Monday, October 31, 2016

வடமாகாணசபை முதலமைச்சருடன் பிரித்தானிய தமிழர் வர்த்தக சம்மேளனம் நடத்திய உரையாடல்

•வடமாகாணசபை முதலமைச்சருடன் பிரித்தானிய தமிழர் வர்த்தக சம்மேளனம் நடத்திய உரையாடல்
நேற்றைய தினம் லண்டனில் கிங்ஸ்பெரி என்னும் இடத்தில் வடமாகாணசபை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்களுடன் பிரித்தானிய தமிழர் வர்த்தக சம்மேளனம் சார்பில் கலந்துரையாடல் நடைபெற்றது.
முதலில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் கிங்ஸ்ரன் நகர சபையுடன் அண்மையில் ஏற்படுத்தப்பட்ட இரு நகர உடன்படிக்கை பற்றி விளக்கினார்.
அதையடுத்து முதலமைச்சரின் தனிச் செயலர் நிமலன் அவர்கள் உடன்படிக்கையின் நன்மைகள் குறித்து விளக்கினார்.
அதன்பின்னர் முதலமைச்சரின் செயலர் இராஜதுரை அவர்கள் வடமாகாணத்தில் செய்யக்கூடிய முதலீடுகள் குறித்து விளக்கினார்.
இறுதியாக கலந்து கொண்டவர்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் மற்றும் அவரது செயலர்கள் பதில் அளித்தனர்.
கலந்துகொண்டவர்களின் நுழைவுக் கட்டணம் மற்றும் அன்பளிப்பு சுமார் 25 லட்சம் ரூபா பணம் முதலமைசரிடம் வழங்கப்பட்டது.
•பாராட்டு- புலம்பெயர் தமிழர் சமூகத்தின் மத்தியில் ஒரு பலமிக்க வர்த்தக சம்மேளனத்தின் அவசியத்தை உணர்ந்து அதற்காக பாடுபடும் பிரித்தானிய தமிழர் வர்த்தக சம்மேளனம் உண்மையில் பாராட்டுக்குரியது.
•அவதானிப்பு- கூட்டம் 6 மணிக்கு தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தாமதமாக 7.30 மணிக்கே ஆரம்பமானது. இனிமேல் இப்படி நிகழாமல் நேரத்தை கடைப்பிடிக்க முயற்சிக்க வேண்டும்.
•சந்தேகம்- இலங்கை அரசு என்றுமில்லாதவாறு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. எனவே மேற்குல நாடுகளின் உதவிகளைப் பெறுவதற்காக தமிழர் இனப்பிரச்சனையில் தான் ஆக்கபூர்வமாக செயற்படுவதாக காட்டிக்கொள்ள முயல்கிறது. எனவே இந்த இரு நகர உடன்படிக்கை மூலம் இலங்கை அரசு அதனை சாதிக்க முயல்கிறதா என்ற சந்தேகம் உருவாகிறது.
கிங்ஸ்ரன் மற்றும் வடமாகாணம் இருநகர உடன்படிக்கை போன்று கனடா மார்க்கம் மற்றும் வன்னிக்கிடையில் இரு நகர உடன்படிக்கை விரைவில் ஏற்படவுள்ளதாக கனடா கவுன்சிலர் ஒரவர் அறிவித்துள்ளார். அதேபோன்று வடக்கு கிழக்கு பல மாவட்டங்கள் கனடாவில் சில நகரங்களுடன் இத்தகைய உடன்படிக்கைள் மேற்கொள்ளவுளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவற்றின் மூலம் தமிழ் மக்களுக்கு கிடைக்கவிருக்கும் நன்மைகள் என்ன என்பது பற்றி இவர்கள் விபரமாக தெரியப்படுத்துவார்களா?

•படுகொலை செய்யப்பட்ட மாணவர்கள் இருவரும் இந்துக்களே. இவர்களின் படுகொலையை சிவசேனையும் , இந்திய அரசும் கண்டிக்குமா?

•படுகொலை செய்யப்பட்ட மாணவர்கள் இருவரும் இந்துக்களே.
இவர்களின் படுகொலையை சிவசேனையும் , இந்திய அரசும் கண்டிக்குமா?
(சிவசேனை தலைவர் சச்சிதானந்தம் அய்யா எங்கிருந்தாலும் மேடைக்கு வருமாறு அழைக்கப்படுகிறார்.)
யாழ் பல்கலைக்கழக மாணவர் இருவர் பொலிசாரினால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
முன்பு இவ்வாறான படுகொலைகள் நடக்கும்போது பயங்கரவாதி இருவர் கொலை என அறிக்கை கொடுப்பார்கள்.
ஆனால் இம்முறை விபத்து மரணம் என அறிக்கை கொடுத்துள்ளனர். இது ஒன்றுதான் மாற்றம். மற்றும்படி கொலைகள் தொடருகின்றன.
இங்கு ஏற்படும் அச்சம் என்னவெனில் இனி இப்படியான விபத்து மரணங்கள் தமிழர் பகுதிகளில் தொடரப் போகுதா என்பதே.
ஏனெனில் இது ஒரு சாதாரண சம்பவம் என்று பொலிஸ் மாஅதிபர் கூறுகிறார். பொலிசாரை கைது செய்தது தவறு என்று மகிந்த ராஜபக்ச கூறுகிறார்.
தமிழரை சுட்டுக்கொல்ல பொலிசாருக்கு அதிகாரம் உண்டு என்று சிங்கள உறுமய தலைவர் கூறுகிறார்.
ஆனால் நலல வேளையாக சிங்கள் மக்கள் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இதனை வன்மையாக கண்டித்ததுடன் இதற்கு எதிராக போராடப் போவதாக அறிவித்துள்ளது.
இங்கு எனது கேள்வி என்னவெனில் இந்துக்களைப் பாதுகாக்க சிவசேனை ஆரம்பிப்பதாக கூறியவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?
இறந்த இந்து மாணவர்களுக்காக இந்துப் பிரதமர் மோடி அவர்கள் இலங்கை அரசைக் கண்டிப்பாரா?
அல்லது இலங்கையில் இந்துக்களைக் கொல்லும் படையினருக்கு தொடர்ந்தும் பயிற்சி வழங்கப் போகிறாரா?
குறிப்பு- நம்மவர்களில் சிலர் பொலிசார் இப்படி சுடுவதற்கு நீதிபதி இளஞ்செழியன்தான் காரணம் என்று பழியை திசை திருப்ப முயற்சி செய்கிறார்கள்.
யாழ் மாவட்டத்தில் கஞ்சா வியாபாராம், மற்றும் ரவுடியிசம் எந்தவிட இடைஞ்சலும் இன்றி அமோகமாக நடைபெற வேண்டும் என விரும்புவோரே அதற்கு இடைஞ்சலாக இருக்கும் நீதிபதி மீது பழி போட முயலுகின்றனர்.

