Monday, January 20, 2014

• அர்த்தமற்ற கோரிக்கை வைப்பதை அய்யா நெடுமாறன் நிறுத்த வேண்டும்.

• மீனவர்களுக்கு துப்பாக்கி வழங்க வேண்டும்- அய்யா நெடுமாறன் கோரிக்கை

• அர்த்தமற்ற கோரிக்கை வைப்பதை அய்யா நெடுமாறன் நிறுத்த வேண்டும்.

இலங்கை கடற்படையினால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க தமிழக மீனவர்களுக்கு துப்பாக்கி வழங்க வேண்டும் என அய்யா நெடுமாறன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். இது சாத்திய மற்ற கோரிக்கை. ஒருவேளை அய்யா நெடுமாறன் அவர்கள் கூறுவதுபோல் அதி நவீன ஏ.கே 47 இரக துப்பாக்கிகளை இந்திய அரசு வழங்குவதாக வைத்துக்கொண்டாலும் அதை வைத்து தமிழக மீனவர்கள் எப்படி தங்களைக் காப்பாற்ற முடியும்?

இலங்கை கடற்படை பீரங்கியால் தாக்கும்போது தமிழக மீனவர்கள் துப்பாக்கியால் என்ன செய்ய முடியும்? அதன்பின் ஒவ்வொரு மீனவனுக்கும் பீரங்கி வழங்கும்படி அய்யா நெடுமாறன் கோரிக்கை வைப்பாரா? இது சாத்தியம்தானா?

தமிழக மீனவர்களுடன் பேச்சுவார்த்தை செய்வதன் மூலம் இந்தப் பிரச்சனையை தீர்க்க முடியும் என இலங்கைத் தமிழ் மீனவர்கள் கூறுகின்றனர். இருவரும் தமிழர்கள். இருவரும் பேசினால் பிரச்சனை தீர்க்க முடியும் என்கிறார்கள். எனவே அய்யா நெடுமாறன் அவர்கள் உண்மையிலே தமிழ் மக்கள் நலனில் அக்கறை உள்ளவர் எனின் இந்த பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யும்படி தமிழக அரசை வலியுறுத்தலாமே? அதைவிடுத்து சாத்தியமற்ற, அர்த்தமற்ற துப்பாக்கி வழங்கும் கோரிக்கை முன்வைத்தால் அதன் அர்த்தம் என்ன?

ஜெயா அம்மையார் கச்சைதீவை மீட்கும்படி கோருகிறார். கச்சைதீவை மீட்டால் மீனவர் பிரச்சனை எப்படி தீரும் என கேட்டால் அதற்கு பதில் தர மறுக்கிறார்.

கலைஞர் கருணாநிதி அவர்கள் இனி மீனவர்கள் தாக்கப்பட்டால் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்கிறார். இவர் ஏற்கனவே அரை நாள் உண்ணாவிரதம் இருந்ததற்கு 40ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். இன்னொரு முறை உண்ணாவிரதம் இருந்தால் எத்தனையாயிரம் மீனவர்கள் சாகப்போகிறார்களோ ?

கலைஞர் , ஜெயா அம்மையார் ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகள். இவர்கள் ஒவ்வொரு தேர்தலுக்கும் இப்படி நாடகம் ஆடுவார்கள். ஆனால் அய்யா நெடுமாறன் அவர்களும் இந்த ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகள் போல் தமிழர்கள் நலனில் பொறுப்பற்று பேசலாமா?

கலைஞர், ஜெயா அம்மையார்களை மட்டுமல்ல அய்யா நெடுமாறன் போன்றவர்களையும் மக்கள் இனம் காணும் நாள் தொலைவில் இல்லை. இவர்களை மக்கள் விரைவில் தூக்கியெறிவார்கள்.

No comments:

Post a Comment