Monday, October 31, 2016

பாவம் தமிழக மக்கள்!

•பாவம் தமிழக மக்கள்!
செய்தி- திமுக கட்சித் தலைவர் கருணாநிதி சுகயீனம்
ஆளும் கட்சி தலைவி ஜெயா அம்மையார் கடந்த ஒருமாதமாக அப்பலோ மருத்துமனையில் இருக்கிறார்.
எதிர்க்கட்சியான திமுக வின் தலைவர் கருணாநிதி சுகயீனம் காரணமாக கோபாலபுரம் வீட்டில் கிடக்கிறார்.
முக்கியமான பிரச்சனையான காவிரிப் பிரச்சனையில் கன்னட கட்சிகள் ஒன்று சேர்ந்து செயற்படுகின்றன.
மத்திய மோடி அரசும் காவிரிப் பிரச்சனையில் தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைக்கின்றது.
தமிழக நலனுக்காக குரல் கொடுக்க வேண்டிய முதல்வர் ஜெயா அம்மையார் அப்பலோ மருத்துமனையில் இருக்கிறார்.
சர்வகட்சி கூட்டத்தை கூட்ட வேண்டிய ஆளும்கட்சியோ ஜெயா அம்மையாருக்காக சர்வமத பிரார்த்தனையை நடத்துகிறது.
ஒரு மாதமாகிவிட்டது. அவருக்கு என்ன வருத்தம் என்பதே ஓட்டுப் போட்ட மக்களுக்கு தெரியப்படுத்தவில்லை.
இரண்டுமுறை அப்பலோவுக்கு சென்ற கவர்னருக்கே ஜெயா அம்மையாரின் முகத்தைக்கூட பார்க்க முடியவில்லை.
இந்த லட்சணத்தில் இனி தன்னை “மாண்புமிகு ஆளுனர்” என்று அழைக்க வேண்டும் என அவர் உத்தரவு போடுகிறார்.
ஒருவர் கோமாவில் இருக்கிறார் என்கிறார்கள். இன்னொருவருக்கு வேட்டியோடு மூத்திரம் போகிறது என்கிறார்கள்.
இருந்தும் இவர்கள் தங்கள் பதவியை துறக்க விரும்பவில்லை. மற்றவர்களுக்கு வழி விடவும் தயாரில்லை.
அரசியலுக்கு வருபவர்களுக்கு குறிப்பிட்டளவு கல்வி தகுதி வேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டு வராவிட்டாலும்கூட, குறிப்பிட்ட வயதின் பின்னர் கண்டிப்பாக ஓய்வு பெற வேண்டும் என்ற சட்டத்தையாவது கொண்டு வரவேண்டும்.

No comments:

Post a Comment