Sunday, July 29, 2018

தமக்கு பொலிஸ் பாதுகாப்பு பெற்ற தலைவர்கள் தமிழ் மக்களின் பாதுகாப்பு குறித்து அக்கறை இல்லை!

•தமக்கு பொலிஸ் பாதுகாப்பு பெற்ற தலைவர்கள்
தமிழ் மக்களின் பாதுகாப்பு குறித்து அக்கறை இல்லை!
9வயது சிறுமி கொல்லப்பட்ட அதிர்ச்சியில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை.
அதற்குள் இன்னொரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. 59 வயது பெண் அதுவும் கணவன் முன்னிலையில் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுள்ளார்.
கணவனுடன் இருந்த 59 வயது பெண்ணிற்கே இந்த நிலை என்றால் கணவன் இல்லாத விதவைப் பெண்கள் நிலையை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருந்த யுத்த காலத்தில்கூட இப்படி நடக்கவில்லையே.
இப்போது ஏன் இப்படி நடக்கிறது? இதற்கு முடிவேயில்லையா? இனி இது தொடர்கதையாக நடக்கப்போகிறதா?
யாராவது ஒரு தலைவரின் வீட்டில் இப்படி நடந்தபின்தான் இதற்கு முடிவு கட்டுவார்களா?
தாதாக்கள் நிரம்பிய கொழும்பு நகரில்கூட இந்தளவு மோசமான நிலை இல்லையே?
அமைதிக்கு பெயர் போன யாழ் நகரில் ஏன் இப்படி நடக்கிறது?
போதைப் பொருட்களும் சினிமாவும் கலாச்சார சீரழிவிற்கு காரணமாக இருக்கின்றன என கூறிவிட்டு அமைதியாக இருக்கப் போகிறோமா?
அல்லது, இப்படி செய்பவர்களை பிடித்து அவர்களின் ஆண் உறுப்பை வெட்ட வேண்டும் என்று கோபமாக பதிவு எழுதிவிட்டு அடங்கப் போகிறோமா?
முடியாது. எமது ஒவ்வொருவரின் வீட்டிலும் இப்படி நடக்கும்வரை பொறுமையாக இருந்துவிட முடியாது.
இனி இது நடக்கா வண்ணம் உறுதியான நடவடிக்கை எடுக்க நாம் வற்புறுத்த வேண்டும்.
சட்டம் ஒழுங்கு சீர்குலையா வண்ணம் பேணுவதற்கு பொலிஸ் அதிகாரம் எமக்கு வேண்டும்.
பொலிஸ் அதிகாரம் எமது கையில் இருந்தால்தான் சமூகவிரோதிகளை அடக்க மூடியும்.
அதுமட்டுமன்றி சமூகவிரோதிகள் உருவாதற்குரிய காரணங்கள் கண்டறிந்து அவற்றை பொக்க வேண்டும்.
ஆனால் எமது தலைவர்கள் பொலிஸ் அதிகாரம் கேட்பதில்லை. மாறாக தமக்கு 5 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனம் கேட்டு பெறுகின்றனர்.
எமது தலைவர்கள் மக்களின் பாதுகாப்பு குறித்து அக்கறை கொள்வதில்லை. தமக்கு சிங்கள பொலிஸ் பாதுகாப்பு கேட்டுப் பெறுகின்றனர்.
தமது பிள்ளைகளை பாதுகாப்பாக வெளிநாடுகளில் தங்க வைத்திருக்கின்றனர். அதனால் சாதாரண மக்களின் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து அவர்கள் கவலை கொள்வதில்லை.
இந்த நிலையில் அடுத்த மாகாணசபை முதல்வர் விக்கியா? மாவையா? என பட்டிமன்றம் நடத்துகின்றனர்.
இந்த நிலை தொடருமாயின் தமிழ் மக்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாத நிலை வரும்.

•இந்தியாவுக்கு வழங்கப்படும் பலாலி விமானநிலையம்!

