகள் கொல்லப்பட்டபோது அவருக்கு வலித்தது. ஈழப் படுகொலையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரித்தவர்கள் மீதான எனது ஆத்திரம் உயிர் மூச்சு உள்ளவரை நீடித்திருக்கும் என்று கூறினார். உறக்கமில்லாமல் கழிந்த அந்த இரவுகள் திரும்ப திரும்ப நினைவுக்கு வருகின்றன என்றும் அவர் கூறியிருக்கிறார். அதனால்தான் அவர் இறந்துவிட்டார் என்றதும் எமக்கு வலிக்கின்றது. எமது குடும்பத்தில் ஒருவரை இழந்துவிட்ட உணர்வைத் தருகின்றது. அவருக்கு ஈழத் தமிழர்கள் சார்பாக ஆழ்ந்த அஞ்சலிகள்.

•மம்தா பேனர்ஜியின் உணர்வு பாராட்டுக்குரியது!

•மம்தா பேனர்ஜியின் உணர்வு பாராட்டுக்குரியது! தமிழ்நாட்டை ஒரு தமிழன்தான் ஆள வேண்டும். மராட்டியர் ஆள அனுமதிக்க முடியாது என்று கூறினால் அதை தவறு என்கிறார்கள். அதுமட்டுமன்றி தமிழன் என்றால் யார் என்று நக்கலாகவும் கேட்கிறார்கள். ஆனால் மேற்கு வங்கத்தை ஒரு வங்காளிதான் ஆள வேண்டும். குஜராத்தி ஆள அனுமதிக்க முடியாது என்று மம்தா கூறும்போது அதை தவறு என்று இவர்கள் கூறுவதில்லை. அதுமட்டுமன்றி வங்காளி என்றால் யார் என்று தைரியமிருந்தால் மம்தாவிடம் இவர்கள் கேட்டுப் பார்க்கட்டுமே. ஏனெனில் தமிழனை இளிச்சவாயன் என்று இவர்கள் நினைக்கிறார்கள். மம்தாவின் அரசியல்; உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவரின் இன உணர்வு நிச்சயம் பாராட்டுக்குரியது.

மாபெரும் ஆசான் தோழர் மாவோ அவர்களின் பிறந்த தினம்(26.12.2020)

•மாபெரும் ஆசான் தோழர் மாவோ அவர்களின் பிறந்த தினம்(26.12.2020) மாபெரும் மாக்சிய ஆசான்களில் ஒருவரும் சீனப்புரட்சியின் தலைவருமாகிய தோழர் மாசேதுங் அவர்களின் 127வது பிறந்த நாள் உலகெங்கும் நினைவு கூரப்படுகிறது. தூங்கும் பூதம் என வர்ணிக்கப்பட்ட சீனாவில் புதிய ஜனநாயகப் புரட்சி மூலம் விடிவை ஏற்படுத்திய மாபெரும் தலைவர் அவர். ரஸ்சியாவில் குருசேவ் கும்பலால் முதலாளித்துவம் மீட்டமைக்கப்பட்ட ஆபத்தை சீனாவிலும் எதிர்வு கூறி அதை தடுக்கப் பல கலாச்சாரப் புரட்சிகள் நடக்க வேண்டும் எனக் கூறியவர் தோழர் மாவோ அவர்கள். தோழர் ஸ்டாலினுக்கு எதிராக குருசேவ் கும்பல் வைத்த குற்றச்சாட்டுகளை மாபெரும் விவாதம் மூலம் தோற்கடித்து சர்வதேச ரீதியில் ஸ்டாலினையும் மாக்சியத்தையும் காப்பாற்றியவர். மாக்சியம் லெனிசத்தை அடுத்து மாவோ சிந்தனைகள் மூலம் மாக்சியத்தை வளர்த்தெடுத்தவர். சீனாவில் மாவோ மறைவுக்கு பின்னர் டெங்சியாபிங் கும்பல்களால் முதலாளித்துவம் மீண்டும் ஆட்சி பீடம் ஏறினாலும் அவர்களால் இன்று வரை மக்கள் மனங்களில் இருந்து மாவோ புகழை நீக்க முடியவில்லை. சீனாவில் மட்டுமல்ல சர்வதேச ரீதியிலும் மாவோ சிந்தனைகள் வழங்கிய மகத்தான பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது. குறிப்பாக ஜரோப்பாவில் இருந்து வைக்கப்பட்ட எதிர்ப்புரட்சிகர தத்துவமாகிய பின்நவீனத்துவத்திற்கு எதிராக மாவோசிசத்தின் பங்களிப்பு மகத்தானது. மாக்சிச லெனிசிச மாவோ சிந்தனையில் புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்போம்!

எதியோப்பிய இனப்படுகொலைகள்!

•எதியோப்பிய இனப்படுகொலைகள்! இலங்கையில் நடந்தது போன்று எதியோப்பியாவிலும் இராணுவம் இனப்படுகொலை செய்கிறது. இலங்கையில் இனப்படுகொலை நடக்கும்போது உலகம் எப்படி வேடிக்கை பார்த்ததோ அதே மாதிரியே எதியோப்பியாவிலும் வேடிக்கை பார்க்கின்றது. உலகெங்கும் போராடும் இனங்கள் எல்லாம் தனித் தனியாக போராடுவதால் தனித்தனியாக இலகுவாக அழிக்கப்பட்டு வருகின்றன. எனவே இனியாவது போராடும் இனங்கள் யாவும் ஒன்றினைந்து போராட முன்வர வேண்டும். இந்தியா ஆதரிக்க வேண்டும், அமெரிக்கா ஆதரிக்க வேண்டும் என்று காத்துக்கொண்டிருக்காமல் உலகெங்கும் உள்ள போராடும் அமைப்புகளுடன் ஜக்கியப்பட ஈழத் தமிழ் அமைப்புகள் முயல வேண்டும்.

கேரளாவில் திருவனந்தபுரத்தின் மேயராக

கேரளாவில் திருவனந்தபுரத்தின் மேயராக 21 வயதான பெண் ஒருவர் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இந்தியாவின் வயது குறைந்த முதல் பெண் மேயர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அவருக்கு எமது வாழ்த்துகள். ஆனால் அருகில் தமிழ்நாட்டில் 71 வயதான மராட்டிய நடிகரை ஆள வரவேண்டும் என கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு பல காரணங்கள் இருப்பினும் முக்கிய காரணம் கேரளா 100 வீதம் கல்வி அறிவு பெற்ற மாநிலமாக இருப்பதே. அதனால்தான் கேரள மக்கள் முதலமைச்சரை சினிமா நடிகர்களில் தேடுவதில்லை என நடிகர் மம்முட்டி கூறியிருக்கிறார். தமிழ்நாட்டில் இந்த நிலை வருமா? அல்லது வழக்கம்போல் 500 ரூபாவுக்கு வோட்டை விற்கப் போகிறார்களா?

காலம் மாறுகிறது!

•காலம் மாறுகிறது! “வேலுப்பிள்ளை பிரபாகரன், தமிழரசன் ஆகியோர் தமது இனத்திற்காகவும் மொழிக்காகவும் குடும்பத்தை பிரிந்து எந்தளவு கஸ்டப்பட்டாங்கள் என்று நீங்கள்தானே அப்பா எனக்கு சொல்லி வளர்த்துள்ளீர்கள்” மேற்கண்ட வசனம் சிம்ராங்காரன் என்ற படத்தில் நடிகர் நாகாஅர்யுனன் பேசியிருக்கிறார். எந்த இந்திய அரசு இவர்களை பயங்கரவாதிகள் என்று கூறி கொன்றதோ அதே இந்திய அரசின் நாட்டில் இந்திய சினிமாவில்கூட இவர்களை இனத்திற்காக போராடி மாண்ட தியாகிகள் என்று கூறும் நிலை வந்துவிட்டது. இத்தகைய ஒரு மாற்றம் வரும் என்று தெரியும். ஆனால் இந்தளவு விரைவாக வரும் என்று நான்கூட எதிர் பார்க்கவில்லை. மக்கள் மகத்தானவர்;கள். அவர்கள் தமக்காக மாண்டவர்களை ஒருபோதும் கைவிட்டதில்லை.

தமிழ்நாடு தனிநாடு ஆகப் போகிறதா?

தமிழ்நாடு தனிநாடு ஆகப் போகிறதா? தமிழ்நாடு தனிநாடாக விடுதலை அடைய வேண்டும் என்று தோழர் தமிழரசன் கூறியபோது அவரை பிரிவினைவாதி என்றார்கள். பயங்கரவாதி என்றுகூறி கொன்றார்கள். ஆனால் இப்போது சிவசேனைக்கட்சி தலைவரே இந்தியா சோவியத்யூனியன் போல் உடைந்து சிதறப்போகின்றது என்று கூறியுள்ளார். இந்துமதம் மூலம் அகன்ற பாரதத்தை உருவாக்க முடியாது என்பதை மட்டுமல்ல இருக்கின்ற இந்தியாவைக்கூட தக்கவைக்க முடியாது என்பதை இந்துத்துவ கட்சி தலைவரே உணர்ந்துவிட்டார். காஸ்மீர் பிரிந்தால்கூட இந்தியா உடையாமல் இருக்கும். ஆனால் தமிழ்நாடு பிரிந்தால் இந்தியா நிச்சயம் உடையும். சிதறும். இதை இந்திய அரசு நன்கு உணர்ந்திருப்பதால்தான் அதன் முழு பலமும் தமிழ் இன உணர்வாளர்கள் மீது பயன்படுத்தி நசுக்கப்படுகிறது. ஈழ விடுதலைப் போராட்டம் நசுக்கப்பட்டதுகூட தமிழ்நாடு தனிநாடாகிவிடும் என்ற இந்திய அரசின் அச்ச உணர்வின் வெளிப்பாடே. ஆனாலும் எத்தனை அடக்குமுறை இருந்தாலும் அத்தனையும் உடைத் தெறிந்து தமிழ் மக்கள் விடுதலை பெறுவர். ஏனெனில் வரலாறு அறிந்த காலம் முதல் தன்னைத்தானே ஆண்ட இனம் ஒருபோதும் அடிமைத்தனமாக நீண்ட காலம் வீழ்ந்து கிடக்காது. அது நிச்சயம் திமிறி எழும்!

தனது அரசியல் பிரவேசம் குறித்து

தனது அரசியல் பிரவேசம் குறித்து எதிர்பார்த்த எழுச்சி ஏற்படாதது கண்டு ஏமாற்றம் அடைந்திருப்பார். கள நிலவரம் தனக்கு சாதகமாய் இல்லை என்பதை நாலு நல்ல நண்பர்கள் மூலம் அறிந்து கொண்டிருப்பார். பெரும் முதலாளிகள் பணம் தர தயங்கியதில் இருந்து தான் ஒடும் பந்தயக் குதிரை இல்லை என்பதை புரிந்திருப்பார். அவர் ஒரு சிறந்த நடிகர். நிச்சயம் பிளாப் என்று தெரிந்த படங்களில் அவர் நடித்ததில்லை. அதுபோல் நிச்சயம் தோல்வி என்று தெரிந்த பின்பு அரசியலில் போட்டியிட அவர் விரும்பவில்லை. தப்பித்துக்கொண்டது தமிழகம் அல்ல ரஜனிதான். ஏனெனில் போட்டியிட்டிருந்தால் தன் சொந்த பணத்தை மட்டுமல்ல புகழையும் இழந்திருப்பார். ஆனால் இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் என்னவெனில் ரஜனிக்கு இந்தளவு தெளிவாகவும் உறுதியாகவும் முடிவை உணர வைத்தவர்கள் தமிழக மக்களே.

ஒரு நடிகர்; தேர்தலுக்கு முன்பே முடிவு எடுத்துவிட்டார்

ஒரு நடிகர்; தேர்தலுக்கு முன்பே முடிவு எடுத்துவிட்டார் இன்னொரு நடிகர் தேர்தல் முடிந்ததும் நிச்சயம் முடிவு எடுப்பார். நாலு படம் நடித்துவிட்டாலே தமிழ்நாட்டையும் தமிழனையும் ஆளும் தகுதி வந்துவிட்டதாக நினைப்பவர்களுக்கு முடிவு கட்டும் காலம் இது! படிப்பறிவற்ற பின்தங்கிய மாநிலங்கள் என்று கூறப்படும் வட இந்திய மாநிலங்களில் கூட நடிகர்கள் கட்சி தொடங்கவில்லை. ஆட்சியைப் பிடிக்கவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் பிழைக்க வந்தவன் எல்லாம் தமிழனை ஆள வேண்டும் என்று துடிக்கிறான். அதனால்தான் கைபர் கணவாய் மூலம் வந்தவனிடம் அதிகாரத்தை இழந்துவிட்டு தன் தொப்புள்கொடி உறவுகளான ஈழத் தமிழருக்கு குடியுரிமை வழங்கும்படி கெஞ்சும் நிலை தமிழனுக்கு ஏற்பட்டுள்ளது. இந் நிலை மாற வேண்டும். மாற்றப்பட வேண்டும்.

