Tuesday, June 30, 2015

அமைச்சர் விஜயகலா இத்தனை நாளும் கோமாவில் இருந்தாரா?

 அமைச்சர் விஜயகலா இத்தனை நாளும் கோமாவில் இருந்தாரா?
வித்யா கொலையாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று அமைச்சர் விஜய கலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர் சரண்யா என்ற மாணவி பாலியல் வல்லுறவுக்குள்ளாகி மரணமான போது இவர் என்ன செய்து கொண்டிருந்தார்?
தமிழ் மக்களுக்காக ஓயாமல் சிந்தித்துக் கொண்டிருந்ததால் இதனை கவனிக்க மறந்துவிட்டார் என வைத்துக்கொள்வோம்.
ஆனால் இவரது ஊரான காரைநகரில் தண்ணீர் எடுக்கச்சென்ற மாணவி கடற்படை வீரரால் கற்பழிக்கப்பட்டபோது அந்த கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று ஏன் இவர் கேட்கவில்லை?
அப்போது இவர் மருத்துவமனையில் “கோமா”வில் இருந்தாரா?
இப்போது அதிகாரம் அமைச்சர் விஜயகலாவின் கையில் இருக்கிறது அல்லவா! அந்த கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை வழங்காவிட்டாலும் பரவாயில்லை அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவாவது அவர் முனைவாரா?
ஏனெனில் மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருக்கும்வரை சம்பந்தப்பட்ட வீரர்களை நீதிமன்றில் ஆஜர் செய்ய மறுத்து வந்தார். இப்போது அமைச்சர் விஜயகலா அதனை செய்வாரா?
அதுமட்டுமல்ல கடந்த வருடம் நெடுங்கேணியில் பெண் ஒருவரை பாலியல் வல்லுறவு செய்த ராணுவ வீரருக்கு தண்டனை கிடைக்க வழி செய்வாரா?
மன்னாரில் ராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்குள்ளான மாணவிக்கு நீதி கிடைக்க வழி செய்வரா?
அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் அமைச்சர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வழி செய்ய வேண்டும்.
இனி இன்னொரு பெண்ணிற்கு இப்படி ஒரு கொடுமை நடக்காமல் தடுக்க வேண்டும்.
அதைவிடுத்து மக்களை ஏமாற்ற பத்திரிகைளில் அறிக்கை விடுவதோ அல்லது எதிர்கட்சிகள் போன்று வீதியில் இறங்கி போராடுவதோ எந்த பயனும் தரப் போவதில்லை.
இந்த அரசியல் நாடகங்களை மக்கள் ஏற்கனவே பல முறை பார்த்து சலித்துவிட்டார்கள்.

கலைஞர் வயது 92,

கலைஞர் வயது 92, 
வாழ்த்த மனம் வருகுதில்லையே?
எதிரியாக இருந்தாலும் வாழ்த்துவது தமிழன் பண்பாடு. ஆனால் தமிழின தலைவர் என தன்னை அழைத்துக்கொள்ளும் கலைஞர் அவர்களை வாழ்த்த மனம் வருகுதில்லையே?
கலைஞர் விரும்பியிருந்தால் முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை தடுத்திருக்கமுடியும். ஆனால் அவர் அவ்வாறு விரும்பாதது மட்டுமல்ல படுகொலைகளுக்கு காங்கிரஸ் சோனியாவுடன் சேர்ந்து துணை புரிந்ததை மறக்க முடியவில்லையே!
ஆயிரக் கணக்கில் தமிழர்களை கொன்று குவித்த மகிந்த ராஜபக்ச கூட பிரபாகரனின் தாயார் இந்தியா சென்று மருத்துவ சிகிச்சை பெறுவதை தடுக்கவில்லை. ஆனால் தமிழனத் தலைவர் கலைஞர் விமான நிலையத்தில் வைத்து அவரை திருப்பி அனுப்பியதை என்னவென்று அழைப்பது?
ஒரு தமிழனாக இல்லாவிட்டாலும் வயதான பெண் மணி என்றாவது சிந்தித்து மனிதாபிமானத்துடன் அவர் மருத்துவ சிகிச்சை பெற அனுமதிதிருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல் கலைஞர் கருணாநிதி திருப்பி அனுப்பியதை எப்படி மறக்க முடியும்?
வரலாற்றில் முள்ளிவாய்க்கால் அவலம் இருக்கும்வரை அதில் துரோகம் இழைத்த கலைஞர் பெயரும் நினைவில் இருக்கும். அதனால்தான் அவரை வாழ்த்த மனம் வருகுதில்லையே?
எவ்வளவு வயதானாலும் ஒருவர் மரணம் அடையும்போது அவர் இன்னும் கொஞ்சம் காலம் வாழ்ந்திருக்கலாம் என நினைப்பது அனுதாபப்படுவது மனித இயல்பு. ஆனால் ஒருவர் வாழும்போதே இவர் இன்னும் சாகவில்லையா என நினைப்பது மிகவும் அரிது.
இந்த அரிதானவர்களில் கலைஞரும் இருக்கிறார் என்பதே அவருக்கான வாழ்த்தாக இருக்கிறது.