•இந்தியாவுக்கு வழங்கப்படும் பலாலி விமானநிலையம்!
எதிர்வரும் 10ம் திகதி அபிவிருத்தி என்னும் பெயரில் பலாலி விமான நிலையம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இந்தியாவுக்கு வழங்கப்படவிருக்கிறது.
இந்த பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கு இந்திய உதவியை தானே கேட்டுப் பெற்றதாக முதல்வர் விக்கினேஸ்வரன் தெரிவிக்கிறார்.
ஆனால் இந்தியா என்ன அடிப்படையில் இந்த உதவியை வழங்கிறது என்ற விபரம் எதனையும் முதல்வர் தெரிவிக்கவில்லை.
ஏனெனில் இதே பலாலி விமானநிலைய அபிவிருத்திக்கு 2002ல் இந்தியா நிபந்தனை விதித்திருந்தது.
(1) பலாலி விமான நிலையத்தில் இந்தியாவைத் தவிர வேறு எந்த விமானமும் வரக்கூடாது.
(2) இந்தியா கோரும் பட்சத்தில் விமானநிலையத்தை இந்தியாவுக்கு தந்து உதவ வேண்டும்.
இவ்வாறு இந்தியா நிபந்தனை விதித்ததாக இலங்கை பாதுகாப்பு செயலாளராக இருந்த திரு .ஒஸ்ரின் பெர்ணாந்து என்பவர் தனது" My Belt is White" என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிபந்தனைகள் பலாலி விமானநிலையம் ஒரு காலத்தில் சர்வதேச விமானநிலையமாக மாறும் என்ற தமிழர் கனவில் மண்ணை அள்ளிப் போட்டுள்ளது.
அதுமட்டுமன்றி மயிலிட்டி வடக்கு, பலாலி மேற்கு, பலாலி வடமேற்கு ஆகிய கிராமசேவகர் பிரிவுகளில் பல ஏக்கர் நிலங்கள் பலாலி விமான நிலைய விஸ்தரிப்பிற்காக சுவீகரிக்கப்படவுள்ளன.
இதனால் 1500க்கு மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் நிரந்தரமாக அகதிகளாகப் போகின்றனர்.
பலாலி விமான நிலையம் தற்போது 996 ஏக்கர் நிலப்பரப்பையும் 2305 மீற்றர் ஓடுபாதையையும் கொண்டுள்ளது. இது ஒப்பீட்டளவில் இரத்மலானை சர்வதேச விமானநிலையத்தைவிட பெரியது.
எனவே மக்களின் நிலங்களை அபகரிக்காமலே பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய முடியும்.
ஆனால் இந்தியாவின் நலனுக்காக தமிழர் நலன் மட்டுமல்ல தமிழர் நிலமும் தரை வார்த்துக் கொடுக்கப்படுகிறது.
கொழும்பிலும் அம்பாந்தோட்டையிலும் சீனாவுக்கு நிலம் வழங்கப்பட்டது குறித்து ஒப்பாரி வைத்த ஆய்வாளர்கள் தமிழர் நிலம் இந்தியாவுக்கு வழங்குவது குறித்து மௌனம் காக்கின்றனர்.
இதில் மிகப் பெரிய கவலை என்னவெனில் தமிழருக்காக குரல் கொடுப்பதாக கூறிவரும் முதல்வர் விக்கினேஸ்வரன் மூலமாகவே இந்தியா, பலாலி விமான நிலையத்தையும் தமிழர் நிலங்களையும் ஆக்கிரமிக்கின்றது.
இந்தியாவுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஜேவிபி கூட பலாலி விமான நிலையம் இந்தியாவுக்கு வழங்குவது குறித்து மௌனம் காப்பது வழங்கப்படுவது தமிழர் நிலம் என்பதாலா?

கடவுள் சிவனுக்கு தமிழ் தெரியாது- ஜக்கி வாசுதேவ்

கடவுள் சிவனுக்கு தமிழ் தெரியாது- ஜக்கி வாசுதேவ்
எல்லாம் வல்ல கடவுள் என்கிறார்கள்
ஆனால் அந்த கடவுளுக்கு தமிழ் தெரியாது என்கிறார்கள்
தமிழ் தெரியாத கடவுள் எப்படி தமிழருக்கு
கடவுளாக இருக்க முடியும் என்று கேட்டால்
கேட்டவனை இந்து இல்லை என்கிறார்கள்.
கஞ்சா அடித்தால் சிவனையே தெரியாத பக்கி
எல்லாம் கடவுளுக்கு தமிழ் தெரியாது என்கிறான்.
இதுகூடப் பரவாயில்லை, இன்னொரு பக்கி தான்
இயேசு கூடப் பேசியதாகவும் அடுத்த பிரதமர்
மோடிதான் என்று அவர் தன்னிடம் கூறியதாக
புருடா விடுகிறான்.
கடவுள்கூட நேரடியாக பேசுகிற டெலிபோன் லைன்
எல்லாம் வைத்திருக்கிறவன் தமிழ்நாட்டிலதான்
இருக்கிறான்.
இவனுகளுக்கு,
காவிரிப் பிரச்சனை தெரிவதில்லை.
தூத்துக்குடிப் பிரச்சனை தெரிவதில்லை
மக்களின் எந்தப் பிரச்சனையும் தெரிவதும்
இல்லை.
அது குறித்து கொஞ்சம்கூட அக்கறையும்
கொள்வதில்லை.
ஆனால்,
தமிழ்நாட்டில இருந்துகொண்டு
தமிழன் சோத்தை தின்னுகொண்டு
தமிழனுக்கு விரோதமாக பேசுறதையே வாடிக்கையாக வைத்திருக்கிறானுங்க.
இவனுகளையெல்லாம் அடித்து விரட்டாதவரை
தமிழ்நாடு முன்னேறப் போவதில்லை.

