Friday, March 25, 2022

இன்று 1838வது நாள் வவுனியா 01/03/2022.

இன்று 1838வது நாள் வவுனியா 01/03/2022. தாயக தாய்மாரின் ஒரு நாளைக்கு ஒரு நேர உணவுத்தவிர்ப்பு போராட்டம் தொடர்கிறது. “நிச்சயம் வெற்றி பெறுவோம்” என்ற ஒற்றை நம்பிக்கையைத்தவிர வேறு எதுவுமே இப்போது எம்மிடம் இல்லை. ஆனால் அந்த ஒற்றை நம்பிக்கையே எம்மை தொடர்ந்து முன்னோக்கி செல்ல வைக்கிறது. கையில் ஆயுதம் இல்லை. ஆதரிக்க ஒரு பலமான நாடு இல்லை. இருந்தும் புதிது புதிதாக களத்தை உருவாக்கி போராடி வருகிறோம். குத்துச் சண்டை போட்டியில் ஒருவன் வீழ்ந்தவுடன் தோல்வி என்று அறிவிப்பதில்லை. மாறாக வீழ்ந்தவன் எழுந்திருக்காவிட்டால்தான் தோல்வி என அறிவிக்கப்படும். அதுபோல் நாம் தோல்வியை ஒத்துக்கொள்ளாதவரை சிங்களவர்களால் வெற்றியை ஒருபோதும் அனுபவிக்க முடியாது. ஒருவன் நீரின் மேல் மட்டத்திற்கு வந்த பின்பே அவன் ஆழத்தில் இருந்து வருவதற்கு முயற்சி செய்திருக்கிறான் என்பது தெரியவரும். அதுபோல் ஒரு இனம் வெற்றி பெற்றபின்பே அது தொடர்ந்து போராடியது என்பது வரலாறாக அமையும். வெற்றிபெறும்வரை தொடர்ந்து முயற்சி செய்வோம். தொடர்ந்து நாம் எழுப்பும் குரல் நாடுகளின் தலைமைகளுக்கு கேட்காமல் இருக்கலாம். ஆனால் உலக மக்களுக்கு நிச்சயம் கேட்கும்.

திராவிட முதல்வர் இரக்கம் காட்டுவாரா?

திராவிட முதல்வர் இரக்கம் காட்டுவாரா? திருச்சி சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் தம்மை விடுதலை செய்யக்கோரி கடந்த ஆறு நாட்களாக உண்ணாவிரதம் இருக்கிறார்கள். உக்ரைன் முகாமில் வாடும் மக்களுக்காக இரங்கும் தமிழக ஊடகங்கள் இந்த ஈழத் தமிழருக்காக கொஞ்சம் இரக்கம் காட்டினால் என்ன?

என்றும் நினைவில் கொள்வோம்!

என்றும் நினைவில் கொள்வோம்! 2009ல் ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை தடுத்து நிறுத்தக் கோரி தமிழ்நாட்டில் 16 பேர் தீக்குளித்து மரணமடைந்தனர். அதில் வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த வள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான கூலித் தொழிலாளி சீனிவாசன் என்பவர் தீக்குளித்து உயிர்நீத்த நாள் இன்று. இன்று அவரது 13வது நினைவுதினம் ஆகும். அவரை என்றும் நினைவில் கொள்வோம். (02.03.2009)

இத்தனை அழிவுக்கு பின்னரும்

இத்தனை அழிவுக்கு பின்னரும் இத்தனை அழிவுக்கு காரணமான இந்திய அரசின் தூதருக்கு வாழ்த்து தெரிவிக்க எப்படி இவருக்கு மனம் வருகின்றது என்று புரியவில்லை. பரவாயில்லை. பெருந்தன்மை என எடுத்துக்கொள்வோம். ஆனால் இதே இந்தியாவில் சிறப்புமுகாமில் நம் ஈழ அகதிகள் கடந்த ஏழு நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்களை விடுதலை செய்யுமாறு ஏன் இந்த பாராளுமன்ற உறுப்பினரால் இந்திய தூதரிடம் ஒரு கோரிக்கை வைக்க முடியவில்லை?

இதுவரை சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்கள்

இதுவரை சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்கள் இப்போது சமூகத்தின் அங்கமாக அரவணக்கப்படுகிறார்கள். நல்ல மாற்றம். வாழ்த்துவோம்.

திருமணம் முடித்த கையோடு தம் தாய் நிலம் காக்க

திருமணம் முடித்த கையோடு தம் தாய் நிலம் காக்க உக்ரைன் தம்பதிகள் துப்பாக்கி ஏந்தி போராட சென்றுள்ளனர். இதேபோன்று பல தம்பதிகள் ஈழத்திலும் தம் தாய்நிலம் காக்க போராட சென்றார்கள். கணவன் உயிரோடு இருக்கின்றாரா என்று தெரியாமல் மனைவி ஒரு போர் முனையிலும், மனைவி உயிரோடு இருக்கின்றாரா என்று தெரியாமல் கணவன் இன்னொரு முனையிலும் போராடினார்கள். இப்படி ஒரு நாள் இரு நாட்கள் அல்ல பல மாதங்களாக பிரிந்து நின்று போராடியிருக்கிறார்கள். ஆனால் உக்ரைன் தம்பதிகளின் போராட்டத்தை “தேசபக்தி” என்று புகழும் சர்வதேச ஊடகங்கள் ஈழத் தமிழ் தம்பதிகளின் போராட்டத்தை “பயங்கரவாதம்” என்கின்றனர். உக்ரைன் தம்பதிகளுக்கு ஒரு நியாயம். தமிழ் தம்பதிகளுக்கு இன்னொரு நியாயம். இதுதான் சர்வதேச நியாயமா?

இருவரும் தற்கொலை போராளிகள்.

இருவரும் தற்கொலை போராளிகள். ஒருவர் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர். இன்னொருவர் ஈழத்தை சேர்ந்த பெண் அங்கையற்கண்ணி. இருவரும் தம் தாய்நிலம் காக்க வெடி குண்டை சுமந்து சென்று உயிர் துறந்தார்கள். ஆனால் உக்ரைன் வீரரை “ஹீரோ” என்றும் அவர் செய்தது “தேசபக்தி” என்றும் கூறுபவர்கள் ஈழ தமிழ் பெண்ணை “பயங்கரவாதி” என்கின்றனர். அதுவும் திராவிடமும் ஆரியமும் ஒருபடி மேலே சென்று “மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள்” என்றும் “போதை மருந்து கொடுத்து அனுப்பப்படுகிறார்கள்” என்றும் ஈழப்போராளிகளின் தியாகத்தை கொச்சைப் படுத்துகின்றனர்.

மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்

•“மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்” - புலவர் கலியபெருமாள். தமிழ்நாட்டு “சே” என்று அழைக்கப்பட்ட தோழர் கலியபெருமாள் அவர்களின் பிறந்ததினம் இன்று ஆகும்.(04.03.2022) புலவர் அவர்கள் “தமிழ்நாடு விடுதலைப் படை”யினை முன்னெடுத்த தோழர் தமிழரசன் அவர்களின் தலைவர் என அறியப்பட்டவர். தன் வாழ்வின் இறுதிவரை புரட்சியை நேசித்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக ஈழத் தமிழர்களுக்கு தனது உறுதியான ஆதரவை எப்போதும் வழங்கியவர். அதனாலேயே அவர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட கொடைக்கானல் டிவி டவர் வெடிகுண்டு வழக்கில் இணைக்கப்பட்டார். வயதான காலத்தில் வழக்கின் நிமித்தம் அலைக்கழிக்கப்ட்டபோதும் ஈழத் தமிழர்களுக்கான தனது ஆதரவை ஒருபோதும் அவர் கைவிட்டதில்லை. தமிழின விடுதலைக்காக உழைத்த புலவர் கலியபெருமாள் அவர்களை தமிழ் மக்கள் என்றும் நினைவில் கொள்வர். இது உறுதி.

இவர்கள் எட்ட முடியாத தூரத்தை

இவர்கள் எட்ட முடியாத தூரத்தை கடக்க முற்படுகிறார்களா? இல்லை. எட்டிவிடும் தூரம்தான். இவர்கள் எட்ட முடியாத உயரத்திற்கு பறக்க முயல்கிறார்களா? இல்லை. எட்டிவிடும் உயரம்தான். இலக்கை எட்டும்வரை வீண் முயற்சி என்று இவர்களை இகழ்பவர்கள் இலக்கை எட்டிய பின் விடா முயற்சி என்று பாராட்டுவார்கள்.

• வாழ்த்துக்கள்

• வாழ்த்துக்கள் தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தில் 8 வருடங்களைச் சிறையில் கழித்து இன்று வீடு திரும்யிருக்கும் தோழர்கள் காளை, சான் மார்ட்டின், கவியரசு ஆகியோரை ஊர் எல்லையில் வாழ்த்தி வரவேற்ற தருணம்.

இந்தியாவில் மாவோயிஸ்ட்டுகள் செய்த துரோகி ஒழிப்பு

•இந்தியாவில் மாவோயிஸ்ட்டுகள் செய்த துரோகி ஒழிப்பு ஈழத்தில் துரையப்பா என்பவரை அழித்ததன் மூலம் துரோகி ஒழிப்பு ஆரம்பமானது. அதனை சிலர் குறிப்பாக தங்களை கம்யுனிஸ்ட்டுகள் என்று கூறிக்கொள்வோர் தவறு என்று சொல்லி வருகின்றனர். ஆனால் இந்த துரோகி ஒழிப்பு என்பது போராட்டம் நடைபெற்ற நடைபெறுகின்ற எல்லா இடங்களிலும் நிகழ்கின்றது. இந்தியாவில் பீகார் மாநிலம் கயாவில் துரோகம் செய்ததாக கூறி ஒரு குடும்பத்தையே மொத்தமாக மாவோயிஸ்ட்கள் தீர்த்துக்கட்டிய நிகழ்வு நடந்துள்ளது. துமாரியாவில் உள்ள மோன்பார் கிராமத்தில் நடந்துள்ள இந்த நிகழ்வை தமது கங்காரு நீதிமன்றம் மூலம் தண்டனை வழங்கியதாக மாவோயிஸ்ட்கள் தெரிவித்துள்ளனர். அங்குள்ள சர்ஜு போக்தாவின் வீட்டை வெடிவைத்து தகர்த்த மாவோயிஸ்ட்கள், சர்ஜு போக்தாவின் மகன்களான சத்யேந்திர சிங் போக்தா, மகேந்திர சிங் போக்தா மற்றும் அவர்கள் இருவரது மனைவிகள் என 4 பேரை வீட்டு முற்றத்தில் வைத்து தூக்கிலிட்டுள்ளனர் மேலும், தங்களுக்கு துரோகம் செய்பவர்கள் இதுபோன்ற கடும் தண்டனையிலிருந்து தப்பமுடியாது எனவும் எச்சரித்து அங்கு போஸ்டர் ஒட்டிச் சென்றுள்ளனர் மாவோயிஸ்ட்கள்.

