Thursday, January 30, 2020

புத்தாண்டு வாழ்த்துக்கள்

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2019ம் ஆண்டு முடிந்து 2020 ம் ஆண்டு பிறக்கிறது. அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.. ஒவ்வொரு வருடமும் பிறக்கும்போது இந்த வருடமாவது ஒரு வழி பிறக்கும் என நம்புகிறோம். ஆனால் மேலும் மேலும் நெருக்கடிகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அவை நாம் தொடர்ந்தும் போராட வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை எமக்கு எற்படுத்துகின்றன. நாம் வீழ்வது கேவலம் அல்ல மாறாக வீழ்ந்து கிடப்பதே கேவலம். மீண்டும் எழுந்து நிற்பதையே வரலாறு பதிவு செய்யும். மீண்டும் எழுந்து நிற்போம்! இதுவே இந்த வருடத்தின் வரலாற்று கடமையாக இருக்க வேண்டும். Image may contain: 1 person, child and outdoor

•சுந்தரம் கொலையில் அமிர்தலிங்கம் பங்கு மறைக்கப்படுகிறதா? அல்லது மறக்கபடுகிறதா?

•சுந்தரம் கொலையில் அமிர்தலிங்கம் பங்கு மறைக்கப்படுகிறதா? அல்லது மறக்கபடுகிறதா? இன்று (2.1.1982) தோழர் சுந்தரம் கொல்லப்பட்ட நாள். பட்டப்பகலில் மக்கள் மத்தியில் நடந்த முதலாவது சகோதரப் படுகொலை நாள். "புதியபாதை" சுந்தரம் யாழ் வெலிங்டன் தியேட்டருக்கு முன்னால் சித்திரா அச்சகம் அருகில் கொல்லப்பட்ட நாள். இன்று முகநூலில் சிலர் அவரை நினைவு கூர்ந்துள்ளனர். சுந்தரம் நினைவு கூரப்படவேண்டிய ஒரு போராளிதான். ஆனால் புலிகளால் சுந்தரம் கொல்லப்பட்டார் என்றே அனைவரும் குறிப்பிட்டுள்ளனரேயொழிய யாரும் சுந்தரம் கொலையில் அமிர்தலிங்கத்தின் பங்கை குறிப்பிட வில்லை. இது சுந்தரம் கொலையில் அமிர்தலிங்கத்தின் பங்கு மறைக்கப்படுகிறதா அல்லது மறக்கபடுகிறதா என்ற கேள்வியை உருவாக்கியுள்ளது. புலிகள் இயக்கத்தில் இருந்து விலகியவர்கள் வேறு இயக்கத்தில் சேர்ந்து இயங்கக் கூடாது. அவ்வாறு இயங்கினால் அது மரண தண்டனை குற்றமாகும் என்ற புலிகளின் அமைப்பு விதிக்கு அமைய சுந்தரம் கொல்லப்பட்டார் என்றே அன்று புலிகள் கூறினார்கள். புலிகள் அமைப்பில் இருந்து விலகிய பலர் இருக்கும்போது சுந்தரம் மட்டும்; எதற்காக குறி வைக்கப்பட்டார்? அதுவும் பட்டப்பகலில் மக்கள மத்தியில் வைத்து ஏன் கொலை செய்யப்பட்டார்? இந்த சகோதர படுகொலையை தமிழர்விடுதலைக் கூட்டணி தலைவர் அமிர்தலிங்கம் நினைத்திருந்தால் தலையிட்டுத் தடுத்திருக்கலாம். உண்மை என்னவெனில் இந்த சுந்தரம் படுகொலையின் சூத்திரகாரியே அந்த தலைவர் அமிர்தலிங்கம்தான் துரையப்பா, கனகரட்ணம் போன்றவர்களை துரோகி என்று முத்திரை குத்தி இளைஞர்களால் சுட வைத்தவரும் அமிர்தலிங்கமே. அதுபோல் "புதியபாதை" பத்திரிகையில் தன்னை தொடர்ந்து அம்பலப்படுத்தி எழுதிய சுந்தரத்தையும் கொல்ல வைத்தவர் அமிர்தலிங்கமே. இந்த உண்மை அன்று போராளிகள் மத்தியில் நன்கு அறியப்பட்டிருந்தது. சுந்தரத்தின் படுகொலையை கண்டித்து நாகராஜா(வாத்தி) பத்மநாபா, விசுவானந்ததேவன், "டெலா" ஒபராய் தேவன் போன்றவர்கள் ஒன்று சேர்ந்து பிரசுரம் வெளியிட்டிருந்தார்கள். அந்த பிரசுரத்திலும் இந்த உண்மை கூறப்பட்டீருக்கிறது . இன்று சம்பந்தர் அய்யா ஆயுதம் ஏந்திப் போராடிய இளைஞர்களை பயங்கரவாதிகள் என்கிறார். ஆனால் துரோகி ஒழிப்பை ஆரம்பித்து வைத்தவர்கள் இவர்களே என்ற உண்மையை வரலாற்றில் இனி ஒருபோதும் மறைக்க முடியாது. Image may contain: 1 person, flower

•அட்டைக்கத்தி குத்தி யாரும் சாவதில்லை!

•அட்டைக்கத்தி குத்தி யாரும் சாவதில்லை! நெருப்பு என்று சொல்வதால் அது சுட்டுவிடுவதில்லை அதுபோல் அட்டைக்கத்திகளான நெல்லைக் கண்ணன் போன்றோர் கத்துவதால் யாரும் செத்துவிடப் போவதில்லை. இது எச்சை ராஜாவுக்கும் தெரியும். தமிழக அரசுக்கும் நன்கு தெரியும். இருப்பினும் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்றால் அதன் மூலம் அரசு தனக்கு எதிரானவர்களை மிரட்டி அடக்க முயல்கிறது என்று அர்த்தம். இதையே புதிய ராணுவ தளபதியும் ராணுவத்தை கண்டு மக்கள் அச்சமடைய வேண்டும் என்கிறார். ராணுவத்தை கண்டு எதிரி நாடுதானே அச்சமடைய வேண்டும். மக்கள் ஏன் அச்சமடைய வேண்டும்? Image may contain: 3 people நெருப்பு என்று சொல்வதால் அது சுட்டுவிடுவதில்லை அதுபோல் அட்டைக்கத்திகளான நெல்லைக் கண்ணன் போன்றோர் கத்துவதால் யாரும் செத்துவிடப் போவதில்லை. இது எச்சை ராஜாவுக்கும் தெரியும். தமிழக அரசுக்கும் நன்கு தெரியும். இருப்பினும் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்றால் அதன் மூலம் அரசு தனக்கு எதிரானவர்களை மிரட்டி அடக்க முயல்கிறது என்று அர்த்தம். இதையே புதிய ராணுவ தளபதியும் ராணுவத்தை கண்டு மக்கள் அச்சமடைய வேண்டும் என்கிறார். ராணுவத்தை கண்டு எதிரி நாடுதானே அச்சமடைய வேண்டும். மக்கள் ஏன் அச்சமடைய வேண்டும்? Image may contain: 3 people

கோத்தா ஜனாதிபதியானதும்

கோத்தா ஜனாதிபதியானதும் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றீங்களேடா? அவர் வெற்றி பெற்றதும் முதல் கையெழுத்தே அரசியல் கைதிகள் விடுதலை என்றீங்களேடா? 13 அயிரம் பேரை விடுதலை செய்தவர் 77 பேரை விடுதலை செய்ய மாட்டாரா என்று வேற கேட்டீங்களேடா? ஆனால் அரசியல் கைதிகளை ஒவ்வொருவராக சாகவைத்து விடுதலை செய்யப்போறியள் என்பதை சொல்லவேயில்லையேடா? 27 வருடம் சிறையில் இருந்தவரை விடுதலை செய்யாவிட்டாலும் பரவாயில்லை. மருத்துவ வசதிகூட வழங்காமல் சாகடிச்சிட்டீங்களேடா? தனது மனைவியின் பிறந்தநாளில் பறவைகளுக்கு விடுதலை வழங்கிய ஜனாதிபதிக்கு 27 வருடம் சிறையில் இருந்தவரை விடுதலை செய்ய தோன்றவில்லையேடா? மிச்ச 76 பேரையும் இப்படித்தான் சாகடிச்சு விடுதலை செய்யப் போறியளேடா? குறிப்பு - 27 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு – முறக்கொட்டாஞ்சேனையை சேர்ந்த தமிழ் அரசியல் கைதி செல்லப்பிள்ளை மகேந்திரன் நேற்று 46 வயதில் மரணமடைந்தார். 1993ம் ஆண்டு மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன் இடம்பெற்ற சுற்றிவளைப்பில் மகேந்திரன் கைது செய்யப்படார். இவர் நீரிழிவு உள்ளிட்டு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். உரிய மருத்துவ சிகிச்சை இன்றி நேற்றைய தினம் மரணமடைந்துள்ளார். Image may contain: 1 person, close-up

உழைப்பு தனிமனிதனுடைய சுய அந்நியமாதலாக இல்லாமல்

உழைப்பு தனிமனிதனுடைய சுய அந்நியமாதலாக இல்லாமல், சுய உறுதிப்படுத்தலாக இருக்க வேண்டும். வெளியிலிருந்து வருகின்ற நிர்ப்பந்தம் உழைப்புக்குத் தூண்டுதலாக இருக்கக் கூடாது. படைக்க வேண்டும் என்ற ஆழமான உள்முனைப்பு உழைப்புக்குத் தூண்டுதலாக இருக்க வேண்டும். முதலாளித்துவம் நிறைய போர்வைகளைப் போர்த்திக் கொண்டு வருகிறது. ஜனநாயகப் போர்வை, பாராளுமன்றப் போர்வை இப்படி என்னென்ன வழிகள் இருக்கின்றதோ, அத்தனைக்குள்ளும் தன்னை ஒளித்துக் கொண்டு வருகிறது. இந்தப் போர்வைகளையெல்லாம் நீக்கி, முதலாளித்துவத்தை அம்மணமாக்கிக் காட்டுகிற வேலைதான் புரட்சியாளர்களின் கடமையாக இருக்கிறது. Image may contain: one or more people, people standing and outdoor

தை பிறந்தால் வழி பிறக்கும் இந்த தாயின் துயரம் நீங்குமா?

தை பிறந்தால் வழி பிறக்கும் இந்த தாயின் துயரம் நீங்குமா? தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களின் நீண்டகால நம்பிக்கை. தமிழர்களுக்கு வழி பிறக்குதோ இல்லையே இந்த தாயின் துயரத்திற்கு ஒரு முடிவு கிடைக்க வேண்டும் என்பதே உலக தமிழர்களின் விருப்பம். ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் 27 வருடங்களாக ஓய்வின்றி தன் மகன் விடுதலைக்காக இந்த தாய் நடந்து திரிகிறார். இந்த 27 வருட அலைச்சலில் அவர் ஒருபொழுதுகூட விரக்தி அடைந்ததில்லை. மகனின் போராட்ட உணர்வை குறைகூறியதில்லை. அவரது ஆசை எல்லாம் தன் வாழ்வின் இந்த இறுதி வேளையிலாவது மகன் பேரறிவாளன் தன் அருகில் இருக்க வேண்டும் என்பதே. அவர் பெயர் மட்டுமல்ல அவரது வாழ்வும் அற்புதம் தான். Image may contain: one or more people, possible text that says 'என்று தீரும் இந்த தாயின் தாகம்'

• தமிழின விடுதலைக்கான பாதை எது?

