Saturday, February 26, 2022

மக்கள் என்றும் மகத்தானவர்களே!

மக்கள் என்றும் மகத்தானவர்களே! கொட்டும் பனியில் இனப்படுகொலைக்கு நீதிகேட்டு இவர்கள் ஜெனிவாவுக்கு சென்றபோது தாயகத்தில் இருந்து வந்திருந்த சுமந்திரன் நடந்தது இனப்படுகொலை அல்ல என்று கூறினார். இன்று அந்த சுமந்திரனே நிலமீட்பு போராட்டம் என்று குருந்தூர் மலைக்கு எழுச்சிப் பயணம் செல்கிறார். பல்கலைக்கழக மாணவர்கள் சுதந்திரதினத்தை கரிநாளாக அறிவித்தபோது அப்படி கூறுவது தவறு என்று சொல்லி தன் மனைவியுடன் சுதந்திரதினவிழாவில் பங்குபற்றிய சுமந்திரன் இப்போது அதே சுதந்திரநாளில் போராட்டம் நடத்துகிறார். அதுமட்டுமல்ல “ நசிந்து காலடியில் கிடவோம்.பொங்கியெழுந்தினிப் போராடுவோம்” என்றும் அறிவித்திருக்கிறார். சுமந்திரனின் இந்த அதிசய மாற்றத்தை நிகழ்த்திக் காட்டியிருப்பவர்கள் தமிழ் மக்களே. அவர்கள் என்றும் மகத்தானவர்களே. போராட்டம் அனைத்து தமிழ்பேசும் மக்களையும் ஒன்றிணைப்பதைக் கண்டு சிங்கள அரசு அச்சமடைகிறது. ஆனால் போராட்டத்தைக்காட்டி புலம்பெயர் நாடுகளில் அகதி அந்தஸ்து பெற்ற சிலர் “ போராட்டத்தினால் என்ன பயன்?” என்று நக்கலாக கேட்கிறார்கள். வெகுவிரைவில் தமிழ் மக்கள் இவர்களுக்கும் உரிய பதிலை வழங்குவார்கள்.

No comments:

Post a Comment