ஐயாவின் கெத்து! 7

••ஐயாவின் கெத்து! 70 வயதான நடிகர் ரஜனி தன்னால் முடியவில்லை என்று ஒதுங்குகிறார். ஆனால் 90 வயதான நம்ம சம்பந்தர் ஐயா “தீபாவளிக்கு தீர்வு வரும்” என்ற வெறும் மூன்று சொல்லை மட்டும் வைத்துக்கொண்டு என்னமாய் அரசியல் செய்கிறார். காது சரியாக கேட்பதில்லை மற்றவர் துணையின்றி நடக்க முடியவில்லை வேட்டியோடு மூத்திரம் போவதுகூட தெரியவில்லை. ஆனாலும் பதவியை மட்டுமன்றி சொகுசு பங்களாவையும் விடவில்லை. குறிப்பு – கொரோனோகூட ஈழத் தமிழர்களை ஏமாற்றிவிட்டது. 70 வயதான நடிகர் ரஜனி தன்னால் முடியவில்லை என்று ஒதுங்குகிறார். ஆனால் 90 வயதான நம்ம சம்பந்தர் ஐயா “தீபாவளிக்கு தீர்வு வரும்” என்ற வெறும் மூன்று சொல்லை மட்டும் வைத்துக்கொண்டு என்னமாய் அரசியல் செய்கிறார். காது சரியாக கேட்பதில்லை மற்றவர் துணையின்றி நடக்க முடியவில்லை வேட்டியோடு மூத்திரம் போவதுகூட தெரியவில்லை. ஆனாலும் பதவியை மட்டுமன்றி சொகுசு பங்களாவையும் விடவில்லை. குறிப்பு – கொரோனோகூட ஈழத் தமிழர்களை ஏமாற்றிவிட்டது.

நடந்தது இனப்படுகொலை அல்ல

நடந்தது இனப்படுகொலை அல்ல வெறும் போர்க்குற்றம் என்று இவரே ஜெனிவாவில் கூறுவார். சர்வதேச விசாரணை தேவையில்லை. உள்ளக விசாரணை போதும் என்று இவரே ஜெனிவாவில் கூறுவார். இலங்கை அரசு கோராமலே கால அவகாசம் அதுவும் இரண்டுமுறை இவரே ஜெனிவாவில் பெற்று கொடுப்பார். அப்புறம் என்னவென்றால் இப்போது வீரியமான தீர்வு வேண்டும் என்கிறார். வீரியமான தீர்வு என்றால் என்ன? யாராவது தயவு செய்து கூறுங்க பிளீஸ். எனக்கு தலை சுத்துது.

ஐயா!

ஐயா! கடந்த காலத்தில் உங்களால் வெற்றிபெற்ற ஜனாதிபதி இருந்தார். உங்களின் பங்கெடுப்பில் பிரதமரும் ஆட்சியும் இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக ஓரணியில் திரண்ட தமிழ்தேசியகூட்டமைப்பு உங்கள் கையில் இருந்தது. இத்தனையும் வைத்துக்கொண்டு உங்களால் என்ன செய்ய முடிந்தது? அடுத்த தீபாவளிக்கு தீர்வு வரும் என்று அறிக்கை விட்டதைத்தவிர வேறு என்ன செய்ய முடிந்தது? குறைந்தபட்சம் அரசியல் கைதிகளைக்கூட உங்களால் விடுவிக்க முடியவில்லையே? அப்புறம் என்ன ம - - க்கு தமிழ் கட்சிகள் யாவும் ஓரணியில் திரள வேண்டும் என்று மீண்டும் அறிக்கை விடுகிறீர்கள்?

புத்தாண்டு வாழ்த்துக்கள்

•புத்தாண்டு வாழ்த்துக்கள் 2020ம் ஆண்டு முடிந்து 2021 ம் ஆண்டு பிறக்கிறது. அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஒவ்வொரு வருடமும் பிறக்கும்போது இந்த வருடமாவது ஒரு வழி பிறக்கும் என நம்புகிறோம். ஆனால் மேலும் மேலும் நெருக்கடிகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அவை நாம் தொடர்ந்தும் போராட வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை எமக்கு எற்படுத்துகின்றன. நாம் வீழ்வது கேவலம் அல்ல மாறாக வீழ்ந்து கிடப்பதே கேவலம். மீண்டும் எழுந்து நிற்பதையே வரலாறு பதிவு செய்யும். மீண்டும் எழுந்து நிற்போம்! இதுவே இந்த வருடத்தின் வரலாற்று கடமையாக இருக்க வேண்டும்.

Sunday, December 20, 2020

மூங்கில் பிரியாணியும்

•மூங்கில் பிரியாணியும் தொழில் அதிபர் திலீபன் மகேந்திரனும்! நான் பலவகை பிரியாணிகளை அறிந்திருக்கிறேன். அவற்றை சாப்பிட்டும் இருக்கிறேன். என்னை திண்டுக்கல் நீதிமன்ற விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட காலங்களில் திண்டுக்கல் பொலிஸ்இன்ஸபெக்டர் பேமஸ் பிரியாணி என்று கூறி தலைப்பாகட்டு பிரியாணி வாங்கித் தந்தது நினைவில் இருக்கிறது. ஆனால் இதவரை நான் மூங்கில் பிரியாணி சாப்பிட்டதும் இல்லை. அதை கேள்விப்பட்டதுகூட இல்லை. எனது முகநூலில் நண்பராக இருக்கும் திலீபன் மகேந்திரனின் முகநூல் பதிவுகளில் இருந்தே மூங்கில் பிரியாணியை இப்போது அறிகிறேன். சில வருடங்களுக்கு முன்னர் இந்த திலீபன் மகேந்திரன் தேசியக்கொடியை எரித்தார் என்று கைது செய்யப்பட்டு பொலிசாரால் சித்திரவதை செய்யப்பட்டார். அப்போது அவருக்கு இழைக்கப்பட்ட சித்திரவதையைக் கண்டித்து நான் குரல் கொடுத்தேன். இதனால் நான்தான் அவரை இயக்குவதாகவும் அவருக்கு உதவி செய்வதாகவும்கூட இந்திய உளவு அமைப்புகள் சந்தேகப்பட்டன. உண்மை என்னவென்றால் நான் இதுவரையில் ஒருமுறைகூட திலீபன் மகேந்திரனுடன் பேசியதில்லை. சரி. இப்போது விடயத்திற்கு வருகிறேன். திலீபன் மகேந்திரன் தற்போது சென்னையில் மூங்கில் பிரியாணி வியாபாரம் செய்ய ஆரம்பித்திருக்கிறார். அவருடைய வியாபாரத்திற்கும் பல இடைஞ்சல் கொடுக்கிறார்கள். ஆனாலும் அவற்றை சமாளித்து தொடர்கிறார். அதுவும் பெட்டிக் கடைகூட சொந்தமாக இல்லை. ஆனாலும்; தன்னை கெத்தாக “தொழில் அதிபர்” என்று போடுகிறார். அவருடைய இந்த தன்னம்பிக்கை பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள். குறிப்பு - இது ஒரு கட்டணம் இல்லாத விளம்பரம் என்று கருத வேண்டாம்.

தோழர் தமிழரசன் தாயாரின் மறைவை அடுத்து

தோழர் தமிழரசன் தாயாரின் மறைவை அடுத்து அவரது படத் திறப்பு விழாக்கள் தமிழகத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த கொரோனோ நெருக்கடிகளுக்கு மத்தியிலும் பல தமிழ் தேசிய அமைப்புகள் ஒன்று சேர்ந்து சென்னையில் படத்திறப்புவிழா நடத்தியுள்ளனர். தோழர் தமிழரசன் தாயாருக்கு வழங்கப்படும் இவ் மதிப்பு என்பது தோழர் தமிழரசனுக்கு வழங்கப்படும் அங்கீகாரம் ஆகும். தோழர் தமிழரசனை தவிhத்துவிட்டு இனியாரும் தமிழ்தேசியம் பேசிவிட முடியாது என்ற உண்மையை நிகழ்வில் பங்குபற்றிய அனைத்து அமைப்பு பிரதிநிதிகளும் கூறியிருக்கின்றன. இனிவரும் காலங்கள் தமிழரசன் காலமாக அமையட்டும். அவர் விரும்பிய தமிழ்தேசிய விடுதலை நிறைவேறட்டும்.

தீவிரம் (சினிமா)

தீவிரம் (சினிமா) ஒரு முஸ்லிம் இளைஞன் தன் தந்தையை கொன்றவர்களை பழி வாங்குவதற்காக அப்பாவி மக்களை குண்டு வைத்து கொல்ல திட்டமிடுவதை விரிவாகவும் விபரமாகவும் காட்டியிருக்கிறார்கள். முஸ்லிம் தீவிரவாதம் அப்பாவி மக்களை இலக்கு வைப்பதாக காட்டியவர்கள் அந்த முஸ்லிம் தீவிரவாதம் உருவாகக் காரணமான இந்து பயங்கரவாதம் பற்றியோ அல்லது அரச பயங்கரவாதம் பற்றியோ காட்டத் தவறிவிட்டார்கள். நியூட்டனின் மூன்றாம் விதிப்படி எந்தவொரு தாக்கத்திற்கும் மறு தாக்கம் உண்டு. எனவே மறு தாக்கத்தை நிறுத்த வேண்டும் என்றால் அதற்கு காரணமான தாக்கத்தை முதலில் நிறுத்த வேண்டும். இதுதான் ஈழத்திலும் நடந்தது. போராளிகளை பயங்கரவாதிகள் என்றுகூறி பல நாடுகள் ஒன்று சேர்ந்து அழித்தார்கள். ஆனால் அப் போராளிகள் உருவாகக் காரணமான சிங்கள அரச பயங்கரவாதம் குறித்து யாருமே அக்கறை கொள்ளவில்லை.

வரலாறு காணாத மாபெரும் உழவர் போராட்டம்!

•வரலாறு காணாத மாபெரும் உழவர் போராட்டம்! 96000 டிராக்டர் வண்டிகள் சகிதம் லட்சக்கணக்கான உழவர்கள் தலைகர் டில்லியில் சூழ்ந்திருக்கிறார்கள். காப்ரேட் முதலாளிகளின் நலனுக்காக மோடி அரசு உருவாக்கிய சட்டத்தை திரும்ப்பெறுமாறு கோரி இவ் உழவர்கள் போராடுகின்றனர். ஆனால் மோடி அரசு முதலாளிகளின் நலனுக்காக உழவர் போராட்டத்தை பொலிஸ் வன்முறை மூலம் அடக்க முனைகிறது. இதைத்தான் 200 வருடங்களுக்கு முன்னரே மார்க்சிய ஆசான் எங்கெல்ஸ் அவர்கள் “ முதலாளிகளின் நலனுக்காக உழைக்கும் மக்களை அடக்கும் வன்முறைக் கருவியே அரசு” என்று தெளிவாக கூறியிருக்கிறார். உழவர் போராட்டம் வெல்லட்டும் முதலாளிகளின் நலன் பேணும் மோடி அரசை தூக்கியெறியட்டும்.

சிங்கள பொலிசாரால் சிறையில் கொல்லப்பட்ட

சிங்கள பொலிசாரால் சிறையில் கொல்லப்பட்ட சிங்கள இளைஞனின் சிங்கள தாயொருவர் சிங்கள பொலிசாரின் காலில் விழுந்து மன்றாடுகிறார். சிங்கள கோத்தபாயாவுக்கு வோட்டு போட்டவர்களுக்கு இந்த நிலை நிச்சயம் வரும் என்று எமக்கு தெரியும். ஆனால் இந்தளவு விரைவாக வரும் என எதிர்பார்க்கவில்லை. குறித்து வைத்துக்கொள்ளுங்கள் எந்த சிங்கள மக்கள் மூலம் பதவி பெற்றார்களோ அதே சிங்கள மக்களின் மூலம் மகிந்த கும்பல் தூக்கியெறியப்படும். இது உறுதி.

செய்தி - இந்தியாவின் பங்களிப்பில் முழு நம்பிக்கை.

