Wednesday, December 30, 2015

பேரறிவாளனுக்கு இனியாவது நீதி வழங்கப்படுமா?

 பேரறிவாளனுக்கு இனியாவது நீதி வழங்கப்படுமா?
ஒரு காட்டிலிருந்து அலறியடித்து ஓடி வந்த பசுவைத் தடுத்த யானை "ஏன் இத்தனை பயத்துடன் ஓடுகிறாய்? " என்று கேட்டது. "காட்டில் உள்ள எல்லா எருமைகளையும் பிடிப்பதற்கு அரசாங்கம் உத்தரவு போட்டிருக்கிறது" என்றது பசு. "நீ பசுதானே. அப்புறம் எதற்கு ஓடுகிறாய்?" என்று யானை கேட்க "நான் பசுங்கிறது எனக்கு தெரியும். ஆனா என்னை அரசாங்கம் பிடிச்சிச்ன்னா நான் எருமை இல்லை பசு என்று நிரூபிக்க 25 வருடமாயிடும்" என்றது பசு. இப்போது பசுவுடன் சேர்ந்து யானையும் ஓட ஆரம்பித்தது.
கிட்டத்தட்ட பேரறிவாளன் கதையும் இந்த பசுவின் கதை போலவே இருக்கின்றது.
தாமதிக்கப்ட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும் என்பார்கள். 25 வருடங்களாக காத்துகொண்டிருக்கும் பேரறிவாளனுக்கு தாமதித்தாவது நீதி வழங்கப்படுமா?

•தமிழ்நாடு மக்கள் மழை வெள்ளத்தில் மூழ்கிறார்கள் இந்திய அரசோ இலங்கைக்கு ராணுவ உதவி செய்கிறது!

•தமிழ்நாடு மக்கள் மழை வெள்ளத்தில் மூழ்கிறார்கள்
இந்திய அரசோ இலங்கைக்கு ராணுவ உதவி செய்கிறது!
மழை தொடர்ந்து பெய்கிறது. வீதிகளில் வெள்ளம் ஆறாக பாய்கிறது. மக்கள் வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள. இந்திய அரசோ மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு பதிலாக இலங்கைக்கு ராணுவ உதவி வழங்குகிறது.
இந்திய அரசு தமிழ்நாட்டில் இருந்து ஆண்டுக்கு 85 அயிரம் கோடி ரூபா வரியாக பெற்றுக்கொள்கிறது. ஆனால் அது தமிழ்நாட்டிற்கு வழங்கும் பணம் வெறும் 27ஆயிரம் கோடி ரூபா மட்டுமே.
ஆண்டு தோறும் 58 ஆயிரம் கோடி ருபாவை பெற்றுக் கொள்ளும் இந்திய அரசு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு மறுக்கிறது.
ஆனால் அதே இந்திய அரசு இலங்கையின் ராணுவத்தை மேம்படுத்த உதவி வழங்குகிறது அண்மையில் போhக்கப்பலை அன்பளிப்பாக வழங்கிய இந்திய அரசு தொடர்ந்தும் இலங்கை ராணுவத்திற்கு உதவிகள் வழங்கப்படும் என இந்திய ராணவ தளபதி உறுதியளித்துள்ளார்.
இலங்கை ராணுவம் இலங்கைத் தமிழ் மக்களை மட்டுமல்ல தமிழக மீனவர்களையும் கொன்று வருகிறது.
உலகில் தனது நாட்டு மீனவனைக் கொல்லும் அந்நிய நாட்டு ராணுவத்திற்கு உதவி வழங்கம் ஒரே நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு மட்டுமே உண்டு.
தமிழ்நாடு இந்திய அரசின் கீழ் அடிமையாக இருப்பதாலேயே இந்திய அரசு இவ்வாறு தொடர்ந்து வஞ்சனை செய்கிறது.
தமிழகம் இந்திய அரசில் இருந்து வெளியேறினால்>
•ஆண்டுதோறும் இந்திய அரசுக்கு வழங்கி வரும் 58 ஆயிரம் கோடி ரூபாவை தமிழக மக்களுக்கு செலவு செய்யலாம்.
•இலங்கை ராணுவத்திற்கு இந்திய அரசு வழங்கி வரும் உதவியை நிறுத்தலாம்
•தமிழக மினவர்களை மட்டுமல்ல இலங்கை தமிழ் மக்களையும் பாதுகாக்கலாம்
•தமிழ்நாட்டின் இன்றைய கடன்தொகையான 1.21லட்சம் கோடி ரூபாவை கட்டலாம்.
தமிழக மக்கள் இனியாவது இந்த உண்மையை உணர்ந்து கொள்வார்களா?

• பேரறிவாளனை தமிழக மக்கள் விடுதலை செய்வார்கள்

• பேரறிவாளனை தமிழக மக்கள் விடுதலை செய்வார்கள்
இந்திய உச்ச நீதிமன்றம் தான் ஒரு உச்சிக் குடுமி மன்றம் என்பதனை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
தமிழக மக்கள் தனிநாடாக பிரிந்து தமக்குரிய உச்ச நீதிமன்றத்தை நிறுவுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை இது காட்டியுள்ளது.
உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பையடுத்தே தமிழக அரசு பேரறிவாளனை விடுதலை செய்தது. இப்போது அவ்வாறு விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று அதே உச்சநீதிமன்றம் கூறுகிறது.
பேரறிவாளனுக்குரிய நீதி மறுக்கப்பட்டிருக்கிறது. இனி பேரறிவாளனுக்குரிய நீதியை தமிழக மக்களே வழங்குவார்கள்.
தமிழக மக்களால் மட்டுமே பேரறிவாளனை விடுதலை செய்ய முடியும். தமிழக மக்களே பேரறிவாளனை விடுதலை செய்வார்கள்.
பேரறிவாளனுக்கு நீதி மறுக்கப்பட்டிருப்பது தமிழக மக்கள் இந்திய அரசுமீதான நம்பிக்கை இழப்பதற்கும் தனிநாட்டுக்குரிய அவசியத்தை உணருவதற்கும் வழி செய்கிறது.
தமிழக விடுதலைப் போராட்ட வரலாற்றில் இனி பேரறிவாளன் பெயர் முக்கிய இடம் பெறுவதற்கும், தமிழக விடுதலைப்போராட்டம் வலுவாக முன்னெடுப்பதற்கும் இந்திய அரசு தன்னையும் அறியாமல் வழி செய்துள்ளது.

•தமிழக அரசு கேட்ட தொகை 5 ஆயிரம் கோடி!

•தமிழக அரசு கேட்ட தொகை 5 ஆயிரம் கோடி!
மோடி அரசு கொடுத்திருப்பதோ 2 ஆயிரம் கோடி!!
இந்திய அரசு தமிழகத்தில் இருந்து பெறும் தொகையோ
ஒவ்வொரு வருடமும் 85ஆயிரம் கோடி ரூபா!!!
இதுவரை 900 பேர் மழையால் பலியாகியுள்ளார்கள்
பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.
வரலாறு காணாத பேரிழப்பு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்திய அரசும் தமிழக அரசும் மக்களைக் காக்க தவறியதுடன் உரிய நிவாரணங்களையும் அளிக்காமல் இருக்கின்றன.
பிரதமர் மோடி கெலிகப்டரில் சென்னையை சுற்றிப் பார்த்தாராம்.
அதில்கூட போட்டோசொப் மோசடி செய்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
முதலமைச்சர் தொகுதியில்கூட உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை.
ஆத்திரம் கொண்ட மக்கள் இரண்டு அமைச்சர்களை விரட்டியடித்துள்ளனர்.
வரி வசூலித்த அரசுகள் மக்களுக்கு ஒரு உதவியும் செய்யவில்லை.
மக்கள் தாங்களாகவே ஒருவருக்கொருவர் உதவி வருகின்றனர்.
முதன் முதலாக புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களும் தமிழக தமிழர்களின் துயர் துடைக்க உதவி செய்கின்றனர்.
முகநூல் , டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் பெருமைப்படக்கூடிய வகையில் பங்காற்றுகின்றனர்.
மனிதாபிமானம் இன்னும் மரணித்துவிடவில்லை என்பதை இவை எடுத்துக்காட்டுகின்றன.

