Friday, July 31, 2020

வேலிக்கு ஓணான் சாட்சி!

வேலிக்கு ஓணான் சாட்சி! 5 கோடி ரூபா கூட சேரவில்லை. அப்புறம் எப்படி 20 கோடி ரூபா அனுப்பியிருக்க முடியும் என கனடா கிளைத் தலைவர் தங்கவேல் கேட்டிருக்கிறார். நல்ல கேள்வி. ஆனால் சுமந்திரனை காப்பாற்றுவதாக நினைத்து அவர் கூறியது சுமந்திரனுக்கு இன்னும் சிக்கல் வழங்குவதாகவே இருக்கிறது. ஏனெனில் சுமந்திரன் தான் ஒரு சதம்கூட பெறவில்லை என்று தொடர்ந்து மறுத்துக் கொண்டிருக்கும் நிலையில் 5 கோடி ரூபா கொடுத்திருப்பதாக கூறுவது அவருக்கு உதவுவதாக இல்லை. சரி பரவாயில்லை, 5 கோடி ரூபா வாங்கிவிட்டு எப்படி ஒரு சதம்கூட வாங்கவில்லை என்று உங்களால் பொய் கூறமுடிகிறது என்று சுமந்திரனிடம் நாம் கேட்கப் போவதில்லை. ஏனெனில் அவர் பொய் சொல்கிறார் என்று தெரிந்த பின்னும் ஏன் பொய் கூறினீர்கள் என்று கேட்பது முட்டாள்தனம். ஏனெனில் அதற்கும் அவர் பொய்தான் கூறுவார். அதேவேளை தங்கவேல் அவர்கள் கூறுவதையும் உண்மை என்று அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் அவர் தனது கிளைக் கணக்கு வழக்குகளை இதுவரை பொது வெளியில் தந்தது இல்லை. அடிக்கடி இந்தியா சென்று வரும் இவர் தனது அந்தகால விருப்பமான நடிகைக்கு அன்பளிப்புகளை வழங்கி வருவதாகவும் அதற்கெல்லாம் இவருக்கு பணம் ஏது என்று சிலர் கேட்கின்றனர். ஆனால் இது அவரது தனிப்பட்ட விடயம் மட்டுமல்ல ஆதாரமற்ற அவதூறும் ஆகும். எனவே நாம் இதில் அக்கறை காட்ட வேண்டியதில்லை. ஆனால் அவர் உண்மையில் சுமந்திரனை மட்டுமல்ல தன்னையும் காப்பாற்ற விரும்பினால் இதுவரை கனடா கிளை சேர்த்த பணம் எவ்வளவு, கட்சிக்கு கொடுக்கப்பட்டது எவ்வளவு என்ற கணக்கு விபரங்களை இனியாவது மக்கள் முன் வைக்க வேண்டும். இப்படி அவர் மக்கள் முன் கணக்கு வழக்குகளை வைத்தால் அது லண்டன் கிளைக்கும் ஒரு முன் மாதிரியாகவும் அவர்களும் கணக்கு காட்ட வேண்டிய நிலையை உருவாக்கும். குறிப்பு - தங்கவேல் அவர்களின் அறிக்கை கீழே பின்னூட்டத்தில் தரப்பட்டுள்ளது. Image may contain: 1 person, close-up

கடவுளை நம்பாமல் முகத்திற்கு மாஸ்க் அணிபவர்கள் நாத்திகவாதிகளா?

கடவுளை நம்பாமல் முகத்திற்கு மாஸ்க் அணிபவர்கள் நாத்திகவாதிகளா? கடவுளை நம்பும் ஆத்மீகவாதிகளும் மாஸ்க் அணிவதன் மூலம் நடைமுறையில் நாத்திகவாதிகளாகவே இருக்கின்றனர். என்னதான் கடவுள் விதித்த விதிப்படியே யாவும் நடப்பதாக நம்புவர்கள்கூட வீதியைக் கடக்கும்போது சிக்னல் லைற்றையே நம்பிக் கடக்கிறார்கள். இந்த உண்மையைச் சொன்னால் உடனே ஓடிவந்து நீங்கள் ஏன் மாஸ்க் அணிந்த கிருத்தவ பாதிரியார் படம் போடவில்லை,? அல்லது ஏன் ஒரு முஸ்லிம் படம் போடவில்லை என்று கேட்பார்கள். இப்படியானவர்களுக்கு கொஞ்சமாவது சிந்திக்கும் திறன் கொண்ட மூளையைக் கொடுப்பதற்காவது ஒரு கடவுள் இருந்தால் நல்லது என்றே தோன்றுகிறது. Image may contain: one or more people and people standing

லண்டனில் மீண்டும் ஒரு குழந்தை கொலை!

லண்டனில் மீண்டும் ஒரு குழந்தை கொலை! லண்டனில் ஈழத்து தமிழ் தாய் ஒருவர் தன் குழந்தையை குத்திவிட்டு தன்னையும் குத்தியுள்ளார். இதில் குழந்தை இறந்துவிட்டதாக அறிய வருகிறது. இரு மாதங்களுக்கு முன்னர் இதேபோன்று தமிழ் தந்தை ஒருவர் தன் இரு குழந்தைகளையும் குத்திக் கொன்றார். மன அழுத்தம் காரணமாக பெற்றோர் இவ்வாறு குழந்தைகளைக் கொல்வதாக சிலர் கூறுகின்றனர். என்னதான் மன அழுத்தம் இருந்தாலும் ஒரு பெத்த தாயால் தன் குழந்தைகளைக் கொல்ல முடியுமா? ஆம் எனின் அதைவிடக் கொடுமை ஏது? குறிப்பு - மன அழுத்தம் உள்ளவர்களுக்கு சிகிச்சை கிடைக்க உறவினர்கள் அல்லது நண்பர்கள் வழி செய்ய வேண்டும். Image may contain: 1 person, hat and close-up

என்னடா நியாயம் இது?

•என்னடா நியாயம் இது? 20 கோடி ரூபா எங்கே என்று கேட்டவுடன் கேட்ட பெண்ணை மகிந்தவின் ஊடுருவல் என்றார் சுமந்திரன். இப்போது ஜபிசி ஊடகம் தனக்கு எதிராக எழுதுகிறது என்றவுடன் மகிந்தவிடம் பணம் பெற்று எழுதுவதாக சுமந்திரன் கூறுகிறார். சுமந்திரன் இவ்வாறு தன்னை எதிர்ப்பவர்கள் மீது மகிந்த முத்திரை குத்துவது ஆச்சரியம் இல்லை. ஆனால் எமது அச்சம் என்னவென்றால் தேர்தலில் தோற்றால் தமிழ் மக்கள் எல்லோரும் மகிந்தவின் ஆட்கள் என்று கூறிவிடப் போகிறாரே. ஓ! கோரோனேவே சுமந்திரனைக் கொன்றுவிடு. அல்லது எம்மையாவது கொன்றுவிடு. Image may contain: 1 person, sitting

அடிப்பதுதான் வன்முறை திருப்பி அடிப்பது வன்முறை அல்ல. தற்காப்பு.

•அடிப்பதுதான் வன்முறை திருப்பி அடிப்பது வன்முறை அல்ல. தற்காப்பு. தமிழ் போராளிகள் ஆயுதம் ஏந்திப் போராடியது வன்முறை என்றும் அதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சுமந்திரன் அடிக்கடி சொல்லிக் கொண்டு திரிகிறார். தயவு செய்து யாராவது அவரிடம் கூறுங்கள், அடிப்பதுதான் வன்முறை. திருப்பி அடிப்பது வன்முறை அல்ல. அது தற்காப்பு என்று. அதனால்தான் டெலோ தலைவர் தஙகத்துரை அவர்கள் நீதிமன்றத்தில் “நாம் வன்முறை மீது காதல் கொண்ட மனநோயாளிகள் அல்லர்” என்று கூறினார். அதுமட்டுமல்ல, ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்காவே “ பிரபாகரன்கள் ஆயுதம் ஏந்த இலங்கை அரசு செய்த தவறுகளே காரணம்” என்று கூறினார். ஆனால், முஸ்லிம்கள் தம்மை தற்காத்துக்கொள்ள ஆயுதம் ஏந்தியது நியாயம் என்று கூறும் சுமந்திரன் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தியது வன்முறை என்றும் அதனை தன்னால் எற்றுக்கொள்ள முடியாது என்கிறார். அதுமட்டுமல்ல இப்போது ஆயுதம் ஏந்துவதாக இருந்தால் வாள் வெட்டுக் கோஸ்டியுடன்தான் சேரவேண்டும் என்று கிண்டல் செய்கிறார். ஆயுதம் ஏந்தியவர்களால் உருவாக்கப்பட்ட கட்சியில் இருந்துகொண்டு அதன் மூலம் பதவியும் பெற்றுக்கொண்டு நன்றி மறந்து ஆயுதப் போராட்டத்தை நக்கல் அடிக்க சுமந்திரன் ஒருவரால்தான் முடியும். 1983 கலவரத்தில் தானும் கப்பலில் அகதியாக வந்து யாழ்ப்பாணம் இறங்கியவன் என்கிறார். அப்படியென்றால் 5 வயது முதல் கொழும்பில் வாழ்ந்தது தனது பாக்கியம் என்று எப்படி இவரால் கூற முடிகிறது? லூசுப் பயல்! Image may contain: 4 people, including Anthonippillai Reginoldraj, ஆதித்தன் ஆதி and Sivasubramaniam-jothilingam Jothilingam, shorts, text that says "தூக்குடா மாப்ள லூசு ஆயிட்டான் இவனை விட்டா டா நமக் நமக்கு தான் ஆப்பு"

மலராமலே கருகிய மொட்டு!

மலராமலே கருகிய மொட்டு! அடுத்த சந்ததி இனப்படுகொலைக்கான நீதியை பெறாமல் ஓயாது என்பதற்கு சாட்சியாய் இருந்த மொட்டு ஒன்று மலராமலே கருகிவிட்டது. என்ன சொல்லி ஆறுதல் கொள்வது என்று தெரியவில்லை. மனம் விம்முகிறது. சென்று வா மகளே! குறிப்பு -கடந்த வருட முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி நிகழ்வில் கொடியைப்பிடித்துக்கொண்டு ஆக்ரோசமாக கத்துபவள்தான் நேற்றய சம்பவத்தில் இறந்த பிள்ளை. Image may contain: 2 people, people standing, people walking, shoes and outdoor

இன்னுமா உலகம் இவரை நம்புது?

இன்னுமா உலகம் இவரை நம்புது? தன் கையால் தனக்கு குடை பிடிக்க முடியவில்லை மற்றவர் உதவியின்றி தன்னால் நடக்கவும் முடியவில்லை வேட்டியுடன் மூத்திரம் போவதும்கூட தெரியவில்லை இத்தனைக்கு பிறகும் பதவியையும் துறக்க மனம் வரவில்லை பதவி பறிபோன பின்பும்கூட பங்களாவையும் விடவில்லை. பாராளுமன்றத்திலும் பலமணி நேரம் தூங்கியே தொலைப்பவர் தீபாவளிக்கு மட்டும் எழுந்து நின்று அறிக்கை விட்டு தொலைப்பார். புலிகள் ஆயுதம் தூக்கியதால் “பயங்கரவாதிகள்” என்றவர் தேர்தல் வருகிறது என்றவுடன் தமிழர் மீண்டும் ஆயுதம் தூக்க வேண்டி வரும் என்கிறார் இப்போது வந்து தனக்கு 20 எம்.பி தாருங்கள் என்கிறார். இத்தனை நாளும் 18 எம்பி வைத்து எதுவும் பிடுங்கவில்லை இனி 20 எம்.பி யை வைத்து எந்த என்ன பிடுங்கப் போகிறார்? கடந்த தேர்தலில் ஒரு வருடத்தில் தீர்வு என்றார் பின்னர் அடுத்த தீபாவளிக்கு தீர்வு என்றார் கடந்த வருடம் இந்தியா மூலம் தீர்வு என்றார் இப்ப சர்வதேச மேற்பார்வையில் தீர்வு என்கிறார். அவருக்கென்ன ? அவர் லூசு ஐயாதானே! எப்படி வேண்டுமானாலும் பேசி பொழுதைக் கழிப்பார். ஆனால் அவர் என்ன கூறினாலும் அதை “சாணக்கியம்” என்று பேஸ்புக்கில் எழுதி மகிழும் “செம்பு”க்கூட்டம் ஒருபுறம் அவரை “வாழும் வீரர்” என்று பட்டம் கொடுத்து மகிழும் கூட்டம் மறுபுறம் இத்தனைக்கும் நடுவே இந்த கிழம் எப்போது செத்து தொலைக்கும் என்று தலையில் கைவைத்து காத்திருக்கும் தமிழ் மக்கள் ஆனால், இவர் ஈழத்து கருணாநிதி. அதாவது எமனும் மறந்த கிழம். கொரோனோவுக்கே டாட்டா காட்டிய வாழும் அற்புதம் Image may contain: 2 people, people standing

பற்றி எரியும் சுமந்திரன் எதிர்ப்பு!

பற்றி எரியும் சுமந்திரன் எதிர்ப்பு! கடந்த மாதம் தமிழ்நாட்டில் சுமந்திரன் உருவப் பொம்மை இயக்குனர் களஞ்சியம் போன்றவர்களால் எரிக்கப்பட்டது. இப்போது சுமந்திரனின் சொந்த ஊரில் அவரது வீட்டுக்கு அருகிலேயே அவரது உருவப் பொம்மை எரிக்கப்பட்டிருக்கிறது. உருவப் பொம்மை எரிப்பு, செருப்பு வீச்சு என பல ஜனநாயக வடிவங்களில் தேவையான அளவு எதிர்ப்பை மக்கள் சுமந்திரனுக்கு காட்டி வருகின்றனர். ஆனாலும் சிங்கள பொலிஸ் பாதுகாப்பில் உலா வரும் சுமந்திரன் தன் தவறுகளை உணரவும் இல்லை. தன் துரோகத்தை கைவிடவும் இல்லை. மக்கள் செருப்பு வீசிய போதே அது செருப்பு அல்ல நெருப்பு என்று அவர் உணர்ந்திருந்தால் இன்று உருவப் பொம்மை எரிப்பு நேர்ந்திருக்காது. நாம் அறிந்தவரையில் ஈழத் தமிழர் வரலாற்றில் சுமந்திரன் அளவுக்கு வேறு எந்த தலைவரும் இத்தனை எதிர்ப்பை சந்திக்கவில்லை. Image may contain: one or more people, people standing, people walking and outdoor, text that says "தமிழ்வின்"

தோழர் சண் அவர்களின் 100வது பிறந்ததினம்!

•தோழர் சண் அவர்களின் 100வது பிறந்ததினம்! இன்று தோழர் சண்முகதாசன் அவர்களின் 100 பிறந்த தினம் ஆகும் (03.07.1920 – 03.07.2020) தோழர் சண் அவர்கள் தமிழ் ஆங்கிலம் சிங்களம் ஆகிய மும்மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார். இலங்கையில் தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்கள மூவின மக்களின் மதிப்பை பெற்றிருந்த தமிழ் தலைவர் அவர் அதுமட்டுமல்ல சர்வதேசத்திலும் மதிப்பு பெற்றிருந்த இலங்கைத் தமிழ்த் தலைவர் அவர். மாசேதுங் சிந்தனைகளை இலங்கையில் அறிமுகப்படுத்தியதுடன் இறுதிவரை கொள்கை மாறாது செயற்பட்ட புரட்சியாளர் அவர். இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராடியதற்குரிய அரசியலை வழங்கியவர் அவரே. அதனாலேயே அனைத்து ஆயுத பிரிவு போராளிகளின் தலைமைகளும் அவர் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தனர். அவர் தமிழீழ கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனாலும் தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்தை அவர் பகிரங்கமாக ஆதரித்தார். ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்களை ஜே.ஆர் ஜெயவர்தனா “பயங்கரவாதிகள்” என்றார். அமிர்தலிங்கம் “பொடியன்கள்”என்றார். ஆனால் சண்முகதாசன் மட்டுமே முதன் முதலாக அவர்களை “போராளிகள்”என்று அழைத்தார். அதுவும் சிறிமாவோ பண்டாரநாயக்கா, அமிர்தலிங்கம், என்எம் பெரோரா, கொல்வின் ஆர்டி சில்வா போன்ற தலைவர்கள் இருந்த மேடையில் இவ்வாறு கூறினார். அதனால்தான் தமிழ் போராளிகளின் தலைவர்களும் அவர் மீது மதிப்பு கொண்டதுடன் அவரை அடிக்கடி சந்தித்து ஆலோசனைகள் பெற்று வந்தார்கள். இறுதியாக அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தபோது அவரது மகள் அவரை இங்கிலாந்துக்கு அழைத்துச் சென்று தன்னுடன் வைத்திருந்தார். இங்கிலாந்திலும் அவர் சும்மா இருக்கவில்லை. பல சர்வதேச புரட்கர சக்திகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி சர்வதேச அகிலம் ஒன்றை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். எனினும் இங்கிலாந்தில் அவர் ஓரிரு வருடங்களே உயிர் வாழ்ந்தார். இறுதியாக 08.02.1993 யன்று தனது 73வது வயதில் அவர் உயிர் பிரிந்தது. அவருடன் அவருடைய இறுதிக்காலங்களில் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தமை எனக்கு மதிப்பு மிக்க அனுபவத்தை தந்தது. அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர் எழுதிய “ ஒரு கம்யுனிச போராளியின் அரசியல் நினைவுகள்” என்னும் தமிழ் நூல் பதிப்பை நானே முதலில் வெளியிட்டிருந்தேன். அவரை நினைவு கூர்வது என்பது அவர் காட்டிய பாதையில் சென்று அவர் விரும்பிய புரட்சியை மேற்கொள்வதே ஆகும். குறிப்பு- தோழர் சண் பற்றி அறிய விரும்புவோர் கீழ்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை பார்க்கவும். https://www.youtube.com/watch?v=hJSV6g_qf4k&t=2s Image may contain: 1 person, sitting

சுமந்திரனுக்கு எதிராக ஒரு மூத்த போராளியின் அறைகூவல்!