•பாரதீய ஜனதா கட்சியா? அல்லது பாரதீய ஜல்சா கட்சியா?

•பாரதீய ஜனதா கட்சியா? அல்லது
பாரதீய ஜல்சா கட்சியா?
(வயது வந்தவர்களுக்கான பதிவு இது)
அழகிகளுடன் உல்லாசமாக இருந்த புகைப்படங்களை காட்டி மிரட்டியதால் இந்திய ராணுவ ரகசியங்களை பிரபல ஆயுத புரோக்கருக்கு விற்றிருக்கிறார் அமைச்சர் மேனகா காந்தியின் புதல்வரும் பாஜக எம்பி யுமான வருண்காந்தி
அமெரிக்க லாயர் ஒருவர் பிரதமர் மோடிக்கு இதனை வாக்குமூலமாக கடிதம் அனுப்பியுள்ளார். அத்துடன் அதற்கு ஆதாரமாக படங்களையும் வெளியிட்டுள்ளார்.
மாட்டுக்கறி உண்ணும் தேச விரோதிகளின் தலையை துண்டாக்குவேன் என வீர வசனம் பேசியவர் மேனகா காந்தி. இப்போது நாட்டின் ராணுவ ரகசியங்களை விற்ற தனது மகனின் தலையை துண்டாக்குவரா? அல்லது சபாஷ் என்று வருடிக் கொடுப்பாரா?
இந்தியாவுக்கு விசுவாசமில்லாதவர்கள் பாகிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும் என்று பிரதமர் மோடியும் இந்து அமைப்பு தலைவர்களும் பேசி வருகிறார்கள்.
அவர்கள் தேச துரோகம் புரிந்துள்ள தமது கட்சி எம்.பி வருண்காந்தியை எப்போது நாடு கடத்தப் போகிறார்கள்? அல்லது அவருக்கு மேலும் பதவிகள் கொடுத்து கௌரவப் படுத்தப் போகிறார்களா?
இங்கு எனது அலோசனை என்னவெனில் இலங்கையில் இந்துத் தமிழீழம் கேட்டால் இந்திய பிரதமர் மோடி உதவுவார் என்று நம்பும் காசி அனந்தனும், சிவசேனை ஆரம்பித்தால் இந்து அமைப்புகள் அதரவு தரும் என நம்பும் சச்சிதானந்தம் அய்யாவும் பேசாமல் ஒரு அழகான பெண்ணை செட் பண்ணி கொடுத்தால் ஒருவேளை பாரதீயஜனதாவின் ஆதரவைப் பெறலாம் போல் உள்ளது.
தன் இனத்திற்கு துரோகம் செய்வதைவிட மாமா வேலை பார்ப்பது ஒன்றும் பெரிய தவறு இல்லைதானே!

•அடக்குமுறை இருக்கும் மட்டும் அடக்குமுறைக்கு எதிரான போராட்டமும் இருக்கும்!

•அடக்குமுறை இருக்கும் மட்டும்
அடக்குமுறைக்கு எதிரான போராட்டமும் இருக்கும்!
யாழ் பல்கலைககழக மாணவர் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து இலங்கை அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது.
கொட்டும் மழையிலும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கண்டி வீதியை மறித்து போராடி வருகின்றனர்.
கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் நியாயம் கோரி போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கிளிநொச்சி பாடசாலை மாணவர்களும் “பொலிஸ் அராஜகம் ஒழிக” என கோசம் போட்டவாறு ஊர்வலம் சென்றுள்ளனர்.
இலங்கையில் மட்டுமன்றி இந்தியாவில் சென்னையில் இலங்கை தூதரகத்தை தமிழ் இனவாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
லண்டன், கனடா போன்ற நாடுகளிலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் இப் படுகொலைகளை கண்டித்து போராடவுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
இவையாவும் அடக்குமுறை இருக்குமட்டும் அதற்கு எதிராக தமிழ் மக்களின் போராட்டமும் இருக்கும் என்பதை உலகிற்கு காட்டுகின்றன.
அதுமட்டுமன்றி எந்தவொரு மூலையிலும் தமிழன் பாதிக்கப்பட்டாலும் அதற்கு எதிராக உலகெங்கும் உள்ள தமிழன் ஒன்றுபட்டு குரல் கொடுப்பான் என்ற நிலை தோன்றியுள்ளது.
எனவே தமிழன் போராட வேண்டுமா அல்லது அமைதியாக இருக்க வேண்டுமா என்பதை தமிழன் தீர்மானிப்பதில்லை மாறாக தமிழன் மீது அடக்குமுறையை நடத்துவோரே நிர்ப்பந்திக்கின்றனர்.

•தாம் ஆயுதம் ஏந்த வேண்டுமா என்பதை தமிழ் மக்கள் தீர்மானிப்பதில்லை. மாறாக அடக்குமுறையாளர்களே தீர்மானிக்கின்றார்கள்.

•தாம் ஆயுதம் ஏந்த வேண்டுமா என்பதை தமிழ் மக்கள் தீர்மானிப்பதில்லை. மாறாக அடக்குமுறையாளர்களே தீர்மானிக்கின்றார்கள்.
அடக்குமுறை இருக்குமட்டும் அடக்கு முறைக்கு எதிரான மக்கள் போராட்டமும் இருக்கும்.
அதேபோன்று அடக்குமுறையாளர்கள் ஆயுதம் கொண்டு வன்முறையில் ஈடுபட்டால் அதற்கு எதிரான மக்கள் போராட்டமும் ஆயுதம் ஏந்தியதாகவே இருக்கும்.
ஆயுதம் கொண்டு அடக்குமுறையில் ஈடுபடும் அரசை ஒரு ஆயுதப் போராட்டத்தின் மூலமே தூக்கியெறிய முடியும் என்பதை வரலாறு எமக்கு போதிக்கின்றது.

கலகம் செய்ய நிமிர்ந்துவிட்டவனுக்கு உதவி செய்வதே இலக்கியத்தின் பணி – மாக்சிம் கார்க்கி

•கலகம் செய்ய நிமிர்ந்துவிட்டவனுக்கு உதவி செய்வதே இலக்கியத்தின் பணி – மாக்சிம் கார்க்கி
மாபெரும் ஆசான் எங்கெல்ஸ் கூற்றுப்படி “ அறிவியலின் மேடையில் உரசிப் பார்க்கப்படாத எதுவும் இற்று வீழ்ந்துவிடும்”.
எந்த ஒன்றை ஆராய்வதாக இருந்தாலும் அதற்கு இருக்கும் கருவிகள் அறிவியல் முறையில் உரசிப் பார்ப்பதும் வரலாற்று அறிவும்தான்.
பிரான்சில் 30.10.2016 யன்று நடைபெறவுள்ள 23வது வாசிப்பு மனநிலை விவாதத்தில் நான் எழுதிய “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தோழர் ரயாகரன் கருத்துரை வழங்க இருக்கிறார்.
நூறு மலர்கள் மலரட்டும். ஆயிரம் கருத்துகள் முட்டி மோதட்டும் என்ற மாவோவின் கருத்து இணங்க இலக்கிய ஆர்வலர்கள் பங்கு பற்றி தங்கள் கருத்துகளை பகிரட்டும்.
ஆம். கலகம் செய்ய துணிந்துவிட்ட தமிழ் மக்களுக்கு இலக்கியம் தன் பங்கை வழங்கட்டும்.