•என்னே கேவலமான அரசியல் பிழைப்பு இது?

•என்னே கேவலமான அரசியல் பிழைப்பு இது?
தமிழகத்தில் வரலாறு காணாத பேரிடர். வரி வசூலித்த அரசு உதவி செய்யாமல் இருக்கிறது.
மக்கள் தாங்களாகவே ஒருவருக்கொருவர் உதவி வருகின்றனர்.
அம்மா வழக்கை கர்நாடகா நடத்துவதால் அது வழங்க முன்வந்த பணத்தை வாங்க தமிழக அரசு மறுத்துவிட்டது.
கேரள அரசு 60 பஸ் வண்டிகளை இலவசமாக இயக்க முன்வந்துள்ளது. அது தனது முதலமைச்சர் படத்தை எங்குமே ஒட்டி விளம்பரம் செய்யவில்லை.
ஆனால் தமி;நாடு அரசு மக்கள் சேகரித்த உதவிப் பொருட்களுக்கு"அம்மா" படம் ஒட்டி கொடுக்க முயலுகின்றது.
50000 உணவுப் பொட்டலங்கள் "அம்மா" படம் ஒட்ட தாமதமானதால் பழுதடைந்து வீதியில் வீசப்பட்டுள்ளது.
இராணுவம் வந்துள்ளது என்று விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் வந்த ராணுவத்திடம் வெள்ள நிவாரணப் பணிகளுக்கரிய போதிய உபகரணங்கள் இல்லை.
அமெரிக்கா உதவி வழங்க தயார் என்று அறிவித்துள்ளது. ஆனால் இந்திய அரசு அதனை ஏற்கவில்லை. ஏனெனில் சாவது தமிழன் அல்லவா!
என்னே கேவலமான அரசியல் பிழைப்பு இது. இந்த பிழைப்பிற்கு நாண்டிக்கிட்டு சாவலாம்

•தமிழர்களுக்கு ஒரு நியாயம்! மற்றவர்களுக்கு இன்னொரு நியாயம்!! இதுதான் இந்திய அரசின் நியாயமா?

•தமிழர்களுக்கு ஒரு நியாயம்!
மற்றவர்களுக்கு இன்னொரு நியாயம்!!
இதுதான் இந்திய அரசின் நியாயமா?
இந்திய அரசு நேபாளத்திற்கு வழங்கிய உதவி 14 ஆயிரம் கோடி
இந்திய அரசு பூட்டானுக்கு வழங்கிய உதவி 8 அயிரம் கோடி
இந்திய அரசு இலங்கைக்கு வழங்கிய உதவி 10 ஆயிரம் கோடி
இந்திய அரசு ஆப்கானிஸ்தானுக்கு வழங்கிய உதவி 1 ரில்லியன் டொலர்.
எங்கோ இருக்கும் மங்கோலியாவுக்கு கடந்த மாதம் இந்திய அரசு வழங்கியது 6500 கோடி
ஆனால் இந்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்கியதோ ஆயிரம் கோடி மட்டுமே.
தமிழ்நாடு வெள்ள அழிவு 50 ஆயிரம் கோடிக்கு மேலே
தமிழ்நாடு அரசு கேட்ட தொகை 5 ஆயிரம் கோடி
இந்திய அரசு வழங்கியதோ ஆயிரம் கோடி மட்டுமே
இந்திய அரசு தமிழ்நாட்டில் இருந்து பெறும் வரியோ 85 ஆயிரம் கோடி
இந்திய அரசு,
இலங்கை அரசின் பட்ஜட் துண்டு விழும் தொகைக்கு உதவுகிறது.
இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி வழங்கி வருகிறது.
இலங்கை ராணுவத்தை நவீனமயமாக்க உதவி வழங்குகிறது.
தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்லும் இலங்கை கடற்படைக்கு
போர்க்கப்பல் வழங்கியுள்ளது.
அதேவேளை,
தமிழக அரசின் இன்றைய கடன் 1.21லட்சம் கோடி ரூபா.
இதற்கு வட்டியாக 10754 கோடி ரூபா தமிழக அரசு கட்டுகிறது.
ஒவ்வொரு தமிழன் தலையிலும் 13862 ரூபா கடன் சுமத்தப்பட்டுள்ளது.
அதாவது பிறக்கும் ஒவ்வொரு தமிழ்க்; குழந்தையும் 13862ரூபா கடனுடனே பிறக்கின்றது.
இந்திய ராணுவம் மிகவும் தாமதமாகவே மீட்பு உதவிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
வந்த ராணுவத்திடம் மீட்பிற்கு வேண்டிய போதிய உபகரணங்கள் இல்லை.
உதவி செய்ய வந்த அமெரிக்காவின் உதவியும் ஏற்கப்டவில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக ஈழத் தமிழர்கள் வடமாகாணசபை ஊடாக உதவி செய்ய முன்வந்ததையும் இந்திய தூதரகம் எற்க மறுத்துவிட்டது.
இப்போது கூறுங்கள்
தமிழகம் இந்தியாவுடன் இணைந்து இருப்பதால் என்ன பயன்?
மாறாக பிரிந்து தனிநாடாக இருந்தால்,
•வருடா வருடம் கட்டும் வரி 85 ஆயிரம் கோடி மிச்சமாகும்.
•ஆப்கானிஸ்தான் ,நேபாளம், பூட்டான் போன்று தமிழ்நாட்டிற்கும் இந்திய அரசு 1 ரில்லியன் அமெரிக்க டாலர் உதவி வழங்கும்
•தமிழக மீனவர்களை மட்டுமல்ல ஈழத் தமிழர்களின் உயிரையும் காக்க முடியும்.

• மீண்டும் ஒரு றிசானா?

• மீண்டும் ஒரு றிசானா?
சிங்கங்களை அல்ல, ஆடுகளையே எப்போதும் பலி கொடுக்கப்படுகின்றன.- டாக்டர் அம்பேத்கார்
சவூதி அரோபியாவில் இதுவரை ஒரு அமெரிக்கர் தண்டிக்கப்படவில்லை. எப்போதும் ஏழை நாட்டவரே தண்டிக்கப்படுகின்றனர்.
கடந்த வருடம் சவூதி அரேபியாவில் ஒரு இலங்கைப் பெண் கழுத்து வெட்டிக் கொல்லப்பட்டார்.
இந்த வருடம் அதே சவூதிஅரேபியாவில் ஒரு இலங்கை பெண் கல்லெறிந்து கொல்லப்பட விருக்கிறார்.
கடந்த வருடம் 17 வயதான றிசானாவை காப்பாற்ற நாம் தவறிவிட்டோம்.
இந்த வருடமாவது அனைவரும் ஒருமித்துக் குரல் கொடுத்து இந்த பெண்ணை காப்பாற்றுவோம்.
ஈரான் நாட்டில் ஒரு அப்பாவிப் பெண் நடத்தை கெட்டவள் என கணவனால் பொய்க் குற்றம் சாட்டப்பட்டு கணவன், தகப்பன், அவளின் ஆண் பிள்ளைகளாலேயே கல்லெறிந்து கொல்லப்பட்டாள்.
ஆனால் அது ஒரு பிரஞ்சு ஊடகவியலாளரால் வெளி உலகத்திற்கு தெரிய வந்தது. அந்த உண்மை சம்பவம் படமாக எடுக்கப்பட்டது.
அதனை கீழ்வரும் இணைப்பில் பார்வையிடலாம்.
நடத்தை கெட்டவள் என்று ஒரு பெண்மீது குற்றம் சுமத்துகிறார்கள்.
அப்புறம் அவளே தான் நடத்தை கெட்டவள் அல்ல என்று நிரூபிக்கும்படி கேட்கிறார்கள்.
அப்பறம் அவள் நடத்தை கெட்டவள் என்று அவர்களே தீர்ப்பு கூறுகிறார்கள்.
அப்புறம் அவர்களே கல் எறிந்து அவளை கொலை செய்கிறார்கள்.
இத்தனையையும் மதத்தின் பேரால,; கடவுளின் பேரால் செய்கிறார்கள்.
இது ஆண்களின் உலகம். அண்களுக்கு மட்டுமேயான உலகம் என்கிறார்கள்.
இங்கு பெண்கள் சக மனிதர்களாக நடத்தப்படுவதில்லை.
மாறாக மிருகங்களைவிட கேவலமாகவே மதிக்கப்படுகிறார்கள்.
பெண் அடிமை நீங்காத வரையில் எந்தவொரு சமூகமும் முன்னேறிவிட முடியாது.

