Monday, February 28, 2022

சிறப்புமுகாம் அகதிகள் விடுதலை இல்லை

சிறப்புமுகாம் அகதிகள் விடுதலை இல்லை அகதிகளுக்கு குடியுரிமை இல்லை உயர் கல்வி வாய்ப்பு இல்லை அரசு அலுவலகங்களில் வேலை வாய்ப்பு இல்லை திரும்பி வர விரும்பும் அகதிகளுக்கு அனுமதி இல்லை திராவிட முதல்வர் ஸ்டாலின் அவர்களே நிச்சயமாக நீங்கள் எங்களில் ஒருவன் இல்லை.

கஞ்சாவை விற்றேன்.

கஞ்சாவை விற்றேன். பிடித்து சிறையில் போட்டார்கள். கஞ்சாவுடன் சேர்த்து பக்தியை விற்றேன். என்னை மகான் என்கிறார்கள். - ஜக்கி வாசுதேவ் சிவராத்திரி வந்தால் கஞ்சாவை போட்டிட்டு இவன் ஆடுற ஆட்டம் தாங்க முடியவில்லை. ஸ்டாலின் சார்! பிளீஸ், இவனை பிடிச்சு உள்ளே போடுங்க.

இவர் திராவிடர் இல்லை என்றால்

இவர் திராவிடர் இல்லை என்றால் எவர் திராவிடர் என்று ஏன் புத்தகம் எழுதி கேட்க முடியவில்லை? தமிழரை திராவிடர் என்று சொல்ல வேண்டும் என்றவரையே தமிழர் என்று புத்தகம் எழுத வேண்டிய நிலை வந்துவிட்டது திராவிடத்திற்கு. இது தமிழ்த்தேசியத்தின் வெற்றிதானே?

செய்தி- வியட்நாமில் வடகொரியா அமெரிக்க ஜனாதிபதிகள் சந்திப்பு.

செய்தி- வியட்நாமில் வடகொரியா அமெரிக்க ஜனாதிபதிகள் சந்திப்பு. கேள்வி – அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அவர்களே! இரசாயண குண்டு வைத்திருந்ததாக சதாம் உசையினை கொன்ற மாதிரி , கொடிய ஆயுதங்களை வைத்திருந்ததாக லிபிய கடாபியை கொன்ற மாதிரி அணுகுண்டு வைத்திருக்கும் வடகொரிய ஜனாதிபதியையும் கொல்ல வேண்டியதுதானே? அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்- யோவ் யாரையா நீ? இவன் உண்மையாகவே குண்டு வைச்சிருக்கான்யா. இவனுகூட கை குலுக்குவதைத் தவிர வேறு வழியில்லையா. ( மீள் பதிவு)

போரில் கைது செய்யப்படுபவர்களை

போரில் கைது செய்யப்படுபவர்களை சர்வதேச சட்டப்படி கௌரவமாக நடத்த வேண்டும் என்று இன்று கோரும் ஒருவர்கூட அன்று இந்த இளைஞனுக்காக குரல் கொடுக்கவில்லை. ஏனென்றால் இந்த இளைஞன் தமிழன் . தமிழன் என்றால் அவனை சர்வதேச சட்டப்படி நடத்த வேண்டியதில்லை. அப்படித்தானே உங்கட நியாயம்?

இவர் தன் தாய்நிலம் காக்க

இவர் தன் தாய்நிலம் காக்க வெடிகுண்டுடன் இறந்தால் அது தேசபக்தி. உக்ரைன் ஹீரோ. ஆனால் ஈழத்தில் போராளிகள் தம் தமிழ்நிலம் காக்க வெடிகுண்டுடன் இறந்தால் அது வன்முறை. புலிப் பயங்கரவாதி. #திராவிட உருட்டு.

ஈழத்தில் இவர்கள் சிறுவர்

ஈழத்தில் இவர்கள் சிறுவர் போராளிகள் என்று சர்வதேசம் கண்டிக்கும். ஆனால் உக்ரைனில் இவர்கள் தேசபக்தி வீரர்கள் என்று சர்வதேசம் கைதட்டி வரவேற்கும்.

உக்ரைனியர் வேறு இனம்.

உக்ரைனியர் வேறு இனம். ரோமேனியர் வேறு இனம். ஆனாலும் மனிதாபிமானமாக அகதிகளை வரவேற்கின்றனர். ஆனால் தொப்புள்கொடி உறவுகள் என தமிழ்நாட்டுக்கு நம்பிபோன ஈழ அகதிகளுக்கு திராவிட முதல்வர் செய்தது அகதிகள் என்பதை ஏதிலிகள் என பெயர் மாற்றம். #திராவிட உருட்டு

உக்ரைன் குழந்தைக்காக

உக்ரைன் குழந்தைக்காக இரங்கும் சர்வதேசம் ஏன் நம்ம ஈழத் தமிழ் குழந்தைக்காக இரங்கவில்லை?

இருவரும் பெண்கள்

இருவரும் பெண்கள் இருவரும் தம் தாய் நிலம் காக்க ஆயுதம் ஏந்தியுள்ளார்கள். ஆனால், உக்ரைன் பெண் ஆயுதம் ஏந்துவதை “தேசபக்தி” என்று வரவேற்பவர்கள் ஈழத் தமிழ்பெண் ஆயுதம் ஏந்தியதை “பயங்கரவாதம்” என்று குறிப்பிடுவது ஏன்? உக்ரைனியருக்கு ஒரு நியாயம். தமிழருக்கு இன்னொரு நியாயமா?

தனது பாதுகாப்பிற்காக

தனது பாதுகாப்பிற்காக உக்ரைன் மீது ரஸ்சியா போர் தொடுப்பது நியாயமானது என்று கூறும் ஆரியமும் திராவிடமும் சீனாவுடன் கூட்டு சேரும் சிங்கள அரசுடன் போர் செய்யாமல் உதவி செய்வது ஏன்? சீனாவை விட தமிழர்கள்தான் எதிரி என்று ஆரியமும் திராவிடமும் கருதுகிறதா?

கரடியே காரித்துப்பிடிச்சு!

கரடியே காரித்துப்பிடிச்சு!

ஈழத்தில் சக தமிழன்

ஈழத்தில் சக தமிழன் மீது விழுந்த குண்டு உன்னை உலுக்கவில்லை. கலைஞர் டிவி யில் மானாட மயிலாட பார்த்து மகிழ்ந்த உனக்கு கீவ் நகரத்தில் விழுந்த குண்டு கீரைக்காரி கூடையை உடைக்கிறதா? சீ தூ ..... இது ஒரு பிழைப்பு !

Saturday, February 26, 2022

இதுவரை புலத்தில் போராடிய

இதுவரை புலத்தில் போராடிய மக்களை கொச்சைப்படுத்திய சுமந்திரன் தம்பிகள், இப்போது தாயகத்தில் போராடிய மக்களையும் கொச்சைப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

எது நடக்கக்கூடாது என்று

எது நடக்கக்கூடாது என்று நினைத்தோமோ அது நடந்துவிட்டது. கடந்த வாரம் “மன்னார் கடலில் கடற்கொள்ளையர்கள்” என்று இந்திய அரசும் அதன் ஊடகங்களும் கூறினார்கள். இந்த வாரம் வடமராட்சி கிழக்கு கடலில் இரு மீனவர்களை கொன்று ஈழ தமிழக மீனவர்களிடையே மோதலை உருவாக்கியுள்ளார்கள். ஈழத் தமிழ் மக்களும் தமிழக தமிழ் மக்களும் ஒன்றுபட்டுவிடக்கூடாது என்பதற்காக இலங்கை அரசும் இந்திய அரசும் சேர்ந்து செய்யும் சதி இது. இதற்கு மீனவர்களும்; தமிழ் மக்களும் பலியாகிவிடக்கூடாது.

இதுவரை எல்லை தாண்டி வந்தவர்கள்

இதுவரை எல்லை தாண்டி வந்தவர்கள் ஈழ தமிழ் மீனவர்களின் வலைகளை அறுத்தார்கள். படகுகளை சேதப்படுத்தினார்கள். ஆனால் இம்முறை இரு ஈழத் தமிழ் மீனவர்களின் கழுத்து அறுத்து கொலை செய்திருக்கிறார்கள். ரோலர் படகில் வருபவர்களே இவ்வாறு எல்லைதாண்டி வந்து செய்கின்றனர். புலிகளுக்கு பெற்றோல் வருவதைத் தடுத்த இலங்கை இந்திய கடற்படைகளால் எல்லை தாண்டி வரும் ரோலர் படகுகளை ஏன் தடுக்க முடியவில்லை? கேரளாவில் இருந்துவரும் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை ஏன் இவர்களால் தடுக்க முடியவில்லை? ஈழ இந்திய மீனவர்கள் நேரடியாக பேசுவதன் மூலமே இவ் மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். ஈழ தமிழ் மீனவர்களும் தமிழக மீனவர்களும் நேரடியாக பேசி பிரச்சனையை தீர்க்க விரும்புகின்றனர். ஆனால் ரோலர் படகு முதலாளிகள் இந்திய அரசு மூலம் இப் பேச்சுவார்த்தை நடக்க விடாமல் தடுக்கின்றனர். உதாரணமாக திமுக தலைவர் டி.அர் பாலுவுக்கு 1200 ரோலர் படகுகள் இருக்கின்றன. அதுமட்டுமல்ல அவருக்கு இலங்கை கொழும்பில்கூட வியாபார முதலீடுகள் இருக்கின்றன இவ் முதலாளிகள் தமது நலனுக்காகவும் இலங்கை இந்திய அரசின் விருப்பத்திற்காகவும் ஈழ தமிழக மீனவர்களிடையே மோதலை உருவாக்க சதி செய்கின்றனர்.

கடந்த நான்கு வருடங்களாக

கடந்த நான்கு வருடங்களாக காணாமல் போனவர்களின் உறவுகள் வீதியில் உட்கார்ந்து காந்திய வழியில் போராடுகின்றனர். அதை இந்த காந்தி தேச தூதுவர் கண்டுகொள்ளவேயில்லை. அதேவேளை இந்த காந்தி தேசத்தின் தூதுவர் யாழ்ப்பாணத்தில் காந்தி சிலை நிறுவி நினைவு கூர்கிறார். இங்கு காந்தி சிலை என்பது காந்தீயத்தின் மீதான அக்கறை அல்ல. மாறாக தமிழ் மக்கள் மீதான இந்திய ஆக்கிரமிப்பின் குறியீடு. சில வருடங்களுக்கு முன்னர் இந்திய அதிகாரி ஒருவர் ஒரு பியர் போத்தலுக்காக நாட்டு ரகசியங்களை பாக்கிஸ்தான் அதிகாரிக்கு வழங்கியதாக வந்த செய்தியை படித்து கேவலம் ஒரு போத்தல் பியருக்காக நாட்டைக் காட்டிக் கொடுத்திருக்கிறாரே என சிரித்தேன். ஆனால் இப்போது நமது தலைவர்கள் இந்திய தூதர் வழங்கும் கேவலம் ஒரு வடைக்காகவும் பிளேன் ரீக்காகவும் தமிழ் இனத்தை காட்டிக் கொடுப்பதை பார்க்கும்போது சிரிக்க முடியவில்லை. வேதனையில் மனம் விம்முகிறது. இந்த கொடுமைக்கு எப்போது முடிவு வரும்?

இலங்கை மக்களுக்கு சுதந்திரம் இருக்கிறதா?

•இலங்கை மக்களுக்கு சுதந்திரம் இருக்கிறதா? ஆங்கிலேயரிடமிருந்து 04.02.1948 யன்று இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது என்று சிலர் கூறுகிறார்கள். இந்த சுதந்திரம் போராடிப் பெற்றதில்லை என்றும் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கும்போது கொசுறாக இலங்கைக்கும் சுதந்திரத்தை ஆங்கிலேயர்கள் கொடுத்துவிட்டு சென்றதாக அந்த சிலர் கூறுகிறார்கள். இந்த சிலரிடம் சில கேள்விகள் கேட்க விரும்புகிறோம் (1) இலங்கை மக்கள் போராடாமலே ஆங்கிலேயர்கள் சுதந்திரம் கொடுத்தனர் என்றால் அதற்கு முன்னர் போர்த்தக்கேயரும் ஒல்லாந்தரும் எப்படி இலங்கையை விட்டு வெளியேறினார்கள்? (2) இந்தியாவில் கோவாவை 300 வருடம் ஆண்ட போர்த்துக்கேயர் இலங்கையில் நூறு வருடத்தில் எப்படி வெளியேற்றப்பட்டார்கள்? (3) போர்த்தக்கேயரும் ஒல்லாந்தரும் ஏன் முழு இலங்கையையும் கைப்பற்ற முடியவில்லை? (4) ஆங்கிலேயர்கூட இறுதியாகத்தானே கண்டி ராஜ்ஜியத்தை கைப்பற்ற முடிந்தது. அதற்கு என்ன காரணம்? (5) இந்தியாவில் இருந்து 265 மைல் தொலைவில் உள்ள லட்சதீவுகளையும் 740 மைல் தொலைவில் உள்ள அந்தமான் தீவையும் இந்தியாவுடன் இணைத்த ஆங்கிலேயர்கள் வெறும் 20 மைல் தொலைவில் உள்ள இலங்கையை ஏன் இந்தியாவுடன் இணைக்க முடியவில்லை? (6) மன்னர் காலத்தில்கூட இலங்கை தமிழக மன்னர்களின் பிடியில் நீண்டகாலம் இருக்கவில்லையே. அது ஏன்? மேற்கண்ட வினாக்களுக்கு விடை தெரிந்து கொண்டால் இலங்கை மக்களின் வீரம் செறிந்த போராட்ட வரலாற்றை அந்த சிலரால் புரிந்து கொள்ளலாம். ஆனாலும் இலங்கை சுதந்திரம் என்பது காலனி நாடாக இருந்தது நவகாலனி நாடாக மாறியுள்ளது. அப்படியென்றால் இலங்கையில் யாருக்கு சுதந்திரம் இருக்கிறது? • இலங்கை முழுவதையும் ஆக்கிரமித்து சுரண்டுவதற்கு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் மட்டுமன்றி அமெரிக்காவுக்கும்கூட சுதந்திரம் இருக்கிறது. • தமது பதவி நலன்களுக்காக இலங்கையை விற்பதற்கு ஆட்சியாளர்களுக்கு சுதந்திரம் இருக்கிறது. • தமிழ் மக்களை இனப்படுகொலை செய்ய மகிந்த குடும்பத்திற்கு சுதந்திரம் இருக்கிறது . • தமிழ் மக்களை கொன்ற கொலையாளிகளை விடுதலை செய்யவும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமல் அடைத்து வைத்திருக்கவும் கோத்தபாயாவுக்கு சுதந்திரம் இருக்கிறது. • தன் ஆசைக்கு இணங்கவில்லை என்பதற்காக பெண்ணின் காதலனை கொலை செய்ய மகிந்தவின் மகனுக்கு சுதந்திரம் இருக்கிறது. • பிரித்தானிய ராணியின் குதிரையை வாங்கி கெலிகொப்டரில் சென்று நுவரேலியாவில் குதிரைச் சவாரி செய்ய மகிந்தவின் இன்னொரு மகனுக்கு சுதந்திரம் இருக்கிறது. • அரசுக்கு எதிராக போராடும் மாணவர்களையும் தொழிலாளர்களையும் சுட்டு அடக்குவதற்கு இலங்கை படைகளுக்கு சுதந்திரம் இருக்கிறது. குறிப்பு - ஒரு இனத்தை அடக்கி ஆள முற்படும் எந்தவொரு இனமும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது. எனவே சிங்கள மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டுமென்றால் தமிழ் மக்களின் சுதந்திரத்தை முதலில் அங்கீகரிக்க வேண்டும்.

13 வது நினைவஞ்சலிகள்!

•13 வது நினைவஞ்சலிகள்! முத்துக்குமாரை அடுத்து ஈழத் தமிழருக்காய் தீக்குளித்து இறந்த பள்ளப்பட்டி ரவி அவர்களின் 13வது நினைவு நாள் இன்று. தமிழ் இனத்திற்காக தீக்குளித்தவன் ஈகத்தை அப்போதைய கருணாநிதி திமுக அரசும், அதன் அடிவருடி ஏவல்துறையும் சமையல் அடுப்பு (ஸ்டவ்) வெடித்து இறந்ததாக மனச்சான்று இன்றி பொய்க்கதை கட்டியது. ஆயினும், உண்மை ஈகத்தை எந்த கயவர்களாலும் மறைக்கமுடியாது என்பதை உணர்த்தும் வகையில் பள்ளப்பட்டி ரவியின் இறுதி ஊர்வலத்தில் அணிஅணியாய் தமிழர்கள் திரண்டனர். தமிழினத்தின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்த பள்ளப்பட்டி ரவி அவர்களின் மரணம் கலைஞர் கருணாநிதியின் துரோகத்தையும் இனங்காட்டியுள்ளது. அவரை நன்றியுடன் என்றும் நினைவு கூர்வோம்.

