Sunday, July 29, 2018

மழை விட்டும் தூவானம் விடவில்லை- கலைஞர் கருணாநிதி

•மழை விட்டும் தூவானம் விடவில்லை- கலைஞர் கருணாநிதி
எனக்கு,
மழையில் நனைவது பிடிக்கும்.
அதுவும் மழை விட்ட பின்னும் 
அடிக்கும் தூவானத்தில்
முகத்தைப் பிடிப்பது இன்னும் பிடிக்கும்.
அந்த சுகத்தை அனுபவித்தவர்கள்
மீண்டும் அந்த சுகம் வராதா என
ஏங்குவதை நான் கண்டிருக்கிறேன்.
ஆனால்,
இப்பெல்லாம் தூவானம் என்றதும்
செத்த 40 ஆயிரம் தமிழரை
தூவானம் என்ற கலைஞர் முகமே
நினைவுக்கு வந்துவிடுகிறது
அதனால்,
இப்போது எனக்கு
கலைஞர் மட்டுமல்ல
தூவானம்கூட பிடிப்பதில்லை.

No comments:

Post a Comment