Sunday, July 29, 2018

உன் இனத்தில் யாரைப் பார்த்து உன் எதிரி அஞ்சுகிறானோ அவனே உன் இனத்தின் தலைவன்!

•உன் இனத்தில் யாரைப் பார்த்து
உன் எதிரி அஞ்சுகிறானோ அவனே
உன் இனத்தின் தலைவன்!
கடந்த 1988 ஆம் ஆண்டு தோழர் பொழிலன் தோழர் தமிழ்முகிலன் ,பாண்டியராஜன் , நாராயணன் , சுப்பிரமணியன் , ஆகியோர் மீது உதகை பூங்காவில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் 2001ஆம் ஆண்டு கோவை வழக்கு மன்றம் 7 ஆண்டுகள் தண்டனை வழங்கியது.
பின்னர் , மேல்முறையீடு செய்ததில் கோவை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அவ் வழக்கிலிருந்து அனைவருக்கும் விடுதலை கிடைத்தது.
ஆனால், தமிழக அரசு , இப்போது அந்த வழக்கை தன் தரப்பில் மேல் முறையீடு செய்து கொண்டு வந்திருக்கிறது. 18.7.2018 சென்னை உயர் நீதிமன்றத்தில் இவ ;வழக்கு கேட்புக்கு வந்துள்ளது.
அதாவது ,வழக்கு முடிந்து, விடுதலை செய்யப்பட்டு 18 ஆண்டுகள் கழித்து ஒரு வழக்கை மேல்முறையீடு செய்து கொண்டு வருகிறது தமிழக அரசு.
நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட வழக்கை 18 ஆண்டுகள் கழித்து தமிழக அரசு மேன்முறையீடு செய்வதற்கு என்ன காரணம்?
தோழர்கள் பொழிலன், முகிலன் போன்றவர்கள் தோழர் தமிழரசன் காட்டிய பாதையை முன்னெடுப்பதே காரணம்.
தோழர் தமிழரசன் விரும்பிய தமிழ்நாடு விடுதலையை இவர்களும் விரும்புவதே காரணம்.
அதனால்தான் இவர்களை நசுக்கி ஒடுக்க முனைகிறது இந்திய அரசு.
தோழர் தமிழரசனை மட்டுமல்ல தோழர் தமிழரசன் பாதையில் பயணிப்பவர்களையும் கண்டு அரசு அச்சப்படுகிறது எனில் தமிழ் இனத்தின் உண்மையான தலைவன் தோழர் தமிழரசனே என்பது உறுதியாகிறது.
ஆம். தமிழ்நாட்டில் தோழர் தமிழரசனைப் பார்த்து தமிழக அரசு அஞ்சுகிறது.
குறிப்பு- தோழர் தமிழரசன் பாதையை முன்னெடுக்கும் தமிழ்தேச மக்கள் கட்சியை சேர்ந்த 5 தோழர்கள் சுமார் 5 வருடமாக மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீதான வழக்கு விசாரணையை முடிக்காமல் இழத்தடிப்பதுடன் அவர்களுக்கு ஜாமீன் வழங்காமலும் அரசு அடைத்து வைத்திருக்கிறது.

No comments:

Post a Comment