•நாம் ஓட வேண்டும் அது முடியாத போது நடக்க வேண்டும் அதுவும் முடியாத போது தவழ்ந்தாவது செல்ல வேண்டும். ஆனால் ஒருபோதும் செயலற்று நிற்கவே கூடாது.

•நாம் ஓட வேண்டும்
அது முடியாத போது நடக்க வேண்டும்
அதுவும் முடியாத போது தவழ்ந்தாவது செல்ல வேண்டும்.
ஆனால் ஒருபோதும் செயலற்று நிற்கவே கூடாது.
அடக்குமுறைக்கு எதிராக எம்மால் இயன்றவழிகளில் நாம் போராடிக்கொண்டே இருத்தல் வேண்டும்.
அடக்குமுறையை ஏற்று அடிமையாக அடங்கி வாழு ஒருபோதும் நினைத்தல் கூடாது.
போராடிய அமைப்பின் தலைமையை அழித்தால் போராட்டம் அழிந்துவிடும் என்று முன்னர் அடக்குமுறையாளர்கள் நினைத்தனர்.
ஆனால் புதிய தலைமைகள் தோன்றி போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதை கண்டு அதனை எப்படி நசுக்குவது என்று யோசித்தனர்.
போராடும் தலைமையுடன் போராடிய மக்களில் ஆயிரக்கணக்கில் அழித்தால் போராட்டத்தை அடக்கிவிடலாமா என்று முள்ளிவாய்க்காலில் முதல் முறையாக பரீட்சித்துப் பார்த்தனர்.
ஆனால், தலைமையையோ அல்லது ஆயிரக் கணக்கில் மக்களையோ அழித்தாலும் அடக்கப்படும் மக்கள் தொடர்ந்து போராடுவார்கள் என்பதை தமிழ் மக்கள் வரலாற்றில் நிரூபித்துள்ளனர்.
தமிழக ஓட்டுப்பொறுக்கி அரசியல் தலைமைகள் துரோகம் செய்த வேளையிலும் தமிழக மக்கள் தங்கள் ஆதரவை ஈழத் தமிழருக்கு தொடர்ந்து நல்கி வருகின்றனர்.
மலேசியா சென்ற இனப் படுகொலையாளி மகிந்த ராஜபக்சவை விரட்டியடித்து அங்குள்ள தமிழர்கள் தமது அதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
லண்டன், கனடா, மற்றும் புலம்பெயர்நாடுகளில் உள்ள தமிழ் மக்கள் வீதியில் இறங்கிப் போராட ஆரம்பித்துள்ளனர்.
இரு பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து வடக்கு கிழக்கில் மட்டுமல்ல உலகம் பூராவும் உள்ள தமிழ் மக்கள் போராட ஆரம்பித்துள்ளனர்.
தமிழ் மக்களின் ஓட்டைப் பெற்று பதவி பெற்றவர்கள் தமிழ் மக்களுக்காக போராடாமல் துரோகம் செய்கிறார்கள்.
தமக்கு கோடிக் கணக்கான ரூபா பெறுமதியான சொகுசு வாகனம் இறக்குமதி செய்வதில்தான் அவர்கள் கவனம் இருக்கிறதேயொழிய தமிழ் மக்கள் நலனில் அக்கறை இல்லை.
தலைவர்களுக்கு பதவி மற்றும் சலுகைகளை வழங்கி அவர்களை விலைக்கு வாங்குவதன் மூலம் தமிழ் மக்களை அடக்கிவிட முடியும் என அரசு நினைக்கிறது.
ஆனால் தமிழ் மக்கள் திரண்டு எழுந்து போராடி அரசுக்கு தக்க பதிலடி வழங்குகிறார்கள்.
ஆம் வரலாறு ஒருபோதும் பின்னோக்கி செல்வதில்லை. அது எப்போதும் முன்னோக்கியே செல்கிறது.

பாவம் தமிழக மக்கள்!

•பாவம் தமிழக மக்கள்!
செய்தி- திமுக கட்சித் தலைவர் கருணாநிதி சுகயீனம்
ஆளும் கட்சி தலைவி ஜெயா அம்மையார் கடந்த ஒருமாதமாக அப்பலோ மருத்துமனையில் இருக்கிறார்.
எதிர்க்கட்சியான திமுக வின் தலைவர் கருணாநிதி சுகயீனம் காரணமாக கோபாலபுரம் வீட்டில் கிடக்கிறார்.
முக்கியமான பிரச்சனையான காவிரிப் பிரச்சனையில் கன்னட கட்சிகள் ஒன்று சேர்ந்து செயற்படுகின்றன.
மத்திய மோடி அரசும் காவிரிப் பிரச்சனையில் தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைக்கின்றது.
தமிழக நலனுக்காக குரல் கொடுக்க வேண்டிய முதல்வர் ஜெயா அம்மையார் அப்பலோ மருத்துமனையில் இருக்கிறார்.
சர்வகட்சி கூட்டத்தை கூட்ட வேண்டிய ஆளும்கட்சியோ ஜெயா அம்மையாருக்காக சர்வமத பிரார்த்தனையை நடத்துகிறது.
ஒரு மாதமாகிவிட்டது. அவருக்கு என்ன வருத்தம் என்பதே ஓட்டுப் போட்ட மக்களுக்கு தெரியப்படுத்தவில்லை.
இரண்டுமுறை அப்பலோவுக்கு சென்ற கவர்னருக்கே ஜெயா அம்மையாரின் முகத்தைக்கூட பார்க்க முடியவில்லை.
இந்த லட்சணத்தில் இனி தன்னை “மாண்புமிகு ஆளுனர்” என்று அழைக்க வேண்டும் என அவர் உத்தரவு போடுகிறார்.
ஒருவர் கோமாவில் இருக்கிறார் என்கிறார்கள். இன்னொருவருக்கு வேட்டியோடு மூத்திரம் போகிறது என்கிறார்கள்.
இருந்தும் இவர்கள் தங்கள் பதவியை துறக்க விரும்பவில்லை. மற்றவர்களுக்கு வழி விடவும் தயாரில்லை.
அரசியலுக்கு வருபவர்களுக்கு குறிப்பிட்டளவு கல்வி தகுதி வேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டு வராவிட்டாலும்கூட, குறிப்பிட்ட வயதின் பின்னர் கண்டிப்பாக ஓய்வு பெற வேண்டும் என்ற சட்டத்தையாவது கொண்டு வரவேண்டும்.