•மீண்டும் புலிகளை உருவாக்குவோம்- அமைச்சர் விஜயகலா

•மீண்டும் புலிகளை உருவாக்குவோம்- அமைச்சர் விஜயகலா
அன்புள்ள கலா அக்காவுக்கு!
“நல்லாட்சி” ஜனாதிபதி தலைமையில் உங்கள் பிள்ளைகளுக்கு செய்த அரங்கேற்றத்தை மறந்துவிடுவோம்
மாணவி வித்யா கொலையாளிகளை காப்பாற்ற நீங்கள் செய்த உதவிகளையும் மறந்துவிடுவோம்.
ஆனால் நீங்கள் இப்ப தமிழில் பேசிய விடயத்தை ஒருக்கால் சிங்களத்தில் பாராளுமன்றத்தில் பேசினால் போதும்.
ஆனால் ஒரு விடயத்தில் உண்மை பேசியுள்ளீர்கள். அதாவது புலிகள் உருவாதில்லை. உருவாக்கப்படுகிறார்கள் என்பதை.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும் இந்த உண்மையை ஒருமுறை கூறியிருக்கிறார்.
அதாவது கடந்தகாலங்களில் இலங்கை அரசு செய்த தவறுகளினாலே பிரபாகரன்கள் உருவாகிறார்கள் என்றார் அவர்.
இப்போது நீங்களும் “புலிகளை உருவாக்குவோம்” என்பதின் ஊடாக இந்த உண்மையை உறுதிப்படுத்தியுள்ளீர்கள்.
தேர்தல்கள் நெருங்குகின்றன. இதுவரை கொழும்பில் ஏசி அறையில் கொகுசாக இருந்தவர்கள் எல்லாம் மக்களை சந்திக்க வரப்போகின்றனர்.
ஆனால் இம்முறை மக்கள் யார் பேச்சையும் நம்பப் போவதும்மில்லை. ஏமாறப் போவதுமில்லை.

மங்கை அக்காவும் கலா அக்காவும்

மங்கை அக்காவும் கலா அக்காவும்
கலா அக்கா எதை நினைத்து விதைத்தாரோ அதை நன்றாகவே அறுவடை செய்கிறார்.
“மீண்டும் புலிகளை உருவாக்குவோம்” எனக்கூறி தன்னை பிரபல்யப்படுத்தியதுடன் அடுத்த தேர்தலுக்கு அச்சாரம் போட்டுவிட்டார்.
மாணவி வித்யா கொலையாளிகளுக்கு உதவியால் ஏற்பட்ட கறையை இதன் மூலம் போக்க முற்பட்டுள்ளார்.
இவ்வாறுதான் அமிர்தலிங்கம் மனைவி மங்கை அக்காவும் தேர்தல் காலங்களில் உசுப்பல் பேச்சுகள் பேசுவார்.
சிங்களவனின் தோலை உரித்து செருப்பாக போடுவோம் வாருங்கள் என்று இளைஞர்களுக்கு அவர் அழைப்புவிட்டார்.
ஆனால் அதேவேளை தனது மகனை மதுரை மருத்துவ கல்லூரியில் சேர்த்து டாக்டருக்கு படிக்க வைத்தார்.
நாட்டில் மக்கள் அழிந்து கொண்டிருந்தபோது இவர் லண்டன் சென்று தன் டாக்டர் மகனுடன் தங்கியிருந்தார்.
அமைச்சர் கலா அக்காவும் “புலிகளை உருவாக்குவோம்” என்று ஒருபுறம் பேசிக்கொண்டு மறுபுறம் தன் பிள்ளைகளை லண்டன் அனுப்பி படிப்பிக்கிறார்.
தன் மகளின் நாட்டிய அரங்கேற்றத்தைக்கூட இதே “நல்லாட்சி” ஜனாதிபதி தலைமையிலேதான் நடத்தியிருக்கிறார்.
இத்தனை நாளும் அரசோடு ஒட்டி இருந்துவிட்டு அதுவும் அமைச்சராக அனைத்து சலுகைகளையும் அனுபவித்துக்கொண்டு தேர்தல் வருகிறது என்றவுடன் மீண்டும் புலிகளை உருவாக்குவோம் என்று வசனம் பேசுகிறார்.
ஆனால் இனி இந்த மாதிரிப் பேச்சுகளை எல்லாம் நம்பி ஏமாறுவதற்கு தமிழ் மக்கள் முட்டாள்கள் இல்லை என்பதை அடுத்த தேர்தலில் கலா அக்கா நிச்சயம் உணர்ந்து கொள்வார்.

நல்லாட்சி அரசு யாருக்கு துரோகம் செய்துவிட்டது?

•நல்லாட்சி அரசு யாருக்கு துரோகம் செய்துவிட்டது?
மாவையார் அவர்களே!
நல்லாட்சி அரசுதானே உங்களுக்கு பதவி தந்தது
நல்லாட்சி அரசு தானே உங்களுக்கு 5 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனம் தந்தது
நல்லாட்சி அரசுதானே உங்களுக்கு சொகுசு பங்களாக்கள் தந்தது.
நல்லாட்சி அரசுதானே உங்களுக்கு தலா 2 கோடி நிதி தந்தது
நல்லாட்சி அரசுதானே உங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு தந்தது
நல்லாட்சி அரசுதானே உங்கள் மகனுக்கும் பதவி தந்தது.
நல்லாட்சி அரசுதானே உங்கள் மாவிட்டபுரம் காணியை தந்தது.
நல்லாட்சி அரசுதானே அந்த மாவிட்டபுரம் பங்களாவை கட்ட வசதி தந்தது.
நல்லாட்சி அரசுதானே வெளிநாட்டில் இருந்து மாபிள் கற்கள் இறக்குமதி செய்து பங்களா கட்ட உதவியது.
நல்லாட்சி அரசுதானே அந்த பங்களாவுக்கு மதில் கட்ட கருங்கல் இறக்குமதி செய்ய உதவியது.
நல்லாட்சி அரசு உங்களுக்கு துரோகம் செய்யவில்லை. யோகம்தான் செய்துள்ளது.
நல்லாட்சி அரசு தமிழ் மக்களுக்கே துரோகம் செய்துள்ளது.
ஆனால் அதைச் சொல்ல உங்களுக்கு தகுதி இல்லை.

