Sunday, December 20, 2020

விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகருகின்றது! கடந்த பத்து நாட்களாக டில்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்து அறிவித்துள்ளனர். இதன்படி இனி பாஜக அலுவலகங்களை முற்றுகை செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். அத்துடன் டோல்கேட்டுகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் செல்ல வழி செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளனர். அத்துடன் காப்ரேட் முதலாளிகளான அம்பானி மற்றும் அதானிகளின் வியாபார பொருட்களையும் பகிஸ்கரிக்கப்போவதாக அறிவித்துள்ளனர். ஆக மொத்தத்தில் பிரதமர் மோடியின் அடிவயிறிலே கைவைக்க ஆரம்பித்துவிட்டனர். இதற்கு மோடி அரசின் பொறுப்பற்ற தன்மையே காரணம் . விவசாயிகள் தொடர்ந்து போராடுகிறார்கள் விவசாயிகள் போராட்டம் அடுத்த கட்டத்pற்கு நகருகின்றது. அதுமட்டுமல்ல அது சரியான திசையிலே நகருகின்றது. எனவே அவர்கள் போராட்டம் வெல்லட்டும் அனைத்து மக்கள் ஆதரவோடு.

No comments:

Post a Comment