செய்தி - இந்தியாவின் பங்களிப்பில் முழு நம்பிக்கை. அஜித் டோவலுடனான சந்திப்பின் பின்னர் சம்பந்தர் ஐயா தெரிவிப்பு தமிழ் மக்களுக்கு எந்த தீர்வும் வழங்குவதற்கு இலங்கை அரசு ஒருபோதும் தயார் இல்லை. ஆனால் ஜனாதிபதி கோத்தா இதை தைரியமாக இந்தியாவில் வைத்தே கூறினார். பொதுவாக ஒரு நாட்டுக்கு செல்லும் இன்னொரு நாட்டு தலைவர் அந்த நாட்டுக்கு தர்ம சங்கடம் வரும் கருத்துகளை கூறுவதில்லை. இதுதான் உலக நடைமுறை. ஆனால் கோத்தாவோ இந்த நடைமுறைபற்றி எல்லாம் கவலைப்படாமல் தமிழருக்கு வழங்கும் தீர்வு பற்றி கூறியிருக்கிறார். தமிழருக்கு உரிய தீர்வு வழங்குமாறு கோத்தாவுக்கு அழுத்தம் கொடுத்ததாக இந்திய அரசு கூறுகிறது. ஆனால் கோத்தாவோ “ தமிழருக்கு தீர்வு வழங்குவதை பெருன்பான்மை சிங்கள மக்கள் விரும்பவில்லை. எனவே சிங்கள மக்களை மீறி தீர்வு எதையும் நான் வழங்கப் போவதில்லை” என்று கூறினார். தமிழருக்கு தீர்வு வழங்கப்போவதில்லை என்று இந்தியாவில் வைத்தே தைரியமாக கோத்தா கூறினார். அவருக்கு 7000 கோடி ரூபா உதவியை இந்திய அரசு வழங்கியது. இதுதான் தமிழருக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் இந்திய அரசின் அக்கறை ஆகும். தமிழருக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதில் இந்திய அரசுக்கு உண்மையான அக்கறை இல்லை என்றுதானே அர்த்தம். ஆனால் சம்பந்தர் ஐயாவோ “இந்தியா தமிழருக்கு தீர்வு பெற்று தரும்” என்று இன்னமும் கூறிக் கொண்டிருக்கிறார். 2009க்கு பின்னர் இதுவரை சுமார் நூறு தடவைக்கு மேல் இந்திய பிரதிநிதிகளை சம்பந்தர் ஐயா சந்தித்திருக்கிறார். சந்தித்த அத்தனை தடவையும் இந்தியா தமிழருக்கு தீர்வு பெற்று தரும் என்றே நம்பிக்கை தெரிவித்து வருகிறார். தண்ணீர்கூட மூன்றுமுறைதான் பொறுக்கும். ஆனால் சம்பந்தர் ஐயாவோ தண்ணியைவிட அதிகமாக பொறுமை காக்கிறார். சம்பந்தர் ஐயா தொடர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றி வருகிறார். அதனால் “இந்த கிழடு செத்து தொலையுமட்டும் தமிழருக்கு ஒரு மயிரும் கிடைக்காது” என்று மக்களே தூற்றும் காலம் விரைவில் வரப் போகிறது. குறிப்பு- கடந்த வருடம் இந்தியாவினால் திறந்த பலாலி விமானநிலையத்தை சத்தம் போடாமல் மூடி வருகிறது இலங்கை அரசு. அதைக்கூட ஏன் என்று யாழ் இந்திய தூதரால் கேட்க முடியவில்லை. ஆனால் அவரோ வடக்கு கிழக்கு முழுவதும் 20 காந்தி சிலையை நிறுவ துடிக்கிறார்.

இன்னும்_எத்தனை_உயிர்களை பலியிட_வேண்டுமோ?

•இன்னும்_எத்தனை_உயிர்களை பலியிட_வேண்டுமோ? நவம்பர் 26 முதல் டெல்லி சலோ இயக்கத்தில் பங்கேற்க வந்தவர் கஜ்ஜன் சிங் பஞ்சாப் மாநிலம், லூதியானா மாவட்டம், சத்ரா கிராமத்தைச் சேர்ந்தவர். பாஜக மத்திய அரசின் விவசாய விரோதச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி நடைபெறும் போராட்டங்களில் பங்கேற்று வருகிறார் தலைநகர் டெல்லி செல்லும் வழியில் டிக்ரி என்ற இடத்தில் காவல்துறை தடுத்து நிறுத்தியதால் கடந்த 5 நாட்களாக கடும் குளிரில், நெடுஞ்சாலையில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டதால் கஜ்ஜன் சிங் உயிரிழந்தார். முன்னதாக விவசாயி தான்னா சிங் உயிரிழந்தார். இப்போது கஜ்ஜன் சிங் உயிர் பலியானார். இன்னும் எத்தனை உயிர்களை பலியிட வேண்டுமோ?

பலே! கோத்தா பலே!

•பலே! கோத்தா பலே! மகரம சிறைச்சாலையில் 108 பேருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டமையினால் அது குறித்து அரசு எந்த பொறுப்பான நடவடிக்கையும் எடுக்காததால் அங்கிருந்த கைதிகள் சிலர் பயத்தில் தப்ப முயற்சி செய்துள்ளனர். நோய் தொற்று குறித்து நம்பிக்கை அளிக்கும் நடவடிக்கைகள் எதையும் எடுக்காத அரசு அங்கிருந்த எட்டு கைதிகளை சுட்டுக் கொன்றுள்ளது. 127 பேருக்கு கடுமையான காயம் எற்பட்டுள்ளது. சிறைக்கு வெளியே கைதிகளின் உறவினர்கள் பொலிசாரின் காலில் விழுந்து கெஞ்சுகின்றனர். மன்றாடுகின்றனர். ஆனால் அரசோ சிறைத்துறை அமைச்சருக்கு மேலதிகமாக கொரோனோ அமைச்சு பதவியும் வழங்கியுள்ளது. உலகில் ஒரு நோய்க்கு அமைச்சு பதவி வழங்கியிருக்கும் முதல் அதிசய நாடு இலங்கை ஆகும். அதைக்கூட சிறையில் கொரோனோவினால் கலவரம் ஏற்பட்டு எட்டுப் பேரைக் கொன்றவருக்கு வழங்கியுள்ளது. அதாவது இனி வெளியிலும் யாராவது கொரேர்னோ என்றால் கொல்லும்படி ஜனாதிபதி ஆசீர்வாதம் வழங்கியுள்ளார். புலிகளை அடக்கியது போன்று கொரோனோவையும் அடக்குவோம் என்று ராணுவ தளபதி கூறிய போது நாம் அதை சீரியஸாக எடுக்கவில்லை. ஆனால் போற போக்கைப் பார்த்தால் எல்லோரையும் கொன்று புதைத்து கொரோனோவை ஒழிக்க நினைக்ககிறார்கள் போல் தெரிகிறது. பாவம் இலங்கை மக்கள்!

தீ பரவட்டும்!

•தீ பரவட்டும்! அதில் மோடி அரசு பொசுங்கட்டும்!! ஒருபுறம் கடுங்குளிரில் இதுவரை இரண்டு விவசாயிகள் இறந்து விட்டனர். மறுபுறத்தில் போராட்டத்தில் பங்குபற்ற பெண் விவசாயிகள் அணி திரள்கிறார்கள். இதோ ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ஒரு பெண்ணே டிராகடர் வண்டியை ஓட்டிக்கொண்டு வருகிறார் டில்லி நோக்கி வீதியில் பாரிய கொன்கிரீட் கற்களை போட்டு மறித்தார்கள் வீதியில் பாரிய பள்ளங்களை தோண்டியும் மறித்தார்கள். வீதியில் வரும் விவசாயிகள் மீது தண்ணியை பீச்சி அடித்துப் பார்த்தார்கள். அத்தனை தடைகளையும் தாண்டி விவசாயிகள் வீறு நடை போடுகின்றனர். காயம்பட்ட விவசாயிகள் சிகிச்சை பெற செல்லாமல் தொடர்ந்தும் போராடுகிறார்கள். அதைவிட அதிசயம். தம்மை அடித்து காயப்படுத்திய பொலிசாரின் தாகத்திற்கும் அவர்களே தண்ணீர் கொடுக்கின்றனர். ஆனால் அரசோ கொஞ்சம்கூட இரக்கம் இன்றி இவ் விவசாயிகளை பயங்கரவாதிகள் என்றும் தேசவிரோதிகள் என்றும் கூசாமல் கூறுகின்றது. விவசாயிகள் போராட்டம் நிச்சயம் வெற்றி பெற வேண்டும்.

தொடரும் இழப்புகள்!

•தொடரும் இழப்புகள்! டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் மூன்றாவது இழப்பு. பஞ்சாப்பின் விவசாயி குர்பச்சான் சிங களத்தில் மரணமடைந்துள்ளார். அவருக்கு எமது அஞ்சலிகள். எத்தனை தடை போட்டாலும் அத்தனையையும் உடைத்துக்கொண்டு எத்தனை இழப்புகள் ஏற்பட்டாலும் அத்தனையையும் தாங்கிக்கொண்டு தொடர்ந்து போராடும் விவசாயிகளுக்கு எமது ஆதரவும் வாழ்த்துகளும். வெல்லட்டும் போராட்டம்!

இன்று 28 ஆண்டுகளுக்கு முன்னர்

இன்று 28 ஆண்டுகளுக்கு முன்னர் (06.12.1992) பாபர் மசூதி இடிக்கப்பட்ட நான் ஆகும். பாபர் மசூதியை இடித்தவர்களை நிரபராதிகள் என்று இந்திய உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. எனவே நீதிமன்றி தீர்ப்பின்படி பாபர் மசூதி தானாக இடிந்து விழுந்த நாள் இன்று ஆகும். இது இந்திய அதிசயம்!

சர்வதேச கவனம் பெறும்

•சர்வதேச கவனம் பெறும் இந்திய விவசாயிகள் போராட்டம்! இந்திய விவசாயிகள் போராட்டம் நியாயமானது என்று ஜ.நா மன்றம் தெரிவித்துள்ளது. இந்திய விவசாயிகள் போராட்டத்திற்கு தனது ஆதரவை கனடா பிரதமர் மீண்டும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் விவசாயிகள் இந்தியா முழுவதும் நாடுதழுவிய பந்த் அறிவித்துள்ளார்கள். இதற்கு அனைத்து தொழிற்சங்கங்களும் முழு ஆதரவு தெரிவித்துள்ளன. விவசாயிகளின் போராட்டத்திற்கு பஞ்சாப் பாடகர் ஒருவர் ஒரு கோடி ரூபா அன்பளிப்பு செய்துள்ளார். விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல இலக்கியவாதிகள் தமக்கு கிடைத்த விருதை திருப்பியளிகின்றன. இவ்வாறு நாளுக்குநாள் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு பெருகுகின்றது. விவசாயிகள் கொடிய பனி மற்றும் கடுங் குளிருக்கு மத்தியிலும் போராட்டத்தை உறுதியுடன் தொடருகின்றனர். பல்வேறு தடைகளை போட்டு போராட்டத்தை தடுக்க முயன்ற அரசு அது பயன் அளிக்காததால் அவதூறுகளை பரப்புகின்றது. கொஞ்சம்கூட இரக்கம் இன்றி விவசாயிகளை தேசவிரோதிகள் என்றும் அந்நிய கைக்கூலிகள் என்றும் கூறுகின்றது. ஆனாலும் விவசாயிகளின் போராட்டம் நிச்சயம் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறும். அவர்களுக்கு எமது ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவிப்போம்.

பதிவு செய்யாத கட்சியை தடை செய்ய முடியுமா?

•பதிவு செய்யாத கட்சியை தடை செய்ய முடியுமா? சுகாதார அமைச்சர் மந்திரித்த குடத்தை ஆற்றில் போட்டுப் பார்த்தார். பயன் இல்லை. கொரோனோ நோய்க்கு என்று ஒரு அமைச்சரை நியமித்து பார்த்தார்கள். பயன் இல்லை. என்ன செய்தும் கொரோனோவை கட்டுப்படுத்த முடியவில்லை. சிறைக்குள்ளேயே நாலு பேரை சுட்டுக் கொல்லும் அளவுக்கு நிலைமை சென்றுவிட்டது. மக்களுக்கு வேலை இல்லை. அரச நிவாரணம் இல்லை. அதனால் லாக்டவுன் கட்டுப்பாடுகளை ஏற்க மக்கள் மறுக்கிறார்கள். அரசுக்கு எதிராக சிங்கள மக்கள் வீதியில் இறங்கிப் போராட ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் பொறுப்புவாய்ந்த அமைச்சரோ தமிழ்தேசிய கூட்டமைப்பை தடை செய்ய வேண்டும் என்று பேசுகிறார். தமிழ்தேசிய கூட்டமைப்பை தடை செய்வதன் மூலம் கொரோனோவை எப்படி ஒழிக்க முடியும் என்று ஒரு அரசியல்வாதிகூட கேள்வி எழுப்பவில்லை. அதுமட்டுமன்றி தமிழ்தேசிய கூட்டமைப்பு இன்னும் பதிவு செய்யப்படவில்லை. எனவே பதிவு செய்யப்படாத கட்சியை எப்படி தடை செய்யப் போகிறார்கள் என்றும் புரியவில்லை. போராடும் சிங்கள மக்களின் கவனத்தை திருப்பி ஏமாற்றுவதற்காகவே இந்த மாதிரி இனவாதக் கருத்தை அந்த அமைச்சர் கூறியிருக்கிறார். இந்த உண்மை சாதாரண மக்களுக்கே நன்கு புரியக்கூடியது. எனவே தன்னை சாணக்கியன் என்று நம்பும் சம்பந்தர் ஐயா “ முதலில் கொரோனோவை ஒழியுங்கள். அப்புறம் தமிழ்தேசியகூட்டமைப்பை தடை செய்யலாம்” என கூறியிருக்க வேண்டும். ஆனால் சம்பந்தர் ஐயாவும் “தமிழ்தேசிய கூட்டமைப்ரைப யாராலும் தடை செய்ய முடியாது” என்று பதில் கூறி அமைசரின் பேச்சுக்கு எண்ணெய் ஊற்றியுள்ளார். தமிழ்தேசிய கூட்டமைப்பை பதிவு செய்யும்படி டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் புளட் தலைவர் சித்தார்த்தன் ஆகியோர்; கேட்டு கேட்டு களைத்துவிட்டனர். தமிழரசுக்கட்சி தலைவர்களான மாவை சேனாதிராசாவும் சம்பந்தர் ஐயாவுமே தமிழ்தேசிய கூட்டமைப்பபை பதிவு செய்ய தடை போட்டு வருகிறார்கள். இவ்வாறு தமிழ்தேசியகூட்டமைப்பை பதிவு செய்யவே விரும்பாத ஒத்துழைக்காத சம்பந்தர் ஐயா இப்போது யாராலும் தடை செய்ய முடியாது என்று வீரம் பேசுவது தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காகவே. ஏமாறுவதற்கு மக்கள் இருக்கும்வரை இந்த அரசியல்வாதிகள் மாறி மாறி இனவாதம் பேசி மக்களை ஏமாற்றிக் கொண்டே இருப்பார்கள்.