•சல்மான்கான் விடுதலை ஆச்சரியம் இல்லை.

•சல்மான்கான் விடுதலை ஆச்சரியம் இல்லை.
மாறாக, விடுதலை செய்யாவிடின்தான் ஆச்சரியம்!
சல்மான்கான் குடித்துவிட்டு கார் ஓட்டியது குற்றம் இல்லை.
சல்மான்கான் ஏழை மீது கார் ஏற்றிக் கொன்றது குற்றம் இல்லை.
மாறாக, அந்த ஏழை வீதி ஓரத்தில் படுத்திருந்ததே குற்றமாகும்.
ஏ.கே 47 ஆயுதம் வைத்திருந்த நடிகர் சஞ்தத் பல முறை பரோலில் வெளியே வந்தார். அதுமட்டுமல்ல விரைவில் அவரை நன்னடத்தையில் விடுதலை செய்யவும் உள்ளார்கள்.
ஆனால் பற்றரி வாங்கி கொடுத்ததாக கூறப்படும் பேரறிவாளனுக்கு பரோல் விடுதலையும் இல்லை. 25 வருடமாகியும் நன்னடத்தை விடுதலையும் இல்லை.
சங்கரராமனை ஆள் வைத்து கொலை செய்த "தாதா" சங்கராச்சாரியார் விடுதலை.
அப்படியென்றால் சங்கரராமன் தன்னைத்தானே கொலை செய்து இறந்தாரா?
உள்ளவனுக்கு ஒரு நீதி.!
இல்லாதவனுக்கு இன்னொரு நீதி!
இதுதானா இந்திய நீதி?
இந்திய நியாயப்படி,
சல்மான்கான் விடுதலை செய்யப்பட்டிருப்பது ஆச்சரியமில்லை.
மாறாக அவர் தண்டிக்கப்பட்டிருந்தாலே ஆச்சரியமாக இருக்கும்.

•British Tamil Chamber of Commerce

•British Tamil Chamber of Commerce
பிரித்தானிய தமிழ் வர்த்தகர்களின் நலனை முன்னிட்டு பிரித்தானிய தமிழ் வர்த்தக நிறுவனம் இயங்கி வருகிறது. இது ஒரு இலாப நோக்கற்ற நிறுவனம். இது பிரித்தானிய தமிழ் வர்த்தகர்களுக்கான மாபெரும் கண்காட்சி ஒன்றை எதிர்வரும் 10.04.2016 யன்று லண்டனில் நடத்தவுள்ளது.
இங்கிலாந்தில் 7000 ற்கு மேற்பட்ட தமிழ் வியாபார நிறுவனங்கள் உள்ளன. அவற்றை எல்லாம் இணைத்து அவற்றுக்கு தேவையான உதவிகளை வழங்கி அவை முன்னேறுவதற்கு வழி செய்வதே இவ் அமைப்பின் நோக்கமாகும்.
கடந்த வருடம் நடைபெற்ற கண்காட்சியில் 140 ற்கு மேற்பட்ட தமிழ் நிறுவனங்கள் பங்கு பற்றியிருந்தன. 4000ற்கு மேற்பட்ட பார்வையாளர்கள் வந்திருந்தனர். இம்முறை 10 ஆயிரம் பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தமிழ் நிறுவனங்கள் தங்களை அறிமுகம் செய்யவும் தமது வியாபாரத்தை விருத்தி செய்யவும் இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.
கடந்த வருடம் நிகழ்வை ஒழுங்கு செய்த "நாச்சியார்" நிறுவனமே இம் முறையும் நிகழ்வை ஒழுங்கு செய்கிறது.
பிரித்தானியாவில் மட்டுமல்ல ஜரோப்பா மற்றும் கனடா போன்ற நாடுகளிலும் இவ்வாறான தமிழ் வர்த்தக அமைப்பு உருவாக்கப்பட்டு அவற்றுக்கிடையே ஒரு ஒழுங்கமைப்பு பேணப்படுமாயின் அது நிச்சயம் தமிழ் வர்த்தக சமூகத்திற்கு பயனாக இருக்கும்.

ஓ! கடவுளே,

ஓ! கடவுளே,
வீதியில் உறங்கியவரை
கார் எற்றிக் கொன்றவர்
உன் அருளால் விடுதலையானாராம்!
இனியாவது,
உறங்க ஒரு கூரையின்றி
வீதியில் உறங்குபவர்களுக்கு
கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்க வேண்டாம்.
உறங்க ஒரு கூரையைக் கொடு.
அது போதும்!

•தியாகி அப்துல் ரவூப்பை நினைவு கூருவோம்!

•தியாகி அப்துல் ரவூப்பை நினைவு கூருவோம்!
சிம்பு பாடிய பாடல் ஆபாசமா? இல்லையா? என்ற இன்றைய மாபெரும் இலக்கிய பட்டிமன்றத்தின் நடுவே ஈழத் தமிழர்களுக்காக உயிர் நீத்த அப்தல் ரவூப் தியாகம் மறந்து போனது ஒன்றும் ஆச்சரியமான விடயம் இல்லைத்தான்.
என்ன செய்வது? அப்தல் ரவூப்பிற்கு எல்லோரும் போல் ஒன்றாக கோசம்போட்டுவிட்டு கலைந்து போகத் தெரியவில்லை. அவன் ஈழத் தமிழர்களையும் தன் உடன்பிறப்பாக நினைத்தது முட்டாள்தனம்தான்.
தமது அபிமான நடிகர்களுக்கு கட்அவுட் கட்டி பால் அபிசேகம் செய்யும் இளைஞர் கூட்டத்தின் மத்தியில் ஈழத் தமிழர்களுக்காக தன் உயிரை தியாகம் செய்த அப்துல் ரவூப் பிழைக்கத் தெரியாதவன்தான் போலும்.
1995ம் ஆண்டு மார்கழி மாதம் 15ம் திகதி. நான் துறையூர் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தேன. எமக்கு பத்திரிகைகளோ , சஞ்சிகைகளோ எதுவுமே அனுமதிக்கப்படவில்லை. வெளியில் என்ன நடக்கிறது என்பதை காவலுக்கு நிற்கும் சில பொலிஸ்காரர்களிடம் மட்டுமே தெரிந்து கொண்ட காலம் அது.
அப்போது ஒரு காவலர் துறையூரில் அப்துல் ரவூப் என்ற முஸ்லிம் இளைஞன் ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து இறந்துவிட்டான் என்ற செய்தியை கூறினார்.
இச் செய்தியை கேட்டதும் நான் ஆச்சரியம் அடைந்தேன். ஏனெனில் அது ஜெயா அம்மையாரின் இருண்ட ஆட்சிக் காலம். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போர் தடா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட காலம். ராஜீவ் கொலைக்கு பின்னர் தமிழக மக்களின் ஆதரவு இல்லை என்று கூறப்பட்ட காலம்.
அப்துல் ரவூப் மரணம்,
• ஈழத் தமிழர்களுக்கு தமிழக மக்களின் ஆதரவு உண்டு என்பதை வெளிப்படுத்தியது
• தடா சட்டத்தின் மூலம் தமிழக மக்களின் அதரவுக் குரலை நசுக்க முடியாது என்பதை காட்டியது.
• ராஜீவ் மரணத்தால் தமிழக மக்களின் ஈழ ஆதரவு நிலை மாறவில்லை என்பதைக்காட்டியது.
• எல்லாவற்றுக்கும் மேலாக ஈழத் தமிழர்களுக்காக மரணத்தை தழுவவும் தமிழக இளைஞர்கள் தயங்க மாட்டார்கள் என்பதை இந்திய அரசுக்கு காட்டியது.
• தமக்காக குரல் கொடுக்க தாய்த் தமிழகம் இருக்கிறது என்பதை ஈழத் தமிழர்களுக்கு உணர்த்தியது.
எதிரிக்கு எந்த இழப்பையும் கொடுக்காமல் தன்னைத்தானே எரித்து மரணிப்பதில் எமக்கு உடன்பாடு இல்லை.
மாறாக ஆயுதம் ஏந்திப் போரிட்டு மடிவதே சிறந்த வழி என நாம் கருதுகிறோம். இருப்பினும் ரவூப் மரணம் பல பயன் உள்ள செய்திகளை தமிழ் மக்களுக்கு தந்துள்ளது.
ரவூப் தியாகத்தைப் போற்றுவோம்!
அவரை என்றும் நினைவில் கொள்ளுவோம்!!

