Wednesday, December 30, 2015

•வீழ்ச்சியடையப்போகும் "லைக்கா" சாம்ராஜ்யம்!

•வீழ்ச்சியடையப்போகும் "லைக்கா" சாம்ராஜ்யம்!
ஒரே கூடையில் அனைத்து முட்டைகளையும் வைப்பது எந்தளவு புத்திசாலித்தனம் இல்லையோ அதேபோல் ஒரு சிறந்த முதலீட்டாளர் தனது அனைத்து முதலையும் ஒரே வியாபாரத்தில் முடக்க மாட்டார்.
அந்த வகையில் "லைக்கா" நிறுவனம் தனது முதலீடுகளை பலவகையான வியாபாரங்களில் முதலிடுவது ஒரு சிறந்த நிதி முகாமைத்துவ முடிவுதான் என்றாலும் இந்திய சினிமாவில் அவர்கள் முதலிடுவது அவர்களின் வீழ்ச்சிக்கான வழி எனக் கருதப்படுகிறது.
இந்திய சினிமாவில் இதுவரை எந்தவொரு ஈழத் தமிழனும் ஜெயித்ததில்லை. இனியும் ஜெயிக்க அவர்கள் இலகுவில் விட்டுவிடப்போவதில்லை.
இந்நிலையில் எந்திரன்-2ல் மிகப்பெரிய முதலீட்டை "லைக்கா" நிறுவனம் செய்ய முன்வந்திருப்பது அதன் வீழ்சிக்கான அறிகுறியாகவே இருக்கிறது.
பெற்றோல் நிலையங்களில் தினசரி 12 மணி நேரம் தும்படித்தும் மாதாந்த வீட்டு மோகேஜ்யையே கட்ட முடியாமல் திண்டாடும் எம்மவர்கள் மத்தியில் வன்னியில் இருந்து வெறும் கையுடன் வந்த "லைக்கா" முதலாளி மட்டும் எப்படி பல மில்லியனுக்கு அதிபதியானார் ?
மில்லியன் டாலர் கேள்வி இது?
வருமானம் - செலவு = இலாபம் என்று அக்கவுண்டன்மார் கூறுகிறார்கள். ஆனால் "லைக்கா" போன்று டெலிபோன்காட் விற்ற பலர் நட்டத்தில் இருக்கும்போது "லைக்கா" மட்டும் எப்படி பல மில்லியன் லாபம் பெற முடிந்தது?
"லைக்கா" லாபம் எப்படி பெறுகிறது என்பதைவிட அது தனது லாபத்தை மேலும் பெருக்க செய்யும் அரசியல் விளம்பரம் ஆச்சரியத்தை அல்ல அருவருப்பையே கொடுக்கிறது.
இந்திய பிரதமர் மோடி உரையாற்றும்போது பிரிட்டன் பிரதமருக்கு பின்னால் அமர்ந்திருக்கும் பாக்கியத்தைப் பெறுவதற்காக பல மில்லியன் அன்பளிப்பு கொடுத்து ஸ்பொன்சர்களில் ஒருவராக "லைக்கா" இடம்பெற்றது.
ஒருபுறம் ஒரு தமிழன் பிரிட்டன் பிரதமருடன் கைகுலுக்கறார் என்று லைக்காவுக்கு பெருமை பேசுகிறார்கள். இன்னொரு புறம் இது மகிந்தராஜபக்சவின் பணம் என கொச்சையாக விமர்சிக்கிறார்கள். ஆனால் யாருமே லைக்காவின் லாபத்திற்கான சுரண்டல் குறித்து பார்க்க மறுக்கிறார்கள்.
எது எப்படியோ லைக்கா என்னும் யானை தன் தலையில் தானே மண் அள்ளிப்போடுகிறது.

No comments:

Post a Comment