Wednesday, January 29, 2014

• தோழர் லெனின் அவர்களின் 90வது நினைவு தினம்(21.01.2014)

• தோழர் லெனின் அவர்களின் 90வது நினைவு தினம்(21.01.2014)

நூலகங்களில் உறங்கிக் கிடந்த மாக்சியத்தை நடைமுறைப்படுத்திக் காட்டிய மாபெரும் ஆசான் தோழர் லெனின் அவர்களின் 90வது நினைவு தினம் இன்று ஆகும்.

ரஸ்சிய பாட்டாளி வர்க்கத்திற்கு தலைமையேற்று மாபெரும் ரஸ்சிய புரட்சியை வெற்றிபெற வைத்தவர். உலக பாட்டாளி வர்க்கத்திற்கு நம்பிக்கை ஒளி தந்தவர் தோழர் லெனின்

முதலாளி வர்க்க கொடுமைகள் ஒழிய, பாட்டாளி வர்க்கம் ஆட்சியைப் பிடிக்க, ஆயுதப் போராட்டம் மூலமே சாத்தியம் என்பதை நிரூபித்தவர் தோழர் லெனின்

தனி ஒரு நாட்டில் புரட்சி சாத்தியம் இல்லை என்று கூறிய டிரொக்சியின் அகில உலகப் புரட்சியை தத்துவார்த்த ரீதியாகவும, நடைமுறைரீதியாகவும் தோற்கடித்தவர் தோழர் லெனின்.

தேசிய இனப் பிரச்சனைக்கு தீர்வாக சுயநிர்ணய உரிமையை முன்வைத்தவர் தோழர் லெனின். இதன் மூலம் சிறுபான்மை இனங்களின் நம்பிக்கையைப் பெற்றவர் தோழர் லெனின்.

திரிபுவாதிகளை அம்பலப்படுத்தினார். ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உலகப் பாட்டாளி வர்க்கத்தின் ஜக்கியத்தை ஏற்படுத்தியவர் தோழர் லெனின்.

• மாக்சிய லெனிச மாவோசிச சிந்தனையில்
புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்போம்!

• பாராளுமன்ற பாதையை நிராகரித்து ஆயுதம் ஏந்திய
மக்கள் யுத்தப் பாதையை முன்னெடுப்போம்.!

• போலிகளை அம்பலப் படுத்துவோம்.
புரட்சிவாதிகள் ஜக்கியப் படுவோம்!

• ஜக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கை தமிழர் தூக்கில் இடப்பட்டார்!

• ஜக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கை தமிழர் தூக்கில் இடப்பட்டார்!

• முறையான விசாரணை நடைபெற வில்லை என சர்வதேச மன்னிப்பு சபை தெரிவிப்பு!

விபத்திற்கு மரண தண்டனையா?
என்ன காட்டுமிராண்டித்தனம்?
இந்த அநியாயத்தை கேட்க யாருமே இல்லையா?

• தூக்கில் இடப்பட்டவர் தமிழர் என்பதால் இலங்கை அரசு அக்கறை கொள்ளவில்லை.

• தூக்கில் இடப்பட்டவர் கிழக்கு மாகாண தமிழர் என்பதால் ஊடகங்கள் கவனம் செலுத்தவில்லை.

• தூக்கில் இடப்பட்டவர் ஏழை என்பதால் நீதி நியாயம் பெற்றுக் கொள்ள முடியவில்லை.

இந்தியாவில் சிலருக்கு மரணதண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது என்ற மகிழ்வான செய்தி வந்த அதே நேரத்தில் ஜக்கிய அரபு இராச்சியத்தில் ஒரு இலங்கை தமிழர் தூக்கில் இடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் என்ற துயர செய்தி வந்துள்ளது.

தூக்கில் இடப்பட்டவர் கிருஸ்ணபிள்ளை ரவீந்திரன் . அவர் இலங்கையில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர். இவர் தமிழர் என்பதால் இலங்கை அரசு அக்கறை கொள்ளவில்லை. இவரை காப்பாற்ற குரல் கொடுக்காதது மட்டுமல்ல இவருடைய உடலைக்கூட பெற்றுக் கொடுக்க இலங்கை அரசு முன்வரவில்லை.

இவர் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த தமிழர் என்பதால் எமது ஊடகங்களும் வழக்கம்போல் கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனும் கூட இதற்கு குரல் கொடுக்காதது வேதனையாக இருக்கிறது.

இவர் ஒரு ஏழை. இவருக்காக உதவி செய்யவோ குரல் கொடுக்கவோ யாரும் இல்லை. இவருக்கு முறையான விசாரணை நடைபெறவில்லை என சர்வதேச மன்னிப்பு சபையே குறை கூறியுள்ளது.

ஜக்கிய அரபு இராச்சியத்தின் காட்டு மிராண்டித்தனத்தை கண்டிப்போம்!