• தமிழின விடுதலைக்கான பாதை எது? 1948ல் இருந்து தமிழ் மக்கள் பாராளுமன்ற பாதையில்தான் பயணிக்கின்றனர். ஆனால் இதுவரை எந்தவொரு தீர்வையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. 1948ல் இருந்து இதுவரை பல தடவைகள் இனக்கலவரம் நடந்துள்ளது. இந்த கலவரங்கள் யாவும் இலங்கை அரசின் ஆதரவினூடே நடைபெற்றது. 1948ல் இருந்து தமிழ் மக்கள் நடத்திய அத்தனை அகிம்சைப் போராட்டமும் இலங்கை அரசினால் ஆயுத முனையில் நசுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்தான் தமிழ் இளைஞர்கள் வேறு வழியின்றி ஆயுதப் பாதையை தேர்தெடுத்தார்கள். இந்நிலையில் 2009ல் மாபெரும் தமிழின அழிப்புடன் ஆயுதப் போராட்டத்தை இலங்கை அரசு நசுக்கியுள்ளது. இனி தமிழ் மக்கள் என்ன வழியை தேர்ந்தெடுப்பது? ஏனெனில் தமிழ் இளைஞர்கள் என்ன காரணத்திற்காக ஆயுதம் ஏந்தினார்களோ அதில் ஒன்றுகூட இன்னும் தீர்க்கப்படவில்லை. எனவே மீண்டும் போராடுவதா அல்லது அடிமையாக கிடந்து அழிந்து போவதா என்பதே தமிழ் மக்கள் முன் உள்ள கேள்வி. தமிழ் மக்கள் நீண்ட போராட்ட வரலாற்றின் சொந்தக்காரர்கள். அவர்கள் போராடி மடிந்துபோவர்களேயொழிய ஒருபோதும் அடிமைத்தனத்திற்கு இடம் கொடுக்க மாட்டார்கள். சரி. போராடுவதான் என்று முடிவெடுத்துவிட்டால் இனி எந்த வழியில் போராடுவது என்ற மிகப்பெரிய கேள்விக்கு விடை காண வேண்டியுள்ளது. சிலர் மீண்டும் பாராளுமன்ற பாதையில் சென்று தமிழின விடுதலை பெற முடியும் என்கிறார்கள். அப்படியென்றால் 2009ல் இருந்து பாராளுமன்ற பாதையில் சென்று பெற்ற தீர்வு என்னவென்று கேட்டால் இவர்களிடம் பதில் இல்லை. சரி இனியாவது இந்த வழியில் தீர்வு கிடைக்கும் என்று எந்த நம்பிக்கையில் பயணிப்பது என்று கேட்டாலும் இவர்களிடம் பதில் இல்லை. அடுத்து இன்னும் சிலர் ராஜதந்திர ரீதியில் பயணித்து விடுதலை பெறலாம் என்கிறார்கள். பாராளுமன்ற பாதையாக இருந்தாலும் சரி அல்லது ஆயுதவழிப் பாதையாக இருந்தாலும் சரி அவற்றில் ராஜதந்திரங்கள் உண்டு. எனவே ராஜதந்திரபாதை என்று தனியாக ஒரு பாதை இல்லை. அவ் வழியில் அடையலாம் என்பதும் தவறு. வேறு சிலர் இந்தியா மூலம் தமிழின விடுதலை பெறலாம் என கூறகிறார்கள். இதில் மூன்று வகையினர் இரக்கிறார்கள். முதலாவது வகையினர்- இந்தியா அருகில் இருக்கும் பெரிய நாடு. எனவே எந்தவொரு தீர்வை பெறுவதாக இருந்தாலும் இந்தியாவின் தயவு இன்றி பெறமுடியாது என்று கூறுபவர்கள். இரண்டாவது வகையினர் - இந்து தமிழீழம் கேட்டால் தற்போது ஆட்சியில் இருக்கும் மோடி அரசு நிச்சயம் உதவி செய்யும் என்று கூறுபவர்கள். மூன்றாவது வகையினர் - இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. எனவே இந்திய அரசு தனது நலனுக்காக தமிழீழத்தை ஆதரிக்கும் என்று கூறுபவர்கள். இவர்கள் மூன்று வகையாக பிரிந்து இருந்தாலும் இந்திய அரசை பயன்படுத்த வேண்டும் என்ற ஒரே வகையைச் சேர்ந்தவர்களே. 1983ல் இருந்து இந்தியாவைப் பயன்படுத்த வேண்டும் என நினைத்து இந்தியாவுக்கு பயன்பட்டதே இவர்கள் வரலாறு. ஈழத் தமிழர் பிரச்சனையைப் பயன்படுத்தி இந்திய அரசு இலங்கையை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது. நடந்து முடிந்த யுத்தத்தில் இலங்கை அரசும் பயன்பெறவில்லை. தமிழ் மக்களும் பயன்பெறவில்லை. இந்திய அரசே அதிகளவு பயன் பெற்றுள்ளது. 1983க்கு முன்னர் எமது கையில் இருந்த, • பலாலி விமான நிலையம் இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது • காங்கேசன் சீமெந்து தொழிற்சாலை மற்றும் துறைமுகம் கொடுக்கப்பட்டுள்ளது. • மன்னார் எண்ணெய்வளம் இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. • சம்பூரில் மின்சார நிலையம் மற்றும் 650 ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டுள்ளது. • புல்மோட்டை கனிமவளம் இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. • திருகோணமலை துறைமுகம் மற்றும் எண்ணெய்குதங்கள் கொடுக்கப்ட்டுள்ளன. தமிழர்களின் இத்தனை வளங்களையும் பெற்றுக்கொண்ட இந்தியா தமிழ் மக்களுக்கு தந்தது என்ன? தமிழ் மக்களை மேலும் அடக்கி ஒடுக்குவதற்கு இலங்கை அரசுக்கு இரண்டு யுத்தக்கப்பல்கள், மற்றும் பயிற்சிகள். தமிழ் மக்களை ஒடுக்குவதற்கு தொடர்ந்து உதவி வரும் இந்திய அரசு தமிழ் மக்களின் விடுதலைக்கு உதவும் என்று தொடர்ந்து நம்பும் முட்டாள்களை என்னவென்று அழைப்பது? இறுதியாக ஒன்றை மட்டுமே கூறவிரும்புகிறோம். நாம் யுத்தத்தை விரும்பவில்லை. ஆனால் இலங்கை அரசு வன்முறை மொழியில் பேசினால் அதே மொழியில் பதில் அளிப்பது எமக்கு தவிர்க்க முடியாததாகிறது. மாவோ கூறியதுபோல் எம்மீது யுத்தம் திணிக்கப்பட்டால் யுத்தத்தை தவிர்ப்பதற்கான யுத்தத்தை செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம். தமிழின விடுதலைக்கான ஆயுதப் பாதை என்பது நாம் விரும்பி தேர்தெடுத்த பாதை அல்ல. மாறாக எம்மீது திணிக்கப்பட்டபாதை. எனவே அப் பாதையில் பயணிப்பதைத் தவிர வேறு வழியில்லை. Image may contain: Ravindran, possible text that says 'AP செந்தூவல் வல் 08.01.2019 நமது சொந்த விருப்பத்தைப் பொறுத்தவரை, நாம் ஒருநாள் கூட போரிட விரும்பவில்லை. ஆனால், சூழ்நிலைகள் நம்மைப் போரிடும்படி நிர்பந்தித்தால் இறுதிவரை போரிட முடியும். மா சே துங்'

• இந்திய உளவு (பாகம்-4)

• இந்திய உளவு (பாகம்-4) குறிப்பு - எனது இந்திய உளவு பதிவு முகநூல் சமூக விதிகளுக்கு எதிராக இருப்பதாக கூறி அப் பதிவை நீக்கியதோடு எனக்கு ஒரு மாத தடையும் விதிக்கப்பட்டது. பின்னர் நான் கேட்டுக்கொண்டபடி மறுஆய்வு செய்து தவறுக்கு வருந்துகிறோம் எனக்கூறி பதிவு மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் போடப்பட்ட ஒரு மாத தடை நீக்கப்படவில்லை. ( tholar balan ) 1995ம் ஆண்டு நான் துறையூர் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருந்தவேளை அப்போது திருச்சி கியூ பிரிவு டிஎஸ்பி சண்முகம் அவர்கள் ஒருமுறை முகாமை பார்வையிட வந்திருந்தார். இவர் லஞ்சம் வாங்காத ஒரு நேர்மையான அதிகாரி என்று சக அதிகாரிகளால் மதிக்கப்படுபவர். அப்போது அவர் தன் பர்சில் இருந்த பிரபாகரன் படத்தைக் காட்டி தானும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவன் என்று எம்மிடம் பேசும்போது கூறினார். இவர் திராவிட கழக ஆதரவாளர். எனவே பிரபாகரன் படம் தன் பர்சில் வைத்திருந்தது எனக்கு ஆச்சரியம் தரவில்லை. ஆனால் எனக்கு ஆச்சரியம் என்னவெனில் இவர் எப்படி சுப்பிரமணியசுவாமி மீது பொய் வழக்கு போட்டார் என்பதே. ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது அவருக்கு எதிராக சுப்பிரமணியசுவாமி பல வழக்குகளை போட்டு குடைச்சல் கொடுத்துக்கொண்டிருந்தார். அதனால் சுப்பிரமணியசுவாமி தன் வீட்டில் விடுதலைப்புலி ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்தார் என அவர் மீது வழக்கு போட்டு அவரைக் கைது செய்ய முயற்சி செய்தது தமிழக பொலிஸ். தமிழக பொலிஸ் சார்பாக இந்த வழக்கை போட்டவர் இந்த டிஎஸ்பி சண்முகம் அவர்களே. எனவே அவரிடம் ஏன் அப்படி செய்தீர்கள் எனக் கேட்டேன். அதற்கு அவர் வீரமணி ஜெயலலிதாவிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக தன்னை இதில் மாட்டிவிட்டிட்டார். இது சரிவராது என்று அப்பவே நான் வீரமணியிடம் கூறினேன். ஆனால் அவர் பிடிவாதமாக நின்று வழக்கு போட வைத்துவிட்டார் என்றார். அப்போது வீரமணி ஜெயலலிதாவின் விசுவாசியாக இருந்தார் ஜெயலலிதாவுக்கு “சமூகநீதி காத்த விராங்கனை” என்று பட்டம் கொடுத்திருந்தார். அவர் சுப்பரமணியசுவாமியை அடக்கி ஜெயலலிதாவிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக இந்த திட்டத்தை தீட்டியிருக்கிறார். அதற்காக ஒரு புலி உறுப்பினரை தான் சுப்பரமணியசுவாமி வீட்டில் தங்கியிருந்ததாக வாக்குமூலம் கொடுக்க வைத்திருக்கிறார். அந்த புலி உறுப்பினரின் வாக்குமூலத்தை வைத்து சுப்பிரமணியசுவாமியை கைது செய்து சிறையில் அடைப்பதே வீரமணியின் பிளானாக இருந்தது. ஆனால் சுப்பிரமணியசுவாமி அந்டத திட்டத்தை மறியடித்து கைதில் இருந்து தப்பிவிட்டார். வீரமணியின் திட்டத்தால் அநியாயமாக ஒரு பலி உறுப்பினர்தான் சிறையில் இருக்க வேண்டியதாகிவிட்டது. இங்கு இந்த விடயத்தை நான் நினைவூட்டுவதற்கு காரணம் இந்திய உளவு நிறுவனங்கள் எப்படி பொய் வழக்கு போடும் என்பதையும் அனைவரும் அறிய வேண்டும் என்பதே. அதுவும் வீரமணி போன்ற ஒரு தலைவரே உளவுப்படையின் செல்வாக்கை தமது அரசியல் லாபங்களுக்கு பயன்படுத்துவது வெட்கக்கேடானது. அதுமட்டுமல்ல வீரமணி தனது இந்த செல்வாக்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த புலி உறுப்பினர்களின் மருத்துவ சிகிச்சைக்குகூட பயன்படுத்தவில்லை. (இன்னும் வரும்) Image may contain: 1 person, smiling, glasses Image may contain: 1 person, smiling, close-up

முதலில் சம்பிக்க கைது

முதலில் சம்பிக்க கைது அடுத்து ராஜித கைது இப்போது ரஞ்சன் ராமநாயக்க கைது நம்புங்கள், இது அரசியல் பழி வாங்கல் இல்லை என்று நாளை ஜனாதிபதி அறிக்கை விடுவார். ஆனால், எங்கட சிங்கம் சிங்கிளாகத்தான் வந்து நிக்குது. முடிஞ்சால் கை வையுங்கடா பார்ப்பம் Image may contain: 1 person Image may contain: 1 person, standing

“சீ”தனம்?

“சீ”தனம்? படித்த பெண் அதுவும் வங்கியில் பணி புரியும் பெண் தற்கொலை என்ற செய்தி வந்ததும் நான் ஆச்சரியம் அடைந்தேன். அதைவிட ஆச்சரியம் என்னவெனில் அப் பெண் சீதனக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்டார் என்று வந்திருக்கும் செய்திதான். ஒரு கோடி ரூபா சீதனம் கொடுத்திருந்தும் ஒரு நேர உணவுகூட நிம்மதியாக உண்ண முடியாமல் அப் பெண் தற்கொலை செய்தார் என்கிறார்கள். ஈழத் தமிழர்கள் மத்தியில் சீதனக் கொடுமை இருப்பது உண்மைதான். ஆனால் அது தற்கொலை செய்யும் அளவிற்கு வந்து விட்டது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில் இந்தியாவில் பெண் திருமணத்திற்கு பின் கணவரின் வீட்டில் சென்று வாழ்வதால் அங்கு “மாமியார் கொடுமை, மருமகள் ஸ்டவ் வெடித்து சாவு” என்ற செய்திகள் அடிக்கடி வருவது வழமை. ஆனால் ஈழத்தில் திருமணத்திற்கு பின் பெண் தன் தாய் வீட்டில்தான் தொடர்ந்தும் வாழ்கிறார். எனவே தாய் வீட்டில் சீதனக் கொடுமை காரணமாக பெண் தற்கொலை செய்வதற்கான வாய்ப்பு மிகவும் அரிது. என்.எம்.பெரரா நிதி அமைச்சராக இருந்தபோது சீதனக் கொடுமை பற்றி பாராளுமனத்தில் கூறியது, “ இலங்கையின் செல்வத்தில் 60வீதம் தமிழர்களிடம் இருக்கிறது. அதற்கு காரணம் அவர்கள் மத்தியில் இருக்கும் சீதனம் கொடுக்கும் பழக்கமும் அதற்காக சேமிக்கும் முறையுமே. எனவே ஒரு நிதி அமைச்சராக இந்த சீதன முறையை நான் வரவேற்கிறேன். ஆனால் ஒரு மனிதனாக இந்த கொடுமையை வெறுக்கிறேன்” என்றார். புலிகளின் காலத்தில் இந்த சீதனக் கொடுமை இல்லாமல் இருந்தது. அல்லது புலிகளின் துப்பாக்கியின் நிழலில் ஒளித்திருந்தது என்று கூறவேண்டியுள்ளது. ஏனெனில் இப்போது புலிகள் அற்ற நிலையில் அது தைரியமாக மீண்டும் தன் கொடுமையை காட்ட ஆரம்பித்துவிட்டது என்றே எண்ணத் தோன்றுகிறது. ஒருபுறம் கைகள் அற்ற கண்களும் அற்ற முன்னாள் போராளிகள் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெறும் இக்காலத்தில் படித்த பெண் அதுவும் வங்கியில் வேலையில் இருக்கும் பெண் தற்கொலை செய்வதை என்னவென்று சொல்வது? Image may contain: 2 people, possible text that says 'Rest in peace Krishna'

தை பிறந்தால் வழி பிறக்கும் என்கிறார்களே

தை பிறந்தால் வழி பிறக்கும் என்கிறார்களே ஆனால் இவர்களுக்கு மட்டும் விடுதலை கிடைக்குதில்லையே? தை பிறந்தால் வழி பிறக்கும் என்கிறார்கள். எத்தனையோ தை பிறந்துவிட்டது. சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளுக்கு மட்டும் வழி பிறக்கவும் இல்லை. விடுதலை கிடைக்கவும் இல்லை. இந்தியாவில் இருக்கும் ஈழ அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்போர் முதலில் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று குரல் கொடுக்கட்டும். தனது ஆட்சியை தக்க வைப்பதற்காக இச் சிறப்புமுகாம் கலைஞர் கருணாநிதியால் 1990ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அவர் சாதாரண முகாம்களில் தங்கியிருந்த அப்பாவி அகதி இளைஞர்களை சிறப்புமுகாமில் அடைத்து பயங்கரவாதிகள் என்று கணக்கு காட்டினார். சிறப்புமுகாமை ஆரம்பித்து வைத்த அந்த கலைஞர் கருணாநிதியும் இறந்து விட்டார். ஆனால் அவரால் ஆரம்பிக்கப்பட்ட இக் கொடிய சித்திரவதைமுகாம் இன்னும் மூடப்படவில்லை. தனது தந்தை ஆரம்பித்து வைத்த சிறப்புமுகாமை மூடுமாறு திமுக தலைவர் ஸ்டாலின் இதுவரை கோரவில்லை. அதில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை விடுதலை செய்யும்படியும் அவர் கேட்கவில்லை. ஆனால் ஈழ அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று போராட்டம் நடத்துகிறாராம். நம்பிட்டோம்? அண்மையில் இச் சிறப்புமகாமில் 21 அகதிகள் தங்களை விடுதலை செய்யுமாறு கோரி தற்கொலைக்கு முயன்றார்கள். ஆனால் அப்போதுகூட இந்திய அரசு அவர்கள் மீது இரக்கம் காட்டவில்லை. பாகிஸ்தான் பங்களாதேஸ் இந்து அகதிகளுக்கு இரக்கம் காட்டும் மோடி அரசு ஈழ இந்து அகதிகளுக்கு இரக்கம் காட்ட மறுக்கிறது. ஏனெனில் அவர்கள் தமிழர்கள் என்பதாலா? அண்மையில் தலைவர் சம்பந்தர் ஐயா தனது மருத்தவ சிகிச்சைக்காக டில்லி வந்திருந்தார். அப்போதுகூட அவரால் இந்த சிறப்புமுகாம் அகதிகளை விடுதலை செய்யும்படி இந்திய அரசிடம் ஏனோ கோர முடியவில்லை. ஆனால் இலங்கை திரும்பி வந்து கொஞ்சம்கூட கூச்சமின்றி இந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவும் என்று அவர் அறிக்கை விடுகிறார். இலங்கையில் சிறையில் இருக்கும் கைதிகளின் விடுதலைக்கே குரல் கொடுக்காதவர் இந்தியாவில் சிறப்புமுகாமில் இருக்கும் அகதிகளுக்கு குரல் கொடுப்பாரா என்ன? Image may contain: 1 person, possible text that says 'இது சிறப்பு முகாமா ? அல்லது சித்ரவதை முகாமா'

முதலில் பொலிசார் மூலம் வன்முறையை செய்தார்கள்.