பேரறிவாளனின் விடுதலையும்

•பேரறிவாளனின் விடுதலையும் தமிழக “டயர் நக்கி” அரசின் துரோகமும்! கடந்த இருதினங்களுக்கு முன்னர் ஜெயா அம்மையாரின் சமாதியில் நினைவஞ்சலி செலுத்திய முதல்வரும் துணை முதல்வரும் தாம் “அம்மாவின் ஆட்சி”யை தொடர்வதாக கூறியிருந்தனர். இவர்கள் உண்மையில் அம்மாவின் ஆட்சியை தொடர்வதாக இருந்தால் அவரின் இறுதி விருப்பங்களில் ஒன்;றான எழுவர் விடுதலையை செய்திருக்க வேண்டும். ஆனால் இந்த டயர் நக்கி அரசு இதுவரை எழுவரை விடுதலை செய்யாதது மட்டுமன்றி ஆளுநருடன் சேர்ந்து அவர்களின் விடுதலைக்கு எதிராக சதி செய்கிறது. பேரறிவாளன் மிகவும் சுகயீனம் அடைந்துள்ளார். அவர் மருத்துவ சிகிச்சைக்காக பரோல் விடுமுறை கேட்டபோது இந்த டயர் நக்கி அரசு மறுத்துவிட்டது. தான் மறுத்தது மட்டுமன்றி பேரறிவாளன் நீதிமன்ற அனுமதி கோரியபோதும் கடும் எதிர்;ப்பை இவர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவ சிகிச்சை பெற பரோல் விடுமறை வழங்கவே மறுக்கும் இந்த அரசு பேரறிவாளனுக்கு விடுதலை வழங்க ஆளுனர் தாமதம் செய்வதாக பொய் கூறுகிறது. ஆளுநர் தாமதம் செய்வதுதான் காரணம் என்றால் இந்த ஏழுபேரையும் நீண்ட பரோலில் விடுதலை செய்ய முடியும். அதற்கு ஆளுநர் அனுமதி தேவையில்லை. ஆனால் அதற்கு இந்த டயர் நக்கி அரசு தயாரில்லை. ஏனெனில் இந்த எழுவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற உண்மையான விருப்பு இவர்களுக்கு இல்லை. அதை உறுதிப்படுத்துவிதமாக அண்மையில் தமிழக அரசின் சார்பாக நீதிமன்றத்தில் பங்குபற்றிய அரச வழக்கறிஞர் செயற்பாடு அமைந்துள்ளது. பேரறிவாளன் புழல் சிறையில் அடைக்கபப்ட்டிருக்கிறார். ஆனால் மத்திய அரசின் வழக்கறிஞர் அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தில் கூறியுள்ளார். அதுமட்டுமன்றி வேலூர் சிறைக்கு அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் சிகிச்சை பெற முடியும் என்றும் அரச வழக்கறிஞர் கூறியிருக்கிறார். இதுவும் இன்னொரு பொய் ஆகும். ஏனெனில் சிறையில் இருப்பவர்கள் நீதிமன்ற உத்தரவு இன்றி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறமுடியாது என்று விதி இருக்கிறது. இவ்வாறு மத்திய அரசின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் பொய்கள் கூறும்போது அதை மறுத்து பேச வேண்டிய தமிழக அரசின் வழக்கறிஞர் மௌனமாக இருந்து ஒத்துழைப்ப வழங்கியுள்ளார். இதன்மூலம் தமிழக டயர் நக்கி அரசு மத்திய அரசுடன் சேர்ந்துகொண்டு ஜெயா அம்மையாரை மட்டுமன்றி தமிழக மக்களையும் ஏமாற்றுகின்றது என்பது நன்கு புலனாகிறது. முன்பு ஜெயா அம்மையாரின் டயரை நக்கியவர்கள் இப்போது மோடியின் டயரை நக்கிறார்கள் எதிர்வரும் தேர்தலில் இந்த டயர் நக்கிகளை மக்கள் விரட்டியடிக்க வேண்டும்

இந்த நாசமாய்போன அமைச்சர்களுக்கு

•இந்த நாசமாய்போன அமைச்சர்களுக்கு கொரோனோ வந்து தொலைக்காதா? ஒருபுறம் கொரோனோ. மறுபுறம் புயல் மழை வெள்ளம் என மக்கள் திண்டாடுகிறார்கள். அவர்களுக்கு உரிய நிவாரண உதவிகள்கூட இதுவரை வழங்க அரசு முன்வரவில்லை. கொரோனோவை கட்டுப்படுத்த வேண்டிய சுகாதார அமைச்சரோ மந்திரித்த குடத்தை ஆற்றில் போட்டு தன் கடமையை முடித்துக் கொண்டுள்ளார். இதன் பின்னர் கொரோனோ நோய்க்கு என ஒரு அமைச்சரை ஜனாதிபதி கோத்தா நியமித்தார். அதுவும்கூட சிறையில் கொரோனோவை கட்டுப்படுத்த முடியாமல் நாலு கைதிகளை சுட்டுக்கொன்றவருக்கு இந்த அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சரோ தமிழ்த் தேசிய கூட்டமைப்பை தடை செய்ய வேண்டும் என்று கூறிக்கொண்டு இருக்கிறார். நீதி அமைச்சரோ தன் அலுவலகத்திற்கு இரண்டு வருட வாடகையாக 40 கோடி ரூபா ஒதுக்கியுள்ளார். அதாவது நீதி அமைச்சரின் அலுவலகத்தின் மாதாந்த வாடகை ஒரு கோடியே 67 லட்ச ரூபா ஆகும். இந்த பணத்திற்கு இலங்கையில் ஒரு கட்டிடத்தையே மொத்தமாக வாங்கிவிட முடியும். மக்களுக்கு நிவாரணம் கொடுக்காமல் ஒரு அமைச்சர் அதுவும் நீதி அமைச்சரே நியாயமில்லாமல் இப்படி நடந்துகொள்கிறார். உலகில் எல்லாம் கொரோனோவினால் இறந்த முஸ்லிம்களை அவர்கள் மத வழக்கப்படி புதைப்பதற்கு அரசுகள் அனுமதிக்கின்றன. ஆனால் இலங்கையில் மட்டும் வேண்டுமென்றே அரசு புதைப்பதற்கு அனுமதியளிக்க மறுக்கிறது. நீதி அமைச்சர் ஒரு முஸ்லிம். தன் இனத்திற்கே இழைக்கப்படும் அநியாயத்தை அவரால் தட்டிக் கேட்க முடியவில்லை. ஆனால் கொஞ்சம்கூட கூச்சமின்றி இந்த நீதி அமைச்சர் தன் அலுவல வாடகைக்கு 40 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளார். இந்த நாசமாய்போன அமைச்சர்களுக்கு கொரோனோ வந்து தொலைக்காதா?

இன்று மனிதவுரிமை தினமாம்?

இன்று மனிதவுரிமை தினமாம்? போர் முடிந்து 11 வருடங்கள் ஆகிவிட்டன. போர் முடிந்த பின் சரணடைந்த இவர்களுக்கு என்ன நடந்தது என்றே இன்று வரை தெரியவில்லை. இறந்தவர்கள் பட்டியலில் சேர்ப்பதா அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பட்டியலில் சேர்ப்பதா என்றும் தெரியவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடந்த 4 வருடங்களாக வீதியில் உட்கார்ந்து போராட்டம் நடத்துகின்றனர். தமிழ் மக்களுக்கு பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். பல கட்சிகள் இருக்கின்றன. பல தலைவர்கள்;கூட இருக்கிறார்கள். ஆனால் இவர்களால்கூட இந்த காணாமல் போனவர்களை கண்டு பிடிக்க முடியவில்லை.

பரிசுத்த ஆவியில் கொழுக்கட்டை வேகவைக்க முடியாது!

•பரிசுத்த ஆவியில் கொழுக்கட்டை வேகவைக்க முடியாது! கடந்த வருடம் இதே காலப்பகுதியில் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் வன்னியில் இருந்து ஒருவர் என்னுடன் பேசினார். தன்னை முன்னாள் போராளி என்று கூறியவர் இம்முறை தாம் மகிந்தவுக்கு ஆதரவு தெரிவிக்க இருப்பதாகவும் அது குறித்து என் கருத்து என்னவென்று கேட்டார். தான் ஆட்சிக்கு வந்தவுடன் சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக மகிந்த ராஜபக்சா உறுதியளித்திருப்பதாகவும் அதனால் அவரை ஆதரிக்க முடிவு செய்ததாகவும் அவர் என்னிடம் கூறினார். அப்போது நான் “சரி. அவர் பதவிக்கு வந்த பின்பு அரசியல் கைதிகளை விடுதலை செய்யாவிடில் என்ன செய்வது? எந்த அடிப்படையில் அவரை நம்புகிறீர்கள்?” என கேட்டேன். அதற்கு அவர் இதை நாங்கள் மகிந்தவிடமே கேட்டோம். அப்போது அவர் “12000 புலிகளை புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்த எனக்கு சிறையில் இருக்கும் 77 அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாதா. என்னை நம்புங்கள்” என்று கூறினார் என்றார். இவ்வாறு மகிந்தா மட்டுமன்றி கோத்தா மற்றும் நாமல் ராஜபக்சா எல்லோரும் தாம் ஆட்சிக்கு வந்ததும் உடன் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தார்கள். பதவி ஏற்றதும் உடன் விடுதலை செய்வதாக வாக்குறுதி அளித்தவர்கள் ஒரு வருடம் கடந்த பின்னரும் இன்னும் விடுதலை செய்யவில்லை. ஆனால் இவர்கள் ஆட்சிக்கு வந்ததும் சிங்கள ராணுவ வீரரை விடுதலை செய்தனர். தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவில்லை. அரசியல்வாதிகளின் தேர்தல்கால வாக்குறுதிகள் நம்பமுடியாதவை என்பதற்கு இது நல்லதொரு சான்று மட்டுமல்ல தேர்தல்பாதை மூலம் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாது என்பதும் நிரூபணமாகியுள்ளது. தேர்தல் பாதை மூலம் அரசியல் கைதிகளையே விடுதலை செய்விக்க முடியவில்லை எனில் தமிழருக்கு தீர்வை பெற முடியும் என எப்படி நம்புவது?

விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகருகின்றது! கடந்த பத்து நாட்களாக டில்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்து அறிவித்துள்ளனர். இதன்படி இனி பாஜக அலுவலகங்களை முற்றுகை செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். அத்துடன் டோல்கேட்டுகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் செல்ல வழி செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளனர். அத்துடன் காப்ரேட் முதலாளிகளான அம்பானி மற்றும் அதானிகளின் வியாபார பொருட்களையும் பகிஸ்கரிக்கப்போவதாக அறிவித்துள்ளனர். ஆக மொத்தத்தில் பிரதமர் மோடியின் அடிவயிறிலே கைவைக்க ஆரம்பித்துவிட்டனர். இதற்கு மோடி அரசின் பொறுப்பற்ற தன்மையே காரணம் . விவசாயிகள் தொடர்ந்து போராடுகிறார்கள் விவசாயிகள் போராட்டம் அடுத்த கட்டத்pற்கு நகருகின்றது. அதுமட்டுமல்ல அது சரியான திசையிலே நகருகின்றது. எனவே அவர்கள் போராட்டம் வெல்லட்டும் அனைத்து மக்கள் ஆதரவோடு.