•தமிழ்தேசியத்தை சீண்டும் விஜய் டிவி!

•தமிழ்தேசியத்தை சீண்டும் விஜய் டிவி!
விஜய் டிவி “சுப்பர் சிங்கர்” என்னும் பாட்டுப் போட்டியை நடத்தி வருகிறது. இதில் வழக்கமாக சினிமா பாடல்களையே பாடி வந்தனர்.
கடந்த சீசன்களில் ஈழத்து பாடகர்களை பாடவைத்து அதில் சில கண்ணீர் வரவழைக்கும் காட்சிகளை புகுத்தி ஈழத் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்று வந்தது இந்த விஜய் டிவி.
இம்முறை வழக்கத்திற்கு மாறாக நாட்டுப்புற பாடகர் இருவருக்கு சந்தர்ப்பம் வழங்கி மக்கள் இசை பாடல்களை பாட வைக்கின்றனர்.
எதிர்பார்த்தபடியே தமிழ் மக்களின் ஆதரவு இவர்களுக்கு கிடைத்து வருகிறது.
அதனால் மக்களின் பெரும் ஆதரவைப் பெற்ற ஒரு மக்கள் இசைப் பாடகியை நடைமுறைக்கு மாறாக நடுவர் தெரிவின் மூலம் போட்டியில் இருந்து நீக்கியுள்ளனர்.
மக்கள் இசையை பாடுபவர்களை இந்த நடுவர்கள் கர்நாடாக சங்கீத அறிவு அற்றவர்கள் என்ற ரீதியில் இகழ்வு செய்கின்றனர்.
உங்களின் கர்நாடக சங்கீதம்தான் உயர்ந்தது என்று கருதுவீர்களாயின் அதற்கென ஒரு போட்டி நடத்தி தாராளமாக பரிசு கொடுத்து மகிழுங்கள்.
ஆனால் அதைவிடுத்து மக்கள் இசைப் பாடல்களான நாட்டுப்பறப் பாடல்களையும் அதைப் பாடும் பாடகர்களையும் இகழ்வது தொடருமாயின் விஜய் டிவி தமிழ்நாட்டில் இயங்க அனுமதிப்பது குறித்து தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டிவரும்.
தமிழ் மக்களின் பாடல் எது என்பதை தமிழ் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
அதேபோல் சிறந்த பாடகர் யார் என்பதையும் தமிழ் மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
தமிழே ஒழுங்காக பேச வராத வேறு மொழி நடுவர்களை வைத்துக்கொண்டு அவர்களுக்கு தெரியாத தமிழ் மக்கள் இசைப் பாடல்களை அவர்கள் மூலம் இகழும் செயலை விஜய் டிவி உடனடியாக நிறுத்த வேண்டும்.
தமிழ் மக்களின் தமிழ் தேசிய உணர்வுடன் சீண்டிப் பார்க்கும் விளையாட்டை விஜய் டிவி நிறுத்த வேண்டும். இல்லையேல் அதற்கான விளைவை அனுபவிக்க வேண்டிவரும் என எச்சரிக்கிறோம்.

போங்கடா! நீங்களும் உங்கட நியாயமும்!

•போங்கடா!
நீங்களும் உங்கட நியாயமும்!
இலங்கைக்கு கிட்லர் ஆட்சி வேண்டும் என்றவர் மீது விசாரணை இல்லை
பாராளுமன்றத்திற்கு குண்டு வீசவேண்டும் என்ற விமல் வீரவம்ச மீது விசாரணை இல்லை.
ஆனால் புலிகளை உருவாக்குவோம் என்றவர் மீது மட்டும் விசாரணை. அதுவும் அவ் உரைக்கு கைதட்டியவர்கள் மீதும் விசாரணையாம்.
அதாவது சிங்கள தலைவர் என்றால் என்னவும் பேசலாம். ஆனால் தமிழர் என்றால் உடனே சட்டம் பாயும் என்கிறார்கள்.
தமிழ் மக்கள் இனி இந்த நல்லாட்சியில் சாப்பிடுவதைத் தவிர வேறு எதற்கும் வாய் திறக்கக்கூடாது என்று கூறுவார்கள் போல் இருக்கிறது.
யுத்தம் முடிந்து பத்து வருடமாகிறது. தமிழ் மக்களுக்கு இதுவரை என்ன கொடுத்துள்ளார்கள்?
புலிகள் அழிக்கப்பட்டதும் தமிழ் மக்களுக்கு தீர்வு தரப்படும் என உறுதிமொழி தந்தே புலிகளை அழித்தார்கள். ஆனால் எதையும் தராமல் ஏமாற்றிவிட்டார்கள் என்று சம்பந்தர் அய்யாவே அண்மையில் கூறியிருக்கிறார்.
சம்பந்தர் அய்யா புலிகளை பயங்கரவாதிகள் என்றார். சிங்கக்கொடியை ஏற்றினார். ஆனாலும் அவருக்கு என்ன கொடுக்கப்பட்டது?
சம்பந்தர் அய்யாவை வெறுங்கையோடுதானே அனுப்பியிருக்கிறார்கள். அதனால்தானே ஏமாற்றிவிட்டார்கள் என்று அவர் கூறியிருக்கிறார்.
புலியை உருவாக்குவோம் என்று அமைச்சர் விஜயகலா சொன்னவுடன் உடனே ஒருபோதும் புலி உருவாகிவிடாது.
தமக்கு புலி வேண்டுமா? இல்லையா? என்பதை தமிழ் மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
கடந்த பத்து வருடத்தில் பதவியில் இருந்த நீங்கள் தீர்வு கண்டிருந்தால் தமிழ் மக்கள் ஏன் புலிகளை உருவாக்கப் போகிறார்கள்?
மாத்தி யோசியுங்கடா முட்டாள் பயலுகளே!