முதலில் பொலிசார் மூலம் வன்முறையை செய்தார்கள். பின்னர் தமது ஆட்களை பொலிஸ் உடையில் கலந்து வன்முறையை செய்தார்கள் இப்போது நேரிடையாகவே தமது குண்டர்களை ஏவி வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள். அரசின் இந்த வன்முறைக்கு பதில் வன்முறையை முன்வைக்க முடியாத எதிர்க்கட்சிகள் “கோலம்போடு” , “பலூன் விடு” என்று மக்களை காயடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அரச வன்முறைக்கு பதில் வன்முறையை பாவிக்காமல் வெற்றி பெற முடியாது என்ற உண்மையை மாணவர்கள் விரைவில் உணர்ந்து கொள்வார்கள். Image may contain: 2 people, people sitting Image may contain: one or more people, people standing and outdoor

தேவையா இந்த அவமானம்?

தேவையா இந்த அவமானம்? பதவி போனதும் அந்த பதவிக்குரிய சொகுசு பங்களாவையும் உதறி எறிந்திருக்க வேண்டும். அவ்வாறு உதறி இருந்தால் கொஞ்சமாவது மதிப்பாவது மிஞ்சியிருக்கும் இன்று கழுத்தைப் பிடித்து தள்ளும் அவலம் வந்திருக்காது. அவர் சொகுசு பங்களாவை விட்டு வெளியேற மறுப்பது அவருக்கு மட்டுமல்ல தமிழ் இனத்திற்கும் அவமானம் ஆகும். அதுமட்டுமல்ல ஒரு மனிதருக்கு எதற்கு இரண்டு சொகுசு பங்களா? தயவு செய்து ஒரு பங்களாவையாவது விட்டு வெளியேறுமாறு யாராவது அவரிடம் சொல்லுங்கள் பிளீஸ். Image may contain: 1 person, smiling, glasses Image may contain: plant, sky, tree, house and outdoor

சென்னை புத்தக காட்சி அரங்கம் 499 பொதுமைப் பதிப்பகத்தில்

சென்னை புத்தக காட்சி அரங்கம் 499 பொதுமைப் பதிப்பகத்தில் நான் எழுதிய •சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம் •ஒரு ஈழப் போhராளியின் பார்வையில் தோழர் தமிழரசன் •ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன் நூல் மீதான திறானாய்வும் மதிப்பீடுகளும் ஆகிய நூல்களைப் பெற்றுக்கொள்ளலாம். Image may contain: outdoor, possible text that says 'சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம் தோழர்.பாலன் தோழர். SPECIA CAMP' Image may contain: தமிழ்நேயன் தமிழ் and Balan Chandran Image may contain: Balan Chandran and தமிழ்நேயன் தமிழ்

கோத்தபாயா

கோத்தபாயா இனப்படுகொலை செய்யவில்லை ஊழல் எதுவும் செய்யவில்லை சட்ட விரோதமாக செயற்படவில்லை ஏனெனில் அவர் உண்மை பேசுகிறார் எனவே அவர் சரியாகத்தான் செயற்படுவார் - இப்படிக்கு, சம்பந்தர் ஐயா ஒரு சொகுசு பங்களாவுக்காக கருமத்தை எப்படியெல்லாம் பல்டி அடிக்க வேண்டிக்கிடக்கு? Image may contain: 2 people, people smiling

தர்பார் - ஒற்றை வரி விமர்சனம் !

• தர்பார் - ஒற்றை வரி விமர்சனம் ! கொப்பி கிளியராக இல்லை. எனவே விரைவில் HDபிரிண்ட் கொப்பியை தருமாறு தமிழ் ரக்கர்ஸ்சிடம் கேட்டுக் கொள்கிறோம். Image may contain: 1 person, smiling, text

தமிழாராய்ச்சி மாநாடும் துரோகி துரையப்பாவும்!

• தமிழாராய்ச்சி மாநாடும் துரோகி துரையப்பாவும்! யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டில் இறந்தவர்களின் நினைவு தினம் இன்று ஆகும். யாழ்ப்பாணத்தில் 1974ம் ஆண்டு ஜனவரி 10ம் திகதி நடைபெற்ற இறுதி நிகழ்வில் 11 அப்பாவி தமிழர்கள் பொலிசாரினால் கொல்லப்பட்டனர். இந்த 11 பேரின் கொலைக்கும் காரணமாக இருந்தவர் அன்றைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் கைக்கூலியாக செயற்பட்ட மேயர் துரையப்பாவே. இச் சம்பவம் பல தமிழ் இளைஞர்கள் துரையப்பா மீது ஆத்திரம் கொள்ள வைத்தது. அவரை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று விரும்பினார்கள். இந்நிலையில் துரையப்பாவை “துரோகி” என்று முத்திரை குத்தி அவரை இளைஞர்கள் மூலம் கொல்ல வைத்தவர்கள் தமிழர்விடுதலைக் கூட்டணியினரே. ஆனால் இன்று அவர்களே துரையப்பாவை கொன்றது தவறு என்கிறார்கள். அதுமட்டுமல்ல துரையப்பாவை துரோகி என்றும் கூறக்கூடாது என்கிறார்கள். சரி பரவாயில்லை, என்னவாவது சொல்லிவிட்டு போங்கள். ஏனென்றால் இது துரோகிகள் தியாகிகளாகவும் தியாகிகள் துரோகிகளாகவும் மாறும் காலம். ஆனால் தயவு செய்து 11 பேரையும் துரையப்பா கொன்றது சரி என்றுமட்டும் சொல்லிவிடாதீர்கள். அதை தாங்கும் சக்தி தமிழனுக்கு இல்லை. Image may contain: outdoor Image may contain: 1 person, suit and close-up

• “லைக்கா” சாம்ராஜ்யம் சரிகிறதா?

• “லைக்கா” சாம்ராஜ்யம் சரிகிறதா? உன் முட்டைகள் அனைத்தையும் ஒரு கூடையில் வைக்காதே என்று ஒரு பைனான்சியல் தியறி கூறுகிறது. ஆம். அதாவது ஒரு பிசினஸ்சில் உன் அனைத்து பணத்தையும் முதலீடு செய்யாதே என்பதையே அது அவ்வாறு கூறுகிறது. லைக்கா முதலாளியும் பல்வேறு வியாபாரங்களில் தன் பணத்தை முதலீடு செய்து வருகிறார். அதில் ஒன்றுதான் தமிழ் சினிமா. லைக்கா முதலாளியின் வியாபார வளர்ச்சி ஒவ்வொன்றையும் அக்கவுண்ட் பைனான்சியல் தியறி மூலம் விளக்க முடியும். ஆனால் ஆச்சரியம் என்னவெனில் இந்த தியறிகள் எதனையும் அவர் ஒருபோதும் படித்திருக்கவில்லை என்பதே. அகதியாக வந்தவர் இன்று 500 கோடி ரூபாவுக்கு சினிமா படம் எடுக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார் என்றால் அது குறித்து ஈழத் தமிழர்கள் நிச்சயம் பெருமை கொள்ள முடியும். அதுவும் தென்னிந்திய சினிமாவில் ஒரு தெலுங்கர் வெற்றி பெற முடியும். ஒரு கன்னடர் வெற்றிபெற முடியும். ஆனால் அதேமாதிரி ஒரு ஈழத் தமிழர் இலகுவில் வெற்றி பெற்றுவிட முடியாது. ஆனால் அந்த தென்னிந்திய சினிமாவில் இன்று தவிர்க்க முடியாத ஒரு தயாரிப்பாளராக ஈழத் தமிழரான லைக்கா முதலாளி விளங்குகிறார் எனில் அவரது வியாபார திறமை கவனிக்கப்படவேண்டிய ஒன்றுதான். அதிக லாபம் பெற வேண்டுமாயின் அதிக றிஸ்க( RISK); எடுக்க வேண்டும் எனவும் ஒரு தியறி இருக்கிறது. அதன்படிதான் லைக்கா முதலாளி அதிக முதலீட்டில் தொடர்ந்து ரஜனி படங்களை தயாரிக்கின்றாரா என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் 500 கோடி ரூபா முதலீட்டில் அழகாக 20 படங்கள் தயாரிக்க முடியும். இதில் ஜந்து படங்கள் ஓடினாலே போட்ட காசு அனைத்தையும் பெற்றுவிட முடியும். ஆனால் லைக்கா முதலாளி ஒரே படத்தில் 500 கோடி ரூபாவையும் முதலீடு செய்கிறார். படம் ஓடவில்லை என்றால் 500 கோடி ரூபாவும் ஸ்வாகாதான். லைக்கா முதலாளி ரஜனியை வைத்து 2.0 படம் எடுத்தார். படம் தோல்வி. போட்ட பணத்தை எடுக்க முடியவில்லை. விட்ட பணத்தை பிடிக்க என்று இப்போது அதே ரஜனியை வைத்து தர்பார் எடுத்துள்ளார். ஆனால் இப் படமும் வெற்றி பெறப்போவதில்லை என்கிறார்கள். பல்வேறு வியாபாரங்களில் அதிக லாபத்தை சம்பாதித்த லைக்கா முதலாளியால் தமிழ் சினிமாவில் அவ்வாறு பெற முடியவில்லை. ஆனால் இயக்குனர் சங்கர் “வெற்றி பெற்ற சாதனை முதலாளி” என்ற ரீதியில் லைக்கா முதலாளியின் வாழ்க்கையை படமாக்க வேண்டும் கூறியுள்ளார். அவ்வாறு படமாக்கப்பட்டால் அவரது உண்மை வரலாறு கூறப்படுமா என்று தெரியவில்லை. ஏனெனில் எல்லா முதலாளிகள் போல் அவரது மூலதனமும் (CAPITAL ) சட்ட ரீதியாக சம்பாதிக்கப்பட்டது அல்ல. குறிப்பு - லைக்கா முதலாளி தனது கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்காகவே இப்படி தோல்வியான படங்களை எடுப்பதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் அதில் எந்தளவு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை Image may contain: 1 person, smiling, suit

•மனோ கணேசனும் ராஜபக்சவும்!

•மனோ கணேசனும் ராஜபக்சவும்! சிஜடி பொலிசார் - மனோ கணேசன் அவர்களே! ராஜபக்சா ஒரு முட்டாள் என்று நீங்கள் பேசியுள்ளீர்கள். எனவே அதி உத்தம ஜனாதிபதி அவர்களை முட்டாள் என்று பேசியதற்காக உங்களை கைது செய்ய வந்துள்ளோம். மனோ கணேசன் - நான் விஜயதாச ராஜபக்சவையே முட்டாள் என்று பேசினேன். அவர் அரசியல் அமைப்பில் செய்ய கொண்டுவந்த தீர்மானம் முட்டாள்தனமானது என்பதையே சுட்டிக் காட்டியுள்ளேன். சிஜடி பொலிசார் - மன்னிக்கவும் மனோ கணேசன் அவர்களே. நீங்கள் எங்களை ஏமாற்ற முடியாது. ஏனெனில் ராஜபக்சாக்களில் கோத்தபாயா ராஜபக்சாவே அடிமுட்டாள் என்பது எமக்கு நன்கு தெரியும். மனோ கணேசன் - ????? குறிப்பு - இது ஒரு பகிடி உரையாடல்தான். ஆனால் இது உண்மையானதும்கூட. இந்தியாவில் ஒரு சமூக ஆர்வலர் மோடி ஒரு முட்டாள் என்று கூறியதற்காக பொலிசார் கைது செய்வார்கள். அப்போது அந்த சமூக ஆர்வலர் நான் நீரவ் மோடியைத்தான் கூறினேன் என்பார். ஆனால் பொலிசார் பிரதமர் மோடி முட்டாள் என்பது எமக்கு நன்கு தெரியும். எனவே அவரைத்தான் நீங்கள் கூறியிருக்கிறீர்கள் என்று கைது செய்வார்கள். இந்த பகிடியை படித்ததும் எனக்கு மனோ கணேசன் பகிடி நினைவுக்கு வந்தது. Image may contain: Mano Ganesan, sitting Image may contain: 1 person, smiling, close-up

இவர் பல்கலைக்கழகத்தில் படித்தவர் என்கிறார்கள்

இவர் பல்கலைக்கழகத்தில் படித்தவர் என்கிறார்கள் இவர் கௌரவ மாநகரசபை உறுப்பினர் என்கிறார்கள் ஆனால் பொதுவெளியில் எப்படி நாகரீகமாக உரையாடுவது என்று தெரியவில்லையே இவருக்கு. தவறாக பேசியது மட்டுமன்றி அதற்கு வருத்தம் தெரிவிக்காமல் தொடர்ந்தும் திமிராக அதை நியாயப்படுத்துகிறாரே? உடனடியாக இவர் மீது தலைவர் சித்தார்த்தன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர் மீது எடுக்கும் நடவடிக்கையானது இவர் திருந்துவதற்கு மட்டுமன்றி , இனி இன்னொருவர் இவர் போன்று பேசுவதை தடுப்பதாகவும் இருக்க வேண்டும். Image may contain: one or more people, people standing and outdoor

•செய்தி - தமிழர்களுக்கு வழங்கப்படும் உச்சபட்ச அதிகாரமே இந்தியாவின் தென்கோடியைப் பாதுகாக்கும் - முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன்