•சுமந்திரனுக்கு எதிராக ஒரு மூத்த போராளியின் அறைகூவல்! சுமந்திரனுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று மூத்த போராளியும் ஒரு மாவீரரின் தந்தையுமான முத்துக்குமார் மனோகர் (காக்கா) வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏற்கனவே 20 கோடி ரூபா எங்கே என்று கேட்ட பெண்ணை மகிந்தவின் ஊடுருவல் என்றுகூறி கட்சியை விட்டு நீக்கிவிட்டார் சுமந்திரன். அடுத்து சுமந்திரன் பற்றி எழதியவுடன் ஜபிசி ஊடகத்தை மகிந்தவிடம் பணம் பெற்று தனக்கு எதிராக எழுதுவதாக சுமந்திரன் கூறினார். இப்போது காக்கா அண்ணையையும் மகிந்தவின் ஊடுருவல் என்று பழி சுமத்தப்போகிறாரா அல்லது போராளி என்றால் ஏன் முள்ளிவாய்க்காலில் சயனைட் கடிக்கவில்லை என்று கேட்கப் போகிறாரோ தெரியவில்லை. அல்லது ஏற்கனவே தன்னை கொல்ல முயன்றதாக 15 இளைஞர்களை சிறையில் அடைத்து வைத்திருப்பதுபோல் இவரையும் சிறையில் அடைக்கப் போகிறரா தெரியவில்லை. ஆனாலும் எற்கனவே பல இழப்புகளை சந்தித்த காக்கா அண்ணை எதற்கும் அஞசாது துணிந்து சுமந்திரனுக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார். உண்மையில் அவரது இந்த அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. மற்றவர்களும் இதேபோல் வந்து சுமந்திரனுக்கு எதிராக குரல் கொடுக்க வழி சமைக்கிறது. Image may contain: 1 person, text that says "JC JAFFN Watch late JAFFN PRC ය ) CLL கமிழ்"

சுமந்திரனுக்கு எதிராய் ஒரு அறிக்கை விட்டுப் பார்ப்பம் என்று நினைத்தேன்.

சுமந்திரனுக்கு எதிராய் ஒரு அறிக்கை விட்டுப் பார்ப்பம் என்று நினைத்தேன். அப்புறம் என்னையும் மகிந்தவின் ஊடுருவல் என்று அந்த ஆள் சொல்லிவிடுமோ என்று பயமாய் இருக்கு அதைவிட உடனே மாவை சேனாதிராசா என்னைக் கட்சியை விட்டு நீக்குவதாகவும் அறிக்கை விட்டிடுவார். எதற்கு வம்பு. வாயை மூடிக்கொண்டு பேசாம இருப்பம். தமிழ் இனத்தை நினைச்சால்தான் பாவமாய் இருக்கு ஆப்பிழுத்த குரங்கு என்று எங்களை கிண்டலாக கூறியவர்கள் இன்று சுமந்திரனை இழுக்க முடியாமல் தவிக்கினம். உலகின் ஆதிக்குடிகள் என்ற பெருமை பெற்றவர்களுக்கு இந்த நிலையா? வெட்கம்! இப்படிக்கு ஒரு குரங்கின் கவலை. No photo description available.

இனியென்ன நிக்சனையும் மகிந்தவின் ஆள் என்று சொல்லப்போகிறீர்கள். அதுதானே?

•இனியென்ன நிக்சனையும் மகிந்தவின் ஆள் என்று சொல்லப்போகிறீர்கள். அதுதானே? 3 மாதங்களுக்கு முன்னர் சுமந்திரனுக்கு எதிராக எழுதும்படி தன்னிடம் கூறிய சிறீதரன் இப்போது சுமந்திரனை பாராட்டுவது ஆச்சரியமாக இருக்கிறது என்று ஊடகவியலாளர் நிக்சன் கூறியுள்ளார். இது குறித்து எமக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் சுமந்திரனை அன்டன் பாலசிங்கமாக கருத வேண்டும் என்று சிறீதரன் கூறியபோதே அனைவருக்கும் இந்த சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் இப்போது எமது வருத்தம் என்னவெனில் இந்த ஊடவியலாளர் நிக்சனையும் மகிந்தவின் ஆள் என்று சுமந்திரன் கூறப்போகிறாரே என்பதுதான். சுமந்திரன் அவர்களே! இன்னும் எத்தனை பேருக்கு மகிந்தவின் ஆள் என்ற பதிலை சொல்லப் போகிறீர்கள்? Image may contain: one or more people, people standing, shorts and outdoor

சுமந்திரன் என்னும் மானஸ்தர்!

சுமந்திரன் என்னும் மானஸ்தர்! இம்முறை தேர்தலில் தோல்வியுற்றால் தேசியப் பட்டியல் மூலம் எம்.பி யாக மாட்டேன் என்று சுமந்திரன் கூறியுள்ளார். சுமந்திரன் மானஸ்தர் என்றும், சொன்னால் அதை நிச்சயம் காப்பாற்றுவார் என்றும், அவரது விசுவாசிகள் கூறுகின்றனர். ஆனால் இதே மானஸ்தர்தான் கடந்த நல்லாட்சியில் தீர்வு பெறவில்லை என்றால் ராஜினாமா செய்வேன் என்று கூறினார். அதுமட்டுமல்ல தன் சட்டைப் பாக்கட்டைக்காட்டி “அந்த ராஜினாமா கடிதம் ரெடியாக இருக்கிறது” என்றார். தீர்வும் வரவில்லை. மானஸ்தர் சுமந்திரன் சொன்னபடி ராஜினாமாவும் செய்யவில்லை. ஆனால் கொஞ்சம்கூட வெட்கம் இன்றி மீண்டும் பதவி தரும்படி இப்பொது வந்து கேட்கிறார். எனவே தேர்தலில் தோற்றாலும் சுமந்திரன் கூறியபடி ஒருபோதும் அரசியலில் இருந்து ஒதுங்க மாட்டார். மாறாக எப்படியாவது பதவி பெறவே முயல்வார். ஏனெனில் அவராலும் சம்பந்தர் ஐயாவாலும் பதவி இன்றி இருக்க முடியாது. பதவி இல்லை என்றால் சொகுசு பங்களாவில் இருக்க முடியாது என்பது சம்பந்தர் ஐயாவுக்கு நன்கு தெரியும். அதேபோன்று, பதவி இல்லை என்றால் சிங்கள அதிரடிப் பொலிஸ் பாதுகாப்பு இல்லாமற் போய்விடும் என்பது சுமந்திரனுக்கும் நன்கு தெரியும். எனவே இருவுரும் இறக்கும்வரை பதவியை விட்டுவிட மாட்டார்கள். Image may contain: 1 person

தாய்த் தமிழகத்தின் அர்ப்பணிப்பை போற்றுவோம்!

•தாய்த் தமிழகத்தின் அர்ப்பணிப்பை போற்றுவோம்! தமிழ்நாடடைச் சேர்ந்த தமிழர் ஒருவர் ஈழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்தக் கொண்டது ஆச்சரியம் எனில் அதைவிட ஆச்சரியமானது கரும்புலியாக தனது உயிரை தந்தது. தமிழ்நாட்டில் சிவகாசியைச் சேர்ந்த செந்தூரபாண்டீயன் என்ற செங்கண்ணன் 11.11.1993 யஙன்று கரும்புலியாக தன் உயிரை அர்ப்பணித்தார். உண்மையில் இத் தியாகம் மகத்தானது. ஈழத் தமிழர்களால் என்றுமே மறக்க முடியாதது. செங்கண்ணன் மட்டுமல்ல இன்னும் சில் தமிழக இளைஞர்கள் ஈழத்தில் வந்து போராட்டத்தில் இணைந்திருந்தனர். அவர்களில் சிலர் மாவீரர்களாகவும் மரணித்தனர். அதைவிட முத்துக்குமார் உட்பட 17 தமிழக தமிழர்கள் தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து உயிர் துறந்தனர். நான் அறிந்தவரையில் உலகில் எந்த இனமும் தன் இனத்திற்காக இப்படி ஒரு தியாகத்தை செய்யவில்லை. தாய் தமிழகம் தன் தொப்புள்கொடி உறவுகளுக்காக அளப்பரிய பங்களிப்பை நல்கி வருகிறது. குறைந்தது பத்தாயிரம் தமிழக இளைஞர்களையாவது ஈழப் போராட்டத்தில் இணைக்க வேண்டும். அதற்கு முதல் ஆளாக நானே வருகிறேன் என்று தோழர் தமிழரசன் 1984ம் ஆண்டே எம்மிடம் கூறியிருந்தார். அவர் கூறியபடி தமிழக இளைஞர்களை எம் போராட்டத்தில் இணைத்திருந்தால் வரலாறு வேறு விதமாக அமைந்திருக்குமோ என இப்போது நினைக்க தோன்றுகிறது. அதனால்தான் இப்பவும் ஈழத் தமிழர்களும் தமிழக தமிழர்களும் சேர்ந்து விடக்கூடாது என்பதற்காக இந்திய உளவுப்படைகள் மும்முரமாக முயற்சி செய்கின்றன. ஆனால் இப்போது ஆதரவு என்ற நிலையில் இருந்து சேர்ந்து பங்களித்தல் என்ற அடுத்த நிலைக்கு .தமிழக சக்திகள் தயாராகி வருகின்றன. எனவே உலக தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வரலாறு படைக்கப் போவது உறுதி. Image may contain: 1 person, text that says "MMMIILL கரும்புலிகள் ஜிலை 5 நாள் வீரகாவியம் 11.11.1993 லப்.செங்கண்ணன் (৫) செந்தூர்பாண்டியன் தமிழ்ழ விடுதலை வரலாற்றில் தாய்த்தமிழகத்தின் தியாகத்தை எழுதிச்சென்ற கரும்புலி மறவன்.."

தாய்த் தமிழகத்தின் அர்ப்பணிப்பு விபரங்கள் வெளிவருமா?

தாய்த் தமிழகத்தின் அர்ப்பணிப்பு விபரங்கள் வெளிவருமா? தமிழகத்தில் இருந்து வந்து ஈழப் போராட்டத்தில் பங்குபற்றி வீர மரணம் அடைந்தவர்கள் பற்றி நான் எழுதும்போதெல்லாம் பலரும் என்னிடம் கேட்பது இவர்கள் பற்றிய விபரங்களை நூலாக வெளியிடுமாறு. (1) நான் புலிகள் இயக்கத்தில் இருக்கவில்லை (2) நான் இவர்களுடன் நேரிடையாக ஒருபோதும் பழகியதில்லை (3) இப்பகூட இவர்கள் பற்றிய விபரங்கள் எதுவும் என்னிடம் இல்லை. மேற்கண்ட காரணங்களால் நான் பெரிதும் விரும்பினாலும்கூட என்னால் அவர்கள் பற்றிய விபரங்களை நூலாக எழுத முடியவில்லை. நான் மதுரை சிறையில் வைக்கப்பட்டிருந்தபோது அங்கிருந்த தமிழ்நாடு மீட்சிப்படையினருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் மூலம் தமிழ்நாட்டில் இருந்து ஈழம் சென்று பயிற்சி எடுத்தவர்கள் பற்றிய சில செய்திகள் அறிய முடிந்தது. அவர்களிடம்கூட ஈழம் சென்று வீர மரணம் அடைந்தவர்கள் முழு விபரம் இப்போது இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் இவ்வாறு ஈழம் சென்று தாக்குதல்களில் பங்குபற்றிய ஒருவரின் எழுத்தை படிக்கும் வாய்ப்பு அண்மையில் எனக்கு கிடைத்தது. அவர் தன் அனுபவங்களை தொகுத்து எழுதிய நூலை என் கருத்தை அறிவதற்காக தந்திருந்தார். அதில் முழு விபரங்கள் இல்லாவிடினும் தமிழகத்தில் இருந்து சென்ற ஒருவரின் முதல் நூல் என்ற பெருமை அதற்கு கிடைக்கும் என அவருக்கு கூறியிருந்தேன். வெகுவிரைவில் அந் நூல் வெளிவரும் என நம்புகிறேன். அந் நூல் இதேபோல் மற்றவர்களையும் நிச்சயம் எழுத தூண்டும். இவ்வாறு பலரும் எழுதும்போது தமிழகத்தில் இருந்து சென்று பங்குபற்றியவர்கள் மற்றும் வீரமரணம் அடைந்தவர்கள் விபரம் தமிழக மக்களுக்கு மட்டுமல்ல ஈழத் தமிழ் மக்களுக்கும் கிடைக்கும். ஆனால் இந்திய உளவு நிறுவனங்கள் இவ் விபரங்கள் வெளிவரவோ அல்லது அவ் வீர மரணமடைந்தவர்களை மக்கள் நினைவு கூரவோ ஒருபோதும் அனுமதிக்காது. ஏனெனில் இனிவரும் காலங்களில் அனைத்து தமிழ் மக்களும் ஒன்றாவதற்கு இவர்கள் வரலாறு முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்ற அச்சம் அவற்றுக்கு உண்டு. ஆனால் எத்தனை தடைகள் வந்தாலும் அத்தனையும் தாண்டி தமிழினம் ஒன்று சேர்ந்து போராடப் போவது உறுதி. குறிப்பு – கீழே தரப்பட்ட விபரங்கள் எந்தளவு தூரம் சரியானவை என்பது குறித்து என்னால் உறுதி செய்ய முடியவில்லை. Image may contain: 4 people, including Makesan Makesh

தேர்தலும் பேஸ்புக்கும்

தேர்தலும் பேஸ்புக்கும் தேர்தலில் போட்டியிடும் பல வேட்பாளர்கள் என்னுடன் தொடர்பு கொண்டு தமக்கு ஆதரவு தருமாறு கேட்டு வருகின்றனர். இதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் போட்டியிடுபவர்கள் ஆதரவு கேட்பது வழமையான ஒன்றுதானே. ஆனால் சுமந்திரன் சார்பாக என்னுடன் பேசிய நபர் “ நீங்கள் சுமந்திரனை ஆதரிக்க வேண்டாம். ஆனால் தேர்தல் முடியும்வரை அவருக்கு எதிராக பேஸ்புக்கில் எழுதாமல் இருந்தால் போதும்” என கேட்டுக் கொண்டார். அவர் இவ்வாறு கேட்டது எனக்கு வித்தியாசமாகவும் உண்மையில் ஆச்சரியமாகவும் இருந்தது. எனவே நான் அவரிடம் “ ஏன் அவ்வாறு கேட்கிறீர்கள்” என்று கேட்டேன். அதற்கு அவர் “ உங்கள் எழுத்துகள் அனைத்து தரப்பினரையும் சென்றடைகிறது. சுமந்திரன் தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற ஒரு பொது அலையை அது உருவாக்கிறது” என்றார். அவர் என் குறித்து சற்று மிகைப்படுத்தி கூறியிருக்கிறார். ஆனால் அவர் கூறியதில் ஒரு உண்மை இருக்கிறது. அதாவது இம்முறை தேர்தலில் பேஸ்புக் முக்கிய பங்காற்றுகிறது என்பது. பல நாடுகளில் தேர்தல்களில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் பேஸ்புக் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தற்போது கொரோனோ காலமாக இருப்பதால் வழக்கத்தை விட இன்னும் அதிகமாக பேஸ்பக் பங்கு வகிக்கிறது போலும். அதுவும் சிங்கள பகுதியைவிட தமிழ் பகுதிகளில்தான் இம்முறை பேஸ்புக் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் சுமந்திரன் எதிர்ப்பு. அதனால்தான் ஒரு லட்சம் வாக்குகளால் வெற்றிபெறுவேன் என திமிராக பேட்டியளித்த சுமந்திரன் இப்போது 5 நாளில் 79 சந்திப்பகளை நிகழ்த்தியுள்ளார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பக்கத்தில் இருந்து சுமந்திரனுக்கு எதிராக எதிர்ப்புகள் வெளிப்படுகின்றன. பெருகி வரும் எதிர்ப்புகளை சமாளிக்க முடியாமல் தன்னந்தனியாக சுமந்திரன் தடுமாறுகிறார். பலத்த எதிர்ப்பு அவரைத் துரத்துகிறது. துரத்தியடிக்கும் பலத்த எதிர்ப்பு சமாளிக்க முடியாமல் ஓட்டம் பிடிக்கும் சுமந்திரன்! குறிப்பு - சுமந்திரன் தோல்வி உறுதி செய்யப்பட்டுவிட்டது. இதையும் தாண்டி சுமந்திரன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டால் அது உலகின் எட்டாவது அதிசயமாக இருக்கும். Image may contain: 1 person, standing

தீபெத் விடுதலையை ஆதரிப்பவர்கள்

தீபெத் விடுதலையை ஆதரிப்பவர்கள் ஏன் ஈழத் தமிழர்களின் விடுதலையை ஆதரிக்க மறுக்கிறார்கள்? தீபெத் அகதிகளை சுதந்திரமாக நடமாட அனுமதிப்பவர்கள் ஈழ அகதிகளை ஏன் சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருக்கிறார்கள்? தம்மையே மோடி அரசு முழுமையாக ஆதரிக்கிறது என்று அறிக்கை விடும் சம்பந்தர் ஐயாவாவது இதற்கு பதில் தருவாரா? Image may contain: 2 people

கடந்த வாரம் சர்வதேசம் தமக்கு பின்னால் நிற்கிறது என்றார்.

கடந்த வாரம் சர்வதேசம் தமக்கு பின்னால் நிற்கிறது என்றார். இந்தவாரம் இந்திய பிரதமர் மோடி தம் பின்னால் நிற்கிறார் என்கிறார். இனி அடுத்த வாரம் யார் நிற்கிறார் என்று கூறப்போறாரோ தெரியவில்லை. ஆனால் தனக்கு வேட்டியோட மூத்திரம் போறதுகூட தெரியாத இவருக்கு, பின்னால் நிற்பது யார் என்று மட்டும் தெரிந்து விடுகிறது. தண்ணியைப் போட்டால் போய் குப்புற படுத்து தூங்க வேணும். அதைவிடுத்து பின்னால நாய்குட்டி நிக்குது, ஆட்டுக்குட்டி நிக்குது என்று உளறி கடுப்பேத்தக் கூடாது. கட்டையில போகும் மட்டும் பதவியும் சொகுசு பங்களாவும் வேண்டும். அதற்காக எதையும் கூறுவதற்கு தயங்குவதில்லை. சீ! வெட்கம். Image may contain: one or more people, text that says "IBC C தமிழ் IBCTAMIL.COM பிரதமர் மோடி முழுமையாக எம் பின்னால் நிற்கின்றார்.- இரா.சம்பந்தன் i"

அதிகரிக்கும் சுமந்திரன் மீதான எதிர்ப்புகள்!

அதிகரிக்கும் சுமந்திரன் மீதான எதிர்ப்புகள்! இப்பெல்லாம் பொழுது விடிகிறதோ இல்லையோ சுமந்திரன் மீதான எதிர்ப்புகள் மட்டும் தவறாமல் வந்து கொண்டிருக்கின்றன. இதோ அடுத்த எதிர்ப்பு வந்துள்ளது. இது புலத்தில் இருந்து வந்துள்ளது. சர்வதேச விசாரணையில் இருந்து இலங்கையையும் மகிந்த ராஜபக்சாவையும் காப்பாற்றுவதே சுமந்திரனின் நீண்ட காலத்திட்டம் என்று பொஸ்கோ அவர்கள் கூறியுள்ளார். ஜெனிவா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பன்னாட்டு தளங்களில் தமிழ் மக்களின் நீதிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் மனித உரிமைச் செயற்பாட்டாளர் பொஸ்கோ பொஸ்கோவின் இந்த குற்றச்சாட்டிற்கு சுமந்திரன் உரிய பதிலை அளிக்கமாட்டார். மாறாக வழக்கம்போல் பொஸ்கோவையும் மகிந்தவின் ஆள் என்றே கூறப்போகிறார். ஆனால் உண்மையில் சுமந்திரனே மகிந்த ராஜபக்சாவை காப்பாற்றி வருகின்ற மகிந்தவின் ஆள். அதனால்தான் சுமந்திரனுக்குரிய சிங்கள பொலிஸ் பாதுகாப்பை நிறுத்தாமல் தொடர்ந்து வழங்கி வருகிறார் மகிந்த ராஜபக்சா. Image may contain: 2 people, including Anthonippillai Reginoldraj, suit and close-up

சுமந்திரன் அவர்களே!

