Saturday, February 26, 2022

சம்பந்தர் ஐயாவை

•சம்பந்தர் ஐயாவை எதை சொல்லி வாழ்த்துவது? சம்பந்தர் ஐயாவின் 89வது பிறந்தநாள் இன்று ஆகும். காது கேட்கவில்லை. கண் தெரியவில்லை. மற்றவர் உதவி இன்றி எழுந்து நடமாடக்கூட முடியவில்லை. ஆனாலும் பதவியை விட்டு ஒதுங்க இன்னும் அவருக்கு மனம் வரவில்லை. வவுனியாவில் பெண்கள் அவரது உருவப் பொம்மையை எரித்தார்கள். கிளிநொச்சியில் மண்ணை வாரி எறிந்து தூற்றினார்கள். யாழ்ப்பாணத்தில் “செத்துப்போ” எனத் திட்டித் தீர்த்தார்கள். ஆனாலும் கொஞ்சம்கூட வெட்கமின்றி பதவியை விடாமல் கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறார். ஒருவர் எத்தனை தவறு செய்திருந்தாலும் அவரது மரணம் அவர் தவறுகளை மன்னித்துவிடும்; என்பார்கள். ஆனால் அந்த மரணம்கூட சம்பந்தர் ஐயாவுக்கு மன்னிப்பை பெற்று தரப்போவதில்லை. ஒவ்வொரு தீபாவளிக்கும் அடுத்த வருடம் தீர்வு வந்துவிடும் என்று கொஞ்சம்கூட கூச்சமின்றி அறிக்கை விட்டுக்கொண்டிருந்தார். சோத்தில் கொஞ்சமாவது உப்பு போட்டு தின்பவராக இருந்தால் கூறியபடி தீர்வு பெற்று தந்திருக்க வேண்டும். இல்லையேல் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிபோன பின்பும் அதன் சொகுசு மாளிகைiயை கெட்டியாக வைத்திருக்கும் இப்படிப்பட்ட ஒரு மனிதரை என்ன சொல்லி வாழ்த்துவது?

No comments:

Post a Comment