•செய்தி - தமிழர்களுக்கு வழங்கப்படும் உச்சபட்ச அதிகாரமே இந்தியாவின் தென்கோடியைப் பாதுகாக்கும் - முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இக் கருத்தை விக்னேஸ்வரன் மட்டுமன்றி மு.திருநாவுக்கரசு . காசிஅனந்தன் போன்றவர்களும் தொடர்ந்து கூறிவருகிறார்கள். அதாவது இவர்களுக்கு தெரிந்த இந்த உண்மை இந்திய அரசுக்கு தெரியவில்லை என்று கருதுகிறார்கள். தாங்கள் இந்திய அரசைவிட புத்திசாலிகள் என நினைக்கிறார்கள் போலும். உண்மையில், ஈழத் தமிழர்கள் அதிளவு அதிகாரத்தை பெறுவது தமிழக தமிழர்களுக்கு உந்துதலைக்கொடுக்கும். அதனால் தமிழகம் இந்தியாவில் இருந்து பிரிந்துவிடும் என்று அஞ்சியே ஈழத் தமிழர்கள் அதிகாரங்கள் பெறுவதை இந்திய அரசு தடுத்து வருகிறது. அதுமட்டுமன்றி என்றைக்கு முழு இலங்கையையும் தன்னால் ஆக்கிரமிக்க முடியாத நிலை இந்திய அரசுக்கு வருகிறதோ அன்றுதான் ஈழத் தமிழருக்கு இந்திய அரசு உதவ முன்வரும். ஆனால் இன்று முழு இலங்கையையும் ஆக்கிரமிக்க இலங்கை அரசுகள் தொடர்ந்து இந்திய அரசை அனுமதிக்கின்றன. எனவே இந்நிலையில் இந்திய அரசு எப்படி ஈழத் தமிழருக்கு ஆதரவு தர முன்வரும்? இவர்கள் கூறுவதுபோல் இந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவ வேண்டுமாயின் இரண்டு விடயங்கள் நிகழ வேண்டும். முதலாவது, இலங்கை அரசு இந்திய ஆக்கிரமிப்பை நிராகரித்து சீன ஆக்கிரமிப்புக்கு வழி விடுமாயின் அப்போது இந்திய அரசு ஈழத் தமிழர்களை ஆதரிக்க முன்வரும். ஆனால் இலங்கை அரசு இந்திய அரசின் அனுமதியோடு ஓரளவு சீன ஆக்கிரமிப்பை அனுமதிக்குமேயொழிய இந்திய ஆக்கிரமிப்பை நிராகரிக்கும் நிலை இப்போது இல்லை. இரண்டாவது, தமிழக அரசும் தமிழக தலைவர்களும் வற்புறுத்தினால் இந்திய அரசு தவிர்க்க முடியாமல் ஈழத் தமிழர்களை ஆதரிக்க வேண்டிய நிலை வரலாம். ஆனால் அதற்கும் சாத்தியம் இல்லை. ஏனெனில் கனிமொழி உட்பட பல தமிழக தலைவர்கள் கொழும்பில் பல வியாபார நலன்களைப் பேணி வருகிறார்கள். எனவே அவர்கள் ஒருபோதும் ஈழத் தமிழருக்கு ஆதரவாக இந்திய அரசு தலையிட வேண்டும் எனக் கோரப் போவதில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக இவர்கள் இந்தியாவில் இருக்கும் ஈழ அகதிகளின் நலன்கள் குறித்தே கவலை கொள்ளவில்லை. அக்கறை காட்டவில்லை. அப்படிப்பட்டவர்கள் ஈழத்தில் தமிழருக்கு உதவுவார்கள் என்று எப்படி இந்த புத்திசாலிகள் எதிர் பார்க்கிறார்கள்? Image may contain: 1 person, standing and text

எந்தவித பயனும் அற்ற

எந்தவித பயனும் அற்ற கொஞ்சம்கூட பொறுப்பும் அற்ற ஒரு முட்டாள்தனமான சந்திப்பு இது. சிறப்புமுகாமில் 20 அகதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அவர்களை சந்தித்து ஆறுதல் கூறியிருக்கலாம் அல்லது, சாதாரண முகாமில் இருக்கும் அகதிகளை சந்தித்து குறைகளை கேட்டிருக்கலாம். மாறாக, ஒரு நடிகரை அதுவும் மராட்டிய இன நடிகரை சந்தித்ததோடு அவரை ஈழத்திற்கு வருமாறு அழைத்திருப்பது மன்னிக்க முடியாத தவறாகும். Image may contain: 1 person, sitting and indoor

இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். உழவர் மக்களின் உன்னத நாளாம் உழைக்கும் மக்களின் உரிமை நாளாம் தமிழ் மக்களின் புத்தாண்டு நாளில் இனிய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்! பல வருடங்களாக சிறை மற்றும் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளை விடுவிப்பது என சபதம் கொள்வோம்! No photo description available.

•வடலி வளர்த்து கள்ளுக் குடிக்க நினைக்கும் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன்!

•வடலி வளர்த்து கள்ளுக் குடிக்க நினைக்கும் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன்! விக்கினேஸ்வரன் அவர்களும் ஆன்மீகவாதி. நடிகர் ரஜனியும் ஆன்மீகவாதி. அதனால் இருவரும் சந்தித்துக்கொண்டார்கள் என்கிறார்கள். சரி. அப்படியென்றால் இதுவரை சந்திக்காதவர்கள் இப்போது மட்டும் எதற்காக சந்தித்துக்கொண்டார்கள்? 3000 ஈழ அகதிகளை இந்திய அரசு இலங்கைக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளது. அதைத் தடுத்து நிறுத்த சந்தித்தார்களா? இல்லை. அப்படியென்றால், தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்பதற்காக சந்தித்தார்களா? இல்லை. அப்படியென்றால் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கும் அகதிகளின் விடுதலைக்காக சந்தித்தார்களா? இல்லை. அப்படியென்றால் தினமும் கேரளாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கடத்தப்படும் கஞ்சாவை தடுத்து நிறுத்த சந்தித்தார்களா? இல்லை. அப்புறம் எதற்காகத்தான் சந்தித்தார்கள்? ஒருவேளை எதிர்காலத்தில் நடிகர் ரஜனி பாஜக சார்பில் தமிழக முதலமைச்சரானால் அப்போது அவர் மூலம் இந்திய மத்திய அரசிடம் உதவி கோருவதற்கான சந்திப்பு என்கிறார்கள். ஓ! அதாவது, வடலி வளர்த்து கள்ளுக்குடிக்க நினைக்கிறார் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் என்கிறார்கள். ஆனால் வடலி வளர்த்து கள்ளுக் குடிப்பதுகூட சிலவேளை சாத்தியமாகலாம். ஆனால் நடிகர் ரஜனி தமிழக முதலமைச்சராவது என்பது ஒருபோதும் நடக்கப்போவதில்லை. ஒருவேளை அதிசயமாக அவர் முதலமைசரானாலும்கூட ஈழத் தமிழர் நலனுக்காக அவர் எதையுமே செய்ய மாட்டார் என்பது உறுதி. சூரியா ஒரு நடிகர். அவர் தனது உழைப்பில் இதுவரை 3600 மாணவர்களுக்கு கல்வி பெற உதவி செய்திருக்கிறார். இதில் பல ஈழ அகதி மாணவர்களும் அடங்குவர். ரஜனியும் ஒரு நடிகர். இதுவரை ஒரு ஈழ அகதிக்கூட எந்த உதவியும் செய்யாதவர். தனது பாடசாலையின் வாடகையைக்கூட கட்டாதவர். அப்படிப்பட்ட ரஜனி முதலமைச்சரானால் ஈழத் தமிழருக்கு உதவி செய்வார் என்று விக்கினேஸ்வரன் எப்படி எதிர்பார்க்கிறார்? Image may contain: 2 people, people smiling, people sitting

•தமிழ்நாடும் தமிழீழமும் !!

•தமிழ்நாடும் தமிழீழமும் !! 51 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை மாகாணம் “தமிழ்நாடு” என்று பெயர் பெற்ற நாள் இன்று. தனிநாடு கேட்டு போராடிய அறிஞர் அண்ணா அந்த போராட்டத்தை கைவிட்டிருந்தாலும் “தமிழ்நாடு” என்று பெயரையாவது சூட்டினார். அதுமட்டுமல்ல தனிநாட்டுக்கான போராட்டத்தை கைவிட்டபோது “ தனிநாட்டுக்கான காரணங்கள் யாவும் அப்படியே இருக்கின்றன” என்றார். ஆனால் நமது தலைவர்கள் வடக்கு கிழக்கு இணைந்த மாகாணம் கிடைத்தபோது அதற்கு “தமிழீழம்” என்று பெயர் வைக்கவும் முயற்சி செய்யவில்லை. 2009க்கு பின்னர் தமிழீழத்தை கைவிட்டபோதும் அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன என்பதையும் கூற விரும்பவில்லை. இவர்களிடம் அறிஞர் அண்ணாவிடம் இருந்த அரசியல் நேர்மைகூட இருக்கவில்லை. இவர்கள் கட்சி ஆரம்பிக்கும்போதே தமிழில் தமிழரசுக்கட்சி என்றும் ஆங்கிலத்தில் சமஷ்டிக்கட்சி (பெடரல் பார்ட்டி) என்றும் பெயர் வைத்து ஏமாற்றியவர்களாச்சே! இன்னும் வேடிக்கை என்னவெனில் தமிழீழம் கேட்கும் தைரியம் இருக்கா என்று இவர்களின் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மக்களை பார்த்து நக்கலாக கேட்கிறார். எல்லாம் நேரம்தான்டா! Image may contain: 1 person, smiling, possible text that says 'Madras State என்று இருந்த பெயரைத் தமிழ்நாடு என 14/1/69 UFROD அறிஞர் அண்ணா பெயர் மாற்றம் செய்த தினம் இன்று..!'

ஐயா! பொங்கல் வந்திடுச்சு

ஐயா! பொங்கல் வந்திடுச்சு தூங்கினது போதும் . எழும்புங்க ஆனால் வழக்கம்போல பழக்க தோஷத்தில “அடுத்த பொங்கலுக்குள் தீர்வு வந்திடும்” என்று மட்டும் அறிக்கை விடாதையுங்கோ இப்ப உள்ள ஐனாதிபதிக்கு பகிடியும் தெரியாது வெற்றியும் தெரியாது அப்புறம் ஏதும் கேஸ் போட்டு உள்ளே வைச்சிடுவார் வயதான காலத்தில் சிறையில் இருக்க முடியுமா? அரசியலில் இருந்து ஒதுங்கப்போறன் என்று அறிக்கை விட்டுப் பார்த்தீங்க அதையும் யாரும் கண்டுகவும் இல்லை. நம்பவும் இல்லை இனி என்னதான் கூறி ஏமாற்றப்போகிறீர்கள்? Image may contain: 1 person 93You, தமிழரசன் சீனிவாசன், Pirabakar Kumarasamy and 90 others 19 comments

கானாவில் நடந்தது ஈழத்திலும் நடைபெறும்!

•கானாவில் நடந்தது ஈழத்திலும் நடைபெறும்! கானா நாட்டில் பல்கலைக்கழகத்தில் இந்திய ஜனாதிபதியால் நிறுவப்பட்ட காந்தி சிலை அகற்றப்பட்டது. கானா மக்கள் போராட்டத்தினால் இவ் காந்திசிலை கடந்த வருடம் இதே நாளில் அகற்றப்பட்டது. அதேபோல் ஈழத்திலும் இந்திய அரசால்; நிறுவப்பட்ட காந்தி சிலைகள் தமிழ் மக்களினால் அகற்றப்படும். வடக்கு கிழக்கில் மேலும் 20 காந்தி சிலைகள் நிறுவப்படும் என யாழ் இந்திய தூதர் கூறியிருக்கிறார். எத்தனை காந்தி சிலைகளை அவர் நிறுவினாலும் அத்தனை சிலைகளும் நிச்சயம் அகற்றப்படும். இது உறுதி. இந்திய ஆக்கிரமிப்பு சின்னங்கள் எதுவும் ஈழத்தில் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. Image may contain: one or more people

•தோழர் தமிழரசன்

•தோழர் தமிழரசன் அவரை பயங்கரவாதி என்றது இந்திய அரசு அவர் ஒரு நக்சலைட் என்றது கியூ பிராஞ் உளவுதுறை அவரை வங்கி கொள்ளையன் என்று அடித்து கொன்றது தமிழக காவல்துறை அவர் இறக்கும் நேரத்தில் தாகத்திற்கு தண்ணீர் கேட்டபோது பூட்ஸ் காலால் வாயில் மிதித்தார்கள். அவருடைய அடங்காத அந்த தாகமே இன்று தமிழ் தேசியமாக இருக்கிறது. இன்று தோழர் தமிழரசன் பெயரை உச்சரிக்காமல் யாருமே தமிழ் தேசியம் பேசிவிட முடியாது. நாளைய தமிழக வரலாறு தமிழரசன் வரலாறாகவே இருக்கப் போகிறது. தோழர் தமிழரசன் குறித்து நான் எழுதிய “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் இல-499 பொதுமைப் பதிப்பகத்தில் பெற்றுக் கொள்ளலாம். வாங்கிப் படியுங்கள். கருத்துகள் மக்களைப் பற்றிக் கொள்ளும்போது பௌதிக சக்தி பெறுகிறது. குறிப்பு - தோழர் தமிழரசனின் தாயார் எனது நூலைப் பெற்றுக்கொண்டபோது எடுக்கப்பட்ட படமே கீழே உள்ளது. Image may contain: 1 person, sitting

•நான் ஏன் எழுதுகிறேன்?

