Sunday, July 29, 2018

இது மனிதர்கள் வாழும் நாடா?

•இது மனிதர்கள் வாழும் நாடா?
அல்லது பேய்கள் ஆட்சிசெய்யும் சுடுகாடா?
சர்வாதிகாரி ஹிட்லர்கூட கைதட்டியவர்களுக்கு தண்டனை கொடுத்ததில்லை
இலங்கை ஜனநாயகநாடு என்கிறார்கள். நல்லாட்சி நடக்குது என்கிறார்கள். ஆனால் கைதட்டியவர்கள் மன்னிப்பு கடிதம் தரவேண்டும் என்கிறார்கள்.
என்ன இது? வெட்கமாக இல்லையா? இந்த காலத்திலும் இப்படி ஒரு அரசா?
ஏன் ஒரு பாராளுமன்ற உறுப்பினர்கூட இதைக் கண்டிக்கவில்லை.
அப்படியென்றால் தமிழ் மக்கள் இனி சாப்பிடுவதற்கு மட்டும்தான் வாய் திறக்க முடியுமா?
ஜனநாயகம் என்றால் பேச்சு சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், கருத்து சுதந்திரம் என்கிறார்களே இது எதுவும் தமிழ் மக்களுக்கு இல்லையா?
கை தட்டக்கூடாது என்று உங்கள் சட்டத்தில எங்கேயாவது இருக்குதா?
இல்லையென்றால் எப்படி கைதட்டியவர்களிடம் மன்னிப்பு கடிதம் கேட்க முடியும்?
தமிழன் என்றால் எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம் என்ற திமிரா?
விஜயகலாவின் பேச்சைக் கண்டித்த சம்பந்தர் அய்யாகூட கைதட்டியவர்களிடம் மன்னிப்பு கடித்தம் கோருவது தவறு என்று கூற முன்வரவில்லை.
பதவி வெறி பிடித்த நாய்களை தலைவர்களாக தெரிவுசெய்த பாவத்திற்கு கைதட்டக்கூட உரிமையற்றவர்களாகிவிட்டது தமிழ் இனம்.

No comments:

Post a Comment