Tuesday, June 30, 2015

கனிமொழிக்கு ஆனந்தியை தெரியாமல் இருக்கலாம்

• கனிமொழிக்கு ஆனந்தியை தெரியாமல் இருக்கலாம்
கூடி இருந்த கஸ்பார் அடிகளாரையுமா தெரியாது?
புலிகள் சரணடைவதற்கு தான் ஏற்பாடு செய்யவில்லை என்று கனிமொழி தற்போது மறுக்கிறார்.
அதுமட்டுமல்ல எழிலனையும் யார் என்று தனக்கு தெரியாது என்கிறார்.
அப்படியென்றால் புலிகள் சரணடைவதற்கு கனிமொழி ஊடாக தான் ஏற்பாடு செய்தேன் என்று கஸ்பார் அடிகளார் கூறியது பொய்யா?
2010ல் கஸ்பார் அடிகளார் கூறியது பொய் என்றால் ஏன் அப்போது அதை கனிமொழி மறுக்கவில்லை?
அல்லது கஸ்பார் அடிகளாரையும் யார் என்று தெரியாது என்று இப்போது கனிமொழி கூறுவாரா?
கனிமொழி அவர்களே!
துரோகம் செய்து விட்டு அதை மறுப்பதற்கு இது ஒன்றும் உங்கள் "2ஜி" ஊழல் இல்லை.
உங்கள் குடும்பத்து துரோகத்தால் பலியானது 40 ஆயிரம் அப்பாவி தமிழர்கள்.
வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டது போhக்குற்றம் என்றால் அதில் உங்களுக்கும் பங்கு உண்டு.
கொல்லப்பட்டவர்களின் ரத்தம் காயுமுன்னர் இலங்கை வந்து மகிந்தவுடன் விருந்து உண்டு பரிசில்கள் பெற்று சென்றதை நாம் கண்டோம்.
வரலாறு உங்களை ஒருபோதும் மறக்கப் போவதுமில்லை. மன்னிக்கப்போவதுமில்லை.

No comments:

Post a Comment