•நான் ஏன் எழுதுகிறேன்? எனது எட்டு வருட சிறைவாழ்வை முடித்துக்கொண்டு சிறப்புமுகாமில் இருந்து நான் விடுதலை பெற்றபோது அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு சிறுமி “ எல்லோரும் விடைபெறும்போதும் கவலைப்படாதே உன்னை விரைவில் விடுதலை செய்ய உதவுவேன் என்பார்கள். ஆனால் அது என்னை ஆறுதல்படுத்த அவர்கள் கூறும் வார்த்தைகள் என்பதை அறிவேன். ஆனால் நீங்கள் அவ்வாறு கூறாவிட்டாலும் நீங்கள்தான் நிச்சயம் என் விடுதலைக்கு உதவுவீர்கள் என நம்புகிறேன்” என்றாள். அதேபோன்று மண்டபம் அகதிமுகாமில் இருக்கும் ஒரு பெண் தனது கணவருக்கு இன்னும் அகதிப் பதிவு கிடைக்கவில்லை. தாசில்தாரிடம் கேட்டால் கலெக்டரிடம் கேட்கச் சொல்கிறார். கலெக்டரிடம் கேட்டால் கியூ பிராஞ் பொலிசிடம் கேட்கச் சொல்கிறார். கியூ பிராஞ்சிடம் கேட்டால் தாசில்தாரிடம் கேட்கச் சொல்கிறார்கள் என்று கவலையுடன் கூறுகிறார். சேலம் அகதிமுகாமில் இருக்கும் ஒரு பெண் “நாம் தமிழர்” கட்சியைச் சேர்ந்த தமிழக தமிழர் ஒருவர் தன்னை திருமணம் செய்தார் என்றும் இப்போது வரதட்சனை கேட்டு அவரும் அவரின் தாயாரும் தன்னைக் கொடுமைப்படுத்துவதாகவும் கூறுகிறார். அகதி ஒருவர் தான் சினிமாவில் உதவி இயக்குநராக இருப்பதாகவும் தன் மகள் ஒரு படத்தில் நடித்திருப்பதாகவும் தற்போது தன் மகளை கியூ பிராஞ் பொலிஸ் கடத்தி சென்று இரகசியமாக அடைத்து வைத்திருப்பதாகவும் மகள் விடுதலையாவதற்கு என்னை உதவும்படி கேட்கிறார். தாங்கள் “அகதிகள் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு” ஒன்றை உருவாக்கியிருப்பதாகவும் தமக்கு நான் வழி காட்ட வேண்டும் என்று விழுப்புரம் அகதி முகாமில் இருந்து அகதிகள் கேட்கிறார்கள். இவ்வாறு தினமும் பலர் பலவிதமான பிரச்சனைகளுடன் என்னை தொடர்பு கொள்கிறார்கள். இவர்கள் அனைவரும் என்னிடம் கேட்கும் ஒரே உதவி தங்கள் பிரச்சனையை என் முகநூலில் எழுதும்படி மட்டுமே. நான் பாராளுமன்ற உறுப்பினர் இல்லை. நான் மாகாணசபை உறுப்பினர் இல்லை. நான் பிரதேசசபை உறுப்பினர்கூட இல்லை. ஆனாலும் இவர்கள் என்னிடம் வந்து தங்கள் குறைகளை கூறுகிறார்கள். நான் ஊடகம் நடத்தவில்லை. எந்த ஊடகத்திலும் சென்று பங்குபற்றுவதில்லை. என் முகநூலில் மட்டுமே எழுதுகிறேன். இருப்பினும் நான் எழுதினால் தங்கள் குறைகள் நீங்கும் என இவர்கள் நம்பி என்னிடம் வந்து கூறுகிறார்கள். நேர வித்தியாசம் தெரியாமல் சிலவேளை நள்ளிரவில்கூட நித்திரையில் இருக்கும் என்னை ஏழுப்பி வைத்து தங்கள் குறைகளை சொல்வார்கள். அப்போது என்னால் அவர்களுக்கு செய்யக்கூடிய ஒரே உதவி அவர்கள் கூறுவதை பொறுமையாக கேட்பதே. எனக்கு இவர்களின் குறைகளை பொறுமையாக கேட்பதோ அல்லது அதற்காக குரல் கொடுத்து எழுதுவதோ ஒரு சுமையாக தோன்றவில்லை. மாறாக இதை நான் முகநூலில் லைக் வாங்குவதற்காக எழுதுவதாக சுமந்திரனின் விசுவாசி ஒருவர் கூறும்போதுதான் கொஞ்சம் வலிக்கிறது. லைக்கை வைத்து ஒரு சிங்கிள் டீ யைக்கூட குடிக்க முடியாது என்பது மட்டுமன்றி சுமந்திரன் போன்ற அரசியல் தலைவர்கள் பொறுப்பாக நடந்தால் இவர்கள் ஏன் என்னிடம் வந்து தங்கள் குறைகளை கூறப்போகிறார்கள் என்பதுகூட இந்த விசுவாசிக்கு புரியவில்லையே! குறிப்பு - இந்த பதிவை எழுதிக் கொண்டிருக்கும்போது சுமந்திரனின் தொகுதியில் உள்ள கரவெட்டி கிராம சுடலை (மயான)ப் பிரச்சனை தொடர்பாக என்னை எழுதுமாறு வந்த செய்தி இது. "You know sonappu was with bushes for a long time. But its well developed recently. Really it is great work, but some haters writing against to it.. I expect you to write something on this" Image may contain: Balan Chandran, sitting

“முரசொலி” வைத்திருந்தால் அவர் திமுக காரர்

“முரசொலி” வைத்திருந்தால் அவர் திமுக காரர் “துக்ளக்” வைத்திருந்தால் அவர் அறிவாளி போராட்டம் நடத்தினால் அவர் சமூகவிரோதி இந்த பரட்டை இன்னும் என்னத்தையெல்லாம் சொல்லித் தொலைக்கப்போகுதோ? குறிப்பு - ஆங்கிலேயர் காலத்தில் தேயிலை தோட்டத்தில் வேலைக்காக கொண்டு செல்லப்பட்ட இந்திய தமிழர்களில் 3 லட்சம் பேரை சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இந்தியா திரும்பி பெற்று அவர்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளது. ஆனால் இந்த விபரம் தெரியாமல் 1983ல் அகதியாக வந்த ஈழத் தமிழருக்கு இந்தியா குடியுரிமை வழங்கியதாக துக்ளக் குருமூர்த்தி பொய் எழுதுகிறார். அந்த துக்ளக்கை வைத்திருப்பவர்கள் அறிவாளிகள் என்று பரட்டை ரஜனி கூறுகிறார். Image may contain: 1 person

•ரஞ்சன் லீக்ஸ்!

•ரஞ்சன் லீக்ஸ்! விக்கி லீக்ஸ் போல் இலங்கையில் இப்போது ரஞ்சன் லீக்ஸ் பேமஸ் ஆகியுள்ளது. நடிகைகள், நீதிபதிகள், அரசியல்வாதிகள் போன்றவர்கள் ரஞ்சன் ராமநாயக்கவுடன் பேசிய ஒலிப்பதிவுகள் லீக்காகி கொண்டிருக்கின்றன. இதனால் இலங்கை அரசு வேறு வழியின்றி மீண்டும் ரஞ்சன் ராமநாயக்காவை கைது செய்துள்ளது. இதுவரை வெளிவந்திருப்பது சொற்பம் என்றும் இன்னும் அதிகளவு வெளிவர இருக்கின்றன என்று கூறுகிறார்கள். வெளிவந்த சொற்பத்திற்கே இலங்கை ஆட்டம் காணுது. முழுவதும் வந்தால் என்னவாகும் என்று தெரியவில்லை. இதுவரை வெளிவந்திருக்கும் உரையாடல்கள் சிங்களத்தில் இருப்பதாலும் சம்பந்தப்பட்டவர்கள் சிங்கள பிரமுகர்களாக இருப்பதாலும் தமிழ் மக்கள் மத்தியில் இன்னும் இந்த விடயம் முக்கியம் பெறவில்லை. ஒருவேளை யாராவது தமிழ் பிரமுகரின் உரையாடல் ஏதும் இனி வந்தால் சில|வேளை தமிழ் மக்களின் கவனத்தைத் திருப்பக்கூடும். ரஞ்சன் ராமநாயக்கா நடிகர் ரஜனியுடனும் உரையாடியுள்ளார். எனவே ரஞ்சன் லீக்ஸில் சிலவேளை ரஜனியின் உரையாடல் பதிவும் இருக்கக்கூடும். இந்த உரையாடல்களை பதிவு செய்யும் திட்டத்தை ரஞ்சனுக்கு கூறியவர் சுமந்திரன் என்று சிங்களப் பத்திரிகை ஒன்று குற்றம் சாட்டியுள்ளது. அந்த செய்தி எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ரஞ்சன் மீதான விசாரணையின்போது உண்மைகள் வெளிவரக்கூடும். ரஞ்சன் புத்த பிக்குகள் மத்தியில் இருக்கும் பாலியல் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதால் பழிவாங்கப்படுகிறார் என்று கூறுகிறார்கள். இப்போது தமிழ் மக்கள் முன் உள்ள பிரச்சனை என்னவென்றால் இது சிங்களத்திற்குள் நடக்கும் பிரச்சனை என்று பேசாமல் இருப்பதா அல்லது நாளை தமிழரையும் இந்த அரசு பழிவாங்கும் என்பதால் ரஞ்சன் கைதை கண்டிப்பதா என்பதே. Image may contain: 2 people, people smiling, people standing

•தமிழருக்கு ஒரு நியாயம்

•தமிழருக்கு ஒரு நியாயம் சிங்களவருக்கு இன்னொரு நியாயம் இதுதான் இலங்கை அரசின் நியாயம்? முதலாவது படத்தில் இருப்பவர் தமிழ் அரசியல் கைதி செல்லப்பிள்ளை மகேந்திரன். 27 வருடமாக சிறையில் வைக்கப்பட்டிருந்தவர். கடந்த வாரம் சிறையிலேயே மரணம் அடைந்து விட்டார். இரண்டாவது படத்தில் இருப்பவர் சிங்கள கைதி சுனில் ரத்னாயக்கா. எட்டு அப்பாவி தமிழ் மக்களை கொன்ற குற்றத்திற்காக நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர். கடந்த நான்கு வருடமாக சிறையில் இருந்த இந்த முன்னாள் ராணுவ வீரரை ஜனாதிபதி கோத்தா பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்துள்ளார். அதுமட்டுமன்றி கைது செய்து வைக்கப்பட்டிருந்த பல ராணுவ புலனாய்வாளர்களையும் ஜனாதிபதி கோத்தா விடுதலை செய்துள்ளார் என்று அறிய வருகிறது. இப்போது எமது கேள்வி என்னவெனில் சிங்கள கைதிகளை விடுதலை செய்த ஜனாதிபதி கோத்தா ஏன் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவில்லை என்பதே. இதுபற்றி தமிழ் ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் கேட்டபோது தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள் சேகரிக்கப்படுவதாகவும் படிப்படியாக அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று கூறுகிறார். ஆச்சரியம் என்னவெனில் சிங்கள கைதிகளின் விபரங்கள் உடன் கிடைத்து விடுதலை செய்யப்படுகின்றனர். ஆனால் தமிழ் கைதிகளின் விபரங்கள் கிடைக்க ஏனோ தாமதம் ஆகின்றது அதுவும் வெறும் 77 தமிழ் கைதிகளின் விபரங்களை பெறுவதற்கு ஏன் இந்த தாமதம்? கடந்த நல்லாட்சி அரசிலும் விபரங்கள் சேகரிக்கப்படுவதாகவும் படிப்படியாக அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படும் என்று கூறினார்கள். ஆனால் கடைசிவரை விடுதலை செய்யவில்லை. இப்போது இந்த ஆட்சியிலும் விபரங்கள் சேகரிக்கப்படுவதாகவும் படிப்படியாக விடுதலை செய்யப்படும் என்று கூறுகிறார்கள். இவர்களும் விடுதலை செய்யப்போவதில்லை என்பதையே இது காட்டுகிறது. Image may contain: 1 person, close-up Image may contain: 2 people, people standing

அன்புள்ள அம்மாவுக்கு அனுப்பப்படாத கடிதங்கள்!

•அன்புள்ள அம்மாவுக்கு அனுப்பப்படாத கடிதங்கள்! கடந்த வருடம் இதே நாளில் என் தாயாரை இழந்தேன். இன்று அவரது முதலாவது நினைவு தினம் ஆகும். அவர் உயிருடன் இருந்தபோது என்னிடம் கேட்ட ஒரே ஒரு உதவி நான் எங்கிருந்தாலும் தனக்கு ஒரு கடிதம் போட வேண்டும் என்பதே. ஏன் என்று கேட்டதற்கு தான் ஒவ்வொருநாளும் சாப்பிடும்போது என்னை நினைப்பதாகவும் என் கடிதம் கண்டால்தான்; தன்னால் நிம்மதியாக சாப்பிட முடியும் என்றார். அதனால் நானும் எங்கிருந்தாலும் அவருக்கு தவறாமல் கடிதம் எழுதி வந்தேன். நான் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டபோதும் கடிதம் எழுதி சிறை அதிகாரிகளிடம் அனுப்புமாறு கொடுத்தேன். ஆனால் அந்த இரக்கமற்ற சிறை அதிகாரிகள் எனது அம்மாவுக்கான கடிதம் ஒன்றைக்கூட அனுப்பவில்லை. அன்புள்ள அம்மாவுக்கு என்று நான் எழுதியதை அவர்கள் (பொட்டு) அம்மானுக்கு எழுதிய கடிதம் என்று நினைத்து விட்டார்கள். எனவேதான் எனது எட்டு வருட சிறை வாழ்வு பற்றி நான் எழுதும் நூலுக்கு “அன்புள்ள அம்மாவுக்கு - அனுப்பப்படாத கடிதங்கள்” என்று தலைப்பு வைத்துள்ளேன். என் தயாரின் நினைவாக இந்த வருடம் எப்படியும் இந்த நூலை எழுதி முடித்துவிடுவேன் என நம்புகிறேன். குறிப்பு - தங்கள் பொங்கல் நிகழ்வில் கலந்துகொள்ளும்படி பலர் எனக்கு அழைப்பு விடுத்துள்ளனர். வழக்கத்தைவிட இம்முறை அதிகளவில் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெறுவது மகிழ்ச்சி தருகிறது. என்னால் கலந்துகொள்ள முடியவில்லை எனினும் நிகழ்வுகள் சிறப்பாக அமைய என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். Image may contain: 1 person, standing

•“துக்ளக்” குருட்டு மூர்த்தியின் பிதற்றல்!

•“துக்ளக்” குருட்டு மூர்த்தியின் பிதற்றல்! துக்ளக் 15.01.20 இதழில் அதன் ஆசிரியர் குருட்டுமூர்த்தி மன்னிக்கவும் குருமூர்த்தி பின்வரும் அமைப்புகளை கண்காணிக்க வேண்டும், விசாரணை செய்ய வேண்டும் என்று எழுதியுள்ளார். •நாம் தமிழர் கட்சி •தமிழக வாழ்வுரிமைக் கட்சி •மே 17 இயக்கம் •தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் •தமிழ்தேச மக்கள் கட்சி •இளந்தமிழகம் •தமிழ்தேசிய முன்னணி •தமிழர் எழுச்சி இயக்கம் •பூவுலகின் நண்பர்கள் •சிவில் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் •சமநீதி வக்கீல்கள் சங்கம் •பெண்கள் எழுச்சி இயக்கம் என மொத்தம் 45 அமைப்புகளின் பெயர்களை அவர் குறிப்பிட்டிருக்கிறார். இவ் அமைப்புகள் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கின்றன. இவ் அமைப்புகள் வெளிப்படையாக இயங்குகின்றன இவ் அமைப்புகள் பொலிஸ் மற்றும் நீதிமன்ற அனுமதிகள் பெற்றே பொதுக்கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தகின்றன. ஆனால் குருட்டுமூர்த்தி இவற்றை சட்ட விரோத இயக்கங்கள் என்றும் இவற்றை கண்காணித்து விசாரணை செய்ய வேண்டும் என்கிறார். இவ் அமைப்புகள் RSS போன்று பயிற்சி எடுக்கவில்லை ஆயுதங்களை வைத்திருக்கவில்லை மாட்டிறைச்சி சாப்பிட்டதாககூறி முஸ்லிம்களை கொல்லவில்லை தமக்கு எதிராக கருத்துக்கூறியதாக புத்திஜீவிகள் எவரையும் சுட்டுக் கொல்லவில்லை கிருத்தவ பாதிரியாரை உயிரோடு கொளுத்திக் கொல்லவில்லை ஆனால் இத்தனையும் செய்யும் RSSல் உறுப்பினராக இருக்கும் இந்த குருட்டுமூர்த்தி தமிழ் உணர்வு அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார். இதைவிட மோசம் என்னவெனில் இப்படி எழுதும் துக்ளக் இதழை வைத்திருப்பவர்கள் அறிவாளிகள் என்று மராட்டிய இன நடிகர் ரஜனி கூறுவதுதான். இப்படி ஒருவர் கர்நாடா சென்று கன்னடர்களுக்கு எதிராக எழுத முடியுமா? அல்லது எழுதிவிட்டு கர்நாடகாவில் இருந்துவிட முடியுமா? ஆனால் தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழர்களுக்கு எதிராக எப்படி இவர்களால் இந்தளவு தைரியமாக எழுத முடிகிறது? Image may contain: 2 people, people smiling, text

அரசு உதவி இல்லை

அரசு உதவி இல்லை அரசு ஆதரவுகூட இல்லை ஆனாலும் 15 ஆண்டுகளில் 84000 ஆவணங்களுடன் ஒரு நூலகம் நிச்சயம் ஈழத் தமிழர்கள் பெருமை கொள்ள வேண்டிய இன்னொரு மகத்தான சாதனை இது. நான் எனது 5 நூல்களையும் வழங்கியுள்ளேன். அதேபோல் தோழர் சண்முகதாசன் நூல்களுக்கான அனுமதியையும் அவருடைய குடும்பத்தினரிடமிருந்து பெற்றுக் கொடுத்துள்ளேன். இதேபோன்று ஈழத்து எழுத்தாளர்களும் பதிப்பகங்களும் அனைவரும் தங்கள் நூல்களை வழங்க முன்வரவேண்டும். இது மிகவும் பயனுள்ள ஒரு திட்டம். இத் திட்டம் இன்னும் வெற்றிபெற வேண்டுமாயின் ஈழத் தமிழர்கள் அதிக அளவில் பங்களிப்பு வழங்க வேண்டும். No photo description available.

