Sunday, July 29, 2018

11 வயது சிறுமி. அதுவும் காது கேளாத சிறுமி. 17 பேரால் தொடர்ந்து 7 மாதங்களாக பாலியல் வல்லுறவு செய்யப்பட்டிருக்கிறார்.

11 வயது சிறுமி. அதுவும் காது கேளாத சிறுமி. 17 பேரால் தொடர்ந்து 7 மாதங்களாக பாலியல் வல்லுறவு செய்யப்பட்டிருக்கிறார்.
சென்னையில் அதுவும் பாதுகாப்பு மிகுந்த அடுக்குமாடி குடியிருப்பில் இக் கொடுமை நிகழ்ந்துள்ளது.
உலகில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக இந்தியா முதலிடத்தில் உள்ளது என்றது உண்மைதான் என நிரூபிக்கும் இன்னொரு சம்பவம்.
போதை மருந்து, போதை ஊசி எல்லாம் பயன்படுத்தி 7 மாதங்களாக சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்திருக்கின்றனர்.
இது எப்படி அச் சிறுமியின் பெற்றோருக்கோ அல்லது அந்த மாடி வீடுகளில் குடியிருக்கும் அயலவர்களுக்கோ தெரியாமல் இருந்திருக்கிறது?
அதுமட்டுமல்ல இதில் கைது செய்யப்பட்டவர்களுக்கு மட்டும்தான் பங்கு உள்ளதா அல்லது வேறு யாரும் உயர் பதவியில் உள்ளவர்களுக்கும் பங்கு உள்ளதா?
ஏனெனில் கைது செய்யப்பட்டவர்கள் யாவரும் சாதாரண வாட்ச்மேன், லிப்ட் ஒப்பிறேற்றர், பிளம்பர் போன்றவர்களாகவே இருக்கின்றனர்.
பொலிசார் வழங்கிய அறிக்கையை நம்பி பலரும் பொங்குகின்றனர். அதுவும் வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டவர்களை தாக்கியதுடன் அவர்களுக்காக யாரும் ஆஜராக மாட்டோம் என அறிக்கையும் விட்டுள்ளனர்.
கவர்னருக்காகவே மாணவிகளை செட் பண்ணினேன் என்று கூறிய நிர்மலாதேவிக்கு எதிராக பொங்காத இவர்கள்,
பெரிய பதவியில் உள்ளவர்களுடன் படுக்காமல் பெண்கள் வேலை பெற முடியாது என்று கூறிய எஸ்.வி.சேகருக்கு எதிராக பொங்காத இவர்கள்,
இந்த சிறுமி விடயத்தில் பொங்குவது ஆச்சரியமாக இருக்கிறது.
நடிக்க சான்ஸ் தருவதாக கூறி தன்னுடன் பாலியல் உறவு கொண்ட சினிமா பிரபலங்களின் பெயரை நடிகை சிறீரெட்டி வெளியிட்டு வருகிறார்.
இதேபோல் அமெரிக்காவில் ஒரு தயாரிப்பாளர் தங்களை சான்ஸ் தருவதாக கூறி படுக்கைக்கு அழைத்ததை பிரபல நடிகைகள் தெரிவித்தபோது அந்த தயாரிப்பாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஒருவர்கூட அந்த நடிகைகளை நீங்கள் தேவடியாதானே என்று கேவலமாக அங்கு எழுதியதில்லை.
ஆனால் சிறீரெட்டி கூறியவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக அவரைப் பார்த்து உங்களுக்கு எயிட்ஸ் இல்லையா ?என்று கிண்டலாக கேட்கிறார்கள்.
இவர்கள்தான் சிறுமியை கெடுத்தவர்களை கொல்ல வேண்டும், அவர்கள் ஆண் உறுப்பை வெட்ட வேண்டும் என்று தீர்ப்பு எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
கைது செய்யப்பட்டவர்களின் பெயர் மற்றும் வயது விபரத்தை பொலிஸ் வெளியிட்டுள்ளது.
1.ரவிக்குமார்(60)
2.சுகுமாறன் ( 60 )
3.இரால் பிரகாஷ்-(58)
4.குணசேகர் (55)
5.முருகேசன்(54),
6.தீனதயாளன்( 50 )
7.சீனிவாசன் ( 45 )
8.உமாபதி ( 42 )
9.ராஜசேகர் ( 40 )
10.பழனி ( 40 )
11.பாபு ( 36 )
12.ராஜா(32)
13.சுரேஷ்(32),
14.ஜெயராம்(26)
15.ஜெய்கணேஷ்(23),
16.அபிஷேக்(23),
17.சூர்யா(23),
நல்லவேளை. இதில் ஒரு முஸ்லிம் பெயர்கூட இல்லை. அல்லது இந் நேரம் இதற்காக எத்தனை முஸ்லிம் அடித்துக் கொல்லப்பட்டிருப்பார்கள்?
மரணதண்டனை, பொலிஸ் என்கவுண்டர் ,வழக்கறிஞர் தாக்குதல் போன்றவற்றின் மூலம் ஒருபோதும் குற்றங்களை குறைக்க முடியாது. குறைக்க முடியும்மென்றால் சொல்லுங்கள் நானும் ஒரு கட்டையுடன் வருகிறேன்.

No comments:

Post a Comment