அரசியல் கைதிகள் விடுதலை

அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை காணாமல் ஆக்கப்பட்டோர் கண்டு பிடிக்கப்படவில்லை இடம்பெயர்ந்தோர் மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை தேசியகீதம் தமிழில் பாடக்கூட அனுமதி இல்லை. பெ-4 தமிழர் கரிநாளே!

யார் கட்டினாலும் வேட்டி அழகுதான்

யார் கட்டினாலும் வேட்டி அழகுதான். தமிழருக்கு அது நிச்சயம் பெருமைதான்.

நான்கு வருடங்களுக்கு மேலாக

நான்கு வருடங்களுக்கு மேலாக அகிம்சை வழியில் ஒரு நேர உணவு தவிர்த்து வீதியில் உட்கார்ந்து போராடுகிறார்கள். இவர்கள் தமிழீழம் கோரவில்லை. இவர்கள் சமஷ்டி கோரவில்லை. ஏன் இவர்கள் 13ஐக்கூட கோரவில்லை. இவர்கள் கோருவதெல்லாம் தாம் இறப்பதற்குள் தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் பற்றி அறிந்துவிட வேண்டும் என்பதே. தமக்கு சொகுசு பங்களா, சொகுசு வாகனம் கேட்டு வாங்கிய எமது தலைவர்களால் இவர்களுக்கு ஒரு தீர்வை கேட்டு வாங்க முடியவில்லை. என்னே கொடுமை இது?

இரயில் விபத்தில் கால்கள்

“இரயில் விபத்தில் கால்கள் பாதிக்கப்பட்ட போதும் உறவினர்கள் எல்லோரும் வெளிநாட்டிற்கு அழைத்தபோதும் பல்கலைக்கழக கல்வியை முடிக்கவேண்மென்ற ஆர்வத்தில் எங்களுடன் தொடர்ந்த விமலேஸ் அக்கா. ஒருநாள் வீதியில் வரும்போது அவரது கைப்பையில் இருந்த பணத்தை பறிப்பதற்காக இந்திய அமைதிப்படையால் அவர்களது வாகனத்தில் ஏற்றிச்செல்லப்பட்டார். பின்னர் அவரது செயற்கை கால் கொக்குவில் பிரதேசத்தில் உள்ள கிணற்றில் கண்டெடுக்கப்பட்டது” தன்னை மிகவும் பாதித்த பதிவு என நண்பர் ஒருவர் இப் பதிவை எனக்கு அனுப்பி வைத்தார். ஆம். உண்மைதான். இப்படி ஆயிரக்கணக்கானவர்களின் மரணத்திற்கு இதுவரை எந்த விசாரணையும் இல்லை. எந்த நீதியும் வழங்கப்படவில்லை. சீக்கியர்களின் படுகொலைக்கு மன்னிப்பு கேட்ட இந்திய பிரதமர் மோடி தமிழினப் படுகொலைக்கு இதுவரை வருத்தம்கூட தெரிவிக்கவில்லை இந்திய பிரதமர் வருத்தம் தெரிவிக்கிறாரோ இல்லையோ ஆனால் அதற்குள் எமது இந்திய விசுவாசத் தலைவர்கள் ஓடிவந்து “அப்படி கேட்கக்கூடாது;. கேட்டால் அப்புறம் இந்தியா தீர்வு பெற்றுத் தராமல் விட்டிடும்” என்கிறார்கள். இதுகூட பரவாயில்லை. தமிழகத்தில் சில திமுக உடன்பிறப்புகள் இதை இனி ஈழத் தமிழர்கள் நினைவு கூராக்கூடாதாம். ஏன் என்று கேட்டால், பாஜக பாசிசம் வந்திடும் என்று மிரட்டுகிறார்கள். என்னடா இது ஈழத் தமிழனுக்கு வந்த சோதனை?

சுதந்திரதினத்தை முன்னிட்டு

சுதந்திரதினத்தை முன்னிட்டு 197 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு நாளை விடுதலை செய்யப்படவுள்ளார்கள். ஆனால் இதில் தமிழ் அரசியல் கைதிகள் ஒருவர்கூட விடுதலை செய்யப்படவில்லை ரஞ்சன் ராமநாயக்காவை விடுதலை செய்யுமாறு கோரிய சஜித் பிரேமதாசா தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும்படி கோரவில்லை. இந்த சஜித் பிரேமதாசாவுக்கு வோட்டு போடும்படி கேட்ட எமது தமிழ் தலைவர்களும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும்படி கோரவில்லை. சிங்கள இனவாதியான ஞானசார தேரர் பிக்குகூட தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும்படி கோரியுள்ளார். ஆனால் தீர்வு 13ஐக் கேட்டு இந்தியாவுக்கு கடிதம் அனுப்பிய தமிழ் தலைவர்களால் இவ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும்படி ஜனாதிபதிக்கு ஒரு கடிதம் அனுப்ப முடியவில்லை. ஜனாதிபதி கோத்தபாயா கொண்டுவரப்போவது ஒரேநாடு ஒரே சட்டம். ஆனால் நீதி மட்டும் சிங்கள இனத்திற்கு ஒரு நீதி. தமிழ் இனத்திற்கு ஒரு நீதி.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக்கோரி

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக்கோரி கையெழுத்து போராட்டம் சுமந்திரன் அவர்களால் முல்லைத்தீவில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நல்ல விடயம். பாராட்டுக்கள். ஒருபுறம் இந்தியாவுக்கு கடிதம் எழுதிவிட்டு மறுபுறம் எதற்காக மக்களை திரட்டி கையெழுத்து இயக்கம் நடத்த வேண்டும் என நாம் கேட்கப்போவதில்லை. இந்திய அரசிடம் நம்பிக்கை இழந்துவிட்டீர்களா அல்லது எதிர்வரும் தேர்தலுக்காக மக்கள் போராட்டம் நடத்த ஆரம்பித்துள்ளீர்களா என நாம் கேட்கப்போவதில்லை. அல்லது, அமெரிக்கா சென்று சமஸ்டி கேட்டபோது இந்த பயங்கரவாத தடைச்சட்டததை நீக்குமாறு கோரியிருக்கலாமே எனவும் நாம் கேட்கப்போவதில்லை. நாம் கேட்பதெல்லாம் இதே சட்த்தின் கீழ் சுமந்திரன் பெயரால் 20 தமிழ் இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் எனவே முதலில் அவர்களை விடுதலை செய்யும்படி கூறிவிட்டு அப்புறம் பயங்கரவாத தடைச்சட்த்திற்கு எதிராக சுமந்திரன் போராடுவதே பொருத்தமாகும். இல்லையேல் இது சுமந்திரனின் சுத்துமாத்து அரசியல் என்றே கருதப்படும்.

04.02.1957 யன்று திருகோணமலையில்

04.02.1957 யன்று திருகோணமலையில் கறுப்புகொடி ஏற்றியவேளை சிங்கள படையால் சுட்டுக் கொல்லப்பட்ட திருமலைத் தியாகி நடராசனை நினைவு கூர்வோம். இவர் ஆயுதம் தூக்கி போராடவில்லை. இவர் காலத்தில் புலிகள் இயக்கம் தோன்றவில்லை. ஆனாலும் இவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அகிம்சை வழியிலான போராட்டம் ஆயுத வழியில் வன்முறை மூலம் அடக்கப்பட்டதாலேயே தமிழ் இளைஞர்கள் வேறு வழியின்றி ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். போராளிகளை பயங்கரவாதிகள், வன்முறையாளர்கள் என்போர் இந்த வரலாற்று உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.

இவரை “பயங்கரவாதி” என்றார்கள்

இவரை “பயங்கரவாதி” என்றார்கள் இவர் ஆயுதம் ஏந்தியது “வன்முறை” என்றார்கள் இவரை கொன்று அழித்தால் இலங்கை மக்களுக்கு அனைத்து வளமும் கிடைக்கும் என்றார்கள் யுத்தம் முடிந்து 13 வருடமாகிவிட்டது. இலங்கை மக்களுக்கு கிடைத்தது என்ன? ஆனால் இலங்கை அரசோ 74வது சுதந்திரதினத்தை கோலாகலமாக கொண்டாடுகிறது.

இவர்களுக்கு எப்போது சுதந்திரம் கிடைக்கும்?

இவர்களுக்கு எப்போது சுதந்திரம் கிடைக்கும்? செய்தி - இலங்கை 74வது சுதந்திரதினத்தை கோலாகமாக கொண்டாடியது. முப்படைகள் அணிவகுக்க பீரங்கி குண்டுகள் முழங்க ஜனாதிபதி தேசியக்கொடி ஏற்றினார். புலிகளை அழித்தால் மக்கள் வாழ்வில் பாலும் தேனும் ஆறாக ஓடும் என்றீர்களே? ஏன் இன்னும் ஓடவில்லை? புலிகளை அழித்து 13 வருடமாகிவிட்டதே. ஏன் இன்னும் இவர்களுக்கு ஒரு வீடு கிடைக்கவில்லை? நல்ல உடை உணவு கிடைக்கவில்லை? இவர்கள் ஒரு நாளைக்கு பத்து மணி நேரத்திற்கு மேலாக வாரத்தில் ஏழு நாட்களும் உழைக்கிறார்கள். ஆனாலும் இவர்கள் தலைமீது எப்படி 58 பில்லியன் டாலர் கடன் வந்தது? பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் 3 லட்சம் ரூபா கடனுடன் பிறக்கிறது என்கிறீர்களே, அப்படியென்றால் அந்த பணம் எல்லாம் எங்கேயடா போயிற்று?

மக்கள் என்றும் மகத்தானவர்களே!

மக்கள் என்றும் மகத்தானவர்களே! கொட்டும் பனியில் இனப்படுகொலைக்கு நீதிகேட்டு இவர்கள் ஜெனிவாவுக்கு சென்றபோது தாயகத்தில் இருந்து வந்திருந்த சுமந்திரன் நடந்தது இனப்படுகொலை அல்ல என்று கூறினார். இன்று அந்த சுமந்திரனே நிலமீட்பு போராட்டம் என்று குருந்தூர் மலைக்கு எழுச்சிப் பயணம் செல்கிறார். பல்கலைக்கழக மாணவர்கள் சுதந்திரதினத்தை கரிநாளாக அறிவித்தபோது அப்படி கூறுவது தவறு என்று சொல்லி தன் மனைவியுடன் சுதந்திரதினவிழாவில் பங்குபற்றிய சுமந்திரன் இப்போது அதே சுதந்திரநாளில் போராட்டம் நடத்துகிறார். அதுமட்டுமல்ல “ நசிந்து காலடியில் கிடவோம்.பொங்கியெழுந்தினிப் போராடுவோம்” என்றும் அறிவித்திருக்கிறார். சுமந்திரனின் இந்த அதிசய மாற்றத்தை நிகழ்த்திக் காட்டியிருப்பவர்கள் தமிழ் மக்களே. அவர்கள் என்றும் மகத்தானவர்களே. போராட்டம் அனைத்து தமிழ்பேசும் மக்களையும் ஒன்றிணைப்பதைக் கண்டு சிங்கள அரசு அச்சமடைகிறது. ஆனால் போராட்டத்தைக்காட்டி புலம்பெயர் நாடுகளில் அகதி அந்தஸ்து பெற்ற சிலர் “ போராட்டத்தினால் என்ன பயன்?” என்று நக்கலாக கேட்கிறார்கள். வெகுவிரைவில் தமிழ் மக்கள் இவர்களுக்கும் உரிய பதிலை வழங்குவார்கள்.

சம்பந்தர் ஐயா

•சம்பந்தர் ஐயா உறக்கத்தில் இருந்து எழுந்துவிட்டாரா? காணி அபகரிப்புதான் தமிழர் எதிர்நோக்கும் பெரிய ஆபத்து என்று சம்பந்தர் ஐயா கூறியுள்ளார். தமிழர் காணிகள் அபகரிக்கப்படுகின்றது என்பதை கண்டுபிடிக்க சம்பந்தர் ஐயாவுக்கு இத்தனை ஆண்டுகள் பிடித்ததா என்ற ஐயம் எழுகிறது. விசாரித்து பார்த்ததில் ஐயா தங்கியிருக்கும் எதிர்க்கட்சி தலைவருக்குரிய சொகுசு பங்களாவை பறிக்கும்படி சில சிங்கள எம்.பிகள் ஜனாதிபதியிடம் கோரியுள்ளனராம். அதை அறிந்த ஐயா இப்படி ஒரு அறிக்கை விட்டதாக கூறுகிறார்கள். தமிழர் நிலம் பறிபோவதை ஐயா தாங்குவார். ஆனால் சொகுசு பங்களா பறிபோவதை ஐயாவால் தாங்க முடியாது.

தோழர் தமிழரசன் பாதையில்

தோழர் தமிழரசன் பாதையில் தமிழ்நாடு விடுதலைக்காக பயணித்த தமிழ்த்தேசியப் போராளிகள் தோழர் திருச்செல்வம் தோழர் காளை தோழர் தமிழரசன் கலை தோழர் சான் மார்ட்டீன் தோழர் கார்த்தி தோழர் கவியரசன் ஆகியோர் ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்து எதிர்வினையாற்றிய வழக்கில் 2014 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 9ஆம் தேதி கைது செய்யப்பட்டார்கள். 8 ஆண்டுகள் சிறைக்கொடுமையை அனுபவித்த இத் தோழர்கள் புதுவை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் விடுதலை ஆகிறார்கள். அவர்களை வாழ்த்தி வரவேற்போம்

நீ ஊமையாக இருக்கும்வரை

நீ ஊமையாக இருக்கும்வரை உலகம் செவிடாகவே இருக்கும். கறுப்பு உடை அணிந்து கறுப்பு கொடி பிடித்து இலங்கையின் சுதந்திரநாள் தமக்கு கரிநாள் என தமிழ் மக்கள் உரத்து குரல் எழுப்பியிருக்கிறார்கள். எந்த முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை நடத்தப்பட்டதோ அந்த முள்ளிவாய்க்காலில் திரண்டு நின்று மக்கள் கூறியிருக்கிறார்கள். இதற்கு சர்வதேசம் என்ன பதில் தரப்போகிறது

ஓடாத மானும் போராடாத இனமும்

•ஓடாத மானும் போராடாத இனமும் வாழ முடியாது முள்ளிவாய்க்காலில் போராட்டம் லண்டனில் போராட்டம் பிரான்சில் போராட்டம் கனடாவில் போராட்டம் தமிழ் மக்கள் இருக்கும் இடமெல்லாம் போராட்டம்

சம்பந்தர் ஐயாவை

•சம்பந்தர் ஐயாவை எதை சொல்லி வாழ்த்துவது? சம்பந்தர் ஐயாவின் 89வது பிறந்தநாள் இன்று ஆகும். காது கேட்கவில்லை. கண் தெரியவில்லை. மற்றவர் உதவி இன்றி எழுந்து நடமாடக்கூட முடியவில்லை. ஆனாலும் பதவியை விட்டு ஒதுங்க இன்னும் அவருக்கு மனம் வரவில்லை. வவுனியாவில் பெண்கள் அவரது உருவப் பொம்மையை எரித்தார்கள். கிளிநொச்சியில் மண்ணை வாரி எறிந்து தூற்றினார்கள். யாழ்ப்பாணத்தில் “செத்துப்போ” எனத் திட்டித் தீர்த்தார்கள். ஆனாலும் கொஞ்சம்கூட வெட்கமின்றி பதவியை விடாமல் கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறார். ஒருவர் எத்தனை தவறு செய்திருந்தாலும் அவரது மரணம் அவர் தவறுகளை மன்னித்துவிடும்; என்பார்கள். ஆனால் அந்த மரணம்கூட சம்பந்தர் ஐயாவுக்கு மன்னிப்பை பெற்று தரப்போவதில்லை. ஒவ்வொரு தீபாவளிக்கும் அடுத்த வருடம் தீர்வு வந்துவிடும் என்று கொஞ்சம்கூட கூச்சமின்றி அறிக்கை விட்டுக்கொண்டிருந்தார். சோத்தில் கொஞ்சமாவது உப்பு போட்டு தின்பவராக இருந்தால் கூறியபடி தீர்வு பெற்று தந்திருக்க வேண்டும். இல்லையேல் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிபோன பின்பும் அதன் சொகுசு மாளிகைiயை கெட்டியாக வைத்திருக்கும் இப்படிப்பட்ட ஒரு மனிதரை என்ன சொல்லி வாழ்த்துவது?

மோசடிகளுக்கு எதிராக குரல் கொடுத்த

மோசடிகளுக்கு எதிராக குரல் கொடுத்த டாக்டர் பிரியந்தினி கமலசிங்கத்திற்கு அதிகாரத்தில் உள்ளவர்கள் அச்சுறுத்தல் விடுகின்றனர். இதனை வன்மையாக கண்டிப்பதோடு டாக்டர் பிரியந்தினிக்கு ஆதரவாக இருப்போம். ஒரு டாக்டருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் கதி என்ன?