லண்டனில் இருக்கும் ஈரோஸ் அமைப்பைச் சேர்ந்த ரவி

லண்டனில் இருக்கும் ஈரோஸ் அமைப்பைச் சேர்ந்த ரவி என்பவர் எனது நண்பரிடம் தான் என்னை சந்தித்தாக கூறியிருக்கிறார். அதை எனது நண்பர் என்னிடம் கேட்டபோது எனக்கு குழப்பம். ஏனெனில் நான் ரவி அவர்களை சந்திக்கவில்லை. அடுத்து கோயம்புத்தூரில் இருக்கும் எனது முகநூல் நண்பர் ஒருவர் “தோழர்! எங்க ஊர்வரை வந்து சென்றுள்ளீர்கள் என அறிந்தேன். ஒரு வார்த்தை எனக்கு கூறியிருந்தால் உங்களை சந்தித்திருப்பேன் அல்லவா? உங்களை நேரில் பார்க்க எவ்வளவு ஆவலாக இருக்கிறேன் தெரியுமா?” என்று வருத்தத்துடன் கேட்டார். அதையடுத்து இளந்தமிழகம் அமைப்பில் உள்ள மதுரைச் சேர்ந்த ஒருவர் தற்போது இங்கிலாந்தில் லூட்டன் என்னும் இடத்தில் இருக்கிறார். அவர் என்னை நேரில் பார்க்க விரும்பி ஈஸ்ட்காம்பில் நடந்த ஒரு கூட்டத்திற்கு வந்திருக்கிறார். அங்கு தோழர் பாலன் என்று ஒருவரைக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் அது நான் இல்லை. ஏனெனில் அன்று நான் அக் கூட்டத்திற்கு போகவில்லை. அண்மையில் லண்டனில் இருக்கும் நண்பர் ஒருவர் என்னுடன் தொடர்பு கொண்டு “நந்திக்கடல் பேசுகிறது நூலை வெளியிடுகிறீர்கள் என்று அறிந்தேன். எனக்கு ஒரு பிரதி தர முடியுமா?” என்று கேட்டார். எனக்கு குழப்பம். ஏனெனில் அந்த நூலை நான் வெளியிடவில்லை. சுவிற்சலாந்தில் இருக்கும் ஊடகவியலாளர் துரைரத்தினம் அவர்கள் மலையக தமிழரை இழிவுபடுத்தும் ஒரு சொல்லை பயன்படுத்தியமைக்கு எனது கண்டனத்தை தெரிவித்து பதிவு போட்டிருந்தேன். உடனே என்னை தொடர்பு கொண்ட துரைரத்தினம் அவர்கள் “ நீ புளட் இயக்கத்தில் இருந்தது எனக்கு தெரியும். உன்னைப்பற்றி; நான் எழுதினால் நீ தாங்கமாட்டாய்” என்று கூறினார். எனக்கு குழப்பம். ஏனெனில் நான் ஒருபோதும் புளட் இயக்கத்தில் இருக்கவில்லை நான் இந்தியா சென்றிருப்பதாகவும் தனக்கு நன்கு தெரியும் என்றும் பிரிஎவ் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் முகநூலில் எழுதியிருந்தார். அதற்கு எனது நண்பர் ஒருவர் “இது தவறான செய்தி. அவரால் இந்தியா செல்ல முடியாது” என்று தெரிவித்திருந்தார். ஆனாலும் அதை அந்த பிரிஎவ் நபர் ஏற்றுக்கொள்ளவில்லை. இவ்வாறான குழப்பங்களுக்கு காரணம் தோழர் பாலன் என்று இன்னொருவர் அதுவும் லண்டனில் இருக்கிறார் என்பதை இவர்கள் அறியாமல் இருப்பதே. அவரும் ஈழத் தமிழர். அவரும் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவரும் லண்டனில் தற்போது இருக்கிறார். அவரும் மார்க்சிச லெனிச மாவோயிச சிந்தனைகளை ஏற்றுக்கொண்டிருப்பதால் தோழர் பாலன் என அழைக்கப்படுகிறார். ஆனால் அவர் புளட் இயக்கத்தில் செயற்பட்டவர். தற்போது புதியதிசைகள் என்னும் அமைப்பை உருவாக்கி செயற்பட்டுக்கொண்டிருக்கிறார். இனி இவ்வாறான குழப்பங்கள் எற்படுவதை தவிர்க்கும்பொருட்டே இப் பதிவை செய்கிறேன். அவருடைய படத்தையும் இங்கு தந்திருக்கிறேன். எனவே தயவு செய்து இனி யாரும் எழுதும்போது எந்த பாலன் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு எழுதுங்கள். Image may contain: Balan Chandran, sitting

•வரிகள் அற்ற அரசு சாத்தியமா?

•வரிகள் அற்ற அரசு சாத்தியமா? அரசு இருக்கும்வரை வரியும் இருக்கும். எனவே வரிகள் அற்ற அரசு சாத்தியம் இல்லை என்று கூறுகின்றனர். சரி. அப்படியென்றால் அரசு அற்ற ஒரு சமூகம் குறித்து சிந்தித்தால் என்ன என்று கேட்டால் அதை ஏதோ பையித்தியக்கார சிந்தனைபோல் பார்க்கின்றனர். ஆனால் காரல் மாக்ஸ் கம்யுனிச சமூகத்தில் அரசு வாடி உதிர்ந்துவிடும் என்று கூறியிருக்கிறார். எனவே அரசு அற்ற ஒரு சமூகத்தை நாம் இப்போது சிந்திக்க முடியாது என்றாலும் குறைந்த பட்சம் வரிகள் குறைவான ஒரு அரசையாவது சிந்திக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இன்று உலகில் அதிகளவு வரி அறவிடும் நாடுகளாக பெரும்பாலும் ஜரோப்பிய நாடுகள் இருக்கின்றன. உதாரணமாக பிரிட்டனில் அறவிடப்படும் வரிகளாக இவைகள் இருக்கின்றன. List of UK Taxes • INCOME TAX • CORPORATION TAX • VALUE ADDED TAX • NATIONAL INSURANCE CONTRIBUTIONS • CAPITAL GAINS TAX • INHERITANCE TAX • BUSINESS RATES • COUNCIL TAX • STAMP DUTY • ALCOHOL DUTY • HYDROCARBON OILS DUTY • TOBACCO DUTY • CUSTOMS DUTY • PETROLEUM REVENUE TAX • MOTOR VEHICLE DUTY • AIR PASSENGER DUTY • INSURANCE PREMIUM TAX • LANDFILL TAX • OIL ROYALTY • AGRICULTURAL LEVY • CLIMATE CHANGE LEVY • AGGREGATES LEVY இவ்வாறு பல்வேறு வடிவங்களில் சுமார் 32% வரியாக மக்களிடமிருந்து அறவிடப்படுகிறது . அதாவது ஒருவர் 100 ரூபா உழைத்தால் அவரிடமிருந்து அண்ணளவாக 32ரூபாவை வரியாக அரசு பறித்துக் கொள்கிறது என்கிறார்கள். இந்தளவு வரியை அறவிடும் அரசானது இதில் எந்தளனவு பணத்தை மக்களுக்கு செலவு செய்கிறது என்பது பற்றிய விபரங்கள் மக்களுக்கு தெரியப்படுத்துவதில்லை. உதாரணமாக அரசானது 100 ரூபாவை மக்களுக்கு ஒதுக்கினால் இது மக்களை சென்றடைய அரசுக்கு 65 ரூபா செலவாகிறது என்கிறார்கள். எனவேதான் இந்த மலை விழுங்கி மகாதேவனாகிய அரசை இல்லாமற் செய்ய வேண்டியது பற்றி சிந்திக்க வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம். மக்களுக்கு அபிவிருத்தி செய்ய பணம் இல்லை என்று அரசு கூறுகிறது. மக்களுக்கு வழங்கி வந்த உதவிகளை படிப்படியாக குறைத்து வருகின்றது. ஆனால் அதேவேளை மக்களின் வரிப் பணத்தில் மகாராணியின் குடும்பத்தை அரசு பேணி வருகின்றது. எனவேதான் இனி தான் மக்களின் வரிப் பணத்தில் வாழப்போவதில்லை என்று இளவரசர் ஹரி அறிவித்திருப்பது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. Image may contain: 2 people, people smiling, people standing and suit

வேலை நேரம் குறைக்க முடியாதா?

வேலை நேரம் குறைக்க முடியாதா? குரங்கில் இருந்து மனிதனாக மாறியதில் உழைப்பின் பாத்திரம் முக்கியமானது என்கிறார் எங்கெல்ஸ் மனிதன் இன்று அடைந்திருக்கும் அத்தனை முன்னேற்றத்திற்கும் அடிப்படையாக இருப்பது மனிதனின் உழைப்பே. உலகின் உண்மையான உன்னதமான அதிசயம் எனில் அது உழைப்பு மட்டுமே என்று கூறமுடியும். ஆனால் வாழ்வதற்காக உழைக்க ஆரம்பித்த மனிதன் இன்று உழைப்பதற்காக வாழவேண்டிய நிலையில் இருக்கிறான். ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் உழைத்தாலே போதுமானது. ஆனால் எட்டு மணி நேரம் உழைத்தும் மனிதனால் சந்தோசமாக வாழ முடியவில்லை. ஏனெனில் அவனது உழைப்பு சுரண்டப்படுகிறது. சுரண்டப்படும் செல்வம் முழுவதும் மக்கள் தொகையில் வெறும் 3 % மான முதலாளிகளிடம் சிக்கியுள்ளது. இந்த செல்வத்தை பறித்து மக்களுக்கு பங்கிட வேண்டிய அரசுகளோ உழைக்கும் மக்களுக்கு சிறிய சம்பள உயர்வை மட்டும் வழங்கி சமாளிக்க முயல்கிறது. வருடா வருடம் பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றன. இந்த விலைவாசி அதிகரிப்புக்கு ஏற்ப உழைப்பாளர்களின் சம்பளம் அதிகரிப்பதில்லை. இதனால் அம் மக்களுக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்த பற்றாக்குறை இடைவெளியானது வருடா வருடம் அதிகரித்து வருகிறது. மக்களால் சமாளிக்க முடியாத நிலை தோன்றி வருகிறது. இதனால் உழைக்கும் மக்கள் தமது உரிமைக்காக போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். ஆனால் அரசு அவர்களின் போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு நசுக்குகின்றது. அரசுகள் உழைக்கும் மக்களின் சம்பளத்தை அவ்வப்போது அதிகரித்து வருகின்றன என்பது உண்மைதான். ஆனால் அவர்களின் வேலை நேரத்தை குறைக்க முன்வருவதில்லை. அதேபோல் உழைக்கும் மக்களின் தொழிற் சங்கங்களும் சம்பள உயர்வு கேட்டு போராடி வருகின்றனவேயொழிய வேலை நேரத்தை குறைக்கும்படி கோருவதில்லை. இலங்கை ஜனாதிபதி கோத்தபாயா ஒரு லட்சம் பேருக்கு வேலை வழங்கப்போவதாக கூறுகிறார். மலையக தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்குவதாகவும் அறிவிக்கிறார். அலுவலகங்களுக்கு திடீர் விசிட் அடித்து வேலை நேரத்தில் நித்திரை கொள்ளும் பணியாளர்களை பிடிக்கிறார். ஆனால் அவர்களின் வேலை நேரத்தை குறைத்து அவர்களை சுறுசுறுப்பாக இயங்க வைக்க முடியும் என்பதை உணர மறுக்கிறார். இன்று இருக்கும் எட்டு மணி வேலை நேரம் என்பது தானாக கிடைத்தது இல்லை. 12 மணி வேலை நேரத்திற்கு எதிராக அமெரிக்க உழைக்கும் மக்கள் ரத்தம் சிந்தி போராடிப் பெற்றதே இந்த எட்டுமணி வேலைநேர உரிமை. தற்போது சுவீடன் நாட்டில் வேலை நேரம் 6 மணியாக இருப்பதாக கூறுகிறார்கள். அதேபோல் பின்லாந்தும் தன் நாட்டில் வேலை நேரத்தை 6 மணி நேரமாக்கப் போவதாக அறிவித்துள்ளது. வேலை நேரத்தை எட்டு மணியில் இருந்து 6 மணியாக குறைப்பதால் முதலாளிகளுக்கு இழப்பு ஏற்படும். எனவே அதற்கு அவர்கள் சம்மதிக்க மாட்டார்கள் என சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் 6 மணி நேர வேலை என்பது தொழிலாளர்களுக்கு அதிக சுறுசுறுப்பை கொடுக்கிறது என்றும் இதனால் முதலாளிகளுக்கு உற்பத்தியில் எந்த இழப்பும் ஏற்படாமல் உற்பத்தியில் ஈடுபடுகிறார்கள் என்றும் ஆய்வுகள் நிரூபித்துள்ளன. எனவே உழைக்கும் மக்களின் வேலை நேரத்தை முதலாளிகளின் எதிர்ப்பு இன்றி அரசுகளால் 6 மணி நேரமாக குறைக்க முடியும். குறைக்க வேண்டும். குறிப்பு - பின்லாந்து அரசு வேலை நேரத்தை 6 மணியாக குறைப்பதோடு மாணவர்களின் கல்வி நேரத்தையும் 4 மணி நேரமாக குறைக்கவுள்ளது. நல்ல முடிவு. இதனை மற்ற நாடுகளும் பின்பற்ற வேண்டும். Image may contain: 1 person, smiling, possible text that says 'வாரத்திற்கு 4 நாட்கள் தினமும் 6 மணிநேரம் மட்டுமே வேலை பின்லாந்து பிரதமர் சன்னா அதிரடி உத்தரவு. மற்ற நேரத்தை குடும்பத்துடன் செலவிட வேண்டும். ம்.'

