Thursday, January 30, 2020

இந்திய குடியரசு தின வாழ்த்து தெரிவிப்போர் ஒரு நிமிடம் இதனை சிந்தியுங்கள்!

•இந்திய குடியரசு தின வாழ்த்து தெரிவிப்போர் ஒரு நிமிடம் இதனை சிந்தியுங்கள்! இந்தியா ஒரு சுதந்திரமான நாடு என்கிறார்கள். இந்தியாவில் யாருக்கு சுதந்திரம் உள்ளது? •மணிப்பூரில் பெண்களை கற்பழித்து தங்களுக்கு ஆண்மை உள்ளதாக நிரூபிக்க இந்திய ராணுவத்திற்கு சுதந்திரம் உண்டு. •காஸ்மீரில் அப்பாவி முஸ்லிம் மக்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி கொல்வதற்கு சுதந்திரம் உண்டு. •சதீஸ்கரில் ஆதிவாசிகளை நக்சலைட்டு என்று முத்திரை குத்தி கொல்வதற்கு இந்திய பொலிசிற்கு சுதந்திரம் உண்டு •கோடிக்கணக்கான ஊழல் செய்வதற்கு சோனியாவுக்கு மட்டுமல்ல அனைத்து அரசியல்வாதிகளுக்கும் சுதந்திரம் உண்டு. •2ஜி யில் ஊழல் செய்ய கனிமொழிக்கு சுதந்திரம் உண்டு. ரபோல் விமானத்தில் ஊழல் செய்ய மோடிக்கு சுதந்திரம் உண்டு. •கூலிப்படையை ஏவி கொலை செய்ய சங்கராச்சாரிக்கு சுதந்திரம் உண்டு. அது மட்டுமல்ல நீதியை விலை கொடுத்து வாங்கவும் அவருக்கு சுதந்திரம் உண்டு. •பற்றரி வாங்கி கொடுத்த பேரறிவாளனுக்கு மரண தண்டனையும் கொலை செய்த சங்கராச்சாரிக்கு விடுதலையும் வழங்க இந்திய நீதித்துறைக்கு சுதந்திரம் உண்டு. •நடிகர் சஞ்சய்தத்திற்கு விடுதலை அளிக்கவும் ஏழு தமிழரை விடுதலை செய்யாமலும் இருக்க ஆளுநருக்கு சுதந்திரம் உண்டு. •இலங்கையில் 40 ஆயிரம் மக்களைக் கொல்ல இலங்கை அரசுக்கு உதவ இந்திய அரசுக்கு சுதந்திரம் உண்டு. அதுமட்டுமல்ல தமிழக மீனவனைக் கொல்ல இலங்கை கடற்படைக்கு பயிற்சி வழங்கவும் இந்திய அரசுக்கு சுதந்திரம் உண்டு. •விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டிருக்க பல்லாயிரம் கோடி ரூபாவை கடன் வாங்கிவிட்டு தப்பி ஓட முதலாளிகளுக்கு சுதந்திரம் உண்டு. இப்படி பல சுதந்திரம் இந்தியாவில் உண்டு. நீங்கள் எந்த சுதந்திரத்திற்கு வாழ்த்து தெரிவிக்கின்றீர்கள்? Image may contain: one or more people

No comments:

Post a Comment