கலைஞர்! திருந்தவில்லை. திருந்தப்போவதும் இல்லை.

•கலைஞர்!
திருந்தவில்லை.
திருந்தப்போவதும் இல்லை.
வரலாறு காணாத பேரிடர். மக்களும் வைகோ போன்ற தலைவர்களும் நிவாரணப் பணிகளில் மூழ்கியிருக்கின்றனர்.
இந்த நேரத்தில் வைகோ கட்சியை சேர்ந்த நாலு மாவட்ட தலைவர்களை பணம் கொடுத்து கட்சி மாற்றுவது குறித்து யாரால் சிந்திக்க முடியும்?
பதவி வெறி பிடித்த கலைஞரைத் தவிர வேறு யார் இப்படி செய்ய முனைவார்கள்?
40 கோடி கொடுத்து கட்சிக்கு ஆள் பிடித்த கலைஞர் மழை நிவாரணத்திற்கு கொடுத்தது வெறும் ஒரு கோடி மட்டுமே.
பணம் கொடுத்து மாற்று கட்சியினரை வாங்கலாம். ஆனால் மக்களை வாங்க முடியுமா?
ஈழத்தில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது அது குறித்து அக்கறைப்படாமல் டில்லி சென்று தன் மகளுக்கு பதவி கேட்டார்.
பிரபாகரனின் வயதான தாயாருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்காது இரக்கமின்றி திருப்பி அனுப்பினார்.
தற்போது மக்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அது குறித்து கவலையின்றி மாற்று கட்சியினரை பணம் கொடுத்து வாங்குகிறார்.
இது கலைஞர் திருந்தவில்லை. இனி திருந்தப் போவதுமில்லை என்பதையே காட்டுகிறது.
மக்களும் கலைஞரை மறக்கப் போவதுமில்லை. மன்னிக்கப் போவதுமில்லை என்பதை தேர்தலில் காட்டுவார்கள்.

•என்னத்தை சொல்ல?

•என்னத்தை சொல்ல?
எந்த கருத்தையும் சொல்ல விரும்பவில்லை.
மீண்டும் போராட்டம் வெடிக்கும் என பத்திரிகைக்கு பேட்டி கொடுத்துள்ளார் மாவைசேனாதிராசா.
இவர் இவ்வாறு பல முறை கூறிவிட்டார். ஆனால் ஒருமுறைகூட போராட்டம் மட்டுமல்ல ஒரு பட்டாசு கூட வெடிக்கவில்லை.
எனவே இவருடைய இந்த பேட்டி குறித்து எந்த கருத்தும் பதிவு செய்ய நான் விரும்பவில்லை.
ஆனால் ஒன்றை மட்டும் அவருக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.
மாவையார் மேய்ப்பனும் இல்லை. தமிழ்மக்கள் அவர் கூறுவதை அப்படியே நம்பி ஏமாறுவதற்கு மந்தைகளும் இல்லை.

•வீழ்ச்சியடையப்போகும் "லைக்கா" சாம்ராஜ்யம்!

•வீழ்ச்சியடையப்போகும் "லைக்கா" சாம்ராஜ்யம்!
ஒரே கூடையில் அனைத்து முட்டைகளையும் வைப்பது எந்தளவு புத்திசாலித்தனம் இல்லையோ அதேபோல் ஒரு சிறந்த முதலீட்டாளர் தனது அனைத்து முதலையும் ஒரே வியாபாரத்தில் முடக்க மாட்டார்.
அந்த வகையில் "லைக்கா" நிறுவனம் தனது முதலீடுகளை பலவகையான வியாபாரங்களில் முதலிடுவது ஒரு சிறந்த நிதி முகாமைத்துவ முடிவுதான் என்றாலும் இந்திய சினிமாவில் அவர்கள் முதலிடுவது அவர்களின் வீழ்ச்சிக்கான வழி எனக் கருதப்படுகிறது.
இந்திய சினிமாவில் இதுவரை எந்தவொரு ஈழத் தமிழனும் ஜெயித்ததில்லை. இனியும் ஜெயிக்க அவர்கள் இலகுவில் விட்டுவிடப்போவதில்லை.
இந்நிலையில் எந்திரன்-2ல் மிகப்பெரிய முதலீட்டை "லைக்கா" நிறுவனம் செய்ய முன்வந்திருப்பது அதன் வீழ்சிக்கான அறிகுறியாகவே இருக்கிறது.
பெற்றோல் நிலையங்களில் தினசரி 12 மணி நேரம் தும்படித்தும் மாதாந்த வீட்டு மோகேஜ்யையே கட்ட முடியாமல் திண்டாடும் எம்மவர்கள் மத்தியில் வன்னியில் இருந்து வெறும் கையுடன் வந்த "லைக்கா" முதலாளி மட்டும் எப்படி பல மில்லியனுக்கு அதிபதியானார் ?
மில்லியன் டாலர் கேள்வி இது?
வருமானம் - செலவு = இலாபம் என்று அக்கவுண்டன்மார் கூறுகிறார்கள். ஆனால் "லைக்கா" போன்று டெலிபோன்காட் விற்ற பலர் நட்டத்தில் இருக்கும்போது "லைக்கா" மட்டும் எப்படி பல மில்லியன் லாபம் பெற முடிந்தது?
"லைக்கா" லாபம் எப்படி பெறுகிறது என்பதைவிட அது தனது லாபத்தை மேலும் பெருக்க செய்யும் அரசியல் விளம்பரம் ஆச்சரியத்தை அல்ல அருவருப்பையே கொடுக்கிறது.
இந்திய பிரதமர் மோடி உரையாற்றும்போது பிரிட்டன் பிரதமருக்கு பின்னால் அமர்ந்திருக்கும் பாக்கியத்தைப் பெறுவதற்காக பல மில்லியன் அன்பளிப்பு கொடுத்து ஸ்பொன்சர்களில் ஒருவராக "லைக்கா" இடம்பெற்றது.
ஒருபுறம் ஒரு தமிழன் பிரிட்டன் பிரதமருடன் கைகுலுக்கறார் என்று லைக்காவுக்கு பெருமை பேசுகிறார்கள். இன்னொரு புறம் இது மகிந்தராஜபக்சவின் பணம் என கொச்சையாக விமர்சிக்கிறார்கள். ஆனால் யாருமே லைக்காவின் லாபத்திற்கான சுரண்டல் குறித்து பார்க்க மறுக்கிறார்கள்.
எது எப்படியோ லைக்கா என்னும் யானை தன் தலையில் தானே மண் அள்ளிப்போடுகிறது.

கொழும்பை அதிரவைத்த விவசாயிகளின் போராட்டம்!