இரண்டு நிகழ்வுகள்

இரண்டு நிகழ்வுகள் இரண்டும் தமிழர் வாழும் வடபகுதியில் நடந்துள்ளன. இரண்டிலும் தமிழர்களே பங்குபற்றியுள்ளனர். ஒன்று, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நீதி கோரி நடத்திய நிகழ்வு மற்றொன்று, கோத்தபாயாவுக்காக நடாத்தப்பட்ட சுதந்திரதினக் கொண்டாட்டம். தமிழ் மக்கள் சுதந்திரதினம் கொண்டாடினார்கள் என்றால் கோத்தபாயாவே நம்பமாட்டார். அப்படியிருக்க இந்த கூத்தை உலகம் நம்பிவிடுமா? ராணுவ புலனாய்வை நம்பி சிங்கக்கொடி பிடித்து சென்ற அந்த நாலு தமிழருக்கும் ஒரு வேண்டுகோள்! உங்களுக்கு வேலை தருவதாகவோ அல்லது காணி தருவதாகவோ கூறி கூட்டிச் சென்றிருக்கலாம். ஆனால் தன்னை சிங்கள பௌத்தன் என்று கூறும் கோத்தாவுக்கு எதிராக அதே சிங்கள பௌத்த மாணவர்கள் கொழும்பில் கோத்தாவின் கொடும்பாவி எரித்து போராட்டம் செய்துள்ளனர். தனக்கு வோட்டு போட்ட சிங்களவர்களுக்கே ஏதும் செய்யாத கோத்தா உங்களுக்கு ஏதும் தருவாரா? கொஞ்சம் யோசியுங்கள்.

மறப்பது மக்கள் வழமை

மறப்பது மக்கள் வழமை அதை நினைவூட்டுவது எமது கடமை நாய் நன்றியுள்ள மிருகம்தான். ஆனால் அது தன் இனத்திற்கு விசுவாசமாக இருப்பதில்லை அது எலும்புத் துண்டை வீசும் எஜமானுக்கே விசுவாசமாக இருக்கும். அது எப்போதும் இறைச்சித்துண்டுக்காக வாலாட்டும் அது நடுக்கடலில் போனாலும் நக்கித்தான் குடிக்கும் எனவே அதற்கு “கம்பவாணர் அருணகிரிநாதர்” என்னும் பட்டம் வழங்கப்பட்டது அதென்ன “கம்பவாணர் அருணகிரிநாதர்” ? அப்பாவியாய் கேட்டான் ஒருவன். அப்படியென்றால் “தரம் மிக்க போராளி” என்று பொருளாம் என்றேன் நான். “அடி செருப்பாலே நாயே” என்றான் அந்த ஒருவன் கோபத்தோடு. நாயைத் திட்டுகிறானா அல்லது நாயக்கு பட்டம் கொடுத்தவனை திட்டுகிறானா என்று தெரியவில்லை இவன் ரொம்ப கோவக்காரனாக இருக்கிறான் என்று நினைத்தபடி மௌனமானேன் நான்.. குறிப்பு - இதை படிக்கும்போது சுமந்திரன் நினைவுக்கு வந்தால் அதற்கு அட்மின் பொறுப்பு இல்லை.

தோழர் சண் அவர்களை நினைவில் கொள்வோம்!

•தோழர் சண் அவர்களை நினைவில் கொள்வோம்! 08.02.2022யன்று தோழர் சண் அவர்களின் 29 வது நினைவு தினம் ஆகும். இலங்கையில் மாவோயிசத்தை அறிமுகப்படுத்தி வளர்த்தமைக்காக அவரை நினைவுகூர வேண்டும். இலங்கையில் பாராளுமன்ற பாதையை நிராகரித்து ஆயுதம் ஏந்திய மக்கள்யுத்தப்பாதையை முன்வைத்தமைக்காக நினைவு கூர வேண்டும். “அடிக்கு அடியே” சாதீய கொடுமையில் இருந்து விடுபட வழி வகுக்கும் என கூறி தீண்டாமைக்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை அளித்தமைக்காக நினைவு கூர வேண்டும். இலங்கையில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்த ஒரு கம்யுனிஸ்ட் தலைவர் என்பது மட்டுமன்றி இனப்பிரச்சனைக்கு தீர்வாக பிரதேச சுயாட்சியை முன்வைத்தவர் என்பதால் நினைவு கூர வேண்டும். அவர் பற்றிய சில குறிப்புகள். •வறிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் நன்கு படித்து பட்டதாரியானவர். தமிழ் சிங்களம் ஆங்கிலம் மூன்று மொழிகளிலும் சிறந்த புலமை மிக்கவர். •அவர் விரும்பியிருந்தால் ஒரு நல்ல உத்தியோகம் பெற்று வசதியான வாழ்வு வாழ்ந்திருக்கலாம் •அல்லது பின்னரும்கூட பல கம்யுனிஸ் தலைவர்கள் தேர்தல் பாதையில் சென்று அமைச்சு பதவிகள் பெற்றதுபோல் இவரும் பெற்றிருக்கலாம். •ஆனால் அவர் இறுதிவரை உறுதியான புரட்சியாளராக வாழ்ந்து மறைந்தார். •அவரது திருமணம்கூட கட்சி தலைவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஒரு விதவையையே திருமணம் செய்;தார். •சீனாவின் உதவி கிடைக்காமல் போய்விடும் என்று தெரிந்தும் சீனாவின் தவறுகளை விமர்சித்தவர். •மாசேதுங் உயிருடன் இருக்கும்போதே சீனா இலங்கை அரசுக்கு செய்த ஆயுத உதவிகளை கண்டித்தவர். சீனா முதலாளித்தவ பாதைக்கு திரும்புகிறது என்று கூறி அதனுடனான உறவுகளை கைவிட்டவர். •தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியபோது இலங்கை அரசு அவர்களை “பயங்கரவாதிகள்” என்று அழைத்தது. அமிர்தலிங்கம் உட்பட தமிழர்விடுதலைக்கூட்டணியினர் “பொடியன்கள்” என்று அழைத்தனர். ஆனால் தோழர் சண்தான் முதன் முதலில் அவர்களை “போராளிகள்” என்று அழைத்தார். (அதுவும் சிறிமாவோ பண்டாரநாயக்கா, கொல்வின் ஆர்டி சில்வா, என்எம் பெரராரோ பீட்டர் கெனமன் அமிர்தலிங்கம் இருந்த மேடையில் கொழும்பில் சிங்கள மக்கள் மத்தியில் தைரியமாக கூறினார்.) •தமிழ் சிங்கள மற்றும் தோட்ட தொழிலாளர்களுக்காக பல தொழிற்சங்கங்களை நிறுவி அவர்களுக்காக இலவசமாக வழக்குகள் பேசி வென்று கொடுத்தவர். (1)ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்கள் இந்திய ஆதரவுடன் அடுத்த பொங்கலுக்கு தமிழீழம் மலரும் என்று கூறியபோது “இந்தியாவை நம்ப வேண்டாம். இந்தியா ஒரு போதும் தமிழீழம் பெற்று தராது. மாறாக போராளிகளை அழிக்கும்” என்று கூறியவர். (2)இலங்கையில் சமசமாஜக்கட்சி டிராட்சியவாதிகளுக்கும் , தேர்தல் பாதையில் பயணிக்கும் திரிபுவாத கம்யுனிஸ்டுகளுக்கும் தோழர் சண் கொடுத்த தத்துவார்த்த அடி இன்னும் அவர்களால் எழும்ப முடியாத அடியாக இருக்கிறது. (3)இலங்கையில் இனி யார் புரட்சியை செய்தாலும் அவர் முன்னெடுத்த புதிய ஜனநாயகப்புரட்சியில் இருந்தே தொடர வேண்டும்.. தோழர் சண் அவர்களை மறுத்து விட்டு யாராலும் புரட்சி செய்ய முடியாது. தோழர் சண் இலங்கையில் ஒரு மாபெரும் தலைவர் மட்டுமல்ல மகத்தான தலைவரும்கூட. அவரை நினைவு கூர்வது எமது கடமையாகும். குறிப்பு - இத்தகைய மகத்தான ஒரு தலைவரின் இறுதி நாட்களில் அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தமை என்னால் மறக்க முடியாதது. அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவரது “ ஒரு கம்யுனிச போராளியின் அரசியல் நினைவுகள்” நூலை 1990ல் சென்னையில் அச்சடித்து வெளியிட்டிருந்தேன்.

நடந்தது இனப்படுகொலை

நடந்தது இனப்படுகொலை என டப்ளின் தீர்ப்பாயம் கூறியுள்ளது. நடந்தது இனப்படுகொலை என்று பிறீமன் தீர்ப்பாயம் கூறியுள்ளது நடந்தது இனப்படுகொலை என பேராசிரியர் பொயில் கூறியுள்ளார் நடந்தது இனப்படுகொலை என வடமாகாண சபை தெரிவித்துள்ளது நடந்தது இனப்படுகொலை என தமிழ்நாடு சட்டசபை தெரிவித்துள்ளது ஆனால் நடந்தது இனப் படுகொலை அல்ல என்கிறார் சுமந்திரன். தான் சட்டம் படித்ததால் தனக்கு மட்டும் அது தெரிகிறது என்கிறார். சரி, மேலே கூறிய அத்தனை பேருக்கும் சட்டம் தெரியாது என்றே வைத்துக் கொள்வோம். இப்போது எமது கேள்வி என்னவென்றால் இனப்படுகொலை என்று நிரூபிப்பதற்கான ஆதாரங்களை ஏன் சுமந்திரனால் இதுவரை சமர்ப்பிக்க முடியவில்லை? நடந்தது இனப்படுகொலை என்பதை தானும் எற்றுக்கொள்வதாக கூறுகிறார். சட்டம் படித்த சுமந்திரன் அதற்குரிய ஆதாரங்கள் இல்லாமல் நிச்சயம் இனப்படுகொலை என்று ஒத்துக்கொள்ளமாட்டார். எனவே தனக்கு தெரிந்த அல்லது தனக்கு கிடைத்த அந்த ஆதாரங்களை ஏன் சுமந்திரன் சமர்ப்பிக்க முயலவில்லை? இதுவரை பல ஆதாரங்களை தானே சமர்ப்பித்துள்ளதாகவும் கூறுகிறார். அப்படியென்றால் தேவையான ஆதாரங்களை ஏன் வழங்கவில்லை? அல்லது, இனப்படுகொலை என்பதற்கு என்ன ஆதாரங்கள் வேண்டும் என்பதை மற்றவர்களுக்குகூறி மற்றவர்களையாவது அவற்றை சமர்ப்பிக்க வைத்திருக்கலாம் அல்லவா? கடந்த 13 வருடமாக நடந்தது இனப்படுகொலை என நிரூபிப்பதற்கு வேண்டிய ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை என்றால் அதற்கான பொறுப்பும் சுமந்திரன் மீதுதானே இருக்கிறது என்பதை யாராவது அவருக்கு புரிய வையுங்கள்.

இவர்,

இவர், ஈழத் தமிழர்களை முழுமையாக ஆதரிப்பதாக கூறுகிறார். ஒரு ஈழத் தமிழனையே தன் தலைவர் என்கிறார். இனி ஈழத் தமிழனை யாராவது அடித்தால் திருப்பி அடிப்பேன் என்கிறார் இன்று தமிழகத்தில் இருந்து ஈழத் தமிழருக்கு ஆதரவாக எழும் முதல் குரலாக இவர் குரல் இருக்கிறது தன்னை கடலில் வீசி எறிந்தால் கட்டுமரமாக மாறி தமிழரை காப்பேன் என ஒரு தலைவர் கூறினார். ஆனால் அந்த கட்டு மரத் தலைவர் காப்பாற்ற வரவில்லை. தத்தளிக்கும் ஈழத் தமிழருக்கு சிறு குச்சியாக இன்று இவர் இருக்கிறார். இவரை தற்போது சுமந்திரன் தமபிகள் கடுமையாக விமர்சிக்கின்றனர். மன்னிக்கவும் விமர்சிக்கவில்லை, அவதூறு செய்கின்றனர். இவரை ஆரியமும் திராவிடமும் எதிர்ப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் சுமந்திரன் தம்பிகள் ஏன் எதிர்க்கின்றனர்? உண்மையில் சுமந்திரன் தம்பிகள்; எதிர்ப்பது இவரை அல்ல. சுமந்திரன் தம்பிகள் எதிர்ப்பது தமிழ்த்தேசியத்தை. பரஸ்பரம் ஆதரவு என்ற நிலையில் இருந்து சேர்ந்து பயணித்தல் என்ற அடுத்த கட்டத்திற்கு தமிழ்த்தேசியம் நகருவது இலங்கை இந்திய அரசுகளுக்கு மட்டுமல்ல சுமந்திரன் தம்பிகளுக்கும் அச்சத்தைக் கொடுக்கிறது.

மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம்

•மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் கொலைக்கு எப்போது நீதி கிடைக்கும்? இவர் புலி உறுப்பினர் இல்லை. இவர் ஆயுதம் ஏந்தி போராடவில்லை. இவர் தமிழ் மக்களால் வாக்கு அளித்து தெரிவு செய்யப்பட்ட தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர். ஆனாலும் இவர் சிங்கள அரசால் போர் நிறுத்த காலகட்டத்தில் 07.02.2005 யன்று கொல்லப்பட்டார். 17 வருடங்கள் கழிந்துவிட்டன. இன்னும் இவர் கொலைக்கு நீதி வழங்கப்படவில்லை. இவர் மட்டுமல்ல ஜோசப்பரராயசிங்கம், ரவிராஜ் போன்ற தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் இவ்வாறு சிங்கள அரசால் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் கொலைகளுக்கே சிங்கள அரசு இதுவரை நீதி வழங்கவில்லை. தமது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கொலைக்கே நீதி பெறாத சுமந்திரன் சாதாரண தமிழ் மக்களின் கொலைக்கு நீதி பெற்று தருவார் என எப்படி நம்புவது? கடந்த ஆட்சியில் தமக்கு சொகுசு பங்களா, சொகுசு வாகனம், சிங்கள பொலிஸ் பாதுகாப்பு என்றெல்லாம் கேட்டு வாங்கிய சம்பந்தர் ஐயாவும் சுமந்திரனும் தமது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கொலைக்கு நீதியை பெறவில்லை. தமக்கு வாக்களித்தால் தீர்வு பெற்று தருவோம் என்றவர்கள் இப்போது வந்து பயங்கரவாத சட்டத்தை நீக்க கையெழுத்து போடுமாறு மக்களிடம் கேட்கின்றனர். கடந்த ஆட்சியில் இந்த மக்கள் கையெழுத்து இல்லாதபடியால்தான் அச் சட்டத்தை உங்களால் நீக்க முடியாமற் போனதா சுமந்திரன் அவர்களே? என்னே கொடுமை இது?

கடந்த தேர்தலில் மனோ கணேசனுக்கு

கடந்த தேர்தலில் மனோ கணேசனுக்கு ஆதரவாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கொழும்பில் போட்டியிடவில்லை. அந்தளவுக்கு இணைந்து இணக்க அரசியல் செய்தார்கள். ஆனால் இப்போது தமிழர் நலனுக்காக இந்திய பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் இருந்து தான் விலகியமைக்கு தமிழரசுக்கட்சியே காரணம் என்று மனோ கணேசன் கூறுகிறார். தேர்தலுக்கு இணைந்து செயற்பட்டவர்களால் ஏன் இப்போது ஒரு கடிதம் எழுதுவதில் இணைந்து செயற்படமுடியவில்லை? இதுதானா சம்பந்தர் ஐயாவின் இணக்க அரசியல்? அல்லது இதுதானா அவரின் சாணக்கியம்?

200 ரூபா திமுக உடன்பிறப்புகள்

200 ரூபா திமுக உடன்பிறப்புகள் ஈழத் தமிழருக்கு எதிராக அவதூறு செய்கின்றனர் என்று நாம் கூறியபோது அதற்கு சிலர் ஆதாரம் கேட்டனர். இப்போது ஸடாலினே தம் உடன்பிறப்புகளிடம் ஈழத் தமிழருக்கு எதிராக எழுதுவதை நிறுத்தும்படி கூறியதன் மூலம் இதுவரை எழுதியவர்கள் திமுக உடன்பிறப்புகள் என்பதை வெளிப்படையாக ஒத்துக்கொண்டுள்ளார். அறிக்கை விடுவதன்மூலம் உடன்பிறப்புகள் எழுதுவதை நிறுத்த முடியாது. மாறாக உண்மையில் நிறுத்த வேண்:டும் என்று ஸ்டாலின் விரும்பினால் அவர்களுக்கு பணம் கொடுப்பதை நிறுத்தினாலே போதும்.

