Thursday, January 30, 2020

லண்டனில் இருக்கும் ஈரோஸ் அமைப்பைச் சேர்ந்த ரவி

லண்டனில் இருக்கும் ஈரோஸ் அமைப்பைச் சேர்ந்த ரவி என்பவர் எனது நண்பரிடம் தான் என்னை சந்தித்தாக கூறியிருக்கிறார். அதை எனது நண்பர் என்னிடம் கேட்டபோது எனக்கு குழப்பம். ஏனெனில் நான் ரவி அவர்களை சந்திக்கவில்லை. அடுத்து கோயம்புத்தூரில் இருக்கும் எனது முகநூல் நண்பர் ஒருவர் “தோழர்! எங்க ஊர்வரை வந்து சென்றுள்ளீர்கள் என அறிந்தேன். ஒரு வார்த்தை எனக்கு கூறியிருந்தால் உங்களை சந்தித்திருப்பேன் அல்லவா? உங்களை நேரில் பார்க்க எவ்வளவு ஆவலாக இருக்கிறேன் தெரியுமா?” என்று வருத்தத்துடன் கேட்டார். அதையடுத்து இளந்தமிழகம் அமைப்பில் உள்ள மதுரைச் சேர்ந்த ஒருவர் தற்போது இங்கிலாந்தில் லூட்டன் என்னும் இடத்தில் இருக்கிறார். அவர் என்னை நேரில் பார்க்க விரும்பி ஈஸ்ட்காம்பில் நடந்த ஒரு கூட்டத்திற்கு வந்திருக்கிறார். அங்கு தோழர் பாலன் என்று ஒருவரைக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் அது நான் இல்லை. ஏனெனில் அன்று நான் அக் கூட்டத்திற்கு போகவில்லை. அண்மையில் லண்டனில் இருக்கும் நண்பர் ஒருவர் என்னுடன் தொடர்பு கொண்டு “நந்திக்கடல் பேசுகிறது நூலை வெளியிடுகிறீர்கள் என்று அறிந்தேன். எனக்கு ஒரு பிரதி தர முடியுமா?” என்று கேட்டார். எனக்கு குழப்பம். ஏனெனில் அந்த நூலை நான் வெளியிடவில்லை. சுவிற்சலாந்தில் இருக்கும் ஊடகவியலாளர் துரைரத்தினம் அவர்கள் மலையக தமிழரை இழிவுபடுத்தும் ஒரு சொல்லை பயன்படுத்தியமைக்கு எனது கண்டனத்தை தெரிவித்து பதிவு போட்டிருந்தேன். உடனே என்னை தொடர்பு கொண்ட துரைரத்தினம் அவர்கள் “ நீ புளட் இயக்கத்தில் இருந்தது எனக்கு தெரியும். உன்னைப்பற்றி; நான் எழுதினால் நீ தாங்கமாட்டாய்” என்று கூறினார். எனக்கு குழப்பம். ஏனெனில் நான் ஒருபோதும் புளட் இயக்கத்தில் இருக்கவில்லை நான் இந்தியா சென்றிருப்பதாகவும் தனக்கு நன்கு தெரியும் என்றும் பிரிஎவ் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் முகநூலில் எழுதியிருந்தார். அதற்கு எனது நண்பர் ஒருவர் “இது தவறான செய்தி. அவரால் இந்தியா செல்ல முடியாது” என்று தெரிவித்திருந்தார். ஆனாலும் அதை அந்த பிரிஎவ் நபர் ஏற்றுக்கொள்ளவில்லை. இவ்வாறான குழப்பங்களுக்கு காரணம் தோழர் பாலன் என்று இன்னொருவர் அதுவும் லண்டனில் இருக்கிறார் என்பதை இவர்கள் அறியாமல் இருப்பதே. அவரும் ஈழத் தமிழர். அவரும் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவரும் லண்டனில் தற்போது இருக்கிறார். அவரும் மார்க்சிச லெனிச மாவோயிச சிந்தனைகளை ஏற்றுக்கொண்டிருப்பதால் தோழர் பாலன் என அழைக்கப்படுகிறார். ஆனால் அவர் புளட் இயக்கத்தில் செயற்பட்டவர். தற்போது புதியதிசைகள் என்னும் அமைப்பை உருவாக்கி செயற்பட்டுக்கொண்டிருக்கிறார். இனி இவ்வாறான குழப்பங்கள் எற்படுவதை தவிர்க்கும்பொருட்டே இப் பதிவை செய்கிறேன். அவருடைய படத்தையும் இங்கு தந்திருக்கிறேன். எனவே தயவு செய்து இனி யாரும் எழுதும்போது எந்த பாலன் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு எழுதுங்கள். Image may contain: Balan Chandran, sitting

No comments:

Post a Comment