Sunday, July 29, 2018

ஆண்டாளுக்காக பொங்கியவர்கள் 2000 சிலை திருட்டுக்காக ஏன் பொங்கவில்லை?

•ஆண்டாளுக்காக பொங்கியவர்கள்
2000 சிலை திருட்டுக்காக ஏன் பொங்கவில்லை?
ஆண்டாளை தரக்குறைவாக விமர்சித்துவிட்டார் என்று
கவிஞர் வைரமுத்துக்கு எதிராக பொங்கியவர்கள்
2000 கடவுள் சிலைகள் திருட்டுப் போய்விட்டதற்காக
ஏன் இதுவரை பொங்கவில்லை?
ஏனெனில் வைரமுத்து உங்காளு இல்லை
சிலை திருடன் உங்காளு என்பதுதான் காரணமா?
ஆண்டாளுக்காக சோடா புட்டி எறியவும்
தயங்கமாட்டோம் என்று கூறிய ஜீயர்
சிலை திருட்டு பற்றி ஏன் வாய் திறக்கவில்லை?
ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் 2000 கடவுள் சிலைகள்
உலகம் முழுவதும் சிலை கடத்தலில் புரளும்
பணத்தின் பெறுமதி 40 அயிரம் கோடி ருபா
பெறுமதிமிக்க ஒறிஜினல் சிலைகளை எடுத்துவிட்டு
பெறுமதியற்ற டூப்பிளிகேட் சிலைகளை வைத்திருக்கிறார்கள்.
இத்தகைய திருட்டை கோயில் ஜயர் முதல்
பெரும் அரசியல் தலைவர்களின் ஒத்துழைப்பு இன்றி
ஒருபோதும் செய்திருக்க முடியாது.
எனவேதான் அத்தகையவர்களை கைது செய்ய முயன்ற
பொலிஸ் அதிகாரியை மாற்றம் செய்ய முயன்றிருக்கிறார்கள்.
நல்லவேளை, உயர்நீதிமன்றம் தலையிட்டு மீண்டும்
அந்த அதிகாரியை அதே பதவியில் அமர்த்தியுள்ளது.
அதுசரி, கடவுள் இல்லை என்று சொன்னவன்
ஒருபோதும் கடவுள் சிலையை திருடவில்லை.
ஆனால் கடவுள் இருக்கு என்று கூறியவன்
கடவுள் சிலையை திருடியது மட்டுமன்றி
அந்த டூப்பிளிகேட் சிலையை தொட்டால் தீட்டு என்று
எங்களையும் வெளியில் நிற்க வைத்தானே
இந்த அநியாயத்தை என்னவென்று சொல்வது?
குறிப்பு- கோயிலுக்குள் இருக்கும்வரை கடவுள் என்கிறார்கள். களவு போனதும் சிலை என்கிறார்கள். அது ஏன்?

No comments:

Post a Comment