ஈழத் தமிழரும் தமிழக தமிழரும்

ஈழத் தமிழரும் தமிழக தமிழரும் ஒன்றுபட வேண்டும் என்று ஸ்டாலினும் சுமந்திரனும் ZOOM மீட்டிங் வைத்து கூறுகின்றனர். ஆனால் தமிழக அரசியல் பற்றி ஈழத் தமிழர் பேசக்கூடாது என்று 200 ரூபா திமுக உடன்பிறப்புகளும் சுமந்திரன் தம்பிகளும் கிளப்கவுசில் கூறுகின்றனர். 200 ரூபா திமுக உடன்பிறப்புகளும் சுமந்திரன் தம்பிகளும் சந்திக்கும் புள்ளி இது. மஞ்சள் பையுடன் திருட்டு ரயிலில் வந்த வந்த கலைஞர் குடும்பத்திற்கு 45000 கோடி ரூபா சொத்து எப்படி வந்தது என்று கேட்காத சுமந்திரன் தம்பி மூப்பனார் வீட்டு கல்யாணத்தில் நடனமாடிய நடிகை ஜெயா அம்மையாருக்கு 30000 கோடி ரூபா சொத்து எப்படி வந்தது என்று கேட்காத சுமந்திரன் தம்பி சீமான் கூறும் இட்லிக்குள் இறைச்சிக்கறி எப்படி வந்தது என்று கிளப்கவசில் கேட்கிறார். பரவாயில்லை வாய் இருக்கு என்று கேட்கிறார். கேட்கட்டும். ஆனால் எந்நேரமும் சீமானை விமர்சிக்கும் இந்த சுமந்திரன தம்பிகள், சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளின் விடுதலை பற்றியோ, 39 வருடமாக இருக்கும் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்பது பற்றியோ, அகதிகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி வாய்ப்பாவது வழங்க வேண்டும் என்பது பற்றியோ, ஏன் ஒருபோதும் பேசுவதில்லை? ஆனால் இவை பற்றியெல்லாம் சீமான் பேசுகிறார்.

அமிர்தலிங்கத்தின் மகன்

அமிர்தலிங்கத்தின் மகன் பகிரதன் டிவி ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் அவர் பல தவறான கருத்துகளை மக்களிடத்தில் பரப்ப முனைகிறார். இந்திராகாந்தி போராளிகளுக்கு பயிற்றி மற்றும் ஆயுதம் வழங்க தீர்மானித்தபோது டில்லி சென்று அதை செய்ய வேண்டாம் எனக் கூறியவர் அமிர்தலிங்கம். ஆனால் அதே அமிர்தலிங்கம் தன் மகன் பகிரதன் ஆயுதபோராட்ட இயக்கம் ஆரம்பித்தபோது அதனை தடுக்கவில்லை. மதுரையில் மருத்துவக்; கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த பகிரதன் TENA என்ற இயக்கத்தை ஆரம்பித்தார். அவர் தன் படிப்பை கைவிடவில்லை. ஆனால் இளைஞர்களை படிப்பை விட்டிட்டு போராட வரும்படி அழைத்தார். தனது இயக்கத்திற்கு ஆள் எடுத்து அனுப்புமாறு மாவை சேனாதிராசாவுக்கு கடிதம் அனுப்பினார். மாவை சேனாதிராசா தானும் போகவில்லை. தன் பிள்ளைகளையும் அனுப்பவில்லை. மாறாக ஊரான் வீட்டு பிள்ளைகளை பிடித்து அனுப்பினார். இதேவேளை பகிரதனின் கடிதம் கொண்டு சென்ற ஒருவர் மன்னார் தள்ளாடி ராணுவ முகாம் செக்கிங்கில் பிடிபட்டார். இந்த இளைஞர் கைது மற்றும் கடித விபரம் யாவும் டிவி மற்றும் பத்திரிகைகளில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அதிசயம் என்னவெனில் அந்த இளைஞன் விடுதலை செய்யப்பட்டு மலேசியாவுக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டான். அந்த இளைஞன் அமிர்தலிங்கத்தின் உறவினர் என்பதால் அமிர்தலிங்கம் போனில் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனாவுடன் பேசி விடுதலை செய்வித்ததாக அப்போது தெரியவந்தது. அமிர்தலிங்கம் தனது உறவினரை விடுவித்தபோது பல அப்பாவி தமிழ் இளைஞர்கள் சிறையில் வாடிக் கொண்டிருந்தனர். அவர்களின் விடுதலைக்காக அவர் ஒருபோதும் பேசவில்லை. பயிற்சிக்காக இந்தியா அழைத்து வரப்பட்ட இளைஞர்களை பகிரதன் கவனிப்பதில்லை. தமக்கு உணவு கூட ஒழுங்காக தரப்படவில்லை என்று கூறி அத்தனை இளைஞர்களும் மதுரையில் புலிகள் இயக்கத்தில் சென்று சேர்ந்துவிட்டார்கள். இவ்வாறு பகிரதனின் TENA இயக்கம் முடிவுக்கு வந்தது. இதுதான் அவரின் ஆயுதப் போராட்ட வரலாறு. இதையே அவர் தானும் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தவன் என பேட்டியில் குறிப்பிடுகிறார். தனது படிப்பை கைவிடாமல் படித்துக்கொண்டே இயக்கம் நடத்திய தலைவர் என்ற பெருமை பகிரதனுக்கு மட்டுமே உண்டு. அமிர்தலிங்கம் ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை என்று பகிரதன் தன் பேட்டியில் கூறியிருக்கிறார். இது குறித்த சில விபரங்கள் அடுத்த பதிவில் தருகிறேன்.

நான்கு பக்கத்தையும்

நான்கு பக்கத்தையும் அடைத்துவிட்டு பூனையின் முன் போய் பார் அங்கு ஒரு புலியை காண்பாய்.

போராடுவதால் பயன் உண்டா?

போராடுவதால் பயன் உண்டா? நடந்தது நடந்து விட்டது. இனி நடந்ததை நினைத்து போராடுவதில் பயன் இல்லை என்று சிலர் கூறுகிறார்கள். நாலுவகை படைகள் கட்டி போராடிய புலிகளாலேயே வெற்றி பெற முடியவில்லை. இனி எப்படி போராடி வெற்றிபெற முடியும் என்று வேறு சிலர் கேட்கிறார்கள். இதெல்லாம் கடவுள் வகுத்த விதி. எனவே கடவுள் மேல் பாரத்தை போட்டுவிட்டு பேசாமல் இருப்பதே சிறந்தது என்று மேலும் சிலர் கூறுகிறார்கள். இவர்கள் எல்லாம் கூறுவது சாரம்சத்தில் போராடுவதால் பயன் இல்லை எனவே போராடாமல் இருக்க வேண்டும் என்பதையே. ஆனால் ஓடாத மான் எப்படி வாழ முடியாமல் இறந்துவிடுமோ அதேபோல் போராடாத இனம் இந்த உலகில் வாழ முடியாது அழிந்துவிடும் என்பதே உண்மை. எனவே தமிழ் இனம் இப்போது வரை அழியாமல் வாழ்கிறது எனில் அது கடந்த காலங்களில் போராடி வந்திருக்கிறது என்பது மட்டுமன்றி இனியும் அழிந்துவிடாமல் வாழ வேண்டும் எனில் அது தொடர்ந்து போராட வேண்டும் என்பதே உண்மை. ஒரு குழந்தை இந்த உலகில் பிறந்ததும் செய்யும் முதல் போராட்டம் அழுகை. இவ்வாறு போராட்டம் என்பது பிறப்பு முதல் இறப்புவரை ஒரு மனிதன் வாழ்வில் அத்தியாவசியமாகிவிட்ட பின்பு போராட்டத்தால் பயன் உண்டா என்ற கேள்வி அர்த்தமற்றதாகவே இருக்கும். தமிழர் உயிரை விடுவார்களேயொழிய போராட்டத்தை ஒருபோதும் விட்டுவிட மாட்டார்கள். போராட்ட உணர்வு என்பது தமிழரின் உயிருடனும் உடலுடனும் இரண்டறக் கலந்து இருப்பதால்தான் எத்தனை முறை வீழ்ந்த போதும் அத்தனை முறையும் மீண்டும் எழுந்திருக்க முடிகிறது.

இதுவரை சீமான் மீது அவதூறு

இதுவரை சீமான் மீது அவதூறு செய்து வந்த சுமந்திரன் தம்பிகள் இன்று தோழர் தமிழரசன் மீதும் அவதூறு செய்ய ஆரம்பித்துள்ளனர். தோழர் தமிழரசன் பாலத்திற்கு குண்டு வைத்தவராம் கொலை காரனாம். கொள்ளைக்காரனாம். இதெல்லாம் தமிழக காவல்துறையும் கியூ பிரிவு உளவுதுறையும் காலம் காலமாக செய்து வந்த அவதூறுகள்தான். ஆனால் அதையே சுமந்திரன் தம்பிகளும் செய்வார்கள் என எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் தோழர் தமிழரசன் பாலத்திற்கு குண்டு வைத்ததே ஈழத் தமிழருக்காகத்தான் . தமிழீழத்தை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் என்று கோரியே அவர் பாலத்திற்கு குண்டு வைத்தார். அன்று அவர் கோரியபடி தமிழீழத்தை இந்திய அரசு அங்கீகரிக்க வைத்திருந்தால் இன்று தீர்வு 13 ஐக் கேட்டு கடிதம் எழுதும் அவலம் வந்திருக்காது. தமிழ்த்தேசியம் ஆரியத்திற்கும் திராவிடத்திற்கும் மட்டுமல்ல சுமந்திரன் தம்பிகளுக்கும் அச்சத்தைக் கொடுக்கிறது.

அவரு மஞ்சள் பையுடன் திருட்டு

அவரு மஞ்சள் பையுடன் திருட்டு ரயிலில் வந்;தவர் என்று ஏன் நெகட்டிவ்வாக பார்க்கிறே, அவர் அந்த ரயிலை சுருட்டாமல் விட்டாரேன்னு பொசிட்டிவ்வாக பார்க்கலாம்தானே? 😀😀 குறிப்பு – கலைஞர் குடும்பத்தின் சொத்து மதிப்பு நாற்பத்தையாயிரம் கோடி ரூபா என்கிறார்கள். என்ன தொழில் இத்தனை லாபம் கொடுத்தது என்பதை அவர்கள் கூறினால் மற்றவர்களும் அதனை செய்யலாமே.

சுமந்திரன் தம்பிகள்

சுமந்திரன் தம்பிகள் - சேர்! இந்த முறை ஐ.நா சென்று என்ன செய்யப் போகிறீர்கள் என்று கிளப்கவுசில் கேட்கிறாங்கள் சுமந்திரன் - இதுக்கு முன்னர் போன போதெல்லாம் என்ன பண்ணியிருக்கிறேன்? சுமந்திரன் தம்பிகள் - தமிழருக்கு ஒன்னும் பண்னல சேர். சுமந்திரன் - அதைத்தான்டா இம்முறையும் செய்வன். போய் சொல்லுங்கடா. சுமந்திரன் தம்பிகள் - ??????

பாட்டியுடன் ஒரு (கற்பனை) உரையாடல்

•பாட்டியுடன் ஒரு (கற்பனை) உரையாடல் கேள்வி- பாட்டி! ஆயுதம் தூக்கி போராடுவது பயங்கரவாதம் என்கிறார்களே? பாட்டி- சரி, தூக்குவது தவறு என்றால் தூக்க வைத்தது அதைவிட தவறு அல்லவா? முதல்ல போய் தூக்க வைத்தவனிடம் கேள். அப்புறம் என்னிடம் வா. கேள்வி- என்ன பாட்டி சொல்லுகிறீர்கள்? பாட்டி- கிழவி என்றும் பாராமல் பாலியல் வல்லுறவு செய்யிறாங்கள். சிறு குழந்தைகளைக்கூட சுட்டுக் கொல்கிறாங்கள். விமானத்தில் வந்து குண்டு போடுகிறாங்கள். நான் என்ன செய்ய சொல்லுறாய்? கேள்வி- நீங்க அகிம்சை வழியில் போராடலாம் அல்லவா? பாட்டி- அகிம்சை வழியில்தானே தந்தை செல்வா போராடினார். அவருக்கு என்னத்தைக் கொடுத்தாங்க? கேள்வி – அகிம்சை வழியில்தானே இந்தியா சுதந்திரம் அடைந்தது? பாட்டி- இந்தியா எந்த வழியில் சுதந்திரம் அடைந்தது என்று எனக்கு தெரியாது. ஆனால் அதே இந்திய அரசு அன்னை பூபதி உண்ணாவிரதம் இருந்து இறந்தபோது அந்த அகிம்சைப் போராட்டத்தை மதிக்கவில்லையே? கேள்வி- அப்ப, மகாத்மா காந்தி சொன்னது தவறா? பாட்டி- காந்தி வெள்ளைக்கார ஆட்சிக்கு எதிராக சொன்னது இப்ப உள்ள கொள்ளைக்கார அரசுகளுக்கு பொருந்துதில்லையே? காந்தி இப்போது இருந்தால் அவர் கையில் ஊன்று தடி இருக்காது அவர் கையிலும் துப்பாக்கி இருந்திருக்கும். கேள்வி- என்னது, காந்தியும் ஆயுதம் ஏந்தியிருப்பாரா? பாட்டி- ஆம். முட்ட வரும் மாட்டை கட்டியணைக்க முடியாது. எட்டி உதைக்க வேண்டும். அதுபோல் பாலியல் வல்லுறவு செய்ய வரும் காமுகனை கை நகத்தினாலாவது தாக்குங்கள் என்றுதானே அவர் சொல்லியிருக்கிறார். கேள்வி- ஆயுதம் தூக்கியவர்களை பயங்கரவாதிகள் என்றுதானே நம்மட சம்பந்தர் ஐயாவும் கூறுகிறார். பாட்டி- அவர் மகள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டிருந்தால், அவர் வீட்டின் மீது கொத்துக் குண்டு வீசப்பட்டிருந்தால் ஒருநாளாவது பதுங்கு குழியில் வாழ்ந்திருந்தால் யார் பயங்கரவாதி என்று அவருக்கு தெரிந்திருக்கும். கேள்வி- இருந்தாலும் இந்த போராட்டம் தேவைதானா? பாட்டி- எனது மூதாதையர் போராடியிருந்தால் இன்று நான் போராட வேண்டி வந்திருக்காது. அதேபோல் நான் என் அடிமைத்தனத்தை என் பரம்பரைக்கு விட்டுச்செல்ல விரும்பவில்லை. கேள்வி- அடுத்த பரம்பரையும் இந்த போராட்டத்தை தொடரும் என நம்புகிறீர்களா? பாட்டி- தம்பி நான் எந்த இயக்கத்தையும் நம்பவில்லை. தலைவர்களையும்கூட நம்பவில்லை. நான் நம்புவதெல்லாம் இந்த போராட்டத்தை மட்டுமே. எனவே இயக்கமோ அல்லது தலைவரோ இல்லாவிட்டாலும்கூட இந்த போராட்டம் தொடரும். கேள்வி- எப்படி ? புரியவில்லையே! பாட்டி- என்ன காரணங்களுக்காக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதோ அதில் ஒன்றுகூட இன்னும் தீர்;க்கப்படவில்லை. எனவே போராட்டத்திற்கான தேவை இருக்கும்வரை அதற்கான போராட்டமும் இருக்கும். குறிப்பு- தமிழ் இனம் மீண்டும் எழுந்து போராடும் என்ற நம்பிக்கையை இத்தகைய பாட்டிகளின் தியாகங்களே உருவாக்குகின்றன. (மீள் பதிவு)

ஈழத்தில் இந்திய ராணுவம் செய்த

ஈழத்தில் இந்திய ராணுவம் செய்த அக்கிரமங்களை மூடி மறைத்து இந்திய தொலைக்காட்சி பொய் பிரச்சாரம் செய்தபோது டிவி பெட்டியை உடைத்து கலைஞர் கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது தமிழ்நாடு விடுதலைப்படையினர் கொடைக்கானல் டிவி டவருக்கு குண்டு வைத்து எதிர்ப்பு தெரிவித்தனர். அதில் தோழர் மாறன் உயிர் இழந்தார். தோழர் தமிழரசன், மாறன் போன்றவர்கள் ஈழத் தமிழருக்காய் செய்த தியாகங்களை மறந்து இன்று அவர்கள்மீது அவதூறு செய்யும் அளவிற்கு சுமந்திரன் தம்பிகள் வந்துள்ளனர் . சுமந்திரன் தம்பிகள், 200 ரூபா திமுக உடன்பிறப்புகள், புலி எதிர்ப்பாளர்கள் அனைவரும் தமிழ்த்தேசியத்தை எதிர்ப்பதில் ஒரு புள்ளியில் இணைகின்றனர்.