இன்று ரசியப் புரட்சியின் வரலாற்று நாயகன்

இன்று ரசியப் புரட்சியின் வரலாற்று நாயகன் தோழர் ஸ்டாலின்நினைவு தினமாகும். தோழர் ஸ்டாலின் அளவிற்கு உலக முதலாளித்துவத்தால் அவதூறு செய்யப்பட்ட தலைவர் வேறு யாரும் இல்லை. அதற்கு காரணம் அவரது ஆட்சி தோற்றுவித்தது வேதனைகள் அல்ல. மகத்தான சாதனைகள். மிகவும் பின்தங்கிய விவசாய நாடாக இருந்த ரசியாவை பதினைந்தே ஆண்டுகளில் தொழில் வல்லரசாக மாற்றியதும், பத்து சத வீதம் கூட கல்வியறிவு பெற்றிராத நாட்டை ஏறத்தாழ நூறு சதவீதம் கல்வியறிவு கொண்ட நாடாக மாற்றியதும், உலகப் பொருளாதாரமே நெருக்கடியில் சிக்கிய 1930 களில் ரசியா மட்டும் முன்னேறியதும் கிட்லரிடமிருந்து உலகையே காப்பாற்றியதும் , ஸ்டாலின் தலைமையில் ரசிய மக்கள் சாதித்த வெற்றிகள். இவற்றுக்கு ஈடு சொல்லும் வெற்றிகள் இன்றுவரை உலகில் கிடையாது. பிறப்பால் உயர்ந்தவர்களும் மன்னர்களும் முதலாளிகளும் மட்டும்தான் நாடாள முடியும் என்று நம்பிக் கொண்டிருந்த உலகத்தில் உழைக்கும் வர்க்கம் உலகாள முடியும் என்று நிரூபித்துக் காட்டியது கம்யூனிசம். ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகன் உலகத் தலைவராக முடியும் என்று நிரூபித்துக் காட்டியது ரசிய கம்யுனிஸ்ட் கட்சி. தோழர் ஸ்டாலின் மறைவின் பின்னர் ஆட்சிக்கு வந்த குருசேவ் காட்டிய பாதையில் சென்ற ரசியா இன்று முதலாளித்துவ நாடாகிவிட்டது. மீண்டும் பிச்சைக்காரர்கள் பட்டினி வேலையின்மை விபச்சாரம் அனைத்தும் அங்கே தலைவிரித்தாடுவதை முதலாளித்துவப் பத்திரிகைகளே எழுதுகின்றன. (முதலாளித்துவ) ஜனநாயகம் மீண்டும் நிலைநாட்டப்பட்டதின் பயன் என்ன என்பது அப்பட்டமாக தெரிந்துள்ளது. ஸ்டாலின் மீதான குருசேவ் இன் தாக்குதல் வெறும் தனிநபர் விவகாரம் அல்ல. “ லெனின் ஸ்டாலின் காட்டிய வழியில் இனி உலக கம்யுனிஸ்டுகள் புரட்சி செய்யத் தேவையில்லை. தேர்தலில் நின்றால் போதும். அமெரிக்காவை எதிர்க்காமல் சமாதான சகவாழ்வு நடத்தலாம்” என்ற குருசேவின் துரோகக் கொள்கையையும் ஸ்டாலின் மீதான அவதூறையும் சீனத் தலைவர் மாசேதுங் அவர்களும் இலங்கை கம்யுனிஸ்ட் தலைவர் சண்முகதாசன் உட்பட பல உலக கம்யுனிஸ்ட்கள் எதிர்த்தனர். இந்த உண்மையை வசதியாக மறைத்துவிட்டு உலக கம்யுனிஸ்ட் இயக்கமே ஸ்டாலினை தூற்றுவது போல் சிலர் சித்தரிக்க முயலுகின்றனர். ஆனால் உலகம் உள்ளவரை தோழர் ஸ்டாலின் புகழ் இருக்கும். அதை யாராலும் அழிக்க முடியாது.

தேர்தலில் போட்டியிட ஏன் பலர் முன்வருகின்றனர்?

•தேர்தலில் போட்டியிட ஏன் பலர் முன்வருகின்றனர்? தேர்தலில் போட்டியிட முன்வரும் அனைவரும் தமிழ் மக்களுக்கு சேவை செய்ய வருவதாகவே கூறுகின்றனர். போராட்டம் நடைபெற்ற காலத்தில் தமிழ் மக்களுக்கு எந்த சேவையோ அல்லது அர்ப்பணிப்போ செய்யாமல் இருந்தவர்கள் இப்போது ஏன் முன்வருகின்றனர்? ஏனெனில் தேர்தலில் வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சம்பளமும் சலுகைகளுமே காரணமாகும். இதோ ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படும் சம்பள விபரம், salary -54,485 Rs fuel -30,000 Rs transport-10,000 Rs Entertainment- 10,000 Rs mobile phone -2000 Rs meeting each -500Rs Current bill - free Land line phone - free train ticket first class free Air tickets 40 free For Him and for his wife or PA (tow persons) மற்றும் Secretary Vehicle Quarters Computers Bodyguards ஆக மொத்தம் சராசரி மாதாந்த சம்பளம் 120000 ரூபா. வருடத்திற்கு 1440000 ரூபா. ஒரு படித்த பட்டதாரி ஆசிரியரின் சம்பளம் வெறும் 30 ஆயிரம் ரூபா மட்டுமே. எந்த படிப்பும் தேவையற்ற ஒரு எம.பி யின் சம்பளம்- 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபா இந்தளவு சம்பளம் பெறும் உறுப்பினர் பாராளுமன்றில் செய்வது, குறட்டை விட்டு தூங்குவது கெட்ட வாhத்தைகளால் திட்டுவது சண்டை பிடிப்பது, பேப்பர் ராக்கட் விடுவது மிளகாய் தூள் வீசுவது அப்புறம் மதியம் பாராளுமன்ற கண்டீனில் மலிவு விலையில் சாப்பாடு. கொழும்பில் சொகுசு பங்களா, சொகுசு வாகனம், சிங்கள பொலிஸ் பாதுகாப்பு சொகுசு வாகன பெர்மிட்டை விற்று 5 கோடி ரூபா சுளையாக எடுக்கலாம். உதவியாளர், சாரதி, அலுவலக வாடகை எல்லாம் தம் உறவினர்களுக்கு கொடுத்து அதில் இருந்தும் காசு பார்க்கலாம். 5 வருடம் பதவி காலம் முடிய பென்சன் பெறலாம். இதைவிட செம்புகளிடமிருந்து “போராளி” “வாழும் வீரர்” போன்ற பட்டங்கள் பெறலாம். இத்தனைக்குமாகவே இவர்கள் முன்வருகின்றனர். இவை இல்லை என்றால் இதில் ஒருவர்கூட முன்வர மாட்டார்கள். குறிப்பு - பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம் - தோழர் லெனின்

என்றும் நினைவில் கொள்வோம்!

•என்றும் நினைவில் கொள்வோம்! ஈழத்தில் நிகழ்ந்த இனப்படுகொலையை கண்டித்து சென்னை ஓட்டேரி கே.எம். தோட்டம் 9 ஆவது தெருவில் வாழ்ந்து வந்த சதாசிவம் சிறீதர் (எழில்வளவன்) என்பவர் தீக்குளித்து உயிரீகம் செய்த நாள் இன்று. (05.03.2009) இனப்படுகொலையை நிறுத்தக்கோரி தமிழ்நாட்டில் வேறு வழியின்றி 16 பேர் உயிர்த் தியாகம் செய்தனர். ஆனாலும் இனப்படுகொலை தடுத்து நிறுத்தப்படவில்லை. இவாகள்; தேர்ந்தெடுத்த பாதை பயன்தரவில்லை என்றாலும் இவர்களது அர்ப்பணிப்பு மற்றும் தியாகம் மகத்தானது. இவர்களை என்றும் நினைவில் கொள்வோம்.

மார்ச் -8 சர்வதேச மகிளிர் தினத்தை முன்னிட்டு.

மார்ச் -8 சர்வதேச மகிளிர் தினத்தை முன்னிட்டு. ஒரு கை போனாலும் மறு கையால் துப்பாக்கி ஏந்தி போராடவும் செய்தார்கள் ஒரு கையால் குடை பிடித்துக்கொண்டு மறு கையால் ஒழுகும் கொட்டிலில் பரீட்சை எழுதினார்கள் மாணவர்களை பதுங்குழியில் இருத்திவிட்டு தாய்க் கோழிபோல் காத்து நின்றார்கள். இவர்களால் மண் பெருமை அடைகிறதா அல்லது மண் இவர்களுக்கு பெருமை சேர்க்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இவர்கள் முறத்தால் புலியை விரட்டியதாக கூறும் புறநானூற்றுக் கதைகள் எல்லாம் உண்மைதானோ என்று இப்பொது நினைக்க தோன்றுகிறது. எனது கவலை எல்லாம், என் இனத்து பெண்களின் இந்த அற்புதமான கதைகளை உலகிற்கு சொல்ல ஒரு சிறந்த எழுத்தாளர் இல்லையே? இவர்களது கதையை ஒரு படமாக தர ஒரு சிறந்த இயக்குனர் இல்லையே? இவர்களது கதையை காவியமாக பாட ஒரு நல்ல கவிஞர் இல்லையே ? என்பதுதான். ஆனாலும் அவர்கள் தங்கள் வரலாற்றை தாமே படைப்பார்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆதிகாலத்தில் பெண் தலைமையே இருந்ததாக சமூக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். காலப் போக்கில் பெண் எப்படி அடிமையானாள் அல்லது ஆணாதிக்கம் எப்படி ஏற்பட்டது என்பது பற்றி இங்கு நான் உரையாடப் போவதில்லை. ஆனால் வெகுவிரைவில் அனைத்து அடிமைத்தனத்தையும் உடைத்து அவர்கள் தமது வரலாற்றை படைப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்குரிய அனைத்து தகுதிகளும் எமது தமிழ இன பெண்களுக்கு உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது.

பெண் விடுதலை குறித்து

•பெண் விடுதலை குறித்து பெண் விடுதலை இல்லையேல் மண் விடுதலை மட்டுமல்ல இன விடுதலையும்கூட இல்லை. ஆனாலும் இன விடுதலை குறித்து பேசுபவர்கள் எந்தளவு தூரம் பெண் விடுதலை குறித்து பேசுகிறார்கள்? ஐனத்தொகையில் ஆண்களைவிட பெண்களே எண்ணிக்கையில் அதிகம். அப்படியென்றால்; ஐனநாயக முறைப்படி பெண்கள் கையில்தானே அதிகாரம் இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லையே? ஆனால் வரலாற்றில் பெண்கள் எப்போதும் இப்படி இருந்தில்லை என்றும் இடையில்தான் இவ்வாறு ஆக்கப்பட்டார்கள் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அப்படியென்றால் பெண் எப்போது அடிமையானாள்? அவள் ஏன் அடிமையாக்கப்பட்டாள்? வரலாற்றின் தொடக்க காலத்தில் தாய் வழிச் சமூக வடிவமே இருந்திருக்கிறது. இச் சமூக வடிவத்தில் ஆணைவிடவும் பெண்ணிற்கே கூடுதல் அதிகாரம் இருந்துள்ளது. பெண்ணே குழந்தையைப் பெற்றுக் கொடுக்கும் பிரதான பணியைச் செய்ததன் காரணமாக குடும்பத்தின் தலைமை பெண்ணிடமே இருந்தது. குழந்தைகள் தாயின் வழியிலேயே அடையாளம் காணப்பட்டனர். சமுதாயத்தின் அக் கால கட்டத்தில் திருமணமோ அல்லது ஒருவனுக்கு ஒருத்தி என்பதோ சமூக கட்டுப்பாடாக இருக்கவில்லை. இதன் பொருள் அவர்கள் பாலியற் கட்டுப்பாடு இன்றி வாழ்ந்தனர் என்பது அல்ல. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து வாழ்ந்து குழந்தைகளைப் பெற்றனர். ஆனால் ஆதிக்கம் பெண்ணிடமே இருந்தது. கருத்து வேறுபாடு காரணமாக பிரிய நேரும்போது ஆணே(தந்தை) சமூக குழும வீட்டை நீங்கிச் செல்ல வேண்டியிருந்தது. குழந்தைகள் தாயுடனேயே இருந்தன. சமுதாயத்தின் இக் காலகட்டத்தில் உற்பத்திக் கருவிகளான அம்பு, வில், ஈட்டி போன்றன பொதுவானதாக முழு சமூகத்திற்கும் சொந்தமானதாக இருந்தன. அதாவது உற்பத்திக் கருவிகள் தனியார் உடமையாக இருக்கவில்லை. மந்தைகள், காணிகள் போன்ற உற்பத்தி வசதிகளும் இருக்கவில்லை. தனியார் உடமையாக எதுவும் இல்லாததால் ஒரு தந்தை தன் குழந்தைக்கு விட்டுச் செல்ல எதுவும் இருக்கவில்லை. உற்பத்தி சக்திகளின் விருத்தியின் விளைவாக உற்பத்திக் கருவிகளின் உடமை தனியார் கைக்கு மாறியது. அதன்பின் பணத்தின் திரட்சியும் மூலதனமும் உருவாகின. இந்த நிலையில் ஆண் தனது தனியுடமை தனது மனைவிக்கு பிறந்த தனது குழந்தைகளுக்கு போவதை விரும்பினான். இதுவே ஒருதார மணம் நடைமுறைக்கு வந்த அடிப்படை. இந்த ஒருதார மணம் என்பது பெண்ணுக்குரியதாக இருந்ததேயொழிய ஆணுக்கு அல்ல. பெண் வழிச் சமூகம் ஆண் வழிச் சமூகமாக மாறியது. ஆண் ஆதிக்கத்திற்கு வந்தான். இந்த ஆண் ஆதிக்க நிலை முடிவுக்கு வருமா? பெண் விடுதலை பெறுவாரா? என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