தமிழின படுகொலைக்கு கனிமொழி உதவினாரா?;

• தமிழின படுகொலைக்கு கனிமொழி உதவினாரா?;
கனிமொழியுடன் தொலைபேசியில் பேசிய பிறகே எனது கணவர் எழிலன் ராணுவத்திடம் சரணடைந்தார் என ஆனந்தி சசிதரன் தெரிவித்தள்ளார்.
கனிமொழி வழங்கிய உறுதி மொழியை அடுத்து வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த அந்த போராளிகளும் மக்களும் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே.
அப்படியாயின் திட்டமிட்ட இந்த தமிழினப்படுகொலைக்கு கனிமொழி உதவினாரா?
வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை கொன்றது போர்க் குற்றம். அப்படியாயின் கனிமொழிக்கும் போர்க்குற்றத்தில் பங்கு உண்டா?
தனது வாழ்நாளுக்குள் தமிழீழத்தைக் காண வேண்டும் என கூறும் கலைஞர் கருணாநிதி இது குறித்து என்ன கூறப்போகிறார்?
ஒரு புறத்தில் மகள் கனிமொழி தமிழின படுகொலைக்கு உதவுகிறார். மறுபுறத்தில் தமிழீழத்திற்காக கலைஞர் "டெசோ" மாநாடு நடத்துகிறார். இந்த அரசியல் நாடகத்தை என்னவென்று அழைப்பது?
கனிமொழியின் உதவிக்காகவா முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேரில் அழைத்து பரிசில்கள் வழங்கினார்?
இனியும் கனிமொழி மௌனம் காக்க கூடாது. நடந்தது என்வென்று மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இலலையேல் வரலாறு கனிமொழியை ஒரு தமிழினத் துரோகியாகவே பதிவு செய்யும்.
 

தியாகி சிவகுமாரனுக்கு வீர வணக்கம்

தியாகி சிவகுமாரனுக்கு வீர வணக்கம்
போராளிகள் புதைக்கப்படுவதில்லை. விதைக்கப்படுகிறார்கள். அவர்களின் மரணங்கள் பல புதிய போராளிகளை தோற்றுவிக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம் தியாகி சிவகுமாரனின் மரணம். ஆம். அவரது மரணம் பல தமிழ் இளைஞர்களை போராட்டத்தில் ஈடுபடவைத்தது.
சிவகுமாரன் தமிழீழத்திற்காக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தவர். அதற்காக களப்பலியான முதல் வீரர் எனக் குறிப்பிடக்கூடியவர்.
சிவகுமாரன் நம்பிய த.வி.கூட்டனி தலைவர்கள் தரப்படுத்தலுக்கு எதிராக இளைஞர்களை போராடும்படி தூண்டினார்கள். ஆனால் அவர்கள் தங்கள் பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைத்தார்கள்.
குறிப்பாக அமிர்தலிங்கம் தனது மகன் பகிரதனுக்கு எம்.ஜி.ஆர் தயவோடு மதுரை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் சீட்டு வாங்கிப் படிக்க வைத்தார். தலைவர் சிவசிதம்பரம் மகனை லண்டனுக்கு அனுப்பி படிக்கவைத்தார்.
சிவகுமாரன் விரும்பியிருந்தால் நன்கு படித்து பட்டம் வாங்கி நல்ல உத்தியோகத்தையும் பெற்று வசதியாக வாழ்ந்திருக்க முடியும். அல்லது மற்றவர்கள் போல் வெளிநாட்டுக்கு சென்று பாதுகாப்பாக இருந்திருக்க முடியும்.
ஆனால் அவரோ ஏற்கனவே பல முறை கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்திருந்தாலும் தொடர்ந்து தமிழ் மக்களுக்காக போராடி மரணித்தார். எனவேதான் அவர் தியாகி சிவகுமாரன் என அழைக்கப்படுகிறார்.
பொலிசாரின் நெருக்கடியை அடுத்து சிவகுமாரன் சிலகாலம் இந்தியா தப்பிச் செல்ல விரும்பினார் என்றும் ஆனால் கடத்தல்காரர்கள் கேட்ட பணம் கொடுப்பதற்கு அவரிடம் வசதி இருக்கவில்லை என அறியவருகிறது.
அவர் நம்பிய த.வி.கூ தலைவர்கள் கூட அவருக்கு இந்த பணத்தை கொடுத்து உதவவில்லை. எனவேதான் அவர் வேறு வழியின்றி வங்கியில் பணம் கொள்ளையடிக்க முயற்சி செய்தார் என்பதை அறியும்போது வேதனையாக இருக்கிறது.
வங்கியில் பணம் கொள்ளையடிக்க முயற்சி செய்தபோது பொலிசார் சுற்றி வளைத்துவிட்டார்கள். தப்பிக்க முடியாத நிலையில் வேறு வழியின்றி அவர் சயனைட் உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
எமது போராட்டத்தில் களப்பலியான முதல் போராளி என்ற பெருமை அவருக்கே சாரும்.
சிவகுமாரனுக்கு உதவி செய்யாமல் யார் ஏமாற்றினார்களோ அதே தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சியினர் அவர் தியாகத்தை கொஞ்சம்கூட வெட்கம் இன்றி தமது பிரச்சாரத்திற்கு நன்கு பயன் படுத்திக்கொண்டனர். தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்றனர்.
இன்று ஒவ்வொரு இயக்கத்தினரும் ஒவ்வொரு தினத்தை மாவீரர் நினைவு நாளாக கொண்டாடுகின்றனர்.
அனைவரும் ஒற்றுமையாக ஒருநாளை ஒருமித்துக் கொண்டாட வேண்டும் என்பது தமிழ் மக்களின் பெரு விரும்பமாகும்.
அப்படி ஒருநாளைக் கொண்டாடுவதாயின் அதற்கு மிகவும் பொருத்தமான நாள் தியாகி சிவகுமாரன் இறந்த தினமாகும்.
அனைவரும் இதனை ஒருமித்து ஏற்றுக்கொள்வார்களா?

ஓ பெண்ணே!