•முருகதாசன் மரணம்

•முருகதாசன் மரணம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன? போரை நிறுத்துமாறு கோரி 12.02.2009 யன்று ஜ.நா முன்றலில் முருகதாசன் தனக்குதானே தீயிட்டு மரணமடைந்தார். ஆனால் போர் நிறுத்தப்படவில்லை.மாறாக 40 அயிரம் அப்பாவி தமிழ் மக்கள் முள்ளிவாயக்காலில் கொல்லப்பட்டார்கள். போரை நிறுத்துமாறு தமிழகத்தில் முத்துக்குமார் உட்பட 16 பேர் தீயிட்டு தற்கொலை செய்தார்கள். ஆனால் இந்திய அரசு அதனை கண்டுகொள்ளவும் இல்லை. போரை நிறுத்தவும் இல்லை. மாறாக தமிழின அழிப்பிற்கு பெரும் உதவி புரிந்தது. தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி 3 மணி நேர உண்ணாவிரத நாடகம் அரங்கேற்றினார். ஆனால் போர் நிறுத்தப்படவில்லை. மாறாக அதன்பின்னரே கொடிய கிளாஸ்ரர் குண்டுகள் வீசப்பட்டன. மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டனர். போரை நிறுத்தூமாறு கோரி உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் , சாலை மறியல் செய்தார்கள். சங்கிலி போராட்ம் நடத்தினார்கள். உண்ணாவிரதம் இருந்தார்கள். வெளிநாட்டு அரசுகளிடம் மன்றாடினார்கள். மனிதவுரிமை அமைப்பகளிடம் கரம் கூப்பி வேண்டினார்கள். அனைத்து சாத்வீக வழிகளிலும் மக்கள் கேட்டார்கள். ஆனால் போர் நிறுத்தப்படவில்லை. தமிழ் மக்களின் அழிவு தடுக்கப்படவில்லை. ஆயுதம் தூக்கினால் அது பயங்கரவாதம் என்றவர்கள், மக்கள் ஜனநாயகவழியில் சாத்வீக முறையில் போராடிய போது கண்டு கொள்ளவில்லையே. இதில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன? திலீபன் உண்ணாவிரதம் இருந்தபோது அகிம்சையை போதித்த இந்திய அரசு அதனைக் கண்டு கொள்ளவில்லை. அன்னைபூபதி உண்ணாவிரதம் இருந்தபோது அவர் ஒரு பெண் என்றுகூட இந்திய அரசு இரங்கவில்லை. புலிகள் ஆயுத பலத்தோடு இருந்தபோது தமிழீழம் தவிர அனைத்தையும் தருவதாக கூறிய சந்திரிக்கா பண்டாரநாயக்கா இப்போது புலிகள் இல்லை என்பதை தமிழ் மக்கள் உணர வேண்டும் என்று கூறுகிறார். இதன் அர்த்தம் அதிகாரத்தை பெறுவதில் துப்பாக்கிகள் தீர்மானிக்கிறது என்பதைத் தவிர வேறு என்ன? புலிகள் வெல்லவில்லை என்பதால் ஆயுதப் போராட்டம் வெற்றி பெறாது என்று சிலர் கூற முற்படுகிறார்கள். இன்னும் சிலர் ஒருபடி மேலே சென்று ஆயுதப் போராட்டம் பயங்கரவாதம் என்றும் கூறுகிறார்கள். அவர்களிடம் நாம் கேட்க விரும்புகிறோம், கோப்பாப்பிலவில் மக்கள் அமைதியாக அகிம்சை வழியில் தானே போராடுகிறார்கள். ஆனால் அரசு கண்டு கொள்ளவில்லையே? காணாமல் போனவர்களின் உறவுகள் அமைதியாக அகிம்சை வழியில் தானே 1500 நாளாக போராடுகிறார்கள். அவர்களை அரசு கண்டு கொள்ளவில்லையே? அகிம்சை வழியில் தீர்வு பெற முடியும் என்பவர்கள் இதற்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்? அகிம்சை வழியில் போராடி தமது சொந்த நிலத்தையே திருப்பி பெற முடியாத தமிழ் மக்களுக்கு அகிம்சை வழியில் போராடினால் சமஸ்டி தீர்வு கிடைத்துவிடுமா? இன்று தமிழ் இனவிடுதலைக்காக சிலர் தேர்தல் பாதையை முன்வைக்கிறார்கள். அவர்கள் தேர்தல் மூலம் தமிழ் மக்கள் விடுதலை பெற முடியும் என மக்களை நம்பவைக்க முயல்கிறார்கள். ஆனால் "துப்பாக்கி குழாயில் இருந்தே அரசியல் அதிகாரம் பிறக்கிறது" என்றும் "ஆயுதம் ஏந்திய மக்கள்யுத்தப்பாதை மூலமே விடுதலை அடைய முடியும்" என்று மாபெரும் ஆசான் மாசேதுங் கூறியுள்ளார். அதுவே இன்றும்கூட பொருத்தமாக உள்ளது என்பதே உண்மையாகும்.

இலங்கை இந்திய ஒப்பந்தம்

இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் கிடைத்த தீர்வு 13 அற்புதமானது என்றும் அதனால்தான் தமிழ் மொழிக்கு சம உரிமை கிடைத்துள்ளது என்று இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதிய தலைவர்கள் கூறிவருகின்றனர். அந்த சமவுரிமை மூலம் எழுதப்பட்டுள்ள இந்த தமிழ் என்னவென்பதை தயவு செய்து அந்த தலைவர்கள் படித்து கூறுவார்களா?

தோழர் சிங்காரவேலர் நினைவுநாள்

•தோழர் சிங்காரவேலர் நினைவுநாள் வசதியான குடும்பத்திலிருந்து வந்து அவர் வழக்கறிஞர் தொழில் செய்தபோதும் ஏழைகள் பற்றியே அவரது மனம் சிந்தித்துக்கொண்டிருந்தது. வெலிங்டன் சீமாட்டி கல்வி வளாகத்தில்தான் அவர் வீடு இருந்தது. அங்கு 20,000 நூல்களுக்கும் மேல் அவர் சேகரித்து வைத்திருந்தார். அவர் இருந்த குடியிருப்பு வளாகத்தை அவரது கைதுக்குப் பிறகு அன்றைய ஆளுநர் வெலிங்டன் பிரபு கைப்பற்றி, அந்த இடத்தில் கல்வி நிலையத்தை நிறுவி, தனது மனைவியின் பெயரை வைத்துக்கொண்டார் ஆனால் அதன் பின் ஒருவர் மஞ்சள் பையுடன் திருட்டு ரயிலேறி வந்தார். தான் ஏழைக் குடும்பத்தில் இருந்து வருகிறேன் என்றார். ஆனால் அவர் இறக்கும்போது அவரது குடும்ப சொத்து மதிப்பு 45000கோடி ரூபா. இன்னொரு பெண்மணி வந்தார். அவர் மூப்பனார் வீட்டுக் கல்யாணத்தில் 600 ரூபாவுக்கு டான்ஸ் ஆடிய நடிகை. ஆனால் அவர் இறக்கும்போது அவரது சொத்து மதிப்பு 30000 கோடி ரூபா. பணக்கார குடும்பத்தில் பிறந்து ஏழைகளுக்காக தன் சொத்துகளை இழந்து குரல் கொடுத்த தோழர் சிங்காரவேலர் மறக்கப்பட்டுள்ளார். ஆனால் மக்கள் பணத்தை சுருட்டியவர்களுக்கு மெரினா கடற்கரையில் பல கோடி ரூபா செலவில் நினைவு சின்னங்கள். மக்கள் யாரை நினைவு வைத்திருக்க வேண்டும் யாரை மறக்க வேண்டும் என்பதைக்கூட அவர்களே தீர்;மானிக்கிறார்கள்.

கரடியே காரித்துப்பிடிச்சு!

கரடியே காரித்துப்பிடிச்சு!

ஒருவர் பெண்ணாக இருந்து

ஒருவர் பெண்ணாக இருந்து ஆணாக மாறிய திருநம்பி. இன்னொருவர் ஆணாக இருந்து பெண்ணாக மாறிய திருநங்கை. இருவரும் காதலித்து பெப்-14 யன்று கேரளாவில் திருமணம் செய்துகொள்கிறார்கள். வாழ்த்துக்கள் மணமக்களுக்கு.

யாழ் மேயர் துரையப்பாவை “துரோகி”

யாழ் மேயர் துரையப்பாவை “துரோகி” என்று மேடைதோறும் பேசியவர் அமிர்தலிங்கமே. அதன்பிறகுதான் பிரபாகரன் துரையப்பாவை சுட்டுக்கொன்றார். அதேபோன்று பொத்துவில் எம.பி கனகரத்தினம் கட்சி மாறியவுடன் அவரை துரோகி என்றும் அவருக்கு இயற்கை மரணம் வராது என்றும் பேசியவர் அமிர்தலிங்கமே. அதன்பிறகுதான் பிரபாகரனும் உமாமகேஸ்வரனும் கொழும்பு சென்று கனகரத்தினத்தை சுட்டனர். இவ்வாறு துரோகி ஒழிப்பு அரசியலை ஈழப் போராட்டத்தில் ஆரம்பித்து வைத்தவர் அமிர்தலிங்கமே. புலிகள் இயக்கம் முதன் முதல் தமது தாக்குதல்களுக்கு உரிமைகோரி அனுப்பப்பட்ட கடிதம் அமிர்தலிங்கத்தின் கொழும்பு காரியாலயத்திலேயே தட்டச்சு செய்யப்பட்டது கைது செய்யப்பட்ட இளைஞர்களுக்காக அமிர்தலிங்கத்தின் ஏற்பாட்டில் தமிழர்விடுதலைக்கூட்டணி தலைவர்கள் ஆஜராகி வாதாடினார்கள். மரண தண்டனை விதிக்கப்பட்டபோது குட்டிமணி தங்கத்துரை போன்றவர்கள் நீதிமன்றத்தில் பேசிய வசனங்கள்கூட சிவசிதம்பரத்தால் எழுதிக் கொடுக்கப்பட்டவை என்று அப்போது பேசிக்கொண்டார்கள். தியாகி சிவகுமாரன் மரணத்தைக்கூட தமது தோதல் வெற்றிக்காக பயன்படுத்தியவர்கள் அமிர்தலிங்கமும் அவருடைய தமிழர்விடுதலைக் கூட்டணியினருமே. தன் வீட்டுக்கு அடிக்கடி பிரபாகரன் வருவார் என்றும் தன் கையால் புட்டு வாங்கி சாப்பிட்டவர் என்றும் அமிர்தலிங்கம் மனைவி மங்கையர்கரசி லண்டனில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசியிருக்கிறார். இவ்வாறு இளைஞர்களை உசுப்பேற்றி வளர்த்துவிட்டிட்டு இப்போது அமிர்தலிங்கம் ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை என்று பகிரதன் கூறுவது என்ன நியாயம்? ஆனால் பகிரதன் கூற்றில் ஓரளவு உண்மை உண்டு. அதாவது ஆயுதப்போராட்டம் முன்னெடுக்கும் இளைஞர்கள் தன்னை மீறி வளர்வதை அமிர்தலிங்கம் ஒருபோதும் விரும்பவில்லை என்பது உண்மையே. (மிகுதி அடுத்த பதிவில்)

செய்தி – சுயலாப அரசியலுக்காக

செய்தி – சுயலாப அரசியலுக்காக தமிழரை நட்டாற்றில் விட முயற்சிக்காதீர்கள் - சம்பந்தர் ஐயா எச்சரிக்கை.

நல்லது நடந்தால் கடவுள் செயல்.

நல்லது நடந்தால் கடவுள் செயல். கெட்டது நடந்தால் விதி எனில் மனிதனுக்கு மூளை எதற்கு? மனித மூளையில் உள்ள மயலின் நரம்பிழைகளின் மொத்த நீளம் சுமார் 176000 கிலோ மீற்றர் என்கிறார்கள். மனித மூளையில் உள்ள 60 பில்லியன் நரம்பணுக்களில் சுமார் 10 பில்லியன் புறணிக் கோபுர உயிரணுக்கள். இவை தமக்குள் சமிக்கைகளை அனுப்பிக்கொள்ள ஏறத்தாழ 100 டிரிலியன் நரம்பிணைப்புகளை பயன்படுத்துகின்றன. நல்லது நடந்தால் கடவுள் செயல் , கெட்டது நடந்தால் அது விதி எனில் இத்தகைய சிறப்பான மூளை மனிதனுக்கு எதற்கு? பூசை செய்யவா? சிவன் என் முப்பாட்டன் என்று முகநூலில் படம் போடுற பயலுகள் எல்லாம் ரோட்டைக் கடக்கும்போது சிவனை நம்புவதில்லை. மாறாக எதிரில் இருக்கும் சிக்னல் லைட்டையே நம்பி கடக்கின்றனர். உலகம் உருண்டை என்று கூறிய விஞ்ஞானியை கொன்ற பாப்பரசர்கள்; எல்லாம் இப்போது அப்பிள் போனில் கூகிளில்தான் இயேசுவை தேடுகின்ற நிலைமை. ஆம். கடவுள் இருக்கிறார் என்று கூறும் கருத்துமுதல்வாதிகள் எல்லாம் நடைமுறையில் கடவுள் இல்லை என்னும் பொருள்முதல்வாதிகளாகவே வாழுகின்றனர். உலப் புகழ்பெற்ற அறிஞர் ஸ்டீபன் கேவாக்கிங் கேட்கிறார் “கடவுள் தன்னால் தூக்க முடியாத ஒரு கல்லைப் படைக்க முடியுமா?” பக்தர்களே உங்கள் பதில் என்ன?

ஈழத் தமிழர்களால் வரலாற்றில்

ஈழத் தமிழர்களால் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு பெயர் சுபா. முத்துக்குமார் ஈழத் தமிழருக்கு ஆதரவாக 16 தமிழக தமிழர்கள் தீக்குளித்து மரணமடைந்தார்கள். ஈழத் தமிழருக்கு ஆதரவாக தமிழகத்தில் தோழர்கள் தமிழரசன், சுந்தரம், லெனின் , மாறன் போன்றவர்கள் ஆயுதம் ஏந்திப் போராடினார்கள். தமிழக இளைஞர்கள் சிலர் ஈழம் வந்து ஆயுதப் போராட்டத்தில் பங்கெடுத்தார்கள். அந்த சிலரில் சுபா.முத்துக்குமாரும் ஒருவர். அவருடைய தியாகம் மறக்க முடியாதது. சுபா. முத்துக்குமார் ஈழத் தமிழர்களுக்காக மட்டுமன்றி தமிழக மக்களுக்காகவும் தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர். •5 ஆண்டுகள் புலிகள் அமைப்புடன் சேர்ந்து தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம். •5 ஆண்டுகள் வீரப்பனுடன் சேர்ந்து தமிழ்நாடு விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் •6 ஆண்டுகள் விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்தமைக்காக தலைமறைவு வாழ்க்கை •10 ஆண்டுகளுக்கு மேலாக சிறை வாழ்க்கை •4 ஆண்டுகளுக்கு மேலாக நாம்தமிழர் இயக்கத்தை தோற்றுவித்து அரசியல் வாழ்க்கை. இவ்வாறு போராட்டமே வாழ்கையாக கொண்ட சுபா. முத்துக்குமாரின் 11 வது நினைவு தினம் 15.02.2022 ஆகும். அவருக்கு ஈழத் தமிழர்கள் சார்பாக அஞ்சலியை செலுத்துவதுடன் அவரை என்றும் நன்றியுடன் நினைவு கூறுவோம்.

காதலர் தினம்!

• காதலர் தினம்! மாபெரும் மாக்சிய ஆசான் எங்கெல்ஸ் கூறுகிறார் “ஒரு புதிய தலைமுறை அதாவது தம் வாழ்நாள் முழுவதற்கும் தன்னிடம் ஒரு பெண்ணின் சரணாகதியைப் பணமோ வேறு எவ்விதமான சமூக அதிகாரமோ கொண்டு விலைக்கு வாங்காத ஆண்களினதும் உண்மையான காதலன்றி வேறு எந்தக் காரணத்ததுக்கும் தம்மை சரணளிக்காதவர்களும் பொருளாதார பின்விளைவுகளுக்கு அஞ்சி தம்மைத் தமது நேயத்திற்குரியோருக்கு அளிக்காதவர்களுமான பெண்களின் தலைமுறை வளர்ந்து வந்தபின்பு இப் பிரச்சனை தீர்வு பெறும். இத்தகைய மக்கள் உருவாகிய பின்னர் அவர்கள் என்ன செய்யலாம் என்று நாம் இன்று நினைப்பது பற்றி அவர்கள் துளியளவும் அக்கறைப்படமாட்டார்கள். அவர்கள் தமது சொந்த நடைமுறைகளையும் தங்கள் சொந்த பொது அபிப்பிராயங்களையும் உருவாக்கி ஒவ்வொருவரும் தமது தனிப்பட்ட நடைமுறையுடன் நிறைவு காண்பர். அத்தகைய ஒரு சமூகத்தில் பெண்கள் ஆண்களுடன் பூரண சமத்துவம் அனுபவிப்பர் என்பதில் ஜயமில்லை.”

இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலிகள்!

•இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலிகள்! தமிழ்நாடு விடுதலையை முன்னெடுத்த தோழர் தமிழரசன் வரலாற்றை “ தமிழ்தேசிய தலைவர் தமிழரசனின் வாழ்வும் அறமும்” என்னும் நூலாக எழுதியவர் தோழர் இளங்கோவன் இறுதிவரை ஈழத் தமிழருக்கு தன் உறுதியான ஆதரவை வழங்கியவர் தோழர் இளங்கோவன்

பொலிஸ் பஸ்தியாம்பிள்ளை தனத

பொலிஸ் பஸ்தியாம்பிள்ளை தனது குழுவினரோடு உமாமகேஸ்வரனையும் பிரபாகரனையும் கைது செய்வதற்காக முருங்கனில் இருந்த புலிகளின் பண்ணைக்குச் சென்றார். அவர் தேடிச்சென்ற முக்கிய போராளிகள் அங்கு இல்லை என்பதால் ஏமாற்றம் அடைந்த பஸ்தியாம்பிள்ளை அங்கிருந்த போராளிகளுடன் பேச்சுக்கொடுத்துக்கொண்டிருந்தார். அவ்வேளை பஸ்தியாம்பிள்ளை கையில் இருந்த சப் மிசின்கன்(SMG ) துப்பாக்கியை பார்த்த ரவி (மாமா) என்ற போராளி “சேர் இந்த ஓட்டைகள் எல்லாவற்றுக்கும் ஊடாக குண்டுகள் வருமா?” என்று அப்பாவியாய் கேட்டார். பஸ்தியாம்பிள்ளையும் இவர்கள் போராளிகள் என்பது தெரியாமல் அதை இயக்குவது எப்படி என்றெல்லாம் சொல்லிக் கொடுத்தார். அதன்பின்பு ரவியும் அம்மானும் அதைப் பறித்தெடுத்து அந்த SMG யாலே பஸ்தியாம்பிள்ளை சுட்டுக் கொன்றார்கள். இப்படித்தான் போராளிகளின் கைகளுக்கு SMG துப்பாக்கி வந்தது. இங்கு வேடிக்கை என்னவெனில் இப்பவும் கனடாவில் இருக்கும் சுப்பிரமணியசுவாமி SMGயை ஓட்டைத்துப்பாக்கி என்று கதை சொல்லிக்கொண்டிருக்கிறார். அவர் ஒருபோதும் இயக்கத்தில் இருக்கவில்லை. எல்லோரும் போராட இயக்கம் சென்றபோது இவர் சுமந்திரன் போல் டில்லி சென்று படித்தவர். உளவுப்படையில் இருக்கும் தனது உறவினர் கூறியதென்று நிறைய பொய் கதைகளை சுமந்திரன் தம்பிகளுடன் சேர்ந்து கூறிவருகிறார். தோழர் தமிழரசன் கையில் இருந்த துப்பாக்கியை வெடிக்காத ஓட்டைத் துப்பாக்கி என்கிறார். தமிரசனுக்கு வெடி மருந்து துப்பாக்கி எல்லாம் EPRLF இயக்கம் கொடுத்ததாம். தோழர் தமிழரசன் குழுவினரிடம் இரண்டு SMG, இரண்டு றிவோல்வர் , ஒரு பிஸ்டல் துப்பாக்கிகள் இருந்தன. அதைவிட ஒறிஜினல் கிரினைட் குண்டுகள் இருந்தன. ஒரு ஏ.கே.47 இருந்தது. மறைத்து கொண்டு செல்வது சிரமம் என்பதால் அதை கொண்டு செல்லவில்லை. பொன்பரப்பியில் தோழர் தமிழரசன் தான் சுடாதது மட்டுமன்றி தனது தோழர்களையும் தடுத்தார் என்பதே உண்மை. இந்த பொன்பரப்பி சம்பவத்திற்கு முன் தோழர் தமிழரசன் உட்கோட்டையில் அமைந்த வங்கியை கொள்ளையிட முயன்றார். அப்போது இதேபோல் நிலை வந்தபோது இதே துப்பாக்கியால் சுட்டும் வெடி குண்டை வெடிக்க வைத்தும் தப்பிச் சென்றார். அதுபோல் பொன்பரப்பியிலும் அவர் தப்பிச் சென்றிருக்கலாம். ஆனால் மக்கள் என்ற போர்வையில் பொலிஸ் சுற்றிவழைத்து அவரைக் கொன்றது. இந்த உண்மைகளை உணராமல் வேண்டுமென்றே தோழர் தமிழரசன் மீது அவதூறு செய்கின்றனர் சுமந்திரன் தம்பிகள். உளவுப்படைகளின் உதவியுடன் சுமந்திரன் தம்பிகள் செய்யும் அவதூறுகள் தமிழ்தேசிய வளர்ச்சியை ஒருபோதும் தடுத்து நிறுத்திவிட முடியாது.

இலாபம் எங்கிருந்து வருகிறது?

இலாபம் எங்கிருந்து வருகிறது? இலாபம் எங்கிருந்து வருகிறது என்று கேட்டால் வரவு – செலவு = இலாபம் ( Income – Expenses = Profit ) என்று ஒரு அக்கவுண்டன் கூறுவார். இதையே லாபம் எங்கிருந்து வருகிறது என்று ஒரு பொருளாதார அறிஞரிடம் கேட்டால் அவர் “ முதலாளி முதலீடு செய்யும் மூலதனம் அவருக்கு இலாபத்தை பெற்றுக் கொடுக்கிறது” என்பார். இதையே ஒரு ஆன்மீகவாதியிடம் கேட்டால் “இது எல்லாம் போன பிறப்பில் செய்த பாவ புண்ணிய விதிப்படி இந்தப் பிறப்பில் கடவுள் தருவது” என்பார். ஆனால் மார்க்சியவாதிகள் மட்டுமே தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டியே லாபம் பெறப்படுகிறது என்ற உண்மையை கூறுவார்கள். இந்த உண்மையை விஞ்ஞான முறைப்படி நிரூபித்து இந்த சுரண்டலை ஒழிக்க புரட்சி மட்டுமே தீர்வு என்பதையும் கூறியவர் காரல் மார்க்ஸ். எனவேதான் இந்த உண்மையை தொழிலாள வர்க்கம் உணர்ந்துவிடக்கூடாது என்பதில் முதலாளித்துவ அரசுகள் கவனமாக இருக்கின்றன. ஏனெனில் உலக ஜனத்தொகையில் 97% மானவர்கள் உழைக்கும் மக்களாவர். அவர்களை வெறும் 3%மான முதலாளிகள் அடக்கி ஆள்வதுடன் ஏமாற்றி சுரண்டிக் கொழுக்கின்றனர். இங்கு வேடிக்கை என்னவெனில் மத அடக்குமுறையை எதிர்த்தே வளர்ந்தது முதலாளித்துவ வர்க்கம். ஆனால் அதே முதலாளித்துவ வர்க்கம் தற்போது மதத்தை பேணிக் காத்து வருகின்றது. ஏனெனில் உழைத்து உழைத்து உருக்குலைந்துபோன மக்களை மேலெழும்பவிடாமல் அழுத்தி வைக்கும் ஆபத்தான ஆயுதங்களாக மதமும் கடவுளும் இருக்கின்றன.

ரைட்டர் - ( WRITER )

•ரைட்டர் - ( WRITER ) பொலிஸ் அதிகாரிகளின் அராஜகத்தை காட்டும் படம். காவலர்களுக்கு சங்கம் வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றது. இந்த காவலர்களுக்கு இருக்கும் அதே பிரச்சனைகள் சிறையில் பணிபுரியும் காவலர்களுக்கும் உண்டு. மதுரை சிறையில் நான் அடைக்கப்பட்டிருந்தவேளை இந்த சிறைக்காவலர்களுக்கு சங்கம் அமைக்க உதவிட மக்கள் உரிமைக்கழக வழக்கறிஞர் பி.வி. பக்தவச்சலம் அவர்களை நான் ஏற்பாடு செய்துகொடுத்தது நினைவுக்கு வருகிறது.

இறுதி முத்தம்!

•இறுதி முத்தம்! ஆண்டவர் இயேசு ஒரு முத்தத்தினால் காட்டிக்கொடுக்கப்பட்டார் என கூறுகின்றார்கள். அது உண்மையா பொய்யா தெரியாது. ஆனால் ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் குழந்தை தன் தந்தையின் உடலுக்கு வழங்கிய இந்த இறுதி முத்தம் சிங்கள அரசின் கோர முகத்தை நன்கு இனங்காட்டுகிறது.

இது செருப்பு அல்ல. நெருப்பு

•இது செருப்பு அல்ல. நெருப்பு சில தருணங்களில் பேனாவை விட “செருப்பு” வலிமையாக பேசுகின்றது "செருப்பு" காலில்;தான் தொங்குகிறது ஆனால் அது தோளில் தொங்கும் துப்பாக்கியை விட எதிரியை அதிகம் அம்பலப்படுத்துகின்றது. முறத்தால் புலியை விரட்டினாள் ஒரு தமிழ்பெண் என்பது புறநானூறு. செருப்பால் துரோகிகளை விரட்டினாள் ஒரு தமிழ்பெண் என்பது இன்றைய வரலாறு. இதுவரை உலகில் பற்றி எரிந்த பெரு நெருப்பெல்லாம் ஒரு சிறு பொறியில் இருந்தே ஆரம்பித்தது. சுமந்திரனின் தமிழின துரோகத்திற்கு எதிராக இந்த தமிழ் பெண் வீசி எறிந்தது செருப்பு அல்ல நெருப்பு என்பதை காலம் நன்கு காட்டியுள்ளது. செருப்பு காட்டுவது, கொடும்பாவி எரிப்பது, செத்துப்போ என திட்டுவது எல்லாம் அநாகரிகம் என சிலர் கருதுகின்றனர். ஆனால் இவை எல்லாம் மக்கள் தம் எதிர்ப்பை தெரிவிப்பதற்கு ஜனநாயகம் அனுமதிக்கும் வழிமுறைகள்தான். இந்த வழிமுறைகள் ஈழத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகின்றன. பேனாவை கையில் வைத்திருக்கும் ஒரு ஊடகவியலாளர்கூட அமெரிக்க ஜனாதிபதிக்கு தன் கால் சப்பாத்தை எறிந்து எதிர்ப்பை பதிவு செய்தார். உலகில் அதிகளவு அதிகாரம் கொண்ட அமெரிக்க ஜனாதிபதிக்கே செருப்பு வீசப்படும்போது சுண்டைக்காய் சுமந்திரனுக்கு வீசுவது எப்படி அநாகரீகம் ஆகும்?

காதலர்தின வாழ்த்துக்கள்!

•காதலர்தின வாழ்த்துக்கள்! வீட்டில் பெற்ற குழந்தைக்கு பால் வாங்க பணம் இல்லை. அந்த குழந்தை இறந்தபோது பிரேத பெட்டி வாங்கவும் பணம் இருக்கவில்லை. கணவன் வேலைக்கு செல்வதில்லை. எப்போதும் நூல்நிலையங்களில் படித்துக்கொண்டிருந்தார். இப்படி ஒரு வருடமோ இரண்டு வருடமோ நடக்கவில்லை. பல வருடங்களாக நடந்தது. இத்தனைக்கும் அந்த பெண் ஒரு செல்வந்தக் குடும்பத்தில் இருந்து வந்தவள். ஆனாலும் அந்த பெண் ஒருநாள்கூட தன் கணவனை சினந்ததில்லை. மாறாக மேலும் மேலும் அன்பால் அரவணைத்தாள். அதற்கு ஒரேயொரு காரணம் அவள் கொண்ட காதல். அதனால்தான், ஜென்னியின் அன்பும் காதலும் தனக்கு கிடைத்திருக்காவிடின் தன்னால் மார்க்சியத்தை படைத்திருக்கமுடியுமா என்பது சந்தேகமே என்கிறார் மார்க்ஸ் உலகில் சிறந்த தத்துவத்திற்காக மட்டுமன்றி உலகில் சிறந்த காதலர்களுக்காகவும் மார்க்ஸ் ஜென்னி இன்றளவும் நினைவு கூரப்படுகின்றனர். ஆனால் சிலர், மார்க்ஸ் வீட்டில் பணிபுரிந்த ஒரு வேலைக்கார பெண்ணுடன் உறவு வைத்திருந்தார் என்றும் அதனால் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது என்றும் எழுதி மார்க்ஸ் ஜென்னியின் உயர்ந்த காதலைக் கொச்சைப்படுத்துகின்றனர். ஆனால் அவதூறுகள் மூலம் அந்த மாபெரும் ஆசானை அப்புறப்படுத்திவிட முடியாது என்பதை வரலாறு நிரூபித்துள்ளது.

ஒரு நாடு இன்னொரு நாட்டில்

ஒரு நாடு இன்னொரு நாட்டில் விடுதலைக்காக போராடிய இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என அறிவித்து தன் நாட்டில் தடை செய்கிறது. ஆனால் அந்த நாட்டில் உள்ள மக்கள் அந்த தடை செய்யப்பட்ட இயக்க போராளிக்கு நினைவுக்குடை அமைத்து ஆண்டுதோறும் நினைவு கூர்ந்து வருகின்றனர். இந்த அதிசயம் இந்தியாவில் தமிழ்நாட்டில் தமிழ் மக்களால் நிகழ்த்தப்படுகிறது. நாடு என்பது மனிதனால் உருவாக்கப்படுவது. அதன் எல்லை காலத்திற்கு காலம் மனிதனால் சுருங்கும் விரியும். ஆனால் இனம் தானாக உருவாகியது. அது மனிதனால் உருவாக்கப்படும் நாட்டைவிட வலிமையானது. இனம் அதன் மொழி மனிதனின் உணர்வுடன் இரண்டறக்கலந்து நிற்பது. அதனால்தான் தடைகளைத் தகர்த்தெறிந்து புலிப் போராளிகளை தமிழக மக்கள் நினைவு கூர்கின்றனர். தமிழ் மக்கள் என்றும் மகத்தானவர்களே

இவர் யார் என்று தெரிகிறதா?

•இவர் யார் என்று தெரிகிறதா? இவர் தர்பார் நடித்த சிவாஜிராவ் கெய்வாட் (ரஜனி) இல்லை. இவர் இத்தாலிய விஞ்ஞானி கலிலியோ கலிலி இன்று இவரது பிறந்த தினம் ஆகும். இவர் இத்தாலியின் பிசா நகரில் 1564 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி பிறந்தார். 1642 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி இறந்தார். வானவியல் அறிஞர், இவர் வேதியியல் வல்லுநர், கணிதவியலாளர், தத்துவஞானி, கண்டுபிடிப்பாளர் என பன்முக ஆற்றல் பெற்றவர். தொலைநோக்கி, காம்பஸ், தெர்மாமீட்டர் ஆகியவை இவரது கண்டுபிடிப்புகளில் முக்கியமானவை. இயற்பியலின் தந்தை, நவீன அறிவியலின் தந்தை, நவீன வானியலின் தந்தை என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். இன்று விஞ்ஞானிகளுக்கு சமூக அங்கீகாரம் கிடைக்கிறது। அரசு மரியாதை செய்கிறது। அறிவியல் உலகத்திற்கு சிறந்த பங்களிப்பு செய்யும் விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு கூடக் கிடைக்கிறது। 16-17ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த விஞ்ஞானிகளின் நிலைமை இவ்வளவு இனிமையாக இல்லை. அவர்களது கண்டுபிடிப்புகள் மதநம்பிக்கைகளுக்கு விரோதமானதாகக் கருதப்பட்டால் கண்டு பிடிப்புகளை அவர்கள் வெளியிட முடியாது. மீறி வெளியிட்டால், அவர்களது உயிருக்கே கூட ஆபத்து காத்திருந்தது. இப்படிப்பட்ட சிக்கலை இந்த உலகம் கண்ட மாபெரும் விஞ்ஞானி கலிலியோ தன் வாழ்நாளில் சந்தித்தார். பல நூற்றாண்டுகளாக பூமி நடுவில் இருப்பதாகவும் சூரியன் உள்ளிட்ட மற்ற எல்லா கோள்களும் பூமியைச் சுற்றி வருவதாகவும் நம்பப்பட்டது. ஆனால், கலிலியோ, ஆய்வுகள் முதன்முறையாக சூரியனை நடுநாயகமாகக் கொண்டு பூமி உள்ளிட்ட கோள்கள் சுற்றி வருவதாக நிரூபித்தன. இது, கிறிஸ்தவ மதத்தின் நம்பிக்கைக்கு எதிரானது என்று கூறி கலிலியோவை கிறிஸ்தவ தலைமையகம் தண்டித்தது. அவருடைய பல கருத்துக்களை திரும்பப் பெறும்படி வற்புறுத்தியது. சாகும்வரை வீட்டுச் சிறையில் அடைத்து வைத்தது. 1992-இல்-கலிலியோ மறைந்து 350 ஆண்டுகள் கழித்து-கலிலியோவைத் தண்டித்தது தவறு என போப்பாண்டவர் ஏற்றுக் கொண்டு மன்னிப்புக் கோரினார். அறிவியல் உண்மைகள் அவை வெளியிடப்படும் காலத்தில் ஏற்கப்படாவிட்டாலும், என்றாவது ஒரு நாள் ஏற்கப்படும் என்பதற்கு கலிலியோவின் வாழ்க்கை ஓர் உதாரணம். இங்கு வேதனை என்னவென்றால் கலிலியோ தன் உயிரைப் பணயம் வைத்து பூமியே சூரியனை சுற்றி வருகிறது என்ற உண்மையை உலகிற்கு கூறினார். ஆனால் நம்மவர்கள் இப்பவும் காலையில் சூரியன் உதிக்கிறது. மாலையில் மறைகிறது என்று எழுதிக் கொண்டு இருக்கிறார்கள்.