•மலையக தமிழரின் தொடரும் துயர வரலாறு!

•மலையக தமிழரின் தொடரும் துயர வரலாறு!
தாம் ஆட்சிக்கு வந்தால் 1000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படும் என்றார்கள்.
ஆனால் ஆட்சிக்கு வந்தபின்பு 730 ரூபா சம்பள உயர்வு மட்டுமே வழங்க முடியும் என்கிறார்கள்.
தீபாவளி பண்டிகைக்காக 10,000 ரூபா முன் பணம் வழங்கப்படும் என உறுதியளித்தார்கள்.
ஆனால் உறுதியளித்தமைக்கு மாறாக இப்போது 6500 ரூபா மட்டுமே வழங்குகின்றார்கள்.
தொடர்ந்து மலையக தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்றார்கள். ஆனால் அவர்களின் தலைவர்களோ வழக்கம்பொல் இந்த துரோகங்களுக்கு துணை போகின்றார்கள்.
ஒருத்தனிடம் இருந்து ஒரு லட்சம் ரூபா திருடினால் அவனை திருடன் என்போம்.
அவனே ஒரு லட்சம் பேரிடம் இருந்து ஒவ்வொரு ரூபாவாக திருடினால் அவனை தலைவன் என்கிறோம்.
ஆம். இதுதான் மலையகத்தில் நடைபெறுகிறது. மலையக தொழிலாளர்களிடமிருந்து சந்தாப் பணம் என்னும் பெயரில் தொண்டமான் பரம்பரை திருடுகின்றது.
வரலாற்றில் என்றும் இல்லாதவாறு இம்முறை மலையக மக்களுக்கு ஆதரவாக வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களும் குரல் கொடுத்தார்கள்.
அதுமட்டுமன்றி லண்டன் வாழ் தமிழர்களும் மலையக மக்களுக்கு ஆதரவாக இலங்கை தூதரகத்திற்கு முன்னால் ஒன்றுகூடி குரல் கொடுத்துள்ளனர்.
ஆனால் மலையக மக்களின் தலைவர்கள் வழக்கம்போல் தமது மக்களுக்கு துரோகம் செய்துள்ளனர்.
இலங்கையில் அதிக வருமானத்தை ஈட்டித் தருவது தேயிலை ஏற்றுமதியே. ஆனால் அந்த தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கேட்டால் வியாபாரம் நட்டத்தில் இயங்குவதாக முதலாளிகளும் அரசும் கூறுகின்றனர்.
தொழிலாளர்களுக்கு உரிய சம்பள உயர்வை மறுக்கும் முதலாளிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கடந்த வருடம் மட்டும் கோடிக் கணக்கான ரூபா பெறுமதியான 700 சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்துள்ளனர்.
•மலையகத்தில் பெருந்தோட்டங்களில் 9.5 லட்சம் தமிழ் மக்கள் எந்தவித அடிப்படை வசதியும் அற்ற நிலையில் வாழுகிறார்கள்.
•14 310 தற்காலிக வீடுகள் இருக்கின்றன. 83 960 பேர் வீடுகள் எதும் இல்லாது வாழ்கிறார்கள் (உறவினர்கள் வீடுகளில்).
•இலங்கையில் 40% சிறுவர் தொழிலாளர்கள் பெருந்தோட்டங்களைச் சேர்ந்த தமிழ் சிறுவர்களே.
•பெருந்தோட்ட மாணவர்களில் 29% மாத்திரமே க.பொ.த.சாதாரண தரத்தில் 6 பாடங்கள் சித்தியடைகின்றார்கள். எவ்வித பயிற்சி, கல்வி தகைமை இல்லாமல் ஆண்டுக்கு சுமார் 6000 மாணவர்கள் தொழிற்சந்தைக்கு உள்வாங்கப்படுகின்றார்கள்.
•பெருந்தோட்டங்களில் ஒரு குடும்பம் 12 Kg கோதுமை மாவை உட்கொள்கின்றது. குறிப்பாக தேங்காய் இல்லாத ரொட்டியும் வெங்காய சம்பலையுமே அவர்கள் உட்கொள்கின்றார்கள்
•பெருந்தோட்டங்களில் பிறக்கும் குழந்தைகளில் 36% குறைந்த எடையுடனே பிறக்கின்றன. குறிப்பிட்ட வயதில் தேவையான உயரமோ எடையோ இல்லாமல் 25% வாழ்கின்றனர். 5 வயதுக்கு குறைவானோரில் 25% மானோருக்கு மந்தபோசனம் உள்ளது.
•தமிழ் மக்கள் அதிகமாக வாழும் இரத்தினபுரி மாவட்டத்தில் உயர் தரத்தில் கணிதம், விஞ்ஞானம் ஆகிய பிரிவுகளைக் கொண்ட ஒரு தமிழ் பாடசாலைக்கூட இல்லை.
•நாடு முழுவதும் 28900 பேருக்கு பல்கலைக்கழக அனுமதி வழங்குகின்றபோதிலும் பெருந்தோட்டப்பகுதியை சேர்ந்தோர் 120-150 பேர் வரை மாத்திரமே உள்வாங்கப்படுகின்றனர்.
•வருடாந்தம் 200 மில்லியன் ரூபா தொண்டமான் பவுண்டேசனுக்கு ஒதுக்கப்படுகின்றது. கடந்த 9 வருடங்களில் ஒதுக்கப்பட் 1800 மில்லியன் ரூபாவுக்கு என்ன நடந்தது? இங்கே தொழிலாளி 450 ரூபா சம்பளம் பெற்றுக்கொண்டு இருக்கும்போது, தொண்டமானால் இந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்ட பெண்மணிக்கு 3.5 இலட்சம் ரூபா சம்பளம் வழங்கப்படுகின்றது.
பாராளுமன்டறத்தில் இத்தனை குறைகளையும் எடுத்துக்கூறி மலையக மக்களுக்காக குரல் கொடுத்தவர் அந்த மக்களின் தலைவரான தொண்டமான் அல்ல. எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் சம்பந்தர் அய்யாவோ அல்ல.
மாறாக இவர்களால் இனவாதக்கட்சி என்று கூறப்படும் ஜே.வி.பி கட்சியின் தலைவர் அனுர குமார அவர்களே மலையக மக்களுக்காக இவ்வாறு குரல் கொடுத்துள்ளார்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தமிழ் தலைவர்களை விட இவர்கள் குறிப்பிடும் இனவாதத் தலைவர்கள் பரவாயில்லை போல் தெரிகிறது.
குறிப்பு- எதிர்வரும் 5.11.16 யன்று லண்டன் ஈஸ்ட்காம் நகரில் மலையகம் தொடர்பான கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.

•“போராட்டம் இன்பமயமானது. சிறை அதனினும் இன்பமயமானது” – தோழர் செந்தமிழ் குமரன்.