உலகம் முழுவதும் மரண தண்டனை ஒழிக்க குரல் கொடுப்போம்!

• இந்து மதத்தை இழிவு படுத்திப் பேசியமைக்காக சீமான் மீது வழக்கு பதிவு

• இந்து மதத்தை இழிவு படுத்திப் பேசியமைக்காக சீமான் மீது வழக்கு பதிவு

• பகுத்தறவு வாதிகள் அனைவரும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.

இந்து மதத்தை இழிவு படுத்திப் பேசியமைக்காக நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தந்தை பெரியார் வாழ்ந்த மண்ணில், பெரியாரின் வழி வந்த கட்சி தலைவி ஆட்சி செய்கிற தமிழ்நாட்டில, பெரியாரின் பகுத்தறிவுப் பிரச்சாரத்தை செய்தமைக்கு வழக்கு என்றால் அதன் அர்த்தம் என்ன?

இந்து மதத்தை இழிவு படுத்திப் பேசியிருந்தால் அதற்கு இந்து மதக் கடவுள்தானே நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு பொலிஸ் ஏன் நடவடிக்கை எடுக்கிறது?

தமிழ்நாடு பொலிஸ் எப்போதிலிருந்து இந்து மதக்கடவுளின் வேலையை செய்ய தொடங்கியுள்ளது?

சீமான் மீது நடவடிக்கை எடுக்கும் சக்தி இந்து மதக்கடவுள்களுக்கு இல்லை என்று தமிழ்நாடு அரசு கருதுகிறதா?

இந்தியா ஜனநாயக நாடு என்கிறார்கள். இங்கு அனைவருக்கும் சுதந்திரம் உண்டு என்கிறார்கள். கடவுள் இருக்கு என்று கூற ஒரு கூட்டத்திற்கு சுதந்திரம் உண்டு என்றால் கடவுள் இல்லை என்று கூற இன்னொரு கூட்டத்திற்கு ஏன் சுதந்திரம் இல்லை?

கடவுள் பெயரால, மதத்தின் பெயரால், மூட நம்பிக்கைகளையும், கலவரங்களையும் ஒரு கூட்டம் விதைக்க முடியும் என்றால் அதை எதிர்த்து பகுத்தறிவை வளர்ப்பது எப்படி தவறாகும்? அவ்வாறு பகுத்தறிவை வளர்ப்பவர் மீது எப்படி வழக்கு பதிவு செய்ய முடியும்?

மதத்தின் பெயரால் பல்லாயிரம் மக்களை கொன்றவன் தலைவன் மட்டுமல்ல ஒரு கட்சியின் பிரதமர் வேட்பாளர் ஆகவும் நிறுத்தப்பட்டுள்ளார். அவர் மீது வழக்கு இல்லை. ஆனால் பகுத்தறிவை பிரச்சாரம் செய்பவன் மீது வழக்கு. இதன் அர்த்தம் என்ன?

• சீமான் என்ன பேசினாரோ அதைவிட அதிகமாக நாம் எல்லோரும் பேசுவோம்!

• சீமான் மீதான் வழக்கை நாம் அனைவரும ஒன்றாக கண்டிப்போம்!

• சீமானுக்காக அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுப்போம்!

அன்று பெரியார் கையில் செருப்பு இருந்தது
அடங்கி இருந்தார்கள் மதவாதிகள்.
இன்று எம் கையில் எதுவும் இல்லை.
அதனால்தான் வழக்கு என்று மிரட்டுகிறார்கள்.
இதுவே தொடருமானால்
நாளை எம் கையில் இருப்பது
செருப்பு அல்ல துப்பாக்கியே!

இந்திய குடியரசு தின வாழ்த்து தெரிவிப்போர் ஒரு நிமிடம் இதனை சிந்தியுங்கள்!

இந்திய குடியரசு தின வாழ்த்து தெரிவிப்போர் ஒரு நிமிடம் இதனை சிந்தியுங்கள்!

இந்தியா ஒரு சுதந்திரமான நாடு என்கிறார்கள்.
இந்தியாவில் யாருக்கு சுதந்திரம் உள்ளது?

• மணிப்பூரில் பெண்களை கற்பழித்து தங்களுக்கு ஆண்மை உள்ளதாக நிரூபிக்க இந்திய ராணுவத்திற்கு சுதந்திரம் உண்டு.

• சாதி மாறி காதலித்தால் பெண்ணை 13 பேர் கற்பழிக்குமாறு உத்தரவிடுவதற்கு நாட்டாமைக்கு சுதந்திரம் உண்டு.

• கோடிக்கணக்கான ஊழல் செய்வதற்கு சோனியாவுக்கு மட்டுமல்ல அனைத்து அரசியல்வாதிகளுக்கும் சுதந்திரம் உண்டு.

• காஸ்மீரில் அப்பாவி முஸ்லிம் மக்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி கொல்வதற்கு சுதந்திரம் உண்டு.