•சுமந்திரன் அவர்களே! சி.வி.கே சிவஞானம் மகிந்தவின் ஊடுருவலா? அல்லது வாள் வெட்டு கோஸ்டியுடன் ஆயுதம் ஏந்த வேண்டுமா? விடுதலைப் பலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களின் தற்பாதுகாப்பிற்காகவே ஆயுதம் ஏந்தினார் என்று சிவி.கே.சிவஞானம் கூறியுள்ளார். விடுதலைப் போராட்டத்தை வன்முறையாக சுமந்திரன் காண்பிப்பது தவறு. அது வன்முறை அல்ல என்று தமிழரசுக்கட்சி முக்கியஸ்தரும் வடமாகாணசபை சபாநாயகருமான சிவஞானம் தெரிவித்துள்ளார். இப்போது எம்மத்தியில் எழும் கேள்வி என்னவெனில் சிவஞானம் அவர்களை வாள்வெட்டுக் கோஸ்டியில் சேரும்படி சுமந்திரன் கூறப்போகிறாரா அல்லது வழக்கம்போல் அவரை மகிந்தவின் ஊடுருவல் என்று சுமந்திரன் கூறப்போகிறாரா என்பதே. சுமந்திரன் என்ன கூறுவார் என்பதை எம்மால் ஊகிக்க முடிகிறது. ஆனால் அவரது தம்பிகள் சிவஞானத்தின் ஏழு பரம்பரையை தோண்டி எடுத்து எழுதுவாங்களே. அதை நினைத்தால்தான் சாடையா வேர்க்குது. ஆண்டவா! சிவஞானத்தைக் காப்பாற்று. Image may contain: இ.ரா.சரவணன் திராவிடர் கழகம், beard and close-up Image may contain: 1 person

சுமந்திரன் கவனத்திற்கு!

•சுமந்திரன் கவனத்திற்கு! தமிழ் காங்கிரஸ் ஜம்பதுக்கு ஜம்பது கேட்டது. அதில் இருந்து பிரிந்த தமிழரசுக்கட்சி சமஸ்டி கேட்டது. இலங்கையில் சமஸ்டியைவிட ஜம்பதுக்கு ஜம்பது அதிகளவு உரிமை கொண்ட கோரிக்கை. ஆனால் இந்த தமிழ் காங்கிரஸ் கட்சியும் தமிழரசுக்கட்சியும் சேர்ந்தே தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற கட்சியை உருவாக்கினார்கள். இந்த தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியே தமிழீழம் என்ற தீர்வை முன்வைத்து மக்கள் ஆணையைப் பெற்றார்கள். எப்போது இவர்கள் தமிழீழ கோரிக்கையை முன்வைத்தார்களோ அப்போதே சமஸ்டியையும் ஜம்பதுக்கு ஜம்பது என்ற கோரிக்கையையும் கைவிட்:டுவிட்டார்கள் என்றே அர்த்தம். பின்பு தமிழ்தேசியக்கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோதும் தமிழீழ தீர்;வே முன்வைக்கப்பட்டது. அப்போதும் உங்கள் தமிழரசுக்கட்சி சம்ஸ்டியை முன்வைக்க வில்லை. அதுமட்டுமல்ல புலிகளே தமிழ் மக்களின் எக பிரதிநிதிகள் என்று கூறியவரும் உங்களின் தலைவர் சம்பந்தர் ஐயாதான். இன்று தமிழீழத்தை முன்வைக்க யாருக்காவது தைரியம் இருக்கா என்று சவால் விடுகிறீர்கள். உண்மையில் இதனை நீங்கள் உங்கள் தலைவர் சம்பந்தர் ஐயாவிடமே முதலில் கேட்க வேண்டும். ஏனெனில் தமிழீழத்தை முன்வைத்த சம்பந்தர் ஐயா தமிழீழத்தை கைவிட்டுள்ளார். அவர்தான் ஏன் முன்வைக்கப்பட்டது? ஏன் கைவிடப்பட்டது? என்பதை விளக்க வேண்டும். அப்புறம் சமஸ்டிக் கோரிக்கைக்காகவே தமிழரசுக்கட்சியை முன்னெடுப்பதாக பெருமையாக கூறுகிறீர்கள். ஆனால் அனந்தசங்கரி உதயசூரியன் சின்னத்தை தர மறுத்ததால் வேறு சின்னம் உருவாக்க கால அவகாசம் இல்லாதபடியால் வேறு வழியின்றியே தமிழரசுக்கட்சியின் வீட்டுச் சின்னம் பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டது. உண்மை வரலாறு இப்படி இருக்க , இது தெரிந்த பலர் இன்னும் உயிரோடு இருக்க, எதற்காக வரலாற்றை திரித்து பொய் கூறுகிறீர்கள். உங்களை அறிவாளி என்று உங்கள் முட்டாள் தம்பிகள் வேண்டுமானால் கூறலாம். ஆனால் வரலாறு தெரிந்தவர்கள் உங்கள் மீது காறி உமிழ்வார்கள். Image may contain: 2 people, including Anthonippillai Reginoldraj, people standing

ஏன்டா சிரிக்கிறே?

ஏன்டா சிரிக்கிறே? இல்லை மச்சி, இந்தாள் சுமந்திரன் 5 வயது முதல் கொழும்பில வாழுறது தான் செய்த பாக்கியம் என்று கூறியவரல்லோ? ஆமா அதுக்கென்ன இப்போ? ஒரு லட்சம் வோட்டில வெல்லுவன் என்று வீராப்பாய் பேட்டி கொடுத்தவரல்லோ? ஆமா, சொன்னாரு. அதுக்கென்ன இப்போ? இப்ப வந்து 5 நாளில் 80 கூட்டத்தில் தொண்டைத் தண்ணி வத்த கத்துது மனுசன். அதை நினைச்சன் சிரிச்சன். ஆமா, என்ன இருந்தாலும் தமிழன்கள் கில்லாடிகள்தானப்பா. அவனுகள் எத்தனை சுமந்திரன்களை தமது வரலாற்றில் கண்டிருப்பான்கள். No photo description available.

தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு.

செய்தி - தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு. மறுத்தால் விளைவு பாரதூரமாகலாம் என கோத்தாவுக்கு சம்பந்தர் எச்சரிக்கை. அடி ஆத்தீ. போராட்டம் வெடிக்கும் என்று கோத்தாவையே மிரட்டுகிறாரே இந்த சம்பந்தர் தாத்தா அப்ப இனி வெளியில போய் விளையாட முடியாதா தாத்தா? மீண்டும் எமக்கு பங்கர் வாழ்க்கைதானா தாத்தா? இந்த லூசு தாத்தா தண்ணியைப் போட்டிட்டு உளறுதா ?அல்லது உண்மையில் குண்டைக் கட்டிக்கொண்டுபோய் வெடிக்கப் போகுதோ தெரியவில்லையே. சொர்க்கத்தில் 72 மனைவி கிடைக்கும் என்று சொல்லி சஹ்ரானை யாரோ ஏமாற்றியது போல எங்கட தாத்தாட்டையும் யாரோ 72 பங்களா கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறாங்கள் போல அதுதான் மனுசன் இப்படி வெறி பிடிச்சு நிக்குது. ஐயோ பயமாய் இருக்குதே! குறிப்பு- இந்த சம்பந்தர் ஐயாவின் அறிக்கையில் இருந்து தெரிந்துகொள்ளக்கூடியது என்னவெனில் (1) ஐயா நீண்ட உறக்கத்தில் இருந்து எழும்பிவிட்டார். (2) ஐயா உயிரோடு இருக்கிறார். கொரோனோவில் சாகவில்லை. (3) முக்கியமாக வடக்கு கிழக்கில் தேர்தல் வந்துவிட்டது Image may contain: 1 person, standing Image may contain: 1 person, sitting

பிரான்சும் இந்தியாவும்!

•பிரான்சும் இந்தியாவும்! பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற மாநகரசபைத் தேர்தலில் வெற்றி பெற்று சேர்ஜியா மகேந்திரன் துணை முதல்வராக நியமனம் பெற்றுள்ளார். அவருக்கு எமது வாழ்த்துகள். பிரான்ஸ்க்கு அகதியாக சென்ற ஈழத் தமிழர்களான செல்லப்பா மகேந்திரன் தேவி தம்பதிகளின் புதல்வியான சேர்ஜியா சட்டம் படித்து இன்று துணை முதல்வராக வந்துள்ளார். ஆனால் இந்தியாவில் 1983ம் அண்டு முதல் அகதிகளாக இருக்கும் ஈழத் தமிழர் குடியுரிமை பெறவும் முடியவில்லை. உயர் கல்வி பெறவும் முடியவில்லை. மாறாக இந்த கொரோனோ காலத்திலும் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி உண்ணாவிரதம் இருக்கும் அவலநிலை. இந்த லட்சணத்தில் இந்திய பிரதமர் மோடி தனக்கு பின்னால் இருப்பதாக சம்பந்தா ஐயா பெருமையாக கூறுகிறார். என்னே கேவலம் இது! Image may contain: 1 person, close-up Image may contain: 1 person, sitting

எனது முகநூல் கருத்துகளை

எனது முகநூல் கருத்துகளை தங்கள் தளங்களில் பிரசுரம் செய்வதற்கு பலரும் என்னிடம் அனுமதி கேட்கின்றனர். இதுபற்றி நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். இப்பவும் கூறுகிறேன். என் எழுத்துகளை மறுபிரசுரம் செய்வதற்கு என் அனுமதி பெறத் தேவையில்லை. தாராளமாக செய்து கொள்ளலாம். ஆனால் என் எழுத்தில் ஏதும் மாற்றம் செய்து மறுபிரசுரம் செய்வதாயின் தயவு செய்து அதன் கீழ் என் பெயர் போடுவதை தவிருங்கள். அண்மையில், கனடாவில் இருந்து வெளிவரும் உதயன் ஆசிரியர், மற்றும் லண்டனில் இருந்து வெளிவரும் ஒரு பேப்பர் ஆசிரியர்கள் என்னுடன் தொடர்பு கொண்டு தங்கள் பத்திரிகையில் எழுதும்படி கேட்டனர். அவர்கள் என்னைக் கேட்டதில் நான் வியப்பு அடையவில்லை. ஏனெனில் இதேபோல் பலர் என்னிடம் கேட்டு வருகின்றனர். ஆனால் இவர்கள் என் எழுத்துக்கு எந்த நிபந்தனையும் தாங்கள் விதிக்கவில்லை என்றும் தாராளமாக என் கருத்துகளை தெரிவிக்க முழு சுதந்திரம் வழங்குவதாக கூறியிருந்தனர். இவ்வாறு இவர்கள் கூறியது உண்மையில் எனக்கு மிக்க மகிழ்ச்சி தந்தது. ஏனெனில் எந்தவொரு ஆசிரியரும் இப்படி ஒரு உறுதிமொழியை எழுத்தாளர்களுக்கு இலகுவில் கொடுத்தவிட மாட்டார்கள். இது கிட்டத்தட்ட ஒரு பிளாங் செக் மாதிரி. (Blank cheque ) என்மீது நம்பிக்கை கொண்டு என் எழுத்துக்கு ஆதரவு தெரிவித்து வரும் அனைவருக்கும் என் நன்றிகள். என்மீதான் உங்களை நம்பிக்கையை தொடர்ந்தும் காப்பாற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன். நன்றியும் வாழ்த்துகளும். Image may contain: text that says "Hi Tholar, have read your writing, frequently published on your Facebook page. have ascertained that you have a vast knowledge of history, especially with regard to Tamil politics in Sri Lanka. wish to request your permission to publish your content on our website entitled Capital News, which can be accessed at www.capitalnews.lk Thank you Capito NEW"

அரசு ஆயுதம் கொண்டு வன்முறையை பாவிக்கும்போது

அரசு ஆயுதம் கொண்டு வன்முறையை பாவிக்கும்போது அதற்கு ஆயுதரீதியாக பதில் அளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இதுவே ஆயுதப் போராட்டத்தின் பின்னால் உள்ள அரசியல். இதுவே எளிமையாக “ அடிப்பதுதான் வன்முறை. திருப்பி அடிப்பது வன்முறை அல்ல . அது தற்காப்பு” என்று கூறப்படுகிறது. இது சுமந்திரனுக்கு புரியவில்லை அல்லது புரிந்தும் வேண்டுமென்றே “ ஆயுதப் போராட்டம் வன்முறை என்றும் நான் அகிம்சை வழியில் தீர்வு பெற்று தருவேன்” என்று கூறுகிறார். சரி அப்படியென்றால் கடந்த 11 வருடங்களாக சுமந்திரன் செய்த அகிம்சைப் போராட்டம் என்ன? அதன்மூலம் பெற்ற தீர்வு என்ன? என்று கேட்டால் அதற்குரிய பதிலை தரவேண்டும். ஆனால் மாறாக “நீங்கள் என்ன செய்தீர்கள?;” என்று திருப்பி கேட்கிறார்கள் சுமந்திரன் தம்பிகள். கேள்வி கேட்டால் முதலில் அதற்குரிய பதிலை அளிக்க வேண்டும். அதைவிடுத்து திருப்பி கேள்வி கேட்பது உரிய பதில் இல்லை என்பதை சுமந்திரன் தம்பிகள் முதலில் உணர வேண்டும். இதுவரையில் பதவியில் இருந்தது சுமந்திரன்தான். இப்போது வந்து மீண்டும் பதவி தாருங்கள் என்று கேட்பதும் சுமந்திரன்தான். எனவே சுமந்திரனிடம் கேள்வி கேட்பதற்கு ஒவ்வொரு தமிழனுக்கும் உரிமையும் தகுதியும் உண்டு என்பதையும் சுமந்திரன் தம்பிகள் உணர வேண்டும். மாறாக ஒருவர் ஏதாவது சாதித்த பின்புதான் வந்து சுமந்திரனிடம் கேள்வி கேட்க வேண்டும் என்று கருதுவது ஆக்கபூர்வமான உரையாடலுக்கு வழி சமைக்காது என்பதை சுமந்திரன் தம்பிகள் உணர வேண்டும். எப்படித்தான் சுட்டிக்காட்டினாலும் சில தம்பிகள் புரிந்து கொள்ளப் போவதில்லை. ஏனெனில் அவர்கள் அற்ப சுயநல சலுகைகளுக்காக சுமந்திரனை ஆதரிக்கிறார்கள். சுமந்திரன் தோல்வியுற்றதும் செத்த மாட்டில் இருந்து உண்ணிகள் கழருவதுபோல் இவர்கள் கழன்று சென்று விடுவார்கள். இது சுமந்திரனுக்கும் நன்கு தெரியும். Image may contain: text that says "எல்லோரிட பேசி புரிய வைக்க முயற்சிக்காதீர்கள் சில நேரங்களில் எதிரில் நிற்பது எருமையாக கூட இருக்கலாம்"

சுமந்திரன் உருவப் பொம்மையை எரித்தால்

சுமந்திரன் உருவப் பொம்மையை எரித்தால் இலங்கை அரசு ஏன் எரிச்சல் அடைகிறது? கடந்த மே மாதம் 14ம் திகதி இயக்குனர் களஞ்சியம் அவர்கள் தமிழ்நாட்டில் சுமந்திரனின் உருவப் பொம்மைக்கு செருப்படி வழங்கி எரித்தார். உடனே இலங்கைப் புலனாய்வு பிரிவைச் சேர்ந்தவர்கள் களஞ்சியம் அவர்களை போனில் தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளனர் என அறிய வருகிறது. “எமக்கு தமிழ்நாட்டில் 200 பேர் இருக்கிறார்கள். கருணா அம்மானுக்கு 300 பேர் இருக்கிறார்கள். எல்லோரும் சேர்ந்து உன்னை தூக்குவோம்” என்று களஞ்சியம் அவர்களை கொச்சைத் தமிழில் மிரட்டியுள்ளனராம். இதைவிட தமிழக கியு பிரிவு பொலிஸ் “தேவையானால் மோடியின்ரை உருவப் பொம்மையை கொளுத்துங்க. ஆனால் சுமந்திரன் உருவப் பொம்மையை மட்டும் கொளுத்தாதீங்க” என்று கேட்கிறார்களாம். சுமந்திரன் உருவப் பொம்மை எரித்தமைக்கு நேரடியாக வழக்கு போட முடியாததால் கொரோனோவில் வீட்டை விட்டு வெளியேறியது குற்றம் என்று வழக்கு போடுகிறார்களாம். இப்போது எமது கேள்வி என்னவெனில் சுமந்திரன் தமிழர் தலைவர் என்றால் அவரது உருவப் பொம்மை எரிக்கப்பட்டமைக்கு தமிழ் மக்கள்தானே எரிச்சல்பட வேண்டும். ஏன் இலங்கை இந்திய அரசுகள் எரிச்சல் அடைகின்றன? இலங்கை இந்திய அரசுகள் தாம் நேரடியாக செய்ய முடியாததை சுமந்திரன் மூலம் சாதிக்க முனைகின்றன என்பதே இதன் அர்த்தம் ஆகும். எனவேதான் சுமந்திரன் தோல்வியுற்றால் மீண்டும் தமிழ் தேசிய உணர்வு மேலோங்கிவிடும் என இவ் அரசுகளின் புலனாய்வு அமைப்புகள் அச்சமடைகின்றன. குறிப்பு- இயக்கனர் களஞ்சியம் அவர்கள் நான் எழதிய “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” என்னும் நூலை பெற்றுக்கொண்டபோது எடுத்த படம். இந்த படத்தை பார்த்ததும் இதற்காக இன்னொருமுறை களஞ்சியத்தை கியூ பிரிவினர் விசாரிக்கப் போகிறார்கள்? பாவம் மனுசன். Image may contain: Anthonippillai Reginoldraj, standing Image may contain: 1 person, standing and beard

நம்பிட்டோம் ஐயா!