•“போராட்டம் இன்பமயமானது. சிறை அதனினும் இன்பமயமானது” – தோழர் செந்தமிழ் குமரன்.
போராட்டம் இன்பமயமானது என்று மாபெரும் ஆசான் கால் மார்க்ஸ் கூறினார்.
“போராட்டம் இன்பமயமானது. சிறை அதனினும் இன்பமயமானது” என்று சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையாகியுள்ள தமிழ்தேச மக்கள் கட்சி தோழர் செந்தமிழ் குமரன் கூறியுள்ளார்.
சிறையில் இருந்து விடுதலையாகி வந்துள்ள ஒரு தோழா, “சிறை இன்பமயமானது” என்று கூறுவது தமிழக அரசுக்கும் அதன் காவல்துறைக்கும் கொடுத்திருக்கும் மிகப் பெரிய சாட்டையடி.
ஏனெனில் சிறையில் அடைப்பதன் மூலம் தமிழ் இன உணர்வாளர்களை அடக்கிவிட முடியும் என ஜெயா அம்மையாரின் காவல்துறை கனவு காண்கிறது.
சிறையில் இருந்து விடுதலையாகி வந்துள்ள தோழர் செந்தமிழ்குமரன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கைளைத் நான் தெரிவித்தபோது அவர் கூறியதாவது,
“ஏற்கனவே ஈழ அகதிகள் வதைமுகாமாக இருந்ததுதான் தற்போது சிறையாக மாறியுள்ளது. அங்கு போராடிய சித்தரவதைக்குள்ளான பல ஈழ உறவுகளின் நினைவுகள் மனதில் வந்து சென்றது. குறிப்பாக 2010 ல் செங்கல்பட்டு முகாமில் நடைபெற்ற கலவரத்தின் ஒவ்வொரு சம்பவமும் இடமும் அவர்கள் கடிதத்தில் எமக்கு விளித்ததை மனதில் வைத்து தோழர்களிடம் கூறினேன். குறிப்பாக முகாமிலும் சிறையிலும் 8 ஆண்டுகள் வாடிய உங்கள் நினைவுகள் என ஒவ்வொரு நாளையும் போராட்ட உணர்விலேயேக் கழித்தோம்”.
ஆம். தோழர் செந்தமிழ்குமரன் அவர்களின் வரிகள் அவருடைய உணர்வுகளை அழகாக காட்டுகின்றன. ஈழத் தமிழர் மீது அவரும் அவருடைய கட்சியினரும் கொண்டுள்ள உறுதியான ஆதரவைக் காட்டுகின்றன.
இங்கு கவலை தரும் விடயம் என்னவெனில் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் தோழர் செந்தமிழ்குமரனும் அவரது தோழர்களும் சிறையில் வாடிய போது அவர்களை விடுதலை செய்யும்படி ஈழத் தமிழ் அமைப்புகள் எவையும் கோரவில்லை.
மாறாக காசிஆனந்தன் போன்றோர் தோழர் செந்தமிழ்குமரனை; போன்ற ஈழ ஆதரவு உணர்வாளர்களை சிறையில் அடைத்த ஜெயா அம்மையார் நலம் வேண்டி அறிக்கை விட்ட அவலம் நிகழ்ந்தது.
இதேவேளை, தோழர் தமிழரசன் பாதையில் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து மதுரை சிறையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக ஜாமீன் விடுதலைகூட மறுக்கப்பட்ட நிலையில் உள்ள ஜந்து தோழர்களையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
தோழர் செந்தமிழ் குமரன் உட்பட்ட தமிழ்தேசமக்கள் கட்சி தோழர்களின் உணர்வுகளை பாராட்டி ஈழத் தமிழர்கள் சார்பில் எமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒன்றிணைவோம். ஒருமித்து போராடுவோம்.

•சுட்டவன் தமிழன் என்பது அல்ல முக்கியம் செத்தவன் தமிழன் என்பதே நமக்கு முக்கியம்.

•சுட்டவன் தமிழன் என்பது அல்ல முக்கியம்
செத்தவன் தமிழன் என்பதே நமக்கு முக்கியம்.
சுட்ட துப்பாக்கி ஏ.கே 47யா அல்லது ரி 56யா என்பது முக்கியம் அல்ல
மாறாக சுட்டவன் இலங்கை அரசின் படையைச் சேர்ந்தவன் என்பதே நமக்கு முக்கியம்.
எதிரியிடம் துப்பாக்கி உண்டு. எம்மிடம் இல்லையே என்பது முக்கியம் அல்ல.
மாறாக துப்பாக்கி ஒரு தோளில் இருந்து இன்னொரு தோளுக்கு மாறும் என்பதே நமக்கு முக்கியம்.
வடக்கு கிழக்கில் நிலைகொண்டுள்ள இலங்கை அரசின் 60 ஆயிரம் ராணுவத்தில் எத்தனை தமிழன?; எத்தனை சிங்களவன்? என்பது முக்கியம் இல்லை. மாறாக 60 ஆயிரம் துப்பாக்கிகளை நாம் பெறுவதற்கு அரசு எமக்கு வாய்ப்பளித்துள்ளது என்பதே நமக்கு முக்கியம்.
நாம் தோல்வி அடைந்தவர்கள் அல்ல. மாறாக இன்னும் வெற்றி பெறவில்லை என்பதே முக்கியம். இறுதி வெற்றி உறுதி எமக்கு.
செய்தி- யாழ் பல்கலைக்கழக தமிழ் மாணவர்களை சுட்டவர்கள் தமிழ் பொலிசார்.
தமிழனாக இருந்தால் என்ன , சிங்களவனாக இருந்தால் என்ன இராணுவமும் பொலிசும் இலங்கை அரசின் ஏவல் நாய்களே ஆளும் வர்க்கத்தின் கைக்கூலிகளே.
அதனால் அந்த நாய்கள் தமக்கு போடப்படும் இறைச்சி துண்டிற்காக எந்தவித வேறுபாடும் இன்றி சிங்களவனையும் கொல்கிறது. தமிழனையும் கொல்கிறது.
1971ல் கதிர்காமத்தில் மன்னம்பேரி என்ற சிங்கள யுவதியை நிர்வாணமாக வீதியில் கட்டி இழுத்துச் சென்று பாலியல் வல்லுறவு செய்ததோடு அவருடைய பெண் உறுப்பில் வெடி வைத்துக் கொன்றவர்கள் சிங்கள பொலிசாரே.
1989ல் 60 ஆயிரம் சிங்கள இளைஞர்களை கொன்று அவர்களுடைய உடலை ஆற்றில் மிதக்க விட்டவர்கள் சிங்கள ராணுவத்தினரே.
இன்று சிங்கள பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை அடக்குபவர்களும், நீர்கொழும்பில் இந்திய கம்பனிக்கு எதிராக தண்ணீருக்காகப் போராடிய சிங்கள மக்களை சுட்டு அடக்கியபவர்களும் இந்த சிங்கள பொலிசாரும் ராணுவத்தினருமே.
பொலிசின் ராணுவத்தின் துணையின்றி இலங்கை அரசு ஒரு கணம் கூட அதன் அடக்குமுறையையும் ஒடுக்குமுறையையும் நீடிக்க முடியாது.
அதனால்தான் தவறு செய்யும் பொலிஸ் மற்றும் ராணுவ அதிகாரிகள் தண்டிக்கப்படாததுடன் அவர்களுக்கு பதிவி உயர்வும் பணமும் வழங்கப்படுகிறது.
ஆயுதம் தாங்கிய பொலிஸ் , இராணுவம் மேற்கொள்ளும் அரச பயங்கரவாதத்திற்கு ஆயுதம் தாங்கியே பதிலடி கொடுக்க முடியும் என்று போராளிகள் கருதினார்கள்.
அதனால்தான் போராட்ட ஆரம்ப காலத்தில் அக்கிரமம் புரிந்த பஸ்தியாம்பிள்ளை போன்ற அரச விசுவாசியான, தமிழ் பொலிசார் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
போராளிகளுக்கு முதல் எஸ்.எம்.ஜி துப்பாக்கி பஸ்தியாம்பிள்ளையிடமிருந்தே கைப்பற்றப்பட்டது என்பதை நினைவில் கொள்வோம்.
எனவே,
அடக்குமுறை செய்தால் அடக்குமுறைக்கு எதிராக போராடுவோம்
ஒடுக்குமுறை மேற்கொண்டால் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவோம்
ஆக்கிரமிப்பு செய்தால் அதற்கு எதிராக போராடுவோம்
அடிமைத்தனத்தை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்
யுத்தத்தை எம்மீது திணித்தால் அதனை எமக்கான விடுதலையாக மாற்றுவோம்.

