Tuesday, June 30, 2015

ஓ பெண்ணே!

ஓ பெண்ணே!
தூக்கு காவடி எடுப்பதாலோ- அன்றி
தீச்சட்டி ஏந்தி வேண்டுவதாலேயோ
படுகொலை செய்யப்பட்ட உண் கணவன்
மீண்டும் வரப்போவதில்லை.
சிறையில் இருக்கும் உன் மகன் 
விடுதலை பெறப் போவதில்லை
ஓ பெண்ணே!
கொஞ்சம் சிந்தித்துப்பார்
தன் கோயில் மீது குண்டு போட்டவர்களையே
தண்டிக்க முடியாத உன் கடவுள்
தன்னையே காப்பாற்ற முடியாத கடவுளால்
உன்னைக் காப்பாற்ற முடியுமா?
உனக்கு உதவதான் முடியுமா?
ஓ பெண்ணே!
உன் தோள்கள் துப்பாக்கி எந்தினால்
உன் கரங்கள் வெடி குண்டுகளை எந்தினால்
உன் கனவுகள் நிச்சயம் நிறைவேறும்
என்பதை மட்டும் நினைவில் கொள்வாயாக!

No comments:

Post a Comment