•கொழும்பை அதிரவைத்த விவசாயிகளின் போராட்டம்!
இலங்கையில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் புலிகளே காரணம். புலிகள் இல்லை என்றால் பாலும் தேனும் ஆறாக ஒடும் என்றார்கள்.
புலிகளும் யுத்தமும் இல்லாமல் 6 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் மக்கள் வாழ்வில் எந்த மாற்றமும் நிகழவில்லை.
விபச்சார தொழில் குறிப்பாக சிறுவர் விபச்சாரத்தில் இலங்கை முதலிடம் பெற்றுள்ளது. இதுவே இலங்கை அரசின் வெட்கம் கெட்ட சாதனையாக உள்ளது.
ஆனால் இலங்கை அரசோ யுத்த காலத்தில் ஒதுக்கப்பட்ட பணத்தைவிட அதிக பணத்தை ராணுவத்திற்கு ஒதுக்குகிறது.
இத்தனை காலமும் அடக்கி வைக்கப்பட்ட மக்கள் தமது தேவைக்காகப் போராட ஆரம்பித்து விட்டார்கள்.
தொழிற் சங்கங்கள் ஒன்றினைந்து வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளன.
விவசாயிகள் ஊர்வலமாக வந்து பிரதமருக்கு மனுக்கொடுக்க முனைந்தள்ளனர். ஆனால் பிரதமர் அவர்களை சந்திக்க மறுத்துவிட்டார்.
விவசாயிகள் தமது வறுமை நிலையை உணர்த்தும் வண்ணம் கோமணத்துடன் தலைநகரை முற்றுகை இட்டுள்ளனர். ஆனால் அது குறித்து பிரதமர் எந்த வெட்கமும் அடையவில்லை.
மீண்டும் அனைத்து விவசாயிகளுடன் வந்து பாராளுமன்றத்தை அல்லது பிரதமர் மாளிகையை முற்றுகையிடப் போவதாக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
உழைக்கும் மக்கள் ஒன்று திரண்டு போராடினால் எந்தவொரு அரசும் ஒரு நிமிடம் கூட தாக்கு பிடிக்க முடியாது. எனவே இதை உணர்ந்த அரசு மீண்டும் புலிகளை உருவாக்க முனையும்.
ஆனால் இனி மக்களை ஏமாற்ற முடியாது. மக்கள் போராட்டத்தை இனி யாராலும் தடுக்க முடியாது.

ரசியப் புரட்சியின் வரலாற்று நாயகன் தோழர் ஸ்டாலின்

ரசியப் புரட்சியின் வரலாற்று நாயகன் தோழர் ஸ்டாலின்
இன்று மகத்தான தோழர் ஸ்டாலின் பிறந்த தினமாகும்.
தோழர் ஸ்டாலின் அளவிற்கு உலக முதலாளித்துவத்தால் அவதூறு செய்யப்பட்ட தலைவர் வேறுயாரும் இல்லை. அதற்கு காரணம் அவரது ஆட்சி தோற்றுவித்தது வேதனைகள் அல்ல. மகத்தான சாதனைகள்.
மிகவும் பின்தங்கிய விவசாய நாடாக இருந்த ரசியாவை பதினைந்தே ஆண்டுகளில் தொழில் வல்லரசாக மாற்றியதும் பத்து சத வீதம் கூட கல்வியறிவு பெற்றிராத நாட்டை ஏறத்தாழ நூறு சதவீதம் கல்வியறிவு கொண்ட நாடாக மாற்றியதும் உலகப் பொருளாதாரமே நெருக்கடியில் சிக்கிய 1930 களில் ரசியா மட்டும் முன்னேறியதும் கிட்லரிடமிருந்து உலகையே காப்பாற்றியதும் ஸ்டாலின் தலைமையில் ரசிய மக்கள் சாதித்த வெற்றிகள். இவற்றுக்கு ஈடு சொல்லும் வெற்றிகள் இன்றுவரை உலகில் கிடையாது.
பிறப்பால் உயர்ந்தவர்களும் மன்னர்களும் முதலாளிகளும் மட்டும்தான் நாடாள முடியும் என்று நம்பிக் கொண்டிருந்த உலகத்தில் உழைக்கும் வர்க்கம் உலகாள முடியும் என்று நிரூபித்துக் காட்டியது கம்யூனிசம். ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகன் உலகத் தலைவராக முடியும் என்று நிரூபித்துக் காட்டியது ரசிய கம்யுனிஸ்ட் கட்சி.
தோழர் ஸ்டாலின் மறைவின் பின்னர் ஆட்சிக்கு வந்த குருசேவ் காட்டிய பாதையில் சென்ற ரசியா இன்று முதலாளித்துவ நாடாகிவிட்டது. மீண்டும் பிச்சைக்காரர்கள் பட்டினி வேலையின்மை விபச்சாரம் அனைத்தும் அங்கே தலைவிரித்தாடுவதை முதலாளித்துவப் பத்திரிகைகளே எழுதுகின்றன.(முதலாளித்துவ) ஜனநாயகம் மீண்டும் நிலைநாட்டப்பட்டதின் பயன் என்ன என்பது அப்பட்டமாக தெரிந்துள்ளது.
ஸ்டாலின் மீதான குருசேவ் இன் தாக்குதல் வெறும் தனிநபர் விவகாரம் அல்ல. “ லெனின் ஸ்டாலின் காட்டிய வழியில் இனி உலக கம்யுனிஸ்டுகள் புரட்சி செய்யத் தேவையில்லை. தேர்தலில் நின்றால் போதும். அமெரிக்காவை எதிர்க்காமல் சமாதான சகவாழ்வு நடத்தலாம்” என்ற குருசேவின் துரோகக் கொள்கையையும் ஸ்டாலின் மீதான அவதூறையும் சீனத் தலைவர் மாசேதுங் இலங்கை கம்யுனிஸ்ட் தலைவர் சண்முகதாசன் உட்பட பல உலக கம்யுனிஸ்ட்கள் எதிர்த்தனர். இந்த உண்மையை வசதியாக மறைத்துவிட்டு உலக கம்யுனிஸ்ட் இயக்கமே ஸ்டாலினை தூற்றுவது போல் சிலர் சித்தரிக்க முயலுகின்றனர்.
ஆனால் உலகம் உள்ளவரை தோழர் ஸ்டாலின் புகழ் இருக்கும். அதை யாராலும் அழிக்க முடியாது.
தோழர் ஸ்டாலின் குறித்த விமர்சனங்களுக்கு மாவோ தலைமையிலான சீனக் கம்யுனிஸ்ட் கட்சியின் பதில்களை கீழ் வரும் இணைப்பில் வாசிக்கலாம்.

• ஆராரோ ஆரிவரோ ! தூங்கு மகனே நல்லாய் தூங்கு!!

• ஆராரோ ஆரிவரோ !
தூங்கு மகனே நல்லாய் தூங்கு!!
இந்த தள்ளாத வயதிலும் பதவியை விடாது பிடித்துக்கொண்டு
மக்களுக்காக(!) உழைத்த களைப்பில் தூங்கும் எமது தலைவர்கள்.
சிறையில் உள்ளவர்களை விடுவிக்க நடத்திய போராட்டக் களைப்பு,
காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க நடத்திய போராட்டக் களைப்பு,
காணிகளை மீட்க நடத்திய போராட்டக் களைப்பு,
எனவே, பாவம் அவர்கள் சிறிது உறங்கட்டும்
தொந்தரவு செய்யாதீர்கள். விட்டு விடுங்கள்.
என்ன பு--க்கு இவர்களை தெரிவு செய்தோம் என
சிலர் பீப் சாங் பாணியில் திட்டுகிறார்கள்.
அப்படி தரக் குறைவாக திட்டாதீர்கள்.
என்ன இருந்தாலும் அவர்கள் எமது தலைவர்கள் அல்லவா!
மீண்டும் மீண்டும் சம்பள உயர்வு
போதாக்குறைக்கு சொகுசு வாகனம்.
வார இறுதியில் இந்தியன் தூதரலாயத்தில் தண்ணி பார்ட்டி
ஏன் இவர்கள் பதவியை விடமாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்கள் என்று இப்போது புரிகிறதா?
சிறிய உறக்கம் அல்ல நீண்ட உறக்கம் கொள்ளட்டும் (செத்து தொலையட்டும்) என சிலர் விரும்பலாம். ஆனால் இதை விட்டால் அவர்கள் வேறு என்ன வேலைக்கு போக முடியும்?
தலைவர்கள் தூங்கலாம். ஆனால் மக்கள் தூங்கவில்லை. விழித்துக்கொண்டே இருக்கிறார்கள் என்பதை அடுத்த தோர்தலில் இவர்களுக்கு காட்டுவார்கள். இது உறுதி.