•கண்ணன் வரமாட்டான் !

•கண்ணன் வரமாட்டான் !
“அநியாயங்கள், அக்கிரமங்கள் பெருகும்போது கண்ணன் அவதாரமெடுத்து மக்களை காப்பாற்றுவான்” என்று இந்து மதம் கூறுகிறது.
கண்ணன் அவதாரமெடுத்து நரகாசுரனைக் கொன்றதே தீபாவளிப் பண்டிகை என்று வருடா வருடம் கொண்டாடுகிறார்கள்.
ஆனால்,
• முள்ளிவாய்க்காலில் 40 ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது அவர்களைக் காப்பாற்ற கண்ணன் வரவில்லை.
• அதன் பின்னர் சிறையில் அடைபட்டு இருக்கும் இளைஞர்களை விடுவிக்க இதுவரை கண்ணன் வரவில்லை
• தமிழ்நாட்டில் சிறப்புமுகாமில் அடைபட்டிருக்கும் அகதிகளை விடுவிக்ககூட கண்ணன் இதுவரை வரவில்லை
• கடந்தவாரம் யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட இரு தமிழ் மாணவர்களைக் காப்பாற்றவும் கண்ணன் வரவில்லை.
•தனது கோயில்கள் மீது குண்டு போட்ட போதும், தனது கோயில்கள் பீரங்கி மூலம் தரை மட்டமாக்கப்பட்ட போதும் அதனைத் தடுக்க கண்ணன் வரவில்லை.
தீபாவளி கொண்டாடுவோரே கொஞ்சம் சிந்தியுங்கள்!
இதுவரை வராத கண்ணன் இனியும் வரமாட்டான்
இதை கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள்.
பகுத்தறிவோடு சிந்தித்து செயற்படுங்கள்.
ஆனால் கண்ணன கதையில்; எமக்கு ஒரு நீதி இருக்கிறது.
அது என்னவெனில், ஆயுதம் ஏந்தாத இந்து கடவுள் இல்லை.
இந்து கடவுள்கள் எல்லாம் ஆயுதம் எந்தியே அக்கிரமக்காரர்களை அழித்து நியாயத்தை நிலைநாட்டியுள்ளனர்.
மக்களே!
“கண்ணன் வருவான” என காத்து இருக்காதீர்கள்.
அநியாயங்களுக்கு எதிராக
அக்கிரமங்களுக்கு எதிராக
ஆயுதம் ஏந்துங்கள்.
வதம் செய்யுங்கள்.
நீங்கள்தான் “கண்ணன்”

•நாய் சுடுவதுபோல் மாணவர் இருவரை சுட்டுக் கொன்றுவிட்டு அலரிமாளிகையில் தீபாவளி கொண்டாடுவது நல்லிணக்கம் இல்லை இதை நம்பி ஏமாறுவதற்கு தமிழன் ஒன்றும் இளிச்சவாயன் இல்லை.

•நாய் சுடுவதுபோல் மாணவர் இருவரை சுட்டுக் கொன்றுவிட்டு
அலரிமாளிகையில் தீபாவளி கொண்டாடுவது நல்லிணக்கம் இல்லை
இதை நம்பி ஏமாறுவதற்கு தமிழன் ஒன்றும் இளிச்சவாயன் இல்லை.
யாழ்ப்பாணத்தில் இரு பல்கலைகழக மாணவர்கள் வீதியில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்.
இதுவரை பிரதமரோ அல்லது ஜனாதிபதியோ மாணவர்கள் வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறவில்லை.
அவ் ஏழை மாணவர்களின் குடும்பங்களுக்கு நட்ட ஈடு கூட கொடுக்க முன்வரவில்லை.
இனிமேல் இப்படியான கொலைகள் நடக்க இடமளிக்கப்டாது என்று உறுதிமொழி அளிக்கவும் அவர்கள் விரும்பவில்லை.
ஆனால் அதேவேளை “படையினரை தான் ஒருபோதும் விட்டுக்கொடுக்கமாட்டேன”; என்று ஜனாதிபதி மைத்திரி கூறியுள்ளார்.
அதாவது தமிழ் மக்களை கொன்ற படையினரை தண்டிக்க விடமாட்டேன் என்று தமிழ் மக்களின் வாக்கில் ஜனாதிபதியான மைத்திரி கூறுகிறார்.
அதுமட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்துகொண்டு படையினருக்கு எதிராக கருத்து கூறுவோரையும் அந் நாடுகளின் உதவியோடு தண்டிப்பேன் என திமிராக கூறியுள்ளார்.
இதனிடையே அலரி மாளிகையில் பிரதமரும் ஜனாதிபதியும் தீபாவளி கொண்டாடியுள்ளனர்.
நல்லிணக்கத்திற்காக இவர்கள் தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்று நம்பி ஏமாறுவதற்கு தமிழ் மக்கள் இளிச்சவாயர்கள் இல்லை.
ஏனெனில் தமிழ் மக்கள் மகிந்த ராஜபக்சா தமிழில் தீபாவளி வாழ்த்து கூறியதையே கேட்டு பழகிவிட்டார்கள்.

•எப்படி இவர்களால் வெட்கமின்றி இப்படிநடந்துகொள்ள முடிகிறது?