• கூலிப்படையை ஏவி கொலை செய்ய சங்கராச்சாரிக்கு சுதந்திரம் உண்டு. அது மட்டுமல்ல நீதியை விலை கொடுத்து வாங்கவும் அவருக்கு சுதந்திரம் உண்டு.

• பற்றரி வாங்கி கொடுத்த பேரறிவாளனுக்கு மரண தண்டனையும் கொலை செய்த சங்கராச்சாரிக்கு விடுதலையும் வழங்க இந்திய நீதித்துறைக்கு சுதந்திரம் உண்டு.

• இலங்கையில் 40 ஆயிரம் மக்களைக் கொல்ல இந்திய அரசுக்கு சுதந்திரம் உண்டு. அதுமட்டுமல்ல தமிழக மீனவனைக் கொல்ல இலங்கை கடற்படைக்கு பயிற்சி வழங்கவும் இந்திய அரசுக்கு சுதந்திரம் உண்டு.

இப்படி பல சுதந்திரம் இந்தியாவில் உண்டு.
நீங்கள் எந்த சுதந்திரத்திற்கு வாழ்த்து தெரிவிக்கின்றீர்கள்?

சந்திப்பும் கலந்துரையாடலும்.

• தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகம் சார்பில் நடைபெற்ற சந்திப்பும் கலந்துரையாடலும்.

கடந்த 25.01.2014யன்று லண்டன் ஈஸ்ட்காமில் தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகம் சார்பில் சந்திப்பும் கலந்துரையாடலும் நடைபெற்றது. மாலை 4.00 மணி இரவு 8.00 மணி வரை நிகழ்வுகள் நடைபெற்றன.

முதலாவது அமர்வாக அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம் தலைமையில் “நவதாராளவாத பொருளாதாரமும் இலங்கையும்” என்னும் தலைப்பில் உரையாடல் நடைபெற்றது. அரசியல் செயற்பாட்டாளர் சிறீ அவர்கள் உரையாற்றினார். அவர் நோர்வேயில் இருந்து வந்திருந்தார்.

சிறீ அவர்கள் முதலில் நவதாராளவாத பொருளாதாரம் என்றால் என்ன என்று விளக்கினார். பின்னர் அது இலங்கையில் எப்படி தாக்கம் செலுத்துகிறது என்பதை ஜே.ஆர் காலத்தில் இருந்து விளக்கினார். அவர் உதாரணங்களினூடாகவும் தேவையான அளவு புள்ளி விபரங்களுடன் ஒரு சிறப்பான உரையாடலை நிகழ்த்தினார். அவரின் உரையை தொடர்ந்து பார்வையாளர்களின் கருத்து பரிமாறல்கள் இடம் பெற்றன.

நவதாரளவாத பொருளாதாரம் குறித்து மேலதிகமாக அறிய விரும்புவோர் “போராட்டம்” இதழ்களில் அது பற்றிய கட்டுரைகளை படிக்கலாம் என்றும் சிறீ அவர்கள் தனது உரையின்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இரண்டாவது அமர்வாக மு.நித்தியானந்தன் அவர்கள் தலைமையில் தமிழகத்தில் இருந்து வந்திருந்த எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் அவர்களின் உரையாடல் நடைபெற்றது. யுவன் சந்திரசேகர் பல கவிதைகள், சிறுகதை, நாவல் என்பன எழுதியுள்ளார்.

எழுத்தாளர் யுவன் அவர்கள் தனது உரையில் தனது எழுத்து வரலாறு பற்றி கூறினார். தனது எழுத்து மற்றவர்களில் இருந்து எப்படி வேறுபட்டிருக்கிறது என்பதையும் கூறினார். இறுதியில் பார்வையாளர்களின் கேள்விகளுக்கும் கருத்துகளுக்கும் பதில் அளித்து பேசினார்.

Monday, January 20, 2014

• அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!

• அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!

இந்த ஆண்டு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலை ஆண்டாக அமைய உழைப்தென்று சபதம் கொள்வோம்.

2013 ஆண்டு கழிந்து 2014 ம் ஆண்டு பிறந்துள்ளது. வழக்கம்போல் வாழ்த்துகளும் புதுவருட தீர்மானங்களும் வந்து செல்கின்றன. ஆனால் மக்களுக்கு எந்த விடிவும் கிட்டவில்லை. மாறாக மேலும் மேலும் மக்கள் மீது சுமைகள் ஏற்றப்படுகின்றன. இந்த கொடுமைக்கு என்னதான் முடிவு?

இலங்கையில் யுத்தம் முடிந்து 4 வருடங்களாகிவிட்டது. பாலும் தேனும் ஓடும் என்றார்கள். ஆனால் யுத்தகாலத்திலும் பார்க்க அதிகமாக பெண்கள் மீதும் சிறுவர்கள் மீதும் கொடுமைகள் நிகழ்த்தப்படுகின்றன. உலகிலேயே சிறுவர் பாலியல் அதிகமான நாடு என்று இலங்கை பெயர் எடுத்துள்ளது. இதுதான் மகிந்த சிந்தனையா?

