Wednesday, December 30, 2015

கலைஞர்! திருந்தவில்லை. திருந்தப்போவதும் இல்லை.

•கலைஞர்!
திருந்தவில்லை.
திருந்தப்போவதும் இல்லை.
வரலாறு காணாத பேரிடர். மக்களும் வைகோ போன்ற தலைவர்களும் நிவாரணப் பணிகளில் மூழ்கியிருக்கின்றனர்.
இந்த நேரத்தில் வைகோ கட்சியை சேர்ந்த நாலு மாவட்ட தலைவர்களை பணம் கொடுத்து கட்சி மாற்றுவது குறித்து யாரால் சிந்திக்க முடியும்?
பதவி வெறி பிடித்த கலைஞரைத் தவிர வேறு யார் இப்படி செய்ய முனைவார்கள்?
40 கோடி கொடுத்து கட்சிக்கு ஆள் பிடித்த கலைஞர் மழை நிவாரணத்திற்கு கொடுத்தது வெறும் ஒரு கோடி மட்டுமே.
பணம் கொடுத்து மாற்று கட்சியினரை வாங்கலாம். ஆனால் மக்களை வாங்க முடியுமா?
ஈழத்தில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது அது குறித்து அக்கறைப்படாமல் டில்லி சென்று தன் மகளுக்கு பதவி கேட்டார்.
பிரபாகரனின் வயதான தாயாருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்காது இரக்கமின்றி திருப்பி அனுப்பினார்.
தற்போது மக்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அது குறித்து கவலையின்றி மாற்று கட்சியினரை பணம் கொடுத்து வாங்குகிறார்.
இது கலைஞர் திருந்தவில்லை. இனி திருந்தப் போவதுமில்லை என்பதையே காட்டுகிறது.
மக்களும் கலைஞரை மறக்கப் போவதுமில்லை. மன்னிக்கப் போவதுமில்லை என்பதை தேர்தலில் காட்டுவார்கள்.

No comments:

Post a Comment