விஜயகலா போட்ட புலிக்குண்டு சம்பந்தரின் பதவியை பறிக்கப் போகிறதா?

விஜயகலா போட்ட புலிக்குண்டு
சம்பந்தரின் பதவியை பறிக்கப் போகிறதா?
சம்பந்தர் அய்யா – என்ன தம்பி சுமந்திரன், அவசரமாக வந்திருக்கிறீர்?
சுமந்திரன் - உந்த விஜயகலா மேட்டர்தான் ஜயா. எங்கட கருத்து என்னவென்று கேட்கிறான்கள். நான் இப்ப தெரிவிக்க முடியாது என்று சமாளித்துப் போட்டன். ஆனால் அப்புறம் கேட்டால் என்ன கூறுவது?
சம்பந்தர் அய்யா- ஓ! அப்படியா? நான் ஒருக்கால் அந்த பிள்ளையோட பேச வேண்டும். ரெலிபோன் போட்டு தாரும்.
சம்பந்தர் அய்யா கேட்டபடி சுமந்திரன் அமைச்சர் விஜயகலாவுடன் தொலைபேசியில் தொடர்பு எற்படுத்திக் கொடுக்கிறார்.
சம்பந்தர் அய்யா- ஹலோ பிள்ளை கலாவே பேசுறது. நான் சம்பந்தர் பேசுறன்.
விஜயகலா- ஓமோம் ஜயா சொல்லுங்கோ. என்ன விசயம்?
சம்பந்தர் அய்யா- என்னம்மா இப்படி திடீரென்று பேசிவிட்டாய்? வழக்கமாக தேர்தல் நேரத்தில நாங்கதானே புலி புகழ் பாடுவம். நீ ஏனம்மா இப்படி பேசுறாய்?
விஜயகலா- அதென்னய்யா, நீங்கள் புலி பற்றி பேசினால் அமைதியாக இருக்காங்க. நான் பேசினா மட்டும் கொதிக்கிறாங்க?
சம்பந்தர் அய்யா- அதம்மா வந்து, நான் தேர்தலுக்கா பேசுறன் என்டு அவங்களுக்கு நன்றாய் தெரியும். அதால பேசமால் இருக்கிறாங்க.
விஜயகலா- நான் மட்டும் என்ன உண்மையில் புலிக்காகவா பேசுறன்? நானும் என்ர அரசியலுக்காகத்தானே பேசுறன். வித்யா கொலையாளிகளுக்கு உதவியதால என்ர பேர் நாறிக்கிடக்கு. அதால ஒரு ஸ்டன்ட் அடிச்சன். ஆனால் அவங்க உண்மை என்று நினைத்து பதவியைப் பறிக்க பார்க்கிறாங்க ஜயா.
சம்பந்தர் அய்யா- நீ ஏனம்மா இந்த வேலை பார்க்கிறாய்? உன்னிடம் பணம் இருக்கு. உனக்கு என்று கொஞ்ச வோட்டும் இருக்கு. பேசாமலே வரலாம்தானே? ஏன் எங்கட பிழைப்பில மண்ணை அள்ளிப் போடுகிறாய்?
விஜயகலா – என்ன ஜயா சொல்லுறியள்?
சம்பந்தர் அய்யா- பின்ன என்னம்மா? நீ பாட்டுக்குப் பேசிவிட்டுப் போய்விட்டாய். இப்ப “எங்கட கருத்து என்னவென்று உயிரை எடுக்கிறாங்கள்” என்று தம்பி சுமந்திரன் ரொம்ப கவலைப்படுகுது.
விஜயகலா – ஏன் ஜயா? ஒரு கருத்தை தைரியமாக சொல்ல வேண்டியதுதானே.
சம்பந்தர் அய்யா- எப்படியம்மா சொல்வது? தேர்தல் வரப்போகுது. புலிக்கு எதிரா கருத்து சொன்னால் மக்கள் வோட்டு கிடைக்காது. புலிக்கு ஆதரவாய் கருத்து சொன்னால் என்ர எதிர்க்கட்சி தலைவர் பதவியை பறிச்சுப் போடுவான்கள். உனக்கு தெரியும்தானே பதவி இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்டு.
விஜயகலா- அதுக்கு நான் என்ன செய்ய முடியும் ஜயா?
சம்பந்தர் அய்யா- நான் எல்லாத்தையும் சமாளிக்கப் பார்க்கிறன். நீர் கொஞ்ச நாளைக்கு பேசாமல் இரும் பிள்ளை.
விஜயகலாவுடன் பேசி முடித்தவுடன் சம்பந்தர் அய்யா சுமந்திரனிடம் கூறினார்
சம்பந்தர் அய்யா- தம்பி சுமந்திரன்! புலிகளை நாம் ஒருபோதும் ஆதரிக்கவில்லை என்று நீர் ஆங்கிலத்தில் பாராளுமன்றத்தில் பேசும். அதேநேரம் புலிகளை ஆதரிக்கிறோம் என்று தம்பி சிறீதரனை தமிழில் கிளிநொச்சியில் ஒரு கூட்டத்தில் பேசச் சொல்லும்.
சுமந்திரன் - வடமாகாண முதல்வரும் புலிகளை ஆதரித்து பேசுறார். அவரை எப்படி சமாளிப்பது?
சம்பந்தர் அய்யா- அவரை இந்தியாவுக்கு கூறி சமாளித்து கொள்ளலாம். “நல்லாட்சி அரசு துரோகம் செய்துவிட்டது. போராட்டம் வெடிக்கும்” என்று தம்பி மாவையை ஒரு அறிக்கை விடச் சொல்லும்.
சுமந்திரன் - சரி ஜயா. அப்படியே செய்யிறம்.
தனது பதவியை காப்பாற்றிய நிம்மதியுடன் அய்யா வழக்கமான தனது உறக்கத்திற்குச் சென்றார்.
குறிப்பு - யாவும் கற்பனை அல்ல