செய்தி - திருகோணமலையை எவருக்கும் தாரை வார்க்க மாட்டோம் - சம்பந்தர் ஐயா நம்பிட்டோம் ஐயா! உங்களை நம்பாமல் வேற யாரை நாங்க நம்புறது? Image may contain: 2 people, text

கோணேஸ்வரம் தங்களுடையது என்று சிங்கள புத்த பிக்கு கூறுகிறார்

கோணேஸ்வரம் தங்களுடையது என்று சிங்கள புத்த பிக்கு கூறுகிறார். இராவணன் ஒரு முஸ்லிம். எனவே கோணேஸ்வரம் தங்களுடையது என முஸ்லிம் உலமாக் கட்சி கூறுகின்றது. ஆனால் இது தமிழருடையது என்று தமிழராகிய எம்மால் உரத்து கூற முடியவில்லை. சிங்கள தலைவரான விக்கிரமபாகு கருணாரத்தினா “ சிங்களவர்கள் வந்தேறிகள் என்றும் அதை தம்மால் நிரூபிக்க முடியும்” என்கிறார். ஆனால் தமிழர்களாகிய நாம் எமது தமிழர் தேசத்தைக்கூட எம்முடையது என்று கூற முடியவில்லை. கூறினால் உடனே ஓடி வந்து “நீ இனவாதி” என்கிறார்கள் நம்மவர் சிலர். “நீ சீமானிஸ்ட்” என்கிறார்கள் இன்னும் சிலர். “நீ நாஜிவாதி” என்றும்கூட சொல்கிறார்கள் தமிழ் அன்னையே! அடுத்த பிறப்பு என்று ஒன்று இருந்தால் என்னை நாகலாந்திலாவது பிறக்க விடு. ஏனெனில் அவர்கள்கூட இந்திய அரசுக்கு எதிராக போராடி தமக்கு தனிக்கொடி .தனி பாஸ்போர்ட் எல்லாம் பெற்றிருக்கிறார்களாம். Image may contain: 1 person, text that says "வந்தேறு குடிகள் சிங்களவர்களே! ஆதாரத்துடன் நிருபிப்பேன்; விக்கிரமபாகு கருணாரத்ன சவால்! தேசிய நினைவெ"

அலறியடித்து ஓடிக்கொண்டிருந்த பசுவை தடுத்த யானை

அலறியடித்து ஓடிக்கொண்டிருந்த பசுவை தடுத்த யானை “ஏன் இத்தனை பயத்துடன் ஓடுகிறாய்?” எனக் கேட்டது. காட்டில் உள்ள எல்லா எருமை மாடுகளையும் பிடிக்க அரசாங்கம் உத்தரவு போட்டிருக்கிறது” என்றது பசு. “நீ பசுதானே. அப்புறம் நீ ஏன் ஓடுகிறாய்?” என்று யானை ஆச்சரியத்துடன் கேட்டது. “நான் பசு என்கிறது எனக்கு தெரியும். ஆனால் என்னை அரசாங்கம் பிடிச்சுதுன்னா நான் எருமையில்லை பசுன்னு நிரூபிக்க முடியாமல் காலம்பூராவும் சிறையில் இருக்க வேண்டுமே” என்றது பசு. இப்போது பசுவுடன் சேர்ந்து யானையும் ஓடியது. மேலே கூறியது காட்டில் நடந்த கதை. இனி நாட்டில் நடக்கும் ஒரு கதையை பார்ப்போம். அலறியடித்து ஓடிக்கொண்டிருந்த மாணவன் ஒருவனைத் தடுத்த தாத்தா ஒருவர் “ஏன் இத்தனை பயத்துடன் ஓடுகிறாய்?” எனக் கேட்டார். “மாணவர்களை சுட்ட அதிரடிப்படை வருகிறது. அதுதான் பயத்தில் ஓடுகிறேன்” என்றான் அந்த மாணவன். “நம்ம வக்கீல் சுமந்திரனிடம் கூறினால் அவர் உடனே வாதாடி எடுத்துவிடுவார் அல்லவா? அப்புறம் எதற்கு பயப்படுகிறாய்?”என்று தாத்தா அப்பாவியாய் கேட்டார். “யோவ் பெரிசு உனக்கு விசயம் தெரியாதா? அந்த அதிரடிப்படையின் பாதுகாப்பில்தான் சுமந்திரன் வருகிறார். அதுமட்டுமல்ல அவரைக் கொலை செய்ய முயற்சி செய்ததாக கூறியே எங்களை கைது செய்யிறாங்கள” என்றான் மாணவன். இப்போது தாத்தாவும் மாணவனுடன் சேர்ந்து ஓடினார். Image may contain: 2 people, including Velu Bavan, people standing and outdoor Image may contain: 2 people, people standing

கம்பவாரிதியும் சுமந்திரனும்!

கம்பவாரிதியும் சுமந்திரனும்! ஒரு வெட்டிப்பயலுக்கு நூறு ரூபாய் கிடைத்தது. ஒரு சிறந்த பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு சென்றான். வயிறு புடைக்க சாப்பிட்டான். மூவாயிரம் ரூபாய் பில் வந்தது. நேரே மேனேஜரிடம் சென்றான். தன்னிடம் பணம் இல்லை என்றான். மேனேஜர் அவனை பொலிஸில் ஒப்படைத்தார். அவன் பொலிசுக்கு நூறு ரூபா லஞ்சம் கொடுத்து வெளியில் வந்துவிட்டான். இதுதான் MBA படிக்காத Financial management என்பது. இதேமாதிரி ஒருவர் இலங்கையில் இருக்கிறார். அவர் பெயர் கம்பவாரிதி ஜெயராஜ். தான் அரசியல்வாதி இல்லை என்பார். அரசியல் ஒரு சாக்கடை என்பார். ஆனால் அரசியல்வாதிகளைவிட பக்காவாய் அரசியல் செய்பவர் இவர்தான். பதவியில் இருக்கும் அரசியல்வாதிகளை அழைத்து அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி பட்டம் கொடுத்து தனக்கு வேண்டிய காரியங்களை சாதித்துக்கொள்வார். சுமந்திரனுக்கு “அதி சிறந்த போராளி” என்று பட்டம்; கொடுத்தவர் இவர்தான். இப்போது “சுமந்திரனை வெல்ல வையுங்கள் இல்லையேல் தமிழ் இனம் துலையப் போகிறது” என்று அறிக்கை விட்டிருக்கிறார். ஏற்கனவே பெற்ற ஆதாயத்திற்காக இப்போது இந்த அறிக்கையை விட்டாரா அல்லது இனி ஏதாவது ஆதாயம் பெறுவதற்காக இந்த அறிக்கையை விட்டாரா என்று தெரியவில்லை. ஆனால் ஆதாயம் இல்லாமல் இந்த கம்பவாரிதி வாய் திறக்கமாட்டார் என்பது மட்டும் உண்மை. இங்கு ஆச்சரியம் என்னவெனில் சுமந்திரன் சிறந்தவர் என்று கம்பவாரிதியால்கூட கூறமுடியவில்லை. மாறாக சுமந்திரனும் தவறு இழைத்திருக்கலாம் என்றே கூறுகிறார். குறிப்பு - சுமந்திரன் தம்பிகளுக்கு! நான் நேரிடையாக எழுதும் பதிவுகள் உங்களுக்கு தலைகீழாக புரிவதால் இந்த பதிவை தலைகீழாக நின்று படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு பொலிசுக்கு லஞ்சம் கொடுத்து தப்பியவர் கம்பவாரிதி என்று நான் எழுதவில்லை. Image may contain: 1 person, close-up and outdoor Image may contain: 1 person 132You, Selva Wiji, Usha Sriskandarajah and 129 others

சீனாவில் மாவோ செய்தது என்ன?

சீனாவில் மாவோ செய்தது என்ன? பொதுவாக எல்லோரும் மாவோ சேதுங் அவர்கள் சீனப் புரட்சியை செய்ததாக நினைக்கிறார்கள். சீனப் புரட்சியை சீன மக்களே செய்தார்கள். மாவோ அப் புரட்சிக்கு தலைமை வகித்தார் . அவ்வளவே. அப்படியென்றால் மாவோ செய்த மகத்தான பணி என்ன? அடிமைப்பட்டுக் கிடந்த சீன மக்களுக்கு அவர்களுடைய அடிமைத்தனத்தை அவர் புரிய வைத்தார். அவர் ஒரு வரலாற்று ஆசிரியர். அதனால் சீன மக்களின் பெருமைக்குரிய வரலாற்றை அவர்களுக்கு எடுத்துக் கூறினார். அதனால் தங்களைவிட மிகவும் சிறிய நாடான ஐப்பானிடம் தாம் அடிமைப்பட்டுக் கிடப்பதை சீன மக்கள் உணர்ந்து கொண்டார்கள். தாம் அடிமைப்பட்டுக் கிடப்பதை உணர்ந்து கொண்டமையினால்தான் அவர்களால் மகத்தான சீனப் புரட்சியை நிகழ்த்தி விடுதலை பெற முடிந்தது. தூங்கும் அரக்கன் எனப் பெயர் பெற்றிருந்த சீனா இன்று பொருளாதார வல்லரசு எனப் பெயர் பெற்றமைக்கு முக்கிய காரணம் சீன மக்கள் தாம் அடிமைப்பட்டு கிடக்கிறோம் என்பதை உணர்ந்தமையே. எனவே தமிழ் இன மக்களும் விடுதலை பெற வேண்டும் எனில் முதலில் அவர்கள் தாம் அடிமையாக இருக்கிறோம் என்பதை உணர வேண்டும். உணர வைக்கப்பட வேண்டும். ஈழத்திலும் சரி இந்தியாவில் தமிழ்நாட்டிலும் சரி தமிழ் மக்கள் அடிமையாகவே இருக்கிறார்கள். ஆனால் தமிழ் தலைவர்களோ அவர்களின் அடிமைத்தனத்தை உணர விடாமல் தடுக்கும் பணியையே செய்கிறார்கள். மாசேதுங் துப்பாக்கி குழாயில் இருந்தே அரசியல் அதிகாரம் பிறக்கிறது என்றார். ஆனால் சுமந்திரன் 20 எம்.பி சீட் கிடைத்தால் அரசியல் அதிகாரம் பெற முடியும் என்கிறார். இப்போது தமிழ் இனத்திற்கு தேவை, •மாவோ போன்று அடிமைத்தனத்தை உணர வைக்கும் தலைவர்களே. •மாவோ போன்று தமிழ் இனத்தின் வீரம் செறிந்த போராட்ட வரலாற்றை எடுத்துக் கூறும் தலைவர்களே. குறிப்பு- அடிமையாக கிடப்பது கேவலம் இல்லை. மாறாக தமது அடிமைத்தனத்தை உணராமல் வீழ்ந்து கிடப்பதே கேவலம் ஆகும். (இது ஒரு மீள்பதிவு) Image may contain: 1 person, indoor

தமிழர் நல பேரியக்கத்தின் தலைவரும் இயக்குனருமான மு.களஞ்சியம்

தமிழர் நல பேரியக்கத்தின் தலைவரும் இயக்குனருமான மு.களஞ்சியம் அவர்கள் நான் எழுதிய “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” என்னும் நூல் குறித்து தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். அவருக்கு என் நன்றிகளும் வாழ்த்துகளும். அவர் தெரிவித்த கருத்துகள் வருமாறு, ’’ ஒரு ஈழப்போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்’’ தோழர் பாலன் அவர்கள் எழுதிய இந்த நூலை அதன் வெளியீட்டு நிகழ்வில் பேசுவதற்காகப் படித்துக் குறிப்பெடுத்திருந்தேன். அந்த நிகழ்வில் நான் பேசுவதற்காக மேடையில் அமர்ந்திருந்த போது,என் உயிருக்கு நெருக்கமான தோழர் மதுக்கூர் மைதீன் அவர்கள் கூலிப்படைக் கயவர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட செய்தி அறிந்து அதிர்ந்து போனேன். அன்று என்னால் பேசவே முடியவில்லை. நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அப்படியே மதுக்கூருக்கு ஓடி விட்டேன். அதன் பிறகு இந்த நூல் குறித்து முகநூலில் பதிவிட வேண்டும் என்று எண்ணியிருந்தேன். பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையில் அதையும் செய்ய முடியாமல் போனது. பொதுவாக எனக்குத் தோழர் தமிழரசன் அவர்கள் குறித்துப் பேசுவது,அவர் குறித்த நூல்களை வாசிப்பதெல்லாம் தனித்த விருப்பமான செயல்பாடாகும். ஆகவே மீண்டும் மீண்டும் அந்த செயல்களில் ஈடுபடுவேன் ஆகவே இரவு மீண்டும் ’’ஒரு ஈழப்போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன் ’’ நூலை வாசித்தேன். தோழர் தமிழரசன் அவர்கள் குறித்து நிறைய நூல்கள் நம்மிடம் இல்லை. அவர் குறித்த செய்திகளும் திரும்பத் திரும்ப பேசியதையே பேசும் செய்திகளாகவே இருக்கிறது. இன்னிலையில் இந்த நூல் தோழர் தமிழரசன் அவர்கள் குறித்த புதிய செய்திகளைப் பதிவு செய்திருப்பது பெரும் மகிழ்வைத் தருகிறது. " நான் தோழர் தமிழரசன் அவர்களோடு இருந்தேன்.அவரை எனக்குத் தெரியும்" என்று சில நிகழ்வுகளில் சொன்னதோடு சரி. அவரோடு எனக்குள்ள அனுபவங்களை இதுவரை நான் எழுத்தில் பதிவு செய்ததில்லை. ஆனால் தோழர் பாலன் அவர்கள் தோழர் தமிழரசன் அவர்களோடு தனக்கேற்பட்ட அனுபவங்களை ஒரு வரலாற்றுக் கடமையாக நினைத்துப் பதிவு செய்துள்ளார் அது போற்றுதலுக்குறியது. இந்த நூலை வாசிக்க நூலுக்குள் நுழைகிறவர்களை மிகத் தெளிவாக கரம் பிடித்து உள்ளே அழைத்துச் செல்கிறார் தோழர் பாலன். அதாவது, ஒரு திரைப்படத்தின் இயக்குநர் தனது படத்தைப் பார்க்கும் பார்வையாளனுக்குக் குழப்பம் வந்து விடாமல் இருக்க கதாபாத்திரங்களை முன்கூட்டியே அறிமுகம் செய்வார் அதே போல நூலின் தொடக்கத்திலேயே தோழர் தமிழரசன் குறித்தும் தோழர் நெப்போலியன் குறித்தும் தமிழ் மக்கள் பாதுகாப்புப் பேரவை குறித்தும் ஒரு தெளிவைப் படிப்பவர்களுக்கு ஏற்படுத்தி விடுகிறார் ஆகவே படிப்பவர்களுக்கு ஒரு குழப்பமும் இல்லாமல் படிக்க முடிகிறது. தோழர் பாலன் அவர்களின் முன்னுரை ஒரு ஹாலிவுட் திரைப்படத்தின் அதிர்ச்சியூட்டும் முதல் காட்சியைப் போலத் தோழர் தமிழரசன் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தியிலிருந்து தொடங்குகிறது. இது நூலை படிக்கும் ஆர்வத்தை தூண்டுவதாக நான் கருதுகிறேன். பொதுவாக ஈழப்போராளிகளுக்குத் தோழர் தமிழரசன் அவர்கள் குறித்துத் தெரிவதில்லை. அவர் எந்த அளவுக்கு ஈழ ஆதரவு நிலைப்பாட்டில் செயல்பட்டார் என்பதும் யாருக்கும் தெரியவைல்லை. இது வருந்தத் தக்க விடயமாகும் அந்தக் குறையை தோழர் பாலன் இந்த நூலை எழுதியதன் மூலம் நிவர்த்தி செய்துள்ளார். ஆகவே, தமிழகப் புரட்சியாளர்களுக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்து வருகின்ற தோழர் தமிழரசன் அவர்களைப் பற்றி, அவரோடு பயணித்த ஒரு ஈழப்போராளியே உலகத் தமிழர்களுக்கு அறிமுகம் செய்வது சால சிறந்ததாகும். தோழர் தமிழரசன் பயங்கர வாதியா? அவர் முன்னெடுத்த ஆயுதப் போராட்டம் பயங்கரவாதப் போராட்டமா? என்கிற கேள்விகளை முன் வைத்துப் பதிலளிக்கிறார் தோழர் பாலன் அவர்கள். தோழர் தமிழரசன் ஒரு போராளி. மார்க்சிய லெனிச மாவோயிசத்தின் வழியில் தேசிய இன விடுதலைக் குறித்துச் சிந்தித்த புரட்சியாளர். ஆகவே தான் ’’தமிழ்நாட்டு விடுதலை’’ என்கிற இலக்கை அடைய ஆயுதப் போராட்ட வழியை முன்னெடுத்தார். இந்திய அரசு தமிழீழ விடுதலைக்கும் தமிழக விடுதலைக்கும் எதிரான ஆற்றல் என்பதைத் தோழர் தமிழரசன் சரியாக புரிந்து வைத்திருந்தார் என்று பல்வேறு சான்றுகளோடு தோழர் பாலன் விளக்கிச் சொல்லுகிறார். தோழர் தமிழரசன் அவர்கள் பாராளுமன்ற பாதையைத் தேர்ந்தெடுக்காமல் ஏன் மக்கள் யுத்தப் பாதையை தேர்ந்தெடுத்தார்? என்பதை மிகத் தெளிவாக நூலில் விளக்குகிறார். இன்றைக்கு விடுதலைப் புலிகள் முன்னெடுத்த ஆயுதப் போராட்டப் பாதை தோற்றுப் போய்விட்டது என்று கருதுகிறவர்கள் ஆயுதப் போராட்டம் பயனற்றது என்று புத்தி சொல்லுகிறார்கள்.ஆனால் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளில் புரட்சி வென்றிருக்கிறது என்று சொன்னால் அதற்குக் காரணம் ஆயுதப் போராட்டம் தான் என்பதை எடுத்துக் காட்டுகிறார். இது குறித்து தோழர் பாலன் அவர்கள் மிகச் சரியாக விளக்கி இருக்கிறார்.அதிலும் குறிப்பாகச் சமகால ஈழ, தமிழக சிக்கல்களை அடுத்து அடுத்து அவர் பட்டியலிடும் விதம் சிறப்பாக உள்ளது. வரலாற்றுப் பூர்வமாக ஈழத்தின் இளையோர் ஏன் ஆயுதம் பாதையை தேர்ந்தெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது என்பதையும் சரியாக விவரிப்பதின் மூலம் மிக எளிதாக உண்மைக்கு மிக அருகே வாசிப்பவர்களை அழைத்துச் செல்கிறார். Image may contain: 1 person, standing and beard

உன் கோவணம் உரியப்பட்டதா?