பெண்களுக்கு முழு சுதந்திரம் வாங்கிக்

பெண்களுக்கு முழு சுதந்திரம் வாங்கிக் கொடுக்காத வரையிலும்,பாட்டாளி வர்க்கம் முழு விடுதலையை அடைய முடியாது." - லெனின் ஒரு முதலாளித்துவ குடியரசில் எவ்வளவு ஜனநாயகம் உள்ள நாடாக இருந்த போதிலும் தனிச் சொத்துரிமை இருக்கின்ற நாடான போதிலும் உலகத்தின் எந்தப் பகுதியிலும் அதிகமான முன்னேற்றம் அடைந்த நாட்டில் கூட பெண்களுக்கு ஆண்களைப் போல் முழு அளவுக்கு சமமான உரிமைகள் இல்லை. முதலாளித்துவ ஜனநாயகம் என்பது சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் பற்றி அலங்காரமான சொற்றொடர்களும் கம்பீரமான வார்த்தைகளும் மிதமிஞ்சிய வாக்குறுதிகளும் ஆர்பாட்டங்களுமாக ஒலிக்கும் கோஷங்களும் உள்ள ஜனநாயகமாகும். ஆனால் பெண்களின் உண்மை நிலையை அதாவது சமத்துவமும் சுதந்திரமும் இல்லாது இருப்பதை மூடி மறைக்கிறது. ஆனால் ´சோலிஸ்ட் ஜனநாயகம்´ என்பது புரட்டான பகட்டான போலியான வார்த்தைகளை அலட்சியப்படுத்துகிறது... ஒடுக்கப்பட்டவர்களுக்கும் ஒடுக்குவோர்களுக்கும் சுரண்டப்படுபவர்களுக்கும் சுரண்டுவோருக்கும் இடையே சமத்துவம் என்பது இல்லை. அப்படி ஏற்படவும் முடியாது. ஆண்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சட்டப்பூர்வமான தனி உரிமைகளால் பெண்குலம் பாதிக்கப்படும் வரை மூலதனத்திலிருந்து தொழிலாளிக்கு விடுதலை கிடைக்காத வரை முதலாளி நில உரிமையாளர் வணிகர் ஆகியோரின் அதிகாரத்தில் இருந்து உழைக்கும் விவசாயிக்கு விடுதலை கிடைக்காத வரையில் உண்மையான சுதந்திரம் என்பது கிடையவே கிடையாது. "ஒடுக்கப்பட்ட பெண்ணினத்துக்கு சுதந்திரமும், சமத்துவமும்...." "தொழிலாளிகளுக்கும், உழைக்கும் விவசாயிகளுக்கும் சுதந்திரமும், சமத்துவமும்..." "ஒடுக்குபவர்களுக்கு எதிராக, முதலாளிகளுக்கு எதிராக, ஏழை விவசாயிகளைச் சுரண்டும் பணக்கார விவசாய உடைமையாளர்களுக்கு எதிராகப் போராட்டம்..." இதுவே நமது போர் முழக்கம்! இதுவே நமது பாட்டாளி வர்க்க உண்மை!!.

குறிப்பு - மன்னார் புதைகுழியை மீண்டும் தோண்டும்படி

குறிப்பு - மன்னார் புதைகுழியை மீண்டும் தோண்டும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. அதனால் இரண்டு வருடத்திற்கு முன்னர் இது குறித்து செய்த பதிவு ஒன்றை மீள் பதிவு செய்துள்ளேன். •மன்னார் புதைகுழி அறிக்கையும் சுமந்திரனும் மன்னார் புதைகுழி இராணுவத்தின் கட்டுப்பாட்டு காலத்தில் நடந்தது என்று கூறினால்; அதை இலங்கை அரசு விரும்பாது. மன்னார் புதைகுழி இந்திய ராணுவ காலத்தில் நடந்தது என்றால் அது இந்திய அரசுக்கு பிடிக்காது மன்னார் புதைகுழி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு காலத்தில் நடந்தது என்றால் அதை தமிழ் மக்கள் நம்பப் போவதில்லை. பார்த்தான் அமெரிக்ககாரன். பேசாமல் இது சங்கிலியன் காலத்தில் நடந்தது என்று அறிக்கையை தந்துவிட்டான். அறிக்கை வரும்போது தமிழ் மக்கள் அதிர்ச்சி அடைவார்கள் என்று சுமந்திரன் கூறியபோதே நாம உஷாராகியிருக்கனும். இது புலிகள் காலத்தில் நடந்தது என்றுதான் கூறப்போகின்றார்கள் என்று நினைத்து விட்டோம். இப்படி சங்கிலியன் காலத்தில் நடந்தது என்று கூறுவார்கள் என கனவிலும் நினைக்க முடியவில்லை. சங்கிலியன் காலத்தில் கிருத்தவ மதத்திற்கு மாறிய 600 பேர் கொல்லப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. எனவே அது இதுதான் என்றும் அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் சுமந்திரன் இனி கோரலாம். ஒருவேளை சுமந்திரன் அவ்வாறு கோரினால் அதற்கு முழு அதரவு வழங்க தயாராய் இருக்கிறோம். ஏனெனில் சங்கிலியனின் வாரிசு தான் என்று ஒருவன் ஹோலண்டில் கூறிக்கொண்டிருக்கிறான். முகநூலில் அவன் தொல்லை தாங்க முடியவில்லை. எனவே சங்கிலியன் செய்த கொலைக்காக இவனை பிடித்து சிறையில் தள்ளுங்கள். சுமந்திரன் சேர்! பிளீஸ் வெகுவிரைவில் ஒரு அறிக்கை விடுங்கள்.

செய்தி - உக்ரைனில் இரத்தமும் கண்ணீரும்

செய்தி - உக்ரைனில் இரத்தமும் கண்ணீரும் ஆறாக பெருக்கெடுத்துள்ளது. -போப் பிரான்சிஸ் வேதனை. 2009ல் இலங்கையில பன்னீரா ஓடிச்சு. போப் அவர்களே? இனப்படுகொலை செய்த மகிந்த ராஜபக்சாவின் கரங்களை எப்படி உங்களால் கொஞ்சம்கூட வெட்கமின்றி குலுக்க முடிந்தது? உக்ரைனியர்களுக்கு வந்தால் ரத்தம் அதுவே தமிழர்களுக்கு வந்தால் தக்காழி சட்னியா?

சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்ட

•சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்ட இன்னொரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர். ரவிராஜ், ஜோசப் பரராயசிங்கம். சந்திரநேரு வரிசையில் பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசனும் கொல்லப்பட்டார். சம்பந்தர் ஐயா, மாவை சேனாதிராசா போன்று சிவனேசனும் இந்தியா சென்று வாழ்ந்திருந்தால் உயிர் தப்பியிருக்க முடியும். ஆனால் அவர் தன்னை தெரிவு செய்த மக்களுடன் இருந்தார். அதனாலேயே அவர் கொல்லப்பட்டார். அதுமட்டுமன்றி இதுவரை அவர் கொலைக்கு நீதியும் வழங்கப்படவில்லை. தமது சக பாராளுமன்ற உறுப்பினர்களின் கொலைக்கே இதுவரை நீதி பெற முடியாத சம்பந்தா ஐயாவும் சுமந்திரனும் தமிழ் இனப்படுகொலைகளுக்கு நீதி பெற்று தருவார்கள் என்று எப்படி நம்புவது?

2009ல் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது

2009ல் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது கலைஞர் டிவியில் மானாட மயிலாட நடத்தியவர்கள் இப்போது எதற்காக வந்து போட்டோ எடுக்கிறார்கள்? இவர்கள் தங்கள் நடிப்பை சினிமாவில் காட்டட்டும். ஈழத் தமிழனை ஏமாற்ற காட்ட வேண்டாம்.

பெண் விடுதலை குறித்து

•பெண் விடுதலை குறித்து அவர் சுமந்து சென்ற வெடி பொருள் 50 கிலோவுக்கு மேல் இருக்கும். ஆனால் அவரின் எடையோ 60 கிலோதான். சிறு படகில் சென்றால்கூட ராடரில் தெரிந்துவிடும்; என்பதால் இந்த வெடி பொருட்களுடன் அவர் நீந்தி சென்ற தூரம் கிட்டத்தட்ட 17 மைல்கள் என்கிறார்கள். அவர் எட்டு மணி நேரம் நீந்தி சென்று தாக்குதலை மேற்கொண்டார் என்று கூறுகிறார்கள். அடுத்த சில மணி நேரங்களில் தான் மரணமடையப் போகிறேன் என்று தெரிந்தும் அவரது கால்கள் சோரவில்லை. கைகள் செயல் இழக்கவில்லை. இலக்கை அடைந்தார். 326 அடி நீளம் , 51 அடி அகலம். 6300 தொன் எடை கொண்ட அதி நவீன ராடர் பொருத்தப்பட்ட போர்க்கப்பலை முழ்கடித்தார். இதைப் படிக்கும்போது இந்த வீர தீரச் செயலை செய்தவர் ஒரு இளைஞனாக இருப்பான் என்றே பலரும் நினைப்பார்கள். ஆனால் ஆண்களே வியக்கும் இந்த சாதனையைப் புரிந்தவர் ஒரு பெண். அவர் பெயர் அங்கையற்கண்ணி. பெண்கள் பல்லிக்கும் கரப்பான் பூச்சிக்கும் பயந்தவர்கள் என்ற கதையே பெரும்பாலும் நாம் கேட்டு வருகிறோம். ஆனால் அவர்கள் பலமிக்கவர்கள் என்பதை கூறும் கதைகள் தந்திரமாக மறைக்கப்பட்டு வருகின்றன. இனி நாம் அங்கையற்கண்ணிகளின் கதைகளை கூறுவோம். இதேபோல பல சாதகைளை நிகழ்த்திய பெண்கள் கதைகள் இருந்தும் இன்றும் பெண்கள் அடிமைகளாகவே இருக்கின்றனர். அப்படியாயின் பெண்கள் இவ் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெறுவது எப்போது? பொருளாதார நிலைமைகள் மாறி உற்பத்திக் கருவிகள் மீண்டும் சமூகத்தின் உடமையாகும்போது நிச்சயமாக அது முடிவுக்கு வரும். உற்பத்தியில் சமபங்குடையவராகப் பெண்ணின்நிலை மீட்கப்படும். அப்போது திருமணமும் ஒருதார முறையும் நிலைக்குமா என்பதை இப்போது கூறுவது கடினம். ஆனால் வேறுபட்ட பொருளாதார நிலைமைகள் வேறுபட்ட விதமான சமுதாயத்தை உருவாக்கும். அவ்வாறு மாறிய பொருளாதார சமூகநிலைமைகளின் கீழ் வாழும் மக்கள் தாம் வேண்டும் சமூக அமைப்பு எப்படியானதாயிருக்க வேண்டும் என்பதுபற்றி தமது சொந்த முடிவுகளை எடுப்பர். அத்தகைய ஒரு சமூகத்தில் பெண்கள் விடுதலை பெற்று ஆண்களுடன் சமத்துவமாயிருப்பர் என்பதில் ஐயமில்லை.