பெண் விடுதலை இன்றேல்

பெண் விடுதலை இன்றேல் மண் விடுதலை இல்லை.

தமிழத்தேசியம் பெண்களுக்கு

தமிழத்தேசியம் பெண்களுக்கு மட்டுமல்ல அடுத்த சந்ததிக்கும் கடத்தப்படுகிறது. இதுவே ஆரியம் திராவிடத்திற்கு மட்டுமன்றி ஈழத்தில் சுமந்திரன் தம்பிகளுக்கும் அச்சத்தை கொடுக்கிறது.

இரண்டு ஊடக நண்பர்கள். ஒருவர் தமிழர். மற்றவர் சிங்களவர்.

இரண்டு ஊடக நண்பர்கள். ஒருவர் தமிழர். மற்றவர் சிங்களவர். இருவரும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக்கோரி சுமந்திரன் கொழும்பில் நடத்திய கையெழுத்து போராட்டத்திற்கு செய்தி சேகரிக்க சென்றுள்ளார்கள். “பார்த்தியா எங்கட சேர் எப்படி கோத்தாவுக்கு பயப்படாமல் தைரியமாக போராட்டம் நடத்துகிறார்?” என்று சிங்கள ஊடகவியலாளரிடம் கேட்டார் தமிழ் ஊடகவியலாளர். அதற்கு” அது சரி. உங்கட சேர் ஏன் இப்ப போராட்டம் நடத்துகிறார். கடந்த ஆட்சியில் இவர் நினைத்திருந்தால் இலகுவாக நீக்கியிருக்கலாமே?” என்று சிங்கள ஊடகவியலாளர் பதிலுக்கு கேட்டார். ஆம். ஒரு சிங்கள ஊடகவியலாளருக்கே சுமந்திரனின் சுத்துமாத்து தெரிகிறது. ஆனால் சுமந்திரன் தம்பிகளால் ஏன் இதனை புரிந்துகொள்ள முடியவில்லை ? தமக்கு சொகுசு பங்களா, 6 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனம், சிங்கள பொலிஸ் பாதுகாப்பு எல்லாம் கேட்டுப் பெற்றவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க மக்களிடம் கையெழுத்து கேட்பது ஏன்? அதுவும் இந்த தடைச்சட்டத்தின் கீழ் 20 அப்பாவி இளைஞர்களை சிறையில் அடைத்து வைத்திருக்கும் சுமந்திரன் இச் சட்டத்தை நீக்க போராட்டம் நடத்துவதை என்னவென்று அழைப்பது? இவர்கள் தமிழ் மக்களுக்கு மூளையே இல்லை என்று நினைக்கிறார்களா?

இந்த படத்தை பார்க்கும் அனைவருக்கும்

இந்த படத்தை பார்க்கும் அனைவருக்கும் தெரிவது ஒரு கொடிய விஷ பாம்பு மீனை கொன்று தின்கிறது என்பதே. ஆனால் ஒருவருக்கு மட்டும் இது வேறு மாதிரி தெரிகிறது. அவர் கூறுகிறார், “இது கொலைதான். ஆனால் கொலை என்று நிரூபிக்க சாட்சி இல்லாதபடியால் இதனை கொலை என்று கூறமுடியாது.” “இந்த மீன் ஒரு குஞ்சு மீனை தின்றுள்ளது. எனவே இனச்சுத்திகரிப்பு செய்தமைக்காக இந்த மீன் விசாரிக்கப்படல் வேண்டும்.” “இந்த கொடிய பாம்புடன் சிறுவயது முதல் வாழ்வதை நான் பெருமையாக கருதுகிறேன்.” “ நான் சட்டம் படித்துள்ளேன். அதனால் எனக்கு இவை எல்லாம் தெரிகிறது” இவ்வாறு கூறுபவரை பொதுவாக “கூமுட்டை” என்று மக்கள் அழைப்பார்கள். ஆனால் அவருடைய தம்பிகள் “சேர்” என்று அழைக்கின்றனர். "மீன் நீரில் தத்தளித்தது. எனவே பாம்பு அந்த மீனை பாதுகாத்துள்ளது" என்று மகிந்த ராஜபக்சா கும்பல் கூறுவது இன்னொரு கதை.

மறக்க முடியாத மோதூ வைரவர்

•மறக்க முடியாத மோதூ வைரவர் கரவெட்டியில் உள்ள பலர் இந்த வைரவர் கோவிலை அறிந்திருப்பார்கள். ஆனால் மிகவும் சிலரே நேரில் சென்று பார்த்திருப்பார்கள். கரவெட்டியில் உள்ள சோனப்புவெளியில் ஆற்றை கடந்து செல்லும்போது பனைக்கூடலில் இந்த கோவில் அமைந்திருக்கிறது. மாட்டுக்கள்ளன் பாக்கியராசா இந்த வைரவர் கோவிலில் மறைந்திருந்தார் என்று அப்போது ஊரில் பேசினார்கள். பகலில்கூட இந்த இடத்திற்கு செல்ல பலரும் அஞ்சியவேளையில் சிங்கள ஆர்மிக்கு பயந்து நாம் இரவில் இந்த கோவிலில் தங்கியிருக்கிறோம். அதுமட்டுமல்ல 1984ல் இந்த வைரவர் கோவில் சுவரில் துப்பாக்கியால் சுட்டு பயற்சியும் எடுத்திருக்கிறோம். அந்த அடையாளம் இப்போதும் அதன் சுவரில் இருப்பதையே கீழே உள்ள படம் காட்டுகிறது. இவ்வாறு எமது போராட்டத்துடன் இரண்டறக் கலந்துள்ள இந்த கோவில் இப்போது சிதைவடைந்துவிட்டது என்பதை அறியும்போது மனவருத்தமாக இருக்கிறது.

ஆழ்ந்த இரங்கல்கள்!

ஆழ்ந்த இரங்கல்கள்! மக்கியண்ணா என்று எம்மால் அன்பாக அழைக்கப்படும் மயில்வாகனம் மகேந்திரன் மரணமடைந்துள்ளதாக அறிய வந்துள்ளது. கரவெட்டி நெல்லியடியைச் சேர்ந்த மக்கியண்ணா கடந்த வருடம் 24.05.21 யன்று சென்னையில் மரணமடைந்துள்ளார். கரவெட்டி, மன்னார், சென்னை எல்லாம் ஒன்றாக போராடினோம். ஒன்றாக சாப்பிட்டோம். ஒன்றாக உறங்கினோம். மக்கியண்ணா மறையலாம். ஆனால் அவருடனான அந்த இனிய நினைவுகள் மறையாது நிலைத்து நிற்கும்.

மதவெறியர்களால் கொல்லப்பட்ட தத்துவவியலாளர் புரூணோ

•மதவெறியர்களால் கொல்லப்பட்ட தத்துவவியலாளர் புரூணோ புரூணோவின் அண்டவியல் பார்வைகள் தமது மதக் கருத்துகளுக்கு எதிராக இருக்கிறது எனக்கூறி கிருத்தவ மதவாதிகளால் புரூணோ எரித்துக் கொல்லப்பட்டநாள் ( 17.02.1600) இன்று ஆகும். அவரை எரித்துக் கொன்றவர்களின் பெயர் வரலாற்றின் குப்பைத் தொட்டியில்கூட இல்லை. ஆனால் தத்துவவியலாளர் புரூணோ சுதந்திரமான சிந்தனை மற்றும் வளர்ந்து வரும் அறிவியலின் வரலாற்றில் ஒரு அடையாளமாக கருதப்படுகிறார்.

“புளட்’ தலைவர் உமா மகேஸ்வரன்!

•“புளட்’ தலைவர் உமா மகேஸ்வரன்! இந்தியாவில் இருந்துகொண்டு இந்திய உளவுப்படைகளின் சதிகளுக்கு ஒத்துழைத்திருந்தால் இன்று தனது 77 வது பிறந்தநாளை கொண்டாடியிருப்பார். ஆனால் இந்திய சதிகளுக்கு இணங்க மறுத்து இந்தியாவை விட்டு வெளியேறியதால் இந்திய உளவுப்படையின் கைக்கூலிகளால் 16.07.1989 யன்று சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் மீது பல விமர்சனங்கள் உண்டு. ஆனாலும் சிறந்த படிப்பு , நல்ல உத்தியோகம், வசதியான வாழ்வு அனைத்தையும் துறந்து தன் இனத்திற்காக அவர் போராட வந்தமை மதிக்கப்பட வேண்டியது. அவர் தன் கையால் யாரையும் கொலை செய்ததாக தெரியவில்லை. ஆனால் அவர் பெயரால் கொலை செய்தவர்கள் இன்று இந்திய உளவுப்படையின் அரவணைப்பில் இருந்துகொண்டு அவரை கொலைகாரன் என்று விமர்சிப்பது காலக் கொடுமை

என்றும் நினைவில் இருக்கும்

•என்றும் நினைவில் இருக்கும் தில்லையம்பல கோவில் பூசாரியார். கரவெட்டிக்கு அருகில் வயல்வெளிகளுக்கு நடுவில் இருக்கும் கோவில் தில்லையம்பல பிள்ளையார் கோவில். வீட்டில் வளர்க்கும் மாடு கன்று போட்டால் ஆடு குட்டி போட்டால் முதல் பாலை இந்த கோவிலுக்கு வழங்குவது மக்கள் வழக்கம். யாழ் மாவட்டத்தில் பல ஊர்களில் இருந்து மக்கள் கூட்டமாக வந்து இந்த கோவிலில் பொங்கல் வைப்பார்கள். கீழே படத்தில் இருப்பவர் பெயர் கந்தப்பு. இவர்தான் இந்த தில்லையம்பலகோவில் பூசாரியாக பல காலம் இருந்தவர். 1984ல் மன்னாரில் இருந்து வந்த இளைஞர்களுக்கு கண்ணிவெடி மற்றும் வெடி குண்டு பயிற்சிகளை இந்த கோவிலுக்கு அருகில் மேற்கொண்டோம். பயிற்சி முடிய இந்த பூசாரியார் தந்த பொங்கல், மோதகம் வடை பழம் எல்லாம் நாம் மகிழ்வுடன் சாப்பிட்டு சென்றோம். ஆனால் அடுத்தநாள் பலாலியில் இருந்து வந்த ராணுவம் சுற்றிவழைத்து பூசாரியாரை பிடித்துவிட்டது. எம்மை காட்டி தரும்படி அவரை மிரட்டியது. அவருடைய நெஞ்சில் துப்பாக்கியை வைத்து எங்களை காட்டித் தரும்படியும் இல்லையேல் கொன்றுவிடுவதாக ராணுவம் மிரட்டியது. நானும் அவருடைய கரவெட்டி ஊரைச் சேர்ந்தவன். என் தாய் தந்தையர் வீடு எல்லாம் அவருக்கு நன்கு தெரியும். ஆனால் அவர் உயிர் ஆபத்து நிறைந்த அந்த வேளையிலும் எம்மை காட்டிக்கொடுக்கவில்லை. எல்லோரும் போராளிகளே போராட்டம் செய்ததாக கூறுகின்றார்கள். ஆனால் இத்தகையவர்களின் ஆதரவும் அர்ப்பணிப்பும் இல்லையேல் போராட்டம் ஒருநாள்கூட நீடித்திருக்க முடியாது என்பதே உண்மை. இவர்கள் மகத்தானவர்களே.

பாராளுமன்றம் மூலம் தீர்வு பெற முடியாது

பாராளுமன்றம் மூலம் தீர்வு பெற முடியாது என்ற உண்மையை அறிவதற்கு விக்கினேஸ்வரன் அவர்களுக்கு இத்தனை ஆண்டுகள் பிடித்திருக்கு. இந்த உண்மையை அறிவதற்கு சுமந்திரனுக்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் பிடிக்குமோ தெரியவில்லை. ஆனால் அதற்குள் இனம் அழிந்துவிடுமோ என எண்ணத் தோன்றுகிறது.

ஈழத் தமிழருக்காய் உயிர்நீத்த தமிழ்வேந்தன்!

ஈழத் தமிழருக்காய் உயிர்நீத்த தமிழ்வேந்தன்! 2009ல் இதே நாளில் போரை நிறுத்தக் கோரியும் ஈழத் தமிழரை காப்பாற்றக்கோரியும் கடலூர் சோதி என்கிற தமிழ் வேந்தன் தீக்குளித்து உயிர் துறந்தார். தமிழ்நாட்டில் ஈழத் தமிழருக்காய் 16 பேர் உயிர் துறந்தனர். அதில் ஒருவர் தமிழ்வேந்தன். கடலுர் நீதிமன்ற வளாகத்திற்குள் ஈழத் தமிழருக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பியபடி அவர் தீக்குளித்தார். சாகும் தருவாயில் அவர் பொலிசாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் “ ஈழத் தமிழரை காப்பாற்ற எனக்கு வேறு வழி தெரியவில்லை. நான் அதிகம் படிக்காதவன். படித்தவர்கள் தொடர்ந்து ஈழத் தமிழருக்காக போராடுங்கள்” என்று கூறினார். அப்போது தமிழ்வேந்தனுக்கு ஆறு மாத கைக்குழந்தை இருந்தது. ஆனால் அவர் தன் குழந்தையைக்கூட நினைக்காமல் ஈழத் தமிழருக்காய் உயிர் துறந்தார். ஆனால் இத்தகையவர்களின் தியாகங்களை அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி கொச்சைப்படுத்தினார். ஈழத் தமிழருக்கு ஆதரவான போராட்டங்களை அடக்கினார். அதேவேளை சிங்கள அரசும் இந்திய அரசும் சேர்ந்து நடத்திய தமிழின படுகொலைக்கு அவர் ஆதரவு வழங்கினார் அத்தகைய கலைஞருக்கு திமுக மெரினாவில் நினைவு சின்னம் அமைக்கலாம். ஆனால் தமிழ்வேந்தன் போன்றவர்கள் தமிழர் மனங்களில் என்றும் நினைவு கொள்ளப்படுவர்.

இருவரும் பெண்கள்.

இருவரும் பெண்கள். அதுவும் வயதான பெண்கள். இருவரும் தங்கள் சொந்த நிலம் காக்க துப்பாக்கி ஏந்துகிறார்கள். ஆனால் ஒருபெண் ஏந்துவதை “தேசபக்தி” என்று புகழும் ஊடகங்கள் இன்னொரு பெண் ஏந்துவதை “பயங்கரவாதம்” என்கின்றன. இதுதான் சர்வதேச நியாயம்?

கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்தின

கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்தின இவர் சிங்கள இனத்தை சேர்ந்தவர் . அத்துடன் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவரும்கூட. ஆனாலும் சிங்களவர்தான் வந்தேறிகள் என்று தன்னால் நிரூபிக்க முடியுமென சவால் விட்டவர். தமிழரை வந்தேறிகள் என்று கூறிய பௌத்த பிக்குவிற்கே இந்த சவாலை இவர் விட்டார். இவர் இந்த சவாலை இந்தியாவில் இருந்தோ அல்லது வேறு வெளிநாடுகளில் இருந்தோ விடவில்லை. சிங்கள மக்கள் மத்தியில் இருந்துகொண்டே விட்டுள்ளார். இவரை தாக்குவதற்கு சிங்கள பேரினவாதிகள் பல முறை முயற்சி செய்தனர். ஆனாலும் உயிராபத்திற்கு மத்தியிலும் இவர் தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு ஆதரவு வழங்கியவர். இலங்கை பௌத்தநாடு என்பதை தமிழர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றுகூறி சம்பந்தர் ஐயா சிங்கக்கொடியை தூக்கி ஆட்டியபோது சிங்களவரை வந்தேறிகள் என்று துணிச்சலாக இவர் கூறினார்.