உன் கோவணம் உரியப்பட்டதா? உரிந்தவன் கைகளை வெட்டு. ஆனால் ஒருபோதும் கெஞ்சிக் கோவணம் கட்டாதே. அதைவிட அம்மணமாகவே போராடு 1983ல் இனக் கலவரம் என்னும் பெயரில் பல தமிழர்களை கொன்றார்கள். உயிரோடு எரித்தார்கள். சிறைச்சாலையில் அதிக பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞர்களைக்கூட கொன்றார்கள். இது இலங்கை அரசு திட்டமிட்டு நடத்திய இனப்படுகொலை. இதுவரை இதற்குரிய நீதி தமிழ் மக்களுக்கு வழங்கப்படவில்லை. இன்றும்கூட இரத்த ஆறு ஒடும் என்று பகிரங்கமாக தமிழ் மக்களை மிரட்டுகிறார்கள். தமிழ் பகுதியில் ரத்த அறு ஓடினால் மீண்டும் கட்டுநாயக்கா விமான நிலையம் மட்டுமல்ல முழு இலங்கையுமே அதிரும் என்று கூற எம்மிடையே ஒரு தமிழ் தலைவர் இல்லையே. அதுமட்டுமல்ல தமிழ் மக்களின் சுதந்திரம் மறுக்கப்படுமானால் சிங்கள மக்களும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது என்பதை சிங்கள மக்களுக்கு எடுத்துக்கூறக்கூட ஒரு முற்போக்கான சிங்கள தலைவரும் இலங்கையில் இல்லையே. குறிப்பு - 1983 யூலை படுகொலைகளே பல்லாயிரம் தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்த வைத்தது. மீண்டும் ரத்த ஆறு ஒடும் என்றால் மீண்டும் ஆயுதம் ஏந்த தமிழ் இளைஞர்கள் தயங்க மாட்டார்கள். Image may contain: one or more people and outdoor Image may contain: 1 person, standing and outdoor Image may contain: one or more people Image may contain: one or more people

1983 யூலை படுகொலைகளுக்கு புலிகள்தான் காரணமா?

•1983 யூலை படுகொலைகளுக்கு புலிகள்தான் காரணமா? (1)1983ல் நடந்தது இனக் கலவரம் என்கிறார்கள். அது தவறு. அது இலங்கை அரசு திட்டமிட்டு நடத்திய இனப் படுகொலை (2)1983ல் நடந்த கொலைகளுக்கு புலிகளே காரணம் என்கிறார்கள் சிலர். புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 13 ராணுவத்தினர் இறந்தமையினால்தான் இது நிகழ்ந்தது என்கிறார்கள் அந்த சிலர். இதுவும் தவறு. ஏனெனில், (அ)1956, 1966, 1977 ம் ஆண்டுகளில்கூட கலவரம் என்னும் பெயரில் தமிழ் இனப்படுகொலைகள் நடந்தன. அப்போது புலிகள் இயக்கம் இருக்கவில்லை. எந்த ராணுவத்தினரும் கொல்லப்படவில்லை. (ஆ)1983 யூலைக்கு முன்னரும் பல பொலிசார் மற்றும் ராணுவத்தினர் புலிகள் இயக்கத்தாலும் வேறு இயக்கங்களாலும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவற்றை நாம் எடுத்துக் காட்டும்போது, அதற்கு முன்னர் 13 ராணுவத்தினர் ஒரேயடியாக கொல்லப்படவில்லை என்று சுட்டிக்காட்டுகிறார்கள் அந்த சிலர். அப்படியென்றால் அதன் பின்னர் ஆயிரக் கணக்கில் ராணுவத்தினர் கொல்லப்பட்டார்களே. அப்போது ஏன் கலவரம் வெடிக்கவில்லை என்று நாம் கேட்டால் அதற்கு அந்த சிலர் பதில் தருவதில்லை. சரி. ஆனால் புலிகளால்தான் கலவரம் ஏற்பட்டதாக இப்பவும் தொடர்ந்து கூறுகிறார்களே, அதற்கு என்ன பதில் கூறுவது? அவர்களுக்கு எந்த பதிலும் கூறத் தேவையில்லை. அவர்கள் முகத்தில் சுடுதண்ணியை ஊற்றுங்கள். புரிந்து கொள்வார்கள். ஏனெனில் கடந்த வருடம் கண்ணியாவில் பிள்ளையார் கோவிலை காக்க சென்ற இந்துமத பெரியவர்; ஒருவரின் முகத்தில் சுடுதண்ணியை ஊற்றியிருக்கிறார்கள். அது குறித்து இதுவரை பொலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 1983 யூலை இனக் கலவரம் எமக்கு கற்று தரும் பாடம் என்ன? எமக்கு பல பாடங்களை அது கற்று தந்தாலும் அவற்றில் மிக முக்கியமானது 1983ற்கு பின்னர் இனக் கலவரம் நடக்கவில்லை. ஏனெனில் தமிழ் போராளிகள் கையில் ஆயுதம் இருந்ததே. இனியும் கலவரம் வந்தால் மீண்டும் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்துவார்கள் என்ற அச்சம் அரசுக்கு இருக்க வேண்டும். அவ்வாறு ஏந்தினால் அது முன்பைவிட பயங்கரமாக இருக்கும் என்பதையும் அது புரிந்து கொள்ள வேண்டும் Image may contain: 2 people, text that says "கறுப்பு யூலை 1983"

உபாலியின் விமானத்தை கண்டு பிடிக்க முடியாதவர்கள்

•உபாலியின் விமானத்தை கண்டு பிடிக்க முடியாதவர்கள் இராவணன் விமானத்தை கண்டு பிடிக்கப் போகிறார்களாம்! 13.02.1983 யன்று உபாலி விஜேயவர்த்தனா பயணம் செய்த விமானம் காணாமற்போயிருந்தது. உபாலி விஜேயவர்த்தனா இலங்கையின் முதனிலை செல்வந்தர் மட்டுமல்ல அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனாவின் மைத்துனர் ஆவார். அவருக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டதால் அதனை விரும்பாத பிரதமர் பிரேமதாசாவே சதி செய்து உபாலியை கொன்றுவிட்டார் என அப்போது சந்தேகிக்கப்பட்டது. அதனால் 7 நாடுகளின் புலனாய்வு பிரிவுகள் ஆறு மாதம் காலம் விசாரணையை நடத்தின. ஆனால் உபாலி சென்ற விமானத்திற்கு என்ன நடந்தது என்பதை அவர்களால்; கண்டு பிடிக்க முடியவில்லை. தகுந்த ஆதாரம் கிடைக்காமையினால் உபாலி இறந்து விட்டார் என்பதைக்கூட இலங்கை அரசு இதுவரை அங்கீகரிக்கவில்லை. சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னர் காணாமல்போன உபாலியின் விமானத்தைப் பற்றியே அறிய முடியாத இலங்கை அரசு ஐயாயிரம் வருடங்களுக்கு முற்பட்டது என கருதப்படும்; ராவணன் விமானத்தை கண்டறியப் போகிறார்களாம். ராமர் அயோத்தியில் பிறந்தாரா அல்லது நேபாளத்தில் பிறந்தாரா என்பதே கண்டறிய முடியாமல் இருக்கிறது. இவர்கள் என்னவென்றால் ராவணன் விமானத்தை கண்டு பிடிக்கப் போகிறார்களாம். இந்தியாவில் ராமரைக் காட்டி மோடி அரசு எப்படி மக்களை ஏமாற்றுகிறதோ அதேபோன்று இலங்கையில் ராவணனைக்காட்டி மக்களை ஏமாற்ற மகிந்த அரசு முனைகிறது. இவர்கள் ராவணன் விமானத்தைக் கண்டு பிடிக்கப் போவதில்லை. மாறாக விரைவில் ராவணன் ஒரு சிங்கள மன்னன் என்று கூறப் போகிறார்கள். அதன்மூலம்; திருகோணமலை தங்களுக்கே சொந்தம் என்பார்கள். இலங்கையில் மூத்தகுடிகள் தாமே என்பார்கள். தமிழர்கள் வந்தேறிகள் என்பார்கள். இதில் கொடுமை என்னவெனில் இதையெல்லாம் நம்ம சம்பந்தர் ஐயா மறுப்பு ஏதும் கூறாமல் ஏற்றுக்கொள்வார். ஏனென்று கேட்டால் பெரும்பான்மை இனத்தவரின் மனம் புண்படக்கூடாது என்பார். லூசுப் பயலுகள்! Image may contain: 4 people, including Karur Tamil Rajendiran, people standing

“மேற்குவங்க மாநிலத்தை வங்காளிகள்தான் ஆள்வார்கள். குஜராத்திகள் அல்ல” என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

“மேற்குவங்க மாநிலத்தை வங்காளிகள்தான் ஆள்வார்கள். குஜராத்திகள் அல்ல” என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார். அவருக்கு எமது பாராட்டுகள். ஆனால் ஆச்சரியம் என்னவெனில் இதைக் கூறியதற்காக மம்தா பானர்ஜியை யாரும் “இனவாதி” என்று கூறவில்லை. ஆனால் தமிழ்நாட்டை தமிழர்தான் ஆளவேண்டும் என்று கூறினால் உடனே இந்து ராம் முதல் துக்ளக் குருமூர்த்திவரை துள்ளிக் குதிப்பார்கள். மேற்கு வங்கத்தை ஒரு வங்காளிதான் ஆளவேண்டும் என்று கூறினால் இவர்கள் பொத்திக்கொண்டு மௌனமாக இருப்பார்கள். அதுவும் இங்குள்ள கம்யுனிஸ்டுகள் உடனே “இனவாதிகள்” என்று முத்திரை குத்திவிடுவார்கள். அதுமட்டுமல்ல இன்னும் ஒருபடி மேலேபோய் “யார் தமிழர்கள்?” என்பதற்கு வரைவிலக்கணம் என்ன என்று நக்கலாக கேட்பார்கள். ஆனால் வங்காளிக்கு என்ன வரைவிலக்கணம் என்று மம்தா பானர்ஜிடம் இந்த கம்யுனிஸ்டுகள் கேட்க மாட்டார்கள். மம்தா பானர்ஜி ஒரு பெண் முதலமைச்சர். இருந்தும் அவர் எவ்வளவு தைரியமாக மோடி அரசுக்கு சவால் விடுக்கிறார். தமிழ்நாட்டிலும் ஒரு முதலமைச்சர் இருக்கிறார். அவர் ஒரு ஆண் முதலமைச்சர் மட்டுமல்ல தமிழ் முதலமைச்சர் என்றும் கூறுகிறார்கள். ஆனால் என்னே கேவலம்? ஏழுபேர் விடுதலை குறித்து அனுப்பிய தீர்மானம் குறித்து முடிவு எடுக்கும்படி ஆளுநரிடம் வலியுறுத்தக்ககூட முடியாமல் இருக்கிறார். உயர்நீதிமன்றம் இது குறித்து ஆளுநரைக் கண்டித்த பின்பும்கூட தமிழக முதலமைச்சரால் ஆளுநரிடம் கோர முடியாத அளவிற்கு துணிவு இன்றி இருக்கிறார். டயர்நக்கி அரசு இது! Image may contain: 2 people Image may contain: 1 person, close-up

இருவரும் தமிழர்கள்.

இருவரும் தமிழர்கள். ஒருவர் குட்டி மணி , இன்னொருவர் சுமந்திரன். 1983 யூலை 23 ம் திகதி வெலிக்கடை சிறையில் குட்டி மணி கொல்லப்பட்டார். அவர் மட்டுமன்றி அவருடன் சேர்த்து 52 தமிழ் அரசியல் கைதிகள் வெலிக்கடை சிறையில் கொல்லப்பட்டார்கள். இலங்கை முழுவதும் மூவாயிரத்திற்கு மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். ஒன்றரை லட்சம் தமிழ் மக்கள் வீடு இழந்தனர். அகதிகளாக விரட்டப்பட்டனர். கொழும்பில் இருந்த சுமந்திரனும் அகதியாக கப்பலில் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார். குட்டி மணி தமிழ் மக்களுக்காக போராடினார். அதனால் அவருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போதுகூட அவர் “என் கண்களை கண் இல்லாத ஒரு தமிழ் சிறுமிக்கு வழங்குங்கள். அவர் மூலம் மலரப் போகும் தமிழீழத்தை நான் பார்ப்பேன்” என்றே கூறினார். ஆனால் சுமந்திரன் இனப்படுகொலை செய்தவர்களை வன்முறையாளர்கள் என்று கூறவில்லை. மாறாக இனப்படுகொலைக்கு எதிராக போராடியவர்களை வன்முறையாளர்கள் என்றார். அதுமட்டுமல்ல தன்னையும் இந்த இனப்படுகொலையாளிகள் விரட்டியடித்ததையும் மறந்து அவர்களுடன் ஐந்து வயது முதல் வாழக்கிடைத்தது தனது பாக்கியம் என்கிறார். இனப்படுகொலை செய்யும் சிங்கள படையின் பாதுகாப்புடன் வந்து தனக்கு வன்முறையில் நம்பிக்கை இல்லை என்று எமக்கு உபதேசம் செய்கிறார். Image may contain: 2 people, people standing Image may contain: one or more people, people standing and shoes

யாழ் மாவட்டத்தில் 19 கட்சிகளும் 14 சுயட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன

யாழ் மாவட்டத்தில் 19 கட்சிகளும் 14 சுயட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. அதாவது 330 வேட்பாளர்கள் 7 எம்.பி பதவிக்காக போட்டியிடுகின்றனர். இதில் ஒருவர்கூட 1983ல் நடைபெற்ற யூலை படுகொலைகள் குறித்து ஒரு அஞ்சலி வார்த்தைகூட நினைவு கூரவில்லை. பரவாயில்லை. 1983ல் படுகொலையானவர்களுக்கு நீதி பெற்று தரப்படும் என்றோ அல்லது இனி இந்தமாதிரி ஒரு படுகொலை நிகழாமல் தடுக்கப்படும் என்றோ ஒரு உறுதி மொழியை இவர்களில் ஒருவர்கூட தமிழ் மக்களுக்கு தரவில்லை. இந்த ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகள் தங்கள் பதவி நலனில்தான் அக்கறை கொண்டுள்ளார்களேயொழிய தமிழ் மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர்கள் என்பது அனைவரும் அறிந்த விடயம்தான். ஆனால் இந்த 330 வேட்பாளர்களில் ஒரேயொருவரைத் தவிர வேறு யாரும் தமிழ் மக்களை படுகொலை செய்தவர்களுடன் ஐந்து வயது முதல் வாழக் கிடைத்தது தனது பாக்கியம் என்று கூறியதில்லை. அந்த ஒரேயொருவர் சுமந்திரன் என்பதும் அவர் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்கும் இதைவிட வேறு என்ன காரணம் வேண்டும்? Image may contain: text that says "கறுப்பு யூலை இனஅழிப்பில் கொல்லப்பட்ட தமிழர்கள் நினைவாக 23.07.1983"

ஐயாவின் குசும்பு!

•ஐயாவின் குசும்பு! தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் 2015 தேர்தல் விஞ்ஞாபனத்திற்கும் 2020 தேர்தல் விஞ்ஞாபனத்திற்கும் இடையில் 6 வித்தியாசம் கண்டு பிடிப்போருக்கு சிறந்த பரிசு அளிக்கப்படும் என்று கூறும் அளவிற்கு அதே விஞ்ஞாபனத்தை மீண்டும் மக்கள் முன் வைத்திருக்கிறார் சம்பந்தர் ஐயா. பரவாயில்லை. இந்தக் காலத்தில் தேர்தல் விஞ்ஞாபனத்தை படித்து எந்த மக்கள் வாக்களிக்கப் போகிறார்கள் என்று சம்பந்தர் ஐயா நினைத்திருக்கக்கூடும். அல்லது, தான் என்ன கூறினாலும் அதை தமிழ் மக்கள் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பார்கள் என்றுகூட சம்பந்தர் ஐயா நினைத்திருக்கக்கூடும். அவர் என்ன நினைத்திருந்தாலும் பரவாயில்லை. ஆனால் தபால்மூலம் வாக்களிப்புக்கு முன்னர் தேர்தல் விஞ்ஞாபனம் வைக்கப்பட வேண்டும் என்பதைக்கூட ஐயா கவனத்தில் கொள்ளவில்லை. தபால் மூலம் வாக்களிப்பவர்கள் அனைவரும் படித்தவர்கள். அரச பதவிகளில் இருப்பவர்கள். அவர்களுக்கு தேர்தல் விஞ்ஞாபனம் தேவையில்லை என்று ஐயா கருதுகிறாரா? அல்லது அவர்கள் வோட்டு தமக்கு தேவையில்லை என்று கருதுகிறாரா? இதற்கிடையில் கடந்தமுறை தான் சந்திக்க மறுத்த முன்னாள் போராளிகளை இம்முறை தானே வலிய அழைத்து சந்தித்pருக்கிறார். அதுமட்டுமல்ல சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய உதவும்படி கேட்டபோது பேப்பர் படித்துக் கொண்டு திறப்பு தன்னிடம் இல்லை என்று திமிராக கூறியவர் இன்று அதே போராளிகளிடம் கெஞ்சுகிறார். வேலை வாய்ப்பு பெற்றால் தீர்வு பெற முடியாமல் போய்விடும் என்றவர் தனக்கு இரண்டு பங்களா, பதவி, 32 சிங்கள பொலிஸ் பாதுகாப்பு எல்லாம் கேட்டு வாங்கினார். எதிர்க்கட்சி தலைவர் பதவி மூலம் கிடைத்த 60 வேலை வாய்ப்பில் ஒரு டிறைவர் வேலைக்குகூட முன்னாள் போராளியை நியமிக்காத இந்த ஐயா இப்போது எந்த முகத்துடன் அல்லது என்ன தைரியத்தில் தமிழ் மக்கள் முன் வருகிறார்? “வன்னி மாட்டுக்கு ஒரு கத்தை வைக்கோல்” என்றுகூறி வன்னி மக்களை முட்டாள்கள் என அன்றைய தமிழ் தலைவர் சுந்தரலிங்கம் கருதினார். ஆனால் சம்பந்தர் ஐயா இன்னும் ஒரு படி மேலே போய் தமிழ் மக்களுக்கு மூளையே இல்லை என்று நினைக்கிறார். Image may contain: 2 people, including Sasitharan Prabakaran, close-up

கழுதை! முன்னால் போனால் முட்டும் பின்னால் போனால் உதைக்கும்!