இலங்கையில் இன்னும் பலர் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் மீது விசாரணையும் இல்லை. விடுதலையும் இல்லை. இதன் அர்த்தம் என்ன?

இந்தியாவில் சங்கரராமனைக் கொன்ற சங்கராச்சாரியார் விடுதலை. நூற்றுக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்ற மோடி விடுதலை. ஆனால் பற்றரி வாங்கி கொடுத்தமைக்காக பேரறிவாளனுக்கு மரண தண்டனை. சந்தன வீரப்பனை நேரில் பார்க்காதவர்களுக்கு சந்தன வீரப்பனுக்கு உதவியதாக மரண தண்டனை. இது என்ன நீதி என்றால் இதுதான் இந்திய நீதி என்று திமிராக கூறுகிறார்களே!

அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலைக்கு உரத்து குரல் கொடுப்போம்!

இந்த ஆண்டு அரசியல் கைதிகளின் விடுதலை ஆண்டாய அமைய உழைப்தென்று சபதம் கொள்வோம்!

• மீனவர்கள் தாக்கப்பட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் - கலைஞர் அறிக்கை.

• மீனவர்கள் தாக்கப்பட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் - கலைஞர் அறிக்கை.

இதுவரை சுமார் 600 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அயிரக் கணக்கானவர்கள் அடித்து துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள். பலர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம் வராத உணர்வு இப்போது எதற்காக கலைஞருக்கு வருகிறது?

தேர்தல் நெருங்குகிறது. எனவே அறிக்கையுடன் நிறுத்தாமல் சில வேளை கூறியபடி கலைஞர் உண்ணாவிரதம் இருக்கவும் முனையலாம். ஆனால் இதன் மூலம் மீனவர்கள் பிரச்சனை தீருமா?

• மீனவர் பிரச்சனை தீராமைக்கு மத்திய அரசே காரணம் - ஜெயா அம்மையார் கூறுகிறார்.

மீனவர் பிரச்சனை தீராமைக்கு மத்திய அரசே காரணம் என்றும் அதனால் கச்சதீவை மீட்க வேண்டும் என்று சட்டசபையில் அவர் தீர்மானம் இயற்றுகிறார். கச்சதீவை மீட்டால் எப்படி இந்த மீனவர் பிரச்சனை தீரும் எனக் கேட்டால் அதற்கு பதில் தர மறுக்கிறார்.

• இலங்கை தமிழ் மீனவனே உண்மையில் பரிதாபத்திற்குரியவன்.

ஒரு பக்கம் தமிழக மீனவர்கள் எல்லை மீறி வந்து மீன் பிடிப்பது மட்டுமல்ல வலைகளை அறுத்தும் செல்கிறார்கள். இன்னொரு பக்கம் இலங்கை அரசு சிங்கள மீனவர்களை கொண்டு வந்து ஆக்கிரமிக்கிறது. இவற்றுகிடையில் அகபட்டு வாழ முடியாமல் உண்மையில் பரிதாபத்திற்கு உரியவர்களாக இரப்பவர்கள் இலங்கை தமிழ் மீனவர்களே!.

மிகவும் கஸ்ட நிலையில் இருக்கும் இலங்கை தமிழ் மீனவர்கள் குறித்து யாராவது கவலைப்படுகிறார்களா?
இலங்கை இந்திய அரசுகள் ஏதும் அக்கறை கொள்கின்றனவா?
ஏன் கலைஞர் ஜெயா அம்மையார் கூட இந்த தமிழ் மீனவர்கள் குறித்து கவலை கொள்ளவில்லை?

• பேச்சுவார்த்தைக்கு இலங்கை தமிழ் மீனவர்கள் அழைப்பு!

இந்த மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண இலங்கை இந்திய மீனவர்களுக்கிடையில் பேச்சுவார்ததை நிகழ வேண்டும். இதற்கு எற்பாடு செய்து தரும்படி இலங்கை தமிழ் மீனவர்கள் பல முறை தமிழக அரசிடம் கேட்டுவிட்டனர். ஆனால் ஜெயா அம்மையார் இது குறித்து எந்த பதிலும் அளிக்காமல் அக்கறை இன்றி இருக்கிறார்.

எனவே கலைஞர் மற்றும் ஜெயா அம்மையார் அவர்களே!

உங்களுக்கு இந்த மீனவர்கள் பிரச்சனை தீர வேண்டும் என்று உண்மையிலே அக்கறை இருக்குமாயின் இலங்கை தமிழ் மீனவர்கள் கேட்டுக்கொள்ளும் இலங்கை இந்திய மீனவர்களின் பேச்சுவார்த்தைக்கு எற்பாடு செய்து கொடுங்கள்.