தட்றோம் தூக்கிறோம் (சினிமா)

•தட்றோம் தூக்கிறோம் (சினிமா) இப் படத்தின் கதாநாயகன் ஒரு ஈழ அகதியாக காட்டப்பட்டிருக்கிறார். ஈழ அகதிகள் குறித்து சினிமாவில் பேச முற்படுவது நல்லதொரு விடயமே. பாராட்டுக்குரியதே. ஆனால் இப்படத்தின் கதை ஒரு சாதாரண கதையாகும். இதில் எதற்காக கதாநாயகனை ஈழ அகதியாக காட்டுகிறார்கள் என்று புரியவில்லை. படத்தை பார்க்கும்போது ஈழ அகதிகள் பணத்திற்காக சட்டவிரோத கிரிமினல் வேலைகளை செய்வார்கள் என்ற ஒரு கருத்தை தருகிறது. இது ஒரு தவறான முன்னுதாரணம் ஆகும்.

அப்துல் ரவூப்!

• அப்துல் ரவூப்! என்றும் நினைவில் கொள்வோம்! 1995ம் ஆண்டு மார்கழி மாதம் 15ம் திகதி. ஈழத் தமிழர்களுக்காக அப்துல் ரவூப் தன்னையே எரித்துக்கொண்ட நாள். சந்திரிக்கா ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழர்கள் இடம்பெயர்ந்த துயரச் செய்தியைக் கேட்டு அப்துல் ரவூப் துடித்த நாள் அது. அது ஜெயா அம்மையாரின் இருண்ட ஆட்சிக் காலம். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போர் தடா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட காலம் அது. அப்துல் ரவூப் மரணம், • ஈழத் தமிழர்களுக்கு தமிழக மக்களின் ஆதரவு உண்டு என்பதை உலகிற்கு வெளிப்படுத்தியது • தடா சட்டத்தின் மூலம் தமிழக மக்களின் அதரவுக் குரலை நசுக்க முடியாது என்பதை காட்டியது. • ராஜீவ் மரணத்தால் தமிழக மக்களின் ஈழ ஆதரவு நிலை மாறவில்லை என்பதைக்காட்டியது. • எல்லாவற்றுக்கும் மேலாக ஈழத் தமிழர்களுக்காக மரணத்தை தழுவவும் தமிழக இளைஞர்கள் தயங்க மாட்டார்கள் என்பதை இந்திய அரசுக்கு காட்டியது. • தமக்காக குரல் கொடுக்க தாய்த் தமிழகம் இருக்கிறது என்பதை ஈழத் தமிழர்களுக்கு உணர்த்தியது. இத்தனை பயன் உள்ள செய்திகளையும் அப்துல் ரவூப் தன் மரணம் மூலம் உலகத்திற்கு எடுத்துக் கூறினான். அதுமட்டுமன்றி சாத்வீக வழிகளில் போராடுவதால் குறிப்பாக தங்களைத் தாங்களே எரித்துக்கொள்வதால் இலங்கை இந்திய அரசுகள் மனம் இரங்கப்போவதில்லை என்பதையும் அவனது மரணம் காட்டியுள்ளது. நாம் அப்துல் ரவூப்பையும் அவரது தியாகத்தையும் மறந்துவிட்டோம். அதனை நினைவு கூர தவறிவிட்டோம். அப்துல் ரவூப் இறந்தபின்பு ஜெயா அம்மையாரின் பொலிஸ் அவரது தாய் தந்தையரை மிரட்டியது. காதல் தோல்வியில் அப்துல் ரவூப் தற்கொலை செய்தான் என்று கூறும்படி வற்புறுத்தியது. அவ்வாறு கூறினால் பணம் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியது. ஆனால் அந்த ஏழைப் பெற்றோர் எதற்கும் அஞ்சவில்லை. ஆசை வார்த்தைகளுக்கு மசியவில்லை. ஈழத் தமிழர்களுக்காக தம் மகன் உயிர் விட்டதை எண்ணிப் பெருமைப்படுவதாகவே கூறினார்கள். இன்றும்கூட அவர்கள் அந்த கருத்தையே கொண்டிருக்கிறார்கள். ஆனால் நம்மவர்கள் அப்துல் ரவூப்பை மறந்துவிட்டார்கள். அவரின் தியாகத்தையும்கூட நினைவு கூர தவறி விட்டார்கள். ஓ! அப்துல் ரவூப் எங்களை மன்னித்துவிடு! குறிப்பு- 15.12.2020 யன்று அப்துல் ரவூப் அவர்களின் 25வது நினைவு தினம்.

குழந்தை- அப்பா! மிகவும் குளிராக இருக்கிறது

குழந்தை- அப்பா! மிகவும் குளிராக இருக்கிறது அப்பா- தெரியும். ஆனால் எரிப்பதற்கு நிலக்கரி இல்லையே? குழந்தை- ஏன் நிலக்கரி இல்லை? அப்பா- எனக்கு வேலை போய்விட்டது. அதனால் வாங்க முடியவில்லை. குழந்தை- ஏன் வேலை போய்விட்டது? அப்பா- நாங்கள் அதிகம் நிலக்கரியை உற்பத்தி செய்துவிட்டோம். அதனால் வேலையைவிட்டு நிறுத்திவிட்டார்கள். மிகையான உற்பத்திக் கொள்கையின் முழு அபத்தத்தை இந்த உரையாடல் அம்பலப்படுத்துகின்றது. இன்று இந்த உரையாடலை பலரும் தங்கள் சொந்த அனுபவங்களினூடாக உணர்ந்து கொள்கின்றனர். சமுதாயத்தில் உற்பத்தியாகும் பண்டங்கள் யாவற்றினதும் பெறுமதிக்கு சமமான ஒரு பெறுமதி சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் ஊதியமாகவோ அல்லது வருமானமாகவோ சமத்துவமான முறையில் பங்கிடப்படாதவரை உற்பத்திக்கும் நுகர்வுக்கும் இடையே முரண்பாடு பெருகவே செய்யும். இதுவே பொருளியல் நெருக்கடியின் காரணம். இது முதலாளித்துவ சமுதாயத்தில் தவிர்க்க முடியாதது. இந்த நெருக்கடிக்கு முதலாளித்துவத்தில் தீர்வு எதுவும் இல்லை. பெரும்பான்மையான மக்களிடம் வாங்கும் சக்தி இல்லாத காரணத்தால் ஏற்படும் இந்த நெருக்கடியை மக்களினுடைய வாங்கும் சக்தியை பெருக்குவதன் மூலம் தீர்க்க முடியாது. ஏனெனில் அது முதலாளிகளின் லாபத்தை பாதித்தே அதனை செய்ய முடியும். அதனை அவர்கள் விரும்பமாட்டார்கள். எனெனில் அது அவர்களை தற்கொலை செய்யக் கேட்பதாகும். எனவேதான் எவ்வளவு கடுமையாக முயன்றாலும் இப் பிரச்சனைக்க முதலாளியத்தால் தீர்வு காணமுடியாது சோசலிசத்தால் மட்டுமே தீர்வு காண முடியும் என மாக்ஸ் கூறினார். உலகில் முதலாளித்துவமா அல்லது சோசலிசமா வெற்றி பெறும் என பலர் வினா எழுப்பிக்கொண்டே இருக்கின்றனர். ஆனால் மாக்சிசத்தின் பின்னரான இந்த ஒன்றரை நூற்றாண்டு முதலாளித்துவத்திற்கு ஒரே மாற்று சோசலிசமே என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது.

கோழிகளால் தன் குஞ்சுகளை

•கோழிகளால் தன் குஞ்சுகளை எப்படி பாதுகாக்க முடிகிறது? தன் குஞ்சுகளுக்கு ஆபத்து என்றால் எதிரி எந்தளவு பெரியது என்றாலும் கோழி போராட தயங்குவதில்லை ஏனென்றால் போராடினால் மட்டுமே உயிர் தப்ப முடியும் என்பதைத் தவிர வேறு எதுவும் அதற்கு தெரியாது. அதுமட்டுமல்ல, •குஞ்சுகளைக் காப்பாற்ற போராடுவது பயங்கரவாதம் என்று யாரும் அதற்கு கூறுவதில்லை. •அகிம்சை வழியில் போராடினால் குஞ்சுகளைக் காப்பாற்றலாம் என யாரும் ஏமாற்றுவதில்லை. •இதெல்லாம் போன ஜென்மத்தில் செய்த பாவத்தின் விளைவு என்று யாரும் போதிப்பதில்லை . •எல்லாவற்றுக்கும் மேலாக தன்னை அழிப்பது போர்க்குற்றமா? அல்லது இனப்படுகொலையா? என்று ஆராய்ந்து கொண்டிருப்பதில்லை. கோழிகளால் தம் குஞ்சுகளை போராடி பாதுகாக்க முடிகிறது. ஆனால் தமிழனால் தன் இனத்தை பாதுகாக்க முடியவில்லை. தமிழனும் ஒருவேளை கோழியாக பிறந்திருந்தால் தன் இனத்தை காக்க போராடியிருப்பானோ?

•மோடி இந்திய மக்களின் பிரதமரா?

•மோடி இந்திய மக்களின் பிரதமரா? அல்லது முதலாளிகளின் பிரதமரா? இந்தியாவில் கடந்த இரண்டு வாரமாக உழைக்கும் மக்களான உழவர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். கடும் குளிர் காரணமாக இதுவரை நான்கு பேர் இறந்துவிட்டனர். முதலாளிகளையும் நடிகைகளையும் சந்திக்க நேரம் ஒதுக்கும் பிரதமர் மோடி விவசாயிகளை சந்திக்க நேரம் ஒதுக்க மறுக்கிறார். கடன்சுமை தாங்க முடியாமல் ஏழை மக்கள் குடும்பமாக தற்;கொலை செய்கிறார்கள். ஆனால் முதலாளிகளின் கோடிக்கணக்கான கடன்களை தள்ளுபடி செய்யும் பிரதமர் மோடி ஏழை மக்களின் கடன்களை தள்ளுபடி செய்ய மறுக்கிறார். பிரதமர் மோடி தன்னை முதலாளிகளின் பிரதமராகவே அடையாளப்படுத்துகிறார். எனவே முதலாளித்தவத்தின் மூலம் இந்திய பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியுமா என்ற கேள்வி எழுகிறது. சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்தபோது, ‘வரலாறு முடிவுக்கு வந்துவிட்டது’ என்று கூறி அதனைக் கொண்டாடியவர்கள், இப்போது முதலாளித்துவமே சிறந்த முறை என்று உயர்த்திப்பிடிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். முதலாளித்துவ உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வாழும் மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவது அதிகரித்து வருவதும், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயுள்ள ஏற்றத்தாழ்வுகளும் அதிகரித்து வருவதும், முதலாளித்துவ அமைப்பின் குரூர முகத்தை மிகத் தெளிவாகக் காட்டத் துவங்கியுள்ளன. நெருக்கடிகள் எற்படும்போது புதிய கண்டு பிடிப்புகள் மூலம் முதலாளித்துவம் தன்னை தக்கவைத்துக் கொள்ளும் என்றார்கள். ஆனால் நெருக்கடிகளை சமாளிக்க முடியாமல் மிகப் பெரிய வங்கிகளே ; திவாலாகிக் கொண்டிருக்கின்றன. இவ் முதலாளித்தவ நெருக்கடிக்கு மாக்சியமே சிறந்த தீர்வை முன்வைக்கிறது என்று உறுதியாக கூறமுடியாது என்பது உண்மைதான். ஆனால் உலகில் முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்வுகளில் மார்க்சியத்தை விட சிறந்த தீர்வு வேறு எதுவும் இல்லை என்பதும் உண்மையே. முதலாளித்துவத்தின் தொட்டில் என்று அழைக்கப்படும் வல்லரசு நாடான பிரிட்டனிலேயே முதலாளித்தவத்தின் நெருக்கடிகளை சமாளிக்க முடியாமல் அரசு தினறுகிறது. இனவாதம், மதவாதம் போன்றவற்றை முன்வைத்து மக்களின் கவனத்தை திசை திருப்ப உலகெங்கும் உள்ள பிற்போக்கு அரசுகள் முயலுகின்றன. ஆனால் இதன் மூலம் அதிகரித்துவரும் முதலாளித்துவ நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது. குறிப்பு – அம்பானியின் பேரக் குழந்தையை மோடி சென்று பார்வையிட்டதாக பதிவு செய்யப்பட்ட படம் தவறு என்று சுட்டிக்காட்டியதால் நீக்கிவிட்டேன். தவறுக்கு வருந்துகிறேன். மன்னிப்பு கோருகின்றேன்.