தமிழ் மக்களின் போராட்டம் "சுமந்திரன்" களை மட்டுமல்ல "லண்டன் பாபா" க்களையும் கடந்து போகும்!

•தமிழ் மக்களின் போராட்டம் "சுமந்திரன்" களை மட்டுமல்ல "லண்டன் பாபா" க்களையும் கடந்து போகும்!
கடந்த மாதம் லண்டனில் மாவீரர் உரையாற்றிய லண்டன் பாபா இந்த மாதம் இலங்கை சென்று பிரதமர் ரணிலுடன் கை குலுக்கியுள்ளார். இந்த படத்தை அனுப்பி எனது கருத்தை தெரிவிக்கும்படி ஒரு அன்பர் கேட்டிருக்கிறார்.
என்னத்தை சொல்ல? இதைப் போல இன்னும் பலர் விரைவில் கை குலுக்கும் போட்டோக்கள் வரும். அதெயெல்லாம் தாங்கும் சக்தி இந்த அப்பாவி தமிழ் மக்களுக்கு இருக்க வேண்டும் என்பதைத் தவிர.
லண்டன் பாபாவை எனக்கு சிறுவயதில் இருந்து தெரியும். 1983 ல் இளைஞர்கள் எல்லாம் இயக்கங்களுக்கு சென்று கொண்டிருந்த நேரத்தில் இவர் தனது வீட்டில் கலர் பல்ப்புகள் போட்டு ஆங்கிலப் பாடலுக்கு டிஸ்கோ ஆடியதை ரோட்டில் இருந்து வேடிக்கை பார்த்த இளைஞர்களில் நானும் ஒருவன்.
அப்போது இவரது செயல்கள் எமக்கு வேடிக்கையாகவும் பையித்தியக்காரத்தனமாக இருந்தது. ஆனால் நாங்கள் யாருமே இவர் 2015ல் தமிழ் மக்களை பையித்தியமாக்குவார் என்று உண்மையில் எதிர்பார்க்கவேயில்லை.
அதேபோல் லண்டன் வந்து அவர் ரஜனி பாடலுக்கு ஆடி "லண்டன் பாபா" பட்டத்தையும் விரும்பி சூட்டிக கொண்டதும்;கூட எனக்கு ஆச்சரியத்தை தரவில்லை. ஆனால் அவர் திடீரென புலிகளின் மேடையில் தோன்றி ஆரம்பகால போராட்ட வரலாறுகள குறித்து முழங்கியதைத்தான் என்னால் இன்றும்கூட தாங்க முடியாமல் இருக்கிறது.
இவருடைய அண்ணன் ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் பிரபாகரன். இந்த பிரபாகரன் நெல்லியடி சண்டியர்களில் ஒருவர். 1978ல் கோஸ்டி சண்டைக்கு துப்பாக்கியால் சுட்டு பிரபலமானவர். பின்னர் லண்டன் சென்றுவிட்டார். இந்நிலையில் 1984ல் ஊருக்கு வர விரும்பி வேதாரணியத்தில் எங்களிடம் உதவி கேட்டார். நாங்களும் அவர் மீது இரக்கப்பட்டு எமது வள்ளத்தில் ஏற்றி வந்தோம்.
எமது வள்ளம் நாகர்கோயில் கடற்கரையை அண்மித்த போது திடீரென இலங்கை கடற்படை சுடத் தொடங்கி விட்டது. இதனை எதிர்பாராத நாங்கள் ஒருவாறு குதித்து தப்பி விட்டோம். ஆனால் எமது வள்ளமும் அதில் இருந்த பொருட்களையம் கடற்படை கைப்பற்றிவிட்டது.
அதில் எம்முடன் வந்த பிரபாகரன் அடையாள அட்டையும் சிக்கிவிட்டது. உடனே இலங்கை அரசு புலிகளின் தலைவர் பிரபாகரனும் அவருடன் கூட வந்த 17 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டதாக வானொலியில் அறிவித்தது.
இதுதான் புலிகளின் தலைவர் பிரபாகரனின் முதலாவது மரண விபரமாகும்

இவர்கள் கலாச்சாரக் காவலர்களா? அல்லது இணையத்தள மாபியாக்களா?

•இவர்கள் கலாச்சாரக் காவலர்களா?
அல்லது இணையத்தள மாபியாக்களா?
ஒரு விபச்சாரியை கல் எறிந்து கொல்ல முனைந்தபோது "உங்களில் யார் முதுகில் அழுக்கு இல்லையோ, அவர் முதலில் கல் எறியுங்கள்" என்று கடவள் இயேசு கூறினாராம்.
ஆனால் இன்றும்கூட ஒரு பக்கத்தில் புளு+பிலிம் வெப்சைட்டுகளை நடத்திக்கொண்டு மறு புறத்தில் விபச்சாரத்திற்கு எதிரான கலாச்சாரக் காவலர்களாக சிலர் காட்டிக் கொள்வது தொடர்கிறது.
இது என்ன நியாயம் என்று கேட்டால், கேட்டவரும் அவளும் படுத்தாள் என்று எழுதுவோம் என மிரட்டுகிறார்கள்.
ஆண்களே பெண்களை விபச்சாரத்திற்கு தள்ளுகிறார்கள்.
ஆண்களே அவர்கள் மீது விபச்சாரி பட்டம் சூட்டுகிறார்கள்.
ஆண்களே அவர்களை விபச்சாரி என்று தண்டிக்கிறார்கள்.
என்ன கொடுமை இது?
ஒரு பெண்ணிற்கு நல்ல வேலையையோ அல்லது வாழ்க்கையையோ கொடுக்க முடியாத சமூகத்திற்கு, அப் பெண்ணை விபச்சாரி என்று கூறி தண்டிக்க என்ன தகுதி இருக்கு?
அன்று, விபச்சாரி என்று குற்றம்சாட்டி இயக்கங்களால்; பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
இன்று சில இணைய மாபியாக்கள் பெண்கள் மீது விபச்சாரம் என்று பட்டம் சூட்டி மிரட்டப்படுகின்றார்கள்.
எப்போதும் பெண்களுக்குதான் தண்டனையா?
இதுவரை விபச்சார வழக்கில் எத்தனை அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்?
இதுவரை எத்தனை உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்? அல்லது இதுவரை இவர்களைப் பற்றி எத்தனை இணையத்தளங்கள் எழதியிருக்கின்றன?
இந்தியாவில் ஒரு சிறுவன் விடுதலை செய்யப்படுவதற்கு எதிராக சட்டத்தையே மாற்றும்படி குரல் எழுப்புகிறார்கள். ஆனால் அதே இந்தியாவில் பீகாரில் ஒரு விதவை சமைத்த சாப்பாட்டை உண்ண முடியாது என மாணவரும் பெற்றோரும் கூறுகின்றனர். இந்த கொடுமைக்கு எதிராக எத்தனை பேர் குரல் கொடுக்கிறார்கள்?
பெண்களுக்கு சமவுரிமை கிடைக்க வேண்டும்.
பெண்ணடிமை நீங்காத வரையில்
எந்த சமூகமும் முன்னேறிவிட முடியாது.

கடல் நீரை குடிநீராக மாற்றுவதால் கடற் தொழில் பாதிக்குமா?