•கழுதை! முன்னால் போனால் முட்டும் பின்னால் போனால் உதைக்கும்! 20 கோடி ரூபா எங்கே என்று கணக்கு கேட்ட பெண்ணை மகிந்தவின் ஊடுருவல் என்றார் சுமந்திரன் அடுத்து ஜபிசி ஊடகத்தை மகிந்தவின் ஆட்கள் என்று கூறினார் சுமந்திரன். “ரணில் உங்களை நல்லாய் ஏமாற்றிவிட்டார்”என்று சுமந்திரனிடம் அவரது மனைவி கூறியுள்ளார். இப்போது எமது அச்சம் என்னவெனில் பழக்கதோஷத்தில் தன்னுடைய மனைவியையும் மகிந்தவின் ஊடுருவல் என்று சுமந்திரன் சொல்லித் தொலைத்துவிடுவாரோ என்பதே. தனது சிங்களப்பேட்டி சம்பந்தர் ஐயாவுக்கு விளங்கவில்லை என்றார். தனது சிங்களப் பேட்டி விளங்காமல் அறிக்கைவிட்ட மாவை சேனாதிராசா மீது நடவடிக்கை எடுப்பேன் என்றார். இப்போது என்னடாவென்றால், தனது பேச்சு, தன் பேட்டிகள் உதயன் பத்திரிகை திரித்து எழுதுகிறது என்கிறார். கனடா ஊடகவியலாளர்கள் தனது பேட்டிக்கு வேண்டுமென்றே பொய் தலைப்பு இடுவதாக கூறுகிறார். கூட்டங்களில் கேள்வி கேட்பவர்களுக்கு தான் அளிக்கும் பதில்கள்கூட யாருக்கும் புரியுதில்லை என்று சுமந்திரன் புலம்புகிறார். ஒருவருக்கு புரியவில்லை என்றால் சம்பந்தப்பட்ட அந்த ஒருவரின் குறைபாடு என கருதலாம். ஆனால் எவருக்கும் புரியவில்லை என்றால் அது கூறுபவரின் குறைபாடு என்பதை சுமந்திரன் புரிந்து கொள்ள வேண்டும். சுமந்திரன் அவர்களே! தேர்தல் தோல்வி பயத்தில் உளற ஆரம்பித்து விட்டீர்கள். அதனால் எல்லோர் மீதும் பழி போடுகிறீர்கள். கொஞ்சம் பொறுமையாக இருந்து சிந்தியுங்கள். தவறு உங்கள் மீதே உள்ளது என்பதை கண்டறிவீர்கள். குறிப்பு - சுமந்திரன் தம்பிகளுக்கு! சுமந்திரன் மனைவி கூறியதற்கு என்ன ஆதாரம் என்று என்னிடம் கேட்காதீர்கள். இதை சுமந்திரனே கூறியுள்ளார். Image may contain: Anthonippillai Reginoldraj

கனடா பிரதமரும் ஆப்பிரகாம் சுமந்திரனும்!

கனடா பிரதமரும் ஆப்பிரகாம் சுமந்திரனும்! 1983 யூலை இனப் படுகொலைகளை ஈழத் தமிழருடன் சேர்ந்து தானும் நினைவு கூர்வதாக கனடா பிரதமர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்ல இவ் இனப்படுகொலைக்குரிய நியாயம் கிடைக்க கனடா தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும் அவர் தமிழ்மக்களுக்கு உறுதியளித்துள்ளார். ஆனால் சுமந்திரன், இவ் இனப்படுகொலை செய்தவர்களுடன் ஐந்து வயது முதல் சேர்ந்து வாழக்கிடைத்தது தனது பாக்கியம் என்கிறார். கனடா பிரதமர் தமிழர் இல்லை. தமிழர் வோட்டில் அவர் பிரதமராகவும் இல்லை. ஆனாலும் அவர் தமிழ் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார். ஆனால் சுமந்திரன் ஒரு தமிழர் மட்டுமல்ல தமிழ் மக்களின் வோட்டில் இதுவரை எம்.பி யாக இருந்தவர். இப்போதும் எம்.பி பதவிக்காக வந்திருக்கிறார். தமிழ் மக்களே! உங்கள் கையில் இருப்பது வோட்டு அல்ல வேட்டு. முன்னால் நிற்பது சுமந்திரன் மட்டும் அல்ல இனப்படுகொலை செய்த சிஙகளப்படை புடைசூழ நிற்கிறார். Image may contain: 2 people, people standing and suit Image may contain: one or more people, people standing and shoes

அடிமையாகி கிடந்துவிட மாட்டோம்

•அடக்குமுறையினால் அழித்தாலும் அடிமையாகி கிடந்துவிட மாட்டோம் முன்பைவிட வலிமையாக ஆர்ப்பரித்து எழுவோம்! ஒவ்வொரு வருடமும் யூலை மாதம் வரும்போது தமிழருக்கு நினைவில் வருவது 1983ம் ஆண்டு நடைபெற்ற இனப் படுகொலைகளே. அதுவும் வெலிக்கடை சிறையில் நடைபெற்ற குட்டிமணி, தங்கத்துரை உட்பட 52 பேரின் படுகொலைகள் மறக்க முடியாதவை. மனித இனம் உன்னதமான ஒரு வாழ்க்கையை, பரிபூரண விடுதலையை நோக்கி முன்னேறும் இக் காலகட்டத்தில் மிருகத்தனமான மிகக் கேவலமான முறையில் நடைபெற்ற நிகழ்வு அது. இக் கொடூரமான வெறிகொண்ட தாக்குதலில் பலியான கொள்கை மறவர்களில் ஒருவர் தோழர் அழகன் என்று அழைக்கப்பட்ட வேலுப்பிள்ளை சந்திரகுமார். தோழர் அழகன் பருத்தித்துறையில் புலோலி என்னும் இடத்தில் பிறந்தவர். காட்லிக்கல்லூரியில் கல்வி கற்றவர். 1979ம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் தன்னை முழு நேரமாக இணைத்துக்கொண்டவர். புலிகள் இயக்கம் உடைந்து புதிய பாதை ( புளட்) என்ற அணி உருவாகிய போது தோழர் அழகன் அதனுடன் தன்னை இணைத்துக் கொண்டார். பின்னர் அவ்வணியும் பழைய பாதையில் போவதைக் கண்டு அதிலிருந்து விலகி "தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை" என்னும் புரட்சிகர இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவராக விளங்கினார். தோழர் அழகன் மாக்சிய லெனிய மாவோசிச சிந்தனையை தனது வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டவர். அவர் இந்திய புரட்சிகர சக்திகளுடன் ஜக்கியத்திற்கு உழைத்தார். அதன் நிமித்தம் இந்தியா சென்று திரும்பியபோது கொழும்பு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டார். 1983ம் ஆண்டு யூலை மாதம்25ம் தேதியன்று வெலிக்கடை சிறையில் குட்டிமணி தங்கத்துரை போன்றவர்கள் கொல்லப்பட்டபோது தோழர் அழகன் அவர்களும் கொல்லப்பட்டார். தோழர் அழகன் கொல்லப்பட்டு இன்றுடன் 37 வருடங்கள் கழிந்துவிட்டன. ஆனால் அவர் விரும்பிய இலட்சியம் இன்னும் வெல்லப்படவில்லை. தமிழ் மக்கள் இன்னும் விடுதலை பெறவில்லை. வெலிக்கடை சிறையில் கொல்லப்பட்டவர்களுக்கு எமது அஞ்சலிகளை செலுத்துவோம். தோழர் அழகன் அவர்கள் நினைவாக புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுக்க உறுதி கொள்வோம். குறிப்பு- வெலிக்கடை சிறையில் மட்டுமல்ல களுத்துறை மற்றும் பிந்தனுவ சிறைகளிலும் தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் இதுவரை ஒருவர்கூட இக் கொலைகளுக்காக தண்டிக்கப்படவில்லை. Image may contain: one or more people, text that says "அடக்கு முறையினுல் அழித்தாலும் நக்கிரமிப்பை முறியடிப்போர்"

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு! ஈழத்திலும் சரி புலம்பெயர் நாடுகளிலும் சரி இன்று ஈழத் தமிழர்கள் மத்தியில் அதிகம் உச்சரிக்கப்படும் வார்த்தை “ஒற்றுமை” என்பதே. ஆனால் “ஒற்றுமை” அவசியம் என்பதை உணரப்பட்ட அளவிற்கு அந்த ஒற்றுமையை ஏற்படுத்த ஒரு “அமைப்பு” அவசியம் என்பது உணரப்படவில்லை. ஆம். ஒற்றுமை என்பது ஒரு இரவில் தானாக ஏற்பட்டுவிடக்கூடிய அதிசயம் இல்லை. அது ஒரு ஒன்றுபட்ட அமைப்பால் உருவாக்கப்பட வேண்டியது. தமிழ் மக்கள் ஒன்றுபடாவிட்டால் அவர்களுக்கு எதுவுமே கிடைக்கப்போவது இல்லை. ஒன்றுபட்டால் அவர்களால் பெற முடியாதது எதுவுமே இருக்கப்போவதுமில்லை. இந்த உண்மை தமிழ் இனத்திற்கு உணர வைக்க வேண்டும். உலக அளவில் தமிழ் இனம் உணர்ந்து ஒன்றுபடுமாயின் அது சிங்கள இனத்தைவிட நாலு மடங்கு பலமுள்ளதாக இருக்கும். அப்புறம் , தீர்வு கேட்டால் ரத்த ஆறு ஓடும் என்று தமிழனைப் பார்த்து மிரட்ட சிங்கள இனவெறியர்கள் யாருக்காவது தைரியம் வருமா? கிழக்காசியாவின் தூங்கும் அரக்கனா எம் தமிழ் இனம்? Image may contain: 1 person

ஒருவர் ஹரி ஆனந்த சங்கரி. இன்னொருவர் திருநாவுக்கரசு.

ஒருவர் ஹரி ஆனந்த சங்கரி. இன்னொருவர் திருநாவுக்கரசு. இருவரும் ஈழத் தமிழர்கள். இருவரும் இன்னொரு நாட்டுக்கு அகதியாக சென்றிருப்பவர்கள் . கனடாவுக்கு அகதியாக சென்ற ஹரி ஆனந்தசங்கரி அங்கு குடியுரிமை பெற்று இப்போது கனடா நாடாளுமன்றத்தில் எம்.பி யாக இருக்கிறார். 1983 யூலையில் நடைபெற்ற இனப்படுகொலை பற்றிக் குறிப்பிட்டு ஈழத் தமிழருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று ஹரி அனந்தசங்கரி நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். உடனே கனடா பிரதமர் “ஈழத் தமிழருக்கு உரிய நியாயம் கிடைக்க கனடா நிச்சயம் உதவும்” என உறுதியளித்துள்ளார். அதேவேளை இந்திய பிரதமர் மோடி தமக்கு பின்னால் இருப்பதாக சம்பந்தர் ஐயா கூறுகிறார். ஆனால் இந்தியா இதுவரை ஒரு ஈழத் தமிழருக்கும் குடியுரிமை வழங்கவில்லை. அதுமட்டுமல்ல உயர் கல்வி கற்கவோ அல்லது அரச வேலைவாய்ப்பு பெறுவதையோ மறுக்கிறது. அதைவிட சிறப்புமுகாம் என்னும் சித்திரவதைமுகாமில் அடைத்து வைத்து துன்புறுத்துகிறது. பிச்சை வேண்டாம். நாயைப் பிடி என்பது போல் கனடா மாதிரி உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை துன்புறுத்தாதே என்று கெஞ்சும் நிலையே இருக்கிறது. இந்த நிலையிலே விக்கினேஸ்வரன் அவர்களை (ஈழத்து) தாய்லாமாவாக கருத வேண்டும் என திருநாவுக்கரசு கூறியுள்ளார். இதேபோன்று காசி அனந்தன் அவர்கள் “இந்து தமிழீழம்” கேட்டால் இந்திய அரசு உதவும் என்று கூறியிருக்கிறார். இங்கு வேதனை என்னவென்றால் காசி அனந்தன் திருநாவுக்கரசு இருவரும் இப்பவும் அகதியாகவே இந்தியாவில் இருக்கினறனர். இவர்களுக்குகூட இந்திய அரசு குடியுரிமை வழங்காதது மட்டுமல்ல அவர்களின் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்தியே வைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல லண்டனில் இருக்கும் தனது மகளைப் பார்க்கக்கூட காசி ஆனந்தனுக்கு ஒரு ரவல் டொக்கிமென்ற் பாஸ்போர்ட் வழங்கக்கூட இந்திய அரசு மறுக்கிறது. இந்நிலையில் இவர்கள் இருவரும் இந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவும் என்று எந்த நம்பிக்கையில் கூறுகின்றார்கள் என்று புரியவில்லை. Image may contain: 1 person, suit Image may contain: 1 person, close-up

துரோகத்தை தண்டிப்பது தவறா?

•துரோகத்தை தண்டிப்பது தவறா? யாழ் மேயர் அல்பிரட் துரையப்பாவை துரோகி என சுட்டுக்கொல்லப்பட்ட நாள் இன்று ஆகும். (27.07.1975) துரையப்பாவை துரோகி என சுட்டுக் கொன்றது தவறு என்று சுமந்திரன் உட்பட சிலர் இன்று கூறுகின்றனர். வேடிக்கை என்னவெனில் துரையப்பாவை துரோகி என்று கூறி அவரை தமிழ் இளைஞர்கள் மூலம் கொல்ல வைத்தவர்கள் சுமந்திரன் அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சியும் அதன் தலைவர் அமிர்தலிங்கமும்தான். துரையப்பாவை மட்டுமல்ல கட்சி மாறிய பொத்துவில் எம்.பி கனகரத்தினத்தையும் துரோகி என்றும் அவருக்கு இயற்கையான மரணம் நிகழாது என்றும் பாராளுமன்றத்திலேயே பேசியவர் அமிர்தலிங்கமே. இவ்வாறு துரோகி முத்திரை குத்தி சுட்டுக் கொல்லும் கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்தவர்கள் இப்போது தாங்கள் நல்லவர்களாகவும் தங்கள் பேச்சைக் கேட்டு சுட்ட இளைஞர்களை தவறானவர்களாகவும் காட்டுகிறார்கள். சரி. பரவாயில்லை. ஆனால் இவர்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறோம். ஒரு இனம் தனது விடுதலைக்காக போராடும்போது தான் சந்திக்கும் துரோகிகளை என்ன செய்வது? அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா? அல்லது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களால் அழிந்து போக வேண்டுமா? நாம் அறிந்தவரையில் சிங்கள மக்கள் மத்தியில் போராடிய ஜே.வி.பி இயக்கமும் துரோகிகள் மீது மரண தண்டனை நடவடிக்கை எடுத்துள்ளது. உலகில் போராட்டம் நடத்திய பல அமைப்புகள் இவ்வாறு துரோகிகள் மீது நடவடிக்கை எடுத்ததாகவே வரலாறு இருக்கிறது. ஆனால் இவை எல்லாவற்றையும்விட தமிழ் மக்கள் மத்தியில் நடைபெற்ற துரோக ஒழிப்பே அதிகம் விமர்சிக்கப்படுகிறது. ஏனெனில் இங்குதான் துரோகிகளை தியாகிகளாகவும் தியாகிகளை துரோகிகளாகவும் மாற்ற முயற்சி செய்கிறார்கள். குறிப்பு- யாராவது தவறாக தண்டிக்கப்பட்டிருந்தால் அதனை தாராளமாக சுட்டிக் காட்டுங்கள். அதைவிடுத்து அதற்காக துரோகிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று கூற முற்படாதீர்கள். Image may contain: 1 person, close-up

சம்பந்தர் ஐயாவின் காலைப் பிடித்து கெஞ்சச் சொன்னீர்கள்

சம்பந்தர் ஐயாவின் காலைப் பிடித்து கெஞ்சச் சொன்னீர்கள் அவர்களும் அவர் காலைப் பிடித்து அழுது கெஞ்சினார்களே அப்புறம் பிரதமர் ரணில் காலைப் பிடித்து கெஞ்சச் சொன்னீர்கள் அவர்களும் அவர் காலைப் பிடித்து அழுது கெஞ்சினார்களே அப்புறம் பிரிட்டன் பிரதமர் கமரோன் காலை பிடிக்கச் சொன்னீர்கள் அவர்கள் அவர் காலையும் பிடித்து அழுது கெஞ்சினார்களே யார் யார் காலை எல்லாம் பிடிக்கச் சொன்னீர்களோ அவர்களும் அவ்வாறே அனைவரின் காலையும் பிடித்துக் கெஞ்சினார்களே ஆனால் கடைசிவரை அவர்களது காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் பற்றி எதுவும் கூறாமலே சாகடித்து வருகிறீர்களே உங்களுக்கு கொஞ்சம்கூட அவர்கள் மீது இரக்கம் வரவில்லையா? படிப்படியா ஒவ்வொரு தாயாரும் செத்து விட்டால் காணாமல் போனோர் பிரச்சனையும் காணாமல் போய்விடும் என்று நினைக்கிறீர்களா? அவர்கள் பிள்ளைகளை உங்களால் திருப்பி கொடுக்க முடியாவிட்டாலும் அவர்கள் பிள்ளைகள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்பதைக்கூட உங்களால் இந்த பத்து வருடத்தில் கூற முடியவில்லையா? இதுகூட முடியவில்லை என்றால் அப்புறம் என்ன ம - - க்கு வோட்டு கேட்டு வாறியள்? Image may contain: one or more people and people standing, text that says "காணாமல் ஆக்கப்பட்டவரின் உறவினரை சம்பந்தனின் காலில் விழ வைத்த சிறிதரன்!" Image may contain: 1 person, sitting Image may contain: 5 people, outdoor

தமிழீழம்!

•தமிழீழம்! 1949 ஆண்டு முதல் தனது தமிழரசுக்கட்சிதான் சமஸ்டிக்காக குரல் கொடுத்து வருவதாக சுமந்திரன் கூறிவருகிறார். அதுமட்டுமல்ல இப்போது தமிழீழத்தை முன்வைக்க யாருக்காவது தைரியம் இருக்கிறதா எனவும் கிண்டலாக கேட்கிறார். சுமந்திரனுக்கு வரலாறு தெரியவில்லையா அல்லது தெரிந்தே வேண்டுமென்று வரலாற்றை திரிக்கிறாரா என்று புரியவில்லை. தமிழரசுக்கட்சி தலைவர் அமிர்தலிங்கமும் காங்கிரஸ் தலைவர் சிவசிதம்பரமும் சேர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணி பெயரால் தமிழீழத்தை முன்வைத்தார்கள். 1977ல் இந்த தமிழீழ தீர்வுக்கு தமிழ் மக்களின் ஆதரவையும் ஆணையையும் இவர்கள் பெற்றார்கள். உண்மையில் இந்த தமிழீழ தீர்வை முதன் முதலில் முன்வைத்தவர் பலரும் நினைப்பதுபோல் அமிர்தலிங்கம் இல்லை. சுயாட்சிக் கழக நவரட்ணம் அவர்களே இதனை முதன் முதலில் முன்வைத்தவர். ஆனால் சுயாட்சிக்கழக நவரட்ணம் அவர்கள் இதனை முன்வைத்தபோது இது தற்கொலைக்கு ஒப்பான தீர்வு என்றுதான் அமிர்தலிங்கம் கூறினார். ஆனால் இதே அமிர்தலிங்கம் பின்னர் தானே தமிழீழ தீர்வை முன்வைத்தார். அமிர்தலிங்கம் முன்வைத்த இந்த தமிழீழத் தீர்வை அடைவதற்காகவே தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள். எனவே அன்று ஏன் தமிழீழத்தை முன்வைத்தார்கள்? இன்று ஏன் தமிழீழத்தை கைவிட்டார்கள்? என்பது குறித்து பதில் அளிக்க வேண்டிய கடமை சுமந்திரனுக்கும் அவரது தமிழரசுக்கட்சிக்குமே உள்ளது. ஆனால் அவரோ “இன்று தமிழீழத்தை முன்வைக்க யாருக்காவது தைரியம் இருக்கா?” என்று நக்லாக கேட்கிறார். தமிழீழத்திற்காக மரணித்த பல்லாயிரம் மாவீரர்களையும் மக்களையும் சுமந்திரன் ஒருவரால்தான் இவ்வாறு இத்தனை பகிரங்கமாக கிண்டல் செய்ய முடியும். Image may contain: தங்க.செங்கதிர் செங்கதிர், text that says "சோசலிசத் தமிழிழத்தை நோக்கி...."