ஆண்டாளுக்காக பொங்கியவர்கள் 2000 சிலை திருட்டுக்காக ஏன் பொங்கவில்லை?

•ஆண்டாளுக்காக பொங்கியவர்கள்
2000 சிலை திருட்டுக்காக ஏன் பொங்கவில்லை?
ஆண்டாளை தரக்குறைவாக விமர்சித்துவிட்டார் என்று
கவிஞர் வைரமுத்துக்கு எதிராக பொங்கியவர்கள்
2000 கடவுள் சிலைகள் திருட்டுப் போய்விட்டதற்காக
ஏன் இதுவரை பொங்கவில்லை?
ஏனெனில் வைரமுத்து உங்காளு இல்லை
சிலை திருடன் உங்காளு என்பதுதான் காரணமா?
ஆண்டாளுக்காக சோடா புட்டி எறியவும்
தயங்கமாட்டோம் என்று கூறிய ஜீயர்
சிலை திருட்டு பற்றி ஏன் வாய் திறக்கவில்லை?
ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் 2000 கடவுள் சிலைகள்
உலகம் முழுவதும் சிலை கடத்தலில் புரளும்
பணத்தின் பெறுமதி 40 அயிரம் கோடி ருபா
பெறுமதிமிக்க ஒறிஜினல் சிலைகளை எடுத்துவிட்டு
பெறுமதியற்ற டூப்பிளிகேட் சிலைகளை வைத்திருக்கிறார்கள்.
இத்தகைய திருட்டை கோயில் ஜயர் முதல்
பெரும் அரசியல் தலைவர்களின் ஒத்துழைப்பு இன்றி
ஒருபோதும் செய்திருக்க முடியாது.
எனவேதான் அத்தகையவர்களை கைது செய்ய முயன்ற
பொலிஸ் அதிகாரியை மாற்றம் செய்ய முயன்றிருக்கிறார்கள்.
நல்லவேளை, உயர்நீதிமன்றம் தலையிட்டு மீண்டும்
அந்த அதிகாரியை அதே பதவியில் அமர்த்தியுள்ளது.
அதுசரி, கடவுள் இல்லை என்று சொன்னவன்
ஒருபோதும் கடவுள் சிலையை திருடவில்லை.
ஆனால் கடவுள் இருக்கு என்று கூறியவன்
கடவுள் சிலையை திருடியது மட்டுமன்றி
அந்த டூப்பிளிகேட் சிலையை தொட்டால் தீட்டு என்று
எங்களையும் வெளியில் நிற்க வைத்தானே
இந்த அநியாயத்தை என்னவென்று சொல்வது?
குறிப்பு- கோயிலுக்குள் இருக்கும்வரை கடவுள் என்கிறார்கள். களவு போனதும் சிலை என்கிறார்கள். அது ஏன்?

இது மனிதர்கள் வாழும் நாடா?

•இது மனிதர்கள் வாழும் நாடா?
அல்லது பேய்கள் ஆட்சிசெய்யும் சுடுகாடா?
சர்வாதிகாரி ஹிட்லர்கூட கைதட்டியவர்களுக்கு தண்டனை கொடுத்ததில்லை
இலங்கை ஜனநாயகநாடு என்கிறார்கள். நல்லாட்சி நடக்குது என்கிறார்கள். ஆனால் கைதட்டியவர்கள் மன்னிப்பு கடிதம் தரவேண்டும் என்கிறார்கள்.
என்ன இது? வெட்கமாக இல்லையா? இந்த காலத்திலும் இப்படி ஒரு அரசா?
ஏன் ஒரு பாராளுமன்ற உறுப்பினர்கூட இதைக் கண்டிக்கவில்லை.
அப்படியென்றால் தமிழ் மக்கள் இனி சாப்பிடுவதற்கு மட்டும்தான் வாய் திறக்க முடியுமா?
ஜனநாயகம் என்றால் பேச்சு சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், கருத்து சுதந்திரம் என்கிறார்களே இது எதுவும் தமிழ் மக்களுக்கு இல்லையா?
கை தட்டக்கூடாது என்று உங்கள் சட்டத்தில எங்கேயாவது இருக்குதா?
இல்லையென்றால் எப்படி கைதட்டியவர்களிடம் மன்னிப்பு கடிதம் கேட்க முடியும்?
தமிழன் என்றால் எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம் என்ற திமிரா?
விஜயகலாவின் பேச்சைக் கண்டித்த சம்பந்தர் அய்யாகூட கைதட்டியவர்களிடம் மன்னிப்பு கடித்தம் கோருவது தவறு என்று கூற முன்வரவில்லை.
பதவி வெறி பிடித்த நாய்களை தலைவர்களாக தெரிவுசெய்த பாவத்திற்கு கைதட்டக்கூட உரிமையற்றவர்களாகிவிட்டது தமிழ் இனம்.