ஓ பெண்ணே!
தூக்கு காவடி எடுப்பதாலோ- அன்றி
தீச்சட்டி ஏந்தி வேண்டுவதாலேயோ
படுகொலை செய்யப்பட்ட உண் கணவன்
மீண்டும் வரப்போவதில்லை.
சிறையில் இருக்கும் உன் மகன் 
விடுதலை பெறப் போவதில்லை
ஓ பெண்ணே!
கொஞ்சம் சிந்தித்துப்பார்
தன் கோயில் மீது குண்டு போட்டவர்களையே
தண்டிக்க முடியாத உன் கடவுள்
தன்னையே காப்பாற்ற முடியாத கடவுளால்
உன்னைக் காப்பாற்ற முடியுமா?
உனக்கு உதவதான் முடியுமா?
ஓ பெண்ணே!
உன் தோள்கள் துப்பாக்கி எந்தினால்
உன் கரங்கள் வெடி குண்டுகளை எந்தினால்
உன் கனவுகள் நிச்சயம் நிறைவேறும்
என்பதை மட்டும் நினைவில் கொள்வாயாக!

சுதாகரனுக்கு ஒரு நியாயம்!

சுதாகரனுக்கு ஒரு நியாயம்!
பேரறிவாளனுக்கு இன்னொரு நியாயம்!
இதுதான் உச்ச நீதிமன்றத்தின் நியாயமா?
• சுதாகரனை விடுதலை செய்த உச்ச நீதிமன்றம் 
பேரறிவாளனை விடுதலை செய்ய மறுப்பது ஏன்?
மக்களின் பணத்தை ஊழல் செய்தமைக்காக ஜெயா அம்மையாருக்கும் அவரது கும்பலுக்கும் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
சிறையில் அடைக்கப்பட்ட ஜெயா அம்மையாருக்கு சுகயீனம் என்ற காரணம் காட்டி 21 நாட்களில் உச்ச நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை அளித்தது.
ஜெயா அம்மையாருக்கு மாத்திரமல்ல அவரது வளர்ப்பு மகன் சுதாகரனுக்கும் சுகயீனம் என காரணம் கூறி விடுதலை அளிக்கப்பட்டது.
திடகாத்திரமாக உள்ள சுதாகரனை சுகயீனம் என காரணம் கூறி விடுதலை செய்த உச்ச நீதிமன்றம் உண்மையிலே சுகயீனமாக உள்ள பேரறிவாளனை விடுதலை செய்ய மறுக்கிறது.
ஜெயா அம்மையாருக்கு 21 நாட்களில் விடுதலை அளித்த உச்ச நீதிமன்றம் பேரறிவாளனுக்கு 21 வருடமாகியும் விடுதலை செய்யாமல் தாமதம் செய்கிறது.
ஜெயா அம்மையார் 10 சதவீத ஊழல் செய்தமையினால் அது குற்றமில்லை என கண்டுபிடித்து விடுதலை வழங்கிய உயர்நீதிமன்றம் பேரறிவாளன் குற்றமற்றவர் என தெரிந்து கொண்ட பின்பும் விடுதலை செய்ய மறுப்பது கேவலமாக உள்ளது.
இந்தியா ஜனநாயக நாடு என்கிறார்கள். இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறார்கள். ஆனால் ஜெயா அம்மையார் கும்பலுக்கு ஒரு நீதி. பேரறிவாளனுக்கு இன்னொரு நீதி வழங்கப்படுகிறது. இது என்ன நியாயம்?

கலைஞர் குடும்பத்து மறதி நோய்

 கலைஞர் குடும்பத்து மறதி நோய் 
கனிமொழியையும் பாதித்து விட்டதா?
சசிதரன்(எழிலன்) யார் என்று எனக்கு தெரியாது- கனிமொழி தெரிவிப்பு
கனிமொழியின் எற்பாட்டிலேதான் எழிலன் முதலானோர் சரணடைந்தார்கள் என அவரது மனைவி ஆனந்தி அவர்கள் பல காலமாக சொல்லி வருகிறார்.
அவ்வாறு சரணடைந்தவர்களை இலங்கை ராணுவம் கொன்றது போர்க் குற்றம் என்றும் இது குறித்து கனிமொழியும் விசாரிக்கப்படல் வேண்டும் என பலரும் கோரி வருகிறார்கள்.
இது குறித்து இத்தனை காலமும் மௌனம் காத்து வந்த கனிமொழி அவர்கள் தற்போது எழிலனை யார் என்று தனக்கு தெரியாது என்றும் தான் அவருடன் ஒருபோதும் கதைக்கவில்லை என்றும் மறுப்பு தெரிவித்துள்ளார்.
2ஜி ஊழல் வழக்கில் விசாரணைக்கு வருமாறு தாயாளு அம்மையாருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியதும் அவருக்கு மறதி நோய் வந்துவிட்டதாக கலைஞர் தெரிவித்தார்.
கலைஞர் குடும்பத்து அவ் மறதி நோய் தற்போது அவரது மகள் கனிமொழிக்கும் வந்துவிட்டது போல் தெரிகிறது.
அதுதான் இத்தனை நாள் கடந்து எழிலனை தெரியாது என்கிறார் போலும்.
இதில் ஆச்சரியம் இல்லை. எனெனில் 2ஜி ஊழல் வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட டெலிபோன் உரையாடல் இடம்பெற்ற கசெட்டில் உள்ள தனது குரலையே மறுத்தவர் ஆயிற்றே.
கனிமொழி அவர்களே!
உங்களையே மகள் இலலை என்று மறுத்தவர் கலைஞர். உங்கள் அரசியலில் அது சகஜமாக இருக்கலாம். ஆனால் நாங்கள் பல்லாயிரம் உறவுகளை இழந்து வேதனையில் இருக்கிறோம். எமது வலிகளை ஆற்றாவிட்டாலும் பரவாயில்லை. தயவு செய்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் கொடுமையை இழைக்காதீர்கள்.
உங்களை நம்பி ஏமாந்த 
அப்பாவி ஈழத் தமிழர்கள்.