சம்பந்தர் ஐயா மற்றும் சுமந்திரனை தோற்கடிக்கப்போவது யார்?

சம்பந்தர் ஐயா மற்றும் சுமந்திரனை தோற்கடிக்கப்போவது யார்? இந்த தேர்தலில் சுமந்திரன் மட்டுமல்ல சம்பந்தர் ஐயாவே தோல்வியடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அப்படியானால் இவர்களை தோற்கடிக்கப்போவது யார் என்று பார்த்தால், கNஐந்திரகுமார் பொன்னம்பலம் அணியினர் என்று சிலர் நினைக்கலாம் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அணியினர் என்று இன்னும் சிலர் நினைக்கலாம் டக்ளஸ் தேவானந்தா அணியினர் என்றும்கூட வேறு சிலர் நினைக்கலாம். ஆனால் சம்பந்தன் சுமந்திரனை தோற்கடிக்கப்போவது உண்மையில் இவர்கள் எவரும் இல்லை. மூன்று முக்கிய விடயங்களே சம்பந்தர் மற்றும் சுமந்திரனை தோற்கடிக்கப் போகின்றன. அவையாவன, • அரசியல் கைதிகளின் பிரச்சனை • காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சனை • இடம் பெயர்ந்தோரின் மீள் குடியேற்றப் பிரச்சனை. ஒரு வருடத்தில் ஏன் தீர்வு பெற்று தரவில்லை என்பதற்குகூட ஏதாவது ஒரு காரணத்தை சம்பந்தர் மற்றும் சுமந்திரனால் கூறிவிட முடியும். ஆனால் மேற்கூறப்பட்ட மூன்று விடயங்களும் கடந்த பத்து வருடமாக ஏன் தீர்க்கப்படவில்லை என்பதற்கு எந்தவொரு காரணத்தையும் இவர்களால் கூறிவிட முடியாது. மக்கள் மனங்களில் பெருங் கோபக் கனலாக சுழன்று கொண்டிருக்கும் இந்த விடயங்கள் நிச்சயம் தேர்தலில் எதிரொலிக்கப் போகின்றன. தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்பில் ஒரு தும்புத் தடியை நிறுத்தினால்கூட அது இலகுவாக தேர்தலில் வென்றுவிடும் என்ற நிலையே இத்தனை காலமாக இருந்தது. அதுவும் சில செம்புகள் தங்கள் காரியங்களை சாதித்துக் கொள்வதற்காக “சம்பந்தர் ஐயா படுத்துக் கொண்டே nஐயிப்பார்” என்று வேற எழுதினார்கள். இதை சிங்கள பொலிஸ் பாதுகாப்பு மத்தியில் இருக்கும் சம்பந்தர் சுமந்திரன் ஆகியோர் உண்மை என்று நம்பிக் கொண்டிருந்தார்கள். அதனால்தான் இம்முறை ஒரு லட்சம் வாக்குகளால் தான் ஜெயிப்பேன் என்று சுமந்திரன் திமிராக பேட்டி அளித்தார். ஆனால் இன்று தேர்தல் கள நிலை என்ன? இந்த கொரோனோவுக்கு மத்தியிலும் ஐந்து நாளில் 80 சந்திப்புகளை தான் நடத்தியதாக சுமந்திரன் கூறுகிறார். சுமந்திரன் நிலை பரிதாபம் என்றால் சம்பந்தர் ஐயாவின் நிலை அந்தோ பரிதாபம் என்று இருக்கிறது. இதுவரை சுமந்திரனையே மக்கள் விரட்டி விரட்டி கேள்வி கேட்டு வந்தனர். ஆனால் இப்போது சம்பந்தர் ஐயாவை அவரது சொந்த திருமலை தொகுதியிலேயே மக்கள் கேள்வி கேட்டு விரட்டுகிறார்கள். இந்த வயதில் தனக்கு இப்படி ஒருநிலை வரும் என சம்பந்தர் ஐயா நிச்சயம் கனவில்கூட நினைத்திருக்கமாட்டார். இவர்கள் இருவரும் வெல்கிறார்களோ இல்லையோ ஆனால் இருவருக்கும் மக்கள் தோல்விப் பயத்தைக் காட்டிவிட்டார்கள். உண்மையில் மக்கள் மகத்தான சக்திகளே! குறிப்பு- படங்களைப் பார்த்தவுடன் இது ஏதோ குடை பற்றிய பதிவு என்று சிலர் நினைத்திருக்க கூடும். அவ்வாறு தோன்றியிருந்தால் அவர்கள் என்னை மன்னிப்பார்களாக. Image may contain: one or more people Image may contain: 2 people, people standing and outdoor

சபாஷ்! சரியான போட்டி !!

•சபாஷ்! சரியான போட்டி !! கணக்கு கேட்ட பெண் மீது ஆயிரம் கோடி ரூபா நட்ட ஈடு கேட்டார் சுமந்திரன். இப்போது அதே சுமந்திரனிடம் நூறு கோடி ரூபா நட்ட ஈடு கேட்கிறார் மறவன்புலவு சச்சிதானந்தம். சுமந்திரனும் சரி, மறவன்புலவு சச்சிதானந்தனும் சரி இருவரும் ஒரு ரூபாகூட நட்டஈடாக பெறப்போவதில்லை. அதுவும் கோயிலுக்குள் நோட்டீஸ் ஒட்டியதற்காக சுமந்திரனிடம் நூறு கோடி ரூபா கேட்பது சின்னப்பிள்ளைத்தனமானது. நகைப்புக்கிடமானது. கோயிலுக்குள் அதுவும் கருவறையில் எந்த வேட்பாளருமே நோட்டீஸ் ஒட்டமாட்டார்கள். அதுவும் தான் ஒட்டினால் அது மதவிரோதமாக்கப்படும் என்பதை புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு சுமந்திரன் ஒன்றும் முட்டாள் இல்லை. இது சுமந்திரனுக்கு வேண்டாத ஒருவர் ஒட்டியிருக்க வேண்டும். இல்லையேல் சச்சிதானந்தம் தானே ஒட்டியிருக்க வேண்டும். ஏனெனில் இதன்மூலம் சுமந்திரனின் கிருத்தவத்தால் சைவத்திற்கு ஆபத்து வந்துவிட்டதாக அவர் பிரச்சாரம் செய்கிறார். இங்கு ஆச்சரியம் என்னவெனில் திருக்கோணேஸ்வரம் மட்டுமல்ல நல்லுர் முருகன் கோவிலும் தம்முடையது என்று பௌத்த பிக்குகள் கூறும்போது சச்சிதானந்தம் மௌனம் சாதிக்கிறார். ஆனால் சுமந்திரனாலும் அவருடைய கிருத்தவ மதத்தாலும் ஈழத்தில் சைவத்திற்கு ஆபத்து என்று அவர் கூறுகிறார். வேடிக்கை என்னவெனில், சுமந்திரனும் சரி, சச்சிதானந்தனும் சரி இருவருக்கும் பாஸ் (BOSS ) இந்தியாதான். அப்புறம் ஏன் இவர்கள் இருவரும் தமக்குள் மோதிக்கொள்கிறார்கள்? ஆம். அதுதான் இந்தியாவின் நரித்தனம். தமிழ் மக்களை பல்வேறு பிரிவுகளாக பிரித்து வைத்திருக்க வேண்டும் என்பதே இந்தியாவின் திட்டம். சம்பூரில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடி இந்தியாவுக்கு வழங்கப்பட்ட 650 ஏக்கர் நிலத்தை மீட்டார்கள். சம்பூரில் இந்தியா பெற்ற படிப்பனையினால்தான் தமிழ் மக்கள் இனி ஒன்றுபட்டுவிடக்கூடாது என பிரிப்பு வேலைகளை செய்கிறது. மன்னாரில் உள்ள பெற்றோல் வளம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்கு எதிராக தமிழ் சைவ மற்றும் கிருத்தவ மக்கள் ஒன்றுபட்டுவிடக்கூடாது என்பதற்காகவே இந்தியாவின் சச்சிதானந்தனால் கிருத்தவ எதிர்ப்பு தூண்டப்படுகிறது. Image may contain: 1 person, standing and outdoor Image may contain: sky and outdoor

தோழர் சாருமஜீம்தார் அவர்களுக்கு வீர வணக்கம்.

தோழர் சாருமஜீம்தார் அவர்களுக்கு வீர வணக்கம். கொன்று புதைத்தால் மீண்டும் முளைத்து எழுவர். வெட்டி எறிந்தால் கடல் அலைபோல் மீண்டு வருவர் - செர பண்டாயி மேற்கு வங்கம் மாநிலம் சிலிகுரி மாவட்டத்தில் நக்சல்பாரி என்ற கிராமத்தில் எழுந்த விவசாயிகளின் உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற முழக்கம் இந்திய துனைகண்டம் முழுவதும் பேரலைகளை எழுப்பியது. ”வசந்தத்தின் இடி முழக்கம்” என்று வர்ணிக்கப்பட்ட அந்த எழுச்சியின் நாயகன் தோழர் சாரு. தோழர் சாருமஜீம்தார் அவர்களின் நினைவுகள் அழிவதில்லை. 1972ல் படுகொலை செய்யப்பட்ட தோழர் சாரு அவர்களுக்கு வீர வணக்கம். தோழர் சாருவை கொலை செய்வதன் மூலம் புரட்சியாளர்களான நக்சலைட்டுகளை ஒழித்துவிட முடியும் என இந்திய அரசு நினைத்தது. நக்சலைட்டுகளை ஒழிப்பதற்காக மேலும் 7 பட்டாலியன்களை இந்திய அரசு உருவாக்கியுள்ளது. எத்தனை பட்டாலியன்களை உருவாக்கி எத்தனை பேரை சுட்டுக் கொன்றாலும் நக்சலைட்டுகளை ஒருபோதும் ஒழிக்க முடியாது. சொந்த மக்களை கொல்வதற்காக மேலும் மேலும் படைகளை உருவாக்கும் ஒரே ஜனநாயகநாடு(?) உலகில் இந்தியா மட்டுமே. நக்சலைட்டுகள் தேச விரோதிகள் அல்லர். அவர்கள் தேச பக்தர்கள் என்று இந்திய உச்ச நீதிமன்றமே தெரிவித்திருக்கிறது. ஆனால் இந்திய அரசோ நக்சலைட்டுகளை ஒழிப்பதாக கூறிக்கொண்டு அப்பாவி மக்கள் மீது யுத்தம் நடத்துகிறது. ஏழை மக்களின் அபிவிருத்திக்கு பணம் ஒதுக்க மறுக்கும் இந்திய அரசு, அந்த ஏழை மக்களை ஒழிப்பதற்காக படைகளை உருவாக்க பணம் ஒதுக்கிறது . இந்த அநியாயத்தை இன்னும் எத்தனை நாளைக்கு இந்திய மக்கள் அனுமதிக்கப் போகின்றார்கள்? இந்த அவலத்திற்கு எப்போது இந்திய மக்கள் முடிவு கட்டப் போகிறார்கள்? Image may contain: 1 person, text

இந்த இருவர் கொலைகளையும் கண்டிக்கும் தைரியம் சுமந்திரனுக்கு உண்டா?

•இந்த இருவர் கொலைகளையும் கண்டிக்கும் தைரியம் சுமந்திரனுக்கு உண்டா? ஒருவர் தர்மலிங்கம். மற்றவர் ஆலாலசுந்தரம் இருவரும் சுமந்திரனின் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள். ஒருவர் கோப்பாய் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர். மற்றவர் மானிப்பாய் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர். 1983 யூலைக் கலவரத்தை அடுத்து அமிர்தலிங்கம் சிவசிதம்பரம் சம்பந்தர் எல்லாம் நாட்டை விட்டு ஓடி தமிழ்நாட்டில் இருந்தார்கள். அப்போது நாட்டில் மக்களோடு மக்களாக இருந்தவர்கள்தான் இந்த ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கம். இவர்கள் இருவரும் 02.09.1985 யன்று ரெலோ இயக்கத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இவர்கள் ஏன் கொல்லப்பட்டார்கள் என்று இன்றுவரை தமிழ் மக்களுக்கு தெரியாது இங்கு வேதனை என்னவென்றால் இவர்களை ஏன் கொல்கிறோம் என்று இவர்களை சுட்டுக் கொன்ற ரெலோ இயக்கத்திற்கும் தெரியாது. ரெலோ இயக்கத்தைப் பொறுத்தவரை இந்திய உளவுப்படையான றோ இவர்களை கொல்லும்படி கூறியது. எனவே நாம் கொன்றோம் என்றே கூறுகிறார்கள். அதுதான் உண்மையும்கூட. இந்திய உளவுப்படையே கொல்வித்தது என்ற உண்மை அப்போது இந்தியாவில் இருந்த அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தர் முதலானவர்களுக்கும் தெரியும். ஆனாலும் இதுவரை ஒருவர்கூட இந்திய உளவுப்டையையோ அல்லது இந்திய அரசையோ கண்டிக்கவில்லை. ஆனால் சுமந்திரன் தன்னை தைரியமான ஆளு என்கிறார். அவர் துரையப்பாவின் கொலையை கண்டிககிறார். எனவே தனது கட்சியை சேர்ந்த இந்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் கொலைக்கு காரணமான இந்திய உளவுப்படையை அவர் கண்டிப்பாரா? Image may contain: 2 people, text

சுமந்திரன் மீது வரலாறு காணாத எதிர்ப்பு!

•சுமந்திரன் மீது வரலாறு காணாத எதிர்ப்பு! இந்தளவுக்கு எதிர்ப்பினை ஈழத் தமிழர் வரலாற்றில் வேறு எந்த வேட்பாளரும் சந்தித்ததில்லை. அந்தளவுக்கு வரலாறு காணாத அளவிற்கு எதிர்ப்பினை சுமந்திரன் சந்தித்து வருகிறார். •யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு •காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் எதிர்ப்பு •யாழ் புத்திஜீவிகள் அமைப்பு எதிர்ப்பு •சொந்தக் கட்சிக்குள் மகிளிர் அணி எதிர்ப்பு •சொந்தக் கட்சியின் சக வேட்பாளர்களே எதிர்ப்பு இவ்வாறு வெளியே, உள்ளே, எங்கும், எதிலும் எதிர்ப்பு சந்திக்கும் ஒரே வேட்பாளராக சுமந்திரன் இருக்கிறார். இத்தனைக்கும் பிறகும் அவர் வெற்றி பெற்றதாக இலங்கை அரசு அறிவிக்குமாயின் அது உலகின் எட்டாவது அதிசயமாக இருக்கும Image may contain: 1 person

நலம் பெற்று வாருங்கள்

நலம் பெற்று வாருங்கள். நிச்சயம் வருவீர்கள் என நம்பிக்கையுடன் காத்து இருக்கிறோம். Image may contain: 1 person, text that says "SUPPORT GANDHI தோழர் திருமுருகன் காந்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார!!! அவர் விரைவில் குணமடைந்து மீண்டும் அதே ஆற்றலுடன் இயங்குவார்!!!"

இந்தியா யாருக்கு பின்னால் நிற்கிறது?

இந்தியா யாருக்கு பின்னால் நிற்கிறது? இந்தியா தனக்கு பின்னால் நிற்பதாக சம்பந்தர் ஐயா கூறுகிறார். ஆனால் சிலர், இந்தியா விக்கினேஸ்வரன் பின்னால் நிற்பதாக கூறுகிறார்கள். உண்மை என்னவென்றால் இவர்கள் யார் பின்னாலும் இந்தியா இல்லை. இவர்கள்தான் எல்லோரும் இந்தியா பின்னால் நிற்கிறார்கள். இந்தியா இதுவரை இவர்களை திரும்பிப் பார்க்கவில்லை. இனியும் திரும்பிப் பார்க்கப் போவதில்லை. ஆனாலும் இந்தியாவை நம்புமாறு கோருவதை இவர்கள் நிறுத்தப் போவதுமில்லை. இந்த நிலையில் விக்னேஸ்வரனை ஈழத்து தாய்லாமா என்றும் அவரை வைத்து இந்திய ஆதரவை பெறலாம் எனவும் சிலர் கூறுகின்றனர். 1983ல் இலுப்பப்பழம் பழுத்தால் வெளவால் வரும் என்றார்கள். வந்தது வெளவால் அல்ல நரி என்பதை அனுபவத்தில் கண்டோம். இப்போது மீண்டும் விக்னேஸ்வரன் வந்தால் இந்தியா உதவும் என்கிறார்கள். ஒறிஜினல் தாய்லாமாவுக்கே இந்தியா உதவவில்லை. அப்படியிருக்க ஈழத்து தாய்லாமாவுக்கு இந்தியா உதவும் என எப்படி இவர்கள் நம்புகின்றனர்? கேட்டால் உலகமயமாக்கல், பூகோளமயமாக்கல் கதைகள் பல சொல்கின்றனர். தமக்கு கிடைக்கும் இறைச்சித் துண்டிற்காக இந்திய எஜமானுக்கு நன்றியுடன் வாலாட்டும் நாய்க்குட்டிகள் இவர்கள். Image may contain: Nalli Thaya, sitting and beard

ஈழத் தமிழருக்கு இந்தியா உதவுமா?

ஈழத் தமிழருக்கு இந்தியா உதவுமா? இந்தியா இதுவரை ஈழத் தமிழருக்கு உதவவில்லை. இனியும் உதவப் போவதில்லை. ஆனால் ஈழத் தமிழர்களின், •திருகோணமலை துறைமுகம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது •திருகோணமலை எண்ணெய்குதம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது •சம்பூர் அனல் மின்நிலையம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது •புல்மோட்டை இல்மனைற் கனிவளம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது •காங்கேசன்துறை துறைமுகம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது •காங்கேசன் சீமெந்து இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது •பலாலி விமான நிலையம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது •மன்னார் பெற்றோல் வளம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது இவ்வாறு ஈழத் தமிழரின் அனைத்து வளங்களும் 2009 க்கு பின்னர் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுவிட்டன. ஆனால் இந்தியா தான் செய்த இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் வழங்கப்பட்ட வடக்கு கிழக்கு இணைப்பைக்கூட இலங்கை அரசு நீக்கியபோது அதனை தடுக்கவில்லை. ஆட்டுக்குட்டிக்கு உதவுவேன் என நரி கூறினால் அது அதன் தந்திரம். ஆனால் நரி தனக்கு உதவும் என்று ஆட்டுக்குட்டி நம்பினால் அது அதன் அறியாமை. இந்தியா ஈழத் தமிழருக்கு உதவும் என்று சில ஈழத் தமிழர் நம்புவது ஆட்டுக்குட்டியைவிட அறியாமையானதாகும். Image may contain: ‎text that says "‎தமிழ் மக்களைக் காப்பாற்ற நான் இருக்கிறேன் தமிழ் மக்கள் இந்தி ل அரசு admkpasaral‎"‎

இனப்படுகொலையில் இந்தியாவின் பங்கு!

