Monday, October 31, 2016

தோழர் தமிழரசன் புகழ் ஓங்கட்டும்!

தோழர் தமிழரசன் புகழ் ஓங்கட்டும்!
அவர் விரும்பிய தமிழ்நாடு விடுதலை அமையட்டும்!!
தமிழ்நாடு விடுதலைப்படைத் தளபதி தோழர் தமிழரசன் அவர்களின் பெண்ணாடம் மாநாட்டு அறிக்கை நூலாக வெளியிடப்பட்டுள்ளது.
தமிழர் கழகம் சார்பில் தோழர் முகிலன் அவர்களால் இந் நூல் வெளியிடப்பட்டுள்ளது. அவருக்கு எமது பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.
தமிழரசன் பாதையை முன்னெடுத்தமையினால் தோழர்கள் முகிலன், தமிழினியன், பவணந்தி போன்றவர்கள் மீது கொடைக்கானல் வெடி குண்டு வழக்கு போடப்பட்டது.
நான் சிறையிலும் சிறப்புமுகாமிலும் எட்டு வருடங்கள் அடைக்கப்பட்டிருந்தவேளை எனக்கு பெரிதும் ஆதரவாகவும் உதவியாகவும் இருந்தவர்கள் இவர்கள்.
துறையூர் சிறப்புமுகாமலில் இருந்த புலி போராளி சிவா என்பவர் கரூர் நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குமூலத்தை முதன் முதலாக அச்சிட்டு வெளியிட்டவர் தோழர் முகிலன்.
ராஜீவ் காந்தி மரணத்தையடுத்து ஜெயா அம்மையாரின் கொடுமையான தடா ஆட்சியில் அதற்கு எதிராக துணிந்து ஈழத் தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுத்த தோழர்களில் முகிலன் மறக்க முடியாதவர்.
தோழர் முகிலன் இன்று தோழர் தமிழரசன் அவர்களின் பெண்ணாடம் மாநாட்டு அறிக்கையை நூலாக வெளியிட்டு தோழர் தமிழரசன் கருத்துகள் மக்கள் மத்தியில் பரவ வழி செய்துள்ளார்.
முகிலன் மற்றும் தோழர்களின் பணி, தோழர் தமிழரசன் விரும்பிய தமிழ்நாடு விடுதலை அமைய நிச்சயம் உதவி செய்யும் என நம்புகிறோம்.

No comments:

Post a Comment