Friday, July 31, 2020

சுமந்திரனுக்கு எதிராக ஒரு மூத்த போராளியின் அறைகூவல்!

•சுமந்திரனுக்கு எதிராக ஒரு மூத்த போராளியின் அறைகூவல்! சுமந்திரனுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று மூத்த போராளியும் ஒரு மாவீரரின் தந்தையுமான முத்துக்குமார் மனோகர் (காக்கா) வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏற்கனவே 20 கோடி ரூபா எங்கே என்று கேட்ட பெண்ணை மகிந்தவின் ஊடுருவல் என்றுகூறி கட்சியை விட்டு நீக்கிவிட்டார் சுமந்திரன். அடுத்து சுமந்திரன் பற்றி எழதியவுடன் ஜபிசி ஊடகத்தை மகிந்தவிடம் பணம் பெற்று தனக்கு எதிராக எழுதுவதாக சுமந்திரன் கூறினார். இப்போது காக்கா அண்ணையையும் மகிந்தவின் ஊடுருவல் என்று பழி சுமத்தப்போகிறாரா அல்லது போராளி என்றால் ஏன் முள்ளிவாய்க்காலில் சயனைட் கடிக்கவில்லை என்று கேட்கப் போகிறாரோ தெரியவில்லை. அல்லது ஏற்கனவே தன்னை கொல்ல முயன்றதாக 15 இளைஞர்களை சிறையில் அடைத்து வைத்திருப்பதுபோல் இவரையும் சிறையில் அடைக்கப் போகிறரா தெரியவில்லை. ஆனாலும் எற்கனவே பல இழப்புகளை சந்தித்த காக்கா அண்ணை எதற்கும் அஞசாது துணிந்து சுமந்திரனுக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார். உண்மையில் அவரது இந்த அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. மற்றவர்களும் இதேபோல் வந்து சுமந்திரனுக்கு எதிராக குரல் கொடுக்க வழி சமைக்கிறது. Image may contain: 1 person, text that says "JC JAFFN Watch late JAFFN PRC ය ) CLL கமிழ்"

No comments:

Post a Comment