1910 ம் ஆண்டு டென்மார்க் நாட்டின்

1910 ம் ஆண்டு டென்மார்க் நாட்டின் தலைநகரில் தோழர் கிளாரா nஐட்கின் தலைமையில் நடைபெற்ற உலக சோசலிஸ்ட் பெண்கள் மாநாட்டில் பெண்களின் பிரச்சனைக்கு சோசலிசப் பார்வையுடன் உரிமை மீட்பதே தீர்வு என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனடிப்படையில் 1917ம் ஆண்டு மார்ச் 8 ம் திகதியன்று பெண்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக மிகப்பெரும் பேரணி மற்றும் போராட்டம் நடத்தினர். இதில் பெருமளவு ஆண்களும் பங்கு பற்றினர். இந்த தினமே உலக மகிளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்த முதலாளித்துவ அமைப்பில்

இந்த முதலாளித்துவ அமைப்பில் முதலாளிகளுக்கு எந்த வேலை இலாபத்தை தருகிறதோ அந்த வேலை மட்டுமே ஆக்கபூர்வமான வேலையாக கருதப்படுகிறது. இதன்படி பெண்கள் மற்றும் தாய்மார்கள் வீடுகளின் நான்கு சுவர்களுக்குள் செய்யும் கடுமையான உழைப்பு பயனற்ற வேலை என்றே கருதப்படுகிறது. இந்த இரக்கமற்ற யதார்த்தத்தை தெளிவாக கவனிக்க வேண்டியது பெண் செய்யவேண்டிய முதல் காரியம் என்று ரோசா லக்சம்பேர்க் கூறினார். அவர் இவ்வாறு கூறி சுமார் 100 வருடங்களின் பின்னர் இப்போது இந்தியாவில் தமிழ்நாட்டில் இதுபற்றிய பேச்சு எழுந்திருக்கிறது. வீட்டில் குடும்ப வேலைகளை கவனிக்கும் பெண்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று நடிகர் கமலஹாசன் கூறினார். அதன்பின் திமுக தலைவர் ஸ்டாலின் தாம் பதவிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்புடும் என அறிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி தாம் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரத்து ஐந்நூறு ரூபா வழங்குவோம் என அறிவித்தார் . தமிழ்நாட்டின் மொத்த கடன் சுமார் ஆறு லட்சத்து கோடி ரூபா ஆகும். இந்நிலையில் இவ்வாறு பெண்களுக்கு பணம் வழங்க முடியுமா என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். இவர்கள் கொடுப்பார்களோ இல்லையோ ஆனால் வீட்டு வேலைகளை கவனிக்கும் குடும்பத் தலைவிகளுக்கு ஊதியமாக பணம் வழங்க வேண்டும் என்ற சிந்தனை ஆரம்பித்தமை வரவேற்கப்பட வேண்டியதே

ஒருவரின் காலடியில் வாழ்வதைவிட

"ஒருவரின் காலடியில் வாழ்வதைவிட எழுந்து நின்று உயிரை விடுவது எவ்வளவோ மேல்" - சே குவாரா இவன் சின்ன சிறுவன்தானே? இவன் எறிவது வெறும் கல்லுதானே? இவனால் என்ன சாதித்தவிட முடியும்? என்று முதலில் நக்கலாக கேட்பார்கள் சிறுவர்களை தூண்டிவிட்டு பெரியவர்கள் ஒளிந்திருப்பதாக அப்புறம் கிண்டல் அடிப்பார்கள் அதையும்தாண்டி இவன் எறிந்து விட்டாலோ இவனை “குழந்தை போராளி” என்பார்கள். இறுதியாக இவனை கொன்றுவிட்டு இலன் தந்தை ஒரு பயங்கரவாதி. எனவே இவனும் பயங்கரவாதி என்பார்கள். இங்கு அவர்களுக்கு அச்சமூட்டுவது என்னவெனில் இவன் கல் எறிகிறான் என்பதல்ல – மாறாக இவன் அவர்களுக்கு அடங்க மறுக்கிறான் என்பதே!

சாதி வெறிபிடித்து

சாதி வெறிபிடித்து ஆணவக்கொலை செய்பவர்களுக்கு இந்த தீர்ப்பு ஒரு பாடமாக அமையட்டும்.

செய்தது சாதி ஆணவக்கொலை

செய்தது சாதி ஆணவக்கொலை வாங்கியிருப்பது 3 ஆயுள் தண்டனைகள். ஏதோ சுதந்திர போராட்ட தியாகிபோல் போஸ் கொடுக்கிறான். த்தூ ….. வெட்கம்!

போராட்டம் இன்பமயமானது என்றால்

போராட்டம் இன்பமயமானது என்றால் சிங்கள அரசிற்கு எரிச்சல் வருவதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் ஆரியமும் திராவிடமும் ஏன் எரிச்சல் அடைகிறது?

சிரித்துக்கொண்டே செருக்களம்

சிரித்துக்கொண்டே செருக்களம் புகுந்தனர் என்பதை புறநானூற்றில் படித்த போது அப்படி நடக்க முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் அது உண்மைதான் என்பதை நிரூபித்த மாவீரர்கள் இவர்கள்.

1.75 லட்சம் கோடி ரூபா

1.75 லட்சம் கோடி ரூபா ஊழலுக்கு பொங்கிய ஊடகங்கள் எல்லாம் 3.5 லட்சம் கோடி ரூபா ஊழலுக்கு மௌனம் காப்பது ஏன்? பூணூல்தான் காரணமா?

"சாரம் கட்டிய போய்ஸ்தானே"

"சாரம் கட்டிய போய்ஸ்தானே" என்று கிண்டலாக கேட்டார் ராஜிவ்காந்தி அதற்கு இந்திய ராணுவ டாங்கியையே பிரட்டி விட்டு சிரிப்பை பதிலாக கொடுத்த பெண் போராளிகள்.

மனுசியை போட்டுத் தள்ளிட்டு வந்து

மனுசியை போட்டுத் தள்ளிட்டு வந்து மகிளிர் தினத்துக்கு கருத்து சொல்லுது அதுவும் கஞ்சா வித்த நாயெல்லாம் கருத்து சொல்லுறதை கேட்க வேண்டிய காலக்கொடுமை !

ஒளவையாரும் ஆண்டாளும் செருப்பைக் கழற்று முன் ஓடிப்போயிடு நாயே.

ஒளவையாரும் ஆண்டாளும் செருப்பைக் கழற்று முன் ஓடிப்போயிடு நாயே.

காதல் திருமணம் செய்துகொண்ட

காதல் திருமணம் செய்துகொண்ட அமைச்சர் சேகர்பாபுவின் மகள் தனக்கு பாதுகாப்பு தரும்படி ஆந்திரா பொலிசாரிடம் கோரியுள்ளார். இது குறித்து திராவிட முதல்வரோ அல்லது அவரது உடன்பிறப்புகளோ எதுவும் பேசாமல் இருப்பது ஏன்?

பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. கடந்த 32 வருடங்களாக ஓயாமல் நடந்த இந்த தாயின் கால்கள் இனியாவது கொஞ்சம் ஓய்வு பெறட்டும். தன் இறுதி காலத்திலாவது மகன் தன் அருகில் இருக்க வேண்டும் என்ற தாயின் அந்த ஆசை நிறைவேறட்டும். உலகத் தமிழின தலைவர் என்று தன்னைத்தானே கூறியவர் தம் பிள்ளைகளுக்கு பதவி பெறுவதற்காக ஈழத் தமிழருக்கு துரோகம் செய்தார். ஆனால் எத்தனையோ நெருக்கடிகள். இருந்தும் ஈழத் தமிழருக்கு இனியும் ஆதரவு வழங்குவோம் என உறுதியாக கூறினார் இந்த தாய். இவர் பெயர் மட்டுமல்ல இவரே ஓரு அற்புதமான தாய்தான்.

தமிழால் வாழ்ந்தவர் பலர்

தமிழால் வாழ்ந்தவர் பலர் ஆனால் தமிழுக்காக வாழ்ந்தவர் சிலரே. அந்த சிலருள் பாவலேறு பெருஞ்சித்திரனார் ஒருவர். அவர் இருந்தவேளை அவரின் அருமை தெரியவில்லை. ஆனால் இப்போது அவர் இல்லையே என்று ஏங்க வைக்கிறது. அதுதான் அவர் சம்பாதித்த சொத்து! தமிழும் அதை பேசும் தமிழரும் இருக்கும்வரை அவர் பெயரும் உச்சரிக்கப்படும்.

பௌத்த பிக்குகள் தலைமையில்

பௌத்த பிக்குகள் தலைமையில் புத்தர் சிலையுடன் வந்தவர்கள், அம்பாறை, அட்டாளைச்சேனை பாலமுனையில் முஸ்லிம்களின் காணியில் அத்துமீறி பௌத்த விகாரை அமைக்க முயற்சி. நாடு திவாலாகும் நிலையில் உள்ளது. சிங்கள பௌத்த மதத்தைச் சேர்ந்த தந்தை ஒருவர் பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாத நிலையில் தற்கொலை செய்துள்ளார். இதைப் பற்றியெல்லாம் இந்த பௌத்த மேலாதிக்க வெறியர்களுக்கு கவலை இல்லை. அவர்களது அக்கறை எல்லாம் தமிழர் மற்றும் முஸ்லிம் நிலங்களில் பௌத்த விகாரை அமைக்க வேண்டும் என்பதே. பாவம் புத்தர்!

பெண்களை கவிதை எழுத வைத்தது

பெண்களை கவிதை எழுத வைத்தது திராவிட இயக்கமே என்று வைரமுத்து போல் கூறி பரிசுகளும் பதவிகளும் பெற்றிருக்க முடியும். ஆனால் இவரோ ஈழத் தமிழர்களைக் கொன்ற ராஜிவ்காந்தி வயிறு வெடித்து சாக வேண்டும் என்று அறம்பாடி சிறைத் தண்டனையை அனுபவித்தார். ஏன் இவரை திராவிடமும் ஆரியமும் விரும்புவதில்லை என்பது இப்போது புரிகிறதா?

இந்த மக்கள் எல்லாம் எரிபொருளுக்காக

இந்த மக்கள் எல்லாம் எரிபொருளுக்காக செவ்வாய் கிரகத்திலா கியூவில் நிற்கிறார்கள் பிரதமர் அவர்களே?

இது உக்ரைனில் ரஸ்சியா போட்ட குண்டு அல்ல.

இது உக்ரைனில் ரஸ்சியா போட்ட குண்டு அல்ல. அப்கானிஸ்தான் மருத்துவமனை மீது அமெரிக்கா போட்ட குண்டு இதே மாதிரித்தான் காந்தி தேசம் என்ற இந்தியாவின் ராணுவமும் யாழ் மருத்துவமனைக்குள் புகுந்து வெறியாட்டம் போட்டது.

இலங்கை நிலவரம்

இலங்கை நிலவரம் ஒரு லீற்றர் டீசலின் விலை 75 ரூபாவால் அதிகரிப்பு ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 50 ரூபாவால் அதிகரிப்பு ஒரு பக்கெற் சீமெந்தின் விலை முந்நூறு ரூபாவால் அதிகரிப்பு ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 35 ரூபாவால் அதிகரிப்பு கையடக்க அலைபேசி உபகரணங்களின் விலை 30 சதவீதத்தால் அதிகரிப்பு மருந்துப் பொருட்களது விலையை 29சதவீதத்தினால் அதிகரிக்க உத்தேசம் மின் கட்டணம் 50 சதவீதத்தால் அதிகரிக்கப்படக்கூடும் பாணின் விலை 30 ரூபாவால் அதிகரிப்பு

அண்ணாமலை – என்ன இந்தளவு தூரம் வந்திருக்கீங்க?