•இந்திய உளவு (பாகம்- 5)

•இந்திய உளவு (பாகம்- 5) என்னுடைய கருத்தை அறிவதற்காக சிலர் நூல் வெளியிட்ட பின்னர் அனுப்புவார்கள். சிலர் வெளியிடுவதற்கு முன்னர் தந்து கருத்து கேட்பார்கள். அவ்வாறு ஒரு நூலை படிக்கும் வாய்ப்பு அண்மையில் கிடைத்தது. அது தமிழகத்தில் இருந்து ஈழம் வந்து புலிகள் அமைப்புடன் இணைந்து போரிட்ட ஒருவர் எழுதிய நூல். ( விரைவில் வெளி வரும்) தமிழ்நாட்டில் இருந்து வந்து புலிகளிடம் பயிற்சி பெற்றவர்கள், தாக்குதல்களில் பங்கு பற்றியவர்கள், வீர மரணம் அடைந்தவர்கள் போன்ற விபரங்கள் தற்போது வெளி வந்து கொண்டிருக்கின்றன. ஆனாலும் இது குறித்து ஒரு முழுமையான விபரங்கள் வெளி வரவில்லை என்ற குறைபாடு இருக்கிறது. அது ஏன் என்பது பற்றி ஆராய்ந்தேன். அப்போது நான் அறிந்த ஒரு தகவல் ஆச்சரியம் தந்தது. தமிழ்நாட்டில் இருந்து வந்த இளைஞர்களுக்குள் இந்திய உளவு அமைப்பால் அனுப்பப்பட்ட ஒருவரும் இடம் பெற்றிருக்கிறார் என்பதே அத் தகவல். ஆனால் பலிகளின் பலனாய்வுப் பிரிவினர் அந்த ஒருவரைக் கண்டு பிடித்துவிட்டார்கள். எனினும் புலிகள் அவருக்கு எந்த தண்டனையும் வழங்கவில்லை. மாறாக அந்த இளைஞரை அவருடன் கூட வந்த மற்ற தமிழக இளைஞர்களிடம் ஒப்படைத்து விட்டார்கள். உடனே மற்ற தமிழக இளைஞர்கள் ஆத்திரத்தில் இந்த இளைஞரை அடித்தே கொன்று விட்டனர். இந்த இளைஞரின் தந்தையார் ஒரு பேராசிரியர் என்றும் அவர்தான் இந்திய உளவு அமைப்பிற்காக தன் மகனை ஈழத்திற்கு அனுப்பி வைத்தார் என்றும் கூறுகிறார்கள். இது நான் அறிந்த செய்தியே. இதன் உண்மை தன்மையை என்னால் உறுதிப்படுத்த முடியாமல் உள்ளது. இதற்கு முன்னர் நான் எழுதிய செய்திகள் யாவும் என் கண்ணால் கண்ட செய்திகள். ஆனால் இந்த செய்தி அப்படியானது அல்ல. உறுதிப் படுத்தாத இந்த செய்தியை நான் இங்கு பதிவிடுதற்கு ஒரே காரணம் இது பற்றிய உண்மைத் தன்மையை அறிவதற்காகவே. Image may contain: 1 person, text

மாபெரும் ஆசான் தோழர் லெனின் நினைவுதினம

மாபெரும் ஆசான் தோழர் லெனின் நினைவுதினம 1924-ஆம் ஆண்டு ஜனவரி 21-ம் நாள் மாலை நேரம். அமெரிக்காவின் பெரிய நகரங்களில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வீதிகளில் ஊர்வலமாக வருகின்றனர். அவர்களின் கையில் சிவப்பு நிறக் கொடி ஒரு மனிதரின் உருவப்படத்தையும் சுமந்தபடி சோகமாக செல்கின்றனர். லண்டன் மாநகரில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். பிரான்சிலும், ஜெர்மனியிலும் கூடி இது போன்ற ஊர்வலங்கள் நடக்கின்றன. அந்த தொழிலாளர்கள் கண்ணீர் சிந்துகின்றனர். இந்தியாவிலும் சீனாவிலும் கூட சில இடங்களில் இந்தக் காட்சிகள் நடக்கின்றன. அந்த 1924-ஆம் ஆண்டு ஜனவரி 21-ம் நாள், உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்கள் கண்ணீர் சிந்திய நாள். அவர்கள் அனைவரின் கவனமும் சோவியத் ரசியாவை நோக்கி இருந்தது. சோவியத் ரசியா அன்றைய தினம் மயான அமைதியில் கழிந்தது. ஒவ்வொரு வீடும் இழவு வீடு போல காட்சியளித்தது. பெரியவர்களும், குழந்தைகளும் அழுது தீர்த்தனர். பெண்கள் ஒப்பாரி வைத்தனர். ஆண்கள் கனத்த இதயத்துடன் ஏக்கப் பெருமூச்சு விட்டனர். கடுமையான குளிர் வாட்டியது. வீதிகள் பனிப் பாளங்களால் மூடப்பட்டிருந்தன. சரியாக மாலை 4.00 மணி வானொலியில் ஒரு அறிவிப்பு வந்தது. “எழுந்து நில்லுங்கள் தோழர்களே! தோழர் லெனின் அடக்கம் செய்யப்படுகிறார்.” சோவியத் ரசிய மக்கள் அனைவரும் எழுந்து நின்றனர். அமெரிக்க ஐரோப்பிய தொழிலாளர்கள் எழுந்து நின்றனர். ஆசிய ஆப்பிரிக்க நாடுகளின் தொழிலாளர்கள் எழுந்து நின்றனர். ஐந்து நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. உலக மக்களால் நேசிக்கப்பட்ட மாபெரும் தலைவர் லெனினுடைய சவ அடக்கம் இப்படித்தான் நடைபெற்றது. உலகமே எழுந்து நின்று அவருக்கு இறுதி விடைகொடுத்து அனுப்பியது. லெனினுக்கு முன்னரும் சரி, அவருக்குப் பின்னரும் சரி, எந்தத் தலைவருக்கும் இந்த மரியாதை கிடைக்கவில்லை. எந்த நாட்டுத் தலைவராக இருந்தாலும் அவருடைய மரணம் அந்த நாட்டு மக்களை மட்டுமே பாதிக்கும். ஆனால் லெனினுடைய மரணம் உலகையே குலுக்கியது. Image may contain: text

முதலில் நீதிமன்றம் விடுதலை செய்யச் சொன்னால் விடுதலை செய்வதாக கூறினார்கள்.

முதலில் நீதிமன்றம் விடுதலை செய்யச் சொன்னால் விடுதலை செய்வதாக கூறினார்கள். பல ஆண்டுகள் தாமதத்தின் பின்னர் தமிழ்நாடு அரசு விடுதலை செய்யலாம் என நீதிமன்றம் கூறியது. தமிழ்நாடு அரசு விடுதலை செய்ய முன்வந்தபோது அதற்கு அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு தடுத்தது. மீண்டும் தமிழ்நாடு அரசு விடுதலை செய்யலாம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி தமிழ்நாடு விடுதலைசெய்யும் தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பியுள்ளது. ஆளுநரோ எந்த முடிவும் எடுக்காமல் வேண்டுமென்றே தாமதம் செய்கிறார். ஆளுநர் இவ்வாறு தாமதம் செய்வது நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை என்று பொருள் ஆகும். ஆளுநர் இவ்வாறு தாமதம் செய்வது தமிழ்நாடு அரசை மதிக்கவில்லை என்று பொருள் ஆகும். ஆளுநர் இவ்வாறு தாமதம் செய்வது தமிழ்நாட்டு மக்களை மதிக்கவில்லை என்று பொருள் ஆகும். ஒரு ஆளுநரே சட்டத்தை, நீதியை, நீதிமன்ற உத்தரவை, எல்லாவற்றுக்கும் மேலாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசை மதிக்கவில்லை என்றால் அப்புறம் சாதாரண மக்கள் மதிக்க வேண்டும் என்று இவர்கள் எப்படி கோர முடியும்? இந்தியா ஒரு ஜனநாயகநாடு. இங்கு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறார்கள். ஆனால் ஒரு ஆளுநர் தான் எல்லாவற்றுக்கும் மேலானவர் போல் நடந்து கொண்டால் அதன் அர்த்தம்தான் என்ன? இந்தியாவுக்குள் தமிழ்நாடு இருக்கும்வரை தமிழர்களுக்கு நியாயம் கிடைக்காது. தமிழ்நாடு தனிநாடானால் உரிய மதிப்பு தானாகவே கிடைக்கும். ஏழு தமிழர் விடுதலையை இனத்தின் விடுதலையாக முன்னெடுக்க வேண்டும். இனி அதுதான் ஒரே வழி. Image may contain: 8 people, including சுசிந்திரன் பன்னீர், people smiling, text

இந்திய உளவு (பாகம் - 6)

•இந்திய உளவு (பாகம் - 6) கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் இருந்து ஒரு ஒலிப்பதிவு எனக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அது சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு ஈழ அகதியை கியூ பிராஞ் அதிகாரி ஒருவர் மிரட்டும் ஒலிப்பதிவு ஆகும். குறித்த ஈழ அகதி இளைஞரை இலங்கை உளவுத்துறையினர் தம்மிடம் ஒப்படைக்குமாறு கோருவதாகவும் எனவே தாங்கள் அவரை பலவந்தமாக அனுப்பப்போவதாக அந்த கியூ பிராஞ் அதிகாரி கூறுகிறார். ஏற்கனவே இவ்வாறு பல அகதி இளைஞர்கள் இலங்கை அரசிடம் இரகசியமாக ஒப்படைக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் சிறப்புமுகாமில் இருக்கும் ஒருவரை ஒப்படைக்கப்போவதாக கூறுவது இதுவே முதல் முறையாகும். இந்தியாவில் இருக்கும் ஈழ அகதிகள் எவரையும் அவர்கள் விருப்பத்திற்கு மாறாக இலங்கைக்கு அனுப்பக்கூடாது என்று உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் இந்த உளவுத்துறையினர் சட்டத்தையோ அல்லது நீதிமன்ற உத்தரவுகளையோ ஒருபோதும் மதிப்பதும் இல்லை. பின்பற்றுவதும் இல்லை. 1991ல் நடந்த இவ்வாறான ஒரு சம்பவத்தை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 1991ல் ராஜீவ் கொலையை அடுத்து புலிகளிடம் பயிற்சி பெற்ற தமிழர் மீட்சிப்படையினர் என சுமார் 25 தமிழக இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது இரு இளைஞர்கள் தாங்கள் தேடப்படுவதை அறிந்து பாதுகாப்பிற்காக வன்னி சென்று புலிகளுடன் தங்க முடிவு செய்தனர். இவர்களை வன்னியில் இறக்கிவிடுவதாக கூறி தமது வள்ளத்தில் ஏற்றிச் சென்ற தமிழக மீனவர் மாறி நெடுந்தீவில் இறக்கி விட்டுள்ளார். நெடுந்தீவில் இருந்த ஈபிடிபி போராளிகளை புலிப் போராளிகள் என நினைத்த இந்த இரு இளைஞர்களும் தங்கள் உண்மை விபரத்தை கூறியிருக்கின்றனர். ஈபிடிபியினர் இவர்களை இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைத்திருக்கின்றனர். கடற்படையினர் இராணுவ உளவுத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இவர்கள் தமிழ்நாடு விடுதலைக்காக போராடுவதை அறிந்ததும் இலங்கை ராணுவ உளவுத்துறையினர் ஆச்சரியம் அடைந்துள்ளனர். அதுமட்டுமல்ல இவர்களுடைய தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்திற்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் பயிற்சிகளையும் தாங்கள் தருவதாக உறுதியளித்துள்ளனர். ஏனெனில் அப்போது இலங்கை ஜனாதிபதியாக பிரேமதாசா இருந்தார். அவர் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டிருந்தார். ஆனால் தாம் தேடப்படும் இரு இளைஞர்கள் இலங்கை உளவுப்படையிடம் இருப்பதை இந்திய உளவுப்படை எப்படியோ அறிந்துவிட்டது. உடனே ஒரு மிரட்டல் கோல் இந்திய உளவுப்படையிடம் இருந்து சென்றது. அடுத்த வினாடி இலங்கை உளவுப்படை மறுபேச்சின்றி இந்த இரு இளைஞர்களையும் ஒப்படைத்து விட்டது. இங்கு ஆச்சரியம் என்னவெனில் இலங்கை சென்று தனி விமானத்தில் பிடித்து வந்த இந்த இரு இளைஞர்களையும் திருச்சி பஸ் நிலையத்தில் தாம் கைது செய்ததாக இந்திய உளவுப்படை கூறியதுதான். ( தொடரும்) Image may contain: 1 person, close-up Image may contain: 1 person, smiling, close-up

இந்திய குடியரசு தின வாழ்த்து தெரிவிப்போர் ஒரு நிமிடம் இதனை சிந்தியுங்கள்!

•இந்திய குடியரசு தின வாழ்த்து தெரிவிப்போர் ஒரு நிமிடம் இதனை சிந்தியுங்கள்! இந்தியா ஒரு சுதந்திரமான நாடு என்கிறார்கள். இந்தியாவில் யாருக்கு சுதந்திரம் உள்ளது? •மணிப்பூரில் பெண்களை கற்பழித்து தங்களுக்கு ஆண்மை உள்ளதாக நிரூபிக்க இந்திய ராணுவத்திற்கு சுதந்திரம் உண்டு. •காஸ்மீரில் அப்பாவி முஸ்லிம் மக்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி கொல்வதற்கு சுதந்திரம் உண்டு. •சதீஸ்கரில் ஆதிவாசிகளை நக்சலைட்டு என்று முத்திரை குத்தி கொல்வதற்கு இந்திய பொலிசிற்கு சுதந்திரம் உண்டு •கோடிக்கணக்கான ஊழல் செய்வதற்கு சோனியாவுக்கு மட்டுமல்ல அனைத்து அரசியல்வாதிகளுக்கும் சுதந்திரம் உண்டு. •2ஜி யில் ஊழல் செய்ய கனிமொழிக்கு சுதந்திரம் உண்டு. ரபோல் விமானத்தில் ஊழல் செய்ய மோடிக்கு சுதந்திரம் உண்டு. •கூலிப்படையை ஏவி கொலை செய்ய சங்கராச்சாரிக்கு சுதந்திரம் உண்டு. அது மட்டுமல்ல நீதியை விலை கொடுத்து வாங்கவும் அவருக்கு சுதந்திரம் உண்டு. •பற்றரி வாங்கி கொடுத்த பேரறிவாளனுக்கு மரண தண்டனையும் கொலை செய்த சங்கராச்சாரிக்கு விடுதலையும் வழங்க இந்திய நீதித்துறைக்கு சுதந்திரம் உண்டு. •நடிகர் சஞ்சய்தத்திற்கு விடுதலை அளிக்கவும் ஏழு தமிழரை விடுதலை செய்யாமலும் இருக்க ஆளுநருக்கு சுதந்திரம் உண்டு. •இலங்கையில் 40 ஆயிரம் மக்களைக் கொல்ல இலங்கை அரசுக்கு உதவ இந்திய அரசுக்கு சுதந்திரம் உண்டு. அதுமட்டுமல்ல தமிழக மீனவனைக் கொல்ல இலங்கை கடற்படைக்கு பயிற்சி வழங்கவும் இந்திய அரசுக்கு சுதந்திரம் உண்டு. •விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டிருக்க பல்லாயிரம் கோடி ரூபாவை கடன் வாங்கிவிட்டு தப்பி ஓட முதலாளிகளுக்கு சுதந்திரம் உண்டு. இப்படி பல சுதந்திரம் இந்தியாவில் உண்டு. நீங்கள் எந்த சுதந்திரத்திற்கு வாழ்த்து தெரிவிக்கின்றீர்கள்? Image may contain: one or more people

•கோத்தபாயா தப்பித்துவிட முடியாது!