யோக்கியன் வருகிறார்

•யோக்கியன் வருகிறார் செம்பை எடுத்து உள்ளே வையுங்கள்! கடந்த பத்து வருடங்களாக மௌனமாக இருந்தவர் இப்போது ஏன் மீண்டும் பேச ஆரம்பித்திருக்கின்றார் என்று தெரியவில்லை. இவராக பேசுகின்றாரா அல்லது இவரை பேச வைத்து ஏதாவது பெற முடியுமா என சில தமிழ் அமைப்புகள் நம்புகின்றனவா என்றும் தெரியவில்லை. அல்லது வழக்கம்போல் இந்திய அரசுதான் இவற்றுக்கு பின்னால் நின்று விளையாடுகின்றதா என்றும் புரியவில்லை. ஆனால் மனிதவுரிமை நிகழ்வில் மகிந்த ராஜிபக்சா கலந்து கொள்வது எவ்வளவு கேவலமானதோ அதைவிடக் கேவலமானது இந்த எரிக் சொல்கைம் கலந்துகொள்வது. ஏனெனில் மகிந்த ராஜபக்சா எமது எதிரி. அவர் நேரிடையாகவே 40 ஆயிரம் மக்களை கொன்றார். ஆனால் எரிக் சொல்கைம் நல்லவார்போல் நடித்து நம்பவைத்து படுகொலைக்கு உதவி புரிந்தவர். Comments

இன்று சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் ஆகும்.

•இன்று சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் ஆகும். அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா போன்ற நாடுகளில் உள்ள வெள்ளை இனத்தவர்கள் எல்லாம் ஒரு கால கட்டத்தில் அந்த நாடுகளுக்கு புலம் பெயர்ந்தவர்களே. ஆனால் இன்று அவர்கள் தங்கள் நாட்டுக்குள் யாரும் புலம் பெயர அனுமதிக்க முடியாது என்று கூறுகிறார்கள். அதுவும் அமெரிக்கா மெச்சிக்கோ நாட்டு எல்லையில் மிகப் பெரிய மதில் சுவரை கட்டி வருகிறது. அதுபோல கைபர் கணவாய் ஊடாக இந்தியாவுக்குள் புலம் பெயர்ந்தவர்கள் தாய் தமிழகத்தில் குடியேற ஈழ அகதிகளுக்கு உரிமை இல்லை என்கிறார்கள். அதுவும் பாகிஸ்தான் பங்களாதேஸ் நாடுகளில் இருந்து வரும் இந்து அகதிகள் குடியேறலாமாம். ஆனால் ஈழ அகதி இந்துவாக இருந்தாலும் குடியேற முடியாதாம். புலம் பெயர்ந்தவர்களை மனிதாபிமானமாக நடத்த வேண்டும் என்று ஜ.நா கூறுகிறது. ஆனால் பசு மாட்டுக்கு இரக்கம் காட்டும் இந்திய அரசு ஈழ அகதிக்கு இரக்கம் காட்ட மறுக்கிறது. ஈழ அகதிகளுக்கு 1972 முதல் இந்திய குடியுரிமை வழங்கப்படுவதாக இந்திய அமைச்சர் ஒருவர் பொய் கூறியுள்ளார். அதை ஒரு ஆங்கிலப் பத்திரிகை ஆராயாமல் பிரசுரித்துள்ளது. சிறிமா- சாத்திரி ஒப்பந்தத்தின் கீழ் அழைத்து வரப்பட்ட இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கே இந்த குடியுரிமை வழங்கப்பட்டிருக்கிறது. அவர்கள் அகதிகள் இல்லை. அவர்கள் ஒப்பந்தந்தின் கீழ் அழைத்து வரப்பட்டவர்கள். ஆனால் 1983 க்கு பிறகு இந்தியாவுக்கு அகதியாக வந்த ஈழத் தமிழர்கள் எவருக்கும் இதுவரை குடியுரிமை வழங்கப்படவில்லை இந்த வரலாறு தெரியாமல் ஒரு அமைச்சர் பேசுகிறார். அதைக்கூட மறுத்து பேசுவதற்கு ஒரு தமிழ் தலைவர் நம்மிடம் இல்லை . ஈழத் தமிழர் இந்தியாவில் அகதியாக இருப்பது கொடுமை என்றால் அதைவிடக் கொடுமை அவர்கள் பற்றி இந்திய அரசுக்கு மட்டுமல்ல தமிழக அரசுக்கூட வரலாறு தெரியவில்லை. இதில் இன்னும் வேதனை என்னவென்றால் சில ஈழத் தமிழர்கள்கூட விபரம் தெரியாமல் “ஏன் இந்தியாவில் இருக்க வேண்டும். இலங்கைக்கு திரும்பி வரலாம்தானே?” என்று பொறுப்பில்லாமல் எழுதுகிறார்கள். சிறப்புமுகாமுக்கும் சாதாரண அகதி முகாமுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் கூட பலர் இருக்கின்றனர். அதனால்தான் பாராளுமன்றத்தில் குடியுரிமை மசோதாவை ஆதரித்துவிட்டு தமிழகத்தில் வந்து ஈழத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று அதிமுக. பாமக கட்சிகளால் இரட்டை வேடம் போட முடிகிறது. 30 வருடமாக இருந்தும் குடியுரிமை வழங்க மறுக்கிறார்கள். உயர்கல்வி கூட அகதி என்பதால் மறுக்கப்படுகிறது. சுதந்திரமாக நடமாட முடியாமல் கட்டுப்படுத்துகிறார்கள். இதனால் வேறு வழியின்றி வேறு ஏதாவது நாட்டுக்கு போக முயன்றால் பிடித்து சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாமில் அடைத்து வைக்கிறார்கள். சரி. இலங்கைக்கே திரும்பிச் செல்வோம் என்று பதிவு செய்தால் அனுமதி வழங்காமல் இழுத்தடிக்கிறார்கள். அதுமட்டுமல்ல தாயகம் திரும்புவோருக்கு கப்பல் சேவை கேட்டு பல வருடமாகிவிட்டது. ஒரு கப்பலை கூட ஏற்பாடு செய்ய மறுக்கிறார்கள். இந்நிலையில் களவாக நாடு திரும்ப முற்பட்டால் இந்தியாவிலேயே கைது செய்யப்படுகிறார்கள் அல்லது இலங்கையில் கைது செய்யப்படுகிறார்கள். இதுதான் இந்தியாவில் இருக்கும் ஈழ அகதிகளின் நிலை. இந்த நிலையில் இருக்கும் ஒரு அகதி என்ன செய்ய முடியும்? அதனால்தான் வேறு வழயின்றி “குடியுரிமை தாருங்கள் இல்லையேல் கடலில் தள்ளி கொன்று விடுங்கள்” என அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். எனவே தயவு செய்து இனியாவது அவர்களின் வலியை புரிந்து கருத்து பகிருங்கள் உறவுகளே.

ரசியப் புரட்சியின் வரலாற்று நாயகன் தோழர் ஸ்டாலின்

ரசியப் புரட்சியின் வரலாற்று நாயகன் தோழர் ஸ்டாலின் இன்று மகத்தான தோழர் ஸ்டாலின் பிறந்த தினமாகும். தோழர் ஸ்டாலின் அளவிற்கு உலக முதலாளித்துவத்தால் அவதூறு செய்யப்பட்ட தலைவர் வேறுயாரும் இல்லை. அதற்கு காரணம் அவரது ஆட்சி தோற்றுவித்தது வேதனைகள் அல்ல. மகத்தான சாதனைகள். மிகவும் பின்தங்கிய விவசாய நாடாக இருந்த ரசியாவை பதினைந்தே ஆண்டுகளில் தொழில் வல்லரசாக மாற்றியதும் பத்து சத வீதம் கூட கல்வியறிவு பெற்றிராத நாட்டை ஏறத்தாழ நூறு சதவீதம் கல்வியறிவு கொண்ட நாடாக மாற்றியதும் உலகப் பொருளாதாரமே நெருக்கடியில் சிக்கிய 1930 களில் ரசியா மட்டும் முன்னேறியதும் கிட்லரிடமிருந்து உலகையே காப்பாற்றியதும் ஸ்டாலின் தலைமையில் ரசிய மக்கள் சாதித்த வெற்றிகள். இவற்றுக்கு ஈடு சொல்லும் வெற்றிகள் இன்றுவரை உலகில் கிடையாது. பிறப்பால் உயர்ந்தவர்களும் மன்னர்களும் முதலாளிகளும் மட்டும்தான் நாடாள முடியும் என்று நம்பிக் கொண்டிருந்த உலகத்தில் உழைக்கும் வர்க்கம் உலகாள முடியும் என்று நிரூபித்துக் காட்டியது கம்யூனிசம். ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகன் உலகத் தலைவராக முடியும் என்று நிரூபித்துக் காட்டியது ரசிய கம்யுனிஸ்ட் கட்சி. தோழர் ஸ்டாலின் மறைவின் பின்னர் ஆட்சிக்கு வந்த குருசேவ் காட்டிய பாதையில் சென்ற ரசியா இன்று முதலாளித்துவ நாடாகிவிட்டது. மீண்டும் பிச்சைக்காரர்கள் பட்டினி வேலையின்மை விபச்சாரம் அனைத்தும் அங்கே தலைவிரித்தாடுவதை முதலாளித்துவப் பத்திரிகைகளே எழுதுகின்றன.(முதலாளித்துவ) ஜனநாயகம் மீண்டும் நிலைநாட்டப்பட்டதின் பயன் என்ன என்பது அப்பட்டமாக தெரிந்துள்ளது. ஸ்டாலின் மீதான குருசேவ் இன் தாக்குதல் வெறும் தனிநபர் விவகாரம் அல்ல. “ லெனின் ஸ்டாலின் காட்டிய வழியில் இனி உலக கம்யுனிஸ்டுகள் புரட்சி செய்யத் தேவையில்லை. தேர்தலில் நின்றால் போதும். அமெரிக்காவை எதிர்க்காமல் சமாதான சகவாழ்வு நடத்தலாம்” என்ற குருசேவின் துரோகக் கொள்கையையும் ஸ்டாலின் மீதான அவதூறையும் சீனத் தலைவர் மாசேதுங் இலங்கை கம்யுனிஸ்ட் தலைவர் சண்முகதாசன் உட்பட பல உலக கம்யுனிஸ்ட்கள் எதிர்த்தனர். இந்த உண்மையை வசதியாக மறைத்துவிட்டு உலக கம்யுனிஸ்ட் இயக்கமே ஸ்டாலினை தூற்றுவது போல் சிலர் சித்தரிக்க முயலுகின்றனர். ஆனால் உலகம் உள்ளவரை தோழர் ஸ்டாலின் புகழ் இருக்கும். அதை யாராலும் அழிக்க முடியாது. தோழர் ஸ்டாலின் குறித்த விமர்சனங்களுக்கு மாவோ தலைமையிலான சீனக் கம்யுனிஸ்ட் கட்சியின் பதில்களை கீழ் வரும் இணைப்பில் வாசிக்கலாம். http://tholarbalan.blogspot.co.uk/2014/12/blog-post_26.html