அண்ணாமலை – என்ன இந்தளவு தூரம் வந்திருக்கீங்க? சுமந்திரன் - இல்லை, மோடிஜிக்கு கடிதம் அனுப்பினோம். இதுவரை பதில் வரவில்லை. அதுதான் உங்க மூலமா கேட்டுப் பார்ப்பம் என்று வந்தனாங்கள். அண்ணாமலை – உக்ரைனில் இருந்து தமிழ்நாட்டு மாணவர்களை மீட்டு தாருங்கள் என்று மோடிஜியிடம் யார் மூலம் கேட்கலாம் என நானே யோசித்துக்கொண்டிருக்கிறேன்.. இதில நீங்க வேற, சாணக்கியன் - நாங்களும் இந்துதானே? ஏன் எங்களுக்கு உதவ மாட்டேன்கிறீங்க? அண்ணாமலை – தமிழ்நாட்டில் இருக்கிற ஈழ இந்து அகதிகளுக்கே இதுவரை நாங்க உதவவில்லை. அப்படியிருக்க இலங்கையில் இருக்கிற இந்துக்களுக்கு உதவுவோம் என எப்படி நம்புறீங்க? சாணக்கியன் - மாகாணசபைத் தேர்தல் வரப்போகுது. ஈழத் தமிழரை கைவிட மாட்டோம் என ஒரு அறிக்கை நீங்கள் விட்டீர்கள் என்றால் அதை வைத்து இந்தியா வரப்போகுது. தீர்வு கிடைக்கப் போகுது என்று சொல்லி தேர்தலில் நாங்க ஜெயிச்சிடுவோம். அண்ணாமலை – சரி சரி பார்க்கலாம்.

பூனையும் எலியும் ஓடும்போது

பூனையும் எலியும் ஓடும்போது பெரும்பாலும் எலிகளே வெற்றி பெறுகின்றன. ஏனெனில், பூனை உணவுக்காக ஓடுகிறது எலி உயிருக்காக ஓடுகிறது. அதாவது, தேவையைவிட குறிக்கோளே அதிக திறமையை வெளிப்படுத்தும். அதேபோன்று, அடிப்பதுதான் வன்முறை. திருப்பி அடிப்பது வன்முறை அல்ல அது தற்காப்பு எனப்படும். பெண்கள் ஆயுதம் ஏந்தி போராடியபோது அதை வன்முறை என்றார்கள். “பயங்கரவாதம்” என்று முத்திரை குத்தி கொன்று அழித்தார்கள்.

சுமந்திரனை தமிழ்நாட்டை விட்டு வெள்யேறு என்று கூற

•சுமந்திரனை தமிழ்நாட்டை விட்டு வெள்யேறு என்று கூற இந்து மக்கள் கட்சிக்கு தகுதி உண்டா? தமிழக தலைவர்களை சந்திக்க சென்ற சுமந்திரனை தமிழ்நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்து மக்கள் கட்சி போராட்டம் முன்னெடுத்துள்ளது. சுமந்திரன் ராஜபக்சாவின் கைக்கூலி எனவும் அவர் ராஜபக்சா அரசை காப்பாற்றவே தமிழ்நாடு வந்துள்ளதாக இந்து மக்கள் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. ராஜபக்சே அரசை இந்து மக்கள் கட்சி எதிர்ப்பது உண்மை என்றால் அவர்கள் போராட வேண்டியது சுமந்திரனை எதிர்த்து அல்ல. இந்திய மோடி அரசை எதிர்த்தே போராட வேண்டும். ஏனெனில் இன்றுவரை ராஜபக்சே அரசை ஆதரித்து காப்பாற்றி வருவது இந்திய மோடியின் அரசே. இப்போதுகூட திவாலாகும் நிலையில் இருக்கும் இலங்கைக்கு கடன் கொடுத்து உதவுவது மோடி அரசே. ஐ.நா சபையில்கூட ராஜபக்சே அரசை இன்றுவரை காப்பாற்றி வருவது மோடியின் இந்திய அரசே. அதுமட்டுமல்ல, 39 வருடமாக தமிழ்நாட்டில் அகதியாக இருக்கும் ஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்கவில்லை. சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் விடுதலை செய்யப்படவில்லை. இந்தியாவில் இருக்கும் இந்து ஈழ அகதிகளுக்கு குரல் கொடுக்காத இந்த இந்து மக்கள் கட்சியினர் ஈழத்தில் இருக்கும் இந்து தமிழருக்காக சுமந்திரனை எதிர்த்து குரல் கொடுப்பதாக கூறுவது ஏமாற்று வேலையாகும் எனவே இவர்கள் சுமந்திரனை எதிர்க்க தகுதி அற்றவர்கள் என்பதோடு இவர்களை ஈழத் தமிழர்கள் ஒருபோதும் நம்பப் போவதில்லை.

இதோ ராஜபக்சா கும்பலின் சிங்கப்பூர்!

இதோ ராஜபக்சா கும்பலின் சிங்கப்பூர்! இலங்கையை சிங்கப்பூராக மாற்றுவோம் என கூறி பதவிக்கு வந்த ராஜபக்சா கும்பல்.

65 லட்சம் தனிச் சிங்கள

65 லட்சம் தனிச் சிங்கள மொட்டுக்களால் ஆட்சிக்கு வந்த ராஜபக்சா கும்பலில் விமல் வீரவம்சாவின் மொட்டு வாடி வதங்கிவிட்டது. இன்னும் பல மொட்டுக்கள் கருகும் என்கிறார் அவர். குறிப்பு – நான் மொட்டுக்கட்சியையே கூறுகிறேன். எனவே யாரும் தவறாக அர்த்தம் கொள்ள வேண்டாம்.

இன்று 1850வது நாள்

•இன்று 1850வது நாள் (12.03.2022) காணாமல் ஆக்கப்பட்ட தம் உறவுகளைத் தேடி தாயக தாய்மாரின் ஒரு நாளைக்கு ஒரு நேர உணவுத்தவிர்ப்பு போராட்டம் தொடர்கிறது. ஆயுதம் தூக்கினால் பயங்கரவாதம் என்றவர்கள் அகிம்சை வழியில் 1850 வது நாளாக போராடும் இந்த தாய்மாருக்கு அளித்த பதில் என்ன? அவர்கள் என்ன தமிழீழமா கேட்கிறார்கள். இல்லையே. தாம் ராணுவத்தின் கையில் ஒப்படைத்த தம் உறவுகள் எங்கே என்றுதானே கேட்கிறார்கள். அதற்கு ஒரு பதிலை ஏன் இன்னும் இந்த அரசுகளால் அளிக்க முடியவில்லை?

2009ல் ஏன் ஈழத் தமிழர்கள

2009ல் ஏன் ஈழத் தமிழர்களை திமுக காப்பாற்றவில்லை? ஈழத்தமிழர்கள் தமிழர்கள் இல்லையா அல்லது கலைஞர் கருணாநிதி திமுக இல்லையா? யாராவது 200 ரூபா உடன்பிறப்புகள் பதில் தாருங்கள்; பிளீஸ். ஆனால் திராவிட மொழியில் திட்டாதீர்கள். நான் தமிழன். எனக்கு அந்த மொழி புரியாது.

ஓடாத மானும் போராடாத இனமும்

ஓடாத மானும் போராடாத இனமும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. தீர்வு 13 மற்றும் ஒற்றை ஆட்சிக்கு எதிராக வவுனியாவில் தொடரும் தமிழ் மக்களின் போராட்டம்

பேச்சுவார்த்தைக்காக செல்லும்

பேச்சுவார்த்தைக்காக செல்லும் ஒரு தூதுவரை சுட்டுக்கொல்ல முடியுமா? அதுவும் அமைதிப்படை என்று வந்தவர்கள் செய்ய முடியுமா? சென்னையில் சிறை வைக்கப்பட்டிருந்த போராளி ஜொனியை தூதுவராக அழைத்துச் சென்று வன்னியில் இந்திய ராணுவம் நயவஞ்சகமாக கொன்ற தினம் 13.03.1988.

மாபெரும் ஆசான் தோழர் கால் மாக்ஸ்

• மாபெரும் ஆசான் தோழர் கால் மாக்ஸ் அவர்களின் நினைவு நாள் மார்ச் 14, மாபெரும் ஆசான் தோழர் கால் மாக்ஸ் அவர்கள் சிந்திப்பதை நிறுத்திக் கொண்ட நாள் என்று அவருடைய நண்பர் எங்கெல்ஸ் அவர்கள் உலகிற்கு அறிவித்தார். கால் மாக்ஸ் அவர்களால் முன்வைக்கப்பட்ட மாக்சியமானது மாபெரும் அக்டோபர் புரட்சியினூடாக லெனிசமாக வளர்ச்சி கண்டது. பின்னர் மாபெரும் சீனப் புரட்சியினூடாக மாவோ சிந்தனையாக விரிபு பெற்றது. இவ்வாறு பல நாடுகளின் புரட்சிகளினூடாக மாக்சியம் வளம் பெற்றது. இன்றைய உலகமயமாதல் சூழலிலே மாக்சியம் தனது ஒட்டுமொத்த வளர்ச்சியி;ன் ஊடே ஏகாதிபத்தியம் தோற்றுவித்து நிற்கும் பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்து முன்னேறிச்செல்லும் வரலாற்றுக் கடமையை எதிர் நோக்கி நிற்கின்றது. நமது நாட்டில் அக் கடமைக்குரிய பங்கையும் பங்களிப்பையையும் வழங்க வேண்டிய பொறுப்பு நம் எல்லோருக்கும் உண்டு. இன்றைய சூழலில் மாக்சியம் சோசலிசத்திற்கான தேவைகள் அதிகரிக்கப்பட வேண்டியுள்ளன. மாக்சியம் படிக்கப்பட வேண்டியதாயும் சோசலிசத்திற்கான பல்வேறு வகைப்பட்ட போராட்டங்கள் நடத்தப்பட வேண்டியனவாகவும் உள்ளன

தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்களான

தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்களான அமிர்தலிங்கம் , சிவசிதம்பரம், யோகேஸ்வரன் போன்றவர்களுடன் படத்தில் நிற்பவர்கள் துரையப்பா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கலாபதி, கிருபாகரன், இன்பம், சந்ததியார், யோகராசா, செல்வம் (1976) அல்பிரட் துரையப்பாவை துரோகியென்றும் அவர் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் பேசியதோடு துரையப்பா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இளைஞர்களுக்கு உதவியவர்கள் இவ் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களே. அன்று அந்த தமிழர் விடுதலைக் கூட்டணியில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சம்பந்தர் ஐயா இன்று போராளிகள் மீது பழி சுமத்துகிறார். அதுமட்டுமல்ல, இந்த வரலாறு தெரியாமல் அல்லது தெரிந்தும் வேண்டுமென்றே சுமந்திரனும் போராளிகள் மீது பழி சுமத்துகிறார். சரி. பரவாயில்லை. துரோகி ஒழிப்பு தவறு என்று இப்போது உணர்ந்து விட்டதாக இவர்கள் கூறக்கூடும். அப்படியென்றால் இவர்களிடம் நாம் கேட்க விரும்புவது துரோகி ஒழிப்பு செய்யாமல் எப்படி போராட்டத்தை முன்னெடுப்பது? அல்லது துரோகி ஒழிப்பு செய்யாமல் உலகில் நடந்த போராட்டம் எது?

