Monday, October 31, 2016

•பாரதீய ஜனதா கட்சியா? அல்லது பாரதீய ஜல்சா கட்சியா?

•பாரதீய ஜனதா கட்சியா? அல்லது
பாரதீய ஜல்சா கட்சியா?
(வயது வந்தவர்களுக்கான பதிவு இது)
அழகிகளுடன் உல்லாசமாக இருந்த புகைப்படங்களை காட்டி மிரட்டியதால் இந்திய ராணுவ ரகசியங்களை பிரபல ஆயுத புரோக்கருக்கு விற்றிருக்கிறார் அமைச்சர் மேனகா காந்தியின் புதல்வரும் பாஜக எம்பி யுமான வருண்காந்தி
அமெரிக்க லாயர் ஒருவர் பிரதமர் மோடிக்கு இதனை வாக்குமூலமாக கடிதம் அனுப்பியுள்ளார். அத்துடன் அதற்கு ஆதாரமாக படங்களையும் வெளியிட்டுள்ளார்.
மாட்டுக்கறி உண்ணும் தேச விரோதிகளின் தலையை துண்டாக்குவேன் என வீர வசனம் பேசியவர் மேனகா காந்தி. இப்போது நாட்டின் ராணுவ ரகசியங்களை விற்ற தனது மகனின் தலையை துண்டாக்குவரா? அல்லது சபாஷ் என்று வருடிக் கொடுப்பாரா?
இந்தியாவுக்கு விசுவாசமில்லாதவர்கள் பாகிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும் என்று பிரதமர் மோடியும் இந்து அமைப்பு தலைவர்களும் பேசி வருகிறார்கள்.
அவர்கள் தேச துரோகம் புரிந்துள்ள தமது கட்சி எம்.பி வருண்காந்தியை எப்போது நாடு கடத்தப் போகிறார்கள்? அல்லது அவருக்கு மேலும் பதவிகள் கொடுத்து கௌரவப் படுத்தப் போகிறார்களா?
இங்கு எனது அலோசனை என்னவெனில் இலங்கையில் இந்துத் தமிழீழம் கேட்டால் இந்திய பிரதமர் மோடி உதவுவார் என்று நம்பும் காசி அனந்தனும், சிவசேனை ஆரம்பித்தால் இந்து அமைப்புகள் அதரவு தரும் என நம்பும் சச்சிதானந்தம் அய்யாவும் பேசாமல் ஒரு அழகான பெண்ணை செட் பண்ணி கொடுத்தால் ஒருவேளை பாரதீயஜனதாவின் ஆதரவைப் பெறலாம் போல் உள்ளது.
தன் இனத்திற்கு துரோகம் செய்வதைவிட மாமா வேலை பார்ப்பது ஒன்றும் பெரிய தவறு இல்லைதானே!

No comments:

Post a Comment