•எப்படி இவர்களால் வெட்கமின்றி
இப்படிநடந்துகொள்ள முடிகிறது?
பல்கலைக்கழக மாணவர் இருவர் கொல்லபட்டு அவர்கள் சிந்திய ரத்தம் இன்னும் காயவில்லை.
உலகமெங்கும் வாழும் தமிழ் மக்கள் அவ் மாணவர்களுக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.
தமிழ் மக்கள் மட்டுமன்றி முஸ்லிம் மக்கள் சிங்கள மக்கள்கூட இப் படுகொலைகளுக்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள்.
யுத்தம் முடிந்து ஏழு வருடமாகிவிட்டது. ஆனால் இன்னமும்,
•சிறையில் உள்ள கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை
•இடம் பெயர்ந்தோர் மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை
•காணாமல் போனோர் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை
அதுமட்டுமன்றி தமிழர் பிரதேசங்களில்,
•திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் நடக்கிறது
•புதிதாக புத்த விகாரைகள் கட்டப்படுகின்றன.
இவை குறித்து தமிழ் தலைவர்களுக்கு எந்த கவலையும் இல்லை. இவற்றுக்கு எதிராக போராடும் அக்கறையும் இல்லை.
இவர்களுடைய அக்கறை எல்லாம் தமக்கு கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான சொகுசு வாகனம் இறக்குமதி செய்வதே.
ஒரு வருடத்தில் தீர்வு பெற்றுத் தருவோம் என்று தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தர் அய்யா தேர்தலில் உறுதி மொழி அளித்தார்.
அதன்படி இந்த வருட இறுதிக்குள்ள தீர்வு நிச்சயம் கிடைக்கும் என்று சம்பந்தர் அய்யாவும் சுமந்திரனும் மாறி மாறி கூறி வந்தனர்.
ஆனால் இனி அடுத்த வருட தீபாவளிக்கு முன்னர் தீர்வு கிடைக்கும் என சம்பந்தர் அய்யா பல்டி அடித்துள்ளார்.
வாக்குறுதியளித்தபடி இந்த வருட இறுதிக்குள் தீர்வு பெற்று தர வேண்டும். இல்லையேல் பாராளுமன்ற எம்.பி பதவியை சம்பந்தர் அய்யா துறக்க வேண்டும்.
ஆனால் சம்பந்தர் அய்யா அந்தளவுக்கு நேர்மையான ஒரு மனிதராக இருக்க மாட்டார். ஏனெனில் தமிழ் மக்கள் செத்தவீடு கொண்டாடுகிறார்கள். ஆனால் அவரோ ஜனாதிபதியுடன் தீபாவளி கொண்டாடுகிறார்.
இன்னொரு எம்.பி சரவணபவன் ஜனாதிபதியை அழைத்து தன் மகளுக்கு பிறந்தநாள் கொண்டாடுகிறார். இவர்தான் வரி ஏய்ப்பு செய்து 8 கோடி ரூபாவுக்கு சொகுசு வாகனம் இறக்குமதி செய்தவர்.
வோட்டு போட்ட தமிழ் மக்கள் துன்பத்தில் இருக்க
எப்படி சம்பந்தர் அய்யாவினால் ஜனாதிபதியுடன் தீபாவளி கொண்டா முடிகிறது?
எப்படி சரவணபவன் எம்.பி யால் ஜனாதிபதியை அழைத்து மகளுக்கு பிறந்தநாள் கொண்டாட முடிகிறது?
கொஞ்சம்கூட இவர்களுக்கு வெட்கம் இல்லையா?
கொஞ்சம்கூட இவர்களுக்கு கூசவில்லையா?

தோழர் தமிழரசன் புகழ் ஓங்கட்டும்!

தோழர் தமிழரசன் புகழ் ஓங்கட்டும்!
அவர் விரும்பிய தமிழ்நாடு விடுதலை அமையட்டும்!!
தமிழ்நாடு விடுதலைப்படைத் தளபதி தோழர் தமிழரசன் அவர்களின் பெண்ணாடம் மாநாட்டு அறிக்கை நூலாக வெளியிடப்பட்டுள்ளது.
தமிழர் கழகம் சார்பில் தோழர் முகிலன் அவர்களால் இந் நூல் வெளியிடப்பட்டுள்ளது. அவருக்கு எமது பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.
தமிழரசன் பாதையை முன்னெடுத்தமையினால் தோழர்கள் முகிலன், தமிழினியன், பவணந்தி போன்றவர்கள் மீது கொடைக்கானல் வெடி குண்டு வழக்கு போடப்பட்டது.
நான் சிறையிலும் சிறப்புமுகாமிலும் எட்டு வருடங்கள் அடைக்கப்பட்டிருந்தவேளை எனக்கு பெரிதும் ஆதரவாகவும் உதவியாகவும் இருந்தவர்கள் இவர்கள்.
துறையூர் சிறப்புமுகாமலில் இருந்த புலி போராளி சிவா என்பவர் கரூர் நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குமூலத்தை முதன் முதலாக அச்சிட்டு வெளியிட்டவர் தோழர் முகிலன்.
ராஜீவ் காந்தி மரணத்தையடுத்து ஜெயா அம்மையாரின் கொடுமையான தடா ஆட்சியில் அதற்கு எதிராக துணிந்து ஈழத் தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுத்த தோழர்களில் முகிலன் மறக்க முடியாதவர்.
தோழர் முகிலன் இன்று தோழர் தமிழரசன் அவர்களின் பெண்ணாடம் மாநாட்டு அறிக்கையை நூலாக வெளியிட்டு தோழர் தமிழரசன் கருத்துகள் மக்கள் மத்தியில் பரவ வழி செய்துள்ளார்.
முகிலன் மற்றும் தோழர்களின் பணி, தோழர் தமிழரசன் விரும்பிய தமிழ்நாடு விடுதலை அமைய நிச்சயம் உதவி செய்யும் என நம்புகிறோம்.

•துபாய் முதலாளியும் இந்திய அம்பானி முதலாளியும்!