அதைவிடுத்து தேர்தல் திருவிழாவுக்கு நாடகம் போட நீங்கள் முயற்சி செய்தால் வரலாறு உங்களை மன்னிக்காது என எச்சரிக்கின்றோம்.

• அர்த்தமற்ற கோரிக்கை வைப்பதை அய்யா நெடுமாறன் நிறுத்த வேண்டும்.

• மீனவர்களுக்கு துப்பாக்கி வழங்க வேண்டும்- அய்யா நெடுமாறன் கோரிக்கை

• அர்த்தமற்ற கோரிக்கை வைப்பதை அய்யா நெடுமாறன் நிறுத்த வேண்டும்.

இலங்கை கடற்படையினால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க தமிழக மீனவர்களுக்கு துப்பாக்கி வழங்க வேண்டும் என அய்யா நெடுமாறன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். இது சாத்திய மற்ற கோரிக்கை. ஒருவேளை அய்யா நெடுமாறன் அவர்கள் கூறுவதுபோல் அதி நவீன ஏ.கே 47 இரக துப்பாக்கிகளை இந்திய அரசு வழங்குவதாக வைத்துக்கொண்டாலும் அதை வைத்து தமிழக மீனவர்கள் எப்படி தங்களைக் காப்பாற்ற முடியும்?

இலங்கை கடற்படை பீரங்கியால் தாக்கும்போது தமிழக மீனவர்கள் துப்பாக்கியால் என்ன செய்ய முடியும்? அதன்பின் ஒவ்வொரு மீனவனுக்கும் பீரங்கி வழங்கும்படி அய்யா நெடுமாறன் கோரிக்கை வைப்பாரா? இது சாத்தியம்தானா?

தமிழக மீனவர்களுடன் பேச்சுவார்த்தை செய்வதன் மூலம் இந்தப் பிரச்சனையை தீர்க்க முடியும் என இலங்கைத் தமிழ் மீனவர்கள் கூறுகின்றனர். இருவரும் தமிழர்கள். இருவரும் பேசினால் பிரச்சனை தீர்க்க முடியும் என்கிறார்கள். எனவே அய்யா நெடுமாறன் அவர்கள் உண்மையிலே தமிழ் மக்கள் நலனில் அக்கறை உள்ளவர் எனின் இந்த பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யும்படி தமிழக அரசை வலியுறுத்தலாமே? அதைவிடுத்து சாத்தியமற்ற, அர்த்தமற்ற துப்பாக்கி வழங்கும் கோரிக்கை முன்வைத்தால் அதன் அர்த்தம் என்ன?

ஜெயா அம்மையார் கச்சைதீவை மீட்கும்படி கோருகிறார். கச்சைதீவை மீட்டால் மீனவர் பிரச்சனை எப்படி தீரும் என கேட்டால் அதற்கு பதில் தர மறுக்கிறார்.

கலைஞர் கருணாநிதி அவர்கள் இனி மீனவர்கள் தாக்கப்பட்டால் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்கிறார். இவர் ஏற்கனவே அரை நாள் உண்ணாவிரதம் இருந்ததற்கு 40ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். இன்னொரு முறை உண்ணாவிரதம் இருந்தால் எத்தனையாயிரம் மீனவர்கள் சாகப்போகிறார்களோ ?

கலைஞர் , ஜெயா அம்மையார் ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகள். இவர்கள் ஒவ்வொரு தேர்தலுக்கும் இப்படி நாடகம் ஆடுவார்கள். ஆனால் அய்யா நெடுமாறன் அவர்களும் இந்த ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகள் போல் தமிழர்கள் நலனில் பொறுப்பற்று பேசலாமா?

கலைஞர், ஜெயா அம்மையார்களை மட்டுமல்ல அய்யா நெடுமாறன் போன்றவர்களையும் மக்கள் இனம் காணும் நாள் தொலைவில் இல்லை. இவர்களை மக்கள் விரைவில் தூக்கியெறிவார்கள்.

• தோழர் சண்முகதாசன் சாதித்தது என்ன?

• தோழர் சண்முகதாசன் சாதித்தது என்ன?

இலங்கையில் புரட்சிவாதிகள் எதனையும் சாதிக்கவில்லை என சிலர் வரலாற்றை திரித்து எழுத முற்படுகின்றனர். அவர்களின் கவனத்திற்காக தோழர் சண்முகதாசன் தலைமையில் புரட்சிவாதிகள் சாதித்த சிலவற்றை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

(1) ரஸ்சியாவில் குருசேவ் முன்வைத்த திருத்தல்வாத்தை அம்பலப்படுத்தி இலங்கையில் மாவோசிச சிந்தனையில் புதிய ஜனநாயகப் புரட்சியை முன்வைத்தமை.

(2) பாராளுமன்ற பாதையை நிராகரித்து ஆயுதம் ஏந்திய மக்கள் யுத்தப்பாதையை அறிமுகப்படுத்தியமை.