•இனப்படுகொலையில் இந்தியாவின் பங்கு! இலங்கை அரசும் இந்திய அரசும் சேர்ந்தே தமிழின படுகொலைகளை நிகழ்த்தின என்று நாம் கூறியபோது சிலர் அதை நம்ப மறுத்தனர். பின்னர் மகிந்த ராஜபக்சா, கோத்தபாய ராஜபக்சே ஆகியோரும்கூட இந்திய அரசின் உதவியுடனே யுத்தத்தை வென்றோம் என்று கூறிய பின்னரும்கூட அந்த சிலர் நம்ப மறுத்தனர். இப்போது இந்த உண்மையை ஈழத் தமிழர்களின் தலைவர் எனப்படும் சம்பந்தர் ஐயாவே ஒப்புதல் வாக்குமூலமாக கூறியுள்ளார். இலங்கை அரசு சார்பாக ஒரு குழுவும் இந்திய அரசு சார்பாக இன்னொரு குழுவும் அமைக்கப்பட்டு இந்த இரண்டு குழுக்களும் சேர்ந்து போரில் புலிகளை தோற்கடித்ததாக சம்பந்தர் ஐயா கூறியுள்ளார். இலங்கை குழு சார்பாக கோத்தபாய ராஜபக்சா, பசில் ராஜபக்சா போன்றவர்களும் இந்தியக் குழு சார்பாக நாராயணன், சிவசங்கர்மேனன் போன்றவர்கள் இடம்பெற்றதாக சம்பந்தர் ஐயா தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி, யுத்தம் முடிந்த பின் இனப்பிரச்சனைக்கு தீர்வு முன்வைக்கப்படும் என இந்த இரண்டு குழுக்களும் சேர்ந்து தமக்கு உறுதி வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் வாக்குறுதி வழங்கியபடி தீர்வு தராமல் இலங்கை அரசு ஏமாற்றி விட்டது என்றும் எனவே வாக்குறுதி வழங்கியபடி இந்தியா தீர்வைப் பெற்று தரவேண்டும் என்று சம்பந்தர் ஐயா கேட்டுள்ளார். இப்போது எமது கேள்வி என்னவென்றால் இனியாவது இனப்படுகொலையில் இந்தியாவின் பங்கை அந்த சிலர் ஏற்றுக்கொள்வார்களா என்பதே. ஆனால் நாளைக்கு சோனியா காந்தியே வந்து “ஆம். நாமும் சேர்ந்தே தமிழர்களை அழித்தோம்” என்று கூறினால்கூட இந்த சிலர் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று எமக்கு தெரியும். சரி இப்போது விடயத்திற்கு வருவோம். இந்த இந்திய குழு கொழும்பு சென்று திரும்பும்போதெல்லாம் சென்னையில் தமிழக முதல்வர் கலைஞரை சந்தித்து சகல விபரங்களையும் பரிமாறியுள்ளது. எனவே இதில் இருந்து தமிழக முதலமைச்சர் கலைஞருக்கும் தெரிந்தே அவருடைய சம்மதத்துடனேயே தமிழின படுகொலை நடந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.. ஆனால் இந்த உண்மையை புரியாமல் இப்பவும் சிலர் “ஒரு முதலமைச்சர் நினைத்தால் யத்தத்தை நிறுத்த முடியுமா? ஏன் இந்தியாவே நினைத்தால்கூட யுத்தத்தை நிறுத்தியிருக்க முடியுமா?” என்றெல்லாம் கேட்கின்றனர். அவர்களுக்கு நாம் கூறவிரும்புவது “ ஈழத் தமிழராகிய நாம் இனப்படுகொலையாளிகளை ஒருபோதும் மறக்கவும் மாட்டோம். மன்னிக்கவும் மாட்டோம்”. Image may contain: 2 people Image may contain: 1 person Image may contain: 1 person, close-up Image may contain: 1 person, beard and close-up

நண்பர் தின வாழ்த்துகள்!

நண்பர் தின வாழ்த்துகள்! இன்று காலை திருச்சியில் இருந்து ஒரு நண்பர் என்னுடன் உரையாடினார். எனக்கு மிகவும் மகிழ்ச்சி ஏனெனில் கிட்டத்தட்ட 23 வருடங்களின் பின்னர் அவர் தொடர்பு கிடைத்திருக்கிறது. நான் சிறையில் இருந்தபோது எனக்கு பெரிதும் உதவிய நண்பர்களில் இவரும் ஒருவர். இத்தகைய நண்பரின் தொடர்பு நண்பர் தினமான இன்று கிடைத்திருப்பது உண்மையில் இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. பொதுவாக பலரும் உடைந்துபோகும் இடம் சிறைச்சாலை. ஆனால் நான் எட்டு வருடம் சிறை வாழ்க்கையை அனுபவித்தபோதும் உறுதி குலையாமல் இருந்தமைக்கு முக்கிய காரணம் இத்தகைய நண்பர்களின் உதவியாகும். சிலர் என்னுடன் பேசும்போது “எப்படி உங்களால் இத்தனை காலமும் அர்ப்பணிப்புடன் செயற்பட முடிகிறது?” என ஆச்சரியத்துடன் கேட்பார்கள். நான் அவர்களுக்கு கூறுவது “ இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. எனக்கு கிடைத்ததுபோல் நண்பர்கள் உங்களுக்கு கிடைத்திருந்தால் நீங்கள் என்னைவிட அதிகமாக செயற்பட்டிருப்பீர்கள்”. என்று. இது உண்மைதான். எனது பலமும் நண்பர்கள்தான். அதேவேளை எனது பலவீனமும் நண்பர்கள்தான். என்னுடன் ஒன்றாக பழகிய நண்பர்கள் சிலர் இறந்து விட்டார்கள். ஆனாலும் நான் தொடர்ந்தும் புரட்சிகர அரசியலில் உறுதியாக பயணிப்பதற்கு பெரிதும் துணை புரிவது அவர்களுடனான நினைவுகளே. நாம் எமது வாழ்வில் விரும்பியளவு பணத்தை சம்பாதித்துவிட முடியும். நாம் எம் வாழ்வில் விரும்பியளவு கல்வி கற்றுவிட முடியும். ஆனால் விரும்பியளவு நண்பர்களை இலகுவில் நாம் பெற்றுவிட முடியாது. இன்று பொதுவாக எல்லோரும் என்னை “தோழர்” என்றே அழைப்பார்கள். ஆனால் எனது ஊர் நண்பர்கள் மட்டும் இப்போதும் என்னை “அண்ணை” என்றே உரிமையுடன் அழைப்பார்கள். நேற்று இரவு 12 மணிக்கு ஊர் நண்பர் ஒருவர் தொலைபேசியில் “ அண்ணை உங்கட அட்ரஸை ஒருக்கால் ரெக்ஸ் பண்ணிவிடுங்க” என்றார். அதற்கு நான் “ஏன்டா, ஏன் இப்படி நடு ராத்தரியில அலுப்பு கொடுக்கிறாய்?” என்று கேட்டேன். அவர் லண்டனில் காய்கறி பிசினஸ் செய்கிறார் அதனால “ அண்ணை! கொரோனோ முடியும்வரை ஒவ்வொரு வாரமும் ஒரு பெட்டி காய்கறிகள் உங்கள் வீட்டுக்கு அனு;ப்பி வைக்கிறேன். நீங்கள் கவனமாக இருங்கள்” என்று அக்கறையுடன் கூறினார். கொழும்பில் நான் அரச உதவியுடனுடன் அரச பாதுகாப்புடனும் இருந்ததாக அண்மையில் முகநூலில் ஒருவர் எழுதியிருந்தார். எனது நண்பர்கள் 14 லட்சம் ரூபா அனுப்பி என்னை பராமரித்தார்கள் என்ற உண்மை அவருக்கு தெரிந்திருந்தால் இப்படி எழுதியிருக்கமாட்டார். பொதுவாக இந்த உலகில் சிறந்த நட்புக்கு மார்க்ஸ் எங்கெல்ஸ் நட்பையே உதாரணமாக கூறுவார்கள். அப்படி ஒரு நட்பு தம் வாழ்வில் கிடைக்க வேண்டும் என்பதே ஒவ்வொருவரின் ஆசையாக இருக்கும். என் இனிய நண்பர்கள் அனைவருக்கும் “வாழ்த்துகள்” Image may contain: text that says "நன்பர்கள் தின வாழ்த்துக்கள்"

இம்முறை யார் வெல்ல வேண்டும் என்பதைவிட சுமந்திரன் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே முக்கியம்!

•இம்முறை யார் வெல்ல வேண்டும் என்பதைவிட சுமந்திரன் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே முக்கியம்! தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உண்டு. அனைத்து வேட்பாளர்களும் தாங்கள் வெற்றி பெற்றால் என்ன செய்வோம் என்பதை தமிழ் மக்களுக்கு தெரிவித்துவிட்டார்கள். எனவே; முடிவு எடுக்க வேண்டிய கட்டத்தில் இப்போது தமிழ் மக்கள் இருக்கிறார்கள். யார் என்ன சொல்லியிருந்தாலும் இவர்களில் யார் வெற்றி பெற்றாலும் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைத்துவிடப் போவதில்லை என்பதே உண்மை. ஆனால் சுமந்திரன் வெற்றி பெற்றால், (1) நடந்தது இனப்படுகொலை அல்ல வெறும் போர்க்குற்றமே என்று தான் கூறியதை தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்று சுமந்திரன் கூறுவார். (2) போர்க்குற்ற விசாரணையில் புலிகள் செய்த இனச்சுத்திகரிப்பும் விசாரிக்கப்பட வேண்டும் என்று தான் கூறியதை தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று சுமந்திரன் கூறுவார். (3)ஆயுதப் போராட்டம் வன்முறை என்றும் அதனை செய்தவர்களை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியதை தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று சுமந்திரன் கூறுவார். (4) இன அழிப்பு செய்தவர்களுடன் 5 வயது முதல் சேர்ந்து வாழ கிடைத்தது பாக்கியம் என்று தான் கூறியதை தமிழ் மக்கள் சரி என்று ஏற்றுக் கொண்டுள்ளனர் என்று சுமந்திரன் கூறுவார். (5) தான் ஜனாதிபதி சட்டத்தரணி பதவி பெற்றதையும்; தனக்கு சிங்கள பொலிஸ் பாதுகாப்பு பெற்றதையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டதாக சுமந்திரன் கூறுவார். (6) அம்பிகா அன்ரிக்கு எம்.பி பதவி பெற்றுக் கொடுக்க தான் முனைவதையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டதாக சுமந்திரன் கூறுவார். இவ்வாறு பல விடயங்களை தான் வெற்றி பெற்றால் சுமந்திரன் கூறப் போகிறார். எனவேதான் இம்முறை யார் வெற்றி பெற வேண்டும் என்பதைவிட சுமந்திரன் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே தமிழ் மக்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். குறிப்பு - சுமந்திரன் தோற்கடிக்கப்பட்டால், •சுமந்திரனுக்கு வழங்கப்படும் சிங்கள பொலிஸ் பாதுகாப்பு நீக்கப்படும் •சுமந்திரன் பெயரால் தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்படுவது நிறுத்தப்படும் •முக்கியமாக இதுவரை கைது செய்யப்பட்ட அப்பாவி 16 தமிழ் இளைஞர்களும் விடுதலை செய்யப்பட வாய்ப்பு ஏற்படும். Image may contain: 1 person

சுமந்திரன் மீதான தமிழக அமைப்புகளின் எதிர்ப்பின் அர்த்தம் என்ன?

சுமந்திரன் மீதான தமிழக அமைப்புகளின் எதிர்ப்பின் அர்த்தம் என்ன? புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் இருந்தே முதன் முதலில் சுமந்திரன் மீதான எதிர்ப்பு ஆரம்பித்தது. அதன் பின்னர் ஈழத்தில் காணாமல்போன உறவுகள் போன்ற அமைப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் ஆரம்பித்தன. அடுத்து இப்போது சொந்த கட்சிக்குள்ளே இருந்தும் பங்காளிக் கட்சிகளிடமிருந்தும் சுமந்திரன் எதிர்ப்புகளை சந்திக்கிறார். ஆனால் இவை எல்லாம் ஈழத் தமிழர்கள் ஈழத் தமிழரான சுமந்திரனை எதிர்ப்பதாக புரிந்து கொள்ள முடிகிறது. அதேவேளை தமிழக அமைப்புகளிடமிருந்து வரும் சுமந்திரன் எதிர்ப்புகள் ஆச்சரியம் தருகின்றன. ஏனெனில் இதுவரை தமிழக அமைப்புகள் எவையும் இவ்வாறு பகிரங்கமாக தேர்தலில் தங்கள் கருத்தை கூறியதில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்னர் தமிழர்நல பேரியக்க தலைவர் இயக்குனர் மு.களஞ்சியம் அவர்கள் சுமந்திரன் உருவப் பொம்மையை தமிழகத்தில் எரித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இப்போது இன்னொரு தமிழ் அமைப்பு தலைவரான இயக்குனர் கௌதமன் அவர்கள் சுமந்திரன் பேச்சை நம்ப வேண்டாம் என்றும் அவரை நிராகரிக்கும்படியும் ஈழத் தமிழ் மக்களை கேட்டுள்ளார். அதைவிட, நாம்தமிழர் கட்சித் தலைவர் சீமான் அவர்கள் சுமந்திரன் அங்கம் வகிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பையே நிராகரிக்கும்படி தமிழ் மக்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். இவற்றை நோக்கும்போது இவை வெறும் சுமந்திரன் எதிர்ப்புகளாக மட்டும் அடக்கி புரிந்துகொள்ள முடியாது. மாறாக, ஆதரவு வழங்கல் என்ற நிலையில் இருந்து சேர்ந்து பங்களித்தல் என்ற நிலைக்கு தமிழக அமைப்புகள் நகர்கின்றன என்பதையே முக்கியமாக புரிந்து கொள்ள வேண்டும். சுமந்திரன் எதிர்ப்பில் விளைந்துள்ள நன்மைகளில் இது முக்கியமானது. Image may contain: one or more people, people standing and shoes Image may contain: 1 person, close-up Image may contain: 1 person, beard and close-up Image may contain: 2 people, selfie and close-up

•இந்தியாவும் தமிழீழமும்!

•இந்தியாவும் தமிழீழமும்! இந்திரா காந்தி அம்மையார் போராளிகளுக்கு ஆயுதமும் பயிற்சியும் வழங்கியது உண்மை. ஆனால் அவர் ஒருபோதும் தமிழீழத்தை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. ஆதரிக்கவும் இல்லை. இந்திரா காந்தி மரணத்தை அடுத்து ஆட்சிக்கு வந்த ராஜிவ் காந்தி அவர்களும் தமிழீழத்தை ஏற்க வில்லை. ஆதரிக்கவும் இல்லை. வாஜ்பேய், அத்வானி போன்ற பாஜக தலைவர்கள் கலைஞர் கருணாநிதி ஏற்பாடு செய்த மதுரை டெசோ மாநாட்டில் பங்குபற்றி தமிழீழத்தை ஆதரித்தார்கள். ஆனால் பின்னர் பாஜக ஆட்சிக்கு வந்து வாஜ்பேய் பிரதமரானபோது அவரும் தமிழீழத்தை அங்கீகரிக்கவில்லை. ஏற்றுக்கொள்ளவும் இல்லை. இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும் சரி பாஜக ஆட்சிக்கு வந்தாலும் சரி இந்திய மத்திய அரசின் கொள்கை என்பது தமிழீழத்திற்கு எதிராகவே இருக்கிறது. அதேபோல் தமிழ்நாடு மாநிலத்தில் இருக்கும் கட்சிகளில் கம்யுனிஸ்ட் கட்சியை தவிர மற்ற கட்சிகள் பெரும்பாலும் அனைத்தும் தமிழீழத்தை ஆதரிக்கின்றன. ஆனால் மாநில ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவதுடன் நிறுத்திவிடுவார்கள். கேட்டால் இதற்குமேல் தமக்கு அதிகாரம் இல்லை என்பார்கள். அதுவும் கலைஞர் கருணாநிதி அவர்கள் எதிர்கட்சியாக இருக்கும்போது தமிழீழத்தை வலியுறுத்தி டெசோ மாநாடு நடத்துவார். ஆனால் தமிழக முதல்வராக ஆட்சிபீடம் ஏறியதும் ஈழத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசின் கொள்கையே தமது கொள்கை என்று கூறி பல்டி அடித்து தனது பதவியை காப்பாற்றிக் கொள்வார். இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்திற்கு இருக்கும் அதே அதிகாரம்தான் மேற்குவங்க மாநிலத்திற்கு உண்டு. ஆனால் பங்காபளாதேஸ் பிரிவினையின்போது மேற்கு வங்க முதல்வராக இருந்தவர் “இந்தியா படையை அனுப்பாவிடில் நான் எனது பொலிசை அனுப்புவேன்” என்று பகிரங்கமாக கூறினார். அப்போது மேற்கு வங்க முதல்வராக இருந்தவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். ஆனாலும் அவர் தனது கட்சிப் பிரதமர் இந்திராகாந்தியை எதிர்த்து துணிவாக தனது இன மக்களுக்காக குரல் கொடுத்தார். ஆனால் கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது ஈழத் தமிழருக்காக குரல் கொடுக்கவில்லை. மாறாக மழை விட்டும் தூவானம் விடவில்லை என்று தமிழர் மரணங்களை கூறினார். அதுமட்டுமல்ல காங்கிரசுடன் சேர்ந்து இனப்படுகொலையில் பங்கெடுத்துள்ளார் என்று இப்போது சம்பந்தர் ஐயா கூற்றில் இருந்து தெரிகிறது. சரி. இப்போது இதையெல்லாம் ஏன் கூற வேண்டும் என்று இதை படிக்கும்போது கேள்வி எழலாம். சீனாவுக்கும் இந்தியாவுக்கும் முரண்பாடு அதிகரித்துவிட்டது என்றும் எனவே இந்தியா இனி தமிழீழத்தை அதரிக்கும் என சிலர் இப்பொது கூற ஆரம்பித்துள்ளார்கள். இது உண்மையா என்பதுபற்றி அடுத்த பதிவில் விரிவாக பார்ப்போம். No photo description available.