அடிக்கடி நிறம் மாறும் பச்சோந்தி இன்று தற்கொலை செய்து கொண்டது

அடிக்கடி நிறம் மாறும் பச்சோந்தி
இன்று தற்கொலை செய்து கொண்டது
நிறம் மாறுவதில் சம்பந்தர் அய்யாவிடம்
தான் தோற்றுப்போய்விட்டதாக அது கூறியது.
புலிகளின் போராட்டம் நியாயமானது என்றார்- ஆனால்
அதையே விஜயகலா கூறியதும் கண்டனம் தெரிவிக்கிறார்
தேர்தலுக்கு முன்னர் டக்லஸ் ஒட்டுக்குழு என்றார்- ஆனால்
தேர்தலுக்கு பின்னர் அதே டக்லஸ் யுடன் கைகோர்ப்பு
தேர்தலுக்கு முன்னர் மகிந்தர் மிரட்டினார் என்று அறிக்கை
தேர்தலுக்கு பின்னர் மகிந்தருக்கும் அழைப்பு விடுப்பு
பதவிக்காக சம்பந்தர் அய்யா அடிக்கும் பல்டி
பச்சோந்தியையே மிஞ்சிவிடும் திறன் கொண்டது.
இத்தனை கேவலம் சம்பந்தருக்கு தேவைதானா?
இத்தனைநாள் பதவிசுகம் அனுபவித்தது போதாதா?
இனியாவது ஒதுங்கி மற்றவர்களுக்கு வழி விட்டால் என்ன?

நீங்கள் எம்மை சாகடிக்கலாம் -ஆனால் ஒருபோதும் எம்மை தோற்கடிக்க முடியாது!

நீங்கள் எம்மை சாகடிக்கலாம் -ஆனால்
ஒருபோதும் எம்மை தோற்கடிக்க முடியாது!
நீங்கள் பிரபாகரன் படத்தை கொளுத்தலாம்.
நீங்கள் விஜயகலாவை பதவி நீக்கலாம்
நீங்கள் கைதட்டியவர்களிடம் மன்னிப்பு கடிதம் வாங்கலாம்
சம்பந்தர் அய்யாவின் கண்டன அறிக்கையை போடலாம்
ஆனால் உங்களால் ஒருபோதும் எம்மை தோற்கடிக்க முடியாது.
பிரபாகரன் காலத்தில் ஈழத் தமிழர் 20 லட்சம் பேர் மட்டுமே
உங்களை எதிர்த்து போராடினார்கள்.
ஆனால் இனிவரும் காலம் நீங்கள் எட்டுக் கோடி தமிழரை சந்திக்கப் போகிறீர்கள்.
இலங்கையில் மட்டுமல்ல உலகில் தமிழன் வாழும் இடம் எல்லாம் போராட்டத்தை சந்திக்கப் போகிறீர்கள்.
ஒருபோதும் தமிழ் மக்களை வெல்ல முடியாது என்பதை விரைவில் உங்களுக்கு புரியவைப்போம்.
ஒரு இனத்தை அடக்கும் எந்த இனமும் தான் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது.
தமிழ் இனத்தை அடக்க முயலும் சிங்கள இனமும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது.
தமிழ் மக்களின் போராட்டமே சிங்கள மக்களுக்கும் சுதந்திரத்தை பெற்றுக் கொடுக்கும்.
இதுவே இனி வரலாறாக அமையும்!
குறிப்பு- சம்பந்தர் சுமந்திரன் போன்றவர்களை விலைக்கு வாங்கலாம். ஆனால் தமிழ் மக்களை ஒருபோதும் விலைக்கு வாங்க முடியாது.

தனது மக்களுக்கு அம்புலன்ஸ் வழங்காத இந்தியா இலங்கை மக்களுக்கு வழங்க முன்வருவது ஏன்?