(3) இந்தியாவில் நக்சல்பாரிகளின் தனிநபர் அழித்தொழிப்பின் தத்துவார்த்த தவறுகளை சுட்டிக்காட்டியதோடு இலங்கையிலும் அவ்வாறான தவறுகள் நிகழாமல் தடுத்தமை

(4) இலங்கை தமிழ் மக்களுக்கு இந்திய அரசு நண்பன் அல்ல. அதுவும் ஒரு எதிரியே என்று அன்றே இனம் காட்டியமை.

(5) “தமிழீழம்” தமிழ் மக்களுக்கு சிறந்த தீர்வு அல்ல. மாறாக அழிவையே பெற்றுக்கொடுக்கும் என்பதை அன்றே எதிர்வு கூறியமை.

(6) இலங்கையில் இனப்பிரச்சனைக்கு தீர்வாக பிரதேச சுயாட்சியை முன்வைத்தமை

(7) “அடிக்கு அடி” என தாழ்த்தப்பட்ட மக்களுக்கு போதித்து சாதீயத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை தாங்கியமை

• தந்தை செல்வா தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்றார். அமிர்தலிங்கம் அகிம்சை முறையில் தமிழீழம் காண்போம் என்றார். ஆனால் தமிழ் இளைஞர்கள் பாராளுமன்ற பாதையை நிராகரித்து ஆயுதம் ஏந்திப் போராடியதற்கு தோழர் சண்முகதாசன் தலைமையிலான புரட்சிவாதிகளின் ஆயுதப் போராட்ட பிரச்சாரமே காரணமாக அமைந்தது.

• ஆயுதம் ஏந்திப் போராடிய தமிழ் இளைஞர்களை அமிர்தலிங்கம் “பொடியன்கள்” என்று அழைத்தார். இலங்கை அரசு “பயங்கரவாதிகள்” என்றது. ஆனால் தோழர் சண்முகதாசனே கொழும்பில் அதுவும் சிறிமாவோபண்டாரநாயக்கா தலைமை வகித்த கூட்டத்தில் தமிழ் இளைஞர்களை முதன் முதலாக “போராளிகள்” என்று அழைத்தார்.

• இந்திய அரசு போராளிகளுக்கு பயிற்சி கொடுப்பதை அறிந்த அமிர்தலிங்கம் டில்லிவரை சென்று போராளிகளுக்கு பயிற்சி கொடுக்க வேண்டாம் என இந்திராகாந்தியிடம் கேட்டுக்கொண்டார். ஆனால் தோழர் சண்முகதாசன் “இரவல் படையில் புரட்சி எதற்கு?” எனக் கேட்டு சொந்த மண்ணில் சொந்தப் பலத்தில் போராடும்படி வலியுறுத்தினார்.

• “சண்முகதாசன் ஆயுதம் எந்திப் போராடியிருந்தால் நான் ஆயுதம் ஏந்தியிருக் வேண்டியிரக்காது” என்று புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு முறை கூறினார். அந்தளவுக்கு அனைத்து இயக்க போராளிகளின் தலைமையிடமும் தோழர் சண்முகதாசன் மதிப்பு பெற்றிருந்தார்.

• தோழர் சண்முகதாசன் தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமல்ல சிங்களவர்கள் முஸ்லிம்கள் என அனைத்து பிரிவினரிடமும் மதிப்பு பெற்றிருந்த ஒரு தலைவர். அவர் இலங்கை தலைவர் மட்டுமல்ல. அவர் உலகில் உள்ள புரட்சிவாதிகளால் மதிக்கப்பட்ட சர்வதேச தலைவர்.

இவர்கள் ஏன் மகிந்த அரசால் ஆடம்பரமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர்?

இந்த படத்தில் இருக்கும் தமிழர்கள் யார்?

இவர்களுக்கும் இலங்கை அரசுக்கும் என்ன சம்பந்தம்?

தமிழர்களுக்கு குண்டு போட்ட இலங்கை விமானத்தில்
உல்லாசம் செல்லும் இவர்கள் நோக்கம் என்ன?

இவர்கள் ஏன் மகிந்த அரசால் ஆடம்பரமாக
அழைத்துச் செல்லப்படுகின்றனர்?

யாராவது தெரிந்தவர்கள் பதில் தருவார்களா?

• அடைத்து வைத்திருக்கும் அரசியல் கைதிகளை உடனே விடுதலை செய்!

இலங்கை அரசே!

• அடைத்து வைத்திருக்கும் அரசியல் கைதிகளை உடனே விடுதலை செய்!

• காணாமல் போன உறவுகள் குறித்து உடனே பொறுப்பான பதில் கூறு!

இந்திய அரசே!

• சிறப்பு முகாமில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை உடனே விடுதலை செய்!

