Friday, July 31, 2020

கோணேஸ்வரம் தங்களுடையது என்று சிங்கள புத்த பிக்கு கூறுகிறார்

கோணேஸ்வரம் தங்களுடையது என்று சிங்கள புத்த பிக்கு கூறுகிறார். இராவணன் ஒரு முஸ்லிம். எனவே கோணேஸ்வரம் தங்களுடையது என முஸ்லிம் உலமாக் கட்சி கூறுகின்றது. ஆனால் இது தமிழருடையது என்று தமிழராகிய எம்மால் உரத்து கூற முடியவில்லை. சிங்கள தலைவரான விக்கிரமபாகு கருணாரத்தினா “ சிங்களவர்கள் வந்தேறிகள் என்றும் அதை தம்மால் நிரூபிக்க முடியும்” என்கிறார். ஆனால் தமிழர்களாகிய நாம் எமது தமிழர் தேசத்தைக்கூட எம்முடையது என்று கூற முடியவில்லை. கூறினால் உடனே ஓடி வந்து “நீ இனவாதி” என்கிறார்கள் நம்மவர் சிலர். “நீ சீமானிஸ்ட்” என்கிறார்கள் இன்னும் சிலர். “நீ நாஜிவாதி” என்றும்கூட சொல்கிறார்கள் தமிழ் அன்னையே! அடுத்த பிறப்பு என்று ஒன்று இருந்தால் என்னை நாகலாந்திலாவது பிறக்க விடு. ஏனெனில் அவர்கள்கூட இந்திய அரசுக்கு எதிராக போராடி தமக்கு தனிக்கொடி .தனி பாஸ்போர்ட் எல்லாம் பெற்றிருக்கிறார்களாம். Image may contain: 1 person, text that says "வந்தேறு குடிகள் சிங்களவர்களே! ஆதாரத்துடன் நிருபிப்பேன்; விக்கிரமபாகு கருணாரத்ன சவால்! தேசிய நினைவெ"

No comments:

Post a Comment