கனிமொழிக்கு ஆனந்தியை தெரியாமல் இருக்கலாம்

• கனிமொழிக்கு ஆனந்தியை தெரியாமல் இருக்கலாம்
கூடி இருந்த கஸ்பார் அடிகளாரையுமா தெரியாது?
புலிகள் சரணடைவதற்கு தான் ஏற்பாடு செய்யவில்லை என்று கனிமொழி தற்போது மறுக்கிறார்.
அதுமட்டுமல்ல எழிலனையும் யார் என்று தனக்கு தெரியாது என்கிறார்.
அப்படியென்றால் புலிகள் சரணடைவதற்கு கனிமொழி ஊடாக தான் ஏற்பாடு செய்தேன் என்று கஸ்பார் அடிகளார் கூறியது பொய்யா?
2010ல் கஸ்பார் அடிகளார் கூறியது பொய் என்றால் ஏன் அப்போது அதை கனிமொழி மறுக்கவில்லை?
அல்லது கஸ்பார் அடிகளாரையும் யார் என்று தெரியாது என்று இப்போது கனிமொழி கூறுவாரா?
கனிமொழி அவர்களே!
துரோகம் செய்து விட்டு அதை மறுப்பதற்கு இது ஒன்றும் உங்கள் "2ஜி" ஊழல் இல்லை.
உங்கள் குடும்பத்து துரோகத்தால் பலியானது 40 ஆயிரம் அப்பாவி தமிழர்கள்.
வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டது போhக்குற்றம் என்றால் அதில் உங்களுக்கும் பங்கு உண்டு.
கொல்லப்பட்டவர்களின் ரத்தம் காயுமுன்னர் இலங்கை வந்து மகிந்தவுடன் விருந்து உண்டு பரிசில்கள் பெற்று சென்றதை நாம் கண்டோம்.
வரலாறு உங்களை ஒருபோதும் மறக்கப் போவதுமில்லை. மன்னிக்கப்போவதுமில்லை.

பாவலர் அய்யா பெருஞ்சித்திரனார்

பாவலர் அய்யா பெருஞ்சித்திரனார் 
என்றும் நினைவில் கொள்வோம்!
1983ல் இடம்பெற்ற இனக்கலவரத்தின் பின்பே தமிழகத்தில் பெரும்பாலானவர்கள் இலங்கைப் பிரச்சனை குறித்து அறிந்திருந்தனர்.
ஆனால் அதற்கு முன்னரே இதனை அறிந்து உதவி செய்தவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் இருந்தனர். அவர்களுள் மிக முக்கியமானவர் பாவலர் அய்யா பெருஞ்சித்திரனார் அவர்கள்.
அவரும் அவருடைய குடும்பத்தவர்களும் இலங்கை தமிழர்கள் மீது கொண்டிருக்கும் அன்பும் அவர்கள் செய்த உதவிகளும் என்றும் மறக்க முடியாதவை. அவர்களை நாம் என்றும் நினைவில் கொள்வோம்.
நான் அய்யா அவர்களுடன் அதிகம் பழக வில்லை. அவருடைய மகன் பொழிலன் அவர்களுடனே நான் அதிகம் பழகியிருக்கிறேன்.
பொழிலன் அவர்களை சந்திக்க சென்ற வேளைகளில் அய்யா அவர்களுடன் பேசியிருக்கசிறேன். உணவு உட்கொண்டிருக்கிறேன். அவ்வேளைகளில் இலங்கைப் பிரச்சனை குறித்து ஆவலுடன் கேட்பார்.
அவரை மிகவும் கோபக்காரர் என்று சிலர் சொல்லியிருந்தனர். தூய தமிழில் கதைக்காவிடில் ஏசுவார் என்றெல்லாம் சிலர் என்னிடம் கூறியிருந்தனர்.
ஆனால் இது தவறான கருத்துகள் என்பதை அவருடன் பேசும்பொது கண்டு கொண்டேன். ஏனெனில் அவர் என்னுடன் பேசும்போது சினங்கொள்ளாமல் மிகவும் மென்மையாகவே உரையாடினார்.
தோழர் தமிழரசன் அவர்கள் சென்னை வரும் வேளைகளில் எமது இருப்பிடத்திலேயே தங்குவார். அப்போது அவர் அய்யா அவர்களை சந்தித்த விபரங்களை என்னிடம் கூறியிருக்கிறார்.
தமிழ்நாடு விடுதலையில் அய்யா அவர்கள் எவ்வளவு ஆர்வமாகவும் உறுதியுடனும் இருந்தார் என்பதை தோழர் தமிழரசன் அவர்களின் மறைவின் போது அவர் எழுதிய அஞ்சலிக் கவிதையில் இருந்து தெரிந்து கொண்டேன்.
அவர் கொஞ்சம் விட்டுக்கொடுத்திருந்தால் நிறைய சம்பாதித்திருக்கலாம். அரசியலில் பதவிகள் பெற்றிருக்கலாம் என்றெல்லாம் அவருடன் பழகிய பலர் கூறக் கேட்டிருக்கிறேன்.
இது எந்தளவு உண்மை என்று எனக்கு தெரியாது. ஆனால் அவர் நினைத்திருந்தால் இலங்கைப் போராளிகளை வைத்து நிறைய சம்பாதித்திருக்க முடியும் என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும்.
ஏனெனில் அவரிடம் சென்று பழகாத போராளி தலைவர்களே இல்லை என்று கூறுமளவுக்கு ஆரம்பத்தில் அனைத்து போராளிகளும் அவரிடம் பழகியுள்ளனர். அவரும் அனைவருக்கும் தன்னால் இயன்ற உதவிகள் செய்தார் என்பதும் மறுக்கவோ, மறக்கவோ முடியாத உண்மைகள்.
பிரபாகரன், உமா மகேஸ்வரன் மட்டுமல்ல முதல் பெண் போராளி என்று அழைக்கப்படும் ஊர்மிளாவும் அவர் வீட்டில் தங்கியிருந்துள்ளனர்.
ஊர்மிளா அவர்களுக்கு நெருக்கடியான நேரத்தில் அய்யா அவர்களே தனது வீட்டில் வைத்து பாதுகாத்து அனுப்பினார் என்பது மிக முக்கிய உதவியாகும்.
அய்யா அவர்கள் இலங்கை தமிழர் மீது கொண்டிருந்த அக்கறை, அனுதாபம, செய்த உதவிகள் மறக்க முடியாதவை.
இலங்கைத் தமிழர்கள் அய்யா அவர்களை என்றும் நினைவில் கொள்வார்கள் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது

• பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது
• இந்திய அரசுக்காக கலைஞரும் கனிமொழியும் செய்த துரோகம் வெளியே வந்துவிட்டது
• இனி கலைஞரும் கனிமொழியும் என்ன சொல்லப்போகிறார்கள்?
இறுதி யுத்தத்தில் இந்தியா நேரடியாக தலையீடு செலுத்தியது என்றும் தமிழர்களை அழித்து ஒழித்துவிட்டு ஆறு ஆண்டுகளாகியும் இந்தியா மௌனத்தில் இருப்பதாக ஆனந்தி தெரிவித்துள்ளார்.
இந்திய மத்திய அரசின் பிராணாப் முகர்ஜி, நம்பியார், சிவசங்கர் மேனன் ஆகியோரின் திட்டத்திற்கு அமைய கனிமொழியே சரணடையுமாறு தொலைபேசியில் 16.05.2009 யன்று இரவு கூறியதாகவும் அதற்கு உயிருடன் இருக்கும் நேரடியான சாட்சி தானேயென்றும் ஆனந்தி கூறியுள்ளார்.
சோனியாகாந்தியின் இந்திய அரசுக்கு கனிமொழி ஏன் உதவினார்?
தமிழின படுகொலைக்கு கலைஞர் ஏன் ஒத்துழைப்பு வழங்கினார்?
இது மிகப் பெரும் இனத் துரோகம் இல்லையா?
இந்திய அரசின் விசுவாசிகள் இதற்கு பதில் தருவார்களா?
40 அயிரம் தமிழ் மக்களை அழிப்பதற்கு உதவி புரிந்த கலைஞரும் கனிமொழியும் இப்போது தமிழீழத்திற்காக "டெசோ" மாநாடு நடத்துகிறார்கள்.
தமிழின அழிப்பை நடத்திய இந்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு விடுதலை பெற்று தரும் என இன்னமும் சிலர் சொல்லிக்கொண்டு திரிகின்றனர்.
இதுதான் கேட்பவன் கேனையன் என்றால் காட்டெருமை ஏரோப்பிளேன் ஓட்டுது என்ற கதையாகும்!
ஆனால் இவர்களை இனியும் நம்புவதற்கு தமிழ் மக்கள் ஒன்றும் கேனையர்கள் அல்லர்!

கனிமொழியின் துரோகம்

• கனிமொழியின் துரோகம் 
மறக்க முடியுமா? இல்லை
மன்னிக்கத்தான் முடியுமா?
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழின படுகொலையில் கனிமொழியின் துரோகமும் இந்திய அரசின் பங்கும் ஆதாரத்துடன் முன்வைக்கப்பட்டு வருகிறது.
கலைஞரின் கனிமொழி தனது துரோகத்தை மட்டுமல்ல இந்திய அரசின் துரோகத்தையும் மூடி மறைக்க முயல்கிறார்.
ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல தமிழக மக்களும் இவர்களது துரோகத்தை இனங்காண ஆரம்பித்துள்ளார்கள்.
இதனால் இந்திய அரசின் துரோகத்தை மறைக்க முயல்வோர் ஆனந்தியை தூற்ற ஆரம்பித்துள்ளனர்.
ஆனந்தி புலி இயக்கத்தில் இருந்தவரா?
இதை ஏன் அவர் முன்னரே சொல்லவில்லை?
இப்போது ஏன் சொல்ல முயற்சிக்கிறார்?
இவர் பேசாமல் மௌனமாக இருந்திருக்கலாம்தானே?
இவர் ஜெயா அம்மையாருக்காக இதை கூறுகிறாரா?
இவரை பி.ஜே.பி அரசு தவறாக வழிநடத்துகிறதா?
இவர் தி.மு.க வின் வெற்றியை தடுக்க முனைகிறாரா?
என்றெல்லாம் ஆனந்தி மீது வசை பாடுகிறார்கள்.
இவர்களிடம் நாம் ஒன்றை கேட்க விரும்புகிறோம். 
ஆனந்தி யாராகவும், என்னவாகவும் இருந்துவிட்டு போகட்டும். அதுவல்ல இங்கு முக்கியம். அவரது குற்றச்சாட்டிற்கு உங்கள் பதில் என்ன?
அவரது வாக்கு மூலம் கனிமொழியையும் இந்திய அரசையும்தானே அம்பலப்படுத்துகிறது. இதில் நீங்கள் ஏன் எரிச்சல் அடைகிறீர்கள்?
ஆனந்தியை தூற்றி அதன் மூலம் இந்திய அரசசின் துரோகத்தை காப்பாற்ற முயலும் உங்கள் நோக்கத்தை என்வென்று அழைப்பது?
இந்திய உளவு அமைப்புகள் விட்டெறியும் எலும்பு துண்டுகளுக்காக நீங்கள் வாலாட்டுவது ஆனந்திக்கு எதிராக அல்ல மாறாக தமிழ் மக்களுக்கு எதிராக என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தமிழ் மக்களே எச்சரிக்கை!