•தனது மக்களுக்கு அம்புலன்ஸ் வழங்காத இந்தியா
இலங்கை மக்களுக்கு வழங்க முன்வருவது ஏன்?
இந்தியாவில் சொந்த மக்கள் அம்புலன்ஸ் வசதி இன்றி செத்துக்கொண்டிருக்கும்போது இலங்கை மக்களுக்கு அம்புலன்ஸ் வண்டிகளை இந்தியா வழங்குகிறது.
கடந்த ஆண்டு கொழும்பு மற்றும் காலி மாவட்டங்களுக்கு இந்த உதவியை வழங்கிய இந்தியா இப்போது யாழ் மாவட்டத்திற்கு செய்ய முன்வந்துள்ளது.
எதிர்வரும் 21ம் திகதி முதல் வடமாகாணத்தில் இந்திய அரசின் உதவியுடன் அம்புலன்ஸ் வண்டி சேவை ஆரம்பிக்கப்பட இருப்பதாக அமைச்சர் குணசீலன் தெரிவித்துள்ளார்.
இந்த சேவைக்கு இந்தியா 20 அம்புலன்ஸ் வண்டிகளை தந்து உதவுவதாக வடமாகாண அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆனால் என்ன நிபந்தனைகளின் அடிப்படையில் இந்த உதவிகளை இந்தியா வழங்கிறது என்பதை இந்த அமைச்சர் மக்களுக்கு தெளிவு படுத்தவில்லை.
ஏனெனில் எற்கனவே பெற்றோலிய நிலையங்களுக்கு அனுமதி வழங்கியதன் மூலம் நாட்டின் பெற்றோலிய கட்டுப்பாடு இந்தியாவின் கைகளுக்கு சென்றுவிட்டது.
தற்போது அவசர தேவையான அம்புலன்ஸ் சேவையும் இந்தியாவின் கைகளுக்கு செல்கிறதா என்ற அச்சம் மக்களுக்கு ஏற்படுகிறது.
இம் மாதம் 10ம் திகதி பலாலி விமான நிலையம் உதவி என்னும் பெயரில் இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் செல்கிறது.
அடுத்து காங்கேசன் துறைமுகமும் சீமெந்து தொழிற்சாலையும் உதவி என்னும் பெயரில் இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் செல்ல இருக்கிறது.
ஏற்கனவே திருமலை துறைமுகமும் எண்ணெய் குதமும் இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டது.
கொழும்பு சிட்டியையும்; அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் சீனா ஆக்கிரமித்துவிட்டது என்று நம் தலைவர்கள் கூக்குரல் இடுகிறார்கள்.
ஆனால் அதே தலைவர்கள் தமிழரின் நிலத்தையும் வளத்தையும் இந்திய ஆக்கிரமிப்பிற்கு போட்டி போட்டு தாரை வார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

•மக்கள் பிரதிநிதிகள் என்ன செய்கிறார்கள்?

•மக்கள் பிரதிநிதிகள் என்ன செய்கிறார்கள்?
தமிழ் மக்களுக்கு ஒரு முதல்வர் இருக்கிறார். பல அமைச்சர்கள் இருக்கிறார்கள். பல பாராளுமன்ற, மாகாணசபை மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.
இதைவிட பல தொலைகாட்சி நிறுவனங்கள், பத்திரிகைகள், இணைய ஊடகங்கள் இருக்கின்றன.
இருந்தும் மக்கள் தங்கள் பிரச்சனைகளை எனது முகநூலில் எழுதும்படி கேட்கின்றனர் என்றால் என்ன அர்த்தம்?
மக்களின் பிரச்சனைகளை வெளிப்படுத்தாமல் அவர்களுக்கு உதவி செய்யாமல் தங்கள் நலன்களை மட்டும் கவனித்துக்கொள்கின்றனர் என்றுதானே அர்த்தம்.
பொலிஸ் லஞ்சம் வாங்குவதாக பலர் சுட்டிக்காட்டுகின்றனர். பொலிஸ் லஞ்சம் வாங்குவது அதிசயம் இல்லை. அவர்கள் வாங்காவிட்டால்தான் அதிசயம்.
ஏனெனில் மக்கள் பிரதிநிகளான அமைச்சர்களே லஞ்சமும் ஊழலும் செய்யும்போது அவர்களுக்கு காவல் காக்கும் பொலிஸ் லஞ்சம் வாங்காமல் இருக்குமா?
பொதுவாக வெளிநாடுகளில் இருப்பவர்களிடம் பொருளாதார உதவி கேட்டே தாயகத்தில் இருந்து செய்திகள் வரும்.
ஆனால் எனக்கு மட்டும் தங்கள் பிரச்சனைகளை எனது முகநூலில் எழுதும்படி கேட்டு வருகின்றது.
நான் எந்த பதவியிலும் இல்லை. நான் எந்த ஊடகமும் நடத்த வில்லை. இருந்தும் பலர் தங்கள் பிரச்சனைகளை எனக்கு எழுதி வருகின்றனர்.
உதாரணமாக,
நேற்றையதினம் தங்கள் ஊரைச் சேர்ந்த நபர் ஒருவரை பொலிஸ் அடித்து மருத்துமனையில் அனுமதித்தது என்றும் அதன் பின் அவரைக் காணவில்லை என்றும் பயமாக இருக்கிறது. அவரைக் கண்டுபிடிக்க உதவுங்கள் என்று ஒருவர் கேட்டு எழுதியிருக்கிறார்.
அதேபோன்று இன்னொருவர், தமது ஊரில் முன்பள்ளி பாடசாலைக்கு அணை கட்டியதாகவும் அதை ஒரு ரவுடி வந்து உடைத்து விட்டதாகவும் இதுபற்றி பொலிசில் முறைப்பாடு செய்தாலும் ஏற்கிறார்கள் இல்லை என்று எழுதியுள்ளார்.
இப்படி பல பிரச்சனைகள் தினமும் எழுதுகிறார்கள். இவை எல்லாம் எங்கள் பிரதிநிதிகளால் தீர்க்கக்கூடிய பிரச்சனைகள்.
இருந்தும் லண்டனில் இருக்கும் எனக்கு அவர்கள் எழுதுகிறார்கள் என்றால் என்ன அர்த்தம்?
என்மீது நம்பிக்கை வைத்து அவர்கள் தெரிவிக்கின்றார்கள். ஆனால் என்னால் அவர்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை என்பதை நினைக்கும்போது வெட்கமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.