Friday, March 25, 2022

இன்று 1838வது நாள் வவுனியா 01/03/2022.

இன்று 1838வது நாள் வவுனியா 01/03/2022. தாயக தாய்மாரின் ஒரு நாளைக்கு ஒரு நேர உணவுத்தவிர்ப்பு போராட்டம் தொடர்கிறது. “நிச்சயம் வெற்றி பெறுவோம்” என்ற ஒற்றை நம்பிக்கையைத்தவிர வேறு எதுவுமே இப்போது எம்மிடம் இல்லை. ஆனால் அந்த ஒற்றை நம்பிக்கையே எம்மை தொடர்ந்து முன்னோக்கி செல்ல வைக்கிறது. கையில் ஆயுதம் இல்லை. ஆதரிக்க ஒரு பலமான நாடு இல்லை. இருந்தும் புதிது புதிதாக களத்தை உருவாக்கி போராடி வருகிறோம். குத்துச் சண்டை போட்டியில் ஒருவன் வீழ்ந்தவுடன் தோல்வி என்று அறிவிப்பதில்லை. மாறாக வீழ்ந்தவன் எழுந்திருக்காவிட்டால்தான் தோல்வி என அறிவிக்கப்படும். அதுபோல் நாம் தோல்வியை ஒத்துக்கொள்ளாதவரை சிங்களவர்களால் வெற்றியை ஒருபோதும் அனுபவிக்க முடியாது. ஒருவன் நீரின் மேல் மட்டத்திற்கு வந்த பின்பே அவன் ஆழத்தில் இருந்து வருவதற்கு முயற்சி செய்திருக்கிறான் என்பது தெரியவரும். அதுபோல் ஒரு இனம் வெற்றி பெற்றபின்பே அது தொடர்ந்து போராடியது என்பது வரலாறாக அமையும். வெற்றிபெறும்வரை தொடர்ந்து முயற்சி செய்வோம். தொடர்ந்து நாம் எழுப்பும் குரல் நாடுகளின் தலைமைகளுக்கு கேட்காமல் இருக்கலாம். ஆனால் உலக மக்களுக்கு நிச்சயம் கேட்கும்.

No comments:

Post a Comment