தோழர் ஸ்டாலின் மீதான அவதூறுகள் பற்றி

•தோழர் ஸ்டாலின் மீதான அவதூறுகள் பற்றி தோழர் ஸ்டாலின் மறைந்து சுமார் 60 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இன்றும்கூட அவர் மீது இந்த முதலாளித்துவம் அவதூறுகளை பரப்பி வருகின்றது. கிட்லரின் நண்பரான அமெரிக்கப் பத்திரிகை முதலாளி ரடால்ப் கெர்ஸ்ட் குடும்பத்திற்குச் சொந்தமான நியூயார்க் மார்னிங் போஸ்ட் 24 வார இதழ்கள் 12 வானொலி நிலையங்கள் ஆகிய அனைத்தின் மூலமும் 1930 முதலே தொடங்கி விட்டது இந்த ஸ்டாலின் எதிர்ப்பு பிரச்சாரம். ஹிட்லரின் வலதுகரமான கோயரிங்கின் கட்டுரைகளைப் பிரசுரிக்குமளவிற்கு வெளிப்படையான நாஜி ஆதரவாளன் கெர்ஸ்ட். கனடா நாட்டுப் பத்திரிகையாளர் டக்ளஸ் டோட்டில் எழுதிய நூல் இவையனைத்தையும் அம்பலமாக்கிறது. இன்னொரு ஸடாலின் எதிப்பாளரான ராபர்ட் கான்குவெஸ்ட் பிரிட்டிஸ் உளவு நிறுவனமான எம்-15 இன் கையாள் என்பதையும் நிரூபிக்கின்றார் டோட்டில். ஸ்டாலின் காலத்தில் லட்சக்கணக்கானோர் படுகொலை பட்டினிச்சாவு என்பதெல்லாம் கான்குவெஸ்ட் உருவாக்கிய புனைகதைகள். 1943 இல் கிட்லர் ஆக்கிரரமிப்புக்கு எதிராக ரசியா போராடிக் கொண்டிருந்தபோது “விலங்குப் பண்ணை” என்ற நாவல் மூலம் கம்யூனிசத்தை அவதூறு செய்த ஜார்ஜ் ஆர்வெல், கவிஞர் ஸ்டீபன் ஸ்பென்டர், “பகலில் இருள”; என்ற ஸ்டாலின் எதிர்ப்பு நூல் எழுதிய கீஸ்லர், பிரபல அறிஞர் ரஸ்ஸல் ஆகிய அனைவரும் கம்யு~னிச எதிர்ப்புப் பிரச்சாரத்திற்காக பிரிட்டிஸ் உளவு நிறுவனத்திடமிருந்து காசு வாங்கியிருக்கிறார்கள். இந்த உண்மை 1996 இல் பிரிட்டனில் வெளியாகி சந்தி சிரித்தது. வெளிநாட்டவர்கள் இருக்கட்டும். ரசிய எழுத்தாளரும் நோபல் பரிசு பெற்றவருமான சோல் ஜெனிட்சின்னே ஸ்டாலின் ஆட்சியைப் பற்றி சொல்லவில்லையா என்று வாதிடலாம். அவருக்கு நோபல் பரிசு கிடைக்கக் காரணமே ஸ்டாலினையும் கம்யூனிசத்தையும் அவதூறு செய்து எழுதியதுதான். வியட்நாமில் இருந்து அமெரிக்கா விரட்டப்பட்ட பின்னரும் “மறுபடியும் வியட்நாம் மீது அமெரிக்கா போர் தொடுக்க வேண்டும்” என்று அறை கூவல் விட்டவர் இந்த சோல்ஜெனிட்சின். அவருடைய யோக்கியதைக்கு இதற்கு மேல் சான்று தேவையா? பழைய ரசிய கம்யுனிஸ்ட் அரசின் ஆவணக் காப்பகங்களைத் திறந்தால் பல திகிலூட்டும் உண்மைகள் வெளிவரும் என அமெரிக்க முதலாளித்துவத்தின் கூலி எழுத்தாளர்கள் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்தார்கள். ஜெம்ஸ்கோல் டௌஜின் எழவன்ஜீக் என்ற ரசிய வரலாற்று ஆசிரியர்கள் ரசியக் கம்யுனிஸ்ட் கட்சியின் ஆவணக் காப்பக ஆதாரங்களை ஆராய்ந்து 1990 முதல் ஆய்வுக் கட்டுரைகள் பல எழுதினார்கள். ஸ்டாலின் ஆட்சிக் காலம் பற்றி கூறப்பட்டவையலெ;லாம் புளுகு மூட்டைகள் என்பதையே இவை நிரூபித்தன. ஆனால் இவை முதலாளித்துவ நாட்டுப் பத்திரிகைகளால் இருட்டடிப்புச் செய்யப்பட்டன. மிச்சமிருப்பவை அமெரிக்கப் பொய்கள் மட்டும்தான். இதைப் புரிந்து கொள்ள அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை. இன்று ஈராக் நாட்டில் நடப்பதைப் பார்த்தால் போதும். பேரழிவு ஆயுதங்களை சதாம் வைத்திருப்பதாகச் சொல்லி பல லட்சம் ஈராக் மக்களைக் கொன்று குவித்தது அமெரிக்கா. ஆனால் இப்போது பேரழிவு ஆயுதங்கள் எதுவும் இல்லை என்பதை அமெரிக்க அரசே ஒப்புக்கொண்டுள்ளது. ஒரு சதாமை வீழ்த்தவே இவ்வளவு புளுகு! தன்னுடைய முதலாளித்துவ சாம்ராஜ்ஜியத்தையே ஆட்டம் காணச்செய்த ஸ்டாலினுக்கும் கம்யுனிசத்திற்கும் எதிராக எவ்வளவு புளுகியிருப்பார்கள் என்பதை சிறிது கற்பனை செய்து பாருங்கள்? லெனினுடைய மறைவுக்குப் பின் உலகின் முதல் சோசலிச நாட்டை உருவாக்கிக் காட்டிய தோழர் ஸ்டாலின் பணி மகத்தானது. ஸ்டாலின் தலைமையிலான ரசியாவிற்கு நேரில் சென்று வந்த தாகூர் இவ்வாறு பாராட்டியிருக்கின்றார். கலைவாணர் என்.எஸ்.கே இரும்புத்திரை நாடு என்று ரசியாவை சித்தரித்த முதலாளிகளின் பொய்ப்பிரச்சாரத்தை கேலி செய்து கட்டுரை எழுதியிருக்கின்றார். ரசியாவின் சிறைகள் உள்ளிட்ட எல்லா இடங்களுக்கும் சுதந்திரமாகச் சென்று பார்த்த தந்தை பெரியார் “இதுதான் உண்மையான மனிதர்கள் வாழும் நாடு” என்று பாராட்டியிருக்கின்றார். இத்தனைக்கு பிறகும் தோழர் ஸ்டாலின் மீது அவதூறு பொழிபவர்களை என்னவென்று அழைப்பது? ஆயிரம் கைகளால் ஆதவன் வருகையை தடுக்க முடியுமா? அவதூறுகள் மூலம் தோழர் ஸ்டாலின் புகழை அழிக்க முடியுமா? முடியாது. முடியாது. ஒருபோதும் முடியாது.

ட்ரொஸ்கியவாதம் பற்றி- தோழர் சண்முகதாசன் (பகுதி-1)

ட்ரொஸ்கியவாதம் பற்றி- தோழர் சண்முகதாசன் (பகுதி-1) ஒரு தத்துவம் என்ற முறையில் ட்ரொஸ்கியவாதம் ஒரு செத்த குதிரைக்கு ஒப்பானது. ஆனால் அது இன்னமும் சில இடங்களில் முக்கி முனகிக் கொண்டு இருக்கின்றது எனலாம். இந்த முக்கல் முனகல்களை ஏதோ பெரிய முழக்கங்களாகக் காட்ட சிலட்ரொக்சியவாதிகள் முனைகின்றனர். ஆனால் அவர்கள் எவ்வளவுதான் தலை கீழாக நின்று முயற்சி செய்தாலும் அவர்களின் கனவு ஒருபோதும் நிறைவேறப் போவதில்லை. ட்ரொஸ்கியவாதத்தின் இன்றைய வக்கீல்கள் இதனைப் பற்றி அவ்வளவாக பேச விரும்பாவிட்டாலும் தனியொரு நாட்டில் மட்டும் சோசலிசத்தைக் கட்டியமைக்க முடியுமா என்பதே ட்ரொஸ்கியவாதிகளுக்கும் கம்யூனிசவாதிகளுக்கும் இடையிலான பிரதான பிரச்சனையாக இருந்தது. இன்று சோஷலிசத்தை ஒரே நாட்டில் கட்டியமைக்க முடியுமா என்பது போன்ற கேள்விகள் முற்றிலும் பொழுது போக்கற்ற அறிவு ஜீவிகளின் விவாதத் தலைப்புகளில் இடம் பிடிப்பவை. அதனைச் செய்ய முடியும் என்பதை லெனினும் ஸ்டாலினும் உலகிற்கு நிரூபித்தார்கள். ஜரோப்பாவின் பிரதான முன்னேறிய நாடுகளில் முதலில் புரட்சிகள் நடைபெறும் என லெனின் எதிர்பார்த்தது உண்மைதான். லெனின் ஒரு சர்வதேசியவாதி. எனவே அவர் உண்மையில் இதற்காக ஊக்கத்துடன் உழைத்தார். ஆனால் புரட்சிவாதி விரும்பும் பாதையிலேயே வரலாறு எப்பொழுதும் செல்வதில்லை. புரட்சி ஏற்பட்ட கங்கேரி, ஜெர்மனி போன்ற நாடுகளில் அது தோல்வி கண்டது. இந் நிலையில் தாம் வெற்றிக்கு இட்டுச் சென்ற ரஸ்சியப் புரட்சியை ரஸ்சியப் புரட்சியாளர்கள் என்ன செய்வது? ஸ்டாலின் வினவியவாறு “அதனை உலகப் புரட்சிக்கு காத்திருந்து கொண்டு அதன் சொந்த முரண்பாடுகளில் சிக்கி வேர்வரை அழுக விடுவதா?” லெனின் இத்தகைய ஒரு வளர்ச்சியை எதிர்பார்த்தார். அவர் 1916ல் பாட்டாளிவர்க்கப் புரட்சியின் யுத்தத்திட்டம் என்பதில் “முதலாளித்துவதத்தின் வளர்ச்சி பல்வேறு நாடுகளில் மிகுதியும் சமாந்திரமற்ற முறையில் நடைபெற்றது. பண்ட உற்பத்தி அமைப்பின் கீழ் வேறுவிதமாக அது நடைபெறமுடியாது. இதிலிருந்து சோசலிசம் சகல நாடுகளிலும் ஏக காலத்தில் வெற்றி பெறமுடியாது என்பது புலனாகிறது. அது முதலில் ஒரு நாட்டில் அல்லது சில நாடுகளில் வெற்றி பெறும்” என்று கூறியுள்ளார் இந்த லெனிசக் கருத்துக்களின் அடிப்படையில் முதலில் லெனினாலும் பின்னர் அவருடைய வாரிசான ஸ்டாலினாலும் தலைமை தாங்கப்பட்ட போல்ஷ்விக் கட்சி புரட்சி வெற்றி பெற்ற ஒரு நாட்டில் சோசலிச உற்பத்தியை ஒழுங்கு படுத்தியது. வரலாறு அது சரி என நிரூபித்துவிட்டது. ஆனால் ட்ரொஸ்கி வேறுவிதமாக சிந்தித்தார். பின்தங்கிய ரஸ்சியாவில் பாட்டாளிவர்க்கப் புரட்சி தப்பிப் பிழைப்பதை அவர் முன்னேறிய நாடுகளில் தொழிலாளர்களின் புரட்சிப் போராட்டத்தின் வெற்றியுடன் இணைத்தார். அவர் “உலகப் பாட்டாளிவர்க்கப் புரட்சி என்ற அரங்கில்தான் ரஸ்சியப் புரட்சியைக் காப்பாற்ற முடியும்” என்று ஆடம்பரமாகப் பிரகடனம் செய்தார். விவசாயிகளின் புரட்சிகர உள்ளார்ந்த சக்தியின் மீது நம்பிக்கை வைக்காததே ட்ரொஸ்கியின் இந்த தவறான தர்க்கத்திற்கு அடிப்படைக் காரணம் ஆகும். புரட்சி சோசலிசக் கட்டத்தை நோக்கி நகரும் போது பாட்டாளி வர்க்கத்திற்கு பூர்ஷ்வா வர்க்கத்துடன் மட்டுமல்ல விவசாயிகளுடனும் மோதல் ஏற்படும் என அவர் கருதினார். அதனால் அவர் இவ்வாறு கூறினார் “ ….பாட்டாளி வர்க்க முன்னனிப்படை அதன் வெற்றியை அடையப் பெறுவதற்காக அதன் ஆட்சியின் அதி ஆரம்பக் கட்டத்திலேயே நிலப்பிரபுத்துவ சொத்தைப் பறிப்பது மட்டுமல்ல முதலாளித்துவ சொத்தையும் பறிக்க நேரிடும். இதில் பாட்டாளி வர்க்கம் புரட்சிப் போராட்டத்தின் முதல் கட்டங்களில் தனக்கு ஆதரவளித்த பூர்ஷ்வா வர்க்கத்துடன் மட்டுமல்ல தன்னை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு காரணமாயிருந்த பரந்துபட்ட விவசாயிகளுடனும் பகைமையான மோதலில் ஈடுபட நேரிடும்”. லெனினுடைய கருத்துக்கள் ட்ரொஸ்கியின் கருத்துக்களுக்கு நேர் எதிர்மாறானவை. ரஸ்சிய மக்கள் தொகையில் பெரும்பான்மையினரான விவசாயிகளுக்கு புரட்சியின் இரண்டு கட்டங்களிலும் புரட்சிப் பாத்திரம் உண்டு என்று லெனின் வாதிட்டார். இந்த விவசாய மக்களை தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் ஒழுங்கு படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.இந்த விசேட நேச அணி பற்றி லெனின் பின்வருமாறு வர்ணித்தார் “பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என்பது உழைப்பாளிகளின் முன்னனிப் படையான பாட்டாளி வர்க்கத்திற்கும் உழைப்பாளிகளின் பாட்டாளிகள் அல்லாத எண்ணற்ற பிரிவினருக்கும் (குட்டி பூர்சுவா சிறிய கைவினைஞைர்கள் விவசாயிகள் அறிவுஜீவிகள் போன்றன)அல்லது பெரும்பாலான பிரிவினருக்கும் இடையில் உள்ள விசேட வடிவ வர்க்கக் கூட்டணியாகும்”. ஆகவே விவசாயிகளுடனான கூட்டணியில் நம்பிக்கையற்ற ட்ரொஸ்கியால் ரஸ்சியப் புரட்சிக்கு எந்த எதிர்காலத்தையும் காண முடியவில்லை. அவருடைய கருத்தில் உலகப் புரட்சிதான் அதைக் காப்பாற்ற முடியும்.ஆனால் அது நடைபெறவில்லை. ஒரு நாட்டில் சோசலிசத்தைக் கட்டியமைக்க முடியாது என அவர் கூறிக்கொண்டே இருந்தார். ஆனால் ஸ்டாலின் தலைமையிலான போல்ஷ்விக்கள் ஒரு நாட்டில் சோசலிசத்தைக் கட்டியமைக்க முடியும் என்பதை நிரூபித்ததுடன் சோவியத்யூனியனுக்கு எதிரான பாசிச ஆக்கிரமிப்பின் போது கட்டவிழ்த்து விடப்பட்ட வரலாறு காணாத கொடிய தாக்குதலுக்கு எதிராகவும் அதனைப் பாதுகாத்தார்கள். வரலாறு இவ்வாறு இந்தப் பிணக்குகள் பற்றிய தீர்ப்பை வழங்கி முன்னேறிச் சென்றது.