சர்வதேச தாய் மொழி தினம்! (21.02.2022)

•சர்வதேச தாய் மொழி தினம்! (21.02.2022) எல்லோருக்கும் அவர்களது தாய்மொழி பெருமை மிக்கதுதான். ஆனால் மொழிகளின் தாய் மொழி என்ற பெருமை எமது தமிழ் மொழிக்கு உண்டு. தமிழ் மொழியாலேதான் நாம் தமிழ் இனம் ஆனோம். ஒரு இனத்தை அழிக்க வேண்டுமாயின் முதலில் அதன் மொழியை அழிக்க வேண்டும் என்பார்கள். அதனால்தான் தமிழர்கள் தம் உயிரைக் கொடுத்தேனும் தமிழ் மொழியை காத்து வருகிறார்கள். மொழி என்பது உணர்வுகளை வெளிப்படுத்தும் வெறும் ஊடகம்தானே, அதற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என சிலர் கேட்கலாம். உலகில் தோன்றிய பல மொழிகள் அழிந்து விட்டன. தமிழும் இனி மெல்ல சாகும் என சிலர் கூறலாம். ஆனால் வரலாற்றில் எத்தனை படையெடுப்புகள். அத்தனையும் தாண்டி தமிழ் மொழி எப்படி நிமிர்ந்து நிற்கிறது? போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் ஆங்கிலேயர்கள் 350 வருடங்களுக்கு மேலாக ஆண்டபோதும் அவர்களின் சில சொற்களை தமிழ் உள்வாங்கியதேயொழிய தமிழ் அழிந்து விடவில்லை. இனியும்கூட எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் தமிழ் அழிந்துவிடப் போவதில்லை. அது நிமிர்ந்து நிற்கும். ஏனெனில் தமிழர்கள் தம் தாய்க்காக மட்டுமன்றி தாய்மொழி தாய்நிலத்திற்காகவும் உயிர் துறக்கக்கூடியவர்கள். இப்படிப்பட்ட அர்ப்பணிப்புகள் இருக்கும்வரை தமிழ் மொழியையும் தமிழர்களையும் யாராலும் அழித்துவிட முடியாது. தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் இந்தியா முழுவதும் பேசப்படும் மொழி சமஸ்கிருதம் என்றும் அதனை தமிழர்கள் எற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். நாற்பதாயிரம் பேர் மட்டுமே பேசும் சமஸ்கிருத மொழியை தமிழ் மொழி பேசும் எட்டுக்கோடிப் பேர் எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும்? ஏனெனில் தமிழனை அழிக்க வேண்டும் என்றால் முதலில் அவனின் தமிழ் மொழியை அழிக்க வேண்டும் என்று எதிரி நன்கு தெரிந்து வைத்திருக்கிறான். கைபர் கணவாய் வழியாக வந்த இல.கணேசன் கும்பல்களுக்கு சமஸ்கிருதம் புனித மொழியாக இருக்கலாம். ஆனால் அதற்காக செத்த மொழியான சமஸ்கிருதத்தை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்

சிங்கள அரசின் இனப்படுகொலை

சிங்கள அரசின் இனப்படுகொலை ராணுவத்தில் இருந்து CSK அணிக்கு விளையாடவரும் சிங்கள ராணுவ வீரரை நீக்கக்கோரி தமிழ் இன உணர்வாளர்கள் ஒன்றுதிரண்டு கோர வேண்டும். தமிழின படுகொலை செய்தவர்களை தமிழக மண்ணில் கால்பதிக்க தமிழ் மக்கள் ஒருபோதும் இடமளிக்கக்கூடாது.

சுமந்திரன் சுத்துமாத்து

•சுமந்திரன் சுத்துமாத்து பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதிலும் அதற்காக போராட வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது. ஆனால் கடந்த ஆட்சியில் இந்த சந்திரிக்கா மற்றும் சுமந்திரன் இருவரும் ஏன் இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவில்லை அல்லது நீக்கும்படி போராடவில்லை? சஜித் பிரேமதாசா ரணில் விக்கிரமசிங்க சரத்பொன்சேகா போன்றவர்களுக்கு தமிழ் மக்களை வாக்கு அளிக்கும்படி கூறிய சுமந்திரன் இவர்களிடம் ஏன் இன்னும் கையெழுத்து பெறவில்லை?

பிரபாகரன் பயங்கரவாதி.

பிரபாகரன் பயங்கரவாதி. எனவே பிரபாகரனைப்பெற்ற இவரும் பயங்கரவாதி என்று மகிந்த ராஜபக்சா கூறினார். ஆனாலும் கொஞ்சம் இரக்கம்காட்டி இவர் இந்தியா சென்று சிகிச்சை பெற அனுமதித்தார். ராஜபக்சாவுக்கு இருந்த இரக்கம்கூட உலகத்தமிழினத் தலைவர் என்று கூறப்பட்ட கலைஞர் கருணாநிதிக்கு இருக்கவில்லை. அதனால் கொஞ்சம்கூட மனிதாபிமானம் அற்று இவரை உள்ளே விட மறுத்தார். விமானநிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பினார். ஒரு தமிழ் பெண்ணை அதுவும் வயதான நோய்வாய்ப்பட்டவரை இப்படி திருப்பி அனுப்புவது நியாயமா என பலரும் கேட்டார்கள். அதற்கு , வைகோ மூலம் வந்ததால்தான் கலைஞர் அனுமதிக்கவில்லை என சிலர் கூறினார்கள். கலைஞர் என்ன செய்ய முடியும். மத்திய அரசுதான் திருப்பி அனுப்பியது என்று வேறு சிலர் கூறினார்கள். அந்த வைகோ, மத்திய அரசாக இருந்த காங்கிரஸ், யாவும் இப்போது திமுக வுடன் கூட்டணியாக இருக்கின்றன. அவர்கள் பார்வதியம்மாளை மறந்திருக்கலாம். ஆனால் தமிழ் மக்களால் அந்த கொடுமையை மறக்க முடியவில்லையே. பாவம். இந்த தாயார். இவர் தமிழ் இனத்தில் பிறந்ததைத்தவிர வேறு என்ன தவறு செய்தார்?

சிறப்புமுகாம் அகதிகள் விடுதலை செய்யப்படவில்லை

சிறப்புமுகாம் அகதிகள் விடுதலை செய்யப்படவில்லை ஏழு தமிழர் விடுதலை செய்யப்படவில்லை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படவில்லை திரும்பி வர விரும்பும் அகதிகளுக்கு கப்பல் வசதிகூட செய்யப்படவில்லை அப்புறம் எப்படி பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார் ஸ்டாலின் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் உலகத்தமிழர் பேரவையும் அறிக்கை விட்டுள்ளன? பெரும் நம்பிக்கை ஏற்படும் அளவிற்கு ஸ்டாலின் செய்தது என்ன?

மீண்டும் எரிபொருட்களின் வில

மீண்டும் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளன. எரிபொருட்களின் விலை அதிகரித்தால் போக்குவரத்து மற்றும் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும். இப்பவே மக்களால் நெருக்கடிகளை சமாளிக்க முடியாமல் திண்டாடுகிறார்கள். இந்நிலையில் மீண்டும் ஏற்படும் விலைவாசி உயர்வுகளால் மக்கள் மத்தியில் பட்டினிசாவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆனால் அரசோ இது குறித்து அக்கறை அற்று இருக்கிறது.

சுமந்திரன் சட்டம் படித்தவராம்

சுமந்திரன் சட்டம் படித்தவராம். அவருக்கு மூன்று மொழிகளும் சரளமாக பேச தெரியுமாம். எனவே பாராளுமன்றத்தில் பேசி தீர்வு பெற்றுவிடுவாராம் என்று சுமந்திரன் தம்பிகள் கூறுகின்றனர். இவர்கள் மூவரும் சட்டம் படித்தவர்கள். அதுவும் கியூசி பட்டம் பெற்றவர்கள். இவர்களுக்கும் மூன்று மொழிகளும் சரளமாக பேச தெரியும். ஆனால் இந்த மூன்று பேராலும் பாராளுமன்றத்தில் பெறமுடியாத தீர்வை சுமந்திரன் பெற்றுவிடுவாராம். இதுதான் கேட்பவன் கேனையன் என்றால் காட்டெருமை ஏரோப்பிளேன் ஓட்டுது என்ற கதை. #சுமந்திரன் தம்பிகளின் கிளப்கவுஸ் அளப்பறை.

தீபாவளிக்கு தீர்வு வரும்

தீபாவளிக்கு தீர்வு வரும் என்ற வெறும் மூன்று சொல்லை வைத்து தொடர்ந்து பதவி பெற்று வரும் ஈழத்து கருணாநிதி சம்பந்தர் ஐயா.

இலக்கு நோக்கி

இலக்கு நோக்கி ஓட முடியாதவர்கள் நடக்க வேண்டும் நடக்க முடியாதவர்கள் தவழ்ந்தாவது செல்ல வேண்டும் ஆனால் ஒருபோதும் இயங்குவதை நிறுத்தவே கூடாது இனப்படுகொலைக்கு நீதி கோரி ஐ.நா நோக்கி ஈருளிப் பயணம் செல்கிறார்கள். அதுவும் 24வது தடவையாக தொடர்ந்து செல்கிறார்கள். வழிநெடுக அமைச்சர்கள், எம்.பி கள், மக்கள் என சந்தித்து பரப்புரை செய்த வண்ணம் செல்கிறார்கள். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை இன்னமும் உயிர்ப்புடன் வைத்திருப்பவர்கள் இவ்வாறானவர்களே.

விசா முடிவடைந்துவிட்டது

விசா முடிவடைந்துவிட்டது என தமிழ்நாட்டில் தங்ககியிருந்த 19 வயது ஈழப் பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தது தமிழக காவல்துறை. விசா இன்றி இருந்தமைக்கான தண்டனையை அனுபவித்துவிட்டு வெளியே வந்த அப் பெண் இலங்கை திரும்ப அனுமதி கேட்கிறார். அவர் மீது வேறு எந்த வழக்கோ குற்றச்சாட்டோ இல்லை. ஆனாலும் தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. எனவே அவர் வேறு வழியின்றி உயர்நீதிமன்றத்தை நாடினார். அவர் நாடு திரும்ப உடனடியாக அனுமதி வழங்குமாறு உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதுதான் திராவிட முதல்வர் ஸ்டாலின் ஈழத் தமிழ் அகதிகள் மீது காட்டும் அக்கறை. இந்த அக்கறைதான் தமக்கு பெரும் நம்பிக்கை தந்திருப்பதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் லண்டன் குளோபல் தமிழர் அமைப்பும் அறிக்கை விட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள அகதிகளின் துயரநிலையை சுட்டிக்காட்டினால் “அவர்கள் ஏன் அங்கே இருக்கிறார்கள். திரும்பி வர வேண்டியதுதானே?” என்று சுமந்திரன் தம்பிகள் சிம்பிளாக கூறுகிறார்கள். ஆனால் அகதிகள் திரும்பிவர விரும்பினாலும் அதற்கான அனுமதியும் இலகுவாக பெற்றுவிட முடியாது என்பது இவர்களுக்கு தெரியவில்லை. அதுமட்டுமல்ல அனுமதி கிடைத்தாலும் விசா இன்றி இருந்த காலத்திற்கான பெருந்தொகையான தண்டப்பணமும் கட்டவேண்டும் அகதியாக இருந்தவர்களால் எப்படி இந்தளவு தொகை பணம் கட்ட முடியும்? மோடி கடந்த முறை இலங்கை வந்தபோது திரும்பி வர விரும்பும் அகதிகளுக்கு வசதியாக கப்பற் சேவை தொடங்கப்படும் என அறிவித்தார். அவர் மீண்டும் இலங்கை வரப் போவதாக செய்திகள் கூறுகின்றன. ஆனால் இன்னும் கப்பற்சேவை ஆரம்பிக்கவில்லை. 13 தீர்வு கேட்டு கடிதம் எழுதிய நம் தலைவர்கள் இதற்கு ஒரு கடிதம் எழுதக்கூடாதா?

இருவரும் இலங்கையர்கள்

இருவரும் இலங்கையர்கள் ஒருவர் பிரியந்த ஹேரத் மற்றவர் இந்துகாதேவி இருவரும் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்கள். ஈட்டி எறிதலில் தங்க பதக்கம் வென்ற பிரியந்த ஹேரத்திற்கு கொழும்பு - 02 கொம்பனி தெருவில் வீடு ஒன்றை பிரதமர் மகிந்த ராஜபக்சா பரிசளித்துள்ளார். குத்துச் சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற இந்துகாதேவிக்கு பிரதமர் மகிந்த ராஜபக்சா இதுவரை எந்த பரிசும் அளிக்கவில்லை. இதற்கு பிரியந்த ஹேரத் சிங்களவர் , இந்துகாதேவி தமிழர் என்பதைத் தவிர வேறு காரணம் ஏதும் உண்டா?

திமுக வரலாறு காணாத வெற்றி என்கிறார்கள்.

திமுக வரலாறு காணாத வெற்றி என்கிறார்கள். ஆனாலும் அவர்களால் வெற்றியை அனுபவிக்க முடியவில்லை. அதற்கு காரணம் சென்னையில் பாஜக பெண் ஒருவர் பெற்ற வெற்றி என நீங்கள் நினைக்கக்கூடும். அவர்களுக்கு தமிழ்நாட்டில் பாஜக வேரூன்றியது மட்டுமல்ல துளிர்விட்டிருப்பதும்கூட கவலை இல்லை. மாறாக, நாம் தமிழர் கட்சியினர் ஏழு வெற்றிகளைப் பெற்றுவிட்டனரே என்பதைத்தான் அவர்களால் தாங்க முடியவில்லை. நாம் தமிழர் கட்சியினர் மலையில் ஏதோ ஒரு கல்லை உடைத்துக்கொண்டிருப்பதாக இவர்கள் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் ஆரியம் , திராவிடம் என்ற இரு மலைகளை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை வரலாறு விரைவில் காட்டும்.

இந்த சிரிப்பின் அர்த்தம் என்ன?

•இந்த சிரிப்பின் அர்த்தம் என்ன? ஒரு கவுன்சிலர் சீட்டாவது ஜெயிச்சுவிட்டு வாங்கடா என்றவர்களுக்கு அளிக்கும் பதில்தான் இந்த சிரிப்பு. அதுமட்டுமல்ல எம்.பி எம்.எல்.ஏ சீட்டெல்லாம் விரைவில் வெற்றி கொள்வோம் என்ற நம்பிக்கையும் இந்த சிரிப்புக்கு பின்னால் இருக்கிறது. வோட்டுக்கு பணம் கொடுப்பதில்லை. யாருடனும் கூட்டும் இல்லை. தனித்து நின்று பெற்று வரும் வளர்ச்சி நிச்சயம் பெருமை கொள்ள வேண்டியதொன்றே.

வாழ்த்துக்கள்!

வாழ்த்துக்கள்! உலக சதுரங்க சாம்பியன் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி சரித்திரம் படைத்திருக்கிறார் தமிழக 16 வயது பிரக்ஞானந்தா

ஈழத்தில் இந்திய ராணுவம்

ஈழத்தில் இந்திய ராணுவம் 800க்கு மேற்பட்ட பெண்களை பாலியல் வல்லுறவு செய்தது. 80 வயது கிழவிகளைக்கூட இந்திய ராணுவத்தினர் பாலியல் வல்லுறவு செய்வதாக அப்போதைய பிரதமர் பிரேமதாசா பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதனை இன்றுவரை இந்திய அரசோ அதன் ராணுவமோ மறுக்கவில்லை. ராஜிவ் காந்தியை ஒரு ஈழப் பெண் கொன்றுவிட்டதாக புலம்புவர்கள் ஈழத்தில் இந்திய ராணுவத்தால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண்கள் குறித்து கவலைப்படுவதில்லை. இன்றுவரை இந்திய ராணுவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் வழங்கப்படவில்லை. அது குறித்தும் அவர்களுக்கு அக்கறை இல்லை. தனது சொந்த நாட்டில் சொந்த மக்களை பாலியல் வல்லுறவு செய்யும் இந்திய ராணுவம் ஈழத்தில் எப்படி நடந்துகொண்டிருக்கும் என்பதை கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.

நாம் தமிழர் கட்சியினரை

நாம் தமிழர் கட்சியினரை விமர்சிக்கும் ஆரியமும் திராவிடமும் இதற்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்?

யாழ். சிறைச்சாலையில்

யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரத்தினசிங்கம் கமலாகரன், வைத்தியலிங்கம் நிர்மலன் மற்றும் பத்மநாதன் ஐங்கரன் ஆகிய 3 அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு, கைதிகளின் உறவினர்கள் அவர்களுக்கு ஆதரவாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிங்கள அரசு கொண்டு வரப்போவதாக

சிங்கள அரசு கொண்டு வரப்போவதாக அறிவித்திருப்பது “ஒரே நாடு ஒரே சட்டம்” ஆனால் அறிவிக்காமல் கொண்டு வந்திருப்பது “ஒரே நாடு ஒரே இருட்டு” ஆம், நாடு முழுவதும் மின்வெட்டு அமுலுக்கு வந்துள்ளது.

கள்ள வோட்டு போட்டவர

கள்ள வோட்டு போட்டவரை பிடித்தவர்மீது வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளார்கள். அந்த கள்ளவோட்டு போட்டவர் மீது ஏதும் வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளார்களா?

இந்த வலி எந்தளவு

இந்த வலி எந்தளவு கொடுமையானது என்பதை ஈழத் தமிழராகிய நாம் நன்கு அறிவோம்

என்றும் நினைவில் கொள்வோம்!

•என்றும் நினைவில் கொள்வோம்! ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை தடுத்து நிறுத்தக்கோரி, சிவகாசி ஆணையூர் பஞ்சாயத்து அய்யம்பட்டியைச் சேர்ந்த கோகுலகிருட்ணன் என்பவர் தீக்குளித்து உயிர் நீத்த நாள் இன்று. (25.02.2009)

உறவுகள் பிரிவதும்

உறவுகள் பிரிவதும் அந்த பிரிந்த உறவுகள் பின்னர் ஒருவரை ஒருவர் தேடி அலைவதும் போர் சப்பி துப்பிவிட்டுச் செல்லும் வலிகள்.