யுத்தம் முடிந்து 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னமும் சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. இந்த அவல நிலை குறித்து ஜனாதிபதி முதல் அயல்நாட்டு பிரதமர்கள் உட்பட ஜ.நா வரை முறையிட்டும் எந்த பயனும் இதுவரை கிடைக்கவில்லை.

இந்த ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களின் விடுதலை ஆண்டாக அமைய நாம் அனைவரும் உழைக்க வேண்டும் என புத்தாண்டு சபதம் எடுத்தோம். அதில் வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கை தரும் விதத்pல் பலரும் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்கள் விடுதலை செய்யக் கோரும் தீர்மானத்தை மாகாணசபையில் முன்மொழிந்துள்ளார். அதனை வழிமொழிந்து பேசிய மாகாண முதல்வர் விக்கினேஸ்வரன் அவர்கள் சிறை சென்று அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடப் போவதாக கூறியுள்ளார்.

இவர்கள் கேட்டவுடன் அரசு உடனே விடுதலை செய்யும் என நாம் நம்பவில்லைதான். இருந்தாலும் பொறுப்பில் உள்ள இவர்கள் குரல் கொடுக்கும்போது அது உலகத்தின் கவனத்தை நிச்சயம் ஈர்க்கும். இப்படி பலரும் தொடர்ந்து குரல் கொடுத்து போராடினால் நிச்சயம் சிறையில் உள்ளவர்களுக்கு விடுதலை கிடைக்கும். பல்லாண்டுகளாக அடைபட்டுக் கிடக்கும் அவர்களின் விடுதலைக்கு நாம் உழைக்க வேண்டியது எமது கடமையாகும்.

இலங்கை சிறையில் உள்ளவர்களின் விடுதலைக்காக மட்டுமன்றி தமிழ்நாட்டில் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளுக்காகவும் இந்த மாகாணசபை குரல் கொடுக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இந்தியாவில் இது தேர்தல் காலம். எனவே தமிழ் இன உணர்வாளர்கள் இந்த சிறப்பு அகதிகளின் விடுதலைக்கு குரல் கொடுத்து அவர்களின் விடுதலைக்கு வழி சமைக்க முன்வரவேண்டும் எனக் கேட்டக்கொள்கிறோம்.

• புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் அதிகரித்து வரும் தற்கொலைகள்

• புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் அதிகரித்து வரும் தற்கொலைகள்

லண்டனில் வசித்து வந்த ஈழத் தமிழ் பெண் ஒருவர் தனது இரு குழந்தைகளையும் கொன்று தானும் தற்கொலை செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது. அவரது கணவர் ஒரு அக்கவுன்டன். குடும்ப பிரச்சனை காரணமாக இது நிகழ்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்னர் இதே லண்டனில் ஒரு 15 வயது தமிழ் சிறுவன் பரீட்சையில் நல்ல சித்தி பெற வில்லை என்பதற்காக தற்கொலை செய்தாக செய்திகள் வந்தன.

அதிகரித்து வரும் நெருக்கடிகளால் ஏற்படும் மன அழுத்தங்களுக்கு தேவையான கவுன்சிலிங் சிகிச்சைகள் பெற்றால் இவ்வாறான தற்கொலைகளை தடுக்க முடியும் என மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

• இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

• இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

• சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுவிப்பது என்பது
எமது பொங்கல் சபதமாக அமையட்டும்!

உழவர் மக்களின் உன்னத நாளாம்
உழைக்கும் மக்களின் உரிமை நாளாம்
தமிழ் மக்களின் புத்தாண்டு நாளில்
இனிய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்!

பல வருடங்களாக சிறை மற்றும் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும்
அரசியல் கைதிகளை விடுவிப்பது என சபதம் கொள்வோம்!

மாக்சிச லெனிச மாவோசிச வழிகாட்டியில்
புதிய ஜனநாயகப் புரட்சியை மேற்கொள்வோம்!

• நாடு கடந்த தமிழீழத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் பதில் தருவாரா?

• நாடு கடந்த தமிழீழத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் பதில் தருவாரா?

முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்பு பல மில்லியன் செலவு செய்து உலகம் பூராவும் தேர்தல் நடத்தி நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமராக தன்னைத்தானே நியமனம் செய்த உருத்தி குமாரன் முகத்தில் அமெரிக்கா கரியைப் பூசியுள்ளது. இது குறித்து உருத்திரகுமாரன் என்ன பதில் தரப் போகிறார்?

அமெரரிக்கா வரும்.
அமெரிக்கா உதவி செய்யும்.
அமெரிக்கா காப்பாற்றும்
அமெரிக்கா ஈழம் பெற்று தரும்.
அமெரிக்கா மகிந்தவை தண்டிக்கும் என்றெல்லாம் அமெரிக்க புராணம் பாடி வந்த உருத்திர குமாரனையே அமெரிக்கா காப்பாற்றவில்லை. உதவி செய்ய வில்லை. மாறாக நீதிமன்றம் மூலம் அவர் முகத்தில் கரியைப் பூசியுள்ளது. இனி அவர் என்ன கூறுவார்?