கடல் நீரை குடிநீராக மாற்றுவதால் கடற் தொழில் பாதிக்குமா?
உலகில் பல இடங்களில் கடல்நீர் குடிநீராக மாற்றப்படுகிறது. ஆனால் அங்கு எல்லாம் கடற்தொழில் பாதிக்கப்படுவதாக யாரும் போராட்டம் நடத்தவில்லை.
இந் நிலையில் மருதங்கேணியில் கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
யாழ் குடாநாட்டில் குடி நீருக்கு பாரிய தட்டுப்பபாடு எற்பட்டு வருகிறது.
யாழ் குடாநாட்டில் மழை நீரை சேமிக்க பாரிய குளங்கள் இல்லை.
இரணைமடுக் குளத்தில் இருந்து குடிநீர் கொண்டுவர எடுத்த முயற்சியும் சிறீதரன் எம்.பி யின் சுயநல அரசியலால் தடுக்கப்பட்டுவிட்டது.
இந் நிலையில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தாவிடில் என்னதான் தீர்வு?
யாருக்காவது இது குறித்து உண்;மையில் அக்கறை இருக்கிறதா?
மழை நீரோ அல்லது குளத்து நீரோ இல்லாத இடங்களில் கடல் நீரை குடிநீராக்கும் முயற்சியை மேற்கொள்ளலாம்.
எனெனில் இத் திட்டம் குளத்து நீரை கொண்டு வரும் திட்டத்தைவிட அதிக செலவானது.
எனவே மகாவலி நீரை இரணைமடுவிற்கு கொண்டு வருவதன் மூலம் கிளிநொச்சி விவசாயகளுக்கும் தேவையான நீரை கொடுக்கலாம். யாழ் குடா நாட்டிற்கும் குடி நீராக எடுத்துச் செல்லலாம்.
இதற்கு ஆரம்பத்தில் அதிக பணம் தேவைப்படும். ஆனால் இதுவே செலவு குறைந்த சிறந்த பல பயன்கள் கொண்ட திட்டமாகும்.
எனவே அரசியல் தலைவர்கள் தமது சுயநல நோக்கத்தை கைவிட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டத்தை அமுல்படுத்த முனைய வேண்டும்.

ஒரு நிதியமைச்சரின் கணக்கு இது!

•ஒரு நிதியமைச்சரின் கணக்கு இது!
25000 ரூபா பெறுமதியான லாப்டாப் ஜ நாள் ஒன்றுக்கு 16000 ரூபா வாடகை
5000 ரூபா பெறுமதியான பிரிண்டரை நாள் ஒன்றுக்கு 3000 ருபா வாடகை
இப்படி கணக்கு காட்டுபவர் இந்தியாவின் நிதியமைச்சர்.
ஒரு நிதியமைச்சரே இப்படி கணக்கு காட்டினால் மற்றவர்கள் எப்படி காட்டுவார்கள்?
இதுதான் மோடி அவர்களின் ஊழல் அற்ற ஆட்சியா?
இதுதான் இந்தியாவின் அபிவிருத்தி லட்சணமா?
சீ, வெட்கம்!

• டிசெம்பர் 26, தோழர் மாசேதுங் பிறந்தநாள்

• டிசெம்பர் 26, தோழர் மாசேதுங் பிறந்தநாள்
மாபெரும் ஆசான் தோழர் மாவோ அவர்களின் பிறந்த தினம்(26.12.2013)
மாபெரும் மாக்சிய ஆசான்களில் ஒருவரும் சீனப்புரட்சியின் தலைவருமாகிய தோழர் மாசேதுங் அவர்களின் பிறந்த நாள் உலகெங்கும் நினைவு கூரப்படுகிறது.
தூங்கும் பூதம் என வர்ணிக்கப்பட்ட சீனாவில் புதிய ஜனநாயகப் புரட்சி மூலம் விடிவை ஏற்படுத்திய மாபெரும் தலைவர் அவர்.
ரஸ்சியாவில் குருசேவ் கும்பலால் முதலாளித்துவம் மீட்டமைக்கப்பட்ட ஆபத்தை சீனாவிலும் எதிர்வு கூறி அதை தடுக்கப் பல கலாச்சாரப் புரட்சிகள் நடக்க வேண்டும் எனக் கூறியவர் தோழர் மாவோ அவர்கள்.
தோழர் ஸ்டாலினுக்கு எதிராக குருசேவ் கும்பல் வைத்த குற்றச்சாட்டுகளை மாபெரும் விவாதம் மூலம் தோற்கடித்து சர்வதேச ரீதியில் ஸ்டாலினையும் மாக்சியத்தையும் காப்பாற்றியவர்.
மாக்சியம் லெனிசத்தை அடுத்து மாவோ சிந்தனைகள் மூலம் மாக்சியத்தை வளர்த்தெடுத்தவர்.
சீனாவில் மாவோ மறைவுக்கு பின்னர் டெங்சியாபிங் கும்பல்களால் முதலாளித்துவம் மீண்டும் ஆட்சி பீடம் ஏறினாலும் அவர்களால் இன்று வரை மக்கள் மனங்களில் இருந்து மாவோ புகழை நீக்க முடியவில்லை.
சீனாவில் மட்டுமல்ல சர்வதேச ரீதியிலும் மாவோ சிந்தனைகள் வழங்கிய மகத்தான பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது. குறிப்பாக ஜரோப்பாவில் இருந்து வைக்கப்பட்ட எதிர்ப்புரட்சிகர தத்துவமாகிய பின் நவீனத்துவத்திற்கு எதிராக மாவோசிசத்தின் பங்களிப்பு மகத்தானது.
இலங்கையில் மாசேதுங் சிந்தனைகளை அறிமுகப்படுத்தி வளர்த்தெடுத்தவர் தோழர் சணமுகதாசன் அவர்களும் அவரது தலைமையில் இயங்கிய கம்யுனிஸ்ட் கட்சியுமே.
இலங்கையில் தேர்தல் பாதையை நிராகரித்து ஆயுதப் போராட்டப் பாதையை முன்வைத்தது மகத்தான மாசேதுங் சிந்தனைகளே.
தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தவும் ஆயுதப் போராட்ட பாதையை தெரிவு செய்யவும் பெரும் பங்கு வகித்தது மாசேதுங் சிந்தனைகளே.
ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்களை இலங்கைஅரசு “பயங்கரவாதிகள்” என்றழைத்தது. தமிழர்விடுதலைக்கூட்டணி “பொடியன்கள்” என்றழைத்தது. ஆனால் மாவோயிஸ்ட் தலைவரான தோழர் சண்முகதாசனே தமிழ் இளைஞர்களை முதன் முதலாக “போராளிகள்” என்று அழைத்தவர்.
அதுமட்டுமல்ல அவர் இதை ஜந்து கட்சி கூட்டத்தில் சிங்கள தலைவர்கள் மத்தியில் சிங்கள மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக கூறியிருந்தார்.
யாழ்குடாநாட்டில் இருந்த சாதீய தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தியவர்கள் மாவோயிச சிந்தனைவாதிகளே.
இலங்கையில் மாவோயிஸ்ட்டுகள் எதுவும் செய்யவில்லை என்று இன்று பேசுவோர் இவ் வரலாறுகளை தெரிந்து கொள்ள வேண்டும்.
மாக்சிச லெனிசிச மாவோ சிந்தனையில்
புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்போம்!
இதுவே புரட்சியாளர்களின் வரலாற்று கடமையாகும்!

தமக்கான சம்பள உயர்வை ஒற்றுமையாக பெற்றுக்கொள்ளும் எம்.பி மார்கள் மக்களுக்காக ஒற்றுமையாக செயற்பட மறுக்கிறார்களே!