•துபாய் முதலாளியும் இந்திய அம்பானி முதலாளியும்!
இந்தியாவில் வீடற்றவர்கள் கோடிக்கணக்கானவர்கள் இருக்கும் நிலையில் 5 பேர் கொண்ட அம்பானி குடும்பம் வசிக்கும் மும்பை வீட்டின் பெறுமதி 4700 கோடி ரூபாய்.
அந்த வீடு,
27 மாடிகள்
600 அறைகள்
168 கார் பார்க்கிங்
9 லிப்ட்
3 கெலிகப்டர் இறங்கு தளம்
1 தியேட்டர்
1 ஜிம்
600 வேலையாட்கள். கொண்டது.
அதன் ஒரு மாத மின் கட்டணம் மட்டும் 71 லட்சம் ரூபாய்.
முதலாளி அம்பானி ஏழை மக்களுக்கு எந்த உதவியும் செய்வதில்லை. ஆனால் அம்பானியின் மனைவிக்கு மக்களின் வரிப் பணத்தில் “இசட்” பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
முதலாளி அம்பானி ஏழைகளுக்கு உதவாவிடினும் இந்திய அரசு ஏழைகளுக்கு உதவலாம் அல்லவா?
இந்திய அரசு ஏழைகளுக்கு
ரீ – 1.00 ரூபா
சூப் - 5.50 ரூபா
டால் - 1.50 ரூபா
சாப்பாடு – 2.00 ரூபா
சப்பாத்தி – 1.00 ரூபா
பிரியாணி - 8.00 ரூபா
சிக்கன் - 24.00 7பா
மீன் - 13.00 ரூபா என மலிவு விலையில் உணவு வழங்குகிறது.
ஆனால் இந்த மலிவு விலை உணவைப் பெறுவதற்கு ஏழைகள் பாராளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும். ஏனெனில் இது பாராளுமன்ற கன்டீனில் மட்டுமே வழங்கப்படுகிறது.
இந்திய அரசைப் பொறுத்தவரையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே ஏழைகள். அவர்களுக்கு மட்டுமே மலிவு விலையில் உணவு வழங்குகிறது.
துபாயில் அப்துல் அஜீஸ் என்ற முதலாளி ஒருவர் இருக்கிறார். அவர் தனது சொத்தில் மூன்றில் ஒரு பங்கை கல்விக்காக வழங்கியுள்ளார்.
அவர் வழங்கிய சொத்தின் பெறுமதி 1.14 பில்லியன் டாலர் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் 76 லட்சம் கோடி ரூபா ஆகும்.
துபாய் மற்றும் இந்திய முதலாளி பற்றி சொல்லிவிட்டு நம்ம ஈழத்து முதலாளி பற்றி சொல்லாவிட்டால் நல்லாய் இருக்காது அல்லவா. எனவே ஒரு சின்ன கொசுறு செய்தி.
நம்ம லைக்கா முதலாளி லண்டனில் சிக்வெல் என்னும் இடத்தில் மிகவும் விலையுயர்ந்த பங்களாவில் வசிக்கிறாராம். அவர் ஒரு மில்லியன் பவுண்ட்ஸ் பிரித்தானிய ஆளும் கட்சிக்கு நன்கொடை கொடுத்துள்ளாராம். அதேவேளை அவரது கம்பனி மீது பண மோசடி மற்றும் பல குற்றச்சாட்டுகள் விசாரணையில் உள்ளனவாம். லண்டன் ஆங்கிலப் பத்திரிகை இப்படி கூறுகிறது.
நீதி- செல்வம் சரிவரப் பங்கிடாமையே இன்றைய நெருக்கடிக்கு காரணமாகும்.

Thursday, October 20, 2016

•அக்-10, உலக மனநல தினம்

•அக்-10, உலக மனநல தினம்
மன நலத்துக்கான முதலுதவி என்பது இந்த ஆண்டு உலக மனநல நாளின் மையக் கருத்தாக செயல்படுத்தப்படுகிறது.
மன நல பாதிப்பு அறிகுறிகள் தெரிந்த வுடனேயே மன நல சிகிச்சை, ஆலோசனை பெற வேண்டும் என்பதே, இந்த ஆண்டு மன நல நாளின் நோக்கமாகக் கருதப்படுகிறது.
மன நோய்கள் என்பது உடல்நோய்கள் போல யாருக்கு வேண்டுமென்றாலும், எப்போது வேண்டுமென்றாலும் வரலாம்.
ஒரு நபர், வாழ்க்கையில் ஏதேனும் ஒரு கட்டத்தில் மன நல மருத்துவரின் ஆலோசனை தேவைப்பட்டவராகவே உள்ளார்.
குறைந்தது 4 பேரில் ஒருவருக்கு தொடர்ந்து சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு மன நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
உடல் நலத்தைப் பேணுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பது போல், மன நலத்தையும் பேணி பாதுகாப்பது ஒருவருடைய வாழ்க்கை தரத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கிறது.
இலங்கையில் நடந்து முடிந்த நீண்ட யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கில் வாழும் சுமார் 30வீதமான தமிழ் மக்கள் மனநோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னேறிய நாடுகள் என கருதப்படும் ஜரோப்பிய நாடுகளில் அரசாங்கம் மனநோய் பற்றி அதிக கவனம் எடுக்கிறது. அதற்காக அதிக பணம் ஒதுக்கிறது.
ஆனால் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையில் இது குறித்து அரசு மட்டுமல்ல சமூக அக்கறை உள்ள அமைப்புகள்கூட கவனம் செலுத்தாமை துரதிருஸ்டவசமானது.
மக்கள் மத்தியில் மனநோய்கள் மனக்கோளாறுகள் குறித்து பல குழப்பங்களும் தவறான புரிதல்களும் உள்ளன. மனநலம் பற்றிய தமிழ் நூல்கள் மிகவும் குறைவாகவே உள்ளன.
தற்போது மன நோய் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து இருக்கும் போதிலும், இன்னும் பல நேரங்களில் தாங்கள் மன நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என்பதை ஏற்க மறுத்து மறுதலிப்பதாலும் ஆரம்ப நிலையில் சிகிச்சை பெற்றுக் கொள்வதைப் பலர் தள்ளிப் போடுகின்றனர்.
இதனால், எளிதில் செய்ய வேண்டிய சிகிச்சைகளைக் கடினமாக்குவதுடன் வாழ்க்கை தரம் மற்றும் பொருளாதார சூழ்நிலையால் பாதிக்கப்படுகின்றனர்.
அதனால், மன நல நோய்க்கு ஆரம்ப நிலை சிகிச்சை என்பது கட்டாயம். தவிர்த்தால் அதுவே பின்னாளில் சிக்கலாகி விடுகின்றது.
இங்கிலாந்தில் வாழ்ந்துவரும் டாக்டர் தம்பிராஜா அவர்கள் “மனநோய்களும் மனக்கோளாறுகளும்” என்னும் நூல் எழுதி வெளியிட்டுள்ளார்.
இந் நூல் மனநோய் பற்றிய விழிப்புணர்வை தமிழ் சமூகத்தில் ஏற்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளது.
மக்களிடையே பரவலாக காணப்படும் மனக்கோளாறுகள் பற்றி, மனச்சோர்வு முதல் மதுப் பழக்கம்வரை, மறதிநோய் முதல் உளவியல்ரீதியான பாலியல் கோளாறுகள் வரை இந் நூல் விளக்குகின்றது.
தனது மருத்துவ அனுபவங்களினூடாக ஒரு அரிய நூலை தமிழில் எழுதி தமிழ் சமூகத்திற்கு பெரிதும் உதவி புரிந்த டாக்டர் தம்பிராசா அவர்களின் பணி நிச்சயம் பாராட்டுக்குரியது.