வாடிக்கையாளர்களுக்கு பணம் திருப்பி கொடுக்கவில்லை. அவர்களுக்கு தோல்வியை கொடுத்துள்ளார். சட்ட நிறுவன நிர்வாகம் தெரியவில்லை. அது குறித்து படிக்க வேண்டும் என்றெல்லாம் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அது மட்டுமல்ல தீர்ப்பை இரகசியமாக வைத்திருக்கும்படி உருத்திரகுமாரன் கேட்ட கோரிக்கையையும் மறுத்து பகிரங்கமாக வெளியிட்டுள்ளது.

அதாவது தமிழீழ பிரதமர் ஒரு மோசடியானவர். அறிவற்றவர் என்றெல்லாம் அமெரிக்க நீதிமன்றம் அசிங்கப்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் யுத்தத்திற்கு எப்படி உதவியது என்பதை ஜனாதிபதி மகிந்தவே பல தடவை வெளிப்படுத்தியிருக்கிறார். அப்படியிருக்க இந்த உருத்திரகுமாரன் கும்பல்கள் அமெரிக்கா தமிழீழம் பெற்று தரும் என்று தமிழ் மக்களுக்கு கதை சொல்லிக் கொண்டிருந்தனர்.

இனியாவது இந்த ஏகாதிபத்தியங்களுக்கு ஆதரவான செயல்களில் ஈடுபடாமல் மக்கள் சார்ந்து போராட்டங்களை முன்னெடுக்க முன்வர வேண்டும்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒருபோதும் தமிழ் மக்களின் நண்பன் அல்ல. மாறாக மாபெரும் அழிவுக்கு துணை நின்ற ஏகாதிபத்தியம். அது எப்போதும் எமது எதிரி என்பதை நினைவில் கொள்வோம்.

கடவுள்!

கடவுள்!

• ஒருவன் உயர்ந்த சாதி என்றும் இன்னொருவன் தாழ்ந்த சாதி என்றும் மனிதனைப் படைப்பது கடவுள் என்றால் அந்த கடவுள் எமக்கு தேவையில்லை.

• ஒருவன் பணக்காரன் என்றும் இன்னொருவன் ஏழை என்றும் இருப்பது கடவுள் விதி என்றால் அந்த கடவுள் எமக்கு தேவையில்லை.

• சுரண்டுபவனும் சுரண்டப்படுபவனும் கடவுள் படைப்பு என்றால் அந்த கடவுள் எமக்கு தேவையில்லை.

• வெள்ளையர்கள் உயர்ந்தவர்கள் என்றும் கறுப்பவர்கள் தாழ்ந்தவர்கள் என்பதும் கடவுள் நியதி என்றால் அந்த கடவுள் எமக்கு தேவையில்லை.

• உலகில் உள்ள சாதி, மத, இன அழிவுகள் அனைத்திற்கும் காரணம் கடவுள் என்றால் அந்த கடவுள் எமக்கு தேவையில்லை.

சில நாட்களுக்கு முன்னர் வட இந்தியாவில் ஒரு நிர்வாண சாமியாரின் ஆண் உறுப்பை தொட்டு வணங்கும் ஒரு பக்தனின் படத்தை பிரசுரித்து இது பகுத்தறிவுக்கு உகந்த செயலா? என கேட்டிருந்தேன். அது பக்தர்களின் மனதை புண்படுத்தும் பதிவு என்று காரணம் கூறி பேஸ்புக் நிர்வாகம் எனது பதிவை நீக்கியுள்ளது. ஒரு நாள் தடையும் விதித்தது.

உலகம் உருண்டை என்று முதன் முதலில் கூறியவரை சமூகத்திற்கு எதிரான கருத்தை கூறியதாக அன்றைய போப்பாண்டவர் மரண தண்டனை விதித்தார். இன்றும் மத நிறுவனங்கள் பகுத்தறிவுக்கு விரோதமான கருத்துகளை ஆதரித்து வருகின்றன.

முதலாளித்துவமும் தனது பாதுகாப்பிற்காக மதங்களை ஆதரித்து வளர்க்கின்றது. அதன் ஒரு அம்சமாகவே பேஸ்புக் நிர்வாகமும் மத மூட நம்பிக்கைகளுக்கு ஆதரவாக எனது பதிவை நீக்கியுள்ளது.

ஒரு நாள் அல்ல ஒரேயடியாக என்னை பேஸபுக்கில் இருந்து தடை செய்தாலும் அந்த தடை செய்யும் கணம் வரை எனது எழுத்துக்கள் மூட நம்பிக்கைக்கு எதிராக பகுத்தறிவை வளர்ப்பதற்கே பயன்படும் என உறுதி கூறுகிறேன்.