Wednesday, December 30, 2015

இயேசு சீக்கிரம் வருகிறார்!

•இயேசு சீக்கிரம் வருகிறார்!
குழந்தை யேசு பாலன் பிறக்கப் போகிறார்!!
இயேசு சீக்கிரம் வருகிறார் என்கிறார்கள்.
ஆனால் 2000 வருடமாகியும் வரவில்லையே?
பரவாயில்லை. அவர் விரும்பும்போது வரட்டும்.
ஆனால் ஒன்று,
தயவு செய்து ஈழத் தமிழராக மட்டும் பிறந்துவிட வேண்டாம் என்று அவரிடம் கூறுங்கள்.
ஒருவேளை ஈழத் தமிழராக பிறந்தாலும் எக் காரணம் கொண்டும் அகதியாக தமிழ்நாட்டிற்கு சென்றுவிட வேண்டாம் என்பதையாவது தெரிவித்துவிடுங்கள்.
ஏனெனில் இம்முறை சிலுவையைவிடக் கொடிய சிறப்புமுகாமில் அவர் அடைக்கப்படலாம்.
சிலுவையில் அறைந்தால் 3ம் நாள் உயிர்த்தெழுந்து விடலாம்.
ஆனால் சிறப்புமுகாமில் அடைத்தால் 30 வருடமானாலும் விடுதலை பெற முடியாது.
வவுனியாவில் பட்டினியால் 3 குழந்தைகளை தாயே கிணற்றில் வீசிக் கொல்லும் அவலம்.
சிரியா நாட்டு குழந்தைகள் அகதியாக ஜரோப்பிய கடற்கரையில் இறக்கும் அவலம்.
இதையெல்லாம் கவனிக்காது நாம் இயேசு பாலன் பிறந்தான் என்று வாழ்த்து சொல்லி மகிழ்கிறோம்.
என்ன மாதிரியான உலகத்தில் நாம் வாழ்கிறோம்?
குறிப்பு-
(1)இயேசு வவுனியாவில் பிறந்தார். ஆனால் மகிந்தவின் "வடக்கின் வசந்தம்" அவரை கிணற்றில் வீசிக் கொன்று விட்டது. பாப்பரசர் மகிந்தவின் ரத்தம் தோய்ந்த கைகளை குலுக்கி நன்றி தெரிவித்தார்.
(2) இயேசு மீண்டும் சிரியாவில் பிறந்தார். அவரை அமெரிக்க வல்லரசு கடற்கரையிலேயே கொன்றுவிட்டது. பாப்பரசர் ஒபாமாவின் கைகளை குலுக்கி நன்றி தெரிவித்தார்.
(3)இனிமேல் இயேசுவை பிறக்கவே விடுவதில்லை என்று பாப்பரசர் முடிவு செய்துவிட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன

No comments:

Post a Comment