Monday, October 31, 2016

•கண்ணன் வரமாட்டான் !

•கண்ணன் வரமாட்டான் !
“அநியாயங்கள், அக்கிரமங்கள் பெருகும்போது கண்ணன் அவதாரமெடுத்து மக்களை காப்பாற்றுவான்” என்று இந்து மதம் கூறுகிறது.
கண்ணன் அவதாரமெடுத்து நரகாசுரனைக் கொன்றதே தீபாவளிப் பண்டிகை என்று வருடா வருடம் கொண்டாடுகிறார்கள்.
ஆனால்,
• முள்ளிவாய்க்காலில் 40 ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது அவர்களைக் காப்பாற்ற கண்ணன் வரவில்லை.
• அதன் பின்னர் சிறையில் அடைபட்டு இருக்கும் இளைஞர்களை விடுவிக்க இதுவரை கண்ணன் வரவில்லை
• தமிழ்நாட்டில் சிறப்புமுகாமில் அடைபட்டிருக்கும் அகதிகளை விடுவிக்ககூட கண்ணன் இதுவரை வரவில்லை
• கடந்தவாரம் யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட இரு தமிழ் மாணவர்களைக் காப்பாற்றவும் கண்ணன் வரவில்லை.
•தனது கோயில்கள் மீது குண்டு போட்ட போதும், தனது கோயில்கள் பீரங்கி மூலம் தரை மட்டமாக்கப்பட்ட போதும் அதனைத் தடுக்க கண்ணன் வரவில்லை.
தீபாவளி கொண்டாடுவோரே கொஞ்சம் சிந்தியுங்கள்!
இதுவரை வராத கண்ணன் இனியும் வரமாட்டான்
இதை கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள்.
பகுத்தறிவோடு சிந்தித்து செயற்படுங்கள்.
ஆனால் கண்ணன கதையில்; எமக்கு ஒரு நீதி இருக்கிறது.
அது என்னவெனில், ஆயுதம் ஏந்தாத இந்து கடவுள் இல்லை.
இந்து கடவுள்கள் எல்லாம் ஆயுதம் எந்தியே அக்கிரமக்காரர்களை அழித்து நியாயத்தை நிலைநாட்டியுள்ளனர்.
மக்களே!
“கண்ணன் வருவான” என காத்து இருக்காதீர்கள்.
அநியாயங்களுக்கு எதிராக
அக்கிரமங்களுக்கு எதிராக
ஆயுதம் ஏந்துங்கள்.
வதம் செய்யுங்கள்.
நீங்கள்தான் “கண்ணன்”

No comments:

Post a Comment