Friday, July 31, 2020

சுமந்திரன் அவர்களே!

•சுமந்திரன் அவர்களே! சி.வி.கே சிவஞானம் மகிந்தவின் ஊடுருவலா? அல்லது வாள் வெட்டு கோஸ்டியுடன் ஆயுதம் ஏந்த வேண்டுமா? விடுதலைப் பலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களின் தற்பாதுகாப்பிற்காகவே ஆயுதம் ஏந்தினார் என்று சிவி.கே.சிவஞானம் கூறியுள்ளார். விடுதலைப் போராட்டத்தை வன்முறையாக சுமந்திரன் காண்பிப்பது தவறு. அது வன்முறை அல்ல என்று தமிழரசுக்கட்சி முக்கியஸ்தரும் வடமாகாணசபை சபாநாயகருமான சிவஞானம் தெரிவித்துள்ளார். இப்போது எம்மத்தியில் எழும் கேள்வி என்னவெனில் சிவஞானம் அவர்களை வாள்வெட்டுக் கோஸ்டியில் சேரும்படி சுமந்திரன் கூறப்போகிறாரா அல்லது வழக்கம்போல் அவரை மகிந்தவின் ஊடுருவல் என்று சுமந்திரன் கூறப்போகிறாரா என்பதே. சுமந்திரன் என்ன கூறுவார் என்பதை எம்மால் ஊகிக்க முடிகிறது. ஆனால் அவரது தம்பிகள் சிவஞானத்தின் ஏழு பரம்பரையை தோண்டி எடுத்து எழுதுவாங்களே. அதை நினைத்தால்தான் சாடையா வேர்க்குது. ஆண்டவா! சிவஞானத்தைக் காப்பாற்று. Image may contain: இ.ரா.சரவணன் திராவிடர் கழகம், beard and close-up Image may contain: 1 person

No comments:

Post a Comment