 தமிழ் மக்களே எச்சரிக்கை!
அன்று அன்னை சோனியாவின் கண்களில் ஈரம் கண்டவர்
இன்று இலங்கை அரசுடன் பேச்சுவாhத்தை நடத்துகிறார்
முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு இந்தியாவே முழு உதவி புரிந்தது என்பதை யாவரும் அறிவர்.
இன்றும்கூட இலங்கை அரசை இந்தியாவே பாதுகாத்து வருகின்றது என்பதும் யாவரும் அறிவர்.
இத்தகைய இந்தியாவின் அன்னை சோனியா காந்தி லண்டன் வந்தபோது அவரை சந்தித்த சுரேன் என்பவர் " அன்னை சோனியாவின் கண்களில் ஈரத்தைக் கண்டேன்" என்றார் கொஞ்சம் கூட வெட்கம் இன்றி.
முள்ளிவாய்க்காலில் பலியானவர்களின் ரத்தம் காயுமுன்னர் அதற்கு காரணமான கொலைகாரிக்கு ஆதரவாக குரல் கொடுத்தமை கண்டு தமிழ்மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அன்னை சோனியா காந்திக்காக வக்காலத்து வாங்கியவர் தற்போது ஈழத் தமிழர்களுக்காக இலங்கை அரசுடன் பின் கதவால் பேச்சுவாhத்தை நடத்துகிறாராம்.
இந்திய உளவுப்படை தயாரித்த இந்த கபட நாடகத்தை புலம் பெயர்ந்த மக்கள் மத்தியில் சிறப்பாக அரங்கேற்ற சிலர் முயல்கிறார்கள்.
வரும் செப்டெம்பர் மாதம் ஜ.நா விசாரணையில் இருந்து இலங்கை அரசைக் காப்பாற்ற இந்த துரோகிகள் துணை போகிறார்கள்.
• சிறையில் உள்ளவர்கள் இன்னும் விடுவிக்கப்ட வில்லை
• மக்கள் இன்னும் தமது நிலங்களில் மீள் குடியேற்றப்படவில்லை
• காணாமல் போனவர்கள் கண்டு பிடிக்கப்படவில்லை
• பாதிக்கப்ட்டவர்கள் புனர் வாழ்வு அளிக்கப்படவில்லை
இந்த நிலையில் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை என்ன வேண்டிக்கிடக்கு?
மக்களே!
துரோகிகளை இனங் காணுங்கள்!
இந்திய உளவுப்படைக்கு விலை போனவர்களை தூக்கியெறியுங்கள்.!!

நாபா" தியாகியா? துரோகியா?

"நாபா" தியாகியா? துரோகியா?
அவர் விதைக்கப்பட்டாரா? புதைக்கப்பட்டாரா?
இந்திய ராணுவத்தால் பல ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது,
இந்திய ராணுவத்தால் தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டபோது
இந்திய ராணுவத்தால் பல கோடி ரூபா சொத்துக்கள் சேதமாக்கப்பட்டபோது
அதற்கு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கிய "நாபா" எப்படி தியாகியாக முடியும்?
இந்திய ராணுவத்தின் காலத்தில் பலவந்தமாக இளைஞர்கள் பிடித்து சென்று கட்டாய பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டபோதும்,அதனால் பல இளைஞர்கள் பின்னர் புலிகளால் கொல்லப்பட நேர்ந்தமை குறித்தும், ஒருபோதும் எந்த வருத்தமும் தெரிவிக்காதவர் எப்படி தமிழ் மக்களுக்கு தியாகியாக முடியும்?
தமிழின விடுதலையை அழித்து வரும் இந்திய அரசுக்கு இறுதிவரை ஆதரவு வழங்கியவர் நாபா!
இந்திய துரோகத்திற்கு இறுதிவரை தனது முழு ஒத்துழைப்பு வழங்கியவர் நாபா!
தனது இத் துரோகத்திற்கு ஒருபோதும் மனம் வருந்தாதவர். ஒருபோதும் மன்னிப்பு கோராதவர் நாபா.
அவர் எப்படி தமிழ் மக்களுக்கு தியாகியாக முடியும்?
அவர் பெயரால் எப்படி தியாகிகள் தினம் கொண்டாட முடியும்?
துரோகிகள் ஒருபோதும் விதைக்கபபடுவதில்லை. அவர்களில் இருந்து ஆயிரமாயிரம் போராளிகள் முளைப்பதும் இல்லை.
ஈழத்தைக் கைவிட்டவர்கள்,
புரட்சியையும் கைவிட்டவர்கள்,
பதவிக்காக தேர்தல் பாதையில் புகுந்தவர்கள்,
இன்னும் ஏன் "ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னனி" என்னும் பெயரில் ஒட்டிக்கொண்டு திரிகிறார்கள்?
இந்திய அரசு வழங்கும் பணத்திற்காக இன்னும் எத்தனை காலம் கட்சி நடத்தி தமிழ் மக்களுக்கு துரோகம் செய்யப்போகிறார்கள்?

அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக்கோரி லண்டனில் நடைபெற்ற போராட்டம்

அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக்கோரி லண்டனில் நடைபெற்ற போராட்டம்
இலங்கையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக்கோரி நேற்றைய தினம் (20.06.2015); லண்டனில் பாராளுமன்ற திடலில் சமவுரிமை இயக்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
யுத்தம் முடிந்து 6 வருடங்களாகிவிட்டது. இன்னும் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை.
புதிய மைத்திரி அரசு பதவியேற்று 100 நாட்கள் முடிந்துவிட்டது. ஆனால் தமிழ் மக்கள் ஓட்டு மூலம் பதவியேற்ற அரசு கைதிகளை விடுதலை செய்யவில்லை.
கைதிகளை விடுதலை செய்யும்படி கோர வேண்டியவர்கள்,காணமல் போனவர்களை கண்டு பிடித்த தரவேண்டியவர்கள் ,தமிழர்களின் தலைவர்கள் தாங்களே எனக் கூறிக்கொண்டு இலங்கை அரசுடன் இரகசிய பேச்சுவார்த்தை செய்கின்றனர்.
லண்டனில் சோனியாவின் கண்களில் ஈரம் கண்ட சுரேன் அவர்களும் சம்பந்தர் தயவால் பின்கதவால் பாராளுமன்ற உறப்பினராகிய சுமந்திரனும் இலங்கை அரசுடன் ரகசிய பேச்சு நடத்தி தமிழ் மக்களுக்கு துரோகம் இழைக்கின்றனர்.
ஆனால் சிங்கள மக்களை கொண்ட சமவுரிமை இயக்கம் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு போராட்டம் நடத்துகின்றனர்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரியதால் கோத்தபாயாவினால் காணமற் போனவர்கள் லலித் , குகன் போன்றவர்கள். அவர்களைக்கூட விடுதலை செய்ய இலங்கை அரசு மறுக்கிறது.
கரும்புலிகளை கொழும்புக்கு அனுப்பிய கருணா கைது செய்யப்படவில்லை. கரும்புலிகளுக்கு வெடி மருந்து வாங்கி அனுப்பிய கே.பி சுதந்திரமாக திரிகிறார். ஆனால் கரும்புலிக்கு தங்க இடம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தேவதாசன் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை.
தன்மீதான குற்றச்சாட்டை ஒத்துக்கொள்ள தேவதாசன் முன்வந்த நிலையிலும்கூட அவரது வழக்கு விசாரணையை நடத்தாது வேண்டுமென்றே இழுத்தடித்து வருகிறது இலங்கை அரசு.
தாமதப்படுத்தப்பட்டநீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும். இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதி மறுக்கப்படுகிறது.
லண்டனில் கோட்டு சூட்டு போட்ட கனவான்கள் சுரேனும் சுமந்திரனும் தமிழ் மக்களுக்காக பேசுவதாக கூறி துரோகம் இழைக்கின்றனர்.
ஆனால் அதே லண்டனில் சமவுரிமை சார்பில் சிங்கள மக்கள் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு போராட்டம் நடத்துகின்றார்கள்.
 

வரதராஜ பெருமாள் அவர்களே!

• வரதராஜ பெருமாள் அவர்களே!
மனட்சாட்சி இருந்தால் பதில் தாருங்கள்
"இந்தியாவோடு தோழர் நாபா ஏற்படுத்திக்கொண்ட உறவை சிலர் பிற்போக்கு முதலாளித்துவத்தோடு ஏற்படுத்திக்கொண்ட உறவாக விமர்சித்தனர். ஆனால் அவரோ வியட்நாமின் கோசிமின், கியூபாவின் பிடல் காஸ்ரோ, தென்னாபிரிக்காவின் நெல்சன் மண்டலோ, பாலஸ்தீனத்தின் அரபாத் போன்றோரின் கண்ணோட்டத்திலேயே இந்தியாவினுடைய உறவைப் பார்த்தார்." - வரதராஜ பெருமாள்
பெருமாள் அவர்களே!
இந்திய ராணுவம் வியட்நாமில் கொத்து குண்டுகளை வீசியிருந்தால் கோசிமின் இந்தியாவை ஆதரித்திருப்பாரா?
இந்திய ராணுவம் பாலஸ்தீனத்தில் பெண்களை பாலியல் வல்லுறவு செய்திருந்தால் அரபாத் இந்தியாவுடன் உறவு வைத்திருப்பாரா?
இந்திய ராணுவம் தென்னாபிரிக்க நிறவெறி அரசுக்கு உதவியிருந்தால் நெல்சன் மண்டலோ இந்தியாவை ஏற்றிருப்பாரா?
• தமிழ் மக்களை இந்திய ராணவம் கொல்லும் போது
• தமிழ்பெண்களை இந்திய ராணுவம் பாலியல் வல்லறவு செய்த போது
• தமிழ் மக்களின் உடமைகளை இந்திய ராணுவம் சேதமாக்கியபோது
அதற்கு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கிய நாபாவின் துரோகத்தை கோசிமினுடனும் ,அரபாத்துடனும் நெல்சன் மண்டலேவுடன் எப்படி ஒப்பிட முடியும்?
அதெல்லாம் சரி , நாட்டை விட்டு வெளியேறும்போது தமிழீழ பிரகடனம் செய்தீர்களே! அதை உங்கள் இந்தியா ஏற்கிறதா ? இல்லையா? அதையாவது மனட்சாட்சியோடு சொல்லுவீர்களா?
ஈழத்தைக் கைவிட்டுவிட்டீர்கள்
புரட்சியைக் கைவிட்டுவிட்டிர்கள்
இன்னும் எதற்கு "ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி" என்ற பெயர்?
அதையும் விட்டுவிட வேண்டியதுதானே?