தோழர் ஸ்டாலின் ட்ரொஸ்கியின் இடத்தை அபகரித்தாரா? – தோழர் சண் (பகுதி-2)

• தோழர் ஸ்டாலின் ட்ரொஸ்கியின் இடத்தை அபகரித்தாரா? – தோழர் சண் (பகுதி-2) லெனினின் வாரிசு என்ற பிரச்சனையிலும் ஸ்டாலின் ட்ரொஸ்கியின் இடத்தை அபகரித்தார் என்ற ட்ரொஸ்கியவாதிகளின் பிரச்சாரத்தில் எள்ளவும் உண்மையில்லை என்பதை நாம் தெளிவாக காணலாம். வரலாற்றின்படி ட்ரொஸ்கி புரட்சிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்தான் போல்ஷ்விக் கட்சியில் சேர்ந்து கொண்டார். ஆனால் ஸ்டாலினோ 1912ல் பிராக் மாநாட்டில் மென்ஷிவிக்குகளிடமிருந்து பிரிந்த போது போல்ஷ்விக் கட்சியில் லெனினுடன் இணை ஸ்தாபகராக இருந்தார். இந்த மாநாட்டில் ஸ்டாலின் மத்திய கமிட்டிக்கு தெரிவு செய்யப்பட்டார். மேலும் ரஷ்யாவுக்குள்ளே புரட்சிகர வேலைக்கு வழிகாட்டுமுகமாக ஸ்டாலினை தலைவராகக் கொண்ட மத்தியக் கமிட்டி ரஷ்யசபை என்ற நடைமுறையான கேந்திரம் அமைக்கப்பட்டது. இது ஸ்டாலினுடைய தலைசிறந்த ஸ்தாபன திறமைகளுக்குக் கிடைத்த அங்கீகாரமாகும். லெனின் பெரிதும் வெளிநாடுகளில் இருந்து இயக்கத்திற்கு தலைமை தாங்கிய போது ரஷ்யாவுக்குள்ளே தலைமறைவுக் கட்சியை கட்டியமைத்தது ஸ்டாலின்தான். அப்போது 1912ல் ட்ரொஸ்கி “ஆகஸ்ட் குழு” என்பதை மும்முரமாக ஒழுங்குபடுத்தினார். அவர் இதில் லெனினுக்கும் போல்ஷ்விக் கட்சிக்கும் எதிரான குழுக்களையும் போக்குகளையும் ஒன்றினைத்தார். அப்பொழுதுதான் லெனின் அவரை “யூதாஸ் ட்ரொஸ்;கி” என்று அழைத்தார். 1917 மே 7ம் திகதி முதல் 12ம் திகதி வரை நடைபெற்ற மாநாட்டில் கட்சியின் மத்திய கமிட்டிக்கு ஸ்டாலின் மீண்டும் தெரிவு செய்யப்பட்டார். இந்த மாநாட்டில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் குழுவுக்கும் அவர் தெரிவு செய்யப்பட்டார். அத்துடன் மத்திய கமிட்டியின் மூன்று செயலாளர்களில் ஒருவராகவும் அவர் தெரிவு செய்யப்பட்டார். கட்சி ஏடான “பிராவ்டா”வின் பத்திரிகை ஆசிரியர்களில் ஒருவராகவும் அவர் நியமிக்கப்பட்டார். 1917ம் ஆண்டு ஜீலை 26ம் திகதி முதல் ஆகஸ்ட் 3ம் திகதி வரை நடைபெற்ற போல்ஷ்விக் கட்சியின் ஆறாவது காங்கிரசில்தான் ட்ரொஸ்கியை ஒரு உறுப்பினராக சேர்த்துக் கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.அப்பொழுது லெனின் பின்லாந்தில் இருந்து மாநாட்டிற்கு வழிகாட்டினார். ஸ்டாலின்தான் மாநாட்டிற்கு தலைமை தாங்கி பிரதான அறிக்கையை சமர்ப்பித்தார். இதிலிருந்து அக்டோபர் புரட்சியின் போது லெனினுக்கு அடுத்தபடியான பாத்திரத்தை வகித்தவர் ஸ்டாலின் என்பது தெளிவாகிறது. இதனாற்தான் 1922ல் துப்பாக்கிக் குண்டின் காயம் காரணமாக லெனின் செயல்பட முடியாது இருந்த நிலைமையில் கட்சியின் பொதுச் செயலாளராக லெனின் வாழ்ந்த காலத்திலேயே ஸ்டாலின் தெரிவு செய்யப்பட்டார். இவற்றை மறுக்க முடியாத ட்ரொஸ்க்கியவாதிகள் இறுதியில் பற்றிக்கொள்ளும் விடயம் லெனின் மரணசாசனம். இது உண்மையில் எதிர்வர இருந்த காங்கிரசுக்கு லெனின் சொல்ல எழுதப்பட்ட கடிதமாகும். இந்த காங்கிரஸ் லெனின் மறைவின் பின் 1924ம் ஆண்டு மே 24ம் திகதி முதல் 31ம் திகதி வரை நடைபெற்றது.இந்தக் கடிதத்தை காங்கிரசில் வாசிக்க வேண்டும் என்பதே லெனினுடைய வேண்டுகோள்.அதன்படி ஸ்டாலினே இக் கடிதத்தை வாசித்தார். இக் கடிதத்தில் ஸ்டாலினும் விமர்சிக்கப்பட்டிருந்தார். ட்ரொஸ்கியும் விமர்சிக்கப்பட்டிருந்தார். ஆனால் ட்ரொஸ்க்கியவாதிகள் கூறுவது போல் பொதுச்செயலாளர் பதவிக்கு ட்ரொஸ்கியை நியமிக்கவேண்டும் என்று அதில் கூறப்படவில்லை. இந்தக் கடிதம் வாசிக்கக் கேட்ட பின்னர்தான் காங்கிரஸ் ஸ்டாலினை பொதுச் செயலாளராக தெரிவு செய்தது. ஒரேயொரு வாக்கு ட்ரொஸ்கியின் வாக்குதான் எதிராக விழுந்தது. அவர் தனக்குத்தானே வாக்களித்தார். ஸ்டாலின் ஒரு சர்வாதிகாரி எனவும் அவர் ட்ரொஸ்கிக்கு போதிய விவாத வாய்ப்பு அளிக்கவில்லை எனவும் ட்ரொஸ்க்கியவாதிகள் சேறு பூசுகின்றனர். இது முற்றிலும் பொய். சர்வதேச கம்யுனிச இயக்கத்தின் வரலாற்றில் ஸ்டாலினைப் போல் இவ்வளவு அதிகாரம் படைத்திருந்த ஒரு தலைவர் தனது எதிரிக்கு ஸ்டாலின் ட்ரொஸ்க்கிக்கு காட்டியது போன்ற பொறுமையைக் காட்டியது கிடையாது. விவாதங்கள் போல்ஷ்விக் கட்சிக்கு உள்ளேயும் கம்யுனிச அகிலத்திற்கு உள்ளேயும் பல்லாண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வந்தது.மீண்டும் மீண்டும் ட்ரொஸ்க்கி தோற்கடிக்கப்பட்டார். ஆனால் அவர் தோல்வியை ஏற்றுக் கொள்ளவில்லை. 1927 அக்டோபரில் நடைபெற்ற கட்சியின் 15வது மாநாட்டிற்கு முன்னர் ஒவ்வொரு உறுப்பினரினதும் நிலைப்பாட்டை அறிவதற்காக வாக்கெடுப்பு ஒன்று நடைபெற்றது.724000 உறுப்பினர்கள் ஸ்டாலின் தலைமையிலான மத்திய கமிட்டியின் கொள்கைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.4000 பேர் ஆதாவது ஒருசத வீதத்திற்கும் குறைவானோர் ட்ரொஸ்க்கிய குழுவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இது ட்ரொஸ்க்கிக்கு கிடைத்த இறுதி அடியாகும். ட்ரொஸ்க்கிக்கு வேண்டியது ஜனநாயக விவாதமும் தீர்ப்பும் என்றால் அது போதிய அளவு கிடைத்தது. ஆனால் அவர் திருந்தவில்லை. தனது குழுவாத நடவடிக்கைகளை கைவிடவில்லை. கட்சியின் பொறுமை சோதிக்கப்பட்டது.1927 நவம்பர் 14 திகதி மத்திய கமிட்டி ட்ரொஸ்க்கியை வெளியேற்றியது. சோவியத் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனையில் அவர் சோவியத் யூனியனின் ஓதுக்குப்புறக் குடியரசு ஒன்றிற்கு நாடு கடத்ப்பட்டார். ஆனால் அவர் இந்த நிபந்தனையை மீறியபடியால் ஒருவருட முடிவில் சோவியத் யூனியனில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

ட்ரொக்சியின் மரணமும் ட்ரொக்சியத்தின் முடிவும் - தோழர் சண் (பகுதி-3)

ட்ரொக்சியின் மரணமும் ட்ரொக்சியத்தின் முடிவும் - தோழர் சண் (பகுதி-3) சோவியத்யூனியனில் இருந்து வெளியேற்றப்பட்ட பின் ட்ரொஸ்க்கியின் நடவடிக்கைகள் பற்றியோ சர்வதேச சோவியத் எதிர்ப்பு நடவடிக்கையின் கேந்திரமாக அவர் எப்படி மாறினார் என்பது பற்றியோ இந்தக் கேந்திரம் அவரது ஆடம்பரங்களுக்கு எவ்வாறு பெரும் தொகை பணத்தை செலவழித்தது என்பது பற்றியோ அவர் இறுதியில் பெரிதும் அரண் செய்யப்பட்ட கோட்டையில் குடியேறினார் என்பது பற்றியோ இறுதியில் அவருடைய பெண் காரியதரிசியின் காதலனால் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது பற்றியோ இங்கு விரிவாக கூறவேண்டியதில்லை .அவை அனைவரும் அறிந்த வெட்ட வெளிச்சமான விடயங்கள். இன்று சோசலிசத்தை ஒரு நாட்டில் கட்டியமைக்க முடியுமா என்பது போன்ற கேள்விகள் வேறு பொழுதுபோக்கற்ற அறிவுஜீவிகள்தான் அவைபற்றி விவாதிப்பார்கள். ஆதனைச் செய்ய முடியும் என்பதை லெனினும் ஸ்டாலினும் உலகிற்கு நிருபித்துவிட்டனர். ஆனால் 1920ம் ஆண்டுகளில் ரஸ்சியாவுக்கு உள்ளேயும் வெளியேயும் மக்களுக்கு தெளிவு இருக்கவில்லை. இதனைச் செய்ய முடியுமா என்று பலர் சந்தேகித்தனர். இவ்வாறுதான் அப்பொழுது ட்ரொக்சியவாதத்திற்கு ஒரு சமுதாய அடிப்படை இருந்தது. ஆனால் இன்று ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்டியமைக்க முடியாது என்ற ட்ரொக்சியின் தத்துவம் செத்த தத்துவம். ட்ரொஸ்க்கியவாதம் என்பது தொழிலாளி வர்க்க இயக்கத்திற்கு உள்ளேயிருந்த தவறான தத்துவம் என்ற நிலைமையில் இருந்து பகிரங்கமான எதிர்ப்புரட்சித் தத்துவமாக மாறியுள்ளது. ட்ரொக்சிய வாதம் என்னும் எதிர்ப் புரட்சிகரத் தத்துவம் உயர் மத்தியதர வர்க்க அறிவுஜீவிகளுக்கு கவர்ச்சிகரமானது. ஏனென்றால் அது ஏகாதிபத்திய எதிர்ப்பு கொண்டதாக பாசாங்கு செய்கின்றது. அதேவேளையில் அதன் பிரதான பங்கும் செயல்பாடும் புரட்சிக்கு எதிரானது. தொழிலாளி வர்க்கத்திற்கு எதிரானது. சர்வதேசிய முதலாளித்துவப் பத்திரிகைகள் ட்ரொக்சியைப் பாராட்டும் அதேவேளையில் ஸ்டாலினை இன்றுவரை திட்டுவதன் அடிப்படை நோக்கத்தை ஒரு உண்மையான புரட்சியாளனால் இலகுவாக விளங்கிக் கொள்ள முடியும்.

தோழர் வள்ளுவன் நினைவை போற்றுவோம்!