Sunday, July 29, 2018

•தமிழ்தேசியத்தை சீண்டும் விஜய் டிவி!

•தமிழ்தேசியத்தை சீண்டும் விஜய் டிவி!
விஜய் டிவி “சுப்பர் சிங்கர்” என்னும் பாட்டுப் போட்டியை நடத்தி வருகிறது. இதில் வழக்கமாக சினிமா பாடல்களையே பாடி வந்தனர்.
கடந்த சீசன்களில் ஈழத்து பாடகர்களை பாடவைத்து அதில் சில கண்ணீர் வரவழைக்கும் காட்சிகளை புகுத்தி ஈழத் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்று வந்தது இந்த விஜய் டிவி.
இம்முறை வழக்கத்திற்கு மாறாக நாட்டுப்புற பாடகர் இருவருக்கு சந்தர்ப்பம் வழங்கி மக்கள் இசை பாடல்களை பாட வைக்கின்றனர்.
எதிர்பார்த்தபடியே தமிழ் மக்களின் ஆதரவு இவர்களுக்கு கிடைத்து வருகிறது.
அதனால் மக்களின் பெரும் ஆதரவைப் பெற்ற ஒரு மக்கள் இசைப் பாடகியை நடைமுறைக்கு மாறாக நடுவர் தெரிவின் மூலம் போட்டியில் இருந்து நீக்கியுள்ளனர்.
மக்கள் இசையை பாடுபவர்களை இந்த நடுவர்கள் கர்நாடாக சங்கீத அறிவு அற்றவர்கள் என்ற ரீதியில் இகழ்வு செய்கின்றனர்.
உங்களின் கர்நாடக சங்கீதம்தான் உயர்ந்தது என்று கருதுவீர்களாயின் அதற்கென ஒரு போட்டி நடத்தி தாராளமாக பரிசு கொடுத்து மகிழுங்கள்.
ஆனால் அதைவிடுத்து மக்கள் இசைப் பாடல்களான நாட்டுப்பறப் பாடல்களையும் அதைப் பாடும் பாடகர்களையும் இகழ்வது தொடருமாயின் விஜய் டிவி தமிழ்நாட்டில் இயங்க அனுமதிப்பது குறித்து தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டிவரும்.
தமிழ் மக்களின் பாடல் எது என்பதை தமிழ் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
அதேபோல் சிறந்த பாடகர் யார் என்பதையும் தமிழ் மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
தமிழே ஒழுங்காக பேச வராத வேறு மொழி நடுவர்களை வைத்துக்கொண்டு அவர்களுக்கு தெரியாத தமிழ் மக்கள் இசைப் பாடல்களை அவர்கள் மூலம் இகழும் செயலை விஜய் டிவி உடனடியாக நிறுத்த வேண்டும்.
தமிழ் மக்களின் தமிழ் தேசிய உணர்வுடன் சீண்டிப் பார்க்கும் விளையாட்டை விஜய் டிவி நிறுத்த வேண்டும். இல்லையேல் அதற்கான விளைவை அனுபவிக்க வேண்டிவரும் என எச்சரிக்கிறோம்.

No comments:

Post a Comment