Sunday, July 29, 2018

போங்கடா! நீங்களும் உங்கட நியாயமும்!

•போங்கடா!
நீங்களும் உங்கட நியாயமும்!
இலங்கைக்கு கிட்லர் ஆட்சி வேண்டும் என்றவர் மீது விசாரணை இல்லை
பாராளுமன்றத்திற்கு குண்டு வீசவேண்டும் என்ற விமல் வீரவம்ச மீது விசாரணை இல்லை.
ஆனால் புலிகளை உருவாக்குவோம் என்றவர் மீது மட்டும் விசாரணை. அதுவும் அவ் உரைக்கு கைதட்டியவர்கள் மீதும் விசாரணையாம்.
அதாவது சிங்கள தலைவர் என்றால் என்னவும் பேசலாம். ஆனால் தமிழர் என்றால் உடனே சட்டம் பாயும் என்கிறார்கள்.
தமிழ் மக்கள் இனி இந்த நல்லாட்சியில் சாப்பிடுவதைத் தவிர வேறு எதற்கும் வாய் திறக்கக்கூடாது என்று கூறுவார்கள் போல் இருக்கிறது.
யுத்தம் முடிந்து பத்து வருடமாகிறது. தமிழ் மக்களுக்கு இதுவரை என்ன கொடுத்துள்ளார்கள்?
புலிகள் அழிக்கப்பட்டதும் தமிழ் மக்களுக்கு தீர்வு தரப்படும் என உறுதிமொழி தந்தே புலிகளை அழித்தார்கள். ஆனால் எதையும் தராமல் ஏமாற்றிவிட்டார்கள் என்று சம்பந்தர் அய்யாவே அண்மையில் கூறியிருக்கிறார்.
சம்பந்தர் அய்யா புலிகளை பயங்கரவாதிகள் என்றார். சிங்கக்கொடியை ஏற்றினார். ஆனாலும் அவருக்கு என்ன கொடுக்கப்பட்டது?
சம்பந்தர் அய்யாவை வெறுங்கையோடுதானே அனுப்பியிருக்கிறார்கள். அதனால்தானே ஏமாற்றிவிட்டார்கள் என்று அவர் கூறியிருக்கிறார்.
புலியை உருவாக்குவோம் என்று அமைச்சர் விஜயகலா சொன்னவுடன் உடனே ஒருபோதும் புலி உருவாகிவிடாது.
தமக்கு புலி வேண்டுமா? இல்லையா? என்பதை தமிழ் மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
கடந்த பத்து வருடத்தில் பதவியில் இருந்த நீங்கள் தீர்வு கண்டிருந்தால் தமிழ் மக்கள் ஏன் புலிகளை உருவாக்கப் போகிறார்கள்?
மாத்தி யோசியுங்கடா முட்டாள் பயலுகளே!

No comments:

Post a Comment