•தமக்கான சம்பள உயர்வை ஒற்றுமையாக பெற்றுக்கொள்ளும் எம்.பி மார்கள்
மக்களுக்காக ஒற்றுமையாக செயற்பட மறுக்கிறார்களே!
இதோ ஒரு எம்.பி யின் சம்பள விபரம்,
சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அடிப்படைச் சம்பளம் – ரூ. 54525.00
போக்குவரத்துக் கொடுப்பனவு – ரூ. 10000.00
உணவு, குடிபானக் கொடுப்பனவு – ரூ. 1000.00
தொலைபேசிக் கட்டணம் – ரூ. 2000.00
பாராளுமன்றக் கூட்டமொன்றில் கலந்து கொள்வதற்கான கொடுப்பனவு -ரூ. 500.00
இதுவரை காலமும் 500 ரூபா வழங்கப்பட்டு வந்தது. இத்தொகையை 20 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஒரு மாதத்துக்கு 8 நாட்கள் பாராளுமன்றம் கூடுகின்றது. இதற்கேற்ப, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபா கிடைக்கப் பெறுகின்றது.
ஏற்கனவே, வழங்கப்பட்ட கொடுப்பனவின் படி மாதத்துக்கு 4 ஆயிரம் ரூபா மாத்திரமே கிடைக்கப்பெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழமையாக கொடுக்கப்படும் மாதாந்த சம்பளம், தொலைபேசிக் கட்டணம், எரிபொருள் கட்டணம், அலுவலக ஊழியர்களுக்கான கொடுப்பனவு என்பன தவிர்த்தே இந்த வருகைக்கான கொடுப்பனவு வழங்கப்படவுள்ளன.
இதேவேளை, பாராளுமன்ற உணவகத்தில் 80 வகையான உணவுகள் தினமும் சமைக்கப்படுவதாகவும் சுமார் 500,000 ரூபாய்கள் தினமும் செலவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 400 ரூபாய்கள் பெறுமதியான ஒருவேளை உணவுக்கு, உறுப்பினர்களிடமிருந்து வெறும் 12.50 ரூபாய்களே அறவிடப்படுகிறது.
அமர்வுகள் இடம்பெறும் தினத்தில் சுமார் 200,000ரூபா பெறுமதியான உணவு விரயமாகிறதாம். வருடாந்தம் சுமார் 10 கோடி ரூபாய்கள் உணவகத்திற்கு நஷ்டம் ஏற்படுகின்றதாம்.
கொழும்பில் இலவச விடுதி, தீர்வையற்ற வாகனம் (சுமார் ஒன்றரைக் கோடி பெறுமதியான), எரிபொருள் கொடுப்பனவு, தொலைபேசி, அலைபேசி கொடுப்பனவுகள் எல்லாம் கொடுத்து இவர்களுக்கு அமர்வுகளுக்கான கொடுப்பனவையும் அதிகரிப்பது மக்கள் மீதான சுமைகளை அதிகரிக்கும் செயலாகும்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்குரிய சலுகைகளில் சரி பாதி மாகாண சபை உறுப்பினர்களுக்கும் வழங்கப்படல் வேண்டும் என அரசியலமைப்பில் இருப்பதனால் மாகாண சபைகளிற்கான அமையச் செலவுகள் மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
எமது எம்.பி மார்கள் யாருடைய நலனுக்காக போராடுகிறார்கள் என்பது இப்பொது புரிகிறதா?

•வைக்கோல் பட்டரை நாய்கள் தானும் படுக்காது. மற்றவர்களையும் படுக்க விடாது!

•வைக்கோல் பட்டரை நாய்கள் தானும் படுக்காது.
மற்றவர்களையும் படுக்க விடாது!
தமிழ் மக்கள் பேரவையினர் தமிழீழம் என்னும் தனிநாடு கோரவில்லை
தமிழ் மக்கள் பேரவையினர் ஆயுதப் போராட்டம் செய்வதாக கூறவில்லை.
தமிழ் மக்கள் பேரவையினர் இந்தியா எதிரி என்று கூறவில்லை
தமிழ் மக்கள் பேரவையினர் அமெரிக்கா தேவையில்லை என்று கூறவில்லை
தமிழ் மக்கள் பேரவையினர் அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றிணைக்கவில்லை
எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் மக்கள் பேரவையினர் தாம் ஒரு அரசியல் அமைப்பே இல்லை என்கின்றனர்.
இருந்தாலும்கூட அதை ஏற்றுக்;கொள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பு தயாராக இல்லை.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுமந்திரன் அடம் பிடிக்கிறார்.
தமிழ்தேசிய கூட்மைப்பு பதிவு செய்யப்பட்டிருந்தால் இப்படி ஒரு அமைப்பு தோன்றியிருக்க முடியாதே!
தமிழ்தேசிய கூட்டமைப்பு சிறையில் உள்ளவர்களின் விடுதலைக்காக உண்மையில் போராடியிருந்தால் இப்படி ஒரு அமைப்பு தோன்றியிருக்க முடியாதே!
தமிழ்தேசிய கூட்டமைப்பு காணாமல் போனவர்களுக்காக குரல் கொடுத்திருந்தால் இந்த அமைப்பு தோன்றியிருக்க முடியாதே!
தமிழ்தேசிய கூட்டமைப்பு மீள் குடியேற்றத்திற்கு குரல் கொடுத்திருந்தால் இப்படி ஒரு அமைப்பு தோன்றியிருக்காதே!
எல்லாவற்றுக்கும் மேலாக தமிழர் பிரச்சனைக்கு தீர்வு குறித்து உண்மையாகவே உழைத்திருந்தால் இப்படி ஓரு அமைப்பு தோன்றியிருக்க முடியாதே!
தமிழ்தேசிய கூட்டமைப்பு தானும் போராடாது. மற்றவாகளையும் போராட ஒருபோதும் விடாது.
மொத்தத்தில் இவர்கள் வைக்கோல் பட்டரை நாய்களை விட மோசமானவர்கள்.
தமிழ் இனத்தின் மிகப் பெரும் சாபக்கேடு இவர்கள்.

•சில தலைவர்கள் தமிழ் மக்களுக்காக உயிரை விட்டிருக்கிறார்கள்

•சில தலைவர்கள் தமிழ் மக்களுக்காக உயிரை விட்டிருக்கிறார்கள்
•சில தலைவர்கள் தமிழ் மக்களுக்காக தமது சொத்தை இழந்துள்ளார்கள்
•ஆனால் தலைவர் சம்பந்தர் அய்யா மட்டும் தமிழ் மக்களின் சொத்தை திருட முனைகிறாரா?
திருகோணமலையில் லிங்கா நகர் என்னும் இடம் 6 ஏக்கர் நிலம் கொண்டது. இதில் 56 தமிழ் குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இந்த இடத்தை ஏற்கனவே வாழ்ந்த சிங்கள மக்களிடமிருந்து பணம் கொடுத்து வாங்கியுள்ளனர்.
இப்போது திடீரென சம்பந்தர் அய்யா இது தனக்கு சொந்தமான இடமென்றும் இதற்கு ஒரு பேர்ச் 25 ஆயிரம் ரூபா வீதம் மொத்தம் 2 கோடியே 40 லட்சம் ருபா தனக்கு தரவேண்டும் என மிரட்டுகிறார்.
இது ரசூல்பாய் என்னும் முஸ்லிம்க்கு சொந்தமான நிலமாகும். தற்போது அந்த குடும்பத்தில் யாரும் உயிருடன் இல்லை. எனவே சம்பந்தர் அய்யா வழக்கம்போல் கள்ள உறுதி முடித்து வைத்துக்கொண்டு அந்த அப்பாவி தமிழ்மக்களை மிரட்டுவதாக சந்தேகம் எழுந்தள்ளது.
சம்பந்தர் அய்யா எற்கனவே ஒரு பெரிய பணக்காரர். அவருக்கு இப்படி அப்பாவி மக்களிடம் ஏமாற்றி பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நிலை இல்லை. அப்படியிருக்க தமிழ் மக்களின் பெரிய தலைவராக இருப்பவர் இப்படி செய்யலாமா?
வேறு யாராவது இப்படி தமிழ் மக்களை ஏமாற்றி சம்பாதிக்க முனையும்போது அதை தடுத்து தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டிய தலைவரான சம்பந்தர் அய்யாவே தமிழ் மக்களை இப்படி ஏமாற்றி பிழைக்க முனைந்தால் அந்த மக்கள் இனி யாரிடம் சென்று முறையிட முடியும்?
சம்பந்தர் அய்யா ஒரு வருடத்தில் தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்று தருவது இருக்கட்டும். முதலில் இந்த லிங்கா நகர் தமிழ் மக்களுக்கு ஒரு நல்ல தீர்வை பெற்றுக் கொடுக்கட்டும்.
குறிப்பு- சம்பந்தர் அய்யா லண்டன் வந்தபோது லிங்கா நகர் மக்கள் எழுதிய கடிதம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. தான் நல்ல தீர்வு வழங்குவதாக கூறினார். ஆனால் இதுவரை எதுவுமே செய்யவில்லை.