Sunday, July 29, 2018

மங்கை அக்காவும் கலா அக்காவும்

மங்கை அக்காவும் கலா அக்காவும்
கலா அக்கா எதை நினைத்து விதைத்தாரோ அதை நன்றாகவே அறுவடை செய்கிறார்.
“மீண்டும் புலிகளை உருவாக்குவோம்” எனக்கூறி தன்னை பிரபல்யப்படுத்தியதுடன் அடுத்த தேர்தலுக்கு அச்சாரம் போட்டுவிட்டார்.
மாணவி வித்யா கொலையாளிகளுக்கு உதவியால் ஏற்பட்ட கறையை இதன் மூலம் போக்க முற்பட்டுள்ளார்.
இவ்வாறுதான் அமிர்தலிங்கம் மனைவி மங்கை அக்காவும் தேர்தல் காலங்களில் உசுப்பல் பேச்சுகள் பேசுவார்.
சிங்களவனின் தோலை உரித்து செருப்பாக போடுவோம் வாருங்கள் என்று இளைஞர்களுக்கு அவர் அழைப்புவிட்டார்.
ஆனால் அதேவேளை தனது மகனை மதுரை மருத்துவ கல்லூரியில் சேர்த்து டாக்டருக்கு படிக்க வைத்தார்.
நாட்டில் மக்கள் அழிந்து கொண்டிருந்தபோது இவர் லண்டன் சென்று தன் டாக்டர் மகனுடன் தங்கியிருந்தார்.
அமைச்சர் கலா அக்காவும் “புலிகளை உருவாக்குவோம்” என்று ஒருபுறம் பேசிக்கொண்டு மறுபுறம் தன் பிள்ளைகளை லண்டன் அனுப்பி படிப்பிக்கிறார்.
தன் மகளின் நாட்டிய அரங்கேற்றத்தைக்கூட இதே “நல்லாட்சி” ஜனாதிபதி தலைமையிலேதான் நடத்தியிருக்கிறார்.
இத்தனை நாளும் அரசோடு ஒட்டி இருந்துவிட்டு அதுவும் அமைச்சராக அனைத்து சலுகைகளையும் அனுபவித்துக்கொண்டு தேர்தல் வருகிறது என்றவுடன் மீண்டும் புலிகளை உருவாக்குவோம் என்று வசனம் பேசுகிறார்.
ஆனால் இனி இந்த மாதிரிப் பேச்சுகளை எல்லாம் நம்பி ஏமாறுவதற்கு தமிழ் மக்கள் முட்டாள்கள் இல்லை என்பதை அடுத்த தேர்தலில் கலா அக்கா நிச்சயம் உணர்ந்து கொள்வார்.

No comments:

Post a Comment