குணா கவியழகனின் "விடமேறிய கனவு"

 குணா கவியழகனின் "விடமேறிய கனவு"
குணா கவியழகன் எழுதி அகல் பதிப்பக வெளியீடாக அண்மையில் வெளிவந்திருக்கும் நாவல் "விடமேறிய கனவு"
தமிழ் மக்களின் போராட்ட இலக்கியத்தில் வெளிவந்திருக்கும் இன்னொரு நாவல் இது. அந்த வகையில் இதுவும் வரவேற்கப்பட வேண்டியதே.
இந் நாவல் அண்மையில் கனடாவில் வெளியிடப்பட்டது. எதிர்வரும் 28ம் திகதி பிரான்சில் வெளியிடப்படுகிறது.
முள்ளிவாய்க்கால் அழிவுக்கு பின்னர் கைது செய்யப்பட்ட போராளிகளுக்கு இலங்கை அரசால் இழைக்கப்பட்ட கொடுமைகளை விபரிக்கும் நாவல் இது.
புனர்வாழ்வு முகாம் என்ற பெயரில் அடைத்து வைக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள் எவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை நன்கு வெளிப்படுத்துகிறது.
இறுதியாக முகாமில் இருந்து தப்பி செல்கிறார்கள் என்ற புனைவு முடிவை தவிர்த்திருந்தால் நாவல் இன்னும் யதாhத்தமாக இருந்திருக்கும்.
• புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டார்களா?
• கட்டாய ஆட்சேர்ப்புதானா தோல்விக்கு காரணம்?
கட்டாய ஆட்சேர்ப்பே புலிகளின் தோல்விக்கு காரணம் என இந் நாவலில் பேசப்படுகிறது. தோல்விக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் இதுமட்டுமே காரணம் என்பது எந்தளவுக்கு ஏற்றுக்கொள்ள முடியும்?
இலங்கை அரசும் சர்வதேச நாடுகள் சிலவும் கட்டாய ஆட்சேர்ப்பிற்காக புலிகள் மீது போர்க்குற்றம் சுமத்தும் வேளையில் புலிகள் அமைப்பில் இருந்த ஒருவரே அதை எழுதுவது ஆச்சரியமாக இருக்கிறது!

தமிழ்மக்களே!

• தமிழ்மக்களே!
திருடர்கள் வருகிறார்கள்;!
செம்பை எடுத்து உள்ளே வையுங்கள்!
இலங்கையில் 
பாராளுமன்றம் கலைக்கப்பட்டுவிட்டது
தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
திருடர்கள் ஒவ்வொரு முகமூடியுடன்
உங்களை ஏமாற்ற வருகிறார்கள்
யுத்தம் முடிந்து ஆறு ஆண்டுகளாகிவிட்டது. ஆனால்
இன்னமும் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை.
தமிழ் மக்கள் மீள் குடியேற்றப்படவில்லை.
காணாமல் போனோர் குறித்து எந்த பதிலும் இல்லை.
இத்தனைக்கு பின்பும் எந்த முகத்துடன் 
இந்த திருடர்கள் உங்கள் முன் வருகிறார்கள்?
மோடி ஓ.கே சொல்லிவிட்டார். 
ஓபாமா பாhத்து கொண்டிருக்கிறார்.
அமோக வெற்றி தந்தால் இம்முறை
சமாதானம் நிச்சயம் என்பார்கள்.
தமிழ் மக்களே!
இத்தனை காலம் இவர்களை நம்பி எமாந்தது போதும்.
இம்முறை விளக்குமாற்றால் விளாசி அனுப்புங்கள்
இந்த திருடர்களுக்கு சரியான பாடம் புகட்டுங்கள்!

சரியான விடை தருவோருக்கு தகுந்த பரிசு வழங்கப்படும்

• சரியான விடை தருவோருக்கு தகுந்த பரிசு வழங்கப்படும்
இம்முறை சம்பந்தன் அய்யா என்ன சொல்லி தமிழ் மக்களை ஏமாற்றப்போகிறார்?
இம்முறை தமிழ்தேசிய கூட்டமைப்பு யாரிடம் தேர்தல் செலவுக்கு பணம் பெறப் போகிறார்கள்?
இம் முறை அவர்கள் எத்தனை கோடி ரூபா பணம் தேர்தல் செலவுகென்று பெற்றுக்கொள்வார்கள்?
இதில் எத்தனை கோடி ரூபா வேட்பாளர்களுக்கு வழங்கப்படும்?
இதில் எத்தனை கோடி ரூபா மாவை சேனாதிராசாவின் லண்டன் மகன் தொழில் தொடங்க
கொடுக்கப்படும்?
மேற்கண்ட வினாக்களுக்கு சரியான பதில் தருவோருக்கு தகுந்த பரிசு வழங்கப்படும்.

இப்பொது புரிகிறதா?

• இப்பொது புரிகிறதா?
தேர்தலில் போட்டியிட ஏன் எல்லோரும் துடிக்கிறார்கள் என்று!
இலங்கையில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் சம்பளம் மற்றும் சலுகைகள் இதோ,
salary -54,485 Rs 
fuel -30,000 Rs 
transport-10,000 Rs 
Entertainment- 10,000 Rs 
mobile phone -2000 Rs 
meeting each -500Rs 
Current bill - free 
Land line phone - free 
train ticket first class free
Air tickets 40 free For Him and for his wife or PA (tow persons)
மற்றும்
Secretary 
Vehicle 
Quarters 
Computers
Bodyguards
ஆக மொத்தம் சராசரி மாதாந்த சம்பளம் 120000 ரூபா. வருடத்திற்கு 1440000 ரூபா.
ஒரு படித்த பட்டதாரி ஆசிரியரின் சம்பளம் வெறும் 30 ஆயிரம் ரூபா மட்டுமே.
எந்த படிப்பும் தேவையற்ற ஒரு எம.பி யின் சம்பளம்- 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபா
இது என்ன நியாயம்?
ஜந்து வருடத்திற்கு ஒரு எம.பி க்கு மொத்த சம்பளம் - 7200000 ரூபா
225 எம்.பி களுக்கான மொத்த செலவு -1620000000 ரூபா
அதாவது அனைத்து எம்.பி களுக்கும் மொத்தமாக 162 கோடி ருபா சம்பளம் வழங்கப்படுகிறது.
ஆனால் இவர்கள் மக்களுக்கு என்ன சாதித்தார்கள்?
வெளிநாட்டில் உள்ளவர்களும் ஏன் இலங்கை தேர்தலில் போட்டியிட துடிக்கிறார்கள் என்று இப்போது புரிகிறதா?