•கோத்தபாயா தப்பித்துவிட முடியாது! காணாமல் போனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு கண்டு விட்டார் புதிய ஜனாதிபதி கோத்தபாயா ராஜபக்ச அவர்கள்? ஆம். அவர்கள் யாவரும் இறந்துவிட்டார்கள் என்று சிம்பிளாக ஒரு அறிக்கை மூலம் தீர்க்க முயன்றுள்ளார். அவர்கள் அனைவரும் இறந்து விட்டார்கள் என்றால் எப்படி இறந்தார்கள் என்பதை தெரிவிக்க வேண்டிய கடமை ஜனாதிபதிக்கு உண்டு. ஏனெனில் இவர்கள் போரின் போது இறக்கவில்லை. போர் முடிந்த பின்பு ராணுவத்தின் கையில் ஒப்படைக்கப்பட்டவர்கள். இவர்கள் ராணுவத்தின் கையில் இருந்தபோது எடுக்கப்பட்ட படங்கள் இதற்கு சாட்சிகளாக இருக்கின்றன. எனவே இவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது பற்றி முழு விபரம் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு ராணுவத்திற்கும் அதன் அரசுக்கும் உண்டு. இறந்தவர்கள் ஒன்றோ இரண்டோ இல்லை. மொத்தமாக இருபதாயிரத்திற்கு மேல் என்கிறார்கள். எனவே இத்தனை பேரும் யாரோ சில ராணுவ வீரர்களால் கொல்லப்பட்டிருக்க முடியாது. நிச்சயமாக இது அரசின் உயர் பொறுப்பில் உள்ளவர்களால் உத்தரவிடப்பட்டு நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலையாகும். எனவே இந்த இனப்படுகொலை குறித்து முதலில் விசாரிக்கப்பட வேண்டியவர் அன்று ராணுவத்திற்கு பொறுப்பாhக இருந்த கோத்தபாயா ராஜபக்ச அவர்களே. விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய அந்த கோத்பாய ராஜபக்சவே இப்போது அனைவரும் இறந்து விட்டனர் என்று சர்வ சாதாரணமாக கூறுகிறார். இது குறித்து இந் நேரம் தமிழ் தலைவர்கள் பொங்கி எழுந்திருக்க வேண்டும் அல்லவா? ஆம். சம்பந்தர் ஐயா பொங்கி எழுந்தார். ஆனால் அவர் பொங்கி எழுந்தது இனப் படுகொலைக்காக அல்ல. மாறாக தனது சொகுசு பங்களாவுக்காக 60 ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டது அவருக்கு முக்கியமாக தெரியவில்லை. மாறாக தினமும் 60 படிகள் எறி இறங்குவதே அவருக்கு பெரும் கஸ்டம் தருகிறதாம். அதுமட்டுமல்ல அரசு தந்த பென்ஸ் சொகுசு வாகனத்தை வெறும் 2000 மைல்கள் மட்டுமே ஓடி அரசுக்கு பெற்றோல் செலவை மிச்சப்படுத்திக் கொடுத்திருக்கிறாராம். சரி சுமந்திரனாவது பொங்கி எழுவார் என்று பார்த்தால் அவரும் அமைதியாகவே இருக்கிறார். ஏனென்று பார்த்தால் அவருக்கு ஏற்கனவே நிதிக்குழுத் தலைவர் பதவி பார்சல் செய்யப்பட்டு விட்டதாம். இப்படி பதவிக்காகவும் சொகுசு பங்களாவுக்காகவும் வீழ்ந்து கிடப்பவர்களே தமிழ் மக்களின் தலைவர்களாக இருக்கிறார்கள். அதனால்தான் கோத்தபாயா ராஜபக்சவால் கொஞ்சம் கூட அச்சமின்றி தைரியமாக அனைவரும் இறந்தவிட்டனர் என்று கூற முடிகிறது. தலைவர்களை விலைக்கு வாங்கினாலும் தங்களை வாங்க முடியாது என்பதை தமிழ் மக்கள் விரைவில் கோத்பாயாவுக்கு உணர வைப்பார்கள். No photo description available.

•நாய்கள் நன்றி உள்ளவை.

•நாய்கள் நன்றி உள்ளவை. அவை எப்போதும் விசுவாசமாக வாலாட்டிக் கொண்டிருக்கும். கோத்தா - அண்ணே! இந்த விமல் மனுசி ரஞ்சனுடன் பேசிய ரெலிபோன் ஆடீயோ வந்து பிரச்சனையாக இருக்கு. இதை எப்படி சமாளிப்பது? மகிந்தா - இது ஒரு சின்னப் பிரச்சனை. விமலை மன்னார் போய் பலகையில் ஏன் தமிழ் முதலாவதாக எழுதியிருக்கு என்று பிரச்சனை பண்ணச்சொல்லு. எல்லார் கவனமும் அங்கு திரும்பிவிடும். அப்புறம் விமல் மனுசியின்ர பிரச்சனையை மறந்திடுவாங்கள். கோத்தா- அப்புறம் இந்த சம்பந்தர் எப்ப பார்த்தாலும் “சர்வதேசசம் கவனிக்கும்” என்று சொல்லுகிறார். உண்மையில் சர்வதேசம் ஏதும் கவனிக்குமோ என்று பயமாய் இருக்கு. மகிந்தா- ஹா ஹா ! அடேய் தம்பி, சர்வதேசம் கவனிக்கும் என்று சம்பந்தர் சொன்னால் அதன் அர்த்தம் தன்னைக் கவனிக்கும்படி கூறுகிறார். கோத்தா- புரியவில்லை. அவரை எப்படி கவனிப்பது? மகிந்தா- “சம்பந்தர் தனக்கு சொகுசு பங்களா வாங்கினார். ஆனால் தமிழ் மக்களுக்கு எதுவும் வாங்கவில்லை” என்று ஒரு அறிக்கையை விமலை விடச் சொல்லு. அப்புறம் பார் எல்லாம் தானாய் நடக்கும். கோத்தா - இப்படி அறிக்கை விட்டால் அவருக்கு கோபம் அல்லவா வரும்? அப்புறம் மனுசன் இந்தியன் எம்பசியில் போய் ஒப்பாரியல்லோ வைக்கும்? மகிந்தா- இல்லை. அவரால் சொகுசு பங்களா இல்லாமல் இருக்க முடியாது. எனவே பாராளுமன்றதில் வந்துதான் ஒப்பாரி வைப்பார். கோத்தா - பாராளுமன்றத்தில் ஒப்பாரி வைக்கும்போது என்ன செய்வது? மகிந்தா- சம்பந்தர் தொடர்ந்தும் சொகுசு பங்களா வசதிகளை அனுபவிக்கலாம் என்று அறிவித்துவிடு. கோத்தா - இதனால் எங்களுக்கு என்ன லாபம்? மகிந்தா - அவர் நன்றி மறக்காதவர். அவர் எப்போதும் எமக்கு விசுவாசமாக இருப்பார். கோத்தா- ஆனால் இம்முறை ஜ.நா வில் நாம் தப்ப முடியாது என்று சுமந்திரன் கூறுகின்றாரே? மகிந்தா - ஆம். அப்படியென்றால் தன்னையும் கவனியுங்கள் என்று அர்த்தம். கோத்தா - அவரை எப்படி கவனிப்பது? மகிந்தா - அவருடைய அதிரடிப்படை பாதுகாப்பை நீக்க மாட்டோம் என்று கூறு. அதுவும் போதவில்லை என்றால் போனஸாக நிதிக்குழு தலைவர் பதவியையும் கொடு. அப்பறம் பேசாமல் இருப்பார். கோத்தா - இந்தளவு சீப்(மலிவு)பானவர்களா இவர்கள்? மகிந்தா - சுறாமீன்களை வளர்த்த உனக்கு நாய்களை எப்படி வளைப்பது என்று தெரியவில்லை. நாய்களுக்கு இறைச்சித் துண்டுகளை வீசி எறிந்தால் அவை காலம் பூராவும் விசுவாசமாக வாலாட்டிக் கொண்டிருக்கும். குறிப்பு - சம்பந்தர் ஐயாவையும் சுமந்திரனையும் நாய்களுடன் ஒப்பிட்டு நாய்களை நான் கேவலப்படுத்திவிட்டதாக தயவு செய்து யாரும் என்மீது வருத்தம் கொள்ள வேண்டாம். Image may contain: 2 people, including ஃபாரூக் முகமது, people smiling, people sitting and indoor

வரலாறு மாறுகிறதா?

வரலாறு மாறுகிறதா? இந்தியாவில் எந்த மாநிலத்திலும் போய் இருந்துகொண்டு அந்த மாநிலத்திற்கு எதிராக பேசிவிட முடியாது. பேசினால் உடனே உதைத்து அனுப்பி விடுவார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் யார் வேண்டுமானாலும் வந்து உட்கார்ந்துகொண்டு தமிழ் இனத்திற்கு எதிராக தாராளமாக பேசலாம். கைபர் கணவாய் ஊடாக வந்து உட்காந்த கூட்டத்தைச் சேர்ந்த துக்ளக் சோ பேசிக் கொண்டிருந்தார். இப்போது துக்ளக் குருமூhத்தி தமிழ் இனத்திற்கு எதிராக பேசுகிறார். ஆனால் தமிழ் இனம் இதற்கு எதிராக மூச்சுகூட விட முடியாது. தலை குனிந்து கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இதுதான் வழக்கம். இதுதான் வரலாறு என்கிறார்கள். எட்டுக்கோடி தமிழரும் வழக்கம்போல் தலை குனிந்து இருக்கும்போது எட்டுப் பேர் மட்டும் எப்படி அப்படி இருக்க முடியாது என்கிறார்கள்? இவர்கள் ஏன் அடிமையாக வீழ்ந்து கிடக்க மறுக்கிறார்கள்? அல்லது இவர்கள் ஏன் வரலாற்றை மாற்ற முயல்கிறார்கள்? ஒருவேளை இந்த எட்டுப் பேரும் சோற்றில உப்பு போட்டுச் சாப்பிடுகிறார்களா? அதனால்தான் அவர்களுக்கு உணர்வு வந்து விட்டதா? சரி. ஒரு எட்டுப் பேருக்காவது கொஞ்சமாவது உணர்ச்சி வந்துள்ளதே என்றுதானே ஒரு தலைவர் மகிழ்ச்சி அடைய வேண்டும். ஆனால் “அத்து மீறு , அடங்க மறு, திருப்பி அடி “ என்று வரிக்குவரி கூறும் ஒரு தலைவர் அல்லவா முதன் முதலாக இவர்களை கண்டித்துள்ளார். என்னே கொடுமை இது? Image may contain: 6 people, including சீலன் பிரபாகரன், people sitting 58You, தமிழரசன் சீனிவாசன், Thiru Jegatheesan and 55 others 10 comments

•முத்துக்குமாரா எங்களை மன்னித்துவிடு!

•முத்துக்குமாரா எங்களை மன்னித்துவிடு! “முத்துக்குமாருக்கு வீர வணக்கம்.உன் மூச்சுக்காற்று சோனியாவை எரிக்கும்” என்று நாங்கள் பாட்டு பாடியது உண்மைதான். ஆனால் மதவாத மோடியை ஒழிக்க வேண்டும் என்று கூறிக்கொண்டு அன்னை சோனியாவே வருக என்று இப்போது பாட ஆரம்பித்து விட்டோம். என் பிணம்கூட காங்கிரசுடன் கூட்டணி வைக்காது என்று கூறியவர் இப்போது ராகுல் காந்தியின் தலைமையில் தேசம் காக்க மாநாடு நடத்துகிறார். காங்கிரசையும் திமுகவையும் எதிர்த்து நீ உன் உயிரை விட்டாய். உன் உடலை தூக்கி சுமந்தவர்கள் இப்போது அதே காங்கிரசையும் திமுக வையும் தூக்கி சுமக்க ஆரம்பித்து விட்டார்கள். சோனியாவின் கோர முகத்தை அம்பலப்படுத்த நீ உன் முகத்தை தீயினில் எரித்தாய். ஆனால் ஈழத் தலைவர் ஒருவர் அன்னை சோனியாவின் முகத்தில் இரக்கத்தைக் கண்டேன் என்று லண்டனில் அறிக்கை விடுகிறார். மன்னித்தவிடு முத்தக்குமாரா, உன்னை நினைவு கூரக்கூட எமக்கு நேரம் இல்லை. ரஜனியின் தர்பாரா அல்லது விஜய் பிகிலா வசூல் அதிகம் என்பதே எமக்கு இப்போ முக்கிய பிரச்சனை. குறிப்பு - 29.01.2020 யன்று முத்துக்குமாரின் நினைவு தினம் ஆகும். Image may contain: 1 person 166You, Nad Raj, Thiru Jegatheesan and 163 others

•என்னது?

•என்னது? சம்பந்தர் ஐயாவுக்கு கொரோனா வைரஸா? இந்த படத்தைப் பார்த்தவுடன் சம்பந்தர் ஐயாவுக்கு கொரோனா வைரஸ் தாக்கிவிட்டது என்று யாரும் மகிழ்ச்சி அடைய வேண்டாம். அவர் எமன் மறந்த கிழவர். அவரை எந்த வைரசும் நெருங்க முடியாது. அவர் அடுத்த தேர்தலிலும் போட்டியிடுவார். வழக்கம்போல் ஒரு வருடத்திற்கள் தீர்வு வரும் என வாக்குறுதி தருவார். அப்படியென்றால் இந்த படமும் பதிவும் எதற்கு என நீங்கள் யோசிப்பது புரிகிறது. இது கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்ப எப்படி மாஸ்க் அணிய வேண்டும் என்பதை விளக்கும் படம் என்கிறார்கள். குறிப்பு - படம் அனுப்பி பதிவு போடச் சொன்ன நண்பருக்கு நன்றிகள். Image may contain: 1 person, sitting and text

கேடி ராகவன் சார்!

கேடி ராகவன் சார்! என் இயக்க பெயர் தேவன். கோவிலில் தமிழில் கும்பாபிசேகம் நடத்த வேண்டும் என்று நான் கோரலாமா சார் ? குறிப்பு - போராட்ட காலங்களில் வைத்திருக்கும் பெயர்கூட சங்கிகளுக்கு உறுத்தல் தருகிறது. வாழ்க போராட்டம் ! Image may contain: 1 person, text