தாம் கோருவது தீர்வு 13 அல்ல

தாம் கோருவது தீர்வு 13 அல்ல என்பதை சிங்கள அரசுக்கு மட்டுமல்ல இந்திய அரசுக்கும் ஈழத் தமிழ் மக்கள் உறுதியாக தெரிவித்த போராட்டம். தீர்வு 13 ஐ திணிக்க முடியாது என்பதை இம்மாத இறுதியில் இலங்கை வரவிருக்கும் பிரதமர் மோடிக்கு முகத்தில் ஓங்கி குத்தியிருக்கும் போராட்டம்..

வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்!

•வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்! எனது பிறந்தநாளை முன்னிட்டு, வாழ்த்து தெரிவித்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். சிறுவயதில் அர்ச்சனை செய்த விபூதியை தாயார் என் நெற்றியில் பூசும்போது அன்று என் பிறந்தநாள் என்பதை தெரிந்து கொள்வேன். அதன் பின்னர் பெரியவனான பின்பு பிறந்த நாள் பற்றி அக்கறை கொள்வதில்லை. வாழ்த்துவதும் வாழ்த்தப்படுவதும் மகிழ்வுக்குரியவை. பெரு மகிழ்வை தந்த அனைவருக்கும் என் நன்றிகள். உங்கள் வாழ்த்துகள் மீண்டும் மீண்டும் என் தாயாரை நினைவூட்டுகின்றன

தூக்கு கயிற்றின் கீழ் இருந்தவர்

தூக்கு கயிற்றின் கீழ் இருந்தவர் இப்போது விடுதலை பெற்றுள்ளார். நினைத்துக்கூட பார்க்க முடியாத இந்த சாதனையை செய்தவர்கள் மக்களே மக்கள் மகத்தானவர்களே. அதுவும் தமிழ் மக்கள் நிச்சயம் பெருமைக்குரிய மகத்தானவர்களே.

இதுவரை உலகில் பற்றி எரிந்த

இதுவரை உலகில் பற்றி எரிந்த பெரு நெருப்பெல்லாம் ஒரு சிறு தீப்பொறியில் இருந்தே ஆரம்பமானது. எந்த தனிச் சிங்கள மக்களால் தெரிவு செய்யப்பட்டாரோ அந்த சிங்கள மக்களால் தூக்கியெறியப்படும் நிலையில் கோத்தா. இந்த நிலை வரும் என்று தெரியும். ஆனால் இந்தளவு விரைவாக வரும் என யாரும் எதிர்வு கூறியிருக்கவில்லை.

மகிந்த ராஜபக்சா கும்பலை

மகிந்த ராஜபக்சா கும்பலை தூக்கியெறிய கொழும்பு நகரில் கூடிய மக்கள் கூட்டம் இது. இரண்டாம் துட்ட கைமுனு என்று எந்த இடத்தில் மகிந்த ராஜபக்சா தூக்கி கொண்டாடப்பட்டாரோ அதே இடத்தில் இன்று அவர் கொடும்பாவி எரிக்கப்பட்டது.

எழுவர் விடுதலைக்காக

எழுவர் விடுதலைக்காக தன் உயிர் துறந்தவள் செங்கொடி அந்த எழுவரால் மட்டுமல்ல உலக தமிழரால் மறக்க முடியாத பெயர் செங்கொடி

செய்தி – போராடிய மக்கள் வீதியில் போட்ட கும்பைகளை

செய்தி – போராடிய மக்கள் வீதியில் போட்ட கும்பைகளை நாமல் ராஜபக்சா அள்ளினார். ஒரு குப்பை வீதியில் இருக்கும் குப்பையை அள்ளுகிறது இப்போது உடனடியாக அகற்றப்பட வேண்டியது வீதியில் இருக்கும் குப்பையா? அல்லது, நாட்டை கொள்ளையடிக்கும் மகிந்த கும்பலா?

சுமந்திரன் - மேடம்!

சுமந்திரன் - மேடம்! இந்த சிறப்புமுகாமை மூடி அதில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை விடுதலை செய்யலாமே? கனிமொழி – சேர் ! முதலில் சிங்கள சிறையில் உங்கள் பெயரால் அடைத்து வைத்திருக்கும் 20 தமிழரை விடுதலை செய்துவிட்டு வாருங்கள். அப்புறம் பார்க்கலாம் சுமந்திரன் - ?????

69 லட்சம் தனிச் சிங்கள வாக்குகள்

69 லட்சம் தனிச் சிங்கள வாக்குகள் மூலம் பதவிக்கு வந்தவர் கோத்தா. நாட்டு மக்கள் தன் பின்னால் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கோத்தா விட்ட அழைப்பிற்கு சிங்கள இளைஞன் ஒருவன் அளித்த பதில் இது. எந்தளவு அர்த்தம் பொதிந்த பதில் இது. நீதி – போர் வெற்றி சோறு போடாது

இன்னொரு இனத்தை அடக்கி ஆளும்

இன்னொரு இனத்தை அடக்கி ஆளும் எந்தவொரு இனமும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது என்பதை வரலாறு மீண்டும் ஒரு தடவை நிரூபித்துள்ளது. இந்த உண்மையை உணரவில்லை எனில் சிங்கள இனம் ஒருபோதும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது.

முதலில், பிரபாகரன் திரும்பி வந்தால்

முதலில், பிரபாகரன் திரும்பி வந்தால் நல்லது என தமிழ் மக்களை சிந்திக்க வைத்தார். இப்போது, பிரபாகரன் பரவாயில்லை என்று சிங்களவரே கூற வைத்திருக்கிறார். பிரபாகரனிடம் நாட்டை கொடுத்திருந்தால் இப்போது அவரிடம் கடன் பெற்றிருக்கலாம் என ஒரு முன்னாள் சிங்கள ராணுவ வீரரே வெளிப்படையாக கூறும் நிலையை உருவாக்கியிருக்கிறார். இதுதான் கோத்தா செய்த சாதனை

போர் வெற்றி சோறு போடாது

போர் வெற்றி சோறு போடாது என்பதை சிங்கள மக்கள் உணர்ந்து கொள்ளும் தருணம்

எந்த சிங்கள மக்கள் பதவி

எந்த சிங்கள மக்கள் பதவி கொடுத்தார்களோ அந்த சிங்கள மக்களே மகிந்த கும்பலை “நாட்டை விட்டு போ” என கோஷம் போடுகிறார்கள். அப்படி மகிந்த கும்பல நாட்டை விட்டு வெளியேறினால் எந்த அரசு அவர்களுக்கு தஞ்சம் அளிக்கும்? (1) அமெரிக்கா (2) சீனா (3) பஹாமாஸ் தீவுகள் விடை – மேற்கூறிய எந்த நாடுகளும் இல்லை. இந்திய அரசே மகிந்த கும்பலை ஆதரித்து தஞ்சம் அளிக்கும்.

ஒரு நாட்டில் போராடும் இனத்திற்காக

ஒரு நாட்டில் போராடும் இனத்திற்காக இன்னொரு நாட்டில் வாழும் அதே இனம் தீக்குளித்து மரணிப்பது என்பது ஒரு அதிசய வரலாறுதான். அந்த அதிசய வரலாற்றை ஈழத் தமிழர்களுக்காக நடத்தியவர்கள் தாய் தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள். அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் 16 பேர் தமிழ்நாட்டில் ஈழத் தமிழருக்காக தீக்குளித்து உயிர் தியாகம் செய்துள்ளனர். 2009ல் இதே நாளில் (17.03.2009) ஈழத் தமிழருக்கு ஆதரவாக யுத்தம் நிறுத்தம் கோரி இருவர் தீக்குளித்து மரணம் அடைந்தார்கள். ஒருவர் அரியலூரைச் சேர்ந்த ராசசேகர். இன்னொருவர் கடலூரைச் சேர்ந்த நா. ஆனந்து. இவர்களுடைய தியாகம் மறக்க முடியாதது. ஈழத் தமிழர்களால் என்றும் நினைவு கூரப்பட வேண்டியது. ஆனால் இவர்கள் உட்பட மொத்தம் 16 பேர் உயிர் தியாகம் செய்தும் யுத்தம் நிறுத்தப்படவில்லை. இவர்களது போராட்டத்திற்கோ அல்லது உயிர் தியாகத்திற்கோ இந்திய அரசு மதிப்பு அளிக்கவில்லை. இலங்கை அரசும் அஞ்சவில்லை. ஏனெனில் 7 கோடி தமிழர் அருகில் இருந்தும் வெறும் இரண்டு கோடி பேர் கொண்ட சிங்கள அரசு அஞ்சவில்லை எனில் அதற்கு ஓரே காரணம் அந்த ஏழு கோடி தமிழரிடம் அதிகாரம் இல்லை. மாறாக ஏழு கோடி தமிழரும் அடிமையாக இருப்பதால்தான் இந்திய அரசும் பொருட்படுத்தவில்லை. இலங்கை அரசும் அஞ்சவில்லை. சரி. அப்படியென்றால் ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும்? ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதே இன்னொரு அடிமைக்கு செய்யும் உதவியாகும். இதை நான் கூறுவதாக கருத வேண்டாம். தமிழ்நாடு விடுதலையை முன்வைத்து போராட்டம் நடத்திய தோழர் தமிழரசன் கூறியிருக்கிறார்.

இன்று 16/3/2022 தமிழ்தேசிய போராளி

இன்று 16/3/2022 தமிழ்தேசிய போராளி தோழர் தமிழ்மகன் அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் எட்டு ஆண்டுகள் சிறை வாழ்வில் இருந்து விடுதலையான தோழர்கள் காளை, கவியரசன், இளந்தனல்,ஆகியோருக்கு சிறப்பு செய்யப்பட்டது

திருமலை எண்ணெய் குதம்

திருமலை எண்ணெய் குதம் திருமலையில் கப்பல் கட்டும்தளம் பூநகரியில் மின்சார நிலையம் போன்ற தமிழர் வளங்களை கேட்டுப் பெற்றுவிட்டு கடன் கொடுக்கும் இந்திய அரசு ஈழத் தமிழருக்கு தீர்வு கொடு என்று கேட்கவில்லை. இனியும் இந்திய அரசை ஈழத் தமிழர் நம்ப முடியுமா?

பிறந்த நாளில் இருந்து

பிறந்த நாளில் இருந்து ஒருநாளைக்கு ஒரு புத்தகம் படித்தால்கூட இருபதாயிரம் புத்தகம் படிக்க 54 வருடங்கள் பிடிக்கும். ஆனால் 38 வயதான அண்ணாமலை எப்படி படித்து முடித்தார்? இத்தனை புத்தகம் படித்துவிட்டு சங்கியாக இருப்பதற்கு படிக்காமலே இருந்திருக்கலாமே?

ஆரியமும் திராவிடமும் மட்டுமன்றி

ஆரியமும் திராவிடமும் மட்டுமன்றி சுமந்திரன் தம்பிகளும் சேர்ந்து தமிழ்த்தேசியத்தை எதிர்ப்பார்கள் என்பதை இன்று கிளப்கவுசில் காண முடிந்தது. ஆரியம் திராவிடம் மற்றும் சுமந்திரன் தம்பிகளுக்கு பதில் அளிக்க முடியாத அளவிற்கு தமிழ்த்தேசியம் பலவீனமானது அல்ல. இனி தமிழ்த்தேசியத்தின் காலம். தமிழ்த்தேசியத்தை மறுத்துவிட்டு தமிழர்கள் மத்தியில் இனி யாரும் அரசியல் செய்ய முடியாது.

இந்த ஈஸ்டர் குண்டு

இந்த ஈஸ்டர் குண்டு வெடிப்பு பற்றிய பல உண்மைகள் விரைவில் வெளிவரப் போகின்றன. அப்போது திமுக வின் பின்னணியில் இருந்துகொண்டு புலிகளையும் ஈழத் தமிழர் போராட்டத்தையும் விமர்சிக்கும் சில முஸ்லிம் அடிப்படைவாதிகளின் பங்கும்; வெளிவரும். குண்டு வெடிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட ஆர்டிஎக்ஸ் இந்தியாவில் இருந்தே வந்துள்ளது என்பதை விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

எரிபொருளுக்காக நீண்ட

எரிபொருளுக்காக நீண்ட நேரம் கியூவில் நின்ற பெண் மயங்கி விழுந்துள்ளார். பல பெற்றோல் நிலையங்களில் மக்கள் மோதலில் இறங்கியுள்ளனர். ஆனால் அமைச்சர்; நாமல் ராஜபக்சா மாலைதீவு சென்று தண்ணீர் விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். இதுதான் மகிந்த கூறிய ஆசியாவின் அதிசயமா?

தமிழ்நாட்டிற்கு குறைந்தளவு

தமிழ்நாட்டிற்கு குறைந்தளவு பணம் ஒதுக்கப்பட்டதை கண்டிக்கும் கனிமொழி தமிழக மக்களின் வரிப்பணத்தில் 7500 கோடி ரூபாவை சிங்கள அரசுக்கு இந்திய அரசு கொடுப்பதை ஏன் கண்டிக்கவில்லை? சிங்களப் பகுதியில் முதலீடு செய்துள்ள திமுக தலைவர்களின் முதலீடுகளுக்கு ஏதும் பாதிப்பு வந்திடும் என்று அச்சப்படுகிறாரா?

போட்டோ அரசியல் ?

•போட்டோ அரசியல் ? சுமந்திரன் அமெரிக்கா சென்ற படங்களை பிரசுரித்தார்கள். இப்போது இந்தியா சென்று தமிழக தலைவர்கள் சிலரை சந்தித்த படங்களை பிரசுரிக்கிறார்கள். இவர்களை சந்தித்து தமிழர் நலன் குறித்து சுமந்திரன் பேசிய விடயங்கள் என்ன என்பதை இப் படங்களை பிரசுரிக்கும் சுமந்திரன் தம்பிகள் கூறுவார்களா?

திமுக தலைவர் ஜெகத்ரட்சகன்

திமுக தலைவர் ஜெகத்ரட்சகன் 3.85 பில்லியன் அமெரிக் டொலர் அம்பாந்தோட்டையில் முதலீடு செய்துள்ளார். டி.ஆர்.பாலு, கனிமொழி, கார்த்திக் சிதம்பரம் போன்றவர்கள் கொழும்பில் முதலீடு செய்துள்ளார்கள். இவர்களின் இந்த முதலீடுகள் சுமந்திரனுக்கு தெரியாதா? அல்லது அப்போது இவர் கோமாவில் இருந்தாரா?

ஏய் தமிழா!

ஏய் தமிழா! காவிரி உன்னுடையது ஆனால் அதில் உனக்கு தண்ணீர் கிடையாது பாலாறு உன்னுடையது ஆனால் அதில் இருந்து தண்ணீர் பெற முடியாது முல்லைப்பெரியாறு உன்னுடையது ஆனால் அதில் தண்ணீர் தேக்க முடியாது நெய்வேலி உன்னுடையது ஆனால் அதில் முழு மின்சாரமும் கோர முடியாது வங்கக்கடல் உன்னுடையது ஆனால் அதில் சுதந்திரமாக மீன் பிடிக்க முடியாது கச்சதீவு உன்னுடையது ஆனால் அங்கு நீ செல்ல முடியாது கோயில்களை உன்னுடையது. ஆனால் அங்கு உன்னால் தமிழில் வழிபட முடியாது. நீதிமன்றங்கள் உன்னுடையது. ஆனால் உன்னால் தமிழில் வாதாட முடியாது. பாடசாலைகள் உன்னுடையது. ஆனால் தமிழில் உயர்கல்வி கற்க முடியாது. தமிழ்நாடு உன்னுடையது. ஆனால் உன்னை ஒரு தமிழன் ஆள முடியாது நீயும் இந்தியன்தான் என்றால், ஏன் உன்னால் தமிழ் மீனவனைக் காக்க முடியவில்லை? ஏன் ராணுவத்திற்கு பயிற்சி கொடுப்பதை தடுக்க முடியவில்லை? ஏன் இலங்கை அரசுக்கு செய்யும் உதவியை நிறுத்த முடியவில்லை? ஏன் சிறப்புமுகாம்களை மூடி அகதிகளை விடுதலை செய்ய முடியவில்லை? ஏன் ஈழ அகதிகளுக்கு இந்திய குடியுரிமை பெற்றுக்கொடுக்க முடியவில்லை? ஜெயா அம்மையாரும் கலைஞரும் மாறி மாறி ஆண்டதில் உன் தமிழ்நாடு; கண்ட நன்மைதான் என்ன? கலைஞர் சம்பாதித்தது 50ஆயிரம் கோடி ஜெயா அம்மையார் சம்பாதித்தது 30 ஆயிரம் கோடி ஆனால் அப்பாவி தமிழ் மக்கள் தலையில் சுமத்தப்பட்டிருப்தோ 1.21 லட்சம் கோடி கடன் சுமை. காவிரியில் கழிவுநீர் கலப்பது பற்றி பேச தமிழகத்திற்கு உரிமை இல்லை என்கிறார் கர்நாடக முதலமைச்சர் கெயில் பைப்லைன் போடுவதை தடுக்க தமிழக அரசிற்கு உரிமை இல்லை என்கிறது உச்சநீதிமன்றம். தமிழகத்தில் அணுக்கழிவுகளை புதைப்போம், அதைத் தடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்கிறது மத்திய அரசு. நச்சு தொழிற்சாலைகள் அனைத்தையும் தமிழகத்தில் அமைப்போம். ஆனால் அதன் பலன்களை தமிழகத்திற்கு தரமாட்டோம் என்கிறது மத்தியஅரசு. தமிழா! இந்தியனாய் சிந்தித்து அடிமையாக இருந்தது போதும் தமிழனாக உணர்ந்து விடுதலை பெறுவாயா?

இரு தினங்களுக்கு முன்னர்

இரு தினங்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவில் ஒரே நாளில் 80 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேபோல் இலங்கை இந்திய நாடுகளிலும் கடும் தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என சிலர் கோரி வருகின்றனர். 2020ல் இதே நாளில் இந்தியாவில் நிர்பாயா குற்றவாளிகள் நாலு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் இந்த நிமிடம் வரை பெண்களை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்வது இந்தியாவில் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. தப்பு என்பது தெரிந்தே செய்வது. தவறு என்பது தெரியாமல் செய்வது எனவேதான் தப்பு தண்டிக்கப்படல் வேண்டும். தவறு மன்னிக்கப்படல் வேண்டும் என்கிறார்கள். தண்டனை என்பது தப்பு செய்தவர் திருந்துவதற்கேயொழிய, இன்னொருவர் தப்பு செய்யக்கூடாது என்பதற்காக ஒருவர் தண்டிக்கப்படக்கூடாது மரண தண்டனை என்பது இன்னொருவர் தப்பு செய்யக்கூடாது என்பதற்காக தப்புசெய்த ஒருவருக்கு வழங்கப்படும் தண்டனையாகும். அது மட்டுமல்ல, மரண தண்டனை மூலம் தப்பு குறைக்கலாமேயொழிய ஒருபோதும் தப்புகளை இல்லாமல் செய்ய முடியாது ஏனெனில் அதிக தண்டனை வழங்கும் நாடுகளில் நிகழும் குற்றங்களைவிட குறைந்த தண்டனை வழங்கும் நாடுகளில் நிகழும் குற்றங்கள் குறைவு. எனவே உணர்ச்சிகரமாக சிந்திக்காமல் உணர்வுபூர்வமாக சிந்தித்து தண்டனைகளை வழங்க வேண்டும். முக்கியமாக ஒருவனை வாழ வைக்க முடியாத சமூகத்திற்கு அவனை தண்டிப்பதற்கான உரிமை இல்லை என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.

ஆயுதம் ஏந்திப் போராடுவதை

ஆயுதம் ஏந்திப் போராடுவதை “பயங்கரவாதம்” என்று கூறிய காந்திதேசம் என்னும் இந்தியாவின் அரசு, அன்னை பூபதியின் அகிம்சைப் போராட்டத்திற்கு அளித்த பதில் அல்லது மதிப்பு என்ன?

உக்ரைன் மருத்தவமனை மீது

உக்ரைன் மருத்தவமனை மீது ரஸ்சிய ராணுவம் தாக்குதல் நடத்தியமைக்காக புதினை போர்க்குற்றவாளி என்று கூறுவோர், பாதுகாப்புவலயம் என அறிவிக்கப்பட்ட முள்ளிவாய்க்காலில் அமைந்திருந்த மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியமைக்காக மகிந்த ராஜபக்சாவையும், யாழ் மருத்துவமனை மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்காக ராஜிவ் காந்தியையும் "போர்க்குற்றவாளிகள்" என ஏன் கூறுவதில்லை?

பெரியாரின் கருத்துகள்

பெரியாரின் கருத்துகள் புரையோடிப் போயிருக்கும் சமூகத்தை மாற்றியமைக்க முயலவில்லை. மாறாக அதை பேணிப் பாதுகாத்து அதில் சில சீர்திருத்த சலுகைகளையே அது கோருகின்றது. பெரியாரின் காலத்தில் அது கலகக்குரலாக இருந்தாலும் இப்போது அவை அரசுகளை பாதுகாத்து தக்க வைக்கவே உதவுகின்றன. அதனால்தான் அரசே அவற்றை அச்சிட்டு வெளியிட முன்வந்துள்ளது.

எது விதைக்கப்பட்டதோ அ

எது விதைக்கப்பட்டதோ அதுவே அறுவடை செய்யப்படும். முள்ளிவாய்க்காலில் ஈழத் தமிழருக்கு கஞ்சித்தொட்டியை விதைத்தவர்கள், இன்று தீப்பிடித்த ஒரு றாத்தல் பாண் அறுவடை செய்கிறார்கள்.

அமைதியான கடல் சிறந்த

அமைதியான கடல் சிறந்த மாலுமியை உருவாக்குவதில்லை போராடாத எந்த இனமும் விடுதலை பெறுவதில்லை யாழ் விஜயம் செய்த மகிந்த ராஜபக்சாவுக்கு எதிராக தமிழ் மக்கள் போராட்டம்.

ுறிப்பு - இதயம் பலவீனமானர்கள்

குறிப்பு - இதயம் பலவீனமானர்கள் இப் பதிவை படிக்க வேண்டாம். ஒரு நாள் ஒரு குட்டி எறும்பு தன் தாய் எறும்பிடம் சென்று தானும் யானையும் காதலிப்பதாகவும் தமக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டிச்சாம். அதைக்கேட்ட தாய் எறும்பு இக் காதலை தன்னால் ஒருபோதும் ஏற்க முடியாது என்று மறுத்திடுச்சாம். அதற்கு அந்த குட்டி எறும்பு தாயின் காதில் “ நான் கர்ப்பமாக இருக்கிறேன். என் வயிற்றில் யானையின் குழந்தை வளருது” என்று கூறிச்சாம். இதைக் கேட்ட தாய் எறும்பு மயங்கி விழுந்திடுச்சாம். இதைப் படித்தக்கொண்டிருந்தபோது சுமந்திரன் தம்பி ஒருவர் வந்து “ நீ ஒரு ஒட்டுக்குழு. உன்னை தோலுரிப்பதே இனி எமது வேலை” என்று என்னிடம் கூறுகிறார். இதைக் கேட்டதும் இப்ப நான் மயங்கி விழுந்திட்டேன்.

நெற்குன்றம் விக்ரம் அவர்களை நினைவு கூர்வோம்!

•நெற்குன்றம் விக்ரம் அவர்களை நினைவு கூர்வோம்! எங்கள் இதயம் பூக்களைப் போல் மென்மையானது ஆம். அது மிகவும் மென்மையானது. எங்களை நீங்கள் வஞ்சித்தபோது வன்மையானது ஆம். அது இன்னும் வன்மையானது. எங்கள் தலைவிதியை மாற்றி எழுதிட நாம் மீண்டும் எழுந்து நிற்போம் இதற்கு முன் இழந்ததை எல்லாம் இனி ஒன்றாய் பெற்றிடுவோம் நாங்கள் நிச்சயம் வெல்வோம் ஆம். இனி நாங்கள் வெல்வோம்! இன்று (21.03.2022) நெற்குன்றம் விக்ரம் அவர்களின் 13வது நினைவு நாள் ஆகும். ஈழத் தமிழர்களை காப்பாற்றுவதற்காக யுத்த நிறுத்தம்கோரி தமிழ்நாட்டில் நெற்குன்றம் விக்ரம் தீக்குளித்து மரணித்த நாள் இன்று ஆகும். அவர் தேர்ந்தெடுத்த பாதை தவறானது. அது பயன் தரவில்லை. அவர் நோக்கம் நிறைவேறவில்லை. ஆனாலும் அவரது தியாக உணர்வு அளப்பரியது. மதிக்கப்பட வேண்டியது. இந்திய அரசு ஒருபோதும் அகிம்சைப் போராட்டங்களை மதிக்காது என்பது மட்டுமன்றி தமிழர்களுக்கு உதவாது என்பதற்கும் இவரது மரணம் ஒரு உதாரணமாக வரலாற்றில் இடம் பெறும்.

வடக்கு கிழக்கை பிரபாகரனிடமே

வடக்கு கிழக்கை பிரபாகரனிடமே கொடுத்திருக்கலாமென சிங்களர்களே கூறுகிறார்கள் - ஸ்ரீதரன் சிவஞானம் |பாராளுமன்ற உறுப்பினர்

சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்து

சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்து அதிகார பரவலாக்கத்தை கோருகின்றோம் என்று கூறினால் இந்திய அரசு உதவும் என்று சுமந்திரனும் நம்புகிறார் போலும். ஆனால் சீனாவின் ஆதிக்கம் வருவதற்கு முன்பிருந்தே தமிழர் அதிகாரப் பரவலாக்கம் கோருகின்றனர். அதற்கு காரணம் 1948 சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து சிங்கள அரசுகள் திட்மிட்டு தமிழ் இன அழிப்பை மேற்கொண்டு வருவதே.

நினைவு கூர்வோம்!

நினைவு கூர்வோம்! ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மாரிமுத்து மற்றும் பாலசுந்தரம் ஆகியோரின் 13வது நினைவு நாள் இன்றாகும். மாரிமுத்து என்பவர் "இலங்கைத் தமிழர்களை சோனியாகாந்தி காப்பாற்ற வேண்டும்" என்று கடிதம் எழுதி வைத்து விட்டு 22.03.2009 அன்று இரவு வீட்டு வாசலில் முன்பு தீக்குளித்து மரணமடைந்தார். பாலசுந்தரம் என்பவர் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பதாகைகளை அமைத்தார் ஆனால் காவல்துறை அவற்றை அகற்றினர். இதையடுத்து 22.03.2009 அன்று மதியம் 12 மணியளவில் தீக்குளித்து மரணமடைந்தார். இவ்வாறு மொத்தம் 16 பேர் ஈழத் தமிழர்களுக்காக தமிழகத்தில் உயிர் தியாகம் செய்தார்கள். ஆனாலும் இந்திய அரசு இவர்களின் கோரிக்கைக்கு செவிமடுக்கவில்லை. புலிகள் ராஜிவ் காந்தியைக் கொன்றதால்தான் சோனியாவின் இந்திய அரசு இவர்களின் கோரிக்கைக்கு அக்கறை எடுக்கவில்லை என்றார்கள். இப்போது இருப்பது சோனியாவின் அரசு இல்லை. இப்போது இருப்பது மோடியின் அரசு. இப்போது புலிகளும் இல்லை. ஆனாலும் இப்பவும் இந்திய அரசு தமிழர்கள் மீது அக்கறை கொள்ளவில்லையே1 இந்த 16 தமிழரின் உயிர் தியாகம் இன்றும் எமக்கு கூறும் முக்கிய செய்தி என்னவெனில் இந்திய அரசு ஒருபோதும் தமிழர் நலனில் அக்கறை கொள்ளாது என்பதே.. இந்த உண்மையை நாம் அனைவரும் உணர்ந்து கொள்வதே இவர்களுக்கு செய்யும் நினைவு அஞ்சலியாக இருக்கும்.

தியாகி பகத்சிங்கை மட்டுமல்ல

தியாகி பகத்சிங்கை மட்டுமல்ல தோழர் தமிழரசனையும் நினைவு கூர்வோம். “பகத் சிங்கும் அவரது நண்பர்களும் குண்டு வீசியது கொல்ல வேண்டும் என்ற எண்ணத்திலான பயங்கரவாத நடவடிக்கை அல்ல. சுதந்திர வேட்கையின் குரல் மக்களின் காதுகளில் ஒலிக்க வேண்டும் என்பதற்கான நடவடிக்கை ஆகும். பகத் சிங்கும் அவரது நண்பர்களும் தங்கள் உயிரைக் கொடுத்ததால்தான் நாம் சுதந்திரம் அடைந்தோம்” என்று முன்னாள் குடியரசுத் தலைவர் சர்மா அவர்கள் குறிப்பிட்டார். (ஆதாரம்- 24.03.1994 தினமணி) வெள்ளைக்கார அரசை விரட்ட வெடிகுண்டு வீசிய பகத்சிங்கை தியாகி என்று போற்றும் சிலர் கொள்ளைக்கார இந்திய அரசுக்கு எதிராக குண்டு வீசிய தோழர் தமிழரசனை பயங்கரவாதி என்கின்றனர். நாம் பகத்சிங்கை மட்டுமல்ல மக்களுக்காக போராடிய தோழர் தமிழரசனையும் என்றும் நினைவில் போற்றுவோம். இன்று பகத்சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் வெள்ளைக்கார அரசால் தூக்கில் இட்டுக் கொல்லப்பட்டநாள் மட்டுமன்று. தமிழ்தேசிய போராளிகளான இராசாராமன் மற்றும் சரவணன் ஆகியோர் கொள்ளைக்கார இந்திய அரசால் கொல்லப்பட்ட நாளும் ஆகும். தமிழ்தேசிய போராளிகளான இராசாராமன் மற்றும் சரவணன் ஆகியோர் தமிழக காவல்துறையினரால் போலி என்கவுண்டரில் சென்னையில் கொல்லப்பட்ட நாள் இன்று ஆகும். தியாகி பகத்சிங்கை கொன்றதன் மூலம் இந்தியா சுதந்திரம் பெறுவதை வெள்ளைக்கார அரசால் தடுக்க முடியவில்லை. அதேபோல் தோழர் தமிழரசன் மற்றும் இராசாராமன்,சரவணன் ஆகியோரை கொன்றதன் மூலம் தமிழ் இனவிடுதலையை தடுக்க முடியாது என்பதை இந்திய அரசுக்கு வரலாறு காட்டும். இது உறுதி. தோழர் தமிழரசன் மற்றும் இராசாராமன் சரவணன் ஆகியோர் தமிழக மக்களுக்காக மட்டும் போராடவில்லை. ஈழத் தமிழ் மக்களுக்காகவும் குரல் கொடுத்தவர்கள். அதனால்தான் அவர்கள் இந்திய அரசால் கொல்லப்பட்டார்கள். பகத்சிங்கை மட்டுமல்ல தோழர் தமிழரசன் மற்றும் இராசாராமன் சரவணன் ஆகியோரையும் தமிழக மக்களும் ஈழத் தமிழர்களும் என்று நினைவில் போற்றுவார்கள்.

கருணாநிதி 94 வயதுவரை இருந்தார்

கருணாநிதி 94 வயதுவரை இருந்தார். ஆனால் அவரால் தமிழீழம் அமைக்க முடியவில்லையே? கருணாநிதி ,இந்திராகாந்தி , எம்.ஜி.ஆர் யார் உயிரோடு இருந்தாலும் தமிழீழம் அமைந்திருக்காது. ஏனெனில் தமிழீழம் அமையக்கூடாது என்பதே இந்திய வெளியுறவுக் கொள்கையாகும். ஒருவேளை சிங்கள அரசு தமிழீழத்தை அனுமதித்தாலும் இந்திய அரசு அனுமதிக்காது என்பதே உண்மை.

முதலாவது விக்கட் விழுந்துள்ளது!

•முதலாவது விக்கட் விழுந்துள்ளது! கோத்தா அரசில் இருந்து அமைச்சர் ஒருவர் விலகியுள்ளார். நாட்டு மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள இந்த தருணத்தில், வெறுமனே என்னால் வேடிக்கை பார்க்க முடியாது என அமைச்சர் நிமல் லான்சா ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள இராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

சிங்கள ராணுவத்தின் தாக்குதலுக்கு

சிங்கள ராணுவத்தின் தாக்குதலுக்கு அஞ்சியே இதுவரை தமிழ் மக்கள் அகதிகளாக இந்தியா சென்றனர். வரலாற்றில் முதல் தடவையாக பஞ்சம் காரணமாக தமிழ்நாட்டிற்குள் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்திய அரசு வழங்கும் உதவியில் தமிழ் பகுதிகளில் புத்த விகாரை கட்ட அக்கறை எடுக்குதே யொழிய மக்களுக்கு நிவாரணம் வழங்க சிங்கள அரசு விரும்பவில்லை.

எங்களைப்போல் தமது விடுதலைக்காக

எங்களைப்போல் தமது விடுதலைக்காக போராடும் ஒரு இனம். அதுமட்டுமல்ல எமது போராட்டத்திற்கு தங்கள் ஆதரவை வழங்கிவரும் இனம். அவர்களின் ஆண்டு பிறப்பு 20.03.22 கொண்டாடப்பட்டது. பல்வேறு தடைகளை உடைத்தெறிந்து தொடரும் அவர்கள் போராட்டம் வெல்லட்டும். குர்து இன மக்கள் விடுதலை பெற எமது வாழ்த்துகள்!

ஒரு இஞ்ச் நிலத்தைக்கூட

ஒரு இஞ்ச் நிலத்தைக்கூட தமிழர்களுக்கு கொடுக்க மாட்டோம் என்றவர்கள் இப்போது கடன் பெறுவதற்காக நாட்டை விற்றுக்கொண்டிருக்கிறார்கள். யுத்தத்திற்காக பல்லாயிரம் கோடி ரூபாக்களை பெற்றவர்களால் இப்போது நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க பணம் பெற முடியவில்லை. புலிகளை அழித்தால் நாடு முன்னேற்றம் அடையும் என்றவர்கள் இப்போது நாடு நாடாக கடன் கேட்டு அலைகிறார்கள். பிரபாகரனிடம் நாட்டைக் கொடுத்திருக்கலாம் என்று சிங்கள மக்களே பகிரங்கமாக கூறும் நிலைக்கு கொண்டு வந்திருப்பதே இந்த கும்பலின் சாதனையாகும்.

சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கூட

சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கூட திலீபன் பெயரை உச்சரித்து பயங்கரவாத தடைச்சட்ட திருத்த மூலத்திற்கு எதிர்த்து வாக்களித்துள்ளார். ஆனால் திலீபன் பெயரை வைத்து பதவி பெற்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் ஐயா வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தைந நீக்கக்கோரி சுமந்திரனுடன் சேர்ந்து கையெழுத்து பெற்ற சாணக்கியனும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

எதிரி உன்னை பாராட்டுகிறான் எனில்

•எதிரி உன்னை பாராட்டுகிறான் எனில் நீ அவனுக்கு சோரம் போய்விட்டாய் என்று அர்த்தம். “எமது அழைப்பை பிரதான எதிர்க்கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் புறக்கணித்துள்ள போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அவர்களிற்